முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6   Part 2.7   Part 2.8
ஜொள்ளிங்க்ஸ்...ஒரு மிகப் பெரிய ப்ராசஸ். ஜொள்ளு விடுவது என்பது...ஐ.ஐ.டியில் ஸ்டேட் ராங்க் வாங்குவது மாதிரி அத்தனை எளிது கிடையாது. கொஞ்சம் கரணம் தப்பினாலும் கேனப்பயலாகிவிடுவோம். ஜொள்ளுவிடுவது நாமாயிருந்தாலும் சுத்தி இருப்பவர்களும் சூழ்நிலையும் உதவ வேண்டும், உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும். ஜொள்ளிங்க்ஸ் ப்ராஸசில் மிக உதவியாய் இருக்கும் பெர்சனாலிட்டிகளை ஒன்று இரண்டு என்று ஔவைய்யார் மாதிரி வரிசைப் படுத்தினால், முதலில் வருவது குழந்தைகள், இரண்டாவது பெரிசுகள். "என்னூடா செல்லம்...என்னூனூ பண்ணூறா ...ஜிஜுலிக்கு என்னூ வேணூமா.....இங்கூஉ பாரூடா குட்டீ...அஔ...?" என்று கொஞ்சும் போது இன்ஸ்டென்ட் பக்கவாதம் வர வைக்கும் மழலைகளின் பணி ஜொள்ளிங்ஸில் இன்றியமையாதது.
சினிமா கெடுத்ததோ இல்லை பார்த்துக் கற்றுக்கொண்டதோ, அது என்னமோ தெரியவில்லை...எல்லா வயதுப் பெண்களுக்கும் இந்த குட்டீஸ் பட்டாளத்தை ரொம்பவே பிடிக்கும். அதுவும் எங்க ஊர் அம்பாசமுத்திரம் மாதிரி பெரிய சிட்டிக்கு சென்னை, பம்பாய், பெங்களூர் மாதிரி கிராமத்திலிருந்து வரும் வயதுக் குமாரிகளெல்லாம் எப்போதும் மணிரத்னம் பட கதாநாயகிகள் மாதிரி கூடவே நாலு குட்டீஸ் பட்டாளத்தைக் கூட்டிக் கொண்டே திரிவாரகள். அது வரையிலும் பரட்டை தலை பர்சனாலிட்டியாயிருக்கும் ஜந்துக்களெல்லாம் உடனே க்ரிப்ட்டாலஜிஸ்ட் என்று ரோஜா அர்விந்த்சாமி பெர்ச்னாலிட்டிக்கு அப்கிரேடு ஆகிவிடும். உடனே ஊரில் இருக்கும் கிழவிகளையெல்லாம் தூக்கி கொண்டு தெருவில் நடக்க தோன்றும். எங்கேயாவது வைக்கப்போர் இருந்தால் அது மேலே ஹாயாக படுத்துக் கொண்டு சும்மாவாச்சும் வானத்தைப் பார்த்து ரசிக்கத் தோன்றும். தலையை ஸ்டையிலாய் ஒரு பக்கமாய் கோதிவிட்டு..."ஐ லைக் வில்லேஜ் கேர்ல்ஸ்"ன்னு ஃபீலிங்காய் டயலாக் பேசத் தோன்றும்.நதியையோ குளத்தையோ பார்த்தால் சும்மா ஒரு கை தண்ணிரை எடுத்து போவோர் வருவோர் மேல் செல்லமாய் தெளிக்கத் தோன்றும். (ஆனால் அவர்கள் சினிமாவில் வருவது மாதிரி காட்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்...காட்டு காட்டுவென காட்டிவிடுவார்கள் என்பது வேறுவிஷயம்)
ஆனால் நம்ம ஜிகிடி கூட சுத்தும் நம் வாண்டுக் கூட்டதுக்கு நம்ம அவஸ்தை என்றுமே புரியாது. அது வரைக்கும் "அண்ணா ப்ளீஸ் என்னை உங்க சைக்கிளில் ஒரே ஒரு ரவுண்டு அடிங்கண்ணா" என்று கெஞ்சிக்கொண்டிருக்கும் வாண்டுகள் எல்லாம் ஒரே நாளில் கட்சி தாவிவிடும். "அந்த அக்கா வாடகை சைக்கிள் வாங்க அம்பது பைசா குடுத்தாளே.." என்று நம் இயலாமையை வாண்டுகள் எள்ளி நகையாடும் போது மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும். எல்லாம் இருபத்தி இரண்டு வினாடிகள் தான் அதுக்கப்புறம்..."இன்னிக்கு என்ன இன்னும் நம்ம ஃபிகர வெளியிலயே காணுமே"ன்னு கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.
விடலைப் பருவத்தில் குமரிகளுக்குப் பிடித்தது தான் நமக்கும் பிடிக்குமே...குரங்குக் குசாலா கூட்டத்தில் இந்தப் பக்கம் ஒருவன் நேரு மாமாக்கே நான் தான் மாமா என்று ரோஜாவின் ராஜாவாய் குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான், அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும். இந்த மாதிரி ஐடியா எதுவும் தோன்றாமல் மசனையாய் இருக்கும் வயெத்தெரிச்சல் கூட்டம் மட்டும் வழக்கம் போல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இந்த கடமை வீரர்களைப் பார்த்து கெக்கலித்து ஃபிகர்கள் முன்னால் எவ்வளவு வார முடியுமோ அவ்வளவு வாரி விட்டுக்கொண்டிருக்கும்.
வாட்டர் கோவிந்து என்னுடைய மழலை கொஞ்சல்ஸில் தொழில் முறை பார்ட்னர். முறையாகச் சொல்வதானால் ஜொள்ளிங்ஸில் பார்னர்ஷிப்பே கிடையாது நம்மைத் தவிர எல்லாருமே எதிரி தான். ஆனால் "யுவர் ஆனர்..." என்று சினிமாவில் வரும் சோப்ளாங்கி எதிர் தரப்பு வக்கீல் கெட்டப்பில் வாட்டர் கோவிந்து செய்யும் பெரும்பாலான சில்மிஷங்கள் எனக்கு சாதகமாய் தீர்ப்பாகிவிடும் என்பதால் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்துக்கொண்டிருந்தேன். வாட்டர் கோவிந்தும் என்னை மாதிரி சுத்த சைவம் ஆனால் சில சமயம் வாட்டர் குடுத்தாலே க்வாட்டர் குடித்த மாதிரி சவுண்டுவிடுவதால் வாட்டர் கோவிந்து என வழங்கப்பட்டு வந்தான். கொஞ்சம் வளர்ந்த வாண்டுக்கள் நேரம் காலம் தெரியாமல் பாக்யராஜ் படத்தில் வருவது மாதிரி வாரிவிட்டுவிடும் என்பதால் குழந்தையும் தெய்வமும் ஒன்று பாலிசி எடுத்து இன்னும் பேசவராத பொக்கைவாய் மழலை கைக்குழந்தைகளை மட்டுமே வைத்து நானும் வாட்டர் கோவிந்தும் ஷோ காட்டிக் கொண்டிருந்தோம்.
ஆனால் இந்த மழலை குழந்தைகளை வைத்து ஷோ காட்டும் விஷயத்தில் தொன்று தொட்டு வயதுக் குமரிகளுக்கெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. நாம் எதார்த்தமாய் "செல்லம் இங்க என்னை பாருடா...என்னை பார்த்து சிரிடா செல்லம்..." என்று குழந்தையைக் கொஞ்சினால் ஏதோ ஜாடைமாடையாய் அவர்களுக்கு தான் மெசெஜ் குடுக்கிறோம் என்று அனர்த்தம் செய்துகொள்கிறார்கள். கல்யாணத்திற்கு முன் "மாமாக்கு ஒரு முத்தா தாடா செல்லம்"ன்னு தங்கமணி மட்டும் இருக்கும் போது தங்கமணி வீட்டில் இருந்த ஒரு குழந்தையை நான் எதார்த்தமாய் கொஞ்சியதை இன்று வரை அனர்த்தம் செய்து கொண்டு நான் என்னம்மோ அலையாண்டிக் குப்பத்தைச் சேந்தவன் மாதிரி சாடிக்கொண்டிருக்கிறார். ஹும்....பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை அவர்கள் வயது அப்படி...கற்பனை கண்ணை மறைக்கிறது. (நான் இப்பவும் சொல்றேன் அந்தக் குழந்தை கிட்ட தான் முத்தா கேட்டேன்..இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்)
ஆனால் எங்கள் தெருவில் கொஞ்சம் மழலை பஞ்சம். இருக்கும் முக்கால் வாசி மாமிபாட்டிகளுக்கு மத்தியில் புதிதாய் தெருவிற்கு குடிவந்த சந்திரா அக்கா மட்டும் தான் கொஞ்சம் இனிமையாய் பேசுவார். "நீங்க ஐய்யோ பாவம்..உங்களுக்கு...ஏகப்பட்ட வேலை....கிச்சுவ பத்தி கவலயே படாதீங்கோ தெருவில சுத்திக் காட்டி அவன அழாம நாங்க பார்த்துக்கறோம்..." என்று தொழில்ரீதியாக நாங்கள் கிச்சுவை அபேஸ் செய்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்.
தொழில் முறை போட்டியில் ஒரு தடவை நான் கிச்சுவை வைத்து ஜிகிடியிடம் கூட இரண்டு மார்க் வாங்கிவிட்டேன் என்று வாட்டர் கோவிந்து டென்ஷனாகி கிச்சுவை என் கையில் இருந்து பிடுங்கி "பிள்ளை நிலா" பாட்டு பாடி கிச்சுவை தூக்கி தூக்கி பிடித்து "அங்க காக்கா பாருடா செல்லம்"ன்னு கொஞ்ச, வாட்டர் கோவிந்து குலுக்கின குலுக்கலில் கிச்சு காக்காயைப் பார்க்காமல் போட்டிருந்து தொள தொளா க்ரீம் கலர் ஜெட்டிக்கு மேட்சிங்காய் முந்தின நாள் செரிலாக்கை கக்கா போய்விட்டான். ஜிகிடி முன்னால் கிச்சுவின் காக்காய்க்கு பதில் கக்கா மேட்டர் தெரிந்துவிடக் கூடாதே என்று வாட்டர் கோவிந்து அப்புறம் நெளி நெளியென்று நெளிந்து மேட்டரும் கக்காவும் வெளியே வராமல் சமாளித்து போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஆத்திரத்தில் வாட்டர் கோவிந்து கிச்சுவை நைஸாய் நுள்ளி கிச்சு அழுது அதற்கப்புறம் சந்திரா அக்கா எங்கள் கிச்சு மழலை பாலிசியைக் கேன்சல் செய்துவிட்டார்.
"உன்னை எவன்டா காக்காய பாரு குருவியப் பாருன்னு ஓவராக்ட் செய்யச் சொன்னது? என்னம்மோ பத்து புள்ள பெத்து எக்ஸ்பீரியன்ஸ் போட்ட மாதிரி ஓவர் சீன் போட்ட கை மேல பலன்...வேண்டியது தான் உனக்கு" - எனக்கு ஏக எரிச்சல்
" சரி விடுறா..மழலைச் செல்வங்கள் கொஞ்சம் இம்சைடா...அப்பப்போ நாறிடறது. பேசாம நாம முதியோர் நலத் திட்டம் ஆரம்பிச்சா என்ன..அதான் பிரச்சனையே இருக்காது" என்று வாட்டர் கோவிந்து அப்புறம் எம்ஜியார் கட்சி ஆரம்பித்துவிட்டான்.
தொடரும்
Showing posts with label Tortoise Serial. Show all posts
Showing posts with label Tortoise Serial. Show all posts
Thursday, July 23, 2009
Sunday, March 29, 2009
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.7
முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6
"இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று" கண்ணதாசன் எழுதிய பாடலை நம்பி வாழ்க்கையில் நிறைய இடத்தில் முயற்சியே பண்ணாமல் கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் தேவன் சில இன்னார்களுக்கு மட்டும் வகை தொகையே இல்லாமல் எக்கச்சக்கமாய் எழுதிவைத்துவிடுகிறார். இந்த மாதிரி இன்னார்களை பார்க்கும் போது நாபிக் கமலத்திலிருந்து கப்புன்னு புகை மாதிரி ஒன்று எக்கச்சக்கதிற்கு கிளம்பும். அவனை முதல் முறை பார்த்ததே நாலைந்து பெண்கள் சுத்தி சூழத் தான். சுத்தியிருந்த யுவதிகள் கொள்ளை அழகு. எல்லாரும் மிஸ் யுனிவேர்ஸ் போட்டி நடக்கும் இடத்துக்கு வழி கேட்டுக்கொண்டிருந்த மாதிரி தான் இருந்தது. "இங்கே சகலவிதமான இடங்களுக்கும் வழி சொல்லப்படும்"ன்னு கழுத்தில் போர்டு மாட்டிக் கொள்ளத்தூண்டும் அழகு.
"எப்படீங்க இதெல்லாம்...அடுக்குமா அப்புறம் நாங்களெல்லாம் எங்க போறதாம்...?"
"....?"
"இல்ல...நீங்க ரெண்டு பேருக்கு வழி சொல்லிட்டு மிச்ச பேரெல்லாம் அங்க போய் வழி கேட்டுக்கோங்கன்னு இங்க எங்க பக்கம் கொஞ்சம் அனுப்பி இருக்கலாம்ல"
பெருமிதமும் வெட்கமும் கலந்து சிரித்தான். கபால்லுன்னு உடனே அவனை தோஸ்தாக்கிக் கொண்டேன். இந்த இந்தி படத்தில் அண்ணாக்கு கல்யாணம் ஆகும், அப்படியே அண்ணியோட குடும்பத்திலிருந்து தம்பிக்கு ஒன்னு செட் ஆகும்...உடனே ப்யார்...சிந்தகி...சப்னே. என்னைச் சொல்லி குற்றமில்லை ஹிந்தி படம் இந்த பச்சைமண்ணை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருந்தது. ஆனால் இதற்க்கெல்லாம் மேலே நேரம் என்று ஒன்று இருக்கிறதே. என்ன தான் தாடியெல்லாம் வைத்திருந்தாலும் ஆட்டுக்கு வால் அரை கிலோமீட்டரா வைத்திருக்கிறார் கடவுள்?
சில பெண்களுக்கு கண்ணே தெரியாது....என்னடா இங்க ஒருத்தன் வழி சொல்றதுக்குன்னே ராப்பகலா படிச்சிட்டு வந்து நிக்கிறானேன்னு ஒரு இங்கிதமே இருக்காது, நேரே போய் நம்ம இன்னாரிடம் போய் நிற்பார்கள். இன்னாரும் "நேரா போய் பீச்சாங்கைப் பக்கம் திரும்பு"ன்னு வழியைச் சொல்லாமல் தார் யாரு கண்டுபிடிச்சா, ரோடு யாரு போட்டான்னு பாடமெடுத்துக் கொண்டிருப்பான். "என்னாது கஜினியை ஹிந்தில எடுக்கப் போறாங்களா"ன்னு நைஸா ஜனரஞ்சகமாக ஜோதியில் ஐக்கியமாகப் பார்த்தாலும் நடக்காது. அந்தப் யுவதிகளுக்கு நம்மள மாதிரி ஹிந்தி பெர்சனாலிட்டியையெல்லாம் பிடிக்காது நடையைக் கட்டிவிடும். என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன். இன்னாரும் எனக்கு ஆறுதல் சொல்லுவது மாதிரி சிரித்துக்கொண்டே அந்தப்பக்கம் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருப்பான்.
கன்னுக்குட்டி கணேசனிடம் கன்சல்டேஷன் பண்ணியதில்...இதற்கெல்லாம் சபையில் சொல்ல முடியாத ஒரு இடத்தில் மச்சம் இருக்கவேண்டும் என்று வாத்ஸ்யாயணர் சொல்லி இருப்பதாக தகவல் சொன்னான். அத்தோடு அவனையும் இந்தி பெர்ச்னாலிட்டியில் சேர்த்துக் கொண்டு "இதுக்கெல்லாம் கவலப்படாதடா மச்சி...நம்மள மாதிரி இந்தி பெர்சனாலிட்டிக்கெல்லாம் மெட்ராஸுல தான் மவுஸ் ஜாஸ்தி" என்றும், கிண்டியில் ஊரிலிருந்து வரும் பஸ் நிற்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே எங்கள் வரவை ஆவலோடு யுவதிகள் எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் உபரி தகவலும் குடுத்தான். சரி நம்பளுக்கான இன்னாரை மெட்ராஸுல எழுதிவைச்சிருக்கான் போல இருக்குன்னு ரொம்பவே ஆறுதலாக இருந்தது. மீசை ரொம்ப வளராவிட்டால் தெருவில் எல்லாரும் கன்வேர்ட்டேர்ட் ஹிந்தி பெர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள். எனக்கு வளர் சிதை மாற்றத்தின்(அடலெசன்ஸ்) ஆரம்பத்தில் அரும்பு மீசைக்கு முந்தய ஸ்டேஜில் இருந்தது.
ஆனால் இன்னார் கொஞ்சம் பர்சனாலிட்டியாய் கலராய் இருப்பான். அரும்பு மீசையும் அழகாய் இருக்கும். அதனாலேயே இன்னார் பக்கத்தில் இருந்தால் யுவதிகள் கூட்டம் நம்ம பக்கம் திரும்பி கூட பார்க்காது. இருந்தாலும் இன்னாரிடம் வழிகேட்டு விட்டு என்னிடம் இன்னார் சொன்ன வழி கரெக்ட்டு தானா என்று பேருக்கு சும்மா கன்பார்மாவது பண்ணிக் கொள்ளக்கூடாதா என்று நிறைய ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆதங்கம் சில சமயம் சமுதாயத்தின் மீது வெறுப்பாய் மாறி பேசாமல் வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு நெற்றியில் குங்கமத்தை கொழப்பி வெற்றித் திலகமிட்டுக் கொண்டு ஓம் கேசட்டை டேப்ரெக்கார்டரில் பிஜிம்யில் போட்டு விட்டு வெள்ளைக்காரர்களுக்கு குல சாமியாராய் போய்விடலாமா என்று தோன்றும். ஓம் கேஸட் வாங்க போதுமான பைனான்ஸ் இல்லாமல் வெள்ளைக்காரர்களுக்கு குலசாமியாய் போகும் முடிவுக்கு நிறைய தடவை (வெள்ளைக்காரர்களுக்கு) காலம் கனியட்டும் என்று ஒத்திவைப்பு தீர்மாணம் நடத்தியிருக்கிறேன்.
அப்புறம் காலம் கனிந்து "அட கிறுக்குப் பயலே உனக்கு இன்னார் கிண்டியில இல்லைடா இங்கயே பக்கத்திலயே அடுத்த ஊரில் இருக்கார்டா"ன்னு கடவுள் கனவில் வந்து சொன்னதுக்கப்புறம் ஓம் சாமியார் ஐடியாவை மூட்டைக் கட்டிவிட்டு...யுவதிகளுக்கு வழி சொல்வதெல்லாம் தூ....ஒரு பொழைப்பா...போங்கடா போங்கடா போய் புள்ளைக் குட்டிய படிக்க வைக்கிற வழியப் பாருங்கடான்னு பரம்பரை நல்லவனாய் மாறி..ஏறி உட்கார்ந்து மிதித்தால் ஒரு அட்ரெஸுக்கு தானாகவே போகிற மாதிரி சைக்கிளை ஆட்டோ ப்ரொக்ராம் செய்து விட்டேன்.
அப்புறம் காலம் போன போக்கில் வழி சொல்லிக் கொண்டிருந்த இன்னார் வெளியூருக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போய் இந்தியில் வழி சொல்லிக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன். அனேகமாய் இப்போது அவனுக்கும் கல்யாணமாகி செட்டிலாகியிருப்பான். ஊருக்கே வழி சொன்ன அவனுக்கு ஒரு வழி அமையாமலா இருந்திருக்கும். இருந்தாலும் எந்த ஊரில் வழி அமைந்து எந்த இன்னாரோன்னு என்று இன்னாரைப் பற்றி நியாபகம் வரும்போதெல்லாம் ஆர்வமாய் இருக்கும்.
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6
"இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று" கண்ணதாசன் எழுதிய பாடலை நம்பி வாழ்க்கையில் நிறைய இடத்தில் முயற்சியே பண்ணாமல் கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் தேவன் சில இன்னார்களுக்கு மட்டும் வகை தொகையே இல்லாமல் எக்கச்சக்கமாய் எழுதிவைத்துவிடுகிறார். இந்த மாதிரி இன்னார்களை பார்க்கும் போது நாபிக் கமலத்திலிருந்து கப்புன்னு புகை மாதிரி ஒன்று எக்கச்சக்கதிற்கு கிளம்பும். அவனை முதல் முறை பார்த்ததே நாலைந்து பெண்கள் சுத்தி சூழத் தான். சுத்தியிருந்த யுவதிகள் கொள்ளை அழகு. எல்லாரும் மிஸ் யுனிவேர்ஸ் போட்டி நடக்கும் இடத்துக்கு வழி கேட்டுக்கொண்டிருந்த மாதிரி தான் இருந்தது. "இங்கே சகலவிதமான இடங்களுக்கும் வழி சொல்லப்படும்"ன்னு கழுத்தில் போர்டு மாட்டிக் கொள்ளத்தூண்டும் அழகு.
"எப்படீங்க இதெல்லாம்...அடுக்குமா அப்புறம் நாங்களெல்லாம் எங்க போறதாம்...?"
"....?"
"இல்ல...நீங்க ரெண்டு பேருக்கு வழி சொல்லிட்டு மிச்ச பேரெல்லாம் அங்க போய் வழி கேட்டுக்கோங்கன்னு இங்க எங்க பக்கம் கொஞ்சம் அனுப்பி இருக்கலாம்ல"
பெருமிதமும் வெட்கமும் கலந்து சிரித்தான். கபால்லுன்னு உடனே அவனை தோஸ்தாக்கிக் கொண்டேன். இந்த இந்தி படத்தில் அண்ணாக்கு கல்யாணம் ஆகும், அப்படியே அண்ணியோட குடும்பத்திலிருந்து தம்பிக்கு ஒன்னு செட் ஆகும்...உடனே ப்யார்...சிந்தகி...சப்னே. என்னைச் சொல்லி குற்றமில்லை ஹிந்தி படம் இந்த பச்சைமண்ணை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருந்தது. ஆனால் இதற்க்கெல்லாம் மேலே நேரம் என்று ஒன்று இருக்கிறதே. என்ன தான் தாடியெல்லாம் வைத்திருந்தாலும் ஆட்டுக்கு வால் அரை கிலோமீட்டரா வைத்திருக்கிறார் கடவுள்?
சில பெண்களுக்கு கண்ணே தெரியாது....என்னடா இங்க ஒருத்தன் வழி சொல்றதுக்குன்னே ராப்பகலா படிச்சிட்டு வந்து நிக்கிறானேன்னு ஒரு இங்கிதமே இருக்காது, நேரே போய் நம்ம இன்னாரிடம் போய் நிற்பார்கள். இன்னாரும் "நேரா போய் பீச்சாங்கைப் பக்கம் திரும்பு"ன்னு வழியைச் சொல்லாமல் தார் யாரு கண்டுபிடிச்சா, ரோடு யாரு போட்டான்னு பாடமெடுத்துக் கொண்டிருப்பான். "என்னாது கஜினியை ஹிந்தில எடுக்கப் போறாங்களா"ன்னு நைஸா ஜனரஞ்சகமாக ஜோதியில் ஐக்கியமாகப் பார்த்தாலும் நடக்காது. அந்தப் யுவதிகளுக்கு நம்மள மாதிரி ஹிந்தி பெர்சனாலிட்டியையெல்லாம் பிடிக்காது நடையைக் கட்டிவிடும். என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன். இன்னாரும் எனக்கு ஆறுதல் சொல்லுவது மாதிரி சிரித்துக்கொண்டே அந்தப்பக்கம் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருப்பான்.
கன்னுக்குட்டி கணேசனிடம் கன்சல்டேஷன் பண்ணியதில்...இதற்கெல்லாம் சபையில் சொல்ல முடியாத ஒரு இடத்தில் மச்சம் இருக்கவேண்டும் என்று வாத்ஸ்யாயணர் சொல்லி இருப்பதாக தகவல் சொன்னான். அத்தோடு அவனையும் இந்தி பெர்ச்னாலிட்டியில் சேர்த்துக் கொண்டு "இதுக்கெல்லாம் கவலப்படாதடா மச்சி...நம்மள மாதிரி இந்தி பெர்சனாலிட்டிக்கெல்லாம் மெட்ராஸுல தான் மவுஸ் ஜாஸ்தி" என்றும், கிண்டியில் ஊரிலிருந்து வரும் பஸ் நிற்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே எங்கள் வரவை ஆவலோடு யுவதிகள் எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் உபரி தகவலும் குடுத்தான். சரி நம்பளுக்கான இன்னாரை மெட்ராஸுல எழுதிவைச்சிருக்கான் போல இருக்குன்னு ரொம்பவே ஆறுதலாக இருந்தது. மீசை ரொம்ப வளராவிட்டால் தெருவில் எல்லாரும் கன்வேர்ட்டேர்ட் ஹிந்தி பெர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள். எனக்கு வளர் சிதை மாற்றத்தின்(அடலெசன்ஸ்) ஆரம்பத்தில் அரும்பு மீசைக்கு முந்தய ஸ்டேஜில் இருந்தது.
ஆனால் இன்னார் கொஞ்சம் பர்சனாலிட்டியாய் கலராய் இருப்பான். அரும்பு மீசையும் அழகாய் இருக்கும். அதனாலேயே இன்னார் பக்கத்தில் இருந்தால் யுவதிகள் கூட்டம் நம்ம பக்கம் திரும்பி கூட பார்க்காது. இருந்தாலும் இன்னாரிடம் வழிகேட்டு விட்டு என்னிடம் இன்னார் சொன்ன வழி கரெக்ட்டு தானா என்று பேருக்கு சும்மா கன்பார்மாவது பண்ணிக் கொள்ளக்கூடாதா என்று நிறைய ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆதங்கம் சில சமயம் சமுதாயத்தின் மீது வெறுப்பாய் மாறி பேசாமல் வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு நெற்றியில் குங்கமத்தை கொழப்பி வெற்றித் திலகமிட்டுக் கொண்டு ஓம் கேசட்டை டேப்ரெக்கார்டரில் பிஜிம்யில் போட்டு விட்டு வெள்ளைக்காரர்களுக்கு குல சாமியாராய் போய்விடலாமா என்று தோன்றும். ஓம் கேஸட் வாங்க போதுமான பைனான்ஸ் இல்லாமல் வெள்ளைக்காரர்களுக்கு குலசாமியாய் போகும் முடிவுக்கு நிறைய தடவை (வெள்ளைக்காரர்களுக்கு) காலம் கனியட்டும் என்று ஒத்திவைப்பு தீர்மாணம் நடத்தியிருக்கிறேன்.
அப்புறம் காலம் கனிந்து "அட கிறுக்குப் பயலே உனக்கு இன்னார் கிண்டியில இல்லைடா இங்கயே பக்கத்திலயே அடுத்த ஊரில் இருக்கார்டா"ன்னு கடவுள் கனவில் வந்து சொன்னதுக்கப்புறம் ஓம் சாமியார் ஐடியாவை மூட்டைக் கட்டிவிட்டு...யுவதிகளுக்கு வழி சொல்வதெல்லாம் தூ....ஒரு பொழைப்பா...போங்கடா போங்கடா போய் புள்ளைக் குட்டிய படிக்க வைக்கிற வழியப் பாருங்கடான்னு பரம்பரை நல்லவனாய் மாறி..ஏறி உட்கார்ந்து மிதித்தால் ஒரு அட்ரெஸுக்கு தானாகவே போகிற மாதிரி சைக்கிளை ஆட்டோ ப்ரொக்ராம் செய்து விட்டேன்.
அப்புறம் காலம் போன போக்கில் வழி சொல்லிக் கொண்டிருந்த இன்னார் வெளியூருக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போய் இந்தியில் வழி சொல்லிக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன். அனேகமாய் இப்போது அவனுக்கும் கல்யாணமாகி செட்டிலாகியிருப்பான். ஊருக்கே வழி சொன்ன அவனுக்கு ஒரு வழி அமையாமலா இருந்திருக்கும். இருந்தாலும் எந்த ஊரில் வழி அமைந்து எந்த இன்னாரோன்னு என்று இன்னாரைப் பற்றி நியாபகம் வரும்போதெல்லாம் ஆர்வமாய் இருக்கும்.
Sunday, December 21, 2008
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.6
முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5
அந்த கம்பெனியில் நான் சேர்ந்து முப்பத்திநான்கு நாட்கள் இரண்டுமணி நேரம் தான் ஆகியிருக்கும். போன புதிதில் அலுவலக வண்டவாளங்கள் வெளிவராதால் அது சொர்கபுரியாய் இருந்தது. எப்போ வேணா வரலாம் போகலாம். முதல் நாள் ஒன்பது மணிக்கே போய் தேவுடு காத்து, பதினோரு மணிக்கு டிப்பார்ட்மெண்ட் ஹெட் வந்து, நான் குட்மார்னிங் சொல்லி அவர் குட் ஆப்டர்நூன் சொல்லி, எத்தனை மணிக்கு வந்தேன்னு கேட்டு, ஒன்பது மணிக்கு வந்தேன்னு சொல்லி, ஒம்போது மணிக்கா...அதெல்லாம் ஆபீஸ் வர்ற நேரமான்னு நாளைலேர்ந்து பதினோரு மணிக்கு...வான்னு அறிவுரை சொல்லி, நீங்க தான் சார் என் குலதெய்வம்ன்னு கால்ல விழுந்து...அடுத்த நாள்லேர்ந்து பன்னிரெண்டு மணிக்கு ஆபீஸ் போய்...இந்த சொட்டத்தலையன் தொல்லை தாங்கல...அதான் லேட்டா வந்தாலும் லேட்டா தான் போறோம்ல..அப்புறம் ஏன் ஒருமாதிரி பார்க்கிறான்"னு அப்போது தான் அலுவலகத்தில் சௌஜன்யமாகிக் கொண்டிருந்தேன்.
சீட்டில் செட்டிலாகி முதல் அரைமணிநேரம் ஆர்யபட்டா சொன்னார்,அப்துல் கலாம் சொன்னார், நாரயணமூர்த்தி அவர் வீட்டு கக்கூஸை இன்னுமும் அவரே கழுவுகிறார்ன்னு வந்திருக்கும் மெயில் பார்வேர்ட்டையெல்லாம் படித்துவிட்டு, எத்தனை பார்வேர்டு மெயில் வருகிறது/அனுப்புகிறோம் என்பதற்கேற்ற மாதிரி தான் சம்பளம் என்ற நம்பிக்கையில், வந்த மெயிலை எல்லாம் நாமும் சகட்டு மேனிக்கு சி.இ.ஓ தவிரதலாக நமக்கு அனுப்பியவன் உள்பட(இப்படி கடுப்பேதுவதே ஒரு பெரிய சுகம்) மத்த எல்லாருக்கும் மாஸ் பார்வேர்ட் விட்டு இந்தப் பக்கம் திரும்பினால் சாப்பாட்டுக்கு மணியடித்திருப்பார்கள். கல்யாணமான புதிதில் ஆரம்பித்த பழக்கத்தில் தங்கமணி மூன்று அடுக்கு கேரியரில் லெவெல் காட்டியிருப்பார். முன்வினை பின்வினை தெரியாமல் முன்னால் செய்த வழிப்பறிக்கு, கூட இருக்கும் பஞ்சத்தில் அடிபட்ட கூட்டம் பதில் மரியாதை செய்தது போக மிச்சத்தை தொண்டைக்குழியில் அடைத்துவிட்டு வந்து உட்கார்ந்தால் மானிட்டர் - மானிட்டர் அடித்தது மாதிரி சொக்குப் பொடி போட்டு கண்ணைச் சொருகும்.
செஞ்சோற்றுக் கடனுக்கு ரெண்டு மூனு ஆபிஸ் மெயிலை "எஸ் ஆபிஸர்...ஓ.கே. ஆபிஸர்...டன் அந்தக் கப்பலை அஞ்சு கோடிக்கு முடிச்சிடலாம்"ன்னு விவரமா மெயில் அனுப்பிவிட்டு திரும்பவும் கடிகாரத்தைப் பார்த்தால் டீ.க்கு நேரமாகியிருக்கும். விவரம்கெட்ட ஆபீஸில் டெஸ்க்கில் கொண்டு வந்து குடுக்காமல் காண்டீனுக்கு வந்து குடிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். "துன்ன சாப்பாடே இன்னும் செரிக்கலை..அதுக்குள்ள டீயா..ஏகப்பட்ட வேலை இருக்கு.."ன்னு அலம்பலுக்கு நடுவில் கவர்மெண்ட் ஆபீஸில் எப்படி வேலையே பண்ணுவதில்லை என்பதையும் பேசிக்கொண்டே டீயைக் குடித்துவிட்டு வந்தால் டிப்பார்ட்மெண்ட் ஹெட், அமெரிக்காவில் சாட்டிலைட் விட்டு படியளக்கும் பகவானிடம் டெலிகான் அரெஞ்ச் பண்ணியிருப்பார். டெலிகானில் தோராயமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு மணி நேரத்தில் ஆன்சைட் மேனேஜர் கூப்பிட்டு இங்கிலீஸ் டு இங்கிலீஸ் ட்ரான்ஸ்லேஷன் பண்ணி பகவான் என்ன சொன்னார்ன்னு சொல்லுவார். 'அட அப்படியா சொன்னான் அந்த கம்மனாட்டி'ன்னு என்னம்மோ புரிந்தது மாதிரி காட்டிக்கொண்டு அந்த கோட் கமெண்ட் பண்ணி கம்பைல் பண்ணுவெதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு இங்கி பின்கி பாங்கிபோட்டு தோராயமா நாலு நாளாகும் என்று கணக்குப் போட்டு சொன்னால் ஆன்சைட் மேனேஜர் ஒரு வாரம் என்று ரவுண்ட் செய்து பகவானிடம் ஆட்டையப் போட்டு ஓக்கே வாங்கிவிடுவார்.
இந்த மாதிரி நிறைய அமெரிக்கா பகவான்களிடம் ஆட்டையப் போட்டு போட்டு ஆபிஸில் சாயங்காலம் ஆறு மணிக்கு அடையாறு ஆனந்தா பவனிலிருந்து இலவச ஸ்வீட் காரம் காபி ஏற்பாடு செய்திருப்பார்கள். 'அடுத்தாப்புல முந்திரி பக்கோடா என்னிக்கு"ன்னு விவராமாய் விசாரித்துகோண்டே மேய்ந்துவிட்டு அங்கே இருக்கும் டேபிள் டென்னிஸோ, பாஸ்கெட் பாலோ இருக்கிற பக்கமா ஒரு ரவுண்டு வந்து "இப்படி இப்படி விளையாடனும்...நான் சொல்லிக்குடுத்ததெலாம் ஞாபகம் இருக்கில்ல...? ஸ்டெப்பு ஸ்டெப்பு...."ன்னு போகிற போக்கில் தின்னது செரிக்க நாலு இலவச டிப்ஸை அள்ளிவிட்டு வந்து உட்கார்ந்து யாகூ ஹாட்மெயில்ன்னு மத்த மெயிலெல்லாம் பார்த்துமுடிக்கும் போது ஹெட் கிளம்பிபோயிருப்பார். இன்னிக்கு ரொம்ப வேலை...எல்லாத்தையும் டீபக்(கமெண்ட்) பண்ணிட்டேன் நாளைக்கு மிச்சத்தை பார்த்துக்கலாம்ன்னு அப்படியே அப்பீட்டு.
பக்கத்து டீமிலிருந்தாலும் அவர் மட்டும் சாப்பாடு நேரத்தில் "சாப்பிட வர்றீங்களா"ன்னு கலயாணவீட்டில் சம்பந்தியைக் கூப்பிடுவது மாதிரி என்னை எப்போதும் மரியாதையாய் அழைப்பார். நூத்துக்கு தொன்னூறு முறை நான் போகவில்லை என்றாலும் கூப்பிட மறக்க மாட்டார். ஒரு நாள் அவர் தனியாய் உட்கார்த்து சாப்பிடுவதைப் பார்த்து பாவமாகி, தங்கமணி ஊருக்கு போய் காண்டினில் சாப்பாடு என்று இருந்த ஒரு வாரம் முழுவதும் அவர் கூட சாப்பிட போனேன். ரொம்ப மிருதுவான சுபாவம். பேச்சுவாக்கில் அவர் காலேஜ் ப்ரெஷர் என்று தெரிந்தது. அப்புறம் நண்பர் ஆபிஸ் மெயிலில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது க்ளையன்ட் கிட்ட பேசும் போது எப்படி பேசனும் என்று அங்கே இங்கே என்று பேசி டாபிக் கடைசியில் லவ்வுக்கு மாறியது. பார்ட்டி நம்ம சினிமா முரளிக்கு நெருங்கின சொந்த ரகம். காதல் தெய்வீகமானது, அதையும் தாண்டி புனிதமானது என்று பழுத்த காதல் பக்திமான். ஒரு நாள் பக்திமானின் காதல் கலாட்சேபத்தைக் கேட்டுக்கொண்டிருந்து கேண்டீனில் கொத்தமல்லி சட்னி காலியாகிவிட்டது.
அதிலிருந்து "எப்பா ராசா...சித்த பொறு...அங்க சட்டிய தேய்ச்சு கவுத்திருவானுக...இன்னிக்கு வத்தக் குழம்பு வேற சூப்பரா இருக்குன்னு" நழுவிவிடுவேன். பக்திமான் மனம் தளரமாட்டார் கலாட்சேபத்தை பாஸ் பண்ணிவிட்டு மீண்டும் ரெஸ்யூம் செய்வார். அப்புறம் இதெல்லாம் சரிபட்டு வராது என்று "ரெண்டாவது ப்ளோர்ல உன்னை மாதிரி காதலிக்காக மூக்கை வெட்டிக்கிறவன் ஒருத்தன் இருக்கான் அவன நாளைக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்"ன்னு சொல்லி வைத்தேன். "நீங்க காதலை ரொம்ப கேவலப்படுத்தறீங்க"ன்னு பக்திமான் வீறு கொண்டு எழுந்துவிட்டார்.
"எப்பா கேவலமெல்லாம் படுத்தல...நானும் லவ்ஸ் விட்டிருக்கேன்...என்ன என் லவ்ஸ் ட்ராஜடில முடிஞ்சிடிச்சு....அதான் வித்தியாசம்..."
"ஓ சாரி..அதான் காதல் பத்தி வெக்ஸாகியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்..."
"இல்ல பரவாயில்ல...இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க...எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சிருச்சின்னுங்கிறதத் தான் அப்படி சொன்னேன்"
அதுக்கப்புறம் பக்திமான் பேஜாராகி என்னை காதல் துரோகியாய் பாவித்து கொஞ்ச நாள் காதல் பத்தி அடக்கியே வாசித்தார். இருந்தாலும் எனக்கு அவரை சீண்டுவதே கொள்ளை இன்பமாக இருந்தது. அப்புறம் உங்க காதல் ஜோதி எந்த மட்டுக்கும் எரியுதுன்னு டெய்லி ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்பேன். (கவுண்டமணி) செந்தில் "போங்கண்ணே..."ரேஞ்சுக்கு பக்திமான் வெட்கப்படுவார். எத்தன நாளைக்குத் தான் நானும் இதையே வெச்சு ஓட்டறது..உங்க ஒயிட் டவ்வ கொஞ்சம் அடையாளம் காட்டினா நானும் நாலுபேர் கிட்ட கிசுகிசுக்க வசதியா இருக்கும்லன்னு டெய்லி கிண்டுவேன். "நீங்க வேற நானே இன்னும் லவ்வ சொல்லலை...சக்சஸான முதல் ட்ரீட் உங்களுக்குத் தான்"ன்னு பக்திமான் சத்தியம் செய்தார். ஆஹா ஆன் சைட் மேனேஜர் வந்தா ஆட்டையப் போடலாம்ன்னு ரிசர்வ் பண்ணி வைச்சிருந்த அந்த திரி ஸ்டார் ஓட்டல்ல பக்திமானுக்கு இலாகா மாத்திடலாம் போல இருக்கேன்னு "நீ அழகான பெண்ணை காதலிக்கவில்லை...நீ காதலித்ததால் அவள் அழகானாள்"ன்னு அங்க இங்கேர்ந்து தேத்தி தேத்தி கே.ஏ.ஏஸ் சேகர் கடையில லாட்டரி விற்பது மாதிரி அவனுக்கு டெய்லி கோடீஸ்வரன் ஃபீலிங்க்ஸை ஏத்தினேன்.
அப்புறம் தான் தெரிந்தது பையன் லவ்விக் கொண்டிருந்தது ஹெச் ஆர் எக்ஸிக்யூட்டிவ்வ. அவங்க கல்லூரி காம்பஸ்ஸில் கண்ட நாள் முதலாம். அடங்கொக்க மக்கா விவரமாத்தேன் இருக்கான்...நாமளும் ஒருதரம் ஏர்லைன்ஸ் மேனேஜரை கம்ப்ளையிண்டுக்காக பார்த்தோம்...ஹும்ம்ம்ம் டிக்கெட்டுக்காவது மிச்சமாயிருக்கும்ன்னு எனக்கு ஏப்பம் வந்து, அப்புறம் ஒரு படத்தில் கோர்ட் சீனில் வக்கீல் சுஜாதா "குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவனுக்குத் தான் தண்டனை அதிகம்"ன்னு பாயிண்ட்டாய் ஒரு டைகர் தயாநிதியை மாமாவூட்டுக்கு அனுப்பியது நியாபகம் வந்து, "எய்யா ராசா...டீம்ல பிரச்சனைன்னா மேனேஜர் கிட்ட சொல்லலாம்...மேனேஜர் கிட்ட பிரச்சனைன்னா ஹெச் ஆர்ல சொல்ல்லாம்..நீ ஹெச் ஆர்லயே பிரச்சனை பண்ற..இன்ஸ்டண்ட் சங்கு தான்...பார்த்துக்கோ"ன்னு நழுவி விட்டேன்.
அப்புறம் நான் அந்தக் கம்பெனியில் இருந்த அடுத்த நாலு மாதமும் பக்திமான் தூணுக்கு பின்னால் மறைந்து மறைந்து பிலீங்க்ஸாய் எக்ஸிக்யூடிவ்வை பார்த்துக் கொண்டிருப்பார். ஹெச் ஆர் மேடம் குடுத்த வேலை கன்பேர்மேஷன் ஆர்டரை ரூமில் ப்ரேம் போட்டு மாட்டியிருந்ததாக அவன் ரூமேட் தெய்வம் அசரீரி சொன்ன்னது. அப்புறம் நான் கம்பெனி மாறிவிட்டேன். சொல்ல முடியாது ....அவனிடம் இருந்த கடமையுணர்ச்சி சில சமயம் யோசிக்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும். கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5
அந்த கம்பெனியில் நான் சேர்ந்து முப்பத்திநான்கு நாட்கள் இரண்டுமணி நேரம் தான் ஆகியிருக்கும். போன புதிதில் அலுவலக வண்டவாளங்கள் வெளிவராதால் அது சொர்கபுரியாய் இருந்தது. எப்போ வேணா வரலாம் போகலாம். முதல் நாள் ஒன்பது மணிக்கே போய் தேவுடு காத்து, பதினோரு மணிக்கு டிப்பார்ட்மெண்ட் ஹெட் வந்து, நான் குட்மார்னிங் சொல்லி அவர் குட் ஆப்டர்நூன் சொல்லி, எத்தனை மணிக்கு வந்தேன்னு கேட்டு, ஒன்பது மணிக்கு வந்தேன்னு சொல்லி, ஒம்போது மணிக்கா...அதெல்லாம் ஆபீஸ் வர்ற நேரமான்னு நாளைலேர்ந்து பதினோரு மணிக்கு...வான்னு அறிவுரை சொல்லி, நீங்க தான் சார் என் குலதெய்வம்ன்னு கால்ல விழுந்து...அடுத்த நாள்லேர்ந்து பன்னிரெண்டு மணிக்கு ஆபீஸ் போய்...இந்த சொட்டத்தலையன் தொல்லை தாங்கல...அதான் லேட்டா வந்தாலும் லேட்டா தான் போறோம்ல..அப்புறம் ஏன் ஒருமாதிரி பார்க்கிறான்"னு அப்போது தான் அலுவலகத்தில் சௌஜன்யமாகிக் கொண்டிருந்தேன்.
சீட்டில் செட்டிலாகி முதல் அரைமணிநேரம் ஆர்யபட்டா சொன்னார்,அப்துல் கலாம் சொன்னார், நாரயணமூர்த்தி அவர் வீட்டு கக்கூஸை இன்னுமும் அவரே கழுவுகிறார்ன்னு வந்திருக்கும் மெயில் பார்வேர்ட்டையெல்லாம் படித்துவிட்டு, எத்தனை பார்வேர்டு மெயில் வருகிறது/அனுப்புகிறோம் என்பதற்கேற்ற மாதிரி தான் சம்பளம் என்ற நம்பிக்கையில், வந்த மெயிலை எல்லாம் நாமும் சகட்டு மேனிக்கு சி.இ.ஓ தவிரதலாக நமக்கு அனுப்பியவன் உள்பட(இப்படி கடுப்பேதுவதே ஒரு பெரிய சுகம்) மத்த எல்லாருக்கும் மாஸ் பார்வேர்ட் விட்டு இந்தப் பக்கம் திரும்பினால் சாப்பாட்டுக்கு மணியடித்திருப்பார்கள். கல்யாணமான புதிதில் ஆரம்பித்த பழக்கத்தில் தங்கமணி மூன்று அடுக்கு கேரியரில் லெவெல் காட்டியிருப்பார். முன்வினை பின்வினை தெரியாமல் முன்னால் செய்த வழிப்பறிக்கு, கூட இருக்கும் பஞ்சத்தில் அடிபட்ட கூட்டம் பதில் மரியாதை செய்தது போக மிச்சத்தை தொண்டைக்குழியில் அடைத்துவிட்டு வந்து உட்கார்ந்தால் மானிட்டர் - மானிட்டர் அடித்தது மாதிரி சொக்குப் பொடி போட்டு கண்ணைச் சொருகும்.
செஞ்சோற்றுக் கடனுக்கு ரெண்டு மூனு ஆபிஸ் மெயிலை "எஸ் ஆபிஸர்...ஓ.கே. ஆபிஸர்...டன் அந்தக் கப்பலை அஞ்சு கோடிக்கு முடிச்சிடலாம்"ன்னு விவரமா மெயில் அனுப்பிவிட்டு திரும்பவும் கடிகாரத்தைப் பார்த்தால் டீ.க்கு நேரமாகியிருக்கும். விவரம்கெட்ட ஆபீஸில் டெஸ்க்கில் கொண்டு வந்து குடுக்காமல் காண்டீனுக்கு வந்து குடிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். "துன்ன சாப்பாடே இன்னும் செரிக்கலை..அதுக்குள்ள டீயா..ஏகப்பட்ட வேலை இருக்கு.."ன்னு அலம்பலுக்கு நடுவில் கவர்மெண்ட் ஆபீஸில் எப்படி வேலையே பண்ணுவதில்லை என்பதையும் பேசிக்கொண்டே டீயைக் குடித்துவிட்டு வந்தால் டிப்பார்ட்மெண்ட் ஹெட், அமெரிக்காவில் சாட்டிலைட் விட்டு படியளக்கும் பகவானிடம் டெலிகான் அரெஞ்ச் பண்ணியிருப்பார். டெலிகானில் தோராயமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு மணி நேரத்தில் ஆன்சைட் மேனேஜர் கூப்பிட்டு இங்கிலீஸ் டு இங்கிலீஸ் ட்ரான்ஸ்லேஷன் பண்ணி பகவான் என்ன சொன்னார்ன்னு சொல்லுவார். 'அட அப்படியா சொன்னான் அந்த கம்மனாட்டி'ன்னு என்னம்மோ புரிந்தது மாதிரி காட்டிக்கொண்டு அந்த கோட் கமெண்ட் பண்ணி கம்பைல் பண்ணுவெதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு இங்கி பின்கி பாங்கிபோட்டு தோராயமா நாலு நாளாகும் என்று கணக்குப் போட்டு சொன்னால் ஆன்சைட் மேனேஜர் ஒரு வாரம் என்று ரவுண்ட் செய்து பகவானிடம் ஆட்டையப் போட்டு ஓக்கே வாங்கிவிடுவார்.
இந்த மாதிரி நிறைய அமெரிக்கா பகவான்களிடம் ஆட்டையப் போட்டு போட்டு ஆபிஸில் சாயங்காலம் ஆறு மணிக்கு அடையாறு ஆனந்தா பவனிலிருந்து இலவச ஸ்வீட் காரம் காபி ஏற்பாடு செய்திருப்பார்கள். 'அடுத்தாப்புல முந்திரி பக்கோடா என்னிக்கு"ன்னு விவராமாய் விசாரித்துகோண்டே மேய்ந்துவிட்டு அங்கே இருக்கும் டேபிள் டென்னிஸோ, பாஸ்கெட் பாலோ இருக்கிற பக்கமா ஒரு ரவுண்டு வந்து "இப்படி இப்படி விளையாடனும்...நான் சொல்லிக்குடுத்ததெலாம் ஞாபகம் இருக்கில்ல...? ஸ்டெப்பு ஸ்டெப்பு...."ன்னு போகிற போக்கில் தின்னது செரிக்க நாலு இலவச டிப்ஸை அள்ளிவிட்டு வந்து உட்கார்ந்து யாகூ ஹாட்மெயில்ன்னு மத்த மெயிலெல்லாம் பார்த்துமுடிக்கும் போது ஹெட் கிளம்பிபோயிருப்பார். இன்னிக்கு ரொம்ப வேலை...எல்லாத்தையும் டீபக்(கமெண்ட்) பண்ணிட்டேன் நாளைக்கு மிச்சத்தை பார்த்துக்கலாம்ன்னு அப்படியே அப்பீட்டு.
பக்கத்து டீமிலிருந்தாலும் அவர் மட்டும் சாப்பாடு நேரத்தில் "சாப்பிட வர்றீங்களா"ன்னு கலயாணவீட்டில் சம்பந்தியைக் கூப்பிடுவது மாதிரி என்னை எப்போதும் மரியாதையாய் அழைப்பார். நூத்துக்கு தொன்னூறு முறை நான் போகவில்லை என்றாலும் கூப்பிட மறக்க மாட்டார். ஒரு நாள் அவர் தனியாய் உட்கார்த்து சாப்பிடுவதைப் பார்த்து பாவமாகி, தங்கமணி ஊருக்கு போய் காண்டினில் சாப்பாடு என்று இருந்த ஒரு வாரம் முழுவதும் அவர் கூட சாப்பிட போனேன். ரொம்ப மிருதுவான சுபாவம். பேச்சுவாக்கில் அவர் காலேஜ் ப்ரெஷர் என்று தெரிந்தது. அப்புறம் நண்பர் ஆபிஸ் மெயிலில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது க்ளையன்ட் கிட்ட பேசும் போது எப்படி பேசனும் என்று அங்கே இங்கே என்று பேசி டாபிக் கடைசியில் லவ்வுக்கு மாறியது. பார்ட்டி நம்ம சினிமா முரளிக்கு நெருங்கின சொந்த ரகம். காதல் தெய்வீகமானது, அதையும் தாண்டி புனிதமானது என்று பழுத்த காதல் பக்திமான். ஒரு நாள் பக்திமானின் காதல் கலாட்சேபத்தைக் கேட்டுக்கொண்டிருந்து கேண்டீனில் கொத்தமல்லி சட்னி காலியாகிவிட்டது.
அதிலிருந்து "எப்பா ராசா...சித்த பொறு...அங்க சட்டிய தேய்ச்சு கவுத்திருவானுக...இன்னிக்கு வத்தக் குழம்பு வேற சூப்பரா இருக்குன்னு" நழுவிவிடுவேன். பக்திமான் மனம் தளரமாட்டார் கலாட்சேபத்தை பாஸ் பண்ணிவிட்டு மீண்டும் ரெஸ்யூம் செய்வார். அப்புறம் இதெல்லாம் சரிபட்டு வராது என்று "ரெண்டாவது ப்ளோர்ல உன்னை மாதிரி காதலிக்காக மூக்கை வெட்டிக்கிறவன் ஒருத்தன் இருக்கான் அவன நாளைக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்"ன்னு சொல்லி வைத்தேன். "நீங்க காதலை ரொம்ப கேவலப்படுத்தறீங்க"ன்னு பக்திமான் வீறு கொண்டு எழுந்துவிட்டார்.
"எப்பா கேவலமெல்லாம் படுத்தல...நானும் லவ்ஸ் விட்டிருக்கேன்...என்ன என் லவ்ஸ் ட்ராஜடில முடிஞ்சிடிச்சு....அதான் வித்தியாசம்..."
"ஓ சாரி..அதான் காதல் பத்தி வெக்ஸாகியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்..."
"இல்ல பரவாயில்ல...இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க...எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சிருச்சின்னுங்கிறதத் தான் அப்படி சொன்னேன்"
அதுக்கப்புறம் பக்திமான் பேஜாராகி என்னை காதல் துரோகியாய் பாவித்து கொஞ்ச நாள் காதல் பத்தி அடக்கியே வாசித்தார். இருந்தாலும் எனக்கு அவரை சீண்டுவதே கொள்ளை இன்பமாக இருந்தது. அப்புறம் உங்க காதல் ஜோதி எந்த மட்டுக்கும் எரியுதுன்னு டெய்லி ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்பேன். (கவுண்டமணி) செந்தில் "போங்கண்ணே..."ரேஞ்சுக்கு பக்திமான் வெட்கப்படுவார். எத்தன நாளைக்குத் தான் நானும் இதையே வெச்சு ஓட்டறது..உங்க ஒயிட் டவ்வ கொஞ்சம் அடையாளம் காட்டினா நானும் நாலுபேர் கிட்ட கிசுகிசுக்க வசதியா இருக்கும்லன்னு டெய்லி கிண்டுவேன். "நீங்க வேற நானே இன்னும் லவ்வ சொல்லலை...சக்சஸான முதல் ட்ரீட் உங்களுக்குத் தான்"ன்னு பக்திமான் சத்தியம் செய்தார். ஆஹா ஆன் சைட் மேனேஜர் வந்தா ஆட்டையப் போடலாம்ன்னு ரிசர்வ் பண்ணி வைச்சிருந்த அந்த திரி ஸ்டார் ஓட்டல்ல பக்திமானுக்கு இலாகா மாத்திடலாம் போல இருக்கேன்னு "நீ அழகான பெண்ணை காதலிக்கவில்லை...நீ காதலித்ததால் அவள் அழகானாள்"ன்னு அங்க இங்கேர்ந்து தேத்தி தேத்தி கே.ஏ.ஏஸ் சேகர் கடையில லாட்டரி விற்பது மாதிரி அவனுக்கு டெய்லி கோடீஸ்வரன் ஃபீலிங்க்ஸை ஏத்தினேன்.
அப்புறம் தான் தெரிந்தது பையன் லவ்விக் கொண்டிருந்தது ஹெச் ஆர் எக்ஸிக்யூட்டிவ்வ. அவங்க கல்லூரி காம்பஸ்ஸில் கண்ட நாள் முதலாம். அடங்கொக்க மக்கா விவரமாத்தேன் இருக்கான்...நாமளும் ஒருதரம் ஏர்லைன்ஸ் மேனேஜரை கம்ப்ளையிண்டுக்காக பார்த்தோம்...ஹும்ம்ம்ம் டிக்கெட்டுக்காவது மிச்சமாயிருக்கும்ன்னு எனக்கு ஏப்பம் வந்து, அப்புறம் ஒரு படத்தில் கோர்ட் சீனில் வக்கீல் சுஜாதா "குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவனுக்குத் தான் தண்டனை அதிகம்"ன்னு பாயிண்ட்டாய் ஒரு டைகர் தயாநிதியை மாமாவூட்டுக்கு அனுப்பியது நியாபகம் வந்து, "எய்யா ராசா...டீம்ல பிரச்சனைன்னா மேனேஜர் கிட்ட சொல்லலாம்...மேனேஜர் கிட்ட பிரச்சனைன்னா ஹெச் ஆர்ல சொல்ல்லாம்..நீ ஹெச் ஆர்லயே பிரச்சனை பண்ற..இன்ஸ்டண்ட் சங்கு தான்...பார்த்துக்கோ"ன்னு நழுவி விட்டேன்.
அப்புறம் நான் அந்தக் கம்பெனியில் இருந்த அடுத்த நாலு மாதமும் பக்திமான் தூணுக்கு பின்னால் மறைந்து மறைந்து பிலீங்க்ஸாய் எக்ஸிக்யூடிவ்வை பார்த்துக் கொண்டிருப்பார். ஹெச் ஆர் மேடம் குடுத்த வேலை கன்பேர்மேஷன் ஆர்டரை ரூமில் ப்ரேம் போட்டு மாட்டியிருந்ததாக அவன் ரூமேட் தெய்வம் அசரீரி சொன்ன்னது. அப்புறம் நான் கம்பெனி மாறிவிட்டேன். சொல்ல முடியாது ....அவனிடம் இருந்த கடமையுணர்ச்சி சில சமயம் யோசிக்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும். கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.
Monday, November 24, 2008
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.5
முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4
பார்த்தசாரதி ஜெனரலாக பாச்சா என்று ஆகிவிடுவதால் எனக்கு தெரிந்த கிருஷ்ணமூர்த்தி கிச்சாவாகிப் போனான். கோலிவுட் படங்களில் எப்பவோ விளம்பரம் மற்றும் பீ.ஆர்.- க்ளாமர் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரைப் பார்த்ததிலிருந்து இவனும் க்ளாமர் கிச்சாவாகிப் போனான். இவன் உருவத்திற்கும் க்ளாமருக்கும் ஒன்றரை கிலோமீட்டர் தூரம். வேட்டியோ பாண்ட்டோ எதுபோட்டாலும் நெற்றியில் சந்தனத் தீற்றல் இருக்கும். குணத்தில் தங்கம். வள்ளலாரின் வளர்ப்புப் பையன் மாதிரி தான் பேசுவான். எல்லாருக்கும் அந்தப் பக்கம் அசினும் இந்தப் பக்கம் இலியானாவும் காத்துக்கொண்டிருக்கும் போது இவன் அலட்டிக்காமல் "நம்ம பெர்சனாலிட்டிக்கெல்லாம் ஏதாவது தேறுமா...?" என்று மனிதருள் மாணிக்கமாய் இருப்பான். திருவள்ளுவர் "அடக்கம் அமரருள்..." குறளே இவனை பார்த்தபிறகு தான் எழுதியிருப்பாரோன்னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.
அழகான பெண்கள் கடந்து போனால் அமைதியாய் பார்ப்பான். ஆர்ப்பாட்டமே இருக்காது டேய் எப்படிடா இப்படி...ன்னு அடிக்கடி புல்லரிக்கவைப்பான். "டேய் கிச்சா உனக்கு இந்த வயசுக்கேத்த கிளுகிளுப்பே இல்லையேடா"ன்னு கேட்டால் "அதான் பேர்லயே சேர்த்திருக்கீங்களே...க்ளாமரை"ன்னு மாணிக்கும் அருளும். கிச்சாவோட ரொம்ப நேரம் இருந்தால் எனக்கு மட்டும் தான் உடம்பில் ஹார்மோன்கள் அதிகமாய் ஆட்டம் போடுகிறதோ என்று சந்தேகம் வந்துவிடும். இருந்தாலும் கூட இருக்கும் வானரங்கள் சும்மா விடாது. "என்ன கிச்சா..மூனு தலைமுறை..சேலம் டாக்டர் அடுத்த மாசம் சரஸ்வதி லாட்ஜ்ல ரூம் போட்டிருக்காராம்...அப்பாயிமென்ட் போட்டுருவோமா..."ன்னு வம்புகிழுத்தாலும்..அசரமாட்டான்.
"டேய் மனுஷனா இருந்தா ஃபீலிங்க்ஸ வெளில கொட்டனும்...இவன் இப்படி ஊமைக்கொட்டானா இருக்கறதுக்கு...பார்த்துக்கிட்டே இருங்கடா..ஒருநாள் எவளையாவது இழுத்துகிட்டு ஓடப்போறான்...அன்னிக்குத் தெரியும்...க்ளாமர் கிச்சானு கரெக்ட்டா தான் பேரு வைச்சிருக்கோம்ன்னு" - கன்னுக்குட்டி கணேசன் அவன் பாட்டி சொல்லுகிற பழமொழியெல்லாம் மேற்கோள் காட்டி அடிக்கடி சூளுரைப்பான். க்ளாமர் கிச்சா அதற்க்கும் வழக்கமான சிரிப்பை தான் உதிர்ப்பான்.
பக்கத்து ஊரில், எனக்கு நாலு தெருவுக்கு ஒரு தாய்மாமாவை குடிவைக்கிற ரேஞ்ஜுக்கு எங்க தாத்தா லெவல் காட்டியிருந்ததால், அடிக்கடி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அந்த ஊருக்கு போய் வருகிற சந்தர்ப்பம் வரும். இப்படி போய் வரும் போது ஒரு நாள் க்ளாமர் கிச்சா அங்கிருந்த ஆஸ்பத்ரியில் இருந்து வெளியே வந்து பஸ்ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தான். அன்றைக்கு அது பெரிதாகப் படவில்லையாதலாலும், எனக்கு அவசரமாய் அடுத்த தெருவில் வேலையிருந்ததாலும் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் தெரு கிரிக்கெட் முடிந்து ஆல் இந்தியா மீட்டிங்கில் கன்னுக்குட்டி கணேசன் கிளாமர் கிச்சா அடிக்கடி கல்லிடைக்கு போய் வருகிறான் என்று போட்டு உடைத்துவிட்டான். "கிச்சா உண்மையச் சொல்லு வழக்கமா அஜீஸ் ஆஸ்பத்ரிக்கு தானே போவ..இப்ப என்ன ஆஸ்பத்ரிக்கு ஊருவிட்டு ஊரு போற.? எங்களுக்கு தெரியாம ஏதாவது தப்பு காரியம் பண்ணி உனக்கு வயத்துல ஏதாவது உண்டாகிடுத்தாடா"ன்னு பயல்கள் க்ளாமர் கிச்சாவை கலாய்த்ததில் கிச்சா அன்றைக்கு ஏகத்துக்கு அப்செட் ஆகிவிட்டான்.
இரண்டு நாள் கழித்து தெருவில் வயதுப் பெண்கள் நடமாடும் சாயங்கால நேரத்தில் எனக்கு எதாச்சயாக கல்லிடையில் மீண்டும் ஒரு முக்கியமான வேலை இருந்ததது. வேலையை முடித்துக்கொண்டு திரும்புகிற சமயத்தில் மீண்டும் கிச்சாவைப் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். முகம் ஆட்டோகிராப் சேரன் ரேஞ்சுக்கு ஒரே ஃபீலிங்க்ஸாய் இருந்தது.
இங்கிலாந்தில் எப்பவோ ஒரு காலத்தில் ஃபிலிப்ஸ் கம்பெனிகாரன் சைக்கிள் உற்பத்தி செய்ய ஆரம்பித்த போது ஒரு சைக்கிளை எங்க மாமாவிற்கு பெரிய மனசு பண்ணி விற்றிருந்தான். அதை எங்க மாமா "என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்"ன்னு என்னிடம் ஒப்படைத்திருந்தார். பொழைக்கத் தெரியாத இங்கிலாந்து ஃபிலிப்ஸ்காரன், ஊர்ல இருக்கிற இரும்பையெல்லாம் உருக்கி சைக்கிளை கனமாக செய்திருந்தான். உட்கார்ந்து அழுத்துவதற்கு ஒன்பது இட்லி சாப்பிடவேண்டும்...இந்த தொழில் ரகசியத்தை வெளியில் விடாமல் "ஊர்ல எவன்கிட்டயாவது இங்கிலாந்து ஃபிலிப்ஸ் சைக்கிள் இருக்காடா"ன்னு உதார்விட்டுக் கொண்டு ப்ரீமியம் டிக்கட்டுகளை மட்டும் தான் பின் கேரியரில் ஏத்துவேன். "டேய் ஒரு காலத்துல தான் சைக்கிள் மெனுபாக்ச்சர் பண்ணினது ஃபிலிப்ஸ் காரனுக்கே மறந்து போயிருக்கும்...மியூசியத்துல வைக்கவேண்டியதை எல்லாம் ஓட்டிட்டு திரியற...பார்த்துடா ஒரு நாள் உன்னை உள்ள வைச்சிறப் போறாங்க"ன்னு நான் ஏத்தாத ஹெவி வெயிட் பார்ட்டிகள் வயிற்றெரிச்சலைக் கொட்டும்.
அன்றைக்கு சற்று இருட்டிவிட்டத்தாலும் பாலத்தை தாண்டிய ஏற்றத்தில் சைக்கிளை பின்னாடியிலிருந்து தள்ள ஒரு ஆள் தேவைப்பட்டதாலும் சேரன் ஃபீலிங்க்ஸ் க்ளாமர் கிச்சாவை சைக்கிளில் லிப்ட் குடுக்க பெரிய மனது பண்ணினேன். அன்றைக்கு ஏனோ கிச்சா வழக்கமாய் பேசும் வள்ளலார் பற்றி கூட பேசவில்லை. வழி நெடுக அமைதியாக வந்தான். "என்னடா க்ளாமர்... ஏதவது ப்ராபளமா..என்ன ஆஸ்பதிரிக்கு..? யாருக்காவது உடம்பு சரியில்லையா"ன்னு ஊருக்கு வந்ததும் கேட்டேன். கையைப் பிடித்துக் கொண்டு "டேய் சாப்பிட்டுட்டு வாயேன்..கொஞ்சம் காலாற பாலம் வரைக்கும் நடக்கலாம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"ன்னு சொன்ன போது ஏதோ சீரியஸ்ன்னு தெரிந்தது.
அன்றைக்கு வாக்கிங் போன போது "டேய் யாருகிட்டயும் மூச்சு விட்டுறாதடா..."ன்னு நூறு தரம் சத்தியம் வாங்கிக் கொண்டு கிச்சா விஷயத்தை ஆரம்பித்தான். கிச்சா விஷயத்தை சொல்லி முடித்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கன்னுக்குட்டி கணேசன் பாட்டி சொல்லுகிற பழமொழியில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது.
விஷயம் இது தான். க்ளாமர் கிச்சாவை அவன் காலேஜில் ஒரு பெண் லவ் பண்ணிக்கொண்டிருந்திருக்கிறது, கிச்சா வேற பெண்ணை மனதுக்குள் டாவடித்துக் கொண்டிருந்தான். அது தெரிந்து கிச்சாவை டாவடித்த பெண் பூச்சி மருந்தை குடித்துவிட்டதாம். அவளைத் தான் கல்லிடை ஆஸ்பத்ரியில் சேர்த்திருப்பதாகவும், க்ளாமர் கிச்சா டெய்லி போய் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வருவதாகவும், அவர்கள் வீட்டில் இவன் கூடப் படிக்கிற பையன் என்பது மட்டும் தான் தெரியும். இதில் மருந்தைக் குடித்த பெண்ணும் கிச்சாவும் வேற வேற ஜாதி. கிச்சா மனதுக்குள் ரூட்டு விட்டுக்கொண்டிருக்கும் பெண்ணும் கிச்சாவும் ஒரே ஜாதி என்று கிச்சா சொல்லி முடித்தபோது எனக்கு தலையை சுற்றி உட்கார்ந்து விட்டேன். "டேய் அந்த கால பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து ஒரு நாட்டை சொல்லிட்டு ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி ஊருக்குள்ள வளையவர்றியேடா ...எப்படிடா இதெல்லாம்"ன்னு வாயை விட்டே கேட்டுவிட்டென்.
"டேய் அதெல்லாம் விடு இப்ப நான் என்னடா பண்ணட்டும் இத எப்படி சமாளிக்கன்னு தெரியலைடா...நீ தான் ஒரு ஐடியா சொல்லனும்"ன்னு க்ளாமர் கிச்சா ஒரே அழுவாச்சி.
நம்ம தெகிரியமெல்லாம் ஃபிகர் ஏதோ பெரிய மனது பண்ணி நம்ம சேட்டைகளை கண்டுக்காம போகிறவரையில் தான். திரும்பி பார்த்தாலே ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி வயத்தை கலக்கிவிடும். இதுல க்ளாமர் கிச்சா நேஷனல் அவார்ட் படத்துல வர்ற கலவர மேட்டரை வேற சொல்லிவிட்டு ஐடியா கேட்டதும் பேஸ்மென்ட் வீக்காகிவிட்டது. பின்னொரு நாளில் கிச்சாவை சந்திப்பதாக சொல்லிவிட்டு விட்டுக்கு வந்து போர்த்திப் படுக்கும் வரை நடுக்கம் அடங்கவில்லை.
அடுத்த நாள் முழுவதும் கிச்சா சொன்ன அந்த மேட்டரே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "க்ளாமர் கிச்சான்னு கரெக்ட்டா தான் கடவுள் அமைச்சிருக்கான்...நம்மளப் பார்த்து ஒரு பயபுள்ளையும் உருக மாட்டேங்குதே"ன்னு கண்ணாடியைப் பார்க்கும் போதேல்லாம் ஃபீலீங்க்ஸாய் இருக்கும். அப்புறம் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தால் தான் இந்த யோகம் கிட்டும் என்று நெற்றியில் சந்தனத் தீற்றல் வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
அதைப் பார்த்து கன்னுக்குட்டி கணேசனுக்கு சந்தேகம் வந்து நோண்ட, அப்புறம் ஒருத்தரிடமும் சொல்லக்கூடாதென்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு விஷயத்தை சொன்னேன். கன்னுக்குட்டிக்கும் ஜீரணமே ஆகவில்லை. க்ளாமர் கிச்சாவின் பிரச்சனையைவிட அவனுக்காக ஒரு பெண் மருந்து குடித்ததே எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.
"ஆளப் பார்த்து எட போடக்கூடாதுடா...எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவா...சந்தனதுக்கு வசிய சக்தி அதிகம்ன்னு.." கன்னுக்குட்டி இதுக்கும் பாட்டியை கூட்டி வந்து அன்றிலிருந்து அவனும் சந்தனப் பொட்டுவைத்துக் கொள்ளப் போவதாகவும் முடிவு கட்டினான்.
"டேய் போயும் போயும் நம்ம களாமர் கிச்சாவுக்காக மருந்தை குடிச்ச அந்தப் பெண்ணை எப்படியும் நாம பார்த்துரணும்டா " என்று கன்னுக்குட்டி வெறி வந்துவிட்டது. சும்மா ஆஸ்பத்திரிக்குள்ள போய்விடலாம் ஆனா எந்தப் பெண்ன்னு எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கொஞ்சம் சவாலாய் இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. எப்படியும் ஏதாவது அஜால்ஸ் குஜால்ஸ் பண்ணி அந்தப் பெண் முகத்தை பார்த்துவிடுவதென்று நானும் கன்னுக்குட்டியும் தீர்மானம் பண்ணினோம்.
நல்ல பிஸி நேரமாய் போவதென்று அடுத்த நாள் சாயங்கால நேரத்தை தேர்ந்தெடுத்து போனால் நினைத்தது மாதிரியே கூட்டமாய் இருந்தது. ஒரு தரம் வார்ட் முழுவதும் நடந்துபோய் நோட்டம் விட்டுப்பார்த்தும் காலேஜ் பெண்ணின் ரூமை கண்டுபிடிக்கமுடியவில்லை. ரெண்டாம் தரம் பார்க்கலாம் என்று முடிவுகட்டிய போது அங்கிருந்த நர்ஸுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
"என்னப்பா யார பார்க்கனும்"ன்னு தோரணையாக கேட்டவுடன், எனக்கு சைக்கிளைப் பூட்ட மறந்தது நியாபகதுக்கு வந்து கன்னுக்குட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். வெளியில் போய் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது கன்னுக்குட்டி குழப்பமாய் வந்தான். "டேய் ஒரே ஒரு காலேஜ் பொண்ணு தான் இருந்ததாம் அதுவும் நேத்திக்கே டிஸ்சார்ஜ் ஆகியாச்சாம் ஆனா அதுக்கு கால்ல ப்ராக்ச்சராம்" என்று அவன் சொன்ன போது எனக்கும் குழப்பம் அதிகமாகிப் போனது. திரும்ப நினைக்க எத்தனிக்கையில் க்ளாமர் கிச்சா காப்பி தூக்கை தூக்கிக் கொண்டு ஒரு ரூமிலிருந்து வந்துகொண்டிந்தான். எஙகளை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. அவனை கூட்டிக் கொண்டு போய் பக்கத்திலிருந்த மூத்திரசந்தில் விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்ததில் அவன் சித்தப்பாவிற்கு டைபாய்டு என்று சேர்த்திருப்பதாகவும், காப்பி டிபன் வாங்கிக்குடுக்க டெய்லி சாயங்காலம் வருவதாகவும், கிச்சாவை நினைத்து உருகி உருகி மருந்துகுடித்த பெண் இவன் மன அபிலாஷை என்றும் ஆனால் இவன் ஒரு பெண்ணை டாவடிப்பது மட்டும் உண்மை என்றும் ஆனால் அவள் யார் என்பது மட்டும் சொல்லவே மாட்டேன் என்று பொல பொலவென்று கக்கிவிட்டான். எங்களுக்கு வந்த ஆத்திரத்தில் நல்ல திட்டி நொறுக்கிவிட்டு மீதத்தை அடுத்த நாள் ஆல் இந்தியா மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாமென்றும் கிளம்பிவிட்டோம்.
கன்னுக்குட்டி கணேசனை பின்னாடி வைத்துக் கொண்டு அழுத்தமுடியாமல் அழுத்திவரும் போதும் அவனுக்கு தாங்கவில்லை. "ஆமை வீட்டைக் கெடுக்கும் ஊமை ஊரைக் கெடுக்கும்"ன்னு திரும்பவும் பாட்டியை மேற்கோள் காட்டினான்.
அப்புறம் நாங்கள் சநதனப் பொட்டு வைத்துக்கொண்டு, எங்களுக்காக யாராவது உருகி மருந்தைக் குடிப்பதற்க்கு பதிலாக எங்களின் நாமக்குரங்கு அவதாரத்தைப் பார்த்து, கொடுமை தாங்க முடியாமல் யாரவது பூச்சி மருந்தைக் குடித்துவிடுவார்களென்று சந்தனப் பொட்டு ஐடியாவை கேன்சல் செய்துவிட்டோம்.ஆனால் இன்று வரை சந்தனப் பொட்டு இட்டுக்கொண்டு வரும் க்ளாமர் கிச்சாக்களின் பேச்சை மட்டும் லேசில் நம்புவதில்லை.
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4
பார்த்தசாரதி ஜெனரலாக பாச்சா என்று ஆகிவிடுவதால் எனக்கு தெரிந்த கிருஷ்ணமூர்த்தி கிச்சாவாகிப் போனான். கோலிவுட் படங்களில் எப்பவோ விளம்பரம் மற்றும் பீ.ஆர்.- க்ளாமர் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரைப் பார்த்ததிலிருந்து இவனும் க்ளாமர் கிச்சாவாகிப் போனான். இவன் உருவத்திற்கும் க்ளாமருக்கும் ஒன்றரை கிலோமீட்டர் தூரம். வேட்டியோ பாண்ட்டோ எதுபோட்டாலும் நெற்றியில் சந்தனத் தீற்றல் இருக்கும். குணத்தில் தங்கம். வள்ளலாரின் வளர்ப்புப் பையன் மாதிரி தான் பேசுவான். எல்லாருக்கும் அந்தப் பக்கம் அசினும் இந்தப் பக்கம் இலியானாவும் காத்துக்கொண்டிருக்கும் போது இவன் அலட்டிக்காமல் "நம்ம பெர்சனாலிட்டிக்கெல்லாம் ஏதாவது தேறுமா...?" என்று மனிதருள் மாணிக்கமாய் இருப்பான். திருவள்ளுவர் "அடக்கம் அமரருள்..." குறளே இவனை பார்த்தபிறகு தான் எழுதியிருப்பாரோன்னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.
அழகான பெண்கள் கடந்து போனால் அமைதியாய் பார்ப்பான். ஆர்ப்பாட்டமே இருக்காது டேய் எப்படிடா இப்படி...ன்னு அடிக்கடி புல்லரிக்கவைப்பான். "டேய் கிச்சா உனக்கு இந்த வயசுக்கேத்த கிளுகிளுப்பே இல்லையேடா"ன்னு கேட்டால் "அதான் பேர்லயே சேர்த்திருக்கீங்களே...க்ளாமரை"ன்னு மாணிக்கும் அருளும். கிச்சாவோட ரொம்ப நேரம் இருந்தால் எனக்கு மட்டும் தான் உடம்பில் ஹார்மோன்கள் அதிகமாய் ஆட்டம் போடுகிறதோ என்று சந்தேகம் வந்துவிடும். இருந்தாலும் கூட இருக்கும் வானரங்கள் சும்மா விடாது. "என்ன கிச்சா..மூனு தலைமுறை..சேலம் டாக்டர் அடுத்த மாசம் சரஸ்வதி லாட்ஜ்ல ரூம் போட்டிருக்காராம்...அப்பாயிமென்ட் போட்டுருவோமா..."ன்னு வம்புகிழுத்தாலும்..அசரமாட்டான்.
"டேய் மனுஷனா இருந்தா ஃபீலிங்க்ஸ வெளில கொட்டனும்...இவன் இப்படி ஊமைக்கொட்டானா இருக்கறதுக்கு...பார்த்துக்கிட்டே இருங்கடா..ஒருநாள் எவளையாவது இழுத்துகிட்டு ஓடப்போறான்...அன்னிக்குத் தெரியும்...க்ளாமர் கிச்சானு கரெக்ட்டா தான் பேரு வைச்சிருக்கோம்ன்னு" - கன்னுக்குட்டி கணேசன் அவன் பாட்டி சொல்லுகிற பழமொழியெல்லாம் மேற்கோள் காட்டி அடிக்கடி சூளுரைப்பான். க்ளாமர் கிச்சா அதற்க்கும் வழக்கமான சிரிப்பை தான் உதிர்ப்பான்.
பக்கத்து ஊரில், எனக்கு நாலு தெருவுக்கு ஒரு தாய்மாமாவை குடிவைக்கிற ரேஞ்ஜுக்கு எங்க தாத்தா லெவல் காட்டியிருந்ததால், அடிக்கடி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அந்த ஊருக்கு போய் வருகிற சந்தர்ப்பம் வரும். இப்படி போய் வரும் போது ஒரு நாள் க்ளாமர் கிச்சா அங்கிருந்த ஆஸ்பத்ரியில் இருந்து வெளியே வந்து பஸ்ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தான். அன்றைக்கு அது பெரிதாகப் படவில்லையாதலாலும், எனக்கு அவசரமாய் அடுத்த தெருவில் வேலையிருந்ததாலும் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் தெரு கிரிக்கெட் முடிந்து ஆல் இந்தியா மீட்டிங்கில் கன்னுக்குட்டி கணேசன் கிளாமர் கிச்சா அடிக்கடி கல்லிடைக்கு போய் வருகிறான் என்று போட்டு உடைத்துவிட்டான். "கிச்சா உண்மையச் சொல்லு வழக்கமா அஜீஸ் ஆஸ்பத்ரிக்கு தானே போவ..இப்ப என்ன ஆஸ்பத்ரிக்கு ஊருவிட்டு ஊரு போற.? எங்களுக்கு தெரியாம ஏதாவது தப்பு காரியம் பண்ணி உனக்கு வயத்துல ஏதாவது உண்டாகிடுத்தாடா"ன்னு பயல்கள் க்ளாமர் கிச்சாவை கலாய்த்ததில் கிச்சா அன்றைக்கு ஏகத்துக்கு அப்செட் ஆகிவிட்டான்.
இரண்டு நாள் கழித்து தெருவில் வயதுப் பெண்கள் நடமாடும் சாயங்கால நேரத்தில் எனக்கு எதாச்சயாக கல்லிடையில் மீண்டும் ஒரு முக்கியமான வேலை இருந்ததது. வேலையை முடித்துக்கொண்டு திரும்புகிற சமயத்தில் மீண்டும் கிச்சாவைப் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். முகம் ஆட்டோகிராப் சேரன் ரேஞ்சுக்கு ஒரே ஃபீலிங்க்ஸாய் இருந்தது.
இங்கிலாந்தில் எப்பவோ ஒரு காலத்தில் ஃபிலிப்ஸ் கம்பெனிகாரன் சைக்கிள் உற்பத்தி செய்ய ஆரம்பித்த போது ஒரு சைக்கிளை எங்க மாமாவிற்கு பெரிய மனசு பண்ணி விற்றிருந்தான். அதை எங்க மாமா "என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்"ன்னு என்னிடம் ஒப்படைத்திருந்தார். பொழைக்கத் தெரியாத இங்கிலாந்து ஃபிலிப்ஸ்காரன், ஊர்ல இருக்கிற இரும்பையெல்லாம் உருக்கி சைக்கிளை கனமாக செய்திருந்தான். உட்கார்ந்து அழுத்துவதற்கு ஒன்பது இட்லி சாப்பிடவேண்டும்...இந்த தொழில் ரகசியத்தை வெளியில் விடாமல் "ஊர்ல எவன்கிட்டயாவது இங்கிலாந்து ஃபிலிப்ஸ் சைக்கிள் இருக்காடா"ன்னு உதார்விட்டுக் கொண்டு ப்ரீமியம் டிக்கட்டுகளை மட்டும் தான் பின் கேரியரில் ஏத்துவேன். "டேய் ஒரு காலத்துல தான் சைக்கிள் மெனுபாக்ச்சர் பண்ணினது ஃபிலிப்ஸ் காரனுக்கே மறந்து போயிருக்கும்...மியூசியத்துல வைக்கவேண்டியதை எல்லாம் ஓட்டிட்டு திரியற...பார்த்துடா ஒரு நாள் உன்னை உள்ள வைச்சிறப் போறாங்க"ன்னு நான் ஏத்தாத ஹெவி வெயிட் பார்ட்டிகள் வயிற்றெரிச்சலைக் கொட்டும்.
அன்றைக்கு சற்று இருட்டிவிட்டத்தாலும் பாலத்தை தாண்டிய ஏற்றத்தில் சைக்கிளை பின்னாடியிலிருந்து தள்ள ஒரு ஆள் தேவைப்பட்டதாலும் சேரன் ஃபீலிங்க்ஸ் க்ளாமர் கிச்சாவை சைக்கிளில் லிப்ட் குடுக்க பெரிய மனது பண்ணினேன். அன்றைக்கு ஏனோ கிச்சா வழக்கமாய் பேசும் வள்ளலார் பற்றி கூட பேசவில்லை. வழி நெடுக அமைதியாக வந்தான். "என்னடா க்ளாமர்... ஏதவது ப்ராபளமா..என்ன ஆஸ்பதிரிக்கு..? யாருக்காவது உடம்பு சரியில்லையா"ன்னு ஊருக்கு வந்ததும் கேட்டேன். கையைப் பிடித்துக் கொண்டு "டேய் சாப்பிட்டுட்டு வாயேன்..கொஞ்சம் காலாற பாலம் வரைக்கும் நடக்கலாம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"ன்னு சொன்ன போது ஏதோ சீரியஸ்ன்னு தெரிந்தது.
அன்றைக்கு வாக்கிங் போன போது "டேய் யாருகிட்டயும் மூச்சு விட்டுறாதடா..."ன்னு நூறு தரம் சத்தியம் வாங்கிக் கொண்டு கிச்சா விஷயத்தை ஆரம்பித்தான். கிச்சா விஷயத்தை சொல்லி முடித்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கன்னுக்குட்டி கணேசன் பாட்டி சொல்லுகிற பழமொழியில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது.
விஷயம் இது தான். க்ளாமர் கிச்சாவை அவன் காலேஜில் ஒரு பெண் லவ் பண்ணிக்கொண்டிருந்திருக்கிறது, கிச்சா வேற பெண்ணை மனதுக்குள் டாவடித்துக் கொண்டிருந்தான். அது தெரிந்து கிச்சாவை டாவடித்த பெண் பூச்சி மருந்தை குடித்துவிட்டதாம். அவளைத் தான் கல்லிடை ஆஸ்பத்ரியில் சேர்த்திருப்பதாகவும், க்ளாமர் கிச்சா டெய்லி போய் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வருவதாகவும், அவர்கள் வீட்டில் இவன் கூடப் படிக்கிற பையன் என்பது மட்டும் தான் தெரியும். இதில் மருந்தைக் குடித்த பெண்ணும் கிச்சாவும் வேற வேற ஜாதி. கிச்சா மனதுக்குள் ரூட்டு விட்டுக்கொண்டிருக்கும் பெண்ணும் கிச்சாவும் ஒரே ஜாதி என்று கிச்சா சொல்லி முடித்தபோது எனக்கு தலையை சுற்றி உட்கார்ந்து விட்டேன். "டேய் அந்த கால பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து ஒரு நாட்டை சொல்லிட்டு ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி ஊருக்குள்ள வளையவர்றியேடா ...எப்படிடா இதெல்லாம்"ன்னு வாயை விட்டே கேட்டுவிட்டென்.
"டேய் அதெல்லாம் விடு இப்ப நான் என்னடா பண்ணட்டும் இத எப்படி சமாளிக்கன்னு தெரியலைடா...நீ தான் ஒரு ஐடியா சொல்லனும்"ன்னு க்ளாமர் கிச்சா ஒரே அழுவாச்சி.
நம்ம தெகிரியமெல்லாம் ஃபிகர் ஏதோ பெரிய மனது பண்ணி நம்ம சேட்டைகளை கண்டுக்காம போகிறவரையில் தான். திரும்பி பார்த்தாலே ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி வயத்தை கலக்கிவிடும். இதுல க்ளாமர் கிச்சா நேஷனல் அவார்ட் படத்துல வர்ற கலவர மேட்டரை வேற சொல்லிவிட்டு ஐடியா கேட்டதும் பேஸ்மென்ட் வீக்காகிவிட்டது. பின்னொரு நாளில் கிச்சாவை சந்திப்பதாக சொல்லிவிட்டு விட்டுக்கு வந்து போர்த்திப் படுக்கும் வரை நடுக்கம் அடங்கவில்லை.
அடுத்த நாள் முழுவதும் கிச்சா சொன்ன அந்த மேட்டரே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "க்ளாமர் கிச்சான்னு கரெக்ட்டா தான் கடவுள் அமைச்சிருக்கான்...நம்மளப் பார்த்து ஒரு பயபுள்ளையும் உருக மாட்டேங்குதே"ன்னு கண்ணாடியைப் பார்க்கும் போதேல்லாம் ஃபீலீங்க்ஸாய் இருக்கும். அப்புறம் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தால் தான் இந்த யோகம் கிட்டும் என்று நெற்றியில் சந்தனத் தீற்றல் வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
அதைப் பார்த்து கன்னுக்குட்டி கணேசனுக்கு சந்தேகம் வந்து நோண்ட, அப்புறம் ஒருத்தரிடமும் சொல்லக்கூடாதென்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு விஷயத்தை சொன்னேன். கன்னுக்குட்டிக்கும் ஜீரணமே ஆகவில்லை. க்ளாமர் கிச்சாவின் பிரச்சனையைவிட அவனுக்காக ஒரு பெண் மருந்து குடித்ததே எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.
"ஆளப் பார்த்து எட போடக்கூடாதுடா...எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவா...சந்தனதுக்கு வசிய சக்தி அதிகம்ன்னு.." கன்னுக்குட்டி இதுக்கும் பாட்டியை கூட்டி வந்து அன்றிலிருந்து அவனும் சந்தனப் பொட்டுவைத்துக் கொள்ளப் போவதாகவும் முடிவு கட்டினான்.
"டேய் போயும் போயும் நம்ம களாமர் கிச்சாவுக்காக மருந்தை குடிச்ச அந்தப் பெண்ணை எப்படியும் நாம பார்த்துரணும்டா " என்று கன்னுக்குட்டி வெறி வந்துவிட்டது. சும்மா ஆஸ்பத்திரிக்குள்ள போய்விடலாம் ஆனா எந்தப் பெண்ன்னு எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கொஞ்சம் சவாலாய் இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. எப்படியும் ஏதாவது அஜால்ஸ் குஜால்ஸ் பண்ணி அந்தப் பெண் முகத்தை பார்த்துவிடுவதென்று நானும் கன்னுக்குட்டியும் தீர்மானம் பண்ணினோம்.
நல்ல பிஸி நேரமாய் போவதென்று அடுத்த நாள் சாயங்கால நேரத்தை தேர்ந்தெடுத்து போனால் நினைத்தது மாதிரியே கூட்டமாய் இருந்தது. ஒரு தரம் வார்ட் முழுவதும் நடந்துபோய் நோட்டம் விட்டுப்பார்த்தும் காலேஜ் பெண்ணின் ரூமை கண்டுபிடிக்கமுடியவில்லை. ரெண்டாம் தரம் பார்க்கலாம் என்று முடிவுகட்டிய போது அங்கிருந்த நர்ஸுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
"என்னப்பா யார பார்க்கனும்"ன்னு தோரணையாக கேட்டவுடன், எனக்கு சைக்கிளைப் பூட்ட மறந்தது நியாபகதுக்கு வந்து கன்னுக்குட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். வெளியில் போய் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது கன்னுக்குட்டி குழப்பமாய் வந்தான். "டேய் ஒரே ஒரு காலேஜ் பொண்ணு தான் இருந்ததாம் அதுவும் நேத்திக்கே டிஸ்சார்ஜ் ஆகியாச்சாம் ஆனா அதுக்கு கால்ல ப்ராக்ச்சராம்" என்று அவன் சொன்ன போது எனக்கும் குழப்பம் அதிகமாகிப் போனது. திரும்ப நினைக்க எத்தனிக்கையில் க்ளாமர் கிச்சா காப்பி தூக்கை தூக்கிக் கொண்டு ஒரு ரூமிலிருந்து வந்துகொண்டிந்தான். எஙகளை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. அவனை கூட்டிக் கொண்டு போய் பக்கத்திலிருந்த மூத்திரசந்தில் விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்ததில் அவன் சித்தப்பாவிற்கு டைபாய்டு என்று சேர்த்திருப்பதாகவும், காப்பி டிபன் வாங்கிக்குடுக்க டெய்லி சாயங்காலம் வருவதாகவும், கிச்சாவை நினைத்து உருகி உருகி மருந்துகுடித்த பெண் இவன் மன அபிலாஷை என்றும் ஆனால் இவன் ஒரு பெண்ணை டாவடிப்பது மட்டும் உண்மை என்றும் ஆனால் அவள் யார் என்பது மட்டும் சொல்லவே மாட்டேன் என்று பொல பொலவென்று கக்கிவிட்டான். எங்களுக்கு வந்த ஆத்திரத்தில் நல்ல திட்டி நொறுக்கிவிட்டு மீதத்தை அடுத்த நாள் ஆல் இந்தியா மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாமென்றும் கிளம்பிவிட்டோம்.
கன்னுக்குட்டி கணேசனை பின்னாடி வைத்துக் கொண்டு அழுத்தமுடியாமல் அழுத்திவரும் போதும் அவனுக்கு தாங்கவில்லை. "ஆமை வீட்டைக் கெடுக்கும் ஊமை ஊரைக் கெடுக்கும்"ன்னு திரும்பவும் பாட்டியை மேற்கோள் காட்டினான்.
அப்புறம் நாங்கள் சநதனப் பொட்டு வைத்துக்கொண்டு, எங்களுக்காக யாராவது உருகி மருந்தைக் குடிப்பதற்க்கு பதிலாக எங்களின் நாமக்குரங்கு அவதாரத்தைப் பார்த்து, கொடுமை தாங்க முடியாமல் யாரவது பூச்சி மருந்தைக் குடித்துவிடுவார்களென்று சந்தனப் பொட்டு ஐடியாவை கேன்சல் செய்துவிட்டோம்.ஆனால் இன்று வரை சந்தனப் பொட்டு இட்டுக்கொண்டு வரும் க்ளாமர் கிச்சாக்களின் பேச்சை மட்டும் லேசில் நம்புவதில்லை.
Saturday, September 27, 2008
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.4
முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3
மினி ப்ராஜெக்டை சொத்து பிரித்ததில் அது மைக்ரோ மினியாகிவிட்டது. எங்க ஊரில் மளிகைக் கடை அண்ணாச்சி காதில் சொருகியிருக்கும் பென்சிலை எடுக்காமலேயே போடும் கணக்கை கம்ப்யூட்டர் படுத்தச் சொல்லியிருந்தார்கள். மளிகைக் கடை பெயரை மட்டும் "ஏடிபி கார்ப்பரேஷன்"ன்னு பந்தா படுத்தியிருந்தார்கள். "என்னா பாஸூ இப்படி சொதப்பறாங்க...இப்படியே மளிகைக் கடை கணக்கெல்லாம் போட்டுக்கிட்டிருந்தா எப்போ தான் சின்ன வயசு குஷ்பூ போட்டாவ குடுத்து கண்டுபிடிக்கச் சொல்லுவாங்க" என்பதே அம்மாபட்டியின் கவலையாக இருந்தது. அதெல்லாம் பைனல் இயர்ல தான்ன்னு அவனைப் பேக்கப் செய்துவிட்டு கிளியோடு ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பித்தேன். விண்டோஸ் 3.0 அப்போது தான் (என்)ஐ.ஐ.டிக்கு வந்திருந்த காலமது. டாஸ் - பாக்ஸ்ப்ரோவில் தான் இந்த ப்ராஜெக்ட் செய்யவேண்டும் என்று வாத்தியார் சொல்லியிருந்தார்.
ஓப்பனிங் ஸ்கீனில் கம்பெனி பெயரை எங்கே போடலாம், எந்த டிசைனில் எந்த ஃபாண்ட்டில் போடலாம் என்று ப்ராஜெக்ட்டுக்குத் தேவையான மிக முக்கியாமான விஷயங்களில் நான் தீவிரமாக செலுத்தி வந்தேன். கிளியோ கணக்குக்குத் தேவையான அல்காரிதமை தான் முதலில் பார்க்கனும்ன்னு அல்பமான விஷயங்களில் கவனத்தை சிதறவிட்டுக்கொண்டிருந்தது. சரி சரி அதெல்லாம் இடது கையால அசால்ட்டா செய்வோம்லன்னு உதார் விட்டு கம்ப்யூட்டர் ட்ரோமுக்கு போய் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து வேலையை ஆரம்பித்தால் ஆரம்பமே சவாலாக இருந்தது. கிறுக்குப் பயலுங்க ட்ரோமில் வேறெதோ மேக் கீபோர்ட் வைத்திருந்தார்கள். பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு கிலி பிடித்து இங்கே ஐ.ஐ.டியில் செய்த கீ போர்ட் எக்ஸர்சைலாம் மறந்து போய் "ஏ" எங்க இருக்கும் "கே" எங்க இருக்கும்ன்னு உதற ஆரம்பித்து விட்டது. அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரத்தெட்டு அருவாளாம்ன்னு ஜம்பமாக கீபோர்ட்டை வேறு என் பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் மோவாக்கட்டையில் கையை வைத்துக் கொண்டு யோசிக்கிற மாதிரி கிழக்கே ஒரு தரம் பார்த்து மேற்கே ஒருதரம் பார்த்து அப்புறம் கீழே கீப்போர்ட்டை உத்துப் பார்த்து கண்ணால் துளாவி "கே" கண்ணில் தட்டுப்பட்டவுடன் "ஆங்...கரெக்ட் அதான் சரி...இந்த அல்காரிதம் லாஜிக் தான் யோசிச்கிட்டு இருந்தேன்...இப்போ எப்படி பண்ணனும்ன்னு ஒரு ஐடியா கிடைச்சாச்சு"ன்னு சமாளித்து அப்புறம் திங்க்கிங் ப்ராசஸ் தடை படுகிறதென்று கீபோர்ட்டை கிளியிடம் மாற்றிவிட்டேன்.
வேலையை முடித்துவிட்டு டெய்லி ட்ரோமில் மத்த பையன்களெல்லாம் யுவதிகளோடு உலக நன்மையைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள், வடநாட்டு கிளி மட்டும் வேலை இருக்கிறதென்று சந்தைக்கு கிளம்பிவிடும். அது சரி நமக்கு இந்தியாவிலேயே முதல் மாணவனாய் வருகிற யோகம் மட்டும் தான் இருக்கு போலவென்று மனதை தேற்றிக் கொண்டு 11இ க்கு நானும் 47டிக்கு அம்மாபட்டியும் தேவுடு காக்க ஆரம்பித்துவிடுவோம். "ஏன் பாஸு நமக்கு மட்டும் செட்டு செட்டாக மாட்டேங்குதுன்னு"ன்னு அம்மாபட்டி 47டி வரும் வரை செட்டு கவலைப் படுவான்.
நான் படித்து வந்த நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில் இருக்கும் எங்கள் ஐ.ஐ.டி தலமை அலுவலகம் மிக கலர்புல்லான இடம். எனக்கும் அம்மாபட்டிக்கும், ரெமோ பைக்கில் ஸ்டையிலாக சாய்ந்து கொண்டு நிறைய பாடம் எடுத்திருக்கிறான். குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு பின்னாளில் ஹீரோயினான ஷாலினியும் அங்கு தான் படித்தார். அப்போது அவர் ஹீரோயினாகவில்லையாதலால் யாரும் ரொம்ப கண்டுகொள்ள மாட்டார்கள். எனக்கும் அம்மாபட்டிக்கும் ஷாலினியை பார்த்து அவர் நடிப்பைப் பற்றி ரெண்டு வார்த்தை பெருமையாக பேசவேண்டும் என்று கொள்ளை ஆசை. ரெமோ அதற்க்கு தடை போட்டுவிட்டான். "சுத்த காட்டான்களா இருக்கதீங்கடா ரொம்ப ஓவரா ஊத்தினீங்கன்னா யாருமே திரும்பக் கூட பார்க்க மாட்டாங்க"ன்னு ரெமோ சொன்னது அம்மாபட்டிக்கு சமாதானம் ஆகவில்லை. "அதெல்லாம் இல்ல பாஸு அந்தப் புள்ள நம்ம செட்டுல சேர்ந்திருமோன்னு இவனுக்கு பயம்"ன்னு அம்மாபட்டியின் நம்பிக்கை சில நேரங்களில் எனக்கு தலையே சுற்றும்.
நுங்கம்பாக்கம் ஹை ரோடு ஐ.ஐ.டி மூன்று மாடிக் கட்டிடம். நாலாவது மாடி டெரஸில் ரூப் கார்டன் மாதிரி செடியெல்லாம் வைத்து பெஞ்ச் டேபிளெல்லாம் மாணவர்கள் படிக்கட்டும் என்று போட்டிருப்பார்கள். ஆனால் மாணவர்கள் படிக்காமல் மானாவாரியாக கடலை சாகுபடி செய்து கொண்டிருப்பார்கள். எல்லா செட்டும் கலர்புல்லாக இருக்கும். ரெமோ வந்து எங்கள் செட்டில் ஐய்க்கியமாவதற்கு முன்னால் நானும் அம்மாபட்டியும் மட்டும் வெத்தாக "பாஸ் பாஸ்"ன்னு கொஞ்சிக்கொண்டிருப்போம். ரெமோ எங்க செட்டில் ஐய்க்கியமாகி அவனோடு நாலு நண்பிகளை கூட்டிக் கொண்டு வந்ததுக்கப்புறம் தான் நானும் அம்மாபட்டியும் "ஏ...எல்லரும் பார்த்துக்கோங்க நாங்களும் ரவுடி நாங்களும் ரவுடி..நாங்களும் ரவுடின்னு" சவுண்டு விட ஆரம்பித்தோம்,
ஆனால் அம்மாபட்டி என்னை விட கில்லாடியாக இருந்தான். ரொம்பவே தேறி கம்ப்யூட்டர் ட்ரொமில் பட்டயைக் கிளப்ப ஆரம்பித்தான். கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட மேகசினெல்லாம் வைத்துக் கொண்டு கம்ப்யூட்டரின் எதிர்காலமெல்லாம் கிளி ஜோஸ்யம் சொல்லுவது மாதிரி சுத்தி நாலு யுவதிகளை வைத்துக் கொண்டு கதை சொல்லுவான். அவன் கூட ப்ராஜெக்ட் பண்ணிக்கொண்டிருத ரெமோவின் நண்பி அம்மாபட்டியுடன் சிரித்து சிரித்து பேசும். எனக்கு வெளியே ஆல் இந்தியா லட்சியம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தாலும் உள்ளே அம்மாபட்டியே கலக்குறானேன்னு புகையும். "பாஸு பார்த்தீங்கள்ல...வடநாட்டு கிளி கூட உங்க செட்டா இருந்தாலும் கண்ணு இங்க தான் என்னை சுத்தி நோட்ட்ம் விடுதுன்னு" அடிக்கடி என்னையும் அலெர்ட்டாக்குவான். போகிற போக்கைப் பார்த்தால் இவன் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவாய் ரெமோவுக்கே டிப்ஸ் குடுப்பான் என்று ரெமோ அவனுக்கு டிப்ஸ் குடுப்பதை நிப்பாட்டி விட்டான்.
ஒரு நாள் கிளி முன்னதாகவே முடித்து விட்டு வெளியில் புதிதாய் யாரோ- வுடன் நின்று பேசிக்கொண்டிருந்தது. நான் வழக்கம் போல மத்த பேக்கப் பார்மலிட்டியை எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்தால் "மீட் மை ஹஸ்பண்ட் அபிஜித்"ன்னு என் மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள். அம்மாபட்டி சிவாஜி பாதி ஜே.கே ரித்தீஸ் மீதின்னு என்னல்லாமோ ஃபீலிங்க்ஸ் முகத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.
ரெமோ பல்லவர் காலத்து மஹாபலிபுர சிலையாய் உறைந்துவிட்டான். அந்தாளை எங்கேயோ பார்த்த மாதிரி எனக்கு இருக்க கேட்டேவிட்டேன். அபிஜித் நல்ல மாதிரி பட் படென்று விஷ்யத்தை தெளிவாகச் சொல்லிவிட்டார். போலிஸ் இன்ஸ்பெக்டர் செலக்க்க்ஷனாகி ட்ரெயினிங்கில் இருப்பதாகவும், நான் இருந்த அதே கே.கே.நகரில் இரண்டு தெரு தள்ளி தான் அவர் அப்பா இருப்பதையும் சொன்னார். அவர் அப்பா ரிட்டையர்ட் போலீஸ் சென்னை எஸ்.பீ. நல்ல வெள்ளியில் பூண் போட்ட ஒரு தடியுடன் நல்ல கொளு கொளு நாயைக் கூட்டிக் கொண்டு டெய்லி வாக்கிங் போவார். நானும் பார்த்திருக்கேன் நல்ல மனிதர் என்று அபிஜித்திடம் சொல்லி எதற்க்கும் ஒரு சேப்டிக்கு இருக்கட்டும்ன்னு ஆல் இந்தியா முதல் மாணவன் மாமாவின் லட்சியத்தையும் அவர் காதில் போட்டுவைத்தேன்.
அப்புறம் கிளி மேடமும் நானும் அப்புறம் அந்த மைக்ரோ பிராஜெட்டை ஒரு வழியாக முடித்தோம். கிளி மேடம் கரெக்ட்டாய் வருவார், சில நாட்களில் மேடமிற்க்கு வேலை இருக்கும். நான் இன்ன இன்ன செய்திருக்கிறேன் என்று சொன்னால் சரி பார்ப்பார்...ப்ரோக்கிராமில் அங்கங்கே மானே தேனே பொன்மானே போட்டு மிச்சத்தை என்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்புவார். அம்மாபட்டி அபிஜித் சாரிடம் ரொம்ப கேட்டதாகச் சொல்லச் சொலுவான், மேடமும் வாஞ்சையாக எங்களைப் பார்த்து சிரிப்பார். "பார்த்தீங்களா பாஸு...மேடமுக்கு நம்ம மேல எப்பவும் ஒரு தனி நட்பு"ன்னு அம்மாபட்டி ஃபீலிங்ஸ் காட்டுவான். நானும் ஆமாம்ன்னு மண்டையை ஆட்டுவேன். ரெமோ வழக்கம் போல தலையிலடித்துக் கொள்வான்.
--ஜொள்ளிங்ஸ் தொடரும்
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3
மினி ப்ராஜெக்டை சொத்து பிரித்ததில் அது மைக்ரோ மினியாகிவிட்டது. எங்க ஊரில் மளிகைக் கடை அண்ணாச்சி காதில் சொருகியிருக்கும் பென்சிலை எடுக்காமலேயே போடும் கணக்கை கம்ப்யூட்டர் படுத்தச் சொல்லியிருந்தார்கள். மளிகைக் கடை பெயரை மட்டும் "ஏடிபி கார்ப்பரேஷன்"ன்னு பந்தா படுத்தியிருந்தார்கள். "என்னா பாஸூ இப்படி சொதப்பறாங்க...இப்படியே மளிகைக் கடை கணக்கெல்லாம் போட்டுக்கிட்டிருந்தா எப்போ தான் சின்ன வயசு குஷ்பூ போட்டாவ குடுத்து கண்டுபிடிக்கச் சொல்லுவாங்க" என்பதே அம்மாபட்டியின் கவலையாக இருந்தது. அதெல்லாம் பைனல் இயர்ல தான்ன்னு அவனைப் பேக்கப் செய்துவிட்டு கிளியோடு ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பித்தேன். விண்டோஸ் 3.0 அப்போது தான் (என்)ஐ.ஐ.டிக்கு வந்திருந்த காலமது. டாஸ் - பாக்ஸ்ப்ரோவில் தான் இந்த ப்ராஜெக்ட் செய்யவேண்டும் என்று வாத்தியார் சொல்லியிருந்தார்.
ஓப்பனிங் ஸ்கீனில் கம்பெனி பெயரை எங்கே போடலாம், எந்த டிசைனில் எந்த ஃபாண்ட்டில் போடலாம் என்று ப்ராஜெக்ட்டுக்குத் தேவையான மிக முக்கியாமான விஷயங்களில் நான் தீவிரமாக செலுத்தி வந்தேன். கிளியோ கணக்குக்குத் தேவையான அல்காரிதமை தான் முதலில் பார்க்கனும்ன்னு அல்பமான விஷயங்களில் கவனத்தை சிதறவிட்டுக்கொண்டிருந்தது. சரி சரி அதெல்லாம் இடது கையால அசால்ட்டா செய்வோம்லன்னு உதார் விட்டு கம்ப்யூட்டர் ட்ரோமுக்கு போய் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து வேலையை ஆரம்பித்தால் ஆரம்பமே சவாலாக இருந்தது. கிறுக்குப் பயலுங்க ட்ரோமில் வேறெதோ மேக் கீபோர்ட் வைத்திருந்தார்கள். பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு கிலி பிடித்து இங்கே ஐ.ஐ.டியில் செய்த கீ போர்ட் எக்ஸர்சைலாம் மறந்து போய் "ஏ" எங்க இருக்கும் "கே" எங்க இருக்கும்ன்னு உதற ஆரம்பித்து விட்டது. அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரத்தெட்டு அருவாளாம்ன்னு ஜம்பமாக கீபோர்ட்டை வேறு என் பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் மோவாக்கட்டையில் கையை வைத்துக் கொண்டு யோசிக்கிற மாதிரி கிழக்கே ஒரு தரம் பார்த்து மேற்கே ஒருதரம் பார்த்து அப்புறம் கீழே கீப்போர்ட்டை உத்துப் பார்த்து கண்ணால் துளாவி "கே" கண்ணில் தட்டுப்பட்டவுடன் "ஆங்...கரெக்ட் அதான் சரி...இந்த அல்காரிதம் லாஜிக் தான் யோசிச்கிட்டு இருந்தேன்...இப்போ எப்படி பண்ணனும்ன்னு ஒரு ஐடியா கிடைச்சாச்சு"ன்னு சமாளித்து அப்புறம் திங்க்கிங் ப்ராசஸ் தடை படுகிறதென்று கீபோர்ட்டை கிளியிடம் மாற்றிவிட்டேன்.
வேலையை முடித்துவிட்டு டெய்லி ட்ரோமில் மத்த பையன்களெல்லாம் யுவதிகளோடு உலக நன்மையைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள், வடநாட்டு கிளி மட்டும் வேலை இருக்கிறதென்று சந்தைக்கு கிளம்பிவிடும். அது சரி நமக்கு இந்தியாவிலேயே முதல் மாணவனாய் வருகிற யோகம் மட்டும் தான் இருக்கு போலவென்று மனதை தேற்றிக் கொண்டு 11இ க்கு நானும் 47டிக்கு அம்மாபட்டியும் தேவுடு காக்க ஆரம்பித்துவிடுவோம். "ஏன் பாஸு நமக்கு மட்டும் செட்டு செட்டாக மாட்டேங்குதுன்னு"ன்னு அம்மாபட்டி 47டி வரும் வரை செட்டு கவலைப் படுவான்.
நான் படித்து வந்த நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில் இருக்கும் எங்கள் ஐ.ஐ.டி தலமை அலுவலகம் மிக கலர்புல்லான இடம். எனக்கும் அம்மாபட்டிக்கும், ரெமோ பைக்கில் ஸ்டையிலாக சாய்ந்து கொண்டு நிறைய பாடம் எடுத்திருக்கிறான். குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு பின்னாளில் ஹீரோயினான ஷாலினியும் அங்கு தான் படித்தார். அப்போது அவர் ஹீரோயினாகவில்லையாதலால் யாரும் ரொம்ப கண்டுகொள்ள மாட்டார்கள். எனக்கும் அம்மாபட்டிக்கும் ஷாலினியை பார்த்து அவர் நடிப்பைப் பற்றி ரெண்டு வார்த்தை பெருமையாக பேசவேண்டும் என்று கொள்ளை ஆசை. ரெமோ அதற்க்கு தடை போட்டுவிட்டான். "சுத்த காட்டான்களா இருக்கதீங்கடா ரொம்ப ஓவரா ஊத்தினீங்கன்னா யாருமே திரும்பக் கூட பார்க்க மாட்டாங்க"ன்னு ரெமோ சொன்னது அம்மாபட்டிக்கு சமாதானம் ஆகவில்லை. "அதெல்லாம் இல்ல பாஸு அந்தப் புள்ள நம்ம செட்டுல சேர்ந்திருமோன்னு இவனுக்கு பயம்"ன்னு அம்மாபட்டியின் நம்பிக்கை சில நேரங்களில் எனக்கு தலையே சுற்றும்.
நுங்கம்பாக்கம் ஹை ரோடு ஐ.ஐ.டி மூன்று மாடிக் கட்டிடம். நாலாவது மாடி டெரஸில் ரூப் கார்டன் மாதிரி செடியெல்லாம் வைத்து பெஞ்ச் டேபிளெல்லாம் மாணவர்கள் படிக்கட்டும் என்று போட்டிருப்பார்கள். ஆனால் மாணவர்கள் படிக்காமல் மானாவாரியாக கடலை சாகுபடி செய்து கொண்டிருப்பார்கள். எல்லா செட்டும் கலர்புல்லாக இருக்கும். ரெமோ வந்து எங்கள் செட்டில் ஐய்க்கியமாவதற்கு முன்னால் நானும் அம்மாபட்டியும் மட்டும் வெத்தாக "பாஸ் பாஸ்"ன்னு கொஞ்சிக்கொண்டிருப்போம். ரெமோ எங்க செட்டில் ஐய்க்கியமாகி அவனோடு நாலு நண்பிகளை கூட்டிக் கொண்டு வந்ததுக்கப்புறம் தான் நானும் அம்மாபட்டியும் "ஏ...எல்லரும் பார்த்துக்கோங்க நாங்களும் ரவுடி நாங்களும் ரவுடி..நாங்களும் ரவுடின்னு" சவுண்டு விட ஆரம்பித்தோம்,
ஆனால் அம்மாபட்டி என்னை விட கில்லாடியாக இருந்தான். ரொம்பவே தேறி கம்ப்யூட்டர் ட்ரொமில் பட்டயைக் கிளப்ப ஆரம்பித்தான். கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட மேகசினெல்லாம் வைத்துக் கொண்டு கம்ப்யூட்டரின் எதிர்காலமெல்லாம் கிளி ஜோஸ்யம் சொல்லுவது மாதிரி சுத்தி நாலு யுவதிகளை வைத்துக் கொண்டு கதை சொல்லுவான். அவன் கூட ப்ராஜெக்ட் பண்ணிக்கொண்டிருத ரெமோவின் நண்பி அம்மாபட்டியுடன் சிரித்து சிரித்து பேசும். எனக்கு வெளியே ஆல் இந்தியா லட்சியம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தாலும் உள்ளே அம்மாபட்டியே கலக்குறானேன்னு புகையும். "பாஸு பார்த்தீங்கள்ல...வடநாட்டு கிளி கூட உங்க செட்டா இருந்தாலும் கண்ணு இங்க தான் என்னை சுத்தி நோட்ட்ம் விடுதுன்னு" அடிக்கடி என்னையும் அலெர்ட்டாக்குவான். போகிற போக்கைப் பார்த்தால் இவன் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவாய் ரெமோவுக்கே டிப்ஸ் குடுப்பான் என்று ரெமோ அவனுக்கு டிப்ஸ் குடுப்பதை நிப்பாட்டி விட்டான்.
ஒரு நாள் கிளி முன்னதாகவே முடித்து விட்டு வெளியில் புதிதாய் யாரோ- வுடன் நின்று பேசிக்கொண்டிருந்தது. நான் வழக்கம் போல மத்த பேக்கப் பார்மலிட்டியை எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்தால் "மீட் மை ஹஸ்பண்ட் அபிஜித்"ன்னு என் மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள். அம்மாபட்டி சிவாஜி பாதி ஜே.கே ரித்தீஸ் மீதின்னு என்னல்லாமோ ஃபீலிங்க்ஸ் முகத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.
ரெமோ பல்லவர் காலத்து மஹாபலிபுர சிலையாய் உறைந்துவிட்டான். அந்தாளை எங்கேயோ பார்த்த மாதிரி எனக்கு இருக்க கேட்டேவிட்டேன். அபிஜித் நல்ல மாதிரி பட் படென்று விஷ்யத்தை தெளிவாகச் சொல்லிவிட்டார். போலிஸ் இன்ஸ்பெக்டர் செலக்க்க்ஷனாகி ட்ரெயினிங்கில் இருப்பதாகவும், நான் இருந்த அதே கே.கே.நகரில் இரண்டு தெரு தள்ளி தான் அவர் அப்பா இருப்பதையும் சொன்னார். அவர் அப்பா ரிட்டையர்ட் போலீஸ் சென்னை எஸ்.பீ. நல்ல வெள்ளியில் பூண் போட்ட ஒரு தடியுடன் நல்ல கொளு கொளு நாயைக் கூட்டிக் கொண்டு டெய்லி வாக்கிங் போவார். நானும் பார்த்திருக்கேன் நல்ல மனிதர் என்று அபிஜித்திடம் சொல்லி எதற்க்கும் ஒரு சேப்டிக்கு இருக்கட்டும்ன்னு ஆல் இந்தியா முதல் மாணவன் மாமாவின் லட்சியத்தையும் அவர் காதில் போட்டுவைத்தேன்.
அப்புறம் கிளி மேடமும் நானும் அப்புறம் அந்த மைக்ரோ பிராஜெட்டை ஒரு வழியாக முடித்தோம். கிளி மேடம் கரெக்ட்டாய் வருவார், சில நாட்களில் மேடமிற்க்கு வேலை இருக்கும். நான் இன்ன இன்ன செய்திருக்கிறேன் என்று சொன்னால் சரி பார்ப்பார்...ப்ரோக்கிராமில் அங்கங்கே மானே தேனே பொன்மானே போட்டு மிச்சத்தை என்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்புவார். அம்மாபட்டி அபிஜித் சாரிடம் ரொம்ப கேட்டதாகச் சொல்லச் சொலுவான், மேடமும் வாஞ்சையாக எங்களைப் பார்த்து சிரிப்பார். "பார்த்தீங்களா பாஸு...மேடமுக்கு நம்ம மேல எப்பவும் ஒரு தனி நட்பு"ன்னு அம்மாபட்டி ஃபீலிங்ஸ் காட்டுவான். நானும் ஆமாம்ன்னு மண்டையை ஆட்டுவேன். ரெமோ வழக்கம் போல தலையிலடித்துக் கொள்வான்.
--ஜொள்ளிங்ஸ் தொடரும்
Monday, September 01, 2008
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.3
முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2
'ஹேவ் எ ஹாப்பி பீரியட்" என்று மாதவிடாய்க்கு டீ.வி அட்வர்ட்டைசன்மென்ட்டில் பெண்கள் வாழ்த்துச் சொல்லிக்குமளவு முன்னேறாத ஒரு கால கட்டத்தில் நான் சென்னையில் கம்ப்யூட்டர் படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். சிஸ்டம்ஸ் ஆர்க்கிடெச்சர் அன்ட் மேனேஜ்மென்ட் என்று கொஞ்சம் கவுரதையாக இருக்கும் ஒரு வாக்கியத்தைப் பிடித்துக் கொண்டு, எங்கே படிக்கிறீங்க தம்பி கேள்விக்கு, நௌன்னை பலவிதமாக கூறலாம் என்ற பாலபாடத்தில், ஐ.ஐ.டி என்று என்.ஐ.ஐ.டியில் 'என்'னை சைலண்டாக்கிவிடுவேன்.
அம்பாசமுத்திரம் சிட்டியில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னை மாதிரியான கிராமப்புற கலாச்சாரம் கொஞ்சம் புதிது. சென்னையின் தலமை அலுவலகத்தில் மூன்று மாடிக் கட்டிடத்தில் நுனி நாக்க்கு இங்லிபீஸில் புடவையை இப்படியும் கட்டலாம் என்று அறியவைத்த கவுன்சிலர், உன்னை மாதிரி அறிவாளியைப் பார்த்ததில்லை என்று அம்பத்தியையாயிரம் ரூபாயை பொங்கல் வைத்துவிட்டார். பீஸ் கட்டும் போதே தெரிந்துவிட்டது, புடவையை முன் ஆபிஸில் இருக்கும் கவுன்சிலர்கள் மட்டும் தான் கட்டுவார்கள் என்று.
பெண்களுக்கு எப்படியோ தெரியாது, ஆண்களுக்கு வாழ்வில் குறைந்தது மூன்று தருணங்களில் வாழ்க்கையைப் பற்றிய கவலை வரும். ப்ள்ஸ் டூ ரிசல்ட் வருவதற்கு முந்தைய நாள், காலேஜ் பேர்வல் பார்ட்டி முடிந்த அடுத்த நாள் இரவு, முதல் இன்டர்வியூ ஊத்திக் கொண்ட மாலை. எனக்கு மனைவி ரெடி பாண்டியராஜன் மாதிரி காலேஜ் முடித்த காலக்கட்டத்தில் கல்யாணம் வேறு தோராயமாக நிச்சயமாகி விட்டிருந்தது என்பதால் கவலை கிறித்துமஸ், நியூ இயர் பொங்கல் சேல் மாதிரி எக்ஸ்டெண்ட் ஆகிவிட்டது. நிச்சயமானதில் அடியேன் கைங்கர்யம் நிறைய இருந்தாலும், அம்பத்தியையாயிரம் பீஸுக்கு மாமா வேறு என்னம்மோ ரேடியோவில் நியூஸ் வாசிக்கிற மாதிரி "ஆல் இண்டியாவிலேயே" முதல் மாணவனாய் வரனும்ன்னு கண்டிஷன் போட்டிருந்தார்.
முதல் நாள் க்ளாசுக்கு போனால் கே.டி.குஞ்சுமோன் செட்டுக்குள் நுழைந்தது மாதிரி இருந்தது. வெள்ளக்கார துரையோடு பேத்திகளும் பேரன்களும் ஏகத்துக்கு நுனிநாக்கில் படம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கொட்டாம்பட்டி ரயிலு எத்தனை மணிக்கு வரும்ன்னு கேட்டுவிட்டு ஓரமாய் உட்கார்ந்துகொண்டேன். திக்குத் தெரியாத காட்டில் தொலைந்துகொண்டிருந்த போது அம்மாபட்டிக்கு அட்ரெஸ் கேட்டுவிட்டு இன்னொரு சக 'சிட்டி'சன் பக்கத்தில் வந்து அமர்ந்தார். ஆஹா புடவையாத்தா உனக்கும் பொங்கல் வெச்சிட்டாளான்னு குசலம் விசாரித்துக்கொண்டதில் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. நானே தேவலை, நானாவது விக்ரம் படத்தில் "மீண்டும் மீண்டும் வா" டிம்பிள் கபாடியா பாட்டுக்கு அப்புறம் கம்ப்யூட்டரில் ராக்கெட் விடுவது எப்படி, ரோசா படத்தில் "ருக்குமணி ருக்குமணி" பாட்டுக்கப்புறம் அரவிந்த்சாமி மாதிரி கம்ப்யூட்டரில் ஹெட்போனைப் சொருகி பாகிஸ்தான் தீவராதிகள் பேசுவதைக் கேட்பது எப்படி என்று கம்ப்யூட்டர் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன், அம்மாபட்டி சிட்டிசனுக்கு அதுவும் தெரியவில்லை. வாத்தியார் மானிட்டர் பத்தி தெரியுமான்னு கேட்டால் "ஏழாவது படிக்கும் போது ஒரு தரம் இருந்திருக்கேன்" என்று சொதப்பிக் கொண்டிருந்தான். அப்புறம் அவன் மண்டையில் தட்டி..."அண்ணா அது ஸ்கூல் மானிட்டர் இல்லைல்ங்கண்ணா...இது கேப்டன் படத்துல தீவிரவியாதி எங்க குண்டு வைத்திருக்கிறார் எத்தனை மணிக்கு வெடிக்கும்ன்னு கோடு போட்டு காண்பிக்குமே டி.வி பொட்டி...அது" என்று வாத்தியார் புரியவைத்தார்.
ஆனால் சிட்டிசன் படு தெகிரியமாய் இருந்தார். கொள்ளக்கூட்ட மொட்டை மாதிரி எல்லாரையும் பாஸ் பாஸ்ன்னு தெம்பாய் கூப்பிட்டார்." கவலைப் படாத பாஸ்..இங்கே சேர்ந்துட்டோம்ல இனிமே ராக்கெட் விடுவதிலிருந்து குஷ்பூ சின்ன வயசில எப்படி இருந்திருப்பார்ன்னு கம்ப்யூட்டரில் கண்டுபிடிப்பது வரை எல்லாமே சொல்லிக் குடுப்பாங்க...அம்பத்தைஞ்சாயிரம் குடுத்திருகோம்ல.."ன்னு எனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னான்.
க்ளாஸ் ஒருவாரம் ஓடியிருக்கும், எங்களாலே நம்பவே முடியவில்லை...ஒரு வடநாட்டு கிளி ஒன்று எங்கள் சிட்டிசன் வரிசையில் வந்து அமர்ந்தது. வடநாட்டு கிளி என்றால் இந்த வடகத்திய ஹீரோக்கள்லாம் கல்யாணம் நிச்சயமான பொண்ணுக்கு ரூட் விடுவார்களே சினிமாவில் அந்த அழகு. ஒரு வேளை நாமளும் கொஞ்சம் பெர்ச்னாலிட்டியாகத் தான் இருக்கோமோ என்று எங்களுக்கே டவுட் வந்துவிட்டது. வாயைத் திறந்தால் ஊத்திக்குமே என்று கொஞ்ச நாள் ஹலோ ஹலோ என்று ஓடியது. இந்த சமயத்தில் தியரி எல்லாம் முடிஞ்சாச்சு இனிமேலிருந்து ப்ராக்டிகல்ஸ் என்று இரண்டு பேருக்கு ஒரு கம்ப்யூட்டர் என்று குடுத்துவிட்டார்கள். வடநாட்டு கிளியும் நானும் ஒரு செட்ன்னு வரும், ஐ ஆம் சாரி நான் ஏற்கன்வே கமிட் ஆகிட்டேன், அத்தோட நான் ஆல் இந்தியாவிலேயே முதல் மாணவனா வரனும்ன்னு எங்க மாமாக்கு லட்சியம் இருக்குன்னு டயலாக்கை எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் விதி - காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதுன்னு அம்மாப் பட்டி சிட்டிசன் "பாஸ் நானும் நீயும் ஒரு செட்" என்று ஒட்டிக் கொண்டான். ஆமா பெரிய செட்டு ஷேவிங் செட்டுன்னு கவுண்டமணி கடுப்பில் "டேய் ஒழுங்கா படிச்சு காம்பஸ்ஸுல வேலைய தேத்தப் பாருடா"ன்னு ரெண்டு ஓசி அட்வைஸ் குடுத்தேன்.
ஆனால் ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்களே அது நிஜமாகி தனியாக இருந்த வடநாட்டு கிளியின் கம்ப்யூட்டர் ஏதோ காரணத்தால் பூட் ஆகவில்லை. அதனால் வடநாட்டு கிளி எங்களுடன் வந்து உட்கார்ந்து கொண்டது. முதல் லேப்பில் கீப்போர்ட் பழக வேண்டும் என்று சின்னத்தனமாக ஏதோ ப்ரோக்கிராம் ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு எழுத்தாக மானிட்டரின் மேல் மூலையிலிருந்து விழ ஆரம்பிக்கும் அது கீழே விழுவதற்க்குள் அந்த எழுத்தை கீபோர்ட்டில் அழுத்த வேண்டும்.கம்ப்யூட்டர் வெல்டன் சொல்லும். இது தான் பயிற்சி. க்ளாசில் என்னையும் அம்மாபட்டி சிட்டிசனையும் தவிர யாரும் இந்த ப்ரோக்கிராமை மதிக்கவே இல்லை. வேறேதோ செய்து லெவல் காட்டிக்கொண்டிருந்தார்கள். "பாஸ் இப்ப என் டர்ன்...நான் உங்கள விட ஒரு செகென்ட் முன்னாடியே பிடிச்சிருவேன் பாருங்க"ன்னு சீட்டிசனும் நானும் போட்டிபோட்டுக் கொண்டு கீபோர்ட்டில் லெவல் காட்டிக்கொண்டிருந்ததை கிளி ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு இருந்த மப்பில் கிளி இம்பெரெஸாகிப் பார்த்துகொண்டிருந்தது என்று நினைத்தோம்...இன்று யோசித்தால் சின்னத்தம்பி பிரபு மாதிரி நினைத்திருக்குமோன்னு என்று டவுட் வருகிறது.
ஆனாலும் ஒன்று சொல்ல்வேண்டும் கிளி ரொம்ப நல்ல பெண். எங்கள் கெக்கெபிக்கேதனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சகஜமாய் பழகினாள். "நம்ம ரெண்டு பேர்ல யாரோ ஒருதர் மேல அதுக்கு ஒரு இது பாஸ்"ன்னு அம்மாபட்டிக்கு ஒரே கிளுகிளுப்பு...சரி சரி எனக்கும் தான். இதற்கு நடுவில் ஒரு மினி ப்ராஜெக்ட் என்று குடுத்து டீம் பிரித்தார்கள். மவுண்ட் ரோட்டில் இருந்த கம்ப்யூட்டர் ட்ரோமில் போய் நாமே முனைந்து செய்யவேண்டும். ஒரு மினி ப்ராஜெக்ட்டுக்கு மூன்று டீம். ஒரு டீமிற்கு இரண்டு பேர் என்று ஆக மொத்தம் ஆறு பேர். அப்போது தான் ரெமோ எங்கள் கூட்டத்தில் வந்து ஐய்க்கியமானான். ரெமோ என்றால் அதே ரெமோ. ஏதோ சுமாரான ஸ்டையிலொடு இருந்தாலும் பெண்கள் கூட்டத்தின் நடுவில் தான் இருப்பான். அவன் பெண்களோடு இல்லாமல் பார்ப்பதற்க்கான வாய்ப்பு...மல்லிகா ஷெராவத் பதினெட்டு முழப் புடவையை தழைய தழைய கட்டிக்கொண்டு வருவதற்கான ப்ராபபிலிட்டி தான்.
ரெமோவுடன் அவன் நண்பிகள் இரண்டு பேரும் என்று எங்கள் டீம் மூன்று மூன்று என்று சம சகிதமாகிவிட்டது. எல்லோருக்கும் ப்ரோக்கிராமில் சந்தேகம் வந்தால் எங்களுக்கு கீபோர்ர்டில் சந்தேகம் வரும் என்று அம்மாபட்டியும் நானுமாயிருந்த ஷேவிங் செட் கலைக்கப்பட்டு, கிளியும் நானும், அம்மாபட்டியும் இன்னொரு பெண்ணும், ரெமோவும் அவன் நண்பியும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டது.
--ஜொள்ளிங்ஸ் தொடரும்
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2
'ஹேவ் எ ஹாப்பி பீரியட்" என்று மாதவிடாய்க்கு டீ.வி அட்வர்ட்டைசன்மென்ட்டில் பெண்கள் வாழ்த்துச் சொல்லிக்குமளவு முன்னேறாத ஒரு கால கட்டத்தில் நான் சென்னையில் கம்ப்யூட்டர் படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். சிஸ்டம்ஸ் ஆர்க்கிடெச்சர் அன்ட் மேனேஜ்மென்ட் என்று கொஞ்சம் கவுரதையாக இருக்கும் ஒரு வாக்கியத்தைப் பிடித்துக் கொண்டு, எங்கே படிக்கிறீங்க தம்பி கேள்விக்கு, நௌன்னை பலவிதமாக கூறலாம் என்ற பாலபாடத்தில், ஐ.ஐ.டி என்று என்.ஐ.ஐ.டியில் 'என்'னை சைலண்டாக்கிவிடுவேன்.
அம்பாசமுத்திரம் சிட்டியில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னை மாதிரியான கிராமப்புற கலாச்சாரம் கொஞ்சம் புதிது. சென்னையின் தலமை அலுவலகத்தில் மூன்று மாடிக் கட்டிடத்தில் நுனி நாக்க்கு இங்லிபீஸில் புடவையை இப்படியும் கட்டலாம் என்று அறியவைத்த கவுன்சிலர், உன்னை மாதிரி அறிவாளியைப் பார்த்ததில்லை என்று அம்பத்தியையாயிரம் ரூபாயை பொங்கல் வைத்துவிட்டார். பீஸ் கட்டும் போதே தெரிந்துவிட்டது, புடவையை முன் ஆபிஸில் இருக்கும் கவுன்சிலர்கள் மட்டும் தான் கட்டுவார்கள் என்று.
பெண்களுக்கு எப்படியோ தெரியாது, ஆண்களுக்கு வாழ்வில் குறைந்தது மூன்று தருணங்களில் வாழ்க்கையைப் பற்றிய கவலை வரும். ப்ள்ஸ் டூ ரிசல்ட் வருவதற்கு முந்தைய நாள், காலேஜ் பேர்வல் பார்ட்டி முடிந்த அடுத்த நாள் இரவு, முதல் இன்டர்வியூ ஊத்திக் கொண்ட மாலை. எனக்கு மனைவி ரெடி பாண்டியராஜன் மாதிரி காலேஜ் முடித்த காலக்கட்டத்தில் கல்யாணம் வேறு தோராயமாக நிச்சயமாகி விட்டிருந்தது என்பதால் கவலை கிறித்துமஸ், நியூ இயர் பொங்கல் சேல் மாதிரி எக்ஸ்டெண்ட் ஆகிவிட்டது. நிச்சயமானதில் அடியேன் கைங்கர்யம் நிறைய இருந்தாலும், அம்பத்தியையாயிரம் பீஸுக்கு மாமா வேறு என்னம்மோ ரேடியோவில் நியூஸ் வாசிக்கிற மாதிரி "ஆல் இண்டியாவிலேயே" முதல் மாணவனாய் வரனும்ன்னு கண்டிஷன் போட்டிருந்தார்.
முதல் நாள் க்ளாசுக்கு போனால் கே.டி.குஞ்சுமோன் செட்டுக்குள் நுழைந்தது மாதிரி இருந்தது. வெள்ளக்கார துரையோடு பேத்திகளும் பேரன்களும் ஏகத்துக்கு நுனிநாக்கில் படம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கொட்டாம்பட்டி ரயிலு எத்தனை மணிக்கு வரும்ன்னு கேட்டுவிட்டு ஓரமாய் உட்கார்ந்துகொண்டேன். திக்குத் தெரியாத காட்டில் தொலைந்துகொண்டிருந்த போது அம்மாபட்டிக்கு அட்ரெஸ் கேட்டுவிட்டு இன்னொரு சக 'சிட்டி'சன் பக்கத்தில் வந்து அமர்ந்தார். ஆஹா புடவையாத்தா உனக்கும் பொங்கல் வெச்சிட்டாளான்னு குசலம் விசாரித்துக்கொண்டதில் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. நானே தேவலை, நானாவது விக்ரம் படத்தில் "மீண்டும் மீண்டும் வா" டிம்பிள் கபாடியா பாட்டுக்கு அப்புறம் கம்ப்யூட்டரில் ராக்கெட் விடுவது எப்படி, ரோசா படத்தில் "ருக்குமணி ருக்குமணி" பாட்டுக்கப்புறம் அரவிந்த்சாமி மாதிரி கம்ப்யூட்டரில் ஹெட்போனைப் சொருகி பாகிஸ்தான் தீவராதிகள் பேசுவதைக் கேட்பது எப்படி என்று கம்ப்யூட்டர் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன், அம்மாபட்டி சிட்டிசனுக்கு அதுவும் தெரியவில்லை. வாத்தியார் மானிட்டர் பத்தி தெரியுமான்னு கேட்டால் "ஏழாவது படிக்கும் போது ஒரு தரம் இருந்திருக்கேன்" என்று சொதப்பிக் கொண்டிருந்தான். அப்புறம் அவன் மண்டையில் தட்டி..."அண்ணா அது ஸ்கூல் மானிட்டர் இல்லைல்ங்கண்ணா...இது கேப்டன் படத்துல தீவிரவியாதி எங்க குண்டு வைத்திருக்கிறார் எத்தனை மணிக்கு வெடிக்கும்ன்னு கோடு போட்டு காண்பிக்குமே டி.வி பொட்டி...அது" என்று வாத்தியார் புரியவைத்தார்.
ஆனால் சிட்டிசன் படு தெகிரியமாய் இருந்தார். கொள்ளக்கூட்ட மொட்டை மாதிரி எல்லாரையும் பாஸ் பாஸ்ன்னு தெம்பாய் கூப்பிட்டார்." கவலைப் படாத பாஸ்..இங்கே சேர்ந்துட்டோம்ல இனிமே ராக்கெட் விடுவதிலிருந்து குஷ்பூ சின்ன வயசில எப்படி இருந்திருப்பார்ன்னு கம்ப்யூட்டரில் கண்டுபிடிப்பது வரை எல்லாமே சொல்லிக் குடுப்பாங்க...அம்பத்தைஞ்சாயிரம் குடுத்திருகோம்ல.."ன்னு எனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னான்.
க்ளாஸ் ஒருவாரம் ஓடியிருக்கும், எங்களாலே நம்பவே முடியவில்லை...ஒரு வடநாட்டு கிளி ஒன்று எங்கள் சிட்டிசன் வரிசையில் வந்து அமர்ந்தது. வடநாட்டு கிளி என்றால் இந்த வடகத்திய ஹீரோக்கள்லாம் கல்யாணம் நிச்சயமான பொண்ணுக்கு ரூட் விடுவார்களே சினிமாவில் அந்த அழகு. ஒரு வேளை நாமளும் கொஞ்சம் பெர்ச்னாலிட்டியாகத் தான் இருக்கோமோ என்று எங்களுக்கே டவுட் வந்துவிட்டது. வாயைத் திறந்தால் ஊத்திக்குமே என்று கொஞ்ச நாள் ஹலோ ஹலோ என்று ஓடியது. இந்த சமயத்தில் தியரி எல்லாம் முடிஞ்சாச்சு இனிமேலிருந்து ப்ராக்டிகல்ஸ் என்று இரண்டு பேருக்கு ஒரு கம்ப்யூட்டர் என்று குடுத்துவிட்டார்கள். வடநாட்டு கிளியும் நானும் ஒரு செட்ன்னு வரும், ஐ ஆம் சாரி நான் ஏற்கன்வே கமிட் ஆகிட்டேன், அத்தோட நான் ஆல் இந்தியாவிலேயே முதல் மாணவனா வரனும்ன்னு எங்க மாமாக்கு லட்சியம் இருக்குன்னு டயலாக்கை எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் விதி - காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதுன்னு அம்மாப் பட்டி சிட்டிசன் "பாஸ் நானும் நீயும் ஒரு செட்" என்று ஒட்டிக் கொண்டான். ஆமா பெரிய செட்டு ஷேவிங் செட்டுன்னு கவுண்டமணி கடுப்பில் "டேய் ஒழுங்கா படிச்சு காம்பஸ்ஸுல வேலைய தேத்தப் பாருடா"ன்னு ரெண்டு ஓசி அட்வைஸ் குடுத்தேன்.
ஆனால் ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்களே அது நிஜமாகி தனியாக இருந்த வடநாட்டு கிளியின் கம்ப்யூட்டர் ஏதோ காரணத்தால் பூட் ஆகவில்லை. அதனால் வடநாட்டு கிளி எங்களுடன் வந்து உட்கார்ந்து கொண்டது. முதல் லேப்பில் கீப்போர்ட் பழக வேண்டும் என்று சின்னத்தனமாக ஏதோ ப்ரோக்கிராம் ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு எழுத்தாக மானிட்டரின் மேல் மூலையிலிருந்து விழ ஆரம்பிக்கும் அது கீழே விழுவதற்க்குள் அந்த எழுத்தை கீபோர்ட்டில் அழுத்த வேண்டும்.கம்ப்யூட்டர் வெல்டன் சொல்லும். இது தான் பயிற்சி. க்ளாசில் என்னையும் அம்மாபட்டி சிட்டிசனையும் தவிர யாரும் இந்த ப்ரோக்கிராமை மதிக்கவே இல்லை. வேறேதோ செய்து லெவல் காட்டிக்கொண்டிருந்தார்கள். "பாஸ் இப்ப என் டர்ன்...நான் உங்கள விட ஒரு செகென்ட் முன்னாடியே பிடிச்சிருவேன் பாருங்க"ன்னு சீட்டிசனும் நானும் போட்டிபோட்டுக் கொண்டு கீபோர்ட்டில் லெவல் காட்டிக்கொண்டிருந்ததை கிளி ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு இருந்த மப்பில் கிளி இம்பெரெஸாகிப் பார்த்துகொண்டிருந்தது என்று நினைத்தோம்...இன்று யோசித்தால் சின்னத்தம்பி பிரபு மாதிரி நினைத்திருக்குமோன்னு என்று டவுட் வருகிறது.
ஆனாலும் ஒன்று சொல்ல்வேண்டும் கிளி ரொம்ப நல்ல பெண். எங்கள் கெக்கெபிக்கேதனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சகஜமாய் பழகினாள். "நம்ம ரெண்டு பேர்ல யாரோ ஒருதர் மேல அதுக்கு ஒரு இது பாஸ்"ன்னு அம்மாபட்டிக்கு ஒரே கிளுகிளுப்பு...சரி சரி எனக்கும் தான். இதற்கு நடுவில் ஒரு மினி ப்ராஜெக்ட் என்று குடுத்து டீம் பிரித்தார்கள். மவுண்ட் ரோட்டில் இருந்த கம்ப்யூட்டர் ட்ரோமில் போய் நாமே முனைந்து செய்யவேண்டும். ஒரு மினி ப்ராஜெக்ட்டுக்கு மூன்று டீம். ஒரு டீமிற்கு இரண்டு பேர் என்று ஆக மொத்தம் ஆறு பேர். அப்போது தான் ரெமோ எங்கள் கூட்டத்தில் வந்து ஐய்க்கியமானான். ரெமோ என்றால் அதே ரெமோ. ஏதோ சுமாரான ஸ்டையிலொடு இருந்தாலும் பெண்கள் கூட்டத்தின் நடுவில் தான் இருப்பான். அவன் பெண்களோடு இல்லாமல் பார்ப்பதற்க்கான வாய்ப்பு...மல்லிகா ஷெராவத் பதினெட்டு முழப் புடவையை தழைய தழைய கட்டிக்கொண்டு வருவதற்கான ப்ராபபிலிட்டி தான்.
ரெமோவுடன் அவன் நண்பிகள் இரண்டு பேரும் என்று எங்கள் டீம் மூன்று மூன்று என்று சம சகிதமாகிவிட்டது. எல்லோருக்கும் ப்ரோக்கிராமில் சந்தேகம் வந்தால் எங்களுக்கு கீபோர்ர்டில் சந்தேகம் வரும் என்று அம்மாபட்டியும் நானுமாயிருந்த ஷேவிங் செட் கலைக்கப்பட்டு, கிளியும் நானும், அம்மாபட்டியும் இன்னொரு பெண்ணும், ரெமோவும் அவன் நண்பியும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டது.
--ஜொள்ளிங்ஸ் தொடரும்
Wednesday, August 27, 2008
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.2
முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1

ஊரில் கொலு என்றால் ஏதோ பேருக்கு ரெண்டு அடுக்கில் நாலு பொம்மை என்றெல்லாம் வைக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்து படிகளுக்கு மேல் இருக்கும். படிக்கு பத்து பன்னிரெண்டு பொம்மைகள் அடுக்கி இருப்பார்கள். அந்த கொலு ஸ்டாண்ட் பெரிய பெரிய உத்திரக் கட்டைகளால் முறுக்கப்பட்டிருக்கும். ஸ்டாண்டை ஒன்று சேர்ப்பதற்கே ஒருநாள் பிடிக்கும். அப்புறம் அதில் அந்த வீட்டு மாமாவின் வெளுத்த வேட்டியை கிழிசல் தெரியாமல் மடித்துப் போட்டு அதன் மேல் பொம்மைகள் பளீரென்று அடுக்கப் பட்டிருக்கும். சில வீடுகளில் எலி கடித்த ஜரிகை வேட்டியெல்லாம் போட்டு பிரமாதப் படுத்தியிருப்பார்கள்.
இந்த கொலு ஸ்டாண்டின் அடியில் இரண்டு மெட்ராஸ் ஒன்டிக் குடித்தனம் நடத்தலாம் - அவ்வளவு பெரியதாக இருக்கும். அதில் தான் அந்த வீட்டு மாமி கொடுக்க வைத்திருக்கும் வெத்தலைப் பாக்கு தட்டுகள், ப்ளவுஸ் பீஸ், சுண்டல் விநியோகம் மற்றும் இன்ன பிற சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கும். முக்கால் வாசி வீட்டு மாமாக்களுக்கு இந்த ஸ்டாண்டின் அடியில்தான் எடுபிடி வேலை. கணகச்சிதமாக உட்கார்ந்து கொண்டு கர்மசிரத்தையாய் வெத்தலையை எண்ணி எண்ணி அடுக்கிக் கொண்டிருப்பார்கள். இந்த வெத்தலையை மட்டும் கூட இரண்டு வைத்துவிட்டால் போதும் "மனசில பெரிய மைசூர் மஹாராஜான்னு நினைப்பு...வெத்தலை விக்கிற விலைக்கு நாலு வைச்சா போறாதா..."ன்னு அடிக்கடி மாமியிடமிருந்து டோஸ் விழும். மைசூர் மஹாராஜா இத்தனை அல்பமாக இப்படி உட்கார்ந்து கொண்டா வெத்தலையை அடுக்கிக் கொண்டிருப்பார் என்று அடிக்கடி எனக்கு டவுட் வரும்.
அன்றைக்கு நாங்கள் போன வீட்டில் நல்லவேளையாக அந்த வீட்டு மாமா ஊரில் இல்லை. சேகர் போன உடனேயே எடுபிடி வேகன்ஸியில் ட்யூட்டி ஜாயின் பண்ணிவிட்டார். எங்களை உள்ளே சரியாக வரக்கூட விடாமல் "டேய் இங்க நிறைய வேலை இருக்கு...மாமிக்கு ஹெல்ப் பண்ணனும், கொலுவ வேற ரீ அரேஞ் பண்ணனும் கொஞ்சம் லேட்டாகும் நீங்க கிளம்புங்க"ன்னு புத்தியைக் காட்டிக்கொண்டிருந்தான். இன்னாடா சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு பார்த்தால் அவனோடு பேவரிட் ஜிகிடி இன்னும் இரண்டு ஜிகிடிகளோடு உட்கார்ந்துகொண்டிருந்தது. அதான் தம்பி, சோலோ சோலையப்பனாக மாற ட்ரை பண்ணுகிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது. சேகரை சொல்லி குற்றமில்லை, தெருவில் இருந்த பழக்கம் அப்பிடி. பேவரிட் என்று ஏதாவது ஜொள்ளி ஒரு ஜிகிடி மேல் லேசாக அக்கறை காட்டிவிட்டால் போதும், அந்த ஜிகிடி வரும் போது மற்ற வானரங்கள் நம்மை காய்ச்சு காய்சென்று காய்ச்சி நாற அடித்துவிடும். அப்புறம் அந்த ஜிகிடி மருந்துக்கு கூட நம்மை திரும்பி பார்க்காது. சேகரும் அது நடக்கக் கூடாது என்று பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தான்.
"டேய் ஒத்தையா ரீ அரேஞ்ச் பண்ண முடியாதுடா நாங்களும் ஹெல்ப் பண்றோம்"ன்னு ஒட்டிக்கொண்டோம். "என்னத்த ரீ அரேஞ்ச் பண்ணப் போறேள்....எல்லாம் நல்லாதான் இருக்கு"ன்னு அந்த வீட்டு மாமி வேறு ஜிகிடி கோட்பாடு தெரியாமல் வாரிக்கொண்டிருந்தார். "இல்லை மாமி, சீதா ராமர் பொம்மை இங்கே இருந்தா சிவன் அங்க இருக்கனும், நாய்க்குட்டி இங்க இருக்கனும் பன்னிக்குட்டி படுத்துண்டு இருக்கனும் "ன்னு கொலு அரேஞ்சிங் டெக்னாலஜியில் ஆக்ஸ்போர்ட் ஆர்க்கிடெக்ட் இங்கே அளந்து விட்டுக்கொண்டிருந்தார்.
என் கூட வந்த கன்னுக்குட்டி கணேசனுக்கு கொண்டைக் கடலை சுண்டல் என்றால் உயிர். கொண்டைக் கடலை சுண்டலுக்காக எதையும் தியாகம் செய்வான் - தெரு கிரிக்கெட் பேட்டிங் தவிர. அன்றைக்கு மாமி வீட்டில் கொண்டைக் கடலை சுண்டல். கிட்டத்தட்ட முடிந்துவிடுகிற பதத்தில் அடுக்களையிலிருந்து வந்த சுண்டல் வாசனையை மோப்பம் பிடித்தது முதல் கன்னுக்குட்டி கணேசன் கஞ்சா கணேசனாகிவிட்டான். சேகர் பாடு படு திண்டாடமாகிவிட்டது. சேகர் தனியாக கன்னுக்குட்டியை தள்ளிக்கொண்டு போய் எச்சரித்தும் அவன் கண்டுக்கவே இல்லை.
வேறு வழியில்லாமல் கொலு ஆர்க்கிடெக்ட் ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பித்து "டேய் இங்க வா இந்த கோபுரத்தை பிடிச்சிக்கோ கீழ போட்டுடாத ஜாக்கிரதை"ன்னு என்னை ஜூனியர் எடுபிடியாய் அப்பாயிண்ட் பண்ணிவிட்டார். ஒரு இத்துப் போன பொம்மையை இரண்டாவது வரிசையிலிருந்து முதல் வரிசைக்கு ஆர்க்கிடெக்ட் மாத்துவார். அப்புறம் ஈசான மூலையில் நின்று கொண்டு "இங்கேர்ந்து பாரு...இப்ப சூப்பரா இருக்கு இல்ல?"ன்னு என்னிடம் கேட்பான், நானும் "ஆமாண்டா கலக்கலா இருக்கு...லேசா ஒரு பத்து டிகிரி திருப்பி வைச்சா இன்னும் ஓஹோன்னு இருக்கும்"ன்னு ஐடியா குடுப்பேன்.
உட்கார்ந்திருக்கும் ஜிகிடிகள் முகத்தில் "இவர்கள் எப்போ கொலுவ ரீ அரேஞ்ச் பண்ணி நாம எப்ப வெத்தலை பாக்கு வாங்கி வீட்டுக்குப் போவது என்று கவலை படர ஆரம்பித்தது.
இதெயெல்லாம் கண்டுக்காமல் செக்கிழுக்கிற மாட்டுக்கு சிவலிங்கம் தெரியுமான்னு கண்ணுக்குட்டி கணேசன் பாட்டுக்கு கொண்டக் கடலை சுண்டலை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தான். மாமி சுண்டலை பதமாய் இறக்கி சுடச் சுட பாத்திரத்தோடு கொலு ஸ்டாண்ட் அடியில் கொண்டு வந்து வைத்துவிட்டார். அவ்வளவு தான் கணேசனுக்கு ஸ்டாண்டுக்கு அடியில் போவதற்க்கு ஒரு சாக்கு தேவைப்பட்டது.
"டேய் என்னடா சொதப்பிக்கிட்டு இருக்கீங்க...அந்த மூனாவது வரிசையில வேஷ்டி சரியா போடலைடா அதான் வரிசையே கோணலா தெரியுது..இரு நான் கொலு ஸ்டாண்ட் அடி வழியா அத சரி பண்றேன் நீங்க மேல கரெக்டா இருக்கான்ன்னு பாருங்கன்னு" உள்ளே புகுந்துவிட்டான். அந்த வரிசையில் செட்டியார் பொம்மை ஒன்று சுத்தி சின்ன சின்ன பாத்திரங்களில் அரிசி, பருப்பு நிரப்பப் பட்டு உண்மையாகவே அழகாக வைக்கப் பட்டிருந்தது. சேகரால் கன்னுக்குட்டியை ஒன்றும் சொல்ல்ல முடியவில்லை.
உள்ளே போன கன்னுக்குட்டி கணேசன் நேராய் போய் அவசர அவசரமாய் ஒரு கரண்டி சுண்டலை வாயில் அள்ளிப் போட்டுக்கொள்ள, இருந்த சூட்டில் வாய் பொள்ளிப் போய்விட்டது. சூடு பட்ட கணேசன் பேருக்கேத்த மாதிரி கன்னுக்குட்டி மாதிரி துள்ள அவன் மண்டை ஸ்டாண்டில் தட்டி பொம்மைகள் குலுகுலுங்க செட்டியார் பொம்மை நங்கென்று தரையில் விழுந்துவிட்டது. நல்ல கணமான பொம்மை என்பதால் நல்ல வேளை நொறுங்கவில்லை. உடைந்திருந்தால் அன்று மாமி எங்களை பின்னிப் பெடலெடுத்து கொலு ஸ்டாண்ட் படிகளாக்கியிருப்பார். பெருமூச்சு விட்டுக் கொண்டே அவசர அவசரமாய் செட்டியார் பொம்மையை நானும் சேகரும் திரும்ப எடுத்த போது தான் பார்த்தோம், கழுத்தில் கீறல் விழுந்து செட்டியார் தலை வேறு உடல் வேறாக ஆகியிருந்தார்.
எனக்கு அந்த மாமியின் தசாவதாரம் பற்றி நன்றாகத் தெரியுமாகையால் கைகால் வெலவெலத்து விட்டது.
"டேய்....!! செட்டியார் மண்டையைப் போட்டுட்டார்டா....."ன்னு நான் பயந்து கொண்டே சொல்லும் போதும் கூட சேகருக்கு ஜிகிடி போதை இறங்கவில்லை.
"டேய் நல்ல நாளும் அதுவுமா இவங்கள்லாம் வெத்தல பாக்கு வாங்கிக்க வந்திருக்கும் போது இப்படி அமங்கலமா சொல்லாதடா...செட்டியார் பொம்மை உடைஞ்சிருச்சுன்னு அழகா சொல்லு"ன்னு ஜிகிடிகள் முன்னால் ஆர்க்கிடெக்ட் எனக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
எனக்கு கடுப்பாகிவிட்டது. "இப்போ மாமி அடுக்களையிலிருந்து வருவாங்க...நீயே அமங்கலமா இல்லாம இப்ப சொன்ன மாதிரி அழகா விஷயத்தை சொல்லு. எனக்கு சந்தைக்கு போனும் ஆத்தா வையும்"ன்னு திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிட்டேன்.
நல்ல மாட்டுக்குத் தான் ஒரு சூடு என்று கண்ணுக்குட்டி கணேசனும் சுண்டலுக்கு ஆசைப்பட்டு அங்கு தங்கிவிட்டான். அப்புறம் அடுத்த நாள் தெரு கிரிக்கெட்டில் விஷயம் அரசல் புரசலாய் வெளியே வந்தது. மாமிக்கு செட்டியார் பொம்மை கார்த்திகை வகையாக தமையன் வாங்கிக்கொடுத்த சென்டிமென்ட்டாம். ஜிகிடிகள் முன்னால் சேகருக்கும் கன்னுக்குட்டிக்கும், மாமாக்கு விடும் டோஸைவிட இரண்டு மடங்கு அதிகமாக டபுள் ஸ்ட்ராங் டோஸில் மாமி வறுத்து எடுத்துவிட்டாராம். அத்தனை தடபுடலிலும் கன்னுக்குட்டி கணேசன் இரண்டு கரண்டி கொண்டைக் கடலை சுண்டலை உஷார் பண்ணிவிட்டான்.
அதற்கப்புறம் ஜிகிடிகள் வட்டாரத்தில் சீன் போட்டுக்கொண்டிருந்த குல"சேகர்" கொலுசேகர் என்று பெருமையுடன் வழங்கப்பட்டு வந்தார்.
இப்போதும் செட்டியார் பொம்மையைப் பார்த்தால் எனக்கு சேகரின் "செட்டியார் மண்டையைப் போட்ட்டுட்டார்..." அமங்கல அட்வைஸ் தான் நியாபகத்துக்கு வரும்.
--ஜொள்ளிங்ஸ் தொடரும்
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1

ஊரில் கொலு என்றால் ஏதோ பேருக்கு ரெண்டு அடுக்கில் நாலு பொம்மை என்றெல்லாம் வைக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்து படிகளுக்கு மேல் இருக்கும். படிக்கு பத்து பன்னிரெண்டு பொம்மைகள் அடுக்கி இருப்பார்கள். அந்த கொலு ஸ்டாண்ட் பெரிய பெரிய உத்திரக் கட்டைகளால் முறுக்கப்பட்டிருக்கும். ஸ்டாண்டை ஒன்று சேர்ப்பதற்கே ஒருநாள் பிடிக்கும். அப்புறம் அதில் அந்த வீட்டு மாமாவின் வெளுத்த வேட்டியை கிழிசல் தெரியாமல் மடித்துப் போட்டு அதன் மேல் பொம்மைகள் பளீரென்று அடுக்கப் பட்டிருக்கும். சில வீடுகளில் எலி கடித்த ஜரிகை வேட்டியெல்லாம் போட்டு பிரமாதப் படுத்தியிருப்பார்கள்.
இந்த கொலு ஸ்டாண்டின் அடியில் இரண்டு மெட்ராஸ் ஒன்டிக் குடித்தனம் நடத்தலாம் - அவ்வளவு பெரியதாக இருக்கும். அதில் தான் அந்த வீட்டு மாமி கொடுக்க வைத்திருக்கும் வெத்தலைப் பாக்கு தட்டுகள், ப்ளவுஸ் பீஸ், சுண்டல் விநியோகம் மற்றும் இன்ன பிற சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கும். முக்கால் வாசி வீட்டு மாமாக்களுக்கு இந்த ஸ்டாண்டின் அடியில்தான் எடுபிடி வேலை. கணகச்சிதமாக உட்கார்ந்து கொண்டு கர்மசிரத்தையாய் வெத்தலையை எண்ணி எண்ணி அடுக்கிக் கொண்டிருப்பார்கள். இந்த வெத்தலையை மட்டும் கூட இரண்டு வைத்துவிட்டால் போதும் "மனசில பெரிய மைசூர் மஹாராஜான்னு நினைப்பு...வெத்தலை விக்கிற விலைக்கு நாலு வைச்சா போறாதா..."ன்னு அடிக்கடி மாமியிடமிருந்து டோஸ் விழும். மைசூர் மஹாராஜா இத்தனை அல்பமாக இப்படி உட்கார்ந்து கொண்டா வெத்தலையை அடுக்கிக் கொண்டிருப்பார் என்று அடிக்கடி எனக்கு டவுட் வரும்.
அன்றைக்கு நாங்கள் போன வீட்டில் நல்லவேளையாக அந்த வீட்டு மாமா ஊரில் இல்லை. சேகர் போன உடனேயே எடுபிடி வேகன்ஸியில் ட்யூட்டி ஜாயின் பண்ணிவிட்டார். எங்களை உள்ளே சரியாக வரக்கூட விடாமல் "டேய் இங்க நிறைய வேலை இருக்கு...மாமிக்கு ஹெல்ப் பண்ணனும், கொலுவ வேற ரீ அரேஞ் பண்ணனும் கொஞ்சம் லேட்டாகும் நீங்க கிளம்புங்க"ன்னு புத்தியைக் காட்டிக்கொண்டிருந்தான். இன்னாடா சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு பார்த்தால் அவனோடு பேவரிட் ஜிகிடி இன்னும் இரண்டு ஜிகிடிகளோடு உட்கார்ந்துகொண்டிருந்தது. அதான் தம்பி, சோலோ சோலையப்பனாக மாற ட்ரை பண்ணுகிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது. சேகரை சொல்லி குற்றமில்லை, தெருவில் இருந்த பழக்கம் அப்பிடி. பேவரிட் என்று ஏதாவது ஜொள்ளி ஒரு ஜிகிடி மேல் லேசாக அக்கறை காட்டிவிட்டால் போதும், அந்த ஜிகிடி வரும் போது மற்ற வானரங்கள் நம்மை காய்ச்சு காய்சென்று காய்ச்சி நாற அடித்துவிடும். அப்புறம் அந்த ஜிகிடி மருந்துக்கு கூட நம்மை திரும்பி பார்க்காது. சேகரும் அது நடக்கக் கூடாது என்று பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தான்.
"டேய் ஒத்தையா ரீ அரேஞ்ச் பண்ண முடியாதுடா நாங்களும் ஹெல்ப் பண்றோம்"ன்னு ஒட்டிக்கொண்டோம். "என்னத்த ரீ அரேஞ்ச் பண்ணப் போறேள்....எல்லாம் நல்லாதான் இருக்கு"ன்னு அந்த வீட்டு மாமி வேறு ஜிகிடி கோட்பாடு தெரியாமல் வாரிக்கொண்டிருந்தார். "இல்லை மாமி, சீதா ராமர் பொம்மை இங்கே இருந்தா சிவன் அங்க இருக்கனும், நாய்க்குட்டி இங்க இருக்கனும் பன்னிக்குட்டி படுத்துண்டு இருக்கனும் "ன்னு கொலு அரேஞ்சிங் டெக்னாலஜியில் ஆக்ஸ்போர்ட் ஆர்க்கிடெக்ட் இங்கே அளந்து விட்டுக்கொண்டிருந்தார்.
என் கூட வந்த கன்னுக்குட்டி கணேசனுக்கு கொண்டைக் கடலை சுண்டல் என்றால் உயிர். கொண்டைக் கடலை சுண்டலுக்காக எதையும் தியாகம் செய்வான் - தெரு கிரிக்கெட் பேட்டிங் தவிர. அன்றைக்கு மாமி வீட்டில் கொண்டைக் கடலை சுண்டல். கிட்டத்தட்ட முடிந்துவிடுகிற பதத்தில் அடுக்களையிலிருந்து வந்த சுண்டல் வாசனையை மோப்பம் பிடித்தது முதல் கன்னுக்குட்டி கணேசன் கஞ்சா கணேசனாகிவிட்டான். சேகர் பாடு படு திண்டாடமாகிவிட்டது. சேகர் தனியாக கன்னுக்குட்டியை தள்ளிக்கொண்டு போய் எச்சரித்தும் அவன் கண்டுக்கவே இல்லை.
வேறு வழியில்லாமல் கொலு ஆர்க்கிடெக்ட் ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பித்து "டேய் இங்க வா இந்த கோபுரத்தை பிடிச்சிக்கோ கீழ போட்டுடாத ஜாக்கிரதை"ன்னு என்னை ஜூனியர் எடுபிடியாய் அப்பாயிண்ட் பண்ணிவிட்டார். ஒரு இத்துப் போன பொம்மையை இரண்டாவது வரிசையிலிருந்து முதல் வரிசைக்கு ஆர்க்கிடெக்ட் மாத்துவார். அப்புறம் ஈசான மூலையில் நின்று கொண்டு "இங்கேர்ந்து பாரு...இப்ப சூப்பரா இருக்கு இல்ல?"ன்னு என்னிடம் கேட்பான், நானும் "ஆமாண்டா கலக்கலா இருக்கு...லேசா ஒரு பத்து டிகிரி திருப்பி வைச்சா இன்னும் ஓஹோன்னு இருக்கும்"ன்னு ஐடியா குடுப்பேன்.
உட்கார்ந்திருக்கும் ஜிகிடிகள் முகத்தில் "இவர்கள் எப்போ கொலுவ ரீ அரேஞ்ச் பண்ணி நாம எப்ப வெத்தலை பாக்கு வாங்கி வீட்டுக்குப் போவது என்று கவலை படர ஆரம்பித்தது.
இதெயெல்லாம் கண்டுக்காமல் செக்கிழுக்கிற மாட்டுக்கு சிவலிங்கம் தெரியுமான்னு கண்ணுக்குட்டி கணேசன் பாட்டுக்கு கொண்டக் கடலை சுண்டலை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தான். மாமி சுண்டலை பதமாய் இறக்கி சுடச் சுட பாத்திரத்தோடு கொலு ஸ்டாண்ட் அடியில் கொண்டு வந்து வைத்துவிட்டார். அவ்வளவு தான் கணேசனுக்கு ஸ்டாண்டுக்கு அடியில் போவதற்க்கு ஒரு சாக்கு தேவைப்பட்டது.
"டேய் என்னடா சொதப்பிக்கிட்டு இருக்கீங்க...அந்த மூனாவது வரிசையில வேஷ்டி சரியா போடலைடா அதான் வரிசையே கோணலா தெரியுது..இரு நான் கொலு ஸ்டாண்ட் அடி வழியா அத சரி பண்றேன் நீங்க மேல கரெக்டா இருக்கான்ன்னு பாருங்கன்னு" உள்ளே புகுந்துவிட்டான். அந்த வரிசையில் செட்டியார் பொம்மை ஒன்று சுத்தி சின்ன சின்ன பாத்திரங்களில் அரிசி, பருப்பு நிரப்பப் பட்டு உண்மையாகவே அழகாக வைக்கப் பட்டிருந்தது. சேகரால் கன்னுக்குட்டியை ஒன்றும் சொல்ல்ல முடியவில்லை.
உள்ளே போன கன்னுக்குட்டி கணேசன் நேராய் போய் அவசர அவசரமாய் ஒரு கரண்டி சுண்டலை வாயில் அள்ளிப் போட்டுக்கொள்ள, இருந்த சூட்டில் வாய் பொள்ளிப் போய்விட்டது. சூடு பட்ட கணேசன் பேருக்கேத்த மாதிரி கன்னுக்குட்டி மாதிரி துள்ள அவன் மண்டை ஸ்டாண்டில் தட்டி பொம்மைகள் குலுகுலுங்க செட்டியார் பொம்மை நங்கென்று தரையில் விழுந்துவிட்டது. நல்ல கணமான பொம்மை என்பதால் நல்ல வேளை நொறுங்கவில்லை. உடைந்திருந்தால் அன்று மாமி எங்களை பின்னிப் பெடலெடுத்து கொலு ஸ்டாண்ட் படிகளாக்கியிருப்பார். பெருமூச்சு விட்டுக் கொண்டே அவசர அவசரமாய் செட்டியார் பொம்மையை நானும் சேகரும் திரும்ப எடுத்த போது தான் பார்த்தோம், கழுத்தில் கீறல் விழுந்து செட்டியார் தலை வேறு உடல் வேறாக ஆகியிருந்தார்.
எனக்கு அந்த மாமியின் தசாவதாரம் பற்றி நன்றாகத் தெரியுமாகையால் கைகால் வெலவெலத்து விட்டது.
"டேய்....!! செட்டியார் மண்டையைப் போட்டுட்டார்டா....."ன்னு நான் பயந்து கொண்டே சொல்லும் போதும் கூட சேகருக்கு ஜிகிடி போதை இறங்கவில்லை.
"டேய் நல்ல நாளும் அதுவுமா இவங்கள்லாம் வெத்தல பாக்கு வாங்கிக்க வந்திருக்கும் போது இப்படி அமங்கலமா சொல்லாதடா...செட்டியார் பொம்மை உடைஞ்சிருச்சுன்னு அழகா சொல்லு"ன்னு ஜிகிடிகள் முன்னால் ஆர்க்கிடெக்ட் எனக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
எனக்கு கடுப்பாகிவிட்டது. "இப்போ மாமி அடுக்களையிலிருந்து வருவாங்க...நீயே அமங்கலமா இல்லாம இப்ப சொன்ன மாதிரி அழகா விஷயத்தை சொல்லு. எனக்கு சந்தைக்கு போனும் ஆத்தா வையும்"ன்னு திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிட்டேன்.
நல்ல மாட்டுக்குத் தான் ஒரு சூடு என்று கண்ணுக்குட்டி கணேசனும் சுண்டலுக்கு ஆசைப்பட்டு அங்கு தங்கிவிட்டான். அப்புறம் அடுத்த நாள் தெரு கிரிக்கெட்டில் விஷயம் அரசல் புரசலாய் வெளியே வந்தது. மாமிக்கு செட்டியார் பொம்மை கார்த்திகை வகையாக தமையன் வாங்கிக்கொடுத்த சென்டிமென்ட்டாம். ஜிகிடிகள் முன்னால் சேகருக்கும் கன்னுக்குட்டிக்கும், மாமாக்கு விடும் டோஸைவிட இரண்டு மடங்கு அதிகமாக டபுள் ஸ்ட்ராங் டோஸில் மாமி வறுத்து எடுத்துவிட்டாராம். அத்தனை தடபுடலிலும் கன்னுக்குட்டி கணேசன் இரண்டு கரண்டி கொண்டைக் கடலை சுண்டலை உஷார் பண்ணிவிட்டான்.
அதற்கப்புறம் ஜிகிடிகள் வட்டாரத்தில் சீன் போட்டுக்கொண்டிருந்த குல"சேகர்" கொலுசேகர் என்று பெருமையுடன் வழங்கப்பட்டு வந்தார்.
இப்போதும் செட்டியார் பொம்மையைப் பார்த்தால் எனக்கு சேகரின் "செட்டியார் மண்டையைப் போட்ட்டுட்டார்..." அமங்கல அட்வைஸ் தான் நியாபகத்துக்கு வரும்.
--ஜொள்ளிங்ஸ் தொடரும்
Monday, August 25, 2008
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.1
ஜொள்ளித் திரிந்த காலம் - முதல் பாகம் படிக்க --> இங்கே
ரொம்ப நாளாக கையை அரித்துக்கொண்டு இருந்தது. ஜொள்ளித் திரிந்த காலம் முடித்த போது...சே கொஞ்சம் அவசரப்பட்டு முடித்துவிட்டோமோ...கேவலம் பதினொன்று அத்தியாயங்களில் முடித்துவிடுகிற அளவுக்கா ஜொள்ளு விட்டிருக்கிறோம்...வற்றாத ஜீவ நதியை கேவலப் படுத்திவிட்டோமோ. என்றும்..இல்லை இல்லை அலுத்துப் போயிருக்கும் கரெக்டாய் முடித்ததினால் தான் நிறையபேருக்கு பிடித்தது என்று மனசுக்குள் பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருந்தாலும், ஓரமாய் நெருப்பு எரிந்து கொண்டே இருந்தது. இந்த வலைப்பதிவு மூலமாக வந்த நண்பர்களும் வேறு அதற்கு அப்போ அப்போ நெய் ஊத்திக் கொண்டிருந்தார்கள். அப்பாடா பழியை அவர்கள் மேல் போட்டு விட்டு நைஸாக ஆரம்பித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எலியன், தி ரிங், போன்ற sequel பெயிலியர்கள் நினைவுக்கு வந்து பயமுறுகின்றன என்றாலும் மனதில் பட்டதை தான் முக்கால் வாசி இந்த வலைப் பக்கத்தில் எழுதியிருக்கிறேன் அது தான் இதுவரை எனக்கு நிறைய நண்பர்களை ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்பதால் அவ்வழியையே கடை பிடிக்கிறேன். வாரத்திற்கு ஒரு பதிவாவது போடவேண்டும் என்று கொப்புரானே சத்தியமாய் சொல்கிறேன் நானும் முயன்று பார்க்கிறேன். வரப்பு கட்டனும் வாய்க்கால் வெட்டனும்ன்னு ஏதாவது வேலை வந்து விடுகிறது. அத்தோடு அந்த வேலைகள் சம்பந்தமான டென்ஷன் வேறு. மனது டென்ஷனில்லாமல் சந்தோஷமாக இருந்தால் தான் எழுதுவது இயல்பாக வருகிறது இல்லையென்றால் எழுதிவிட்டு படித்தால் பிடிக்கமாட்டேங்கிறது இதில் அதை வேறு போட்டு உங்களிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டுமா?
ஊரில் உள்ளவர்கள், இங்கே படிப்பவர்கள் என்று உங்கள் எல்லார் மேலும் பழியைப் போட்டுவிட்டு ஜொள்ளித் திரிந்த காலத்தை மீண்டும் ஆரம்பிக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் வழக்கம் போல் காறித் துப்புவதற்கு தடை ஏதுமில்லை...:)
************************************************************
நவராத்திரி வந்தாலே ஊர்ப்பக்கம் கோலாகலம் தான். சாயங்காலம் நாலு மணிக்கே அல்லோலப் பட ஆரம்பித்துவிடும். அரும்பு மல்லீஈஈஈ என்று பூக்காரர் உதிராய் மல்லிகைப் பூவை உழக்கில் அளந்து விற்க ஆரம்பித்துவிடுவார். வயசுப் பெண்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் உழக்கு உழக்காய் வாங்குவார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் அப்பாவி அப்பாவும், உழக்கை விட ஓரடி உசரமாய் இருக்கும் கடைக்குட்டி தம்பியும் தையல்காரர் மாதிரி ஊசி நூல் வைத்துக்கொண்டு பூவைத் தொடுக்க ஆரம்பிப்பார்கள். ஐந்தரை மணிக்கு வயசுப் பெண்களெல்லாம் அழகாக அலங்காரம் செய்து கொண்டு அம்சமான கலரில் பட்டுப்பாவாடை/ பாவாடை தாவணியணிந்து கொண்டு கோவிலுக்கு போவார்கள். சும்மா போக மாட்டார்கள்.
மேற்கு அத்தத்தில்(எல்லையில்) இருக்கும் கோவிலுக்கு போவதற்கு முதலில் ஒரு ஜிகிடி கிழக்குக் கோடிக்கு போய் கோவிலுக்குப் போகலா ரெம்பாவாய் என்று செட் சேர்க்கும். முதலில் போகும் அந்த ஜிகிடி தனியாகப் போகாது, கூடவே ஒரு அல்லக்கை போகும். தெருவில் இருக்கும் வானரங்கள் எல்லாம் ஐந்து மணியோடு தெரு கிரிக்கெட்டை மூட்டை கட்டிவிட்டு ஐந்தரை மணிக்குள் வீட்டில் இருக்கும் பவுடரை கிவுடரை பூசி இல்லாத பெர்ச்னாலிட்டியை ஏத்தி தெருவில் ஸ்டாட்டிஜிக் பொசிஷனில் கூடி இருப்போம். கிங்பெல் சில சமயம் கடமை தவறிவிடுவான். "எண்பத்தி ஏழுல வெஸ்ட் இன்டீஸ் மெட்சில கவாஸ்கர் லாங் ஆன்ல ஒரு வீசு வீசுனார் பாரு"ன்னு என்னம்மோ கவாஸ்கரை கல்யாணம் பண்ணிக்கொள்கிற மாதிரி அவரைப் பற்றி ஸ்லாகித்துப் பேசிக்கொண்டிருப்பான். இதற்க்குள் "டேய் சீக்கிரம் வாடா இதுக்குத் தான் நீ வர வேண்டாம்ன்னு சொன்னேன்"ன்னு கிழக்கே போகும் முதல் ஜிகிடி அல்லக்கையிடம் பேசுவது போல் கடமையை கோடிட்டி காட்டிவிட்டுப் போகும். மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண் துஞ்சார். கருமமே கண்ணாயினார் என்று அப்புறம் எல்லாரும் கடமையில் உஷாராகிவிடுவோம்.
கிழக்கே போன (ஜிகிடி) ரயில், கூட்டம் சேர்ந்து மேற்கில் கோவிலை அடைந்தவுடன் இங்கே கடமை அதீத நிலையை அடையும். "ஓக்கேடா அப்புறம் பார்க்கலாம்...முக்கியமான வேலை இருக்கு...எங்கம்மா டெய்லி சனீஸ்வரனுக்கு அடிப்பிரத்ட்சணம் வைக்கனும்னு சொல்லி இருக்கா" என்று நைஸாக சில வானரங்கள் நழுவப் பார்க்கும். "டேய் சனீஸ்வரனே சனீஸ்வரனுக்கு அடிப்பிரதட்சணம் வைக்கிறத நாங்க பார்த்ததே இல்லைடா நாங்களும் வரோம்"ன்னு கோவிலை நோக்கி படையெடுப்போம். நாலு ஜிகிடிகள் சுத்துவட்டாரத்தில் இருந்தால் போறாதா...சரஸ்வதி சபதம் ஊமை சிவாஜி போல் ஃபீலிங் காட்டி வானரங்கள் மணியடிப்பதும், உதட்டை முனுமுனுத்துக்கொண்டு "சொல்லடி அபிராமி" ரேஞ்சுக்கு பந்தா காட்டுவதும், பக்தி உச்சிக்கேறி கருவரையில் இருக்கும் மூலவரை வேரோடு பிடுங்காமல் விடமாட்டேன் என்று உருக்கி சீன் போடுவதும் என்று சும்மா இருந்த சிரங்கை சொறிந்து விட்டாற் போல் கோவில் ஆகிவிடும். சிலதுகள் அடிப்பிரதட்சணம் வைக்கிறேன் விழுந்து கும்புடுகிறேன் என்று போடும் சீன் இருக்கே...தலையில் ஒரு குடத்தை வைத்தால் மூன்றாம் பிறை கமலஹாசனுக்கு டூப் போட்ட மாதிரி இருக்கும்.
இதில் பெரிய இம்சை என்னவென்றால் போட்ட சீன் வொர்க்கவுட் ஆச்சான்னு சீன் போடுகிற வானரம் அடுத்தவர்களிடம் கேட்டுத் தான் விபரம் தெரிந்து கொள்ளமுடியும். அவ்வளவு டெடிகேஷனோடு சீன் போட்டுக்கொண்டிருக்கும். ஒரு வேளை போட்ட சீன் வொர்கவுட் ஆனாலும் ஒருத்தரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். "டேய் அவ இன்னிக்கு என்ன பார்த்தாடா...எனக்கு கண்டிப்பா தெரியும்"ன்னு சாதித்தாலும் நடக்காது. "ஆமாண்டா பார்திருப்பா பார்த்திருப்பா நீ கழுத்துல அப்பிண்டிருக்கிற வீபூதியைப் பார்த்து அனுமாருக்கு வெண்ணைக் காப்பு சாத்திருக்கோன்னு அவளுக்கு சந்தேகம் வந்திருக்கும், கண்டிப்பா பார்த்திருப்பா" - வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி கேஸ் தான்.
இதையெல்லாம் மீறி ஒருவேளை அம்பாள் வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்கமாட்டார். "மணியடிச்சா கரெக்ட்டா வந்துருவேளே....சுண்டலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்! எல்லாம் பூஜையெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான்" என்று நேரம் பார்த்து மானத்தை வாங்கிவிடுவார். தெருவில் வானர கூட்டத்தின் ரெப்யூடேஷன் அப்படி. நவராத்திரி மற்றும் விசேஷமான காலங்களில் தெருவில் இருக்கும் பெண்மணிகள் எல்லாரும் சேர்ந்து நிறைய ஸ்லோகங்கள் ராகத்தோடு சொல்லுவார்கள். "டேய் நாமளும் அவங்களோடு சேர்ந்து கூட உட்கார்ந்து புஸ்தகத்தை பார்த்து ஸ்லோகம் சொல்லி அசத்தினோம்ன்னு வெச்சிக்கோயேன்... நம்ம பக்திய மெச்சி நாளைக்கு உங்க வீட்டிலயும் நாளக்கழிச்சி எங்க வீட்டுலயும் பொண்ணு குடுக்க வரிசையில நிப்பாங்க"ன்னு முப்பது நாளில் மாப்பிள்ளை ஆவதற்க்கு ஒரு தரம் கூட இருந்த குரங்கு ஒன்று ஐடியா குடுத்தது. ஆஹா சூப்பர் ஐடியா என்று உட்கார்ந்தால் நம்ம நேரம் - அன்று பார்த்து கொஞ்ச நேரத்திலேயே ஜிகிடிகள் கூட்டம் பொறுப்பாய் படிக்க எழுந்து போய் விட்டது.
சரி இப்ப முடிந்துவிடும் நாமும் கிளம்பிவிடலாமென்று பார்த்தால் இங்கே மாமிகள் முடிக்கிற வழியக் காணும். இந்த ஸ்லோகம் இந்த ஸ்லோகம் என்று இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் பக்கதிலிருந்த கிங்க் காங்க் மாமி வேறு சந்தேகத்தோடு அடிக்கடி பார்க்கிறாரென்று கூட இருந்த குரங்கு மண்டயை ஆட்டி ஆட்டி சீனாக்காரனுக்கு புரையேறிய மாதிரி மந்திரம் சொல்லி நடித்துக் கொண்டிருந்தது. நானும் அவ்வை ஷண்முகி நாசர் காய்த்த்ரீ மந்திரம் சொல்வது மாதிரி ஏதோ ஆக்ட் குடுத்து நழுவ ஆரம்பிக்கும் போது கரெக்டாய் சீனாதானா மாமா எங்கிருந்தோ வந்துவிட்டார். "ம்ம்ம் அப்படித்தான் ...மந்திரமெல்லாம் நல்ல ஸ்பஷ்டமாய் சொல்லனும்" என்று அவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பித்து நாங்கள் அன்று சொன்ன மந்திரத்தில் தெருவுக்கே கல்யாணம் பண்ணியிருக்கலாம்.
நவராத்திரியில் கோவில் சின்ன அத்தியாயம் தான். தெருவில் முக்கால் வாசி வீட்டில் கொலு வைத்திருப்பார்கள். கொலு வைத்தவர்கள் வீட்டில் இந்த நாளில் இன்னார் என்று எல்லாரையும் நாள் விகிதமாக வெத்தலைபாக்கு வாங்கிக் கொள்ள தெரு முழுவதும் கூப்பிட்டிருப்பார்கள். அப்படி கூப்பிட்ட வீடுகளுக்கு ஜிகிடிகளும் அவர்கள் அம்மாக்களும் போவார்கள். ரொம்ப சின்னப் பையன்களுக்கெல்லாம் இந்த இன்விடேஷன் தேவையில்லை "மாமி கொலு இருக்கா"ன்னு கேட்டுக்கொண்டே உள்ளே போனால் சுண்டல் தருவார்கள். ஆனால் வயதுப் பையன்களுக்கு இதெல்லாம் மானப் பிரச்சனை. கூப்பிடாமல் போக முடியாது. ஆனால் ரொம்ப தெரிந்த மாமியாக இருந்தால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு ஜிகிடி போன சமயமாய் உள்ளே கேஷுவல் விசிட் அடிக்கலாம்.
தெருவில் எல்லா மாமிகளுக்கும் ஒரு வம்பான பழக்கம் உண்டு. ஜிகிடிகள் யாராவது வெத்தலைபாக்கு வாங்க வந்தால் பாட்டு பாடினால் தான் உண்டு என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அதுவும் பாட்டு கற்றுக் கொள்ளும் பெண் என்று தெரிந்துவிட்டால் போதும் பாடினால் தான் எல்லாருக்கும் சுண்டல் கிடைக்கும் அதுவரைக்கும் கொலுவையும் சுண்டலையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கனும். அதிலும் சில மாமிகள் "அலை பாயுதே" பாடுடீன்னு நேயர் விருப்பமெல்லாம் வேறு வைப்பார்கள். சில ஜிகிடிகள் நன்றாக பாடும் சிலதுகள் சுமாராய் பாடும், சிலதுகள் பாடினால் கொலை பாயுதே தான். இருந்தாலும் அந்த வீட்டு மாமி "நிம்மி எங்காத்துல நேத்திக்கு பாடினா பாருங்கோ இடமே தேவலோகமாய் ஆயிடுத்து"ன்னு வீண் ஜம்பம் விடுவார், அப்புறம் நிம்மியின் கொலைபாயுதே கானமழை தெருவெல்லாம் எல்லார் வீட்டிலும் பொழியும்.
மேலே சொன்ன மாதிரி கொஞ்சம் நல்ல பழக்கமான மாமி வீடு என்றால் ஜிகிடிகள் உள்ளே போன ஐந்தாவது நிமிஷத்தில் "கொஞ்சம் தண்ணி தாங்கோ மாமி ...அட உங்காத்துல கொலு வைச்சிருக்கேளா"ன்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி முதல் வானரம் நைஸா இடத்தைப் பிடிக்கும். பின்னாடியே "சேகர் இங்கே வந்தானா.."ன்னு கேட்டுக்கொண்டே அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் மற்ற வானரங்கள் மடத்தை பிடிக்கும்.
இப்படி ஒருதரம் சேகரை தேடிக்கொண்டு நானும் கன்னுக்குட்டி கணேசனும் போன போது உள்ளே சேகர் ஓவராய் பிலிம் போட்டுக்கொண்டிருந்தார்.
--ஜொள்ளிங்ஸ் தொடரும்
ரொம்ப நாளாக கையை அரித்துக்கொண்டு இருந்தது. ஜொள்ளித் திரிந்த காலம் முடித்த போது...சே கொஞ்சம் அவசரப்பட்டு முடித்துவிட்டோமோ...கேவலம் பதினொன்று அத்தியாயங்களில் முடித்துவிடுகிற அளவுக்கா ஜொள்ளு விட்டிருக்கிறோம்...வற்றாத ஜீவ நதியை கேவலப் படுத்திவிட்டோமோ. என்றும்..இல்லை இல்லை அலுத்துப் போயிருக்கும் கரெக்டாய் முடித்ததினால் தான் நிறையபேருக்கு பிடித்தது என்று மனசுக்குள் பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருந்தாலும், ஓரமாய் நெருப்பு எரிந்து கொண்டே இருந்தது. இந்த வலைப்பதிவு மூலமாக வந்த நண்பர்களும் வேறு அதற்கு அப்போ அப்போ நெய் ஊத்திக் கொண்டிருந்தார்கள். அப்பாடா பழியை அவர்கள் மேல் போட்டு விட்டு நைஸாக ஆரம்பித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எலியன், தி ரிங், போன்ற sequel பெயிலியர்கள் நினைவுக்கு வந்து பயமுறுகின்றன என்றாலும் மனதில் பட்டதை தான் முக்கால் வாசி இந்த வலைப் பக்கத்தில் எழுதியிருக்கிறேன் அது தான் இதுவரை எனக்கு நிறைய நண்பர்களை ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்பதால் அவ்வழியையே கடை பிடிக்கிறேன். வாரத்திற்கு ஒரு பதிவாவது போடவேண்டும் என்று கொப்புரானே சத்தியமாய் சொல்கிறேன் நானும் முயன்று பார்க்கிறேன். வரப்பு கட்டனும் வாய்க்கால் வெட்டனும்ன்னு ஏதாவது வேலை வந்து விடுகிறது. அத்தோடு அந்த வேலைகள் சம்பந்தமான டென்ஷன் வேறு. மனது டென்ஷனில்லாமல் சந்தோஷமாக இருந்தால் தான் எழுதுவது இயல்பாக வருகிறது இல்லையென்றால் எழுதிவிட்டு படித்தால் பிடிக்கமாட்டேங்கிறது இதில் அதை வேறு போட்டு உங்களிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டுமா?
ஊரில் உள்ளவர்கள், இங்கே படிப்பவர்கள் என்று உங்கள் எல்லார் மேலும் பழியைப் போட்டுவிட்டு ஜொள்ளித் திரிந்த காலத்தை மீண்டும் ஆரம்பிக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் வழக்கம் போல் காறித் துப்புவதற்கு தடை ஏதுமில்லை...:)
************************************************************
நவராத்திரி வந்தாலே ஊர்ப்பக்கம் கோலாகலம் தான். சாயங்காலம் நாலு மணிக்கே அல்லோலப் பட ஆரம்பித்துவிடும். அரும்பு மல்லீஈஈஈ என்று பூக்காரர் உதிராய் மல்லிகைப் பூவை உழக்கில் அளந்து விற்க ஆரம்பித்துவிடுவார். வயசுப் பெண்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் உழக்கு உழக்காய் வாங்குவார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் அப்பாவி அப்பாவும், உழக்கை விட ஓரடி உசரமாய் இருக்கும் கடைக்குட்டி தம்பியும் தையல்காரர் மாதிரி ஊசி நூல் வைத்துக்கொண்டு பூவைத் தொடுக்க ஆரம்பிப்பார்கள். ஐந்தரை மணிக்கு வயசுப் பெண்களெல்லாம் அழகாக அலங்காரம் செய்து கொண்டு அம்சமான கலரில் பட்டுப்பாவாடை/ பாவாடை தாவணியணிந்து கொண்டு கோவிலுக்கு போவார்கள். சும்மா போக மாட்டார்கள்.
மேற்கு அத்தத்தில்(எல்லையில்) இருக்கும் கோவிலுக்கு போவதற்கு முதலில் ஒரு ஜிகிடி கிழக்குக் கோடிக்கு போய் கோவிலுக்குப் போகலா ரெம்பாவாய் என்று செட் சேர்க்கும். முதலில் போகும் அந்த ஜிகிடி தனியாகப் போகாது, கூடவே ஒரு அல்லக்கை போகும். தெருவில் இருக்கும் வானரங்கள் எல்லாம் ஐந்து மணியோடு தெரு கிரிக்கெட்டை மூட்டை கட்டிவிட்டு ஐந்தரை மணிக்குள் வீட்டில் இருக்கும் பவுடரை கிவுடரை பூசி இல்லாத பெர்ச்னாலிட்டியை ஏத்தி தெருவில் ஸ்டாட்டிஜிக் பொசிஷனில் கூடி இருப்போம். கிங்பெல் சில சமயம் கடமை தவறிவிடுவான். "எண்பத்தி ஏழுல வெஸ்ட் இன்டீஸ் மெட்சில கவாஸ்கர் லாங் ஆன்ல ஒரு வீசு வீசுனார் பாரு"ன்னு என்னம்மோ கவாஸ்கரை கல்யாணம் பண்ணிக்கொள்கிற மாதிரி அவரைப் பற்றி ஸ்லாகித்துப் பேசிக்கொண்டிருப்பான். இதற்க்குள் "டேய் சீக்கிரம் வாடா இதுக்குத் தான் நீ வர வேண்டாம்ன்னு சொன்னேன்"ன்னு கிழக்கே போகும் முதல் ஜிகிடி அல்லக்கையிடம் பேசுவது போல் கடமையை கோடிட்டி காட்டிவிட்டுப் போகும். மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண் துஞ்சார். கருமமே கண்ணாயினார் என்று அப்புறம் எல்லாரும் கடமையில் உஷாராகிவிடுவோம்.
கிழக்கே போன (ஜிகிடி) ரயில், கூட்டம் சேர்ந்து மேற்கில் கோவிலை அடைந்தவுடன் இங்கே கடமை அதீத நிலையை அடையும். "ஓக்கேடா அப்புறம் பார்க்கலாம்...முக்கியமான வேலை இருக்கு...எங்கம்மா டெய்லி சனீஸ்வரனுக்கு அடிப்பிரத்ட்சணம் வைக்கனும்னு சொல்லி இருக்கா" என்று நைஸாக சில வானரங்கள் நழுவப் பார்க்கும். "டேய் சனீஸ்வரனே சனீஸ்வரனுக்கு அடிப்பிரதட்சணம் வைக்கிறத நாங்க பார்த்ததே இல்லைடா நாங்களும் வரோம்"ன்னு கோவிலை நோக்கி படையெடுப்போம். நாலு ஜிகிடிகள் சுத்துவட்டாரத்தில் இருந்தால் போறாதா...சரஸ்வதி சபதம் ஊமை சிவாஜி போல் ஃபீலிங் காட்டி வானரங்கள் மணியடிப்பதும், உதட்டை முனுமுனுத்துக்கொண்டு "சொல்லடி அபிராமி" ரேஞ்சுக்கு பந்தா காட்டுவதும், பக்தி உச்சிக்கேறி கருவரையில் இருக்கும் மூலவரை வேரோடு பிடுங்காமல் விடமாட்டேன் என்று உருக்கி சீன் போடுவதும் என்று சும்மா இருந்த சிரங்கை சொறிந்து விட்டாற் போல் கோவில் ஆகிவிடும். சிலதுகள் அடிப்பிரதட்சணம் வைக்கிறேன் விழுந்து கும்புடுகிறேன் என்று போடும் சீன் இருக்கே...தலையில் ஒரு குடத்தை வைத்தால் மூன்றாம் பிறை கமலஹாசனுக்கு டூப் போட்ட மாதிரி இருக்கும்.
இதில் பெரிய இம்சை என்னவென்றால் போட்ட சீன் வொர்க்கவுட் ஆச்சான்னு சீன் போடுகிற வானரம் அடுத்தவர்களிடம் கேட்டுத் தான் விபரம் தெரிந்து கொள்ளமுடியும். அவ்வளவு டெடிகேஷனோடு சீன் போட்டுக்கொண்டிருக்கும். ஒரு வேளை போட்ட சீன் வொர்கவுட் ஆனாலும் ஒருத்தரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். "டேய் அவ இன்னிக்கு என்ன பார்த்தாடா...எனக்கு கண்டிப்பா தெரியும்"ன்னு சாதித்தாலும் நடக்காது. "ஆமாண்டா பார்திருப்பா பார்த்திருப்பா நீ கழுத்துல அப்பிண்டிருக்கிற வீபூதியைப் பார்த்து அனுமாருக்கு வெண்ணைக் காப்பு சாத்திருக்கோன்னு அவளுக்கு சந்தேகம் வந்திருக்கும், கண்டிப்பா பார்த்திருப்பா" - வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி கேஸ் தான்.
இதையெல்லாம் மீறி ஒருவேளை அம்பாள் வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்கமாட்டார். "மணியடிச்சா கரெக்ட்டா வந்துருவேளே....சுண்டலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்! எல்லாம் பூஜையெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான்" என்று நேரம் பார்த்து மானத்தை வாங்கிவிடுவார். தெருவில் வானர கூட்டத்தின் ரெப்யூடேஷன் அப்படி. நவராத்திரி மற்றும் விசேஷமான காலங்களில் தெருவில் இருக்கும் பெண்மணிகள் எல்லாரும் சேர்ந்து நிறைய ஸ்லோகங்கள் ராகத்தோடு சொல்லுவார்கள். "டேய் நாமளும் அவங்களோடு சேர்ந்து கூட உட்கார்ந்து புஸ்தகத்தை பார்த்து ஸ்லோகம் சொல்லி அசத்தினோம்ன்னு வெச்சிக்கோயேன்... நம்ம பக்திய மெச்சி நாளைக்கு உங்க வீட்டிலயும் நாளக்கழிச்சி எங்க வீட்டுலயும் பொண்ணு குடுக்க வரிசையில நிப்பாங்க"ன்னு முப்பது நாளில் மாப்பிள்ளை ஆவதற்க்கு ஒரு தரம் கூட இருந்த குரங்கு ஒன்று ஐடியா குடுத்தது. ஆஹா சூப்பர் ஐடியா என்று உட்கார்ந்தால் நம்ம நேரம் - அன்று பார்த்து கொஞ்ச நேரத்திலேயே ஜிகிடிகள் கூட்டம் பொறுப்பாய் படிக்க எழுந்து போய் விட்டது.
சரி இப்ப முடிந்துவிடும் நாமும் கிளம்பிவிடலாமென்று பார்த்தால் இங்கே மாமிகள் முடிக்கிற வழியக் காணும். இந்த ஸ்லோகம் இந்த ஸ்லோகம் என்று இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் பக்கதிலிருந்த கிங்க் காங்க் மாமி வேறு சந்தேகத்தோடு அடிக்கடி பார்க்கிறாரென்று கூட இருந்த குரங்கு மண்டயை ஆட்டி ஆட்டி சீனாக்காரனுக்கு புரையேறிய மாதிரி மந்திரம் சொல்லி நடித்துக் கொண்டிருந்தது. நானும் அவ்வை ஷண்முகி நாசர் காய்த்த்ரீ மந்திரம் சொல்வது மாதிரி ஏதோ ஆக்ட் குடுத்து நழுவ ஆரம்பிக்கும் போது கரெக்டாய் சீனாதானா மாமா எங்கிருந்தோ வந்துவிட்டார். "ம்ம்ம் அப்படித்தான் ...மந்திரமெல்லாம் நல்ல ஸ்பஷ்டமாய் சொல்லனும்" என்று அவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பித்து நாங்கள் அன்று சொன்ன மந்திரத்தில் தெருவுக்கே கல்யாணம் பண்ணியிருக்கலாம்.
நவராத்திரியில் கோவில் சின்ன அத்தியாயம் தான். தெருவில் முக்கால் வாசி வீட்டில் கொலு வைத்திருப்பார்கள். கொலு வைத்தவர்கள் வீட்டில் இந்த நாளில் இன்னார் என்று எல்லாரையும் நாள் விகிதமாக வெத்தலைபாக்கு வாங்கிக் கொள்ள தெரு முழுவதும் கூப்பிட்டிருப்பார்கள். அப்படி கூப்பிட்ட வீடுகளுக்கு ஜிகிடிகளும் அவர்கள் அம்மாக்களும் போவார்கள். ரொம்ப சின்னப் பையன்களுக்கெல்லாம் இந்த இன்விடேஷன் தேவையில்லை "மாமி கொலு இருக்கா"ன்னு கேட்டுக்கொண்டே உள்ளே போனால் சுண்டல் தருவார்கள். ஆனால் வயதுப் பையன்களுக்கு இதெல்லாம் மானப் பிரச்சனை. கூப்பிடாமல் போக முடியாது. ஆனால் ரொம்ப தெரிந்த மாமியாக இருந்தால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு ஜிகிடி போன சமயமாய் உள்ளே கேஷுவல் விசிட் அடிக்கலாம்.
தெருவில் எல்லா மாமிகளுக்கும் ஒரு வம்பான பழக்கம் உண்டு. ஜிகிடிகள் யாராவது வெத்தலைபாக்கு வாங்க வந்தால் பாட்டு பாடினால் தான் உண்டு என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அதுவும் பாட்டு கற்றுக் கொள்ளும் பெண் என்று தெரிந்துவிட்டால் போதும் பாடினால் தான் எல்லாருக்கும் சுண்டல் கிடைக்கும் அதுவரைக்கும் கொலுவையும் சுண்டலையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கனும். அதிலும் சில மாமிகள் "அலை பாயுதே" பாடுடீன்னு நேயர் விருப்பமெல்லாம் வேறு வைப்பார்கள். சில ஜிகிடிகள் நன்றாக பாடும் சிலதுகள் சுமாராய் பாடும், சிலதுகள் பாடினால் கொலை பாயுதே தான். இருந்தாலும் அந்த வீட்டு மாமி "நிம்மி எங்காத்துல நேத்திக்கு பாடினா பாருங்கோ இடமே தேவலோகமாய் ஆயிடுத்து"ன்னு வீண் ஜம்பம் விடுவார், அப்புறம் நிம்மியின் கொலைபாயுதே கானமழை தெருவெல்லாம் எல்லார் வீட்டிலும் பொழியும்.
மேலே சொன்ன மாதிரி கொஞ்சம் நல்ல பழக்கமான மாமி வீடு என்றால் ஜிகிடிகள் உள்ளே போன ஐந்தாவது நிமிஷத்தில் "கொஞ்சம் தண்ணி தாங்கோ மாமி ...அட உங்காத்துல கொலு வைச்சிருக்கேளா"ன்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி முதல் வானரம் நைஸா இடத்தைப் பிடிக்கும். பின்னாடியே "சேகர் இங்கே வந்தானா.."ன்னு கேட்டுக்கொண்டே அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் மற்ற வானரங்கள் மடத்தை பிடிக்கும்.
இப்படி ஒருதரம் சேகரை தேடிக்கொண்டு நானும் கன்னுக்குட்டி கணேசனும் போன போது உள்ளே சேகர் ஓவராய் பிலிம் போட்டுக்கொண்டிருந்தார்.
--ஜொள்ளிங்ஸ் தொடரும்
Wednesday, July 05, 2006
ஆத்தங்கரை மரமே...2
Previous Parts --> Part 1
ஆத்தங்கரை பாதையின் ஆரம்பத்தில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கிறது. அதற்கு எதிரிலே பிள்ளையார் கோயில் ஒன்று உண்டு. மிகவும் பிரசித்தமான கோயில். அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அடுத்து ஒரு வாய்க்கால் உண்டு. பயிர் பாசனத்திற்காக ஓடும் இந்த வாய்க்கால், ஊரில் இருக்கும் எல்லா ஆஸ்பத்திரிகளையும் தொட்டுக் கொண்டு ஓடும். எல்லா ஆஸ்பத்திரி மருந்துக் கழிவுகளும் இந்த வாய்க்காலில் தான் கலக்கும். இதனாலேயே உள்ளூர் டாக்டர்கள் ஏதாவது வியாதியை தீர்க்க முடியாமல் திணறினால் இந்த வாய்காலிலிருந்து ஒரு அவுன்ஸ் தண்ணீரை மருந்தாக குடுத்துவிடுவார்கள், எல்லா ஆஸ்பத்திரி மருந்தும் இதில் கலந்திருப்பதால் தீராத வியாதியும் உடனே குணமாகிவிடும் என்று ஊரிலே ஒரு பலத்த நம்பிக்கை உண்டு.
சர்வரோக நிவாரணி தவிர ஆஸ்பத்திரிக்கு வரும் விசிட்டர் கூட்டத்திற்கு காலைக் கடன் சேவையும் இந்த வாய்க்கால் தான். காலை ஆறு டூ ஏழு காலைக் கடன் மற்றும் இலவச "திவ்ய தரிசன" சர்விஸ். மேற்சொன்ன காரணங்களினால் இந்த வாய்க்கால் சில இடங்களில் கூவத்திற்கு கூவிக் கூவி சவால் விடும். வானரப் படையின் சேட்டை இங்கேயே ஆரம்பித்துவிடும். ஆஸ்பத்திரி வந்ததுமே...பரபரவென்று ஆகிவிடுவார்கள். காலைக் கடன் பார்ட்டிகள் மறைவாக "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல் வருமா" என்று அக்கடா என்று உட்கார்ந்திருப்பார்கள். அது வானரப் படைக்குப் பொறுக்காது. வெறி நாய் மாதிரி கத்திக் கொண்டே அரக்கப் பரக்க ஓடிப் போவார்கள். காலைக் கடன் பார்ட்டி எதோ நாய் தான் தறிகெட்டு வருகிறது போல என்று அடித்துப் பிடித்து எழுந்திருப்பார்கள். வானரப் படை அவர்கள் பக்கத்தில் ஓடிப் போய் "வள்" என்று குலைத்து விட்டு பாதுகாப்பான தூரத்திலிருந்து சிரித்து மகிழும்.
பார்ட்டிக்கு மட்டும் கொஞ்சம் அவசரமாயிருந்து பூஜையில் கரடி மாதிரி புகுந்திருந்தோம் என்றால் அவ்வளவு தான். "வெரவாக்கிலம் கெட்ட நாய்களா...மனுஷன நிம்மதியா போகக் கூட விடமாடேங்கிறேங்களேடா.." என்று சொறிநாயை கல்லெடுத்து அடிப்பது மாதிரி விரட்ட ஆரம்பித்து விடுவார்கள். கல்லடியிலிருந்து தப்பிக்க நிறைய தரம் தலைதெறிக்க ஓடியிருக்கிறோம். சில மரத்தடி மகானுபாவர்கள் பாதி பூஜையில் தவத்தைக் கலைக்க முடியாது என்பதால் "இந்த பாவத்துக்கு நீங்களெல்லாம் மலச்சிக்கல் வந்து முக்கி மண்டைவெடிச்சுத் தான் போகப்போறீங்கன்னு" ரேஞ்சுக்கு இந்தா பிடி சாபமெல்லாம் குடுப்பார்கள்.
எங்க ஊர் ஆற்றங்கரையில் இரண்டு துறைகள் உண்டு. கல்துறை மற்றும் மண் துறை. கல் துறையில் தண்ணீரின் வேகம் ஜாஸ்தியாக இருக்கும். தண்ணீருக்கடியில் மணலில்லாமல் கருங்கல்லும் பாறைகள் இருக்கும். இந்த துறையில் குளிப்பதற்கு கொஞ்சம் பழக்கம் வேண்டும். இல்லாவிட்டால் அடி பட்டு தண்ணீர் அடித்துக் கொண்டு போய்விடும். மணல் துறையில் சுகமாக இருக்கும். கடற்கரை மாதிரி தண்ணீருக்கடியில் மணல் இருப்பதால் அடிபடாது. ஆனால் மணலாற்றங்கரையிலும் இழுப்பு இருக்கும். இட்லி பாறை, தோசை பாறை என்று இரண்டு பெரிய பாறைகள் உண்டு. இட்லி மாதிரியும், தோசை மாதிரியும் இருப்பதால் காரணப் பெயர். இது போக சிவன் பாறை ஒன்று உண்டு. அது ஒரு மினி குன்று மாதிரி இருக்கும். மேலே பாறையில் ஒரு அழகான சிவலிங்கம் ஒன்று இருக்கும். சிவன் பாறைக்கு கீழே ஆழம் மிகவும் அதிகம். அதனால் இட்லி பாறை, தோசை பாறையில் எக்ஸ்பீரியன்ஸ் போட்டவர்கள் மட்டும் தான் சிவன் பாறைக்கு பிரமோஷன் வாங்கிப் போவார்கள். மற்றவர்களெல்லாம் அங்கிருந்து குதித்தால் சிவலோகப் பிரமோஷன் தான் என்று பயமுறுத்தி வைத்திருந்ததால் நாங்கள் முதலில் அந்தப் பக்கம் போக மாட்டோம். வெறும் இட்லி, தோசை பாறைகளோடு சாகசங்களை நிறுத்திக் கொள்வோம்.
குளிக்கும் போது இட்லி பாறைக்கும் தோசைப் பாறைக்கும் நடுவில் நீச்சல் அடித்து தொட்டுப் பிடித்து விளையாடுவது மிக சுவாரசியமாக இருக்கும். நீச்சல் தெரியாமல் இதற்கெல்லாம் பயந்தால் "பேசாமல் போய் கல்லிடைக்குறிச்சியில் குளிக்கப் போ" என்று விரட்டிவிடுவோம்.
கோவில் இருக்கிற ஊர்ல எல்லாரும் கோவிலுக்குப் போகிறார்களா என்ன? அது மாதிரி எங்க ஊர்லயும் ஆத்தங்கரைக்கு வராத சில ஜென்மங்கள் உண்டு. எங்கள் தெருவிலும் ஒரு பிரகஸ்பதி இருந்தான். அவனைப் பொறுத்த மட்டில் "குளிப்பது" என்பது சினிமாவில் நாயகர்கள் முன்னால் கதாநாயகிகள் புடவை உடுத்திக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்டு மிட் நைட் மசாலாவில் வருவது. "டேய் குளிச்சியாடா" என்றால் "ஓ...முந்தாநேத்திக்கே குளிச்சாச்சு" என்று கூசாமல் பதில் சொல்லுவான். என் போறாத வேளை, "உன்னால் முடியும் தம்பி" கமல் மாதிரி நான் சும்மா இராமல் குளிப்பதினால் வரும் நன்மைகளை எடுத்துச் சொல்லி அவனை ஒரு நாள் ஆத்தங்கரைக்கு கூட்டிப் போனேன்.
-இன்னும் வரும்
ஆத்தங்கரை பாதையின் ஆரம்பத்தில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கிறது. அதற்கு எதிரிலே பிள்ளையார் கோயில் ஒன்று உண்டு. மிகவும் பிரசித்தமான கோயில். அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அடுத்து ஒரு வாய்க்கால் உண்டு. பயிர் பாசனத்திற்காக ஓடும் இந்த வாய்க்கால், ஊரில் இருக்கும் எல்லா ஆஸ்பத்திரிகளையும் தொட்டுக் கொண்டு ஓடும். எல்லா ஆஸ்பத்திரி மருந்துக் கழிவுகளும் இந்த வாய்க்காலில் தான் கலக்கும். இதனாலேயே உள்ளூர் டாக்டர்கள் ஏதாவது வியாதியை தீர்க்க முடியாமல் திணறினால் இந்த வாய்காலிலிருந்து ஒரு அவுன்ஸ் தண்ணீரை மருந்தாக குடுத்துவிடுவார்கள், எல்லா ஆஸ்பத்திரி மருந்தும் இதில் கலந்திருப்பதால் தீராத வியாதியும் உடனே குணமாகிவிடும் என்று ஊரிலே ஒரு பலத்த நம்பிக்கை உண்டு.
சர்வரோக நிவாரணி தவிர ஆஸ்பத்திரிக்கு வரும் விசிட்டர் கூட்டத்திற்கு காலைக் கடன் சேவையும் இந்த வாய்க்கால் தான். காலை ஆறு டூ ஏழு காலைக் கடன் மற்றும் இலவச "திவ்ய தரிசன" சர்விஸ். மேற்சொன்ன காரணங்களினால் இந்த வாய்க்கால் சில இடங்களில் கூவத்திற்கு கூவிக் கூவி சவால் விடும். வானரப் படையின் சேட்டை இங்கேயே ஆரம்பித்துவிடும். ஆஸ்பத்திரி வந்ததுமே...பரபரவென்று ஆகிவிடுவார்கள். காலைக் கடன் பார்ட்டிகள் மறைவாக "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல் வருமா" என்று அக்கடா என்று உட்கார்ந்திருப்பார்கள். அது வானரப் படைக்குப் பொறுக்காது. வெறி நாய் மாதிரி கத்திக் கொண்டே அரக்கப் பரக்க ஓடிப் போவார்கள். காலைக் கடன் பார்ட்டி எதோ நாய் தான் தறிகெட்டு வருகிறது போல என்று அடித்துப் பிடித்து எழுந்திருப்பார்கள். வானரப் படை அவர்கள் பக்கத்தில் ஓடிப் போய் "வள்" என்று குலைத்து விட்டு பாதுகாப்பான தூரத்திலிருந்து சிரித்து மகிழும்.
பார்ட்டிக்கு மட்டும் கொஞ்சம் அவசரமாயிருந்து பூஜையில் கரடி மாதிரி புகுந்திருந்தோம் என்றால் அவ்வளவு தான். "வெரவாக்கிலம் கெட்ட நாய்களா...மனுஷன நிம்மதியா போகக் கூட விடமாடேங்கிறேங்களேடா.." என்று சொறிநாயை கல்லெடுத்து அடிப்பது மாதிரி விரட்ட ஆரம்பித்து விடுவார்கள். கல்லடியிலிருந்து தப்பிக்க நிறைய தரம் தலைதெறிக்க ஓடியிருக்கிறோம். சில மரத்தடி மகானுபாவர்கள் பாதி பூஜையில் தவத்தைக் கலைக்க முடியாது என்பதால் "இந்த பாவத்துக்கு நீங்களெல்லாம் மலச்சிக்கல் வந்து முக்கி மண்டைவெடிச்சுத் தான் போகப்போறீங்கன்னு" ரேஞ்சுக்கு இந்தா பிடி சாபமெல்லாம் குடுப்பார்கள்.
எங்க ஊர் ஆற்றங்கரையில் இரண்டு துறைகள் உண்டு. கல்துறை மற்றும் மண் துறை. கல் துறையில் தண்ணீரின் வேகம் ஜாஸ்தியாக இருக்கும். தண்ணீருக்கடியில் மணலில்லாமல் கருங்கல்லும் பாறைகள் இருக்கும். இந்த துறையில் குளிப்பதற்கு கொஞ்சம் பழக்கம் வேண்டும். இல்லாவிட்டால் அடி பட்டு தண்ணீர் அடித்துக் கொண்டு போய்விடும். மணல் துறையில் சுகமாக இருக்கும். கடற்கரை மாதிரி தண்ணீருக்கடியில் மணல் இருப்பதால் அடிபடாது. ஆனால் மணலாற்றங்கரையிலும் இழுப்பு இருக்கும். இட்லி பாறை, தோசை பாறை என்று இரண்டு பெரிய பாறைகள் உண்டு. இட்லி மாதிரியும், தோசை மாதிரியும் இருப்பதால் காரணப் பெயர். இது போக சிவன் பாறை ஒன்று உண்டு. அது ஒரு மினி குன்று மாதிரி இருக்கும். மேலே பாறையில் ஒரு அழகான சிவலிங்கம் ஒன்று இருக்கும். சிவன் பாறைக்கு கீழே ஆழம் மிகவும் அதிகம். அதனால் இட்லி பாறை, தோசை பாறையில் எக்ஸ்பீரியன்ஸ் போட்டவர்கள் மட்டும் தான் சிவன் பாறைக்கு பிரமோஷன் வாங்கிப் போவார்கள். மற்றவர்களெல்லாம் அங்கிருந்து குதித்தால் சிவலோகப் பிரமோஷன் தான் என்று பயமுறுத்தி வைத்திருந்ததால் நாங்கள் முதலில் அந்தப் பக்கம் போக மாட்டோம். வெறும் இட்லி, தோசை பாறைகளோடு சாகசங்களை நிறுத்திக் கொள்வோம்.
குளிக்கும் போது இட்லி பாறைக்கும் தோசைப் பாறைக்கும் நடுவில் நீச்சல் அடித்து தொட்டுப் பிடித்து விளையாடுவது மிக சுவாரசியமாக இருக்கும். நீச்சல் தெரியாமல் இதற்கெல்லாம் பயந்தால் "பேசாமல் போய் கல்லிடைக்குறிச்சியில் குளிக்கப் போ" என்று விரட்டிவிடுவோம்.
கோவில் இருக்கிற ஊர்ல எல்லாரும் கோவிலுக்குப் போகிறார்களா என்ன? அது மாதிரி எங்க ஊர்லயும் ஆத்தங்கரைக்கு வராத சில ஜென்மங்கள் உண்டு. எங்கள் தெருவிலும் ஒரு பிரகஸ்பதி இருந்தான். அவனைப் பொறுத்த மட்டில் "குளிப்பது" என்பது சினிமாவில் நாயகர்கள் முன்னால் கதாநாயகிகள் புடவை உடுத்திக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்டு மிட் நைட் மசாலாவில் வருவது. "டேய் குளிச்சியாடா" என்றால் "ஓ...முந்தாநேத்திக்கே குளிச்சாச்சு" என்று கூசாமல் பதில் சொல்லுவான். என் போறாத வேளை, "உன்னால் முடியும் தம்பி" கமல் மாதிரி நான் சும்மா இராமல் குளிப்பதினால் வரும் நன்மைகளை எடுத்துச் சொல்லி அவனை ஒரு நாள் ஆத்தங்கரைக்கு கூட்டிப் போனேன்.
-இன்னும் வரும்
Tuesday, June 27, 2006
ஆத்தங்கரை மரமே...
இதுவும் அம்மபாட்டுத் தேங்....:)
தாமிரபரணி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி இல்லை பக்கத்தூர்களின் பெயர்களைக் கேட்டாலே உடம்பெங்கும் பரவசம் பரவும் எனக்கு. இருக்காதா பின்ன? பிறந்து வளர்ந்து இருபது ஆண்டுகள் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமா? இதில் தாமிரபரணியின் சிறப்புகள் என்னவென்று முன்னால் ஒரு பதிவிலேயே (ஆறு) சொல்லிவிட்டேன். இதற்குமேலும் பிற ஜில்லாக்காரர்களின் பேரன்பை தாங்க முடியாது என்பதால் அதை விட்டுவிடுகிறேன். பொதிகை மலையில் உருவாகி பிரவாகமாக ஓடும் தாமிரபரணி பாபநாச மலயடிவாரத்தில் ஆரவாரமாக ஓடுவதைப் பார்ப்பதற்கு புண்ணியம் செய்திருக்கவேண்டும். இதில் தாமிரச் சத்து அதிகமிருப்பதால் இந்தப் பெயர் என்று ஒரு வழக்கும் உண்டு. தாமிரச் சத்து அதிகமாய் இருபதனால் இதில் குளித்தால் தோல் கொஞ்சம் கருக்கும் என்றும் நீச்சல் தெரியாத கூட்டம் சரடு விடும்.
இந்த வற்றாத ஜீவநதியின் தண்ணிரில் விழும் பொதிகை மலை அகத்தியர் அருவியும் ஜில்லாவில் மிகவும் பிரசித்தம். குற்றால அருவிகள் மாதிரி அகத்தியர் அருவிக்கு உயரம் கிடையாது. ஆனால் பொதிகை மலையில் நிறைந்திருக்கும் "சித்த வேர்களின்" குணங்களைத் தாங்கி வருவதால் இதில் குளித்தால் ஹெர்பல் பாத்துக்கு சமம் என்று சொல்லுவார்கள். உணமை தானா என்று மலைக்கு மேல் ஏறி அந்த சித்த வேர்களின் வாசத்தை முகர்ந்து பார்த்துவிடுவது என்று சோதிக்க கிளம்பி, வழியில் வழுக்கி விழுந்து வேறு ஏதோ ஒரு சித்த புருஷர் விட்டுச் சென்ற சாயம் போன அண்டர் வேரைப் பார்த்துவிட்டு வேரைப் பார்த்தது போதும் என்று நொண்டிக் கொண்டே திரும்பி வந்துவிட்டேன். அதிலிருந்து நானும் இதே மாதிரி சித்த வேர், பித்த தேர் என்று சங்கு ஊதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கப்புறம் அகத்தியர் அருவியில் உண்மையான சித்த வேர் சமாச்சாரம் இருக்கிறதா என்று நான் ரொம்ப ஆராய்ச்சி செய்யவில்லை. நான் வழுக்கிவிழுந்த இடத்துக்கு மேலே காட்டில் இருக்கலாம்...நக்கல் விட்டாலும் இந்த அருவில் குளித்தால் புத்துணர்ச்சியாய் இருக்கும். அருவியிலிருந்து வெளியே வரவே மனசு வராது.
ஓவ்வொரு ஊர் தண்ணிக்கும் ஒரு பெருமை இருக்கு என்று அந்தந்த ஊர்காரர்கள் மார்தட்டிக் கொள்வது மாதிரி எங்க ஊர் தண்ணியக் குடிச்சா வீரம் வரும் என்று சீவலப்பேரி பாண்டியில் நெப்போலிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். எல்லா ஊர் தண்ணிக்கும் இந்த மாதிரி "இந்தத் தண்ணியக் குடிச்சா வீரம் வரும். ஞானம் வரும், குசும்பு வரும்" என்று உசுப்பேத்துற வசனங்கள் நிறைய இருக்கும். விஜய்குமார் தாலி, தாய் மாமா, சீர் பெருமைகளை பேசாத சமயத்தில் இந்த மாதிரி ட்யலாக் நிறைய பேசுவார். விஜய்காந்தும் நிறைய படங்களில் பேசியிருக்கிறார். நானும் இவர்களையெல்லாம் நம்பி, ஊறவைத்த கொண்டக் கடலையை மென்று, கர்லா கட்டையை சுத்தி எக்சர்சைஸ் செய்து ப்ரொபைல் ஏத்தி, நிறைய தண்ணி குடித்திருக்கிறேன். வீரம் வந்ததா தெரியாது ஆனால் நிறைய தண்ணி குடித்ததின் பலனாக அன்றெல்லாம் வேறொன்று நிறைய வந்தது.
ஆண்டாளுக்கு மார்கழி மாதிரி எங்களுக்கு ஏப்ரல் மே, ஜூன். காலை ஆறு மணிக்கே "நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்" என்று கிளம்பி விடுவோம். ஆறு மணிக்கு கிளம்பி ஆறேமுக்கால் வரை குற்றாலத் துண்டு, சோப்புப் பெட்டி சகிதமாக தெரு முக்கில் வானரப் படையுடன் ஒரு அரட்டையைப் போடுவது, ஏப்ரல் மே சூடுக்கு காலை குளிர்ந்த நீரில் கால் வைக்கும் போது ஏற்படும் ஜில்லிப்பு இவற்றின் சுகமே தனி. நான் சொல்லும் இந்த ஆற்றங்கரையை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். புது நெல்லு புது நாத்து, ஜென்டில்மேன், டும் டும் டும், சாமி மற்றும் இன்ன பிற நாற்பது சொச்ச படஙகளில் விஸ்தீரணமாக காட்டிவிட்டார்கள்.திவ்ய பாரதி, பானுப் ப்ரியா, த்ரிஷா போன்றோர் நீராடிய புண்ய ஸ்தலம்.
மலையடிவாரத்தில் பச்சைப் பசேலென்று வயல் சூழ இருபக்கமும் ஆலமரம் தழைத்து வளர்ந்து, ஜிலு ஜிலுவென்று காற்றில் ஆற்றங்கரைக்கு போகும் பாதையே ரொம்ப ரம்மியமாக இருக்கும். டும் டும் டும்-ல் விவேக் அன்ட் கோ மாதவன் கல்யாணத்திற்கு பஸ்ஸிலிருந்து வந்திறங்குமே அந்தப் பாதை தான் இது. முதல்வனில் அர்ஜுன் மாறுவேஷத்தில் மணிஷா மாமியைப் பார்க்கப் போகும் போது பூ வாங்குவாரே அதே பாதை தான் இது. ஜலக்கிரீடை செய்யப் புறப்படும் குரங்குகளின் அட்டகாசம் இந்தப் பாதையில் காலடி எடுத்து வைத்தவுடனேயே ஆரம்பமாகிவிடும்.
-இன்னும் வரும்
தாமிரபரணி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி இல்லை பக்கத்தூர்களின் பெயர்களைக் கேட்டாலே உடம்பெங்கும் பரவசம் பரவும் எனக்கு. இருக்காதா பின்ன? பிறந்து வளர்ந்து இருபது ஆண்டுகள் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமா? இதில் தாமிரபரணியின் சிறப்புகள் என்னவென்று முன்னால் ஒரு பதிவிலேயே (ஆறு) சொல்லிவிட்டேன். இதற்குமேலும் பிற ஜில்லாக்காரர்களின் பேரன்பை தாங்க முடியாது என்பதால் அதை விட்டுவிடுகிறேன். பொதிகை மலையில் உருவாகி பிரவாகமாக ஓடும் தாமிரபரணி பாபநாச மலயடிவாரத்தில் ஆரவாரமாக ஓடுவதைப் பார்ப்பதற்கு புண்ணியம் செய்திருக்கவேண்டும். இதில் தாமிரச் சத்து அதிகமிருப்பதால் இந்தப் பெயர் என்று ஒரு வழக்கும் உண்டு. தாமிரச் சத்து அதிகமாய் இருபதனால் இதில் குளித்தால் தோல் கொஞ்சம் கருக்கும் என்றும் நீச்சல் தெரியாத கூட்டம் சரடு விடும்.
இந்த வற்றாத ஜீவநதியின் தண்ணிரில் விழும் பொதிகை மலை அகத்தியர் அருவியும் ஜில்லாவில் மிகவும் பிரசித்தம். குற்றால அருவிகள் மாதிரி அகத்தியர் அருவிக்கு உயரம் கிடையாது. ஆனால் பொதிகை மலையில் நிறைந்திருக்கும் "சித்த வேர்களின்" குணங்களைத் தாங்கி வருவதால் இதில் குளித்தால் ஹெர்பல் பாத்துக்கு சமம் என்று சொல்லுவார்கள். உணமை தானா என்று மலைக்கு மேல் ஏறி அந்த சித்த வேர்களின் வாசத்தை முகர்ந்து பார்த்துவிடுவது என்று சோதிக்க கிளம்பி, வழியில் வழுக்கி விழுந்து வேறு ஏதோ ஒரு சித்த புருஷர் விட்டுச் சென்ற சாயம் போன அண்டர் வேரைப் பார்த்துவிட்டு வேரைப் பார்த்தது போதும் என்று நொண்டிக் கொண்டே திரும்பி வந்துவிட்டேன். அதிலிருந்து நானும் இதே மாதிரி சித்த வேர், பித்த தேர் என்று சங்கு ஊதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கப்புறம் அகத்தியர் அருவியில் உண்மையான சித்த வேர் சமாச்சாரம் இருக்கிறதா என்று நான் ரொம்ப ஆராய்ச்சி செய்யவில்லை. நான் வழுக்கிவிழுந்த இடத்துக்கு மேலே காட்டில் இருக்கலாம்...நக்கல் விட்டாலும் இந்த அருவில் குளித்தால் புத்துணர்ச்சியாய் இருக்கும். அருவியிலிருந்து வெளியே வரவே மனசு வராது.
ஓவ்வொரு ஊர் தண்ணிக்கும் ஒரு பெருமை இருக்கு என்று அந்தந்த ஊர்காரர்கள் மார்தட்டிக் கொள்வது மாதிரி எங்க ஊர் தண்ணியக் குடிச்சா வீரம் வரும் என்று சீவலப்பேரி பாண்டியில் நெப்போலிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். எல்லா ஊர் தண்ணிக்கும் இந்த மாதிரி "இந்தத் தண்ணியக் குடிச்சா வீரம் வரும். ஞானம் வரும், குசும்பு வரும்" என்று உசுப்பேத்துற வசனங்கள் நிறைய இருக்கும். விஜய்குமார் தாலி, தாய் மாமா, சீர் பெருமைகளை பேசாத சமயத்தில் இந்த மாதிரி ட்யலாக் நிறைய பேசுவார். விஜய்காந்தும் நிறைய படங்களில் பேசியிருக்கிறார். நானும் இவர்களையெல்லாம் நம்பி, ஊறவைத்த கொண்டக் கடலையை மென்று, கர்லா கட்டையை சுத்தி எக்சர்சைஸ் செய்து ப்ரொபைல் ஏத்தி, நிறைய தண்ணி குடித்திருக்கிறேன். வீரம் வந்ததா தெரியாது ஆனால் நிறைய தண்ணி குடித்ததின் பலனாக அன்றெல்லாம் வேறொன்று நிறைய வந்தது.
ஆண்டாளுக்கு மார்கழி மாதிரி எங்களுக்கு ஏப்ரல் மே, ஜூன். காலை ஆறு மணிக்கே "நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்" என்று கிளம்பி விடுவோம். ஆறு மணிக்கு கிளம்பி ஆறேமுக்கால் வரை குற்றாலத் துண்டு, சோப்புப் பெட்டி சகிதமாக தெரு முக்கில் வானரப் படையுடன் ஒரு அரட்டையைப் போடுவது, ஏப்ரல் மே சூடுக்கு காலை குளிர்ந்த நீரில் கால் வைக்கும் போது ஏற்படும் ஜில்லிப்பு இவற்றின் சுகமே தனி. நான் சொல்லும் இந்த ஆற்றங்கரையை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். புது நெல்லு புது நாத்து, ஜென்டில்மேன், டும் டும் டும், சாமி மற்றும் இன்ன பிற நாற்பது சொச்ச படஙகளில் விஸ்தீரணமாக காட்டிவிட்டார்கள்.திவ்ய பாரதி, பானுப் ப்ரியா, த்ரிஷா போன்றோர் நீராடிய புண்ய ஸ்தலம்.
மலையடிவாரத்தில் பச்சைப் பசேலென்று வயல் சூழ இருபக்கமும் ஆலமரம் தழைத்து வளர்ந்து, ஜிலு ஜிலுவென்று காற்றில் ஆற்றங்கரைக்கு போகும் பாதையே ரொம்ப ரம்மியமாக இருக்கும். டும் டும் டும்-ல் விவேக் அன்ட் கோ மாதவன் கல்யாணத்திற்கு பஸ்ஸிலிருந்து வந்திறங்குமே அந்தப் பாதை தான் இது. முதல்வனில் அர்ஜுன் மாறுவேஷத்தில் மணிஷா மாமியைப் பார்க்கப் போகும் போது பூ வாங்குவாரே அதே பாதை தான் இது. ஜலக்கிரீடை செய்யப் புறப்படும் குரங்குகளின் அட்டகாசம் இந்தப் பாதையில் காலடி எடுத்து வைத்தவுடனேயே ஆரம்பமாகிவிடும்.
-இன்னும் வரும்
Wednesday, March 01, 2006
Alma மேட்டர் - 6
For previous parts --> part1   part2   part3   part4   part5
அது நட்பு இல்லை ஆனால் அதை என்னவென்று சொல்லுவது. நீல கலர் சாயம் போட்டு, ஆனும் பெண்ணும் சில்க் ஜிப்பா அணிந்து வீட்டுக்கு நீல நிற பெயிண்ட் அடித்து "மயிலிறகே மயிலிறகே" என்று பாட்டுப் பாடும் காதல் இல்லை. வயசுக் கோளாறு. ஆனால் காமம் தெரியாத வயது அது. காமம் கலக்காத இன்பாக்ஷுவேஷன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு இந்த வயதில் சிலபேரை பிடிக்கும். எனக்கு அவளைப் பிடித்திருந்தது. ஜில்லை அல்ல "அவளை". இருந்தாலும் அவளிடம் ரொம்ப பேசமாட்டேன். ஜில்லிடம் தான் பேசுவேன். சொல்லுகிற ஜோக்கெல்லாம் இவளுக்காகத் தான் என்றாலும் ஜில்லிடம் தான் சொல்லுவேன். இவளும் சேர்ந்து சிரிப்பாள். சினேகமாக சிரிப்பாள். நானும் பதிலுக்கு சிரிப்பேன் (=வழிவேன்). பஸ்ஸில் அவர்களும் நாங்களும் எதிர் எதிர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஜாலியாக கலாய்த்துக் கொள்வோம். எங்கள் ஸ்கூல் ஜூனியர் ஸ்கூல், சீனியர் ஸ்கூல் என்று ரெண்டு பில்டிங்கில் இருந்தது. ரெண்டும் வெவ்வேறு இடங்களில் இருந்தது. பஸ் 'ஜூனியர் ஸ்கூல்' பக்கத்தில் ஒரு சாராயக் கடை பக்கத்தில் ஒரு ஸ்டாப்பில் நிற்கும். அங்கே ஒரு வடைக் கடை உண்டு. அந்தக் கடையில் எல்லோரும் வடை வாங்குவார்கள். அவள் எங்களுக்கு அடிக்கடி வடை வாங்கித் கொடுப்பாள். நானும் வீட்டிலிருந்து என்னுடைய உண்டியலில் இருந்து அடிக்கடி லவட்டி வந்து வடை வழங்கும் வள்ளலாவேன்.
நாளொரு ஸ்டாப்பும் பொழுதொரு வடையுமாய் போய்க்கொண்டிருந்த பஸ் வாழ்கையில் ஒரு நாள் ஜூனியர் பையன் ஒருத்தன் எங்களுக்கு முன்னாடி வந்து நாங்கள் உட்காரும் இடத்தில் வந்து டேரா போட்டு விட்டான். ஜில்லு சும்மா இருக்காமல் வெறுப்பேத்த என்னுடைய தளபதிக்கு பொறுக்காமல் அந்தப் பையனை சண்டைக்கு இழுத்துவிட்டான். அந்தப் பையன் ஒரு வருஷம் தான் ஜூனியர். பையன் ரொம்ப சூட்டிப்பு வேறு. தளபதிக்கு நல்ல முறைவாசல் மரியாதை நடந்தது. ஜில்லு சும்மாயிராமல் என்னையும் வம்பில் மாட்டிவிட்டு விட்டது. தேமேன்னு உட்கார்ந்திருவனுக்கு அவள் பார்க்கிறாளே என்று இல்லாத ரோஷமெல்லாம் வந்து சிலிர்த்து எழுந்து தளபதியும் நானும் சேர்ந்து அந்தப் பையனை பொளந்து கட்டி விட்டோம். அந்தப் பையன் ராஜ்கிரண் வம்சத்து வீரப் பரம்பரை போல, ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களாடான்னு சவால் விட, பதிலுக்கு நானும் எப்பவேனா எங்கவேணா வரேன் ஆனா இப்போ பஸ்ல இவங்க முன்னாடி வேண்டாம் ரத்த பூமியாயிடுமென்று சொல்லிவிட்டு அவனுக்கு முந்தின ஸ்டாப்பிலேயே இறங்கி வீட்டுக்குப் போய்விட்டேன். அந்தப் பையன் வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தது. கடைக்குப் போகும் போது மீண்டும் ரணகளமாகிவிடக் கூடாதே என்று சுத்தித் தான் போவேன். அந்தப் பையன் அடுத்த நாள் ஸ்கூலுக்கு வரவில்லை. அடுத்த நாள் அந்தப் பையனின் அண்ணன் நாலு பேரோடு எங்கள் தெருவிற்கு வந்து இங்க டுப்புக்கு யாருடான்னு என்னிடமே கேட்டான். "டுபுக்கு என்னும் மகாவீரன் இங்க தான் இருக்கான் நான் போய் கூட்டி வர்றேன்"னு கம்பி நீட்டி விட்டேன். அதற்கடுத்த நாள் அந்தப் பையன் தலையில் ஒரு ப்ளாஸ்திரியோடும் அவ அப்பாவோடும் வந்து ஸ்கூலில் பிரின்ஸ்பாலைப் பார்த்தான். பிரின்ஸ்பால் என்னையும் தளபதியையும் ப்யூனை விட்டு க்ளாசிலிருந்து கூப்பிட்டு காதைத் திருகி பிரம்பால் ஆளுக்குத் தலா இரண்டு அடியும் குடுத்தார். நான் பிரின்ஸ்பால் அருகில் நின்று கொண்டிருந்ததால் திரும்பிப் போகும் போது பிட்டத்தில் எனக்கு கூட ஒரு அடி கிடைத்தது. தளபதிக்கு அதில் ஒரு அல்ப சந்தோஷம்.
எல்லாம் முடிஞ்சுது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த போது பி.டி. வாத்தியார் கூப்பிட்டு அனுப்பினார். அந்தப் பையனுடைய அப்பா போகிற போக்கில் பி.டி. வத்தியார் தான் நல்லா தீர்ப்பு சொல்லுவார் என்று கொளுத்திப் போட்டுவிட்டு போய்விட்டார். இந்தமுறை உஷாராக நான் பி.டி.வாத்தியார் பக்கத்தில் நிற்காமல் தளபதிக்குப் பின்னால் போய்விட்டேன். பி.டி. வாத்தியார் கேள்விகளே கேட்காமல் மண்டகப்படியை ஆரம்பித்தார். தளபதிக்கு இரண்டும் எனக்கு ஒன்றும் கண்ணத்தில் நச்சென்று கிடைத்தது. அந்த சமயத்தில் ஸார் என்று யாரோ வந்து குரல் குடுக்க திரும்பினால் "அவள்". வாத்தியார் அடிச்சது முட்டியில் இடித்த சுகமாக இருந்தாலும் முகத்தில் வலியைக் காடிக்கொள்ளாமல் இறுக்கமாக வைத்துக் கொண்டேன். அடித்ததை ஒரு வேளை அவள் பார்த்திருப்பாளோ என்று குழம்பிக் கொண்டிருந்த போது, பாழாய்ப் போன வாத்தியார் வந்தவளுக்கு என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று கேட்க வேண்டாமோ? போகிற போக்கில் பின்னால் நின்று கொண்டிருந்த எனக்கு மானாவரியாக இன்னொரு அடி குடுத்துவிட்டு போனார்.
அவளும் நேரம் காலம் தெரியாமல் 'க்ளுக்' என்று எனக்கு மட்டும் கேட்குமாறு சிரித்தாள். வடை வாங்கிக் குடுத்ததுக்கு காட்டுகிற நன்றியா இது என்று நான் கோபத்தோடு முறைக்க அவள் டக்கென்று சிரிப்பதை நிறுத்திவிட்டாள்.
--தொடரும்
அது நட்பு இல்லை ஆனால் அதை என்னவென்று சொல்லுவது. நீல கலர் சாயம் போட்டு, ஆனும் பெண்ணும் சில்க் ஜிப்பா அணிந்து வீட்டுக்கு நீல நிற பெயிண்ட் அடித்து "மயிலிறகே மயிலிறகே" என்று பாட்டுப் பாடும் காதல் இல்லை. வயசுக் கோளாறு. ஆனால் காமம் தெரியாத வயது அது. காமம் கலக்காத இன்பாக்ஷுவேஷன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு இந்த வயதில் சிலபேரை பிடிக்கும். எனக்கு அவளைப் பிடித்திருந்தது. ஜில்லை அல்ல "அவளை". இருந்தாலும் அவளிடம் ரொம்ப பேசமாட்டேன். ஜில்லிடம் தான் பேசுவேன். சொல்லுகிற ஜோக்கெல்லாம் இவளுக்காகத் தான் என்றாலும் ஜில்லிடம் தான் சொல்லுவேன். இவளும் சேர்ந்து சிரிப்பாள். சினேகமாக சிரிப்பாள். நானும் பதிலுக்கு சிரிப்பேன் (=வழிவேன்). பஸ்ஸில் அவர்களும் நாங்களும் எதிர் எதிர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஜாலியாக கலாய்த்துக் கொள்வோம். எங்கள் ஸ்கூல் ஜூனியர் ஸ்கூல், சீனியர் ஸ்கூல் என்று ரெண்டு பில்டிங்கில் இருந்தது. ரெண்டும் வெவ்வேறு இடங்களில் இருந்தது. பஸ் 'ஜூனியர் ஸ்கூல்' பக்கத்தில் ஒரு சாராயக் கடை பக்கத்தில் ஒரு ஸ்டாப்பில் நிற்கும். அங்கே ஒரு வடைக் கடை உண்டு. அந்தக் கடையில் எல்லோரும் வடை வாங்குவார்கள். அவள் எங்களுக்கு அடிக்கடி வடை வாங்கித் கொடுப்பாள். நானும் வீட்டிலிருந்து என்னுடைய உண்டியலில் இருந்து அடிக்கடி லவட்டி வந்து வடை வழங்கும் வள்ளலாவேன்.
நாளொரு ஸ்டாப்பும் பொழுதொரு வடையுமாய் போய்க்கொண்டிருந்த பஸ் வாழ்கையில் ஒரு நாள் ஜூனியர் பையன் ஒருத்தன் எங்களுக்கு முன்னாடி வந்து நாங்கள் உட்காரும் இடத்தில் வந்து டேரா போட்டு விட்டான். ஜில்லு சும்மா இருக்காமல் வெறுப்பேத்த என்னுடைய தளபதிக்கு பொறுக்காமல் அந்தப் பையனை சண்டைக்கு இழுத்துவிட்டான். அந்தப் பையன் ஒரு வருஷம் தான் ஜூனியர். பையன் ரொம்ப சூட்டிப்பு வேறு. தளபதிக்கு நல்ல முறைவாசல் மரியாதை நடந்தது. ஜில்லு சும்மாயிராமல் என்னையும் வம்பில் மாட்டிவிட்டு விட்டது. தேமேன்னு உட்கார்ந்திருவனுக்கு அவள் பார்க்கிறாளே என்று இல்லாத ரோஷமெல்லாம் வந்து சிலிர்த்து எழுந்து தளபதியும் நானும் சேர்ந்து அந்தப் பையனை பொளந்து கட்டி விட்டோம். அந்தப் பையன் ராஜ்கிரண் வம்சத்து வீரப் பரம்பரை போல, ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களாடான்னு சவால் விட, பதிலுக்கு நானும் எப்பவேனா எங்கவேணா வரேன் ஆனா இப்போ பஸ்ல இவங்க முன்னாடி வேண்டாம் ரத்த பூமியாயிடுமென்று சொல்லிவிட்டு அவனுக்கு முந்தின ஸ்டாப்பிலேயே இறங்கி வீட்டுக்குப் போய்விட்டேன். அந்தப் பையன் வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தது. கடைக்குப் போகும் போது மீண்டும் ரணகளமாகிவிடக் கூடாதே என்று சுத்தித் தான் போவேன். அந்தப் பையன் அடுத்த நாள் ஸ்கூலுக்கு வரவில்லை. அடுத்த நாள் அந்தப் பையனின் அண்ணன் நாலு பேரோடு எங்கள் தெருவிற்கு வந்து இங்க டுப்புக்கு யாருடான்னு என்னிடமே கேட்டான். "டுபுக்கு என்னும் மகாவீரன் இங்க தான் இருக்கான் நான் போய் கூட்டி வர்றேன்"னு கம்பி நீட்டி விட்டேன். அதற்கடுத்த நாள் அந்தப் பையன் தலையில் ஒரு ப்ளாஸ்திரியோடும் அவ அப்பாவோடும் வந்து ஸ்கூலில் பிரின்ஸ்பாலைப் பார்த்தான். பிரின்ஸ்பால் என்னையும் தளபதியையும் ப்யூனை விட்டு க்ளாசிலிருந்து கூப்பிட்டு காதைத் திருகி பிரம்பால் ஆளுக்குத் தலா இரண்டு அடியும் குடுத்தார். நான் பிரின்ஸ்பால் அருகில் நின்று கொண்டிருந்ததால் திரும்பிப் போகும் போது பிட்டத்தில் எனக்கு கூட ஒரு அடி கிடைத்தது. தளபதிக்கு அதில் ஒரு அல்ப சந்தோஷம்.
எல்லாம் முடிஞ்சுது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த போது பி.டி. வாத்தியார் கூப்பிட்டு அனுப்பினார். அந்தப் பையனுடைய அப்பா போகிற போக்கில் பி.டி. வத்தியார் தான் நல்லா தீர்ப்பு சொல்லுவார் என்று கொளுத்திப் போட்டுவிட்டு போய்விட்டார். இந்தமுறை உஷாராக நான் பி.டி.வாத்தியார் பக்கத்தில் நிற்காமல் தளபதிக்குப் பின்னால் போய்விட்டேன். பி.டி. வாத்தியார் கேள்விகளே கேட்காமல் மண்டகப்படியை ஆரம்பித்தார். தளபதிக்கு இரண்டும் எனக்கு ஒன்றும் கண்ணத்தில் நச்சென்று கிடைத்தது. அந்த சமயத்தில் ஸார் என்று யாரோ வந்து குரல் குடுக்க திரும்பினால் "அவள்". வாத்தியார் அடிச்சது முட்டியில் இடித்த சுகமாக இருந்தாலும் முகத்தில் வலியைக் காடிக்கொள்ளாமல் இறுக்கமாக வைத்துக் கொண்டேன். அடித்ததை ஒரு வேளை அவள் பார்த்திருப்பாளோ என்று குழம்பிக் கொண்டிருந்த போது, பாழாய்ப் போன வாத்தியார் வந்தவளுக்கு என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று கேட்க வேண்டாமோ? போகிற போக்கில் பின்னால் நின்று கொண்டிருந்த எனக்கு மானாவரியாக இன்னொரு அடி குடுத்துவிட்டு போனார்.
அவளும் நேரம் காலம் தெரியாமல் 'க்ளுக்' என்று எனக்கு மட்டும் கேட்குமாறு சிரித்தாள். வடை வாங்கிக் குடுத்ததுக்கு காட்டுகிற நன்றியா இது என்று நான் கோபத்தோடு முறைக்க அவள் டக்கென்று சிரிப்பதை நிறுத்திவிட்டாள்.
--தொடரும்
Friday, February 17, 2006
டீ.வி
வழக்கம் போல் முந்தாநாள் ஆபிஸில் வேலை செய்து ப்ளாகி களைத்து வீட்டுக்குள் நுழைந்த போது கோலங்களில் வழக்கம் போல் அபி அழாமல், அபியின் மாமனார் அழுது கொண்டிருந்தார். (இப்போவெல்லாம் சீரியலில் ஆண்களும் அழ ஆரம்பித்து இருக்கிறார்கள்). அவர் அழ ஆரம்பித்த முஹூர்த்தம் எங்கள் வீட்டு டீ.வி எல்லாவற்றையும் பச்சை பச்சையாக காட்ட ஆரம்பித்தது. அந்த கால ஈஸ்ட்மென்ட் கலரில் பார்ப்பது மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்தில் சொட்டு நீலம் போட்டது மாதிரி நீல கலருக்கு மாறியது. அப்புறம் கொஞ்ச நேரம் சிகப்பு கலர் சிங்கிச்சா..அப்புறம் திரும்பவும் பச்சை. அப்புறம் நான் எதோ டி.வி.யில் கையை வைக்க ஊமையாகி விட்டது.
அதோட சும்மா இருந்திருக்கமாட்டேனோ...ஒன்றரையணாவுக்கு வாங்கிய ஸ்குரூ ட்ரைவர் உபயோகமே இல்லாமல் இருக்கிறதே என்று எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். அரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்துவிட்டேன். என் மூத்த மகளுக்கு ஒரே ஆச்சரியம். "டாடி டிட் யூ டூ இட் அலோன்?" அவ அப்பா இதனையும் பிரித்துப் போட்டேன் என்று அவளுக்குப் பெருமை. எங்கம்மாவும் இப்படித் தான். ஊரில் ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தினாலே "எம் பையன் பெரிய இன்ஞ்சினியரா வரவேண்டியவன் " என்று பெருமிதம் குரலிலேயே தெரியும். இரண்டாவது பெண்ணுக்கு அவளுக்குப் போட்டியா நான் வீடெல்லாம் குப்பையாக்கி இருக்கிறேனே என்று குழப்பம்.
"செல்விக்கு ஆரம்பிக்கப் போறான் சீக்கிரம்" மேலிடத்துப் பிரஷர் வேற.
"இரும்மா என்ன பிரச்சனைன்னு பார்க்கட்டும் " - உண்மையிலேயே பழைய பாடாவதி டீ.வி. என்பதால் சும்மா ஒரு குருட்டுத் தைரியத்தில் பிரித்துப் போட்டுவிட்டேன். எதாவது ஒயர் அறுந்து இருந்தால் முறுக்கி விடலாம் என்று பார்த்தால் அந்த மாதிரி எதையும் காணோம்.
"அனேகமா பி.சி.பில எதாவது பிரச்சனையா இருக்கும்ன்னு நினைக்கறேன்" - சும்மா ஜார்கனெல்லாம் போட்டு உண்மையிலேயே உள்ளே தூசி அடித்துக் கொண்டிருந்தேன்.
மகளும் சேர்ந்து கொண்டாள்.
"அப்பா இதென்னப்பா?..."
"அதாண்டா கபாஸிட்டர், இது ட்ரான்ஸிஸ்டர்"
"நீங்க படம் போட்டது போறும் டீ.விய மாட்டி போடுங்கோ அதுல எதாவது பார்கலாம்"
"இரு..குழந்தை கேக்கறா நாளைக்குப் பெரிய இன்ஞ்சினியரா வருவா"
"அதனால தான் சொல்லறேன் நீங்க சொல்லிக்குடுக்காதீங்கோ...தூசியடிச்சது போதும் திரும்ப மாட்டி ஆன் பண்ணுங்கோ.."
மாட்டிப் போட்டால்....தெளிவாக வெத்து ஸ்கிரீன் தான் தெரிந்தது.
"செல்வி ஊமைப் படமாகவாவ்து பார்த்திருப்பேன்...இப்படி டீ.விய உடச்சுட்டேளே..."
"என்னது நானா..." திரும்ப கழட்டி மாட்டியதில் கொஞ்சம் விட்டு விட்டு தெரிந்தது. அப்புறம் தான் உரைத்தது...பிரச்சனை ஸ்கார்ட் சாக்கெட்டில்(ஏரியல் சாக்கெட் மாதிரி ஐரோப்பாவில் இது தான் ஸடாண்டேர்ட்) இருக்கலாம் என்று.
அப்புறம் அதை வி.சியாரில் குடுத்து வி.சி.ஆரிலிருந்து நார்மல் ஏரியல் சாக்கெட்டில் போட்டால் படம் தெளிவாக ப்ளாக் அண்ட் ஒயிட்டில் தெரிந்தது.
"கலர் டீ.விய ப்ளாக் அண்ட் ஒயிட் டீ.வியா மாத்தறதுக்கும் ஒரு திறமை வேண்டும் அது உங்க கிட்ட தான் இருக்கு" என்று ஒரே புகழாரம் தான் அப்புறம்.
"எல்லாம் இந்த ஸ்க்ரூ டிரைவர்னால தான்...ஒத்த ரூபாய்க்கு வாங்கினா இப்படித் தான் இருக்கும். அடுத்த தரம் பி அண்ட் க்யூவில நல்லதா வாங்கணும்"
இப்போதைக்கு பிரச்சனை தக தக தக தங்கவேட்டை ரம்யாகிருஷ்ணனின் புடவைக் கலரை பார்க்க முடியாதே என்று வந்து நிற்கிறது. வீகெண்டில் டி.வீ வாங்க போகனும்.
இன்றைக்கு ஹாரி பாட்டர், கிங்காங், நார்னியா, வார் ஆப் த வேல்ட்ஸ் என்று கலக்கலாக பத்து டி.வி.டிகளை ...ஆபிஸில் மேனேஜர் கொடுத்திருக்கிறார் (பொய்யில்லை எல்லாம் க்ரிஸ்டல் க்ளியர் டி.வி.டி நல்ல பிரிண்டாம்)
கொட்டும் மழைக் காலம் உப்பு விக்கப் போனேன்...காற்றடிக்கும் நேரம்......
அதோட சும்மா இருந்திருக்கமாட்டேனோ...ஒன்றரையணாவுக்கு வாங்கிய ஸ்குரூ ட்ரைவர் உபயோகமே இல்லாமல் இருக்கிறதே என்று எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். அரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்துவிட்டேன். என் மூத்த மகளுக்கு ஒரே ஆச்சரியம். "டாடி டிட் யூ டூ இட் அலோன்?" அவ அப்பா இதனையும் பிரித்துப் போட்டேன் என்று அவளுக்குப் பெருமை. எங்கம்மாவும் இப்படித் தான். ஊரில் ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தினாலே "எம் பையன் பெரிய இன்ஞ்சினியரா வரவேண்டியவன் " என்று பெருமிதம் குரலிலேயே தெரியும். இரண்டாவது பெண்ணுக்கு அவளுக்குப் போட்டியா நான் வீடெல்லாம் குப்பையாக்கி இருக்கிறேனே என்று குழப்பம்.
"செல்விக்கு ஆரம்பிக்கப் போறான் சீக்கிரம்" மேலிடத்துப் பிரஷர் வேற.
"இரும்மா என்ன பிரச்சனைன்னு பார்க்கட்டும் " - உண்மையிலேயே பழைய பாடாவதி டீ.வி. என்பதால் சும்மா ஒரு குருட்டுத் தைரியத்தில் பிரித்துப் போட்டுவிட்டேன். எதாவது ஒயர் அறுந்து இருந்தால் முறுக்கி விடலாம் என்று பார்த்தால் அந்த மாதிரி எதையும் காணோம்.
"அனேகமா பி.சி.பில எதாவது பிரச்சனையா இருக்கும்ன்னு நினைக்கறேன்" - சும்மா ஜார்கனெல்லாம் போட்டு உண்மையிலேயே உள்ளே தூசி அடித்துக் கொண்டிருந்தேன்.
மகளும் சேர்ந்து கொண்டாள்.
"அப்பா இதென்னப்பா?..."
"அதாண்டா கபாஸிட்டர், இது ட்ரான்ஸிஸ்டர்"
"நீங்க படம் போட்டது போறும் டீ.விய மாட்டி போடுங்கோ அதுல எதாவது பார்கலாம்"
"இரு..குழந்தை கேக்கறா நாளைக்குப் பெரிய இன்ஞ்சினியரா வருவா"
"அதனால தான் சொல்லறேன் நீங்க சொல்லிக்குடுக்காதீங்கோ...தூசியடிச்சது போதும் திரும்ப மாட்டி ஆன் பண்ணுங்கோ.."
மாட்டிப் போட்டால்....தெளிவாக வெத்து ஸ்கிரீன் தான் தெரிந்தது.
"செல்வி ஊமைப் படமாகவாவ்து பார்த்திருப்பேன்...இப்படி டீ.விய உடச்சுட்டேளே..."
"என்னது நானா..." திரும்ப கழட்டி மாட்டியதில் கொஞ்சம் விட்டு விட்டு தெரிந்தது. அப்புறம் தான் உரைத்தது...பிரச்சனை ஸ்கார்ட் சாக்கெட்டில்(ஏரியல் சாக்கெட் மாதிரி ஐரோப்பாவில் இது தான் ஸடாண்டேர்ட்) இருக்கலாம் என்று.
அப்புறம் அதை வி.சியாரில் குடுத்து வி.சி.ஆரிலிருந்து நார்மல் ஏரியல் சாக்கெட்டில் போட்டால் படம் தெளிவாக ப்ளாக் அண்ட் ஒயிட்டில் தெரிந்தது.
"கலர் டீ.விய ப்ளாக் அண்ட் ஒயிட் டீ.வியா மாத்தறதுக்கும் ஒரு திறமை வேண்டும் அது உங்க கிட்ட தான் இருக்கு" என்று ஒரே புகழாரம் தான் அப்புறம்.
"எல்லாம் இந்த ஸ்க்ரூ டிரைவர்னால தான்...ஒத்த ரூபாய்க்கு வாங்கினா இப்படித் தான் இருக்கும். அடுத்த தரம் பி அண்ட் க்யூவில நல்லதா வாங்கணும்"
இப்போதைக்கு பிரச்சனை தக தக தக தங்கவேட்டை ரம்யாகிருஷ்ணனின் புடவைக் கலரை பார்க்க முடியாதே என்று வந்து நிற்கிறது. வீகெண்டில் டி.வீ வாங்க போகனும்.
இன்றைக்கு ஹாரி பாட்டர், கிங்காங், நார்னியா, வார் ஆப் த வேல்ட்ஸ் என்று கலக்கலாக பத்து டி.வி.டிகளை ...ஆபிஸில் மேனேஜர் கொடுத்திருக்கிறார் (பொய்யில்லை எல்லாம் க்ரிஸ்டல் க்ளியர் டி.வி.டி நல்ல பிரிண்டாம்)
கொட்டும் மழைக் காலம் உப்பு விக்கப் போனேன்...காற்றடிக்கும் நேரம்......
Monday, February 06, 2006
Alma மேட்டர் - 5
For previous parts --> part1   part2   part3   part4
இந்த பதிவு நீளம் சற்று அதிகமாகி விட்டது ஆயிரம் வார்த்தைகளுக்கு மேலாகி விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் ( A picuture is worth a thousand words இல்லையா? :P)

இது நான் அனேகமாக ஒன்றாவதோ ரெண்டாவதோ படிக்கும் போது எடுத்த புகைப்படம். இந்தப் படத்தை காட்டி என்னைக் கண்டுபிடி என்று சொன்ன கொஞ்ச நேரத்திலேயே என் மனைவி என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.
"அம்மாடி பரவால்லயே புருஷனை அப்பிடியே கண்ணுக்குள்ளையே வைச்சிருக்கியே... கலக்குறியேம்மா"ன்னு நான் சிவாஜி ஃபீலிங்க் காட்டுவதற்குள் 'எப்பிடி கண்டு பிடித்தேன்' என்று காரணம் சொன்னார் பாருங்கள். நொந்து நூடுல்ஸாகி அதெல்லாம் எதுக்கு...பொழுது போகாம நீங்களும் போட்டிக் கோட்டிப் ப்ரியர்களாகி இருந்தால் கண்டுபிடிங்க பார்ப்போம்...ரெபரென்ஸ்க்கு என்னுடைய குருதிப் புனல் கெட்டப் போட்டோவை வேண்டுமானால் பிட் அடித்துக் கொள்ளுங்கள்.
(குட்டிப் பையனாய் இருந்த போது நான் சோ..ச்சுவீட்...ன்னு யாராவது சொல்லுங்கப்பு...தக தக தங்கவேட்டையில அம்பது கிராம் போட்டுத் தரச் சொல்லறேன்...ஹூம் வூட்டுல லொள்ளு தாங்கலப்பு)
பி.கு. என்னுடைய குருதிப் புனல் போட்டோவைப் பார்த்துப் பாராட்டி லண்டனில் சினிமாவில் நடிக்க அழைப்பு கொடுத்த சிறுமி அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். நல்ல படமா பார்த்துப் போட்டுக் குடுங்கம்மா!
இந்த பதிவு நீளம் சற்று அதிகமாகி விட்டது ஆயிரம் வார்த்தைகளுக்கு மேலாகி விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் ( A picuture is worth a thousand words இல்லையா? :P)

இது நான் அனேகமாக ஒன்றாவதோ ரெண்டாவதோ படிக்கும் போது எடுத்த புகைப்படம். இந்தப் படத்தை காட்டி என்னைக் கண்டுபிடி என்று சொன்ன கொஞ்ச நேரத்திலேயே என் மனைவி என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.
"அம்மாடி பரவால்லயே புருஷனை அப்பிடியே கண்ணுக்குள்ளையே வைச்சிருக்கியே... கலக்குறியேம்மா"ன்னு நான் சிவாஜி ஃபீலிங்க் காட்டுவதற்குள் 'எப்பிடி கண்டு பிடித்தேன்' என்று காரணம் சொன்னார் பாருங்கள். நொந்து நூடுல்ஸாகி அதெல்லாம் எதுக்கு...பொழுது போகாம நீங்களும் போட்டிக் கோட்டிப் ப்ரியர்களாகி இருந்தால் கண்டுபிடிங்க பார்ப்போம்...ரெபரென்ஸ்க்கு என்னுடைய குருதிப் புனல் கெட்டப் போட்டோவை வேண்டுமானால் பிட் அடித்துக் கொள்ளுங்கள்.
(குட்டிப் பையனாய் இருந்த போது நான் சோ..ச்சுவீட்...ன்னு யாராவது சொல்லுங்கப்பு...தக தக தங்கவேட்டையில அம்பது கிராம் போட்டுத் தரச் சொல்லறேன்...ஹூம் வூட்டுல லொள்ளு தாங்கலப்பு)
பி.கு. என்னுடைய குருதிப் புனல் போட்டோவைப் பார்த்துப் பாராட்டி லண்டனில் சினிமாவில் நடிக்க அழைப்பு கொடுத்த சிறுமி அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். நல்ல படமா பார்த்துப் போட்டுக் குடுங்கம்மா!
Wednesday, February 01, 2006
Alma மேட்டர் - 4
For previous parts --> part1   part2   part3
முதலில் கொஞ்ச நாட்களுக்கு நாங்கள் மட்டும் பஸ்ஸில் வருதற்கு ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. அப்புறம் பழகிவிட்டது. அந்த மூன்று சீனியரில் ஒரு பெண் எனக்கு முந்திய ஊரிலிருந்து வருவாள். அவள் அணிந்திருக்கும் கொலுசில் வழக்கத்தை விட கூட கொஞ்சம் சலங்கைகள் இருக்கும். நடனம் வேறு பயின்றிருந்ததால் ஜில் ஜில் என்று நடையே கொஞ்சம் ஒய்யாரமாகத் தான் இருக்கும். அதனாலேயே சீனியர் பசங்கள் அவளுக்கு "ஜில் ஜில் ரமாமணி" என்று நாமகரணம் சூட்டி "ஜில்லு" என்று செல்லமாக வழங்கப் பட்டு வந்தாள். இரண்டாவது பெண் எனக்கு அடுத்த ஸ்டாப்பில் ஏறுவாள். இந்தப் பெண் எனக்கு எந்த முன்னறிவிப்பும் குடுக்காமல் திடீரென்று நடுவில் இருந்து ஒரு நாள் பஸ்ஸில் வர ஆரம்பித்ததால் கொஞ்ச நாளைக்கு நான் கவனிக்கவே இல்லை. மூன்றாவது பெண் அவ்வப்போது தான் பஸ்ஸில் வருவாள். நான் சொல்லப் போகும் கதைக்கு அவ்வளவு முக்கியம் அல்ல அதனால் அவளை விட்டுவிடுவோம்.
ஏற்கனவே நானும் என் நண்பனும் ரொம்ப சமத்து..இதில் இருப்பதிலேயே(பையன்களில்) சீனியர் வேற.. கேட்கவா வேண்டும்? சமத்து பஸ்ஸெல்லாம் ஆறாக பெருக்கெடுத்து ஓடும். போகிற நண்டு சிண்டுகளையெல்லாம் ரவுசு கட்டிக் கொண்டு இருப்போம். திருவிளையாடல் முருகன் மாதிரி பஸ்ஸில் எங்களுக்கு என்று ஒரு தனி இடம், ஜால்ரா போட நாலு ஜூனியர் பையன்கள் என்று ஜமாய்த்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் நாங்கள் உட்காரும் இடத்தில் ஜில்லு நான் மேலே சொன்ன ரெண்டாவது உருப்படியை சேர்த்துக் கொண்டு உட்கார்ந்து விட்டது. எனக்கு உண்மையிலேயே ரொம்ப கோபம். ஆனால் 'ஜில்லு'வின் வாய் துடுக்குக்கும் தைரியமும் ஸ்கூல் அறிந்தது. அதனால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் என் நண்பன் இருக்கானே அவன் உன்மையிலேயே தளபதி. "போய் அடிடா" என்றால் அடித்துவிடுவான். அதற்கப்புறம் பிரின்ஸிபாலிடம் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன் என்றால் அங்கேயே மூச்சா போய்விட்டு "காய்ச்சல்" என்று மூன்று நாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிடுவான். நண்பனின் உளறல்களும் எங்கள் க்ளாஸில் பிரசித்தம். இருந்தாலும் அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஜில்லுவிடம் வீரவேசமாக சண்டை போட்டு விட்டு வந்தேன். ஜில்லு அதற்கெல்லாம் அசரவில்லை. அசால்டாக எங்களை சமாளித்து போய்ட்டு வாங்கடா என்று பெப்பே காட்டிவிட்டாள். அதனால் நாங்களே அவர்களுக்குப் பெருந்தன்மையாக அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு வேறு இடத்திற்கு குடித்தனத்தை மாத்திவிட்டோம்.
வந்ததுக்கப்புறம் தான் நண்பன் மெதுவாக கேட்டான்.."டேய் அவளப் பார்த்தியா?"
"யார ஜில்லயா?"
"இல்லடா அவ பக்கத்தில புதுசா "
கூச்சமே படாமல் திரும்பிப் பார்த்தேன். அழகாய் இருந்தாள். "இது யாருடா புதுசா? "
"டேய் நான் அவள சைட் அடிக்கப் போறேன்டா.." நண்பன் காவிரியைத் திறந்துவிட்ட மாதிரி சத்தம் போட்டு உளற ஆரம்பித்தான். "சைட்" என்ற வார்த்தை அந்த வருடம் தான் எங்களுக்குப் பரிச்சயம். அந்த வயதில் அது கெட்ட வார்த்தை மாதிரி. மெதுவாக சொல்லிப் பார்த்துக் கொள்வோம், கிளுகிளுப்பாக இருக்கும். "என்னடா இன்னிக்கு சைட் அடிச்சியா" என்று ஒருவருக்கொருவர் பெருமையாக விசாரித்துக் கொள்வோம். முக்கல்வாசி பேருக்கு விவரம் தெரியாமல் வீம்புக்காக சொல்லவேண்டுமே என்று சைட் அடிப்பதாக சொல்லுவார்கள். சில பேர் "சே சே...நான் இல்லைப்பா" என்று நல்ல பையன்களாகப் படம் போடுவார்கள். "சைட்" என்ற இந்த வார்த்தையை உபயோகப் படுத்துவதில் அந்த வயதில் என்னவோ அப்பிடி ஒரு ஆனந்தம்.
"டேய் என்னடா சொல்லற...?"
"ஆமாண்டா நான் அந்த பெண்ணை சைட் அடிக்கலாம்ன்னு இருக்கேன்..."
"உண்மையாவா?...சரி என்னம்மோ பண்ணிக்கோ..."
நான் திரும்பவும் அந்தப் பெண்ணைப் பார்த்த போது என்னை அவள் குறு குறுவென்று பார்த்துக் கொண்டிருந்த மாதிரி எனக்கு தோன்றியது. லேசாக சிரித்தாள்.
அப்புறம் ஸ்கூல் பஸ் பயணம் எங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாகிவிட்டது. அப்பிடியே எட்டாவதிலிருந்து ஒன்பதாவது வந்துவிட்டோம் ஆனாலும் பஸ்ஸில் தான் வந்து கொண்டிருந்தோம். வீட்டில் சைக்கிள் எல்லாம் கேட்டு அடம் பிடிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஜில்லும் 'அவளும்' சிரித்துப் பேசும் அளவுக்கு நல்ல பழக்கமாகிவிட்டார்கள்.
-தொடரும்
முதலில் கொஞ்ச நாட்களுக்கு நாங்கள் மட்டும் பஸ்ஸில் வருதற்கு ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. அப்புறம் பழகிவிட்டது. அந்த மூன்று சீனியரில் ஒரு பெண் எனக்கு முந்திய ஊரிலிருந்து வருவாள். அவள் அணிந்திருக்கும் கொலுசில் வழக்கத்தை விட கூட கொஞ்சம் சலங்கைகள் இருக்கும். நடனம் வேறு பயின்றிருந்ததால் ஜில் ஜில் என்று நடையே கொஞ்சம் ஒய்யாரமாகத் தான் இருக்கும். அதனாலேயே சீனியர் பசங்கள் அவளுக்கு "ஜில் ஜில் ரமாமணி" என்று நாமகரணம் சூட்டி "ஜில்லு" என்று செல்லமாக வழங்கப் பட்டு வந்தாள். இரண்டாவது பெண் எனக்கு அடுத்த ஸ்டாப்பில் ஏறுவாள். இந்தப் பெண் எனக்கு எந்த முன்னறிவிப்பும் குடுக்காமல் திடீரென்று நடுவில் இருந்து ஒரு நாள் பஸ்ஸில் வர ஆரம்பித்ததால் கொஞ்ச நாளைக்கு நான் கவனிக்கவே இல்லை. மூன்றாவது பெண் அவ்வப்போது தான் பஸ்ஸில் வருவாள். நான் சொல்லப் போகும் கதைக்கு அவ்வளவு முக்கியம் அல்ல அதனால் அவளை விட்டுவிடுவோம்.
ஏற்கனவே நானும் என் நண்பனும் ரொம்ப சமத்து..இதில் இருப்பதிலேயே(பையன்களில்) சீனியர் வேற.. கேட்கவா வேண்டும்? சமத்து பஸ்ஸெல்லாம் ஆறாக பெருக்கெடுத்து ஓடும். போகிற நண்டு சிண்டுகளையெல்லாம் ரவுசு கட்டிக் கொண்டு இருப்போம். திருவிளையாடல் முருகன் மாதிரி பஸ்ஸில் எங்களுக்கு என்று ஒரு தனி இடம், ஜால்ரா போட நாலு ஜூனியர் பையன்கள் என்று ஜமாய்த்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் நாங்கள் உட்காரும் இடத்தில் ஜில்லு நான் மேலே சொன்ன ரெண்டாவது உருப்படியை சேர்த்துக் கொண்டு உட்கார்ந்து விட்டது. எனக்கு உண்மையிலேயே ரொம்ப கோபம். ஆனால் 'ஜில்லு'வின் வாய் துடுக்குக்கும் தைரியமும் ஸ்கூல் அறிந்தது. அதனால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் என் நண்பன் இருக்கானே அவன் உன்மையிலேயே தளபதி. "போய் அடிடா" என்றால் அடித்துவிடுவான். அதற்கப்புறம் பிரின்ஸிபாலிடம் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன் என்றால் அங்கேயே மூச்சா போய்விட்டு "காய்ச்சல்" என்று மூன்று நாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிடுவான். நண்பனின் உளறல்களும் எங்கள் க்ளாஸில் பிரசித்தம். இருந்தாலும் அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஜில்லுவிடம் வீரவேசமாக சண்டை போட்டு விட்டு வந்தேன். ஜில்லு அதற்கெல்லாம் அசரவில்லை. அசால்டாக எங்களை சமாளித்து போய்ட்டு வாங்கடா என்று பெப்பே காட்டிவிட்டாள். அதனால் நாங்களே அவர்களுக்குப் பெருந்தன்மையாக அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு வேறு இடத்திற்கு குடித்தனத்தை மாத்திவிட்டோம்.
வந்ததுக்கப்புறம் தான் நண்பன் மெதுவாக கேட்டான்.."டேய் அவளப் பார்த்தியா?"
"யார ஜில்லயா?"
"இல்லடா அவ பக்கத்தில புதுசா "
கூச்சமே படாமல் திரும்பிப் பார்த்தேன். அழகாய் இருந்தாள். "இது யாருடா புதுசா? "
"டேய் நான் அவள சைட் அடிக்கப் போறேன்டா.." நண்பன் காவிரியைத் திறந்துவிட்ட மாதிரி சத்தம் போட்டு உளற ஆரம்பித்தான். "சைட்" என்ற வார்த்தை அந்த வருடம் தான் எங்களுக்குப் பரிச்சயம். அந்த வயதில் அது கெட்ட வார்த்தை மாதிரி. மெதுவாக சொல்லிப் பார்த்துக் கொள்வோம், கிளுகிளுப்பாக இருக்கும். "என்னடா இன்னிக்கு சைட் அடிச்சியா" என்று ஒருவருக்கொருவர் பெருமையாக விசாரித்துக் கொள்வோம். முக்கல்வாசி பேருக்கு விவரம் தெரியாமல் வீம்புக்காக சொல்லவேண்டுமே என்று சைட் அடிப்பதாக சொல்லுவார்கள். சில பேர் "சே சே...நான் இல்லைப்பா" என்று நல்ல பையன்களாகப் படம் போடுவார்கள். "சைட்" என்ற இந்த வார்த்தையை உபயோகப் படுத்துவதில் அந்த வயதில் என்னவோ அப்பிடி ஒரு ஆனந்தம்.
"டேய் என்னடா சொல்லற...?"
"ஆமாண்டா நான் அந்த பெண்ணை சைட் அடிக்கலாம்ன்னு இருக்கேன்..."
"உண்மையாவா?...சரி என்னம்மோ பண்ணிக்கோ..."
நான் திரும்பவும் அந்தப் பெண்ணைப் பார்த்த போது என்னை அவள் குறு குறுவென்று பார்த்துக் கொண்டிருந்த மாதிரி எனக்கு தோன்றியது. லேசாக சிரித்தாள்.
அப்புறம் ஸ்கூல் பஸ் பயணம் எங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாகிவிட்டது. அப்பிடியே எட்டாவதிலிருந்து ஒன்பதாவது வந்துவிட்டோம் ஆனாலும் பஸ்ஸில் தான் வந்து கொண்டிருந்தோம். வீட்டில் சைக்கிள் எல்லாம் கேட்டு அடம் பிடிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஜில்லும் 'அவளும்' சிரித்துப் பேசும் அளவுக்கு நல்ல பழக்கமாகிவிட்டார்கள்.
-தொடரும்
Monday, January 23, 2006
Alma மேட்டர் - 3
For previous parts --> part1   part2
பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் என்பதற்கெல்லாம் கவலையே படாமல் நான் கோலிக்காய் விளையாட போய்விட்டேன். அப்பாவும் அம்மாவும் தான் நான் அந்தப் பள்ளியில் படிக்காவிட்டால் இங்கிலீஸில் ப்ளாக் செய்ய முடியாதே என்று ரொம்பவும் கவலைப்பட்டார்கள். அப்புறம் அப்பா அந்தப் பள்ளியின் பெரிய தலையைத் தனியாகப் பார்த்து "பார்த்து செய்யுங்க சார்..என் பையன் உங்க பள்ளியில் படித்துத் தான் பீட்டர் விடும் பெண்களுக்குப் போட்டியாக ஒரு ப்ளாக் ஆரம்பிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டதால் அந்தக் க்ளாசில் கூடுதலாக ஒரு சீட் குடுத்து என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.
(இந்தப் ப்ளாக் உலகில் பீட்டர் விடும் பெண்களைப் பார்த்திருக்கிறீர்களா?...என்னல்லாமோ கலக்கலாக வார்த்தைகளைப் போடுகிறார்கள்...பையன்களில் சில பேரும் இந்த விளையாட்டை நன்றாக விளையாடுகிறார்கள் என்றாலும் பெண்கள் ஜனத்தொகை ரொம்ப அதிகம் இவர்களெல்லாம்...டெய்லி சாப்பாடுக்கப்புறம் ஒரு டிக்க்ஷினரியை முழுங்குவார்கள் என்று நினைக்கிறேன்)
நானும் சாக்ஸ் ஷூவெல்லாம் போட்டுக் கொண்டு, தோள் பையை மாட்டிக் கொண்டு ஸ்கூல் பஸ்ஸில் போகலாம் என்று ஏக குஷியாக கிளம்பிவிட்டேன். ஸ்கூலில் இங்கிலீஸில் தான் பேச வேண்டும். சேர்ந்த புதிதில் எனக்கு இங்கிலிபிஸ் அவ்வளவாக வராது (இப்ப மட்டும் என்னவாம்). ஆரம்பத்தில் டீச்சர் எலிசபத்து மகராணி மாதிரி எதாவது கேட்பார். நான் டீ.வி. சீரியல் ஹீரோ மாதிரி முழிப்பேன். கொஞ்ச நேரம் பராக்கப் பார்த்துவிட்டு அப்புறம் உக்காச்சிக்க சொல்லிவிடுவார்கள். "டீச்சர் இவன் என்னை நுள்ளிட்டான்" என்பதைக் கூட இங்கிலீஸில் சொல்ல வேண்டுமே என்று நுள்ளியதை எல்லாம் பெரிய மனது செய்து தள்ளுபடி செய்து விடுவேன்.
ஸ்கூல் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம். ஸ்கூல் வேனில் தான் பயணம். நான் சேர்ந்த வேளை அவர்கள் அப்புறம் நல்ல காசு பார்த்து இரண்டு பஸ் வாங்கி விட்டார்கள். ஸ்கூல் வேனில் ஒரு அக்கா கதையெல்லாம் சொல்லி பாட்டு பாட சொல்லித் தருவார். நானும் தெருவிலிருந்த இன்னும் மூணு நசுக்குகளும்தான் அக்காக்கு பின்பாட்டு. இந்த ஸ்கூலில் ஆரம்பத்தில் மத்தியான தூக்கத்திற்கு டகால்டி வேலையெல்லாம் செய்ய வேண்டி இருக்கவில்லை. அவர்களே மம்மம் சாப்பிட்ட பிறகு பாயைப் போட்டு ஒரு மணி நேரம் தூங்க விடுவார்கள். அப்புறம் பையன்கள் ஓரத்தை கடித்து சுவைத்திருக்கும் ஒரு ப்ளாஸ்டி தம்ளரில் பால் தருவார்கள். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் நடந்தது. ஸ்கூல் கொஞ்சம் பாப்புலர் ஆகி கூட்டம் சேர்ந்தவுடன் தூக்கம், பாலெல்லாம் கோவிந்தா.
என்டரென்ஸ் பரீட்சையில் தான் பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சலே ஒழிய படிப்பில் ஓரளவு நன்றாகப் படித்து வந்தேன். தெருவில் கூடவே இரண்டு பேர் படித்து வந்த்தால் இந்தப் பியர் ப்ரஷ்ஷர்(peer pressure) தொல்லை தாங்க முடியாது. அதுவும் அதில் ஒருவன் க்ளாசில் முதல் மார்க் வேறு வாங்குவான். அதனாலயே வூட்டுல பெண்டு நிமிர்ந்துவிடும். அக்காக்களெல்லாம் அவர்கள் பாடத்தைப் படிக்காமல் என்னை "ஸ்டுடென்ட் நம்பர் ஒன்" ஆக்குவதிலிலேயே குறியாக இருப்பார்கள். எப்படியோ அப்போ அப்போ எதாவது செய்து அவனுக்கு அடுத்த மார்க்காவது வாங்கிவிடுவேன். அன்றைக்கு மட்டும் சீக்கிரமாகவே தெருத் தோழிகளுடன் கையைப் பிடித்துக் கொண்டு ஜோடிப் புறா விளையாடப் போய்விடலாம். மத்த நாளெல்லாம் பாதி விளையாட்டிலேயே திரும்ப வந்து விரலை மடக்கி மடக்கி விட்டதைப் பார்த்து கண்க்கு போட வேண்டியிருக்கும்.
ஒரு முறை ஒன்னாவது படிக்கும் போது முண்டந்துறைக்கு சுற்றுலா போய் வந்தோம். திரும்ப வரும் போது பஸ்ஸில் ஒரு வாத்தியார் "நேத்து ராத்திரி.." என்று பாட்டு எடுத்துவிடுவார் ....நாங்களெல்லாம் அர்த்தம் தெரியாமலே பல்லைக்க் காட்டிக் கொண்டு குஷியாக "யெம்மா..." என்று எசப் பாட்டு பாடுவோம். அவர் திரும்ப "தூக்கம் போச்சுடி..." நாங்கள் "யெம்மா...". வீட்டில் வந்து இதே எசப்பாட்டை சந்தோஷமாக எடுத்து விட தொடையில் நல்ல நிமிட்டாம் பழம் கிடைத்தது.
இந்த ஸ்கூலிலே தான் நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேனாகையால் என் படிக்கும் காலத்தின் முக்கால்வாசி இங்கேயே கழிந்துவிட்டது.எட்டாம் வகுப்பு வரை இந்த முண்டந்துறை சுற்றுல்லாவைத் தவிர இங்கே ப்ளாகில் சொல்லுமளவுக்கு விசேஷமாக ஒன்றும் நடக்கவில்லை. நான் எட்டாவது படிக்கும் போது க்ளாசில் முக்கால்வாசி பேர் ஸ்கூலுக்கு சைக்கிளில் வர ஆரம்பித்தார்கள். வீட்டில் ஒரு சைக்கிள் தான் இருந்தது அதுவும் மாமாவுக்கு வேண்டும் என்பதால் கிடைக்கவில்லை. நானும் இன்னொரு நண்பனும் மட்டும் இன்னமும் ஸ்கூல் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தோம். பொதுவாக ஸ்கூல் பஸ்ஸில் பெண்கள் தான் அதிகம் வருவார்கள். எங்கள் வயது பையன்கள் சைக்கிளில் தான் வருவார்கள் என்பதால் எங்களுக்கு கொஞ்சம் வெட்கமாக இருக்கும். எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான். அப்புறம் நாங்கள் தான் பஸ்ஸில் சீனியர் (பையன்களில்). அந்த சமயத்தில் எங்களை விட ஒரு வருட சீனியர் பெண்கள் மூன்று பேர் வந்து கொண்டிருந்தார்கள்.
--தொடரும்
பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் என்பதற்கெல்லாம் கவலையே படாமல் நான் கோலிக்காய் விளையாட போய்விட்டேன். அப்பாவும் அம்மாவும் தான் நான் அந்தப் பள்ளியில் படிக்காவிட்டால் இங்கிலீஸில் ப்ளாக் செய்ய முடியாதே என்று ரொம்பவும் கவலைப்பட்டார்கள். அப்புறம் அப்பா அந்தப் பள்ளியின் பெரிய தலையைத் தனியாகப் பார்த்து "பார்த்து செய்யுங்க சார்..என் பையன் உங்க பள்ளியில் படித்துத் தான் பீட்டர் விடும் பெண்களுக்குப் போட்டியாக ஒரு ப்ளாக் ஆரம்பிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டதால் அந்தக் க்ளாசில் கூடுதலாக ஒரு சீட் குடுத்து என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.
(இந்தப் ப்ளாக் உலகில் பீட்டர் விடும் பெண்களைப் பார்த்திருக்கிறீர்களா?...என்னல்லாமோ கலக்கலாக வார்த்தைகளைப் போடுகிறார்கள்...பையன்களில் சில பேரும் இந்த விளையாட்டை நன்றாக விளையாடுகிறார்கள் என்றாலும் பெண்கள் ஜனத்தொகை ரொம்ப அதிகம் இவர்களெல்லாம்...டெய்லி சாப்பாடுக்கப்புறம் ஒரு டிக்க்ஷினரியை முழுங்குவார்கள் என்று நினைக்கிறேன்)
நானும் சாக்ஸ் ஷூவெல்லாம் போட்டுக் கொண்டு, தோள் பையை மாட்டிக் கொண்டு ஸ்கூல் பஸ்ஸில் போகலாம் என்று ஏக குஷியாக கிளம்பிவிட்டேன். ஸ்கூலில் இங்கிலீஸில் தான் பேச வேண்டும். சேர்ந்த புதிதில் எனக்கு இங்கிலிபிஸ் அவ்வளவாக வராது (இப்ப மட்டும் என்னவாம்). ஆரம்பத்தில் டீச்சர் எலிசபத்து மகராணி மாதிரி எதாவது கேட்பார். நான் டீ.வி. சீரியல் ஹீரோ மாதிரி முழிப்பேன். கொஞ்ச நேரம் பராக்கப் பார்த்துவிட்டு அப்புறம் உக்காச்சிக்க சொல்லிவிடுவார்கள். "டீச்சர் இவன் என்னை நுள்ளிட்டான்" என்பதைக் கூட இங்கிலீஸில் சொல்ல வேண்டுமே என்று நுள்ளியதை எல்லாம் பெரிய மனது செய்து தள்ளுபடி செய்து விடுவேன்.
ஸ்கூல் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம். ஸ்கூல் வேனில் தான் பயணம். நான் சேர்ந்த வேளை அவர்கள் அப்புறம் நல்ல காசு பார்த்து இரண்டு பஸ் வாங்கி விட்டார்கள். ஸ்கூல் வேனில் ஒரு அக்கா கதையெல்லாம் சொல்லி பாட்டு பாட சொல்லித் தருவார். நானும் தெருவிலிருந்த இன்னும் மூணு நசுக்குகளும்தான் அக்காக்கு பின்பாட்டு. இந்த ஸ்கூலில் ஆரம்பத்தில் மத்தியான தூக்கத்திற்கு டகால்டி வேலையெல்லாம் செய்ய வேண்டி இருக்கவில்லை. அவர்களே மம்மம் சாப்பிட்ட பிறகு பாயைப் போட்டு ஒரு மணி நேரம் தூங்க விடுவார்கள். அப்புறம் பையன்கள் ஓரத்தை கடித்து சுவைத்திருக்கும் ஒரு ப்ளாஸ்டி தம்ளரில் பால் தருவார்கள். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் நடந்தது. ஸ்கூல் கொஞ்சம் பாப்புலர் ஆகி கூட்டம் சேர்ந்தவுடன் தூக்கம், பாலெல்லாம் கோவிந்தா.
என்டரென்ஸ் பரீட்சையில் தான் பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சலே ஒழிய படிப்பில் ஓரளவு நன்றாகப் படித்து வந்தேன். தெருவில் கூடவே இரண்டு பேர் படித்து வந்த்தால் இந்தப் பியர் ப்ரஷ்ஷர்(peer pressure) தொல்லை தாங்க முடியாது. அதுவும் அதில் ஒருவன் க்ளாசில் முதல் மார்க் வேறு வாங்குவான். அதனாலயே வூட்டுல பெண்டு நிமிர்ந்துவிடும். அக்காக்களெல்லாம் அவர்கள் பாடத்தைப் படிக்காமல் என்னை "ஸ்டுடென்ட் நம்பர் ஒன்" ஆக்குவதிலிலேயே குறியாக இருப்பார்கள். எப்படியோ அப்போ அப்போ எதாவது செய்து அவனுக்கு அடுத்த மார்க்காவது வாங்கிவிடுவேன். அன்றைக்கு மட்டும் சீக்கிரமாகவே தெருத் தோழிகளுடன் கையைப் பிடித்துக் கொண்டு ஜோடிப் புறா விளையாடப் போய்விடலாம். மத்த நாளெல்லாம் பாதி விளையாட்டிலேயே திரும்ப வந்து விரலை மடக்கி மடக்கி விட்டதைப் பார்த்து கண்க்கு போட வேண்டியிருக்கும்.
ஒரு முறை ஒன்னாவது படிக்கும் போது முண்டந்துறைக்கு சுற்றுலா போய் வந்தோம். திரும்ப வரும் போது பஸ்ஸில் ஒரு வாத்தியார் "நேத்து ராத்திரி.." என்று பாட்டு எடுத்துவிடுவார் ....நாங்களெல்லாம் அர்த்தம் தெரியாமலே பல்லைக்க் காட்டிக் கொண்டு குஷியாக "யெம்மா..." என்று எசப் பாட்டு பாடுவோம். அவர் திரும்ப "தூக்கம் போச்சுடி..." நாங்கள் "யெம்மா...". வீட்டில் வந்து இதே எசப்பாட்டை சந்தோஷமாக எடுத்து விட தொடையில் நல்ல நிமிட்டாம் பழம் கிடைத்தது.
இந்த ஸ்கூலிலே தான் நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேனாகையால் என் படிக்கும் காலத்தின் முக்கால்வாசி இங்கேயே கழிந்துவிட்டது.எட்டாம் வகுப்பு வரை இந்த முண்டந்துறை சுற்றுல்லாவைத் தவிர இங்கே ப்ளாகில் சொல்லுமளவுக்கு விசேஷமாக ஒன்றும் நடக்கவில்லை. நான் எட்டாவது படிக்கும் போது க்ளாசில் முக்கால்வாசி பேர் ஸ்கூலுக்கு சைக்கிளில் வர ஆரம்பித்தார்கள். வீட்டில் ஒரு சைக்கிள் தான் இருந்தது அதுவும் மாமாவுக்கு வேண்டும் என்பதால் கிடைக்கவில்லை. நானும் இன்னொரு நண்பனும் மட்டும் இன்னமும் ஸ்கூல் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தோம். பொதுவாக ஸ்கூல் பஸ்ஸில் பெண்கள் தான் அதிகம் வருவார்கள். எங்கள் வயது பையன்கள் சைக்கிளில் தான் வருவார்கள் என்பதால் எங்களுக்கு கொஞ்சம் வெட்கமாக இருக்கும். எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான். அப்புறம் நாங்கள் தான் பஸ்ஸில் சீனியர் (பையன்களில்). அந்த சமயத்தில் எங்களை விட ஒரு வருட சீனியர் பெண்கள் மூன்று பேர் வந்து கொண்டிருந்தார்கள்.
--தொடரும்
Wednesday, December 28, 2005
Alma மேட்டர் - 2
for previous parts --> part1
முதல் நாள் ஸ்கூல் அனுபவம் நியாபகம் இல்லை. ஆனால் அந்த ஸ்கூல் எல்.கே.ஜி யூ.கே.ஜி நியாபகங்கள் கொஞ்சம் இருக்கின்றன. முதல் ஸ்கூல் அப்பிடி ஒன்றும் பெரிய ஸ்கூலில்லை. கொஞ்சம் நீளமான வீட்டில் நடத்தி வந்தார்கள். அடுத்த தெருவில் இருந்ததால் அம்மாவுக்கு கொண்டு விடுவதற்கு வசதியாக இருக்கும் என்று சேர்த்தார்கள் என்று நினைக்கிறேன். தனியார் பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது. இளங்கலை முடித்து விட்டு வரும் பெண்களே டீச்சர்கள். அவர்களுக்கும் வீட்டில் கல்யாணம் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அதுவரைக்கும் சும்மா இருக்கவேண்டாமே என்று இங்கு வேலைக்கு சேர்ந்திருப்பார்கள். கையில் பிரம்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை பார்ப்பவர்கள், மற்றவர்களெல்லாம் மர ஸ்கேல் வைத்திருப்பார்கள்.
நான் பள்ளிக்குப் போவதற்கு ரொம்ப அழமாட்டேனாம். ஆனால் அழாமல் அடிக்கடி மட்டம் போட்டுவிடுவேனாம் அம்மா சொல்லி இருக்கிறார்கள். அடுத்த தெரு தானே, மத்தியானம் சாப்பாட்டுக்கு அம்மா இடுப்பில் வைத்துக் கொண்டுவருவார்கள். முதலில் எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டு விடுவார். பிறகு அம்மா சாப்பிட்டு வேலையெல்லாம் முடித்து விட்டு வருவதற்க்குள் சமத்தாக தூங்கிவிடுவேன். அவர்களும் எழுப்பிப் பார்ப்பார்கள்...சில நாள் குழந்தையை எழுப்ப மனசு வராமல் சின்ன க்ளாஸ் தானே என்று அப்பிடியே தூங்க விட்டுவிடுவார்கள். என்னவோ இந்த டெக்னிக் நன்றாக மனதில் பதிந்து விட்டது. இப்பவும் மனைவி ஷாப்பிங்க்கு கூப்பிடும் போது சில சமயம் இந்த உத்தி கை கொடுக்கும்...முதலில் கட கடவென்று சாப்பிட்டு விட்டு தங்கமணி வேலையை முடித்துவிட்டு வருவதற்கு முன் நான் உட்கார்ந்து கொண்டே தூங்கிவிடுவேன். ஒரு இருமுறை பச்சாதாபம் ஒர்க் அவுட் ஆச்சு அதற்கப்புறம் உதை தான் என்றான பின்...குழந்தைகளை தூக்கம் பண்ண முயற்சி செய்ய..இப்போதெல்லாம் ஷப்பிங் போய்விட்டு வந்தப்புறம் தான் சாப்பாடே போடுகிறார் தங்கமணி.
அந்த முதல் ஸ்கூலில் ரொம்ப பிடித்த விஷயமே "ஸ்கூல் டே" தான். வெளியே கல்யாணம் மாதிரி பந்தல் போட்டு ஒலிபெருக்கியை அலற விட்டு கோலாகலாமாக நடக்கும். இடுப்பில் கை வைத்துக் கொண்டு தலையை இடமும் வலமுமாக ஆட்டிக் கொண்டு ஒரு அரத இங்கிலீஸ் ரைம்ஸ் ஆட்டம் கண்டிப்பாக இருக்கும். இது போக "எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தா" பாட்டுக்கு ஆணகளும் பெண்களுமாக க்ருப் ஆட்டமும் கண்டிப்பாக இருக்கும். பாட்டின் நடுவில் இரண்டு பேருக்கு வேஷ்டி அவிழ்ந்து திரு திருவென்று முழித்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களை மிஸ் வந்து தர தரவென்று இழுத்துக் கொண்டு போவார்கள். மிஸ் டான்ஸ் சொல்லிக் குடுப்பது அழகாக இருக்கும். "கையில காசு வாயில தோசை" என்ற பாடலுக்கு கையைக் காட்டிவிட்டு காசு மாதிரி சுண்டிக் காட்டவேண்டும். அப்புறம் வாயை ஆ காட்டி விட்டு கையால் தோசை வார்க்கவேண்டும். நான் "கட்டித் தங்கம் வெட்டி எடுத்து" என்ற பாடலுக்கு ஆடினேன். கட்டிக்கு கையை பாறாங்கல் மாதிரி வைத்து விட்டு தங்கதிற்க்கு காதில் தோடைக் காட்டிவிட்டு மம்பட்டியால் கஷ்டப்பட்டு வெட்டி எடுத்தேன்.
நாடகத்தில் கட்டப்பொம்மன் கண்டிப்பாக வருவார். ஜாக்ஸன் துரைக்கும், ராஜா ராணியாக நடிக்கும் சீனியர் ஆர்டிஸ்டுகளுக்கு மட்டும் தான் ரோஸ் பவுடர். மற்றவர்களுக்கெல்லாம் வீட்டில் போடும் அதே பான்ட்ஸ் பவுடர் தான். எனக்கு ஒரு முறை கூட ரோஸ் பவுடர் கிடைக்கவில்லை.
இந்த ஸ்கூலில் எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம் நெல்லிக்காய் மரம். மிக புளிப்பான அருநெல்லிக்காய். ஆனால் ஸ்கூல் வாட்ச்மேன் அந்த மரம் பக்கமே போக விட மாட்டார். கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்கும் கீழே விழுந்த நெல்லிக்காய்களை யாரும் பார்க்காத போது ஓடிப் போய் பொறுக்கிவருவதே மிகத் துணிச்சலான விஷயம். ஆனால் இந்த ஸ்கூலிலிருந்து வெளியே வந்து வாலு முளைத்த அப்புறம் வானரப் படையோடு போய் வாட்ச் மேனையும், மரத்தையும் பாடாய் படுத்தி இருக்கிறேன்.
இந்த ஸ்கூலில் படித்தது இரண்டு வருடங்களே ஆனாலும் ரொம்ப சமத்தாக இருந்தேன்.ஒரே ஒரு முறை மட்டும் எல்லாரையும் ஒரு சினிமாவுக்கு அழைத்துப் போய்விட்டு வரும் போது வழியில் வீடு வந்துவிட்டதே என்று க்யூவிலிருந்து வீட்டிற்க்குள் நழுவிவிட்டேன். அங்கே ஸ்கூலில் என்னை தேடு தேடுவென தேடி விட்டு வாட்சுமேன் வீட்டில் லபோ திபோவென்று அப்பா அம்மாவிடம் குற்றப் பத்திரிக்கை படித்தார். அடுத்த நாள் ஸ்கூலில் மிஸ் காதைப் பிடித்து திருகினார்.
இந்த கால கட்டத்தில் தான் எஙகள் ஊரில் இன்னொரு பள்ளி கொஞ்சம் பிரபலமாக ஆரம்பித்தது. கான்வென்ட் டைப்பில் ஆரம்பித்து ஸ்கூல் ஷூ, சாக்ஸெல்லாம் போட்டுக் கொண்டு பையன்கள் வேனில் போவதைப் பார்த்து எனக்கும் ரொம்ப ஆசையாக இருந்தது. அப்பா அம்மாவும் பையன் இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்தால் இங்கிலீஸில் பொளந்து கட்டி ப்ளாக் ஆரம்பித்துவிடுவான் என்று நம்பியதால் என்னை சேர்க்க ஆசைப் பட்டார்கள். அப்பா சென்று விசாரித்து வந்து தலையில் குண்டைப் போட்டார். அந்தப் பள்ளியில் சேருவதற்கு டெஸ்ட் எழுத வேண்டுமாம். அதுவும் இங்கிலீஸ் மற்றும் மேத்ஸ் பரீட்சைகள் வேறு. வீட்டில் அக்கா பெண்டை நிமிர்த்தி விட்டார். நம்ம பெயரில் ஆங்கில எழுத்துக்களில் ரெண்டு மட்டும் குறையும் அவ்வளவு தான். ஆங்கில எழுத்துக்களில் ஒழுங்கான வரிசை ஒன்று, பெயருக்கு ஒரு வரிசை என்று எழுதப் படிப்பதற்குள்ளே எனக்கு அந்த ஸ்கூல் மோகம் குறைய அரம்பித்துவிட்டது. தேர்வுப் பரீட்சையில் பக்கத்திலிருந்து மண்டையில் குட்ட அக்கா இல்லையாதலால் மானாவாரியாக தோன்றியதை எழுதினேன்.
தேர்வுப் பரீட்சை முடிவுகள் வெளிவந்து, குட்டியாகப் பெயர் வைத்துக் கொண்டிருந்த தெருவிலிருந்த மற்ற இரண்டு நண்பர்களும் தேர்வாகி இருக்க, நான் மட்டும் எங்கம்மா சொல்லுகிற மாதிரி பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல். "அதென்ன பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் ...ஃபெயில் சொல்லுங்கோம்மா" என்று இன்றளவும் என் மனைவி மாமியாரிடம் இந்த விஷயத்தில் தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார். என் அம்மாவும் "ஃபெயில் இல்லைடி ...குழந்தை நன்னாத் தான் படிச்சான்...பரக்கப் பார்த்ததுல பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் அவ்வளவு தான்" என்று விட்டே குடுக்காமல் சமாளித்துவருகிறார். ஹூம் எங்கம்மா மட்டும் எனக்கு டீச்சராக வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
-தொடரும்
முதல் நாள் ஸ்கூல் அனுபவம் நியாபகம் இல்லை. ஆனால் அந்த ஸ்கூல் எல்.கே.ஜி யூ.கே.ஜி நியாபகங்கள் கொஞ்சம் இருக்கின்றன. முதல் ஸ்கூல் அப்பிடி ஒன்றும் பெரிய ஸ்கூலில்லை. கொஞ்சம் நீளமான வீட்டில் நடத்தி வந்தார்கள். அடுத்த தெருவில் இருந்ததால் அம்மாவுக்கு கொண்டு விடுவதற்கு வசதியாக இருக்கும் என்று சேர்த்தார்கள் என்று நினைக்கிறேன். தனியார் பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது. இளங்கலை முடித்து விட்டு வரும் பெண்களே டீச்சர்கள். அவர்களுக்கும் வீட்டில் கல்யாணம் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அதுவரைக்கும் சும்மா இருக்கவேண்டாமே என்று இங்கு வேலைக்கு சேர்ந்திருப்பார்கள். கையில் பிரம்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை பார்ப்பவர்கள், மற்றவர்களெல்லாம் மர ஸ்கேல் வைத்திருப்பார்கள்.
நான் பள்ளிக்குப் போவதற்கு ரொம்ப அழமாட்டேனாம். ஆனால் அழாமல் அடிக்கடி மட்டம் போட்டுவிடுவேனாம் அம்மா சொல்லி இருக்கிறார்கள். அடுத்த தெரு தானே, மத்தியானம் சாப்பாட்டுக்கு அம்மா இடுப்பில் வைத்துக் கொண்டுவருவார்கள். முதலில் எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டு விடுவார். பிறகு அம்மா சாப்பிட்டு வேலையெல்லாம் முடித்து விட்டு வருவதற்க்குள் சமத்தாக தூங்கிவிடுவேன். அவர்களும் எழுப்பிப் பார்ப்பார்கள்...சில நாள் குழந்தையை எழுப்ப மனசு வராமல் சின்ன க்ளாஸ் தானே என்று அப்பிடியே தூங்க விட்டுவிடுவார்கள். என்னவோ இந்த டெக்னிக் நன்றாக மனதில் பதிந்து விட்டது. இப்பவும் மனைவி ஷாப்பிங்க்கு கூப்பிடும் போது சில சமயம் இந்த உத்தி கை கொடுக்கும்...முதலில் கட கடவென்று சாப்பிட்டு விட்டு தங்கமணி வேலையை முடித்துவிட்டு வருவதற்கு முன் நான் உட்கார்ந்து கொண்டே தூங்கிவிடுவேன். ஒரு இருமுறை பச்சாதாபம் ஒர்க் அவுட் ஆச்சு அதற்கப்புறம் உதை தான் என்றான பின்...குழந்தைகளை தூக்கம் பண்ண முயற்சி செய்ய..இப்போதெல்லாம் ஷப்பிங் போய்விட்டு வந்தப்புறம் தான் சாப்பாடே போடுகிறார் தங்கமணி.
அந்த முதல் ஸ்கூலில் ரொம்ப பிடித்த விஷயமே "ஸ்கூல் டே" தான். வெளியே கல்யாணம் மாதிரி பந்தல் போட்டு ஒலிபெருக்கியை அலற விட்டு கோலாகலாமாக நடக்கும். இடுப்பில் கை வைத்துக் கொண்டு தலையை இடமும் வலமுமாக ஆட்டிக் கொண்டு ஒரு அரத இங்கிலீஸ் ரைம்ஸ் ஆட்டம் கண்டிப்பாக இருக்கும். இது போக "எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தா" பாட்டுக்கு ஆணகளும் பெண்களுமாக க்ருப் ஆட்டமும் கண்டிப்பாக இருக்கும். பாட்டின் நடுவில் இரண்டு பேருக்கு வேஷ்டி அவிழ்ந்து திரு திருவென்று முழித்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களை மிஸ் வந்து தர தரவென்று இழுத்துக் கொண்டு போவார்கள். மிஸ் டான்ஸ் சொல்லிக் குடுப்பது அழகாக இருக்கும். "கையில காசு வாயில தோசை" என்ற பாடலுக்கு கையைக் காட்டிவிட்டு காசு மாதிரி சுண்டிக் காட்டவேண்டும். அப்புறம் வாயை ஆ காட்டி விட்டு கையால் தோசை வார்க்கவேண்டும். நான் "கட்டித் தங்கம் வெட்டி எடுத்து" என்ற பாடலுக்கு ஆடினேன். கட்டிக்கு கையை பாறாங்கல் மாதிரி வைத்து விட்டு தங்கதிற்க்கு காதில் தோடைக் காட்டிவிட்டு மம்பட்டியால் கஷ்டப்பட்டு வெட்டி எடுத்தேன்.
நாடகத்தில் கட்டப்பொம்மன் கண்டிப்பாக வருவார். ஜாக்ஸன் துரைக்கும், ராஜா ராணியாக நடிக்கும் சீனியர் ஆர்டிஸ்டுகளுக்கு மட்டும் தான் ரோஸ் பவுடர். மற்றவர்களுக்கெல்லாம் வீட்டில் போடும் அதே பான்ட்ஸ் பவுடர் தான். எனக்கு ஒரு முறை கூட ரோஸ் பவுடர் கிடைக்கவில்லை.
இந்த ஸ்கூலில் எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம் நெல்லிக்காய் மரம். மிக புளிப்பான அருநெல்லிக்காய். ஆனால் ஸ்கூல் வாட்ச்மேன் அந்த மரம் பக்கமே போக விட மாட்டார். கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்கும் கீழே விழுந்த நெல்லிக்காய்களை யாரும் பார்க்காத போது ஓடிப் போய் பொறுக்கிவருவதே மிகத் துணிச்சலான விஷயம். ஆனால் இந்த ஸ்கூலிலிருந்து வெளியே வந்து வாலு முளைத்த அப்புறம் வானரப் படையோடு போய் வாட்ச் மேனையும், மரத்தையும் பாடாய் படுத்தி இருக்கிறேன்.
இந்த ஸ்கூலில் படித்தது இரண்டு வருடங்களே ஆனாலும் ரொம்ப சமத்தாக இருந்தேன்.ஒரே ஒரு முறை மட்டும் எல்லாரையும் ஒரு சினிமாவுக்கு அழைத்துப் போய்விட்டு வரும் போது வழியில் வீடு வந்துவிட்டதே என்று க்யூவிலிருந்து வீட்டிற்க்குள் நழுவிவிட்டேன். அங்கே ஸ்கூலில் என்னை தேடு தேடுவென தேடி விட்டு வாட்சுமேன் வீட்டில் லபோ திபோவென்று அப்பா அம்மாவிடம் குற்றப் பத்திரிக்கை படித்தார். அடுத்த நாள் ஸ்கூலில் மிஸ் காதைப் பிடித்து திருகினார்.
இந்த கால கட்டத்தில் தான் எஙகள் ஊரில் இன்னொரு பள்ளி கொஞ்சம் பிரபலமாக ஆரம்பித்தது. கான்வென்ட் டைப்பில் ஆரம்பித்து ஸ்கூல் ஷூ, சாக்ஸெல்லாம் போட்டுக் கொண்டு பையன்கள் வேனில் போவதைப் பார்த்து எனக்கும் ரொம்ப ஆசையாக இருந்தது. அப்பா அம்மாவும் பையன் இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்தால் இங்கிலீஸில் பொளந்து கட்டி ப்ளாக் ஆரம்பித்துவிடுவான் என்று நம்பியதால் என்னை சேர்க்க ஆசைப் பட்டார்கள். அப்பா சென்று விசாரித்து வந்து தலையில் குண்டைப் போட்டார். அந்தப் பள்ளியில் சேருவதற்கு டெஸ்ட் எழுத வேண்டுமாம். அதுவும் இங்கிலீஸ் மற்றும் மேத்ஸ் பரீட்சைகள் வேறு. வீட்டில் அக்கா பெண்டை நிமிர்த்தி விட்டார். நம்ம பெயரில் ஆங்கில எழுத்துக்களில் ரெண்டு மட்டும் குறையும் அவ்வளவு தான். ஆங்கில எழுத்துக்களில் ஒழுங்கான வரிசை ஒன்று, பெயருக்கு ஒரு வரிசை என்று எழுதப் படிப்பதற்குள்ளே எனக்கு அந்த ஸ்கூல் மோகம் குறைய அரம்பித்துவிட்டது. தேர்வுப் பரீட்சையில் பக்கத்திலிருந்து மண்டையில் குட்ட அக்கா இல்லையாதலால் மானாவாரியாக தோன்றியதை எழுதினேன்.
தேர்வுப் பரீட்சை முடிவுகள் வெளிவந்து, குட்டியாகப் பெயர் வைத்துக் கொண்டிருந்த தெருவிலிருந்த மற்ற இரண்டு நண்பர்களும் தேர்வாகி இருக்க, நான் மட்டும் எங்கம்மா சொல்லுகிற மாதிரி பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல். "அதென்ன பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் ...ஃபெயில் சொல்லுங்கோம்மா" என்று இன்றளவும் என் மனைவி மாமியாரிடம் இந்த விஷயத்தில் தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார். என் அம்மாவும் "ஃபெயில் இல்லைடி ...குழந்தை நன்னாத் தான் படிச்சான்...பரக்கப் பார்த்ததுல பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் அவ்வளவு தான்" என்று விட்டே குடுக்காமல் சமாளித்துவருகிறார். ஹூம் எங்கம்மா மட்டும் எனக்கு டீச்சராக வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
-தொடரும்
Tuesday, November 22, 2005
ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...12
For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8    Part 9    Part 10    Part 11
காவியம் படைத்து விடவில்லை, ஆனாலும் என்னம்மோ பெரிய எழுத்தாளர் மாதிரி உங்களுக்கு நன்றி நவில்தலுடன் முடிவுரை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. (உங்களுக்கு நன்றி சொல்லாட்டா அடுத்த ஜென்மத்துல ஒரு பெண்ணும் என்ன திரும்பி கூட பார்க்கமாட்டான்னு என்னமோ உள் மனசு சொல்லுது) ஜொள்ளித் திரிந்த காலம் எழுதுவதற்கு முன் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஏற்கனவே நமக்கு ரொம்ப நல்ல பெயர், இதுல இதவேற எழுதலாமா என்று ஒரு குழப்பம். சொன்னால் நம்புவீர்களா தெரியவில்லை(நான் எதைச் சொல்லி நம்பியிருக்கிறீர்கள்?). இதை எழுத வேண்டும் என்று நினைத்து குமைந்து கொண்டிருந்தது நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்னால். முன்னுரை எழுதி தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் எதோ ஜாலியான பாட்டைக் கேட்டுக் கொண்டே ட்ரெயினில் தூசி தட்டி முதல் பதிவையும் போட்டுவிட்டேன். நீங்கள் குடுத்த உற்சாகத்தைப் பார்த்த போது கொஞ்சம் மலைப்பாக இருந்தது ரொம்ப பில்டப் குடுத்துவிட்டேனோ என்று. ஏதோ சமாளித்து விட்டேன் என்று நினைக்கிறேன். சில பதிவுகள் நாளாச்சே போடவேண்டுமே என்று அவசரமாக எழுதியிருக்கிறேன் தரம் (??!!) குறைந்து இருக்கலாம். ஒரு பதிவில் நீங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய போது கண் திறப்பாக இருந்தது. அப்புறம் கொஞ்சம் கவனமாக இருந்தேன். மிக்க நன்றி. (இதில் எழுதி என்னம்மோ திருப்தி இல்லாமல் ஒரு பதிவை வேறு ஓரம் கட்டிவிட்டேன் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறது)
வூட்டுல நாள் ஜொள்ளுவிட்டத அடிக்கடி கேட்டாலும் லேசாகத் தான் சொல்லுவேன். ஒரு விஷயத்தை எப்பவோ சொல்லி இன்னமும் கிண்டல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிலேர்ந்து உஷாராயிட்டேன். ஆனாலும் பதிவைப் படித்துவிட்டு குடை குடைன்னு குடையாம எதோ பொழச்சு போறான்னு விட்டுட்டாங்க( அப்பிடி தானே?.. இல்ல முடியட்டும்ன்னு மொத்தமா கேட்டுக்கலாம்னு காத்திருக்கீங்களா?) உங்களுக்கும் நன்றி. நன்றி எல்லாம் சொல்லியிருக்கேன் தங்கமாளிகை பில்ல பார்த்து போடுங்கம்மா எதோ புள்ளகுட்டிக்காரன்.
ரொம்ப ஜொள்ளுப் பார்டி இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கனும்ன்னு உங்களில் நிறைய பேர் நினைத்து விடுவீர்களோ என்று வேறு உதறலாய் இருந்தது. ஆனால் நிறைய பேர் பெண்கள் பின்னூட்டத்திலும் மெயிலிலும் ஆதரவு அளித்த பின்பு தான் கொஞம் நிம்மதியாக இருந்தது. தீபாவளிப் பார்டியிலும் சகஜமாகப் பேசினீர்கள்.உங்களுக்கும் என் நன்றி.
என்னடா ஆம்பளைகளுக்கு நன்றி சொல்லலையேன்னு நினக்காதீங்க (புத்தியக் காட்டிட்டான்யா). பின்னூட்டத்தில் உற்சாகம் அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.உங்களில் சிலபேர் யூ.எஸ்லிருந்து போன் பண்ணி வேறு உற்சாகம் அளித்தீர்கள். கோடானு கோடி நன்றியையா..
என்னடா பெயரைச் சொல்லாமல் தேர்தலில் ஜெயிச்சமாதிரி மொத்தமா அறிக்கை விடறானேன்னு நினைக்காதீங்க...நான் கெமிஸ்ட்ரியில கொஞ்சம் வீக் யார் பெயரையாவது விட்டுவிடுவேன் அதான்.
மொத்ததில் நிறைய நண்பர்களும் உற்சாகமும் கிடைத்திருக்கிறது. You all gave me excellent support. இந்த முயற்சியில் உங்களின் உதவியால் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தெம்பாக இன்னும் எழுதுவேன் என்று நினைக்கிறேன். உங்கள் ஆசிர்வாதத்துடன் கூடிய சீக்கிரம் அடுத்த தொடரை ஆரம்பித்துவிடுவேன். (போச்சுடா..ஒரு பேச்சுக்கு சொன்னா.கிளம்பிட்டான்யா)
உங்கள் எல்லோருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி!!
-இத்துடன் (அஃபீஷியலான) ஜொள்ளு முற்றும்.
காவியம் படைத்து விடவில்லை, ஆனாலும் என்னம்மோ பெரிய எழுத்தாளர் மாதிரி உங்களுக்கு நன்றி நவில்தலுடன் முடிவுரை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. (உங்களுக்கு நன்றி சொல்லாட்டா அடுத்த ஜென்மத்துல ஒரு பெண்ணும் என்ன திரும்பி கூட பார்க்கமாட்டான்னு என்னமோ உள் மனசு சொல்லுது) ஜொள்ளித் திரிந்த காலம் எழுதுவதற்கு முன் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஏற்கனவே நமக்கு ரொம்ப நல்ல பெயர், இதுல இதவேற எழுதலாமா என்று ஒரு குழப்பம். சொன்னால் நம்புவீர்களா தெரியவில்லை(நான் எதைச் சொல்லி நம்பியிருக்கிறீர்கள்?). இதை எழுத வேண்டும் என்று நினைத்து குமைந்து கொண்டிருந்தது நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்னால். முன்னுரை எழுதி தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் எதோ ஜாலியான பாட்டைக் கேட்டுக் கொண்டே ட்ரெயினில் தூசி தட்டி முதல் பதிவையும் போட்டுவிட்டேன். நீங்கள் குடுத்த உற்சாகத்தைப் பார்த்த போது கொஞ்சம் மலைப்பாக இருந்தது ரொம்ப பில்டப் குடுத்துவிட்டேனோ என்று. ஏதோ சமாளித்து விட்டேன் என்று நினைக்கிறேன். சில பதிவுகள் நாளாச்சே போடவேண்டுமே என்று அவசரமாக எழுதியிருக்கிறேன் தரம் (??!!) குறைந்து இருக்கலாம். ஒரு பதிவில் நீங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய போது கண் திறப்பாக இருந்தது. அப்புறம் கொஞ்சம் கவனமாக இருந்தேன். மிக்க நன்றி. (இதில் எழுதி என்னம்மோ திருப்தி இல்லாமல் ஒரு பதிவை வேறு ஓரம் கட்டிவிட்டேன் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறது)
வூட்டுல நாள் ஜொள்ளுவிட்டத அடிக்கடி கேட்டாலும் லேசாகத் தான் சொல்லுவேன். ஒரு விஷயத்தை எப்பவோ சொல்லி இன்னமும் கிண்டல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிலேர்ந்து உஷாராயிட்டேன். ஆனாலும் பதிவைப் படித்துவிட்டு குடை குடைன்னு குடையாம எதோ பொழச்சு போறான்னு விட்டுட்டாங்க( அப்பிடி தானே?.. இல்ல முடியட்டும்ன்னு மொத்தமா கேட்டுக்கலாம்னு காத்திருக்கீங்களா?) உங்களுக்கும் நன்றி. நன்றி எல்லாம் சொல்லியிருக்கேன் தங்கமாளிகை பில்ல பார்த்து போடுங்கம்மா எதோ புள்ளகுட்டிக்காரன்.
ரொம்ப ஜொள்ளுப் பார்டி இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கனும்ன்னு உங்களில் நிறைய பேர் நினைத்து விடுவீர்களோ என்று வேறு உதறலாய் இருந்தது. ஆனால் நிறைய பேர் பெண்கள் பின்னூட்டத்திலும் மெயிலிலும் ஆதரவு அளித்த பின்பு தான் கொஞம் நிம்மதியாக இருந்தது. தீபாவளிப் பார்டியிலும் சகஜமாகப் பேசினீர்கள்.உங்களுக்கும் என் நன்றி.
என்னடா ஆம்பளைகளுக்கு நன்றி சொல்லலையேன்னு நினக்காதீங்க (புத்தியக் காட்டிட்டான்யா). பின்னூட்டத்தில் உற்சாகம் அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.உங்களில் சிலபேர் யூ.எஸ்லிருந்து போன் பண்ணி வேறு உற்சாகம் அளித்தீர்கள். கோடானு கோடி நன்றியையா..
என்னடா பெயரைச் சொல்லாமல் தேர்தலில் ஜெயிச்சமாதிரி மொத்தமா அறிக்கை விடறானேன்னு நினைக்காதீங்க...நான் கெமிஸ்ட்ரியில கொஞ்சம் வீக் யார் பெயரையாவது விட்டுவிடுவேன் அதான்.
மொத்ததில் நிறைய நண்பர்களும் உற்சாகமும் கிடைத்திருக்கிறது. You all gave me excellent support. இந்த முயற்சியில் உங்களின் உதவியால் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தெம்பாக இன்னும் எழுதுவேன் என்று நினைக்கிறேன். உங்கள் ஆசிர்வாதத்துடன் கூடிய சீக்கிரம் அடுத்த தொடரை ஆரம்பித்துவிடுவேன். (போச்சுடா..ஒரு பேச்சுக்கு சொன்னா.கிளம்பிட்டான்யா)
உங்கள் எல்லோருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி!!
-இத்துடன் (அஃபீஷியலான) ஜொள்ளு முற்றும்.
Monday, November 21, 2005
ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...11
For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8    Part 9    Part 10
ஜொள்ளு விடுகிற குரங்குகள் பலவிதமான ஸ்ட்ரேடிஜி வைத்திருப்பார்கள். எனக்கு மிருதங்க ரவை எப்பிடி உபயோகமாக இருந்ததோ அது மாதிரி. நானெல்லாம் ஜுஜுபி. சில புத்திசாலி குரங்குகள் தாவறதும் குதிக்கிறதும் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இப்பிடி தான் ஹாஸ்டல் என்றாலே திருட்டு பீர், தம், சரோஜாதேவி புத்தகங்கள் (தெரியாதவர்கள் விட்டுவிடவும் இதற்கு ஏன் இந்த கோட்வேர்ட் எனக்கும் தெரியாது) என்று மலிந்து கிடக்கும் இடத்தில் ஒரு குரங்கு மட்டும் சமத்தாக வாழ்க்கை ஜோஸியம், கைரேகை சாஸ்திரம் என்று குடைந்து கொண்டிருந்தது. அடுத்த யூத் பெஸ்டிவலில் அந்தக் குரங்கு ஜிகிடிகள் கையைப் பிடித்து ஜோஸியம் சொல்ல ஆரம்பித்துவிட்டது. அப்புறம் எல்லாக் குல்லாக் குரங்குகளும் கொஞ்ச நாளைக்கு கரேகை ஜோதிட பூஷணமாக அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் என்னதான் குதித்தாலும் தாவினாலும் "Survival for the fittest" தத்துவம் தான். அதுக்கப்புறம் என்ன தான் எண்ணைய தடவிக் கொண்டு மண்ணில் உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்.
இப்பிடியாக நான் யூத் பெஸ்டிவல்களில் வாழ்க்கை கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் காலேஜ் டீமில் ஒரு பெரிய யூத் பெஸ்டிவலுக்கு பெரிய டீமாக அனுப்ப முடிவு செய்தார்கள். அதற்காக ஆட்களை தேர்வு செய்ய ஒரு மீட்டிங் ஏற்பாடாகி இருந்தது. இந்த மீட்டிங்க்கு நம்மள விட்டா யாரு வரப்போறா என்ற தெனாவெட்டில் போன எங்க கோஷ்டிக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. உலக மகா அதிசயமாக அந்த கூட்டத்திற்கு கொஞ்சம் பெண்கள் வந்திருந்தார்கள். பி.ஜியிலிருந்து இரண்டு மூன்று சீனியர்களும் யு.ஜியிலிருந்து இரண்டு பேரும் வந்திருந்தார்கள். டீமெல்லாம் செலெக்டாகி பார்த்தால் டம்ப் சேரட்ஸ் டீமில் என்னுடன் ஒரு பி.ஜி. சீனியர். அன்றிலிருந்து அவர்கள் அக்காவாகி விட்டார்கள். டீம் ப்ராக்டீஸுக்கு அவர்களுடன் இன்னொரு அக்காவும் வருவார்கள். நாங்கள் அப்புறம் எல்லோரும் பாசமலர்களாகி விட்டதால் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் போய் வர ஆரம்பித்தோம். இப்பிடியாக நான் அந்த ப்ரெண்டு அக்கா வீடிற்கு போய் வந்த காலத்தில் தான் எனக்கு வாழ்கையில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டது. கடவுள் இவன் பிரம்மச்சாரியாக இருந்து ஜொள்ளு விட்டதெல்லாம் போதும் என்று முடிவு கட்டிய நேரமது.
அந்த அக்காவின் வீட்டில் ஓரளவுக்கு பழக்கமான போது தான் அந்தப் பெண் அறிமுகமானாள். அக்காவின் சித்தப்பா பெண். ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடு. உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்கும் பழக்கமில்லையாதலால் அந்தப் பெண்ணைப் பார்த்த போது எந்த விதமான எண்ணமும் உண்டாகவில்லை. அவர்கள் உறவினர் பையன் ஒருவன் மிருதங்கம் கற்றுக் கொண்டிருந்தான். என் மிருதங்கம் வார் கொஞ்சம் இழுத்துக் கட்ட வேண்டியிருந்ததால் அவனிடமிருந்து போட்டிகளுக்கு மிருதங்கம் கடன் வாங்கிக் கொள்வேன். இது போக அவர்கள் வீட்டில் வாசிக்க சொல்லி அங்கே வேறு அடிக்கடி கச்சேரி நடக்கும். கூட்டுக் குடும்பமாகையால் எல்லோரும் கூட்டமாக உட்கார்ந்து கேட்பார்கள். வாசித்து முடித்தால் தேங்காய் மூடிக்குப் பதிலாக "சபாஷ்" என்று சொல்லி தோசையும் புளிக்காத தயிரும் டிபன் கிடைக்கும். வெட்கப்பட்டுக் கொண்டே நாலு தோசையை சத்தம் போடாமல் சாப்பிட்டுவிட்டு வருவேன்.
நாளாக நாளாக எதோ மாற்றத்தை உணர முடிந்தது. இந்தப் பெண்ணின் அப்பா அம்மாவிற்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. மிருதங்கம் வாசிக்காமலே சில நாள் தோசை டிபன் எல்லாம் கிடைக்கும். இந்தப் பெண்ணும் கொஞ்சம் துறுதுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கும். ஒரு நாள் வழக்கம் போல் அவர்கள் வீட்டில் (ஓசி) மிருதங்கக் கச்சேரி. ஊரிலிருந்து அத்தை வந்திருந்தார்கள் இதுபோக சமையல் எல்லாம் முடிந்து அவர்கள் வீட்டுப் பெண்கள் கூட்டம் வேறு. சும்மாவே நல்ல வாசிப்போம் இப்பிடி கோபியர் ரமணனாக பொம்மனாட்டிகள் படை சூழ வாசிக்க சொன்னா கேட்கவா வேண்டும். சிவாஜி சொல்கிற மாதிரி நாபிக் கமலத்திலேர்ந்து புறப்பட்டு சும்மா பிச்சு உதறிட்டேன். தனியாவர்தனம் வாசித்து முடிச்சாச்சு யாருக்கும் எழுந்து போக மனசில்லை. மிருதங்கம் வாசிச்ச புள்ளையாண்டனுக்கு பசிக்குமே சட்னியோடு தோசை வார்த்துப் போடலாமே என்று தோணாமல் "பாட்டோடு மிருதங்கம் வாசிச்சா நன்னா இருக்கும், அவளே பாடு இவளே பாடு" என்று ஏலம் நடந்து கொண்டிருந்தது. போடுகிற நாலு தோசைக்கு இதெல்லாம் கொஞ்சம் ஒவர் என்று இன்னிக்குத் தோன்றுகிறது, அன்னிக்குத் தோணலை, வயசு அப்பிடி. கடைசியில் இந்தப் பெண் நல்லாப் பாடுவாள் என்று இவளிடம் வந்து நின்றது. இந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் வெட்கம். பிகு பண்ணிக்கொண்டிருந்தாள். ஒரு பாட்டி சும்மா இருக்காமல் "ஏண்டியம்மா எதுக்குடி வெட்கம் அண்ணா மாதிரி தானே சும்மா பாடு " என்று கொளுத்தி போட்டுவிட்டார்.
இந்தப் பெண்ணுக்கு வந்ததே கோபம். "அண்ணான்னு சொன்னாலாம் பாட மாட்டேன்" என்று படக்கென்று எழுந்து போய்விட்டாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. உள்ளூர தேன் குடித்த மாதிரி இருந்தாலும் சபையில் விளக்கெண்ணய் குடித்த மாதிரி நெளிந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அன்றைக்கு எல்லோரும் சீரியலில் வருவது மாதிரி சிரித்து சமாளித்துவிட்டார்கள். அப்புறம் அந்த அக்காவும் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு ரொம்ப நல்ல பையன் மாதிரி படம் போட்டுக் கொண்டிருந்தேன். அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகி எல்லோருக்கும் ரொம்பவே என்னைப் பிடித்து விட்டது அவர்கள் தெரு நாயைத் தவிர. மொசப் பிடிக்கிற மூஞ்சியை நாய்க்குப் பார்த்தால் தெரியாதோ என்னைப் பார்த்தாலே குரைக்கும். அப்புறம் ஊரில இல்லாத பாலிடிக்கெஸெல்லாம் பண்ணி பையன் சொக்கத் தஙகம், பெண் தங்கத்தில் பதித்த வைரமாக இருப்பாள் ஜோடி நன்றாக இருக்கும் என்று அவர்கள் வீட்டில் எல்லோரையும் நகைக்கடை சேட்டுகள் மாதிரி பேச வைத்துவிட்டேன். பெண்ணை விட அவ அப்பா அம்மாக்கு என் மேலெ லவ்வுஸ் ஜாஸ்தியாயிடுத்து.
ஆனால் எங்கள் வீட்டில் எனது அக்காக்கு என் லட்சணம் தெரியுமாகையால் முதலிலேயே கண்டுபிடித்துவிட்டாள். ஆனால் நான் சரணடர் ஆகி அவளுக்கும் இவளைப் பிடித்துவிட்டதாகையால் ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக இவளை எங்கள் வீட்டிற்கு அப்பப்போ சும்மா வருகிற மாதிரி வரச் சொல்லி இவளும் வந்தாள். இவளைப் பார்த்தவுடனேயே எங்கள் வீட்டில் பிடித்துவிடும் என்று போட்ட கணக்கு தப்பவில்லை. கூடவே நானும் யாருக்கு என்ன பிடிக்குமென்று கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருந்தேனாகையால் விரைவிலேயே எங்கள் வீட்டிலும் எல்லோரும் "நகைக் கடை சேட்டுக்கள்"ளாகினர். அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் வீட்டில் என்னிடம் "உனக்கு ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறோம். உனக்கு பிடித்திருக்கிறதா என்று சொல்" என்று இந்தப் பெண்ணைக் கை காட்ட, நானும் "பெரியவர்கள் நீங்கள் பார்த்து எது செய்தாலும் சரி, எனக்குன்னு எந்த தனி அப்பிப்ராயமும் இல்லை நீங்க என்ன சொலறேளோ அதக் கேக்கறேன்" என்று சொல்ல அவர்களும் "புள்ளயாண்டன்னா இப்பிடினா இருக்கனும்"ன்னு சிலாகிக்க, அப்புறமென்ன டும் டும் டும் கொட்டி ஓடியே விட்டது ஆறு வருடங்கள்.
"ஹூம்...மிருதங்கம் வாசிச்சதுக்கு ஒத்த தேங்காய் மூடி குடுத்து அனுப்பாம தோசையும் போட்டு பொண்ண குடுத்தா பாருங்கோ...எல்லாம் விதி"
"ஹூம்...ஒத்த தேங்காய் மூடியே குடிதிருக்கலாம் சட்னி வைச்சு அடுத்தநாளோடு முடிஞ்சு போயிருக்கும்..."
"ஏன் சொல்லமாட்டேள்...நகை,பட்டுப்புடவை எல்லாம் சூப்பரா செலெக்ட் செய்யறேன்னு எல்லோரும் சொல்றா ஆனா வாழ்கையில முக்கியமான செலெக்க்ஷன்ல கோட்டைவிட்டுடேனே.."
"இதத் தான் Blessing in disguise-ம்பான் என்ன பண்றது ஐஸ்வர்யா ராயோட ஜாதகம் பொருந்தல அவளோட நஷ்டம் உனக்கு பேரதிர்ஷ்டமா அமைஞ்சிருக்கு..."
எல்லாப் புருஷன் பெண்டாட்டிகள் மாதிரியும் நாங்களும் ஊடல்களுக்கு நடுவே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
- அடுத்த பதிவோடு ஜொள்ளுவது நிறைவடையும்.
ஜொள்ளு விடுகிற குரங்குகள் பலவிதமான ஸ்ட்ரேடிஜி வைத்திருப்பார்கள். எனக்கு மிருதங்க ரவை எப்பிடி உபயோகமாக இருந்ததோ அது மாதிரி. நானெல்லாம் ஜுஜுபி. சில புத்திசாலி குரங்குகள் தாவறதும் குதிக்கிறதும் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இப்பிடி தான் ஹாஸ்டல் என்றாலே திருட்டு பீர், தம், சரோஜாதேவி புத்தகங்கள் (தெரியாதவர்கள் விட்டுவிடவும் இதற்கு ஏன் இந்த கோட்வேர்ட் எனக்கும் தெரியாது) என்று மலிந்து கிடக்கும் இடத்தில் ஒரு குரங்கு மட்டும் சமத்தாக வாழ்க்கை ஜோஸியம், கைரேகை சாஸ்திரம் என்று குடைந்து கொண்டிருந்தது. அடுத்த யூத் பெஸ்டிவலில் அந்தக் குரங்கு ஜிகிடிகள் கையைப் பிடித்து ஜோஸியம் சொல்ல ஆரம்பித்துவிட்டது. அப்புறம் எல்லாக் குல்லாக் குரங்குகளும் கொஞ்ச நாளைக்கு கரேகை ஜோதிட பூஷணமாக அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் என்னதான் குதித்தாலும் தாவினாலும் "Survival for the fittest" தத்துவம் தான். அதுக்கப்புறம் என்ன தான் எண்ணைய தடவிக் கொண்டு மண்ணில் உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்.
இப்பிடியாக நான் யூத் பெஸ்டிவல்களில் வாழ்க்கை கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் காலேஜ் டீமில் ஒரு பெரிய யூத் பெஸ்டிவலுக்கு பெரிய டீமாக அனுப்ப முடிவு செய்தார்கள். அதற்காக ஆட்களை தேர்வு செய்ய ஒரு மீட்டிங் ஏற்பாடாகி இருந்தது. இந்த மீட்டிங்க்கு நம்மள விட்டா யாரு வரப்போறா என்ற தெனாவெட்டில் போன எங்க கோஷ்டிக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. உலக மகா அதிசயமாக அந்த கூட்டத்திற்கு கொஞ்சம் பெண்கள் வந்திருந்தார்கள். பி.ஜியிலிருந்து இரண்டு மூன்று சீனியர்களும் யு.ஜியிலிருந்து இரண்டு பேரும் வந்திருந்தார்கள். டீமெல்லாம் செலெக்டாகி பார்த்தால் டம்ப் சேரட்ஸ் டீமில் என்னுடன் ஒரு பி.ஜி. சீனியர். அன்றிலிருந்து அவர்கள் அக்காவாகி விட்டார்கள். டீம் ப்ராக்டீஸுக்கு அவர்களுடன் இன்னொரு அக்காவும் வருவார்கள். நாங்கள் அப்புறம் எல்லோரும் பாசமலர்களாகி விட்டதால் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் போய் வர ஆரம்பித்தோம். இப்பிடியாக நான் அந்த ப்ரெண்டு அக்கா வீடிற்கு போய் வந்த காலத்தில் தான் எனக்கு வாழ்கையில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டது. கடவுள் இவன் பிரம்மச்சாரியாக இருந்து ஜொள்ளு விட்டதெல்லாம் போதும் என்று முடிவு கட்டிய நேரமது.
அந்த அக்காவின் வீட்டில் ஓரளவுக்கு பழக்கமான போது தான் அந்தப் பெண் அறிமுகமானாள். அக்காவின் சித்தப்பா பெண். ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடு. உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்கும் பழக்கமில்லையாதலால் அந்தப் பெண்ணைப் பார்த்த போது எந்த விதமான எண்ணமும் உண்டாகவில்லை. அவர்கள் உறவினர் பையன் ஒருவன் மிருதங்கம் கற்றுக் கொண்டிருந்தான். என் மிருதங்கம் வார் கொஞ்சம் இழுத்துக் கட்ட வேண்டியிருந்ததால் அவனிடமிருந்து போட்டிகளுக்கு மிருதங்கம் கடன் வாங்கிக் கொள்வேன். இது போக அவர்கள் வீட்டில் வாசிக்க சொல்லி அங்கே வேறு அடிக்கடி கச்சேரி நடக்கும். கூட்டுக் குடும்பமாகையால் எல்லோரும் கூட்டமாக உட்கார்ந்து கேட்பார்கள். வாசித்து முடித்தால் தேங்காய் மூடிக்குப் பதிலாக "சபாஷ்" என்று சொல்லி தோசையும் புளிக்காத தயிரும் டிபன் கிடைக்கும். வெட்கப்பட்டுக் கொண்டே நாலு தோசையை சத்தம் போடாமல் சாப்பிட்டுவிட்டு வருவேன்.
நாளாக நாளாக எதோ மாற்றத்தை உணர முடிந்தது. இந்தப் பெண்ணின் அப்பா அம்மாவிற்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. மிருதங்கம் வாசிக்காமலே சில நாள் தோசை டிபன் எல்லாம் கிடைக்கும். இந்தப் பெண்ணும் கொஞ்சம் துறுதுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கும். ஒரு நாள் வழக்கம் போல் அவர்கள் வீட்டில் (ஓசி) மிருதங்கக் கச்சேரி. ஊரிலிருந்து அத்தை வந்திருந்தார்கள் இதுபோக சமையல் எல்லாம் முடிந்து அவர்கள் வீட்டுப் பெண்கள் கூட்டம் வேறு. சும்மாவே நல்ல வாசிப்போம் இப்பிடி கோபியர் ரமணனாக பொம்மனாட்டிகள் படை சூழ வாசிக்க சொன்னா கேட்கவா வேண்டும். சிவாஜி சொல்கிற மாதிரி நாபிக் கமலத்திலேர்ந்து புறப்பட்டு சும்மா பிச்சு உதறிட்டேன். தனியாவர்தனம் வாசித்து முடிச்சாச்சு யாருக்கும் எழுந்து போக மனசில்லை. மிருதங்கம் வாசிச்ச புள்ளையாண்டனுக்கு பசிக்குமே சட்னியோடு தோசை வார்த்துப் போடலாமே என்று தோணாமல் "பாட்டோடு மிருதங்கம் வாசிச்சா நன்னா இருக்கும், அவளே பாடு இவளே பாடு" என்று ஏலம் நடந்து கொண்டிருந்தது. போடுகிற நாலு தோசைக்கு இதெல்லாம் கொஞ்சம் ஒவர் என்று இன்னிக்குத் தோன்றுகிறது, அன்னிக்குத் தோணலை, வயசு அப்பிடி. கடைசியில் இந்தப் பெண் நல்லாப் பாடுவாள் என்று இவளிடம் வந்து நின்றது. இந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் வெட்கம். பிகு பண்ணிக்கொண்டிருந்தாள். ஒரு பாட்டி சும்மா இருக்காமல் "ஏண்டியம்மா எதுக்குடி வெட்கம் அண்ணா மாதிரி தானே சும்மா பாடு " என்று கொளுத்தி போட்டுவிட்டார்.
இந்தப் பெண்ணுக்கு வந்ததே கோபம். "அண்ணான்னு சொன்னாலாம் பாட மாட்டேன்" என்று படக்கென்று எழுந்து போய்விட்டாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. உள்ளூர தேன் குடித்த மாதிரி இருந்தாலும் சபையில் விளக்கெண்ணய் குடித்த மாதிரி நெளிந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அன்றைக்கு எல்லோரும் சீரியலில் வருவது மாதிரி சிரித்து சமாளித்துவிட்டார்கள். அப்புறம் அந்த அக்காவும் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு ரொம்ப நல்ல பையன் மாதிரி படம் போட்டுக் கொண்டிருந்தேன். அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகி எல்லோருக்கும் ரொம்பவே என்னைப் பிடித்து விட்டது அவர்கள் தெரு நாயைத் தவிர. மொசப் பிடிக்கிற மூஞ்சியை நாய்க்குப் பார்த்தால் தெரியாதோ என்னைப் பார்த்தாலே குரைக்கும். அப்புறம் ஊரில இல்லாத பாலிடிக்கெஸெல்லாம் பண்ணி பையன் சொக்கத் தஙகம், பெண் தங்கத்தில் பதித்த வைரமாக இருப்பாள் ஜோடி நன்றாக இருக்கும் என்று அவர்கள் வீட்டில் எல்லோரையும் நகைக்கடை சேட்டுகள் மாதிரி பேச வைத்துவிட்டேன். பெண்ணை விட அவ அப்பா அம்மாக்கு என் மேலெ லவ்வுஸ் ஜாஸ்தியாயிடுத்து.
ஆனால் எங்கள் வீட்டில் எனது அக்காக்கு என் லட்சணம் தெரியுமாகையால் முதலிலேயே கண்டுபிடித்துவிட்டாள். ஆனால் நான் சரணடர் ஆகி அவளுக்கும் இவளைப் பிடித்துவிட்டதாகையால் ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக இவளை எங்கள் வீட்டிற்கு அப்பப்போ சும்மா வருகிற மாதிரி வரச் சொல்லி இவளும் வந்தாள். இவளைப் பார்த்தவுடனேயே எங்கள் வீட்டில் பிடித்துவிடும் என்று போட்ட கணக்கு தப்பவில்லை. கூடவே நானும் யாருக்கு என்ன பிடிக்குமென்று கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருந்தேனாகையால் விரைவிலேயே எங்கள் வீட்டிலும் எல்லோரும் "நகைக் கடை சேட்டுக்கள்"ளாகினர். அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் வீட்டில் என்னிடம் "உனக்கு ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறோம். உனக்கு பிடித்திருக்கிறதா என்று சொல்" என்று இந்தப் பெண்ணைக் கை காட்ட, நானும் "பெரியவர்கள் நீங்கள் பார்த்து எது செய்தாலும் சரி, எனக்குன்னு எந்த தனி அப்பிப்ராயமும் இல்லை நீங்க என்ன சொலறேளோ அதக் கேக்கறேன்" என்று சொல்ல அவர்களும் "புள்ளயாண்டன்னா இப்பிடினா இருக்கனும்"ன்னு சிலாகிக்க, அப்புறமென்ன டும் டும் டும் கொட்டி ஓடியே விட்டது ஆறு வருடங்கள்.
"ஹூம்...மிருதங்கம் வாசிச்சதுக்கு ஒத்த தேங்காய் மூடி குடுத்து அனுப்பாம தோசையும் போட்டு பொண்ண குடுத்தா பாருங்கோ...எல்லாம் விதி"
"ஹூம்...ஒத்த தேங்காய் மூடியே குடிதிருக்கலாம் சட்னி வைச்சு அடுத்தநாளோடு முடிஞ்சு போயிருக்கும்..."
"ஏன் சொல்லமாட்டேள்...நகை,பட்டுப்புடவை எல்லாம் சூப்பரா செலெக்ட் செய்யறேன்னு எல்லோரும் சொல்றா ஆனா வாழ்கையில முக்கியமான செலெக்க்ஷன்ல கோட்டைவிட்டுடேனே.."
"இதத் தான் Blessing in disguise-ம்பான் என்ன பண்றது ஐஸ்வர்யா ராயோட ஜாதகம் பொருந்தல அவளோட நஷ்டம் உனக்கு பேரதிர்ஷ்டமா அமைஞ்சிருக்கு..."
எல்லாப் புருஷன் பெண்டாட்டிகள் மாதிரியும் நாங்களும் ஊடல்களுக்கு நடுவே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
- அடுத்த பதிவோடு ஜொள்ளுவது நிறைவடையும்.
Subscribe to:
Posts (Atom)
