மஹா ஜனங்கள் மன்னிக்கனும். ஒரு சில காரணங்களுக்காக எழுதி வைத்திருந்த பதிவுகளும் போட முடியாமல் இருக்கிறது (புத்தம் புதுசா வாங்கின கம்ப்யூட்டர் ஊத்திக்கிச்சு, டிஸ்க் பெயிலியர்). கம்ப்யூட்டர் விலை அதிகம், அதில் இருக்கும் கோப்புகளும் வேண்டுமென்பதால் சும்மா வைப்ஸ் வைத்து நல்ல பளபளன்னு துடைத்து விட்டு "இங்க தான வைச்சேன் ஸ்க்ரூட்ரைவர காணுமேன்னு..." நால் நாளாய் சீன் போட்டு ஓட்டி, டெல் கைல கால்ல விழுந்து நாளைக்கு சர்வீஸ்குக்குப் போகுது. நல்ல ஓவராயில் பண்ணிக் கொடுக்கச் சொல்லியிருக்கேன். பார்ப்போம்.
இல்லாவிட்டாலும் வாரக் கடைசிக்குள் திரும்ப பொட்டி தட்டு ஒரு பதிவாவது போடனும்னு ப்ளான் - ஏழுகுண்டல வாடா நடுவுல புகுந்து கவுத்தாம இருந்தா.
Monday, January 28, 2008
Sunday, January 06, 2008
சேல்
லேட் ஆகுவதற்கு முன்னால்(??!!!) சொல்லிவிடுகிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
கிறிஸ்துமஸ்க்கும் புத்தாண்டுக்கும் நடுவில் ஆபிஸுக்கு மட்டம். இந்த முறை ஒரு மாதத்திற்கு முன்னாலே ஹாலிடேயில் என்ன செய்ய வேண்டும் என்று உருப்படியாக திட்டம் போட்டு அதை வழக்கம் போல் குப்பையாக எல்லா சாமான்களையும் அடைத்துவைத்து உபயோகமே படுத்த முடியாத மாதிரி வைத்திருக்கும் அறையில் வைத்து பூட்டிவிட்டோம்.
உலகத் தொலைகாட்சிகளிலேயே முதன் முறையாக எல்லா என்.ஆர்.ஐக்களையும் மாதிரி நாங்களும் பாக்ஸிங் டே சேல்க்கு முதல் முறையாக படையெடுத்தோம். இந்த பாக்ஸிங் டே சேலின் மகிமையே இரண்டு வருடம் முன்னாடி தான் நண்பர்களின் வழியாக உணர்ந்து கொண்டோம். அது வரை நம்ம சேல் அனுபவமெலாம் திருநெல்வேலி போத்தீஸிலோ ஆரமெகேவியிலோ போடும் இரண்டு வைகிங் ஜெட்டி வாங்கினால் ஒரு டின்னர் பவுல் ஃப்ரீ வரை தான். அதிலேயே ஏகப்பட்ட டகால்டி வேலை நடக்கும். திருநெல்வேலியில் போத்தீஸ் ஆரெம்கெவி எல்லாம் மூன்று நான்கு கட்டிடங்களில் இருப்பதால், சும்மானாச்சுக்கும் முதலாளியோட க்ளாஸ்மேட் மாதிரி (எல்லாம் அவங்க குடும்பத்தில் நம்ம வயதில் யாராவது ஒரு ஒரு சின்னப் பையன் இருப்பார் என்ற நம்பிக்கையில்) "முதலாளி இன்னிக்கு இந்தக் கடையில் இருக்காரா இல்ல அங்க இருக்காரா"ன்னு கேட்டால் விற்பனை பிரதிநிதி கொஞ்சம் உதறலோடு "அங்க தான் இருக்கார் சார்"ன்னு சேர் எடுத்துப் போடச் சொல்லி ஒரு லெமன் ஜூஸ் தருவார். திரும்ப பில் கட்டும் போது இதே பிட்டைப் போட்டால் ஜிப் வைத்த மணிபர்ஸ் கேட்காமலே தருவார்கள். சில சமயம் ராங்கி பிடித்த காஷியர்கள் "எந்த முதலாளியக் கேக்கறீங்க"ன்னு கொக்கி போடுவார்கள். நம்ம பாரம்பரியத்தில் தாத்தா பெயர் தான் பேரனுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் "விஸ்வநாதன்.... அதான் விச்சு"ன்னு கேஷுவலாக சொன்னால் "சின்ன ஐய்யா கடைக்கு வரமாட்டாரே..பெரிய ஐய்யா தான் இருப்பார்...மணி, சார முதலாளி ருமுக்கு கூட்டிக்கிட்டு போ"ன்னு கூட ஒரு ஆள் வரும். சில சமயம் வரும் மணி நல்லவராய் இருப்பார். மணியை அப்பிடியே நைஸாக லேடிஸ் ட்ரெஸ் செக்க்ஷனுக்கு கூட்டிக்கொண்டு போய் தஙகமணி எடுத்துவைத்திருக்கும் ஜவுளிக் கடலுக்குப் பில்லைப் போட்டால் "சார் சின்ன ஐய்யாவுக்கு தெரிஞ்சவராம்"ன்னு பில் பத்து பர்ஸன்ட் டிஸ்கவுண்ட் ஆகியிருக்கும். இதுவே ராங்கி பிடித்த மணியாயிருந்தால் முதலாளியே கண்ணாயினாராய் இருப்பார். "விச்சுவ நான் ஃபோனில் பிடிச்சிக்கிறேன்ன்னு "ஹலோ யாரு துபாய் ஷேக்கா? அடுத்த கப்பல்ல முன்னூறு ஒட்டகமும் ரெண்டு எருமை மாடும் வேணும் அனுப்பிருங்க"ன்னு முக்கியமான போனுக்காக மணி கத்தரித்து விடப்படுவார். தங்கமணி நான் என்னம்மோ ரெண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டில் யாருக்கோ சொந்தம்ங்கிறமாதிரி திசைக்கே வரமாட்டார். வந்தாலும் நெஞ்சில் சளி கட்டிக் கொண்ட மாதிரி காறிக் காறித் துப்புவார் என்பதால் நானும் கண்டுகொள்ள மாட்டேன்.
இப்படியாக சேலில் வாங்கி வந்ததைப் போட்டுக்கொண்டு பவுலில் ஒரு சூப் குடித்துவிட்டோம் என்றால் சேல் சாபல்யம் அடைந்துவிடும்.
இந்த முறை வீட்டுக்குத் தேவையான முக்கியமான இரண்டு விஷயங்கள் வாங்க வேண்டி இருந்ததால் சேலுக்கு காத்துக்கொண்டிருந்தோம் அப்பிடியே, அப்பிடி என்ன தான் சேல்ன்னு பார்க்கலாம் ஒரு ஆவல். இங்கு லண்டனில் இந்த பாக்ஸிங் டே சேல் ரொம்பப் பிரபலம். சில கடைகள் காலை நாலு மணிக்கு இதற்காகத் திறப்பார்கள். ஒரு மணி நேரத்திற்குள் நல்ல உருப்படிகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிடும் என்று நண்பர்கள் பயமுறுத்தி இருந்தார்கள். நாலு மணியெல்லாம் நமக்கு வேலைக்காது என்பதால் பாதி ராத்திரி ஏழரை மணிக்கு எழுந்து, குழந்தைகளையும் கிளப்பிக் கொண்டு வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மிகப் பெரிய ஷாப்பிங் பார்க்குக்கு ஒன்பது மணிக்கு போய் சேர்ந்தால் இரண்டாயிரம் கார்கள் நிப்பாட்டக் கூடிய கார் பார்க்கில் இடமே இல்லை. அடிச்சுப் பிடிச்சு நிப்பாட்டி விட்டு சேலுக்குப் பிரபலமான ஒரு கடைக்குப் போனால் வெளியிலேயே பெரீய்ய்ய்ய க்யூ. மூன்று மாடிக் கட்டமும் புல்லாம். இனிமே எத்தனை பேர்கள் வெளியே வருகிறார்களோ அத்தனை பேர்கள் தான் உள்ளே போகலாம்ன்னு ரெண்டு கடோத் கஜன்கள் காவலுக்கு இருந்தார்கள்.
அரை மணி நேரம் தேவுடு காத்து உள்ளே போனால் களேபரமாக இருந்தது. பெண்கள் எல்லாம் கொல்லைப் புறத்தில் காயப் போட்ட துணியை மழை வந்தால் எடுக்கிற அவசர கதியில் துணிகளை அள்ளிக் கொண்டிருந்தார்கள். முக்கால் வாசி துணி அடுக்குகள் காலியாக பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது. இதைப் பார்க்கவா வெளியே இந்த மூதேவி க்யூல வரச்சொன்னான்னு எனக்குக் கடுப்பு. பக்கத்து வீட்டு குண்டு இங்கிலீஷ் மாமா இடுப்பு சைஸ்க்கு மட்டும் உள்ளாடை சல்லிசாக கிடைத்தது. அதில் ஒரு காலிலே என் முழு உடம்பும் போய்விடும், அவ்வளவு பெரிய சைஸ். பேசாமல் அதை எடுத்துக் கொண்டு அடுத்த தரம் ஊருக்குகுப் போகும் போது ஊரில் ஆல்டர் பண்ணி எடுத்துவரலாமா என்று தோன்றியது. தங்கமணியிடம் கேட்டால் திரும்பவும் அவருக்கு நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும், அத்தோடு அவருக்கு ஒரு துணிமணியும் கிடைக்கவில்லை என்ற எரிச்சலும் என் தலையில் விடியும் என்பதால் "என்ன பெரிய சேல்...எங்கூர்லலாம் ரெண்டு வாங்கினா ஒரு டின்னர் பவுல் குடுப்பாங்க தெரியுமா"ன்னு கிடைத்த குண்டு மாமா மலிவு விலை உள்ளாடையையும் திரும்ப கம்பியில் மாட்டிவிட்டு வந்துவிட்டேன்.
"இந்த இழவ விட்டா உங்களுக்கு வேற எதுவுமே கண்ணுல படாது. வெள்ளக்காரனப் பாருங்கோ என்னம்மா கேர்ல் பிரெண்டுக்கு ட்ரெஸ் எடுக்கிறான். நான் கூட உங்களுக்கு ரெண்டு சட்டை எடுத்திருக்கேன்...இவ்வளவு பெரிய கடையில் உங்களுக்கு வேற எதுவுமே கண்ணுக்கு தட்டுப் படலையா"ன்னு தங்கமணி வேப்பிலையடிக்க ஆரம்பித்துவிட்டார்.
"சரி சரி வருத்தப் படாத நாளைக்கு மெட்லன்ல உனக்கு ஜமாய்ச்சிருவோம், என்னச் சொல்லி குத்தமில்லை..எனக்கு சின்ன வயசிலேயே ஜாதகத்துல கோமணதோஷம் இருக்குன்னு ஒரு ஜோசியர் சொல்லியிருக்கார், பழனியில போய் ஒரு பரிகாரம் பண்ணின்னா எல்லாம் நிவர்த்தியாகிவிடும்"ன்னு கலாய்த்து விட்டு அடுத்த நாள் வீட்டுக்குப் பக்கதிலிருந்த இன்னொரு நல்ல கடைக்கு போய் நிறைய (சரி கொஞ்சமாய்) துணிமணிகள் வாங்கினோம்.
(சே வர வர ப்ளாக் போஸ்டல் கூட சினிமா மாதிரி சுபம் போட ஆரம்பித்துவிட்டேன் :) )
கிறிஸ்துமஸ்க்கும் புத்தாண்டுக்கும் நடுவில் ஆபிஸுக்கு மட்டம். இந்த முறை ஒரு மாதத்திற்கு முன்னாலே ஹாலிடேயில் என்ன செய்ய வேண்டும் என்று உருப்படியாக திட்டம் போட்டு அதை வழக்கம் போல் குப்பையாக எல்லா சாமான்களையும் அடைத்துவைத்து உபயோகமே படுத்த முடியாத மாதிரி வைத்திருக்கும் அறையில் வைத்து பூட்டிவிட்டோம்.
உலகத் தொலைகாட்சிகளிலேயே முதன் முறையாக எல்லா என்.ஆர்.ஐக்களையும் மாதிரி நாங்களும் பாக்ஸிங் டே சேல்க்கு முதல் முறையாக படையெடுத்தோம். இந்த பாக்ஸிங் டே சேலின் மகிமையே இரண்டு வருடம் முன்னாடி தான் நண்பர்களின் வழியாக உணர்ந்து கொண்டோம். அது வரை நம்ம சேல் அனுபவமெலாம் திருநெல்வேலி போத்தீஸிலோ ஆரமெகேவியிலோ போடும் இரண்டு வைகிங் ஜெட்டி வாங்கினால் ஒரு டின்னர் பவுல் ஃப்ரீ வரை தான். அதிலேயே ஏகப்பட்ட டகால்டி வேலை நடக்கும். திருநெல்வேலியில் போத்தீஸ் ஆரெம்கெவி எல்லாம் மூன்று நான்கு கட்டிடங்களில் இருப்பதால், சும்மானாச்சுக்கும் முதலாளியோட க்ளாஸ்மேட் மாதிரி (எல்லாம் அவங்க குடும்பத்தில் நம்ம வயதில் யாராவது ஒரு ஒரு சின்னப் பையன் இருப்பார் என்ற நம்பிக்கையில்) "முதலாளி இன்னிக்கு இந்தக் கடையில் இருக்காரா இல்ல அங்க இருக்காரா"ன்னு கேட்டால் விற்பனை பிரதிநிதி கொஞ்சம் உதறலோடு "அங்க தான் இருக்கார் சார்"ன்னு சேர் எடுத்துப் போடச் சொல்லி ஒரு லெமன் ஜூஸ் தருவார். திரும்ப பில் கட்டும் போது இதே பிட்டைப் போட்டால் ஜிப் வைத்த மணிபர்ஸ் கேட்காமலே தருவார்கள். சில சமயம் ராங்கி பிடித்த காஷியர்கள் "எந்த முதலாளியக் கேக்கறீங்க"ன்னு கொக்கி போடுவார்கள். நம்ம பாரம்பரியத்தில் தாத்தா பெயர் தான் பேரனுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் "விஸ்வநாதன்.... அதான் விச்சு"ன்னு கேஷுவலாக சொன்னால் "சின்ன ஐய்யா கடைக்கு வரமாட்டாரே..பெரிய ஐய்யா தான் இருப்பார்...மணி, சார முதலாளி ருமுக்கு கூட்டிக்கிட்டு போ"ன்னு கூட ஒரு ஆள் வரும். சில சமயம் வரும் மணி நல்லவராய் இருப்பார். மணியை அப்பிடியே நைஸாக லேடிஸ் ட்ரெஸ் செக்க்ஷனுக்கு கூட்டிக்கொண்டு போய் தஙகமணி எடுத்துவைத்திருக்கும் ஜவுளிக் கடலுக்குப் பில்லைப் போட்டால் "சார் சின்ன ஐய்யாவுக்கு தெரிஞ்சவராம்"ன்னு பில் பத்து பர்ஸன்ட் டிஸ்கவுண்ட் ஆகியிருக்கும். இதுவே ராங்கி பிடித்த மணியாயிருந்தால் முதலாளியே கண்ணாயினாராய் இருப்பார். "விச்சுவ நான் ஃபோனில் பிடிச்சிக்கிறேன்ன்னு "ஹலோ யாரு துபாய் ஷேக்கா? அடுத்த கப்பல்ல முன்னூறு ஒட்டகமும் ரெண்டு எருமை மாடும் வேணும் அனுப்பிருங்க"ன்னு முக்கியமான போனுக்காக மணி கத்தரித்து விடப்படுவார். தங்கமணி நான் என்னம்மோ ரெண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டில் யாருக்கோ சொந்தம்ங்கிறமாதிரி திசைக்கே வரமாட்டார். வந்தாலும் நெஞ்சில் சளி கட்டிக் கொண்ட மாதிரி காறிக் காறித் துப்புவார் என்பதால் நானும் கண்டுகொள்ள மாட்டேன்.
இப்படியாக சேலில் வாங்கி வந்ததைப் போட்டுக்கொண்டு பவுலில் ஒரு சூப் குடித்துவிட்டோம் என்றால் சேல் சாபல்யம் அடைந்துவிடும்.
இந்த முறை வீட்டுக்குத் தேவையான முக்கியமான இரண்டு விஷயங்கள் வாங்க வேண்டி இருந்ததால் சேலுக்கு காத்துக்கொண்டிருந்தோம் அப்பிடியே, அப்பிடி என்ன தான் சேல்ன்னு பார்க்கலாம் ஒரு ஆவல். இங்கு லண்டனில் இந்த பாக்ஸிங் டே சேல் ரொம்பப் பிரபலம். சில கடைகள் காலை நாலு மணிக்கு இதற்காகத் திறப்பார்கள். ஒரு மணி நேரத்திற்குள் நல்ல உருப்படிகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிடும் என்று நண்பர்கள் பயமுறுத்தி இருந்தார்கள். நாலு மணியெல்லாம் நமக்கு வேலைக்காது என்பதால் பாதி ராத்திரி ஏழரை மணிக்கு எழுந்து, குழந்தைகளையும் கிளப்பிக் கொண்டு வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மிகப் பெரிய ஷாப்பிங் பார்க்குக்கு ஒன்பது மணிக்கு போய் சேர்ந்தால் இரண்டாயிரம் கார்கள் நிப்பாட்டக் கூடிய கார் பார்க்கில் இடமே இல்லை. அடிச்சுப் பிடிச்சு நிப்பாட்டி விட்டு சேலுக்குப் பிரபலமான ஒரு கடைக்குப் போனால் வெளியிலேயே பெரீய்ய்ய்ய க்யூ. மூன்று மாடிக் கட்டமும் புல்லாம். இனிமே எத்தனை பேர்கள் வெளியே வருகிறார்களோ அத்தனை பேர்கள் தான் உள்ளே போகலாம்ன்னு ரெண்டு கடோத் கஜன்கள் காவலுக்கு இருந்தார்கள்.
அரை மணி நேரம் தேவுடு காத்து உள்ளே போனால் களேபரமாக இருந்தது. பெண்கள் எல்லாம் கொல்லைப் புறத்தில் காயப் போட்ட துணியை மழை வந்தால் எடுக்கிற அவசர கதியில் துணிகளை அள்ளிக் கொண்டிருந்தார்கள். முக்கால் வாசி துணி அடுக்குகள் காலியாக பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது. இதைப் பார்க்கவா வெளியே இந்த மூதேவி க்யூல வரச்சொன்னான்னு எனக்குக் கடுப்பு. பக்கத்து வீட்டு குண்டு இங்கிலீஷ் மாமா இடுப்பு சைஸ்க்கு மட்டும் உள்ளாடை சல்லிசாக கிடைத்தது. அதில் ஒரு காலிலே என் முழு உடம்பும் போய்விடும், அவ்வளவு பெரிய சைஸ். பேசாமல் அதை எடுத்துக் கொண்டு அடுத்த தரம் ஊருக்குகுப் போகும் போது ஊரில் ஆல்டர் பண்ணி எடுத்துவரலாமா என்று தோன்றியது. தங்கமணியிடம் கேட்டால் திரும்பவும் அவருக்கு நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும், அத்தோடு அவருக்கு ஒரு துணிமணியும் கிடைக்கவில்லை என்ற எரிச்சலும் என் தலையில் விடியும் என்பதால் "என்ன பெரிய சேல்...எங்கூர்லலாம் ரெண்டு வாங்கினா ஒரு டின்னர் பவுல் குடுப்பாங்க தெரியுமா"ன்னு கிடைத்த குண்டு மாமா மலிவு விலை உள்ளாடையையும் திரும்ப கம்பியில் மாட்டிவிட்டு வந்துவிட்டேன்.
"இந்த இழவ விட்டா உங்களுக்கு வேற எதுவுமே கண்ணுல படாது. வெள்ளக்காரனப் பாருங்கோ என்னம்மா கேர்ல் பிரெண்டுக்கு ட்ரெஸ் எடுக்கிறான். நான் கூட உங்களுக்கு ரெண்டு சட்டை எடுத்திருக்கேன்...இவ்வளவு பெரிய கடையில் உங்களுக்கு வேற எதுவுமே கண்ணுக்கு தட்டுப் படலையா"ன்னு தங்கமணி வேப்பிலையடிக்க ஆரம்பித்துவிட்டார்.
"சரி சரி வருத்தப் படாத நாளைக்கு மெட்லன்ல உனக்கு ஜமாய்ச்சிருவோம், என்னச் சொல்லி குத்தமில்லை..எனக்கு சின்ன வயசிலேயே ஜாதகத்துல கோமணதோஷம் இருக்குன்னு ஒரு ஜோசியர் சொல்லியிருக்கார், பழனியில போய் ஒரு பரிகாரம் பண்ணின்னா எல்லாம் நிவர்த்தியாகிவிடும்"ன்னு கலாய்த்து விட்டு அடுத்த நாள் வீட்டுக்குப் பக்கதிலிருந்த இன்னொரு நல்ல கடைக்கு போய் நிறைய (சரி கொஞ்சமாய்) துணிமணிகள் வாங்கினோம்.
(சே வர வர ப்ளாக் போஸ்டல் கூட சினிமா மாதிரி சுபம் போட ஆரம்பித்துவிட்டேன் :) )
Thursday, December 20, 2007
இவனுங்க திருந்தவே மாட்டானுங்க
டீ.வியில் "குரு" படம் ஓடிக்கொண்டிருந்தது. "நான் வணங்குகிறேன்...சபையிலே" - துணிப் பஞ்சத்தில் அடிப்பட்ட ஸ்ரீதேவி ஆடுகிற குத்தாட்டத்துக்கு என்னம்மோ பரதநாட்டியம் மாதிரி நடராஜர் சிலையெல்லாம் வைத்திருந்தார்கள். நடராஜர் கையில் இருக்கிற உடுக்கையை கீழே வைத்துவிட்டு கண்ணைப் பொத்திக்கொள்ளாமல், என்னை மாதிரி நைஸா ஜல்சா டேன்ஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.
சாய்பாபா மாதிரி முடியை வைத்துக்கொண்டு ஒரு வில்லன் ஜன்னலிலிருந்து துப்பாக்கியால் கமலை குறிவைத்துக் கொண்டிருந்தான். ஸ்ரீதேவி பூவெல்லாம் நடராஜர் மேல் போட.. நடராஜர் இப்பவும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் கண்ணை பொத்திக் கொள்ளாமல் கவுண்டமணி மாதிரி "ஹ.. லெப்ட்ல பூசு ஹ...ரைட்டுல பூசு இங்க பார் இங்க பூசு"ன்னு போஸ் குடுத்துக் கொண்டிருந்தார்.
நடராஜரே கண்ணை முடிக்கவில்லை...இந்தப் படத்தை பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த போது நான் எதுக்காக கண்ணை மூடிக்கொண்டேன் என்று இப்ப வருத்தமாக இருந்தது.
"மாடியில குழந்தை குளிச்சிண்டு இருக்கா துண்டு எடுத்துக் குடுத்துட்டு வாங்க" அடுக்களையில் இருந்து குரல் வந்தது. அதானே...அதெல்லாம் கரெக்டாக மூக்கில வேர்த்திரும்.
ஸ்ரீதேவியைப் (இப்ப) பிடிக்காவிட்டாலும் பாட்டு நல்ல பாட்டே என்று கேட்டுக் கொண்டிருந்தேன். "ஒரு நிமிஷம் இரும்மா...நானே இங்க கணக்கு டேலியாகாம மணடைய பிச்சிக்கிட்டு இருக்கேன்.." என்ன கணக்குன்னு அடுத்து குடைச்சல் கேள்வி வராது என்ற நம்பிக்கையில் அடிச்சிவிட்டேன். மனுஷனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ரொம்ப முக்கியம்ன்னு சுவாமி சுகபோதானந்தா சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே கணக்கு குழப்பத்திலிருப்பவன் மாதிரி குரல் குடுத்ததால் இரண்டு நிமிடம் தாக்குப்பிடித்தது. ஆனால் இரண்டே நிமிடம் தான்...பாட்டு நாலரை நிமிடம். ஸ்ரீதேவி இன்னும் எனர்ஜி லெவெல் குறையாமல் ஆடிக்கொண்டிருந்தார். பாட்டும் நல்ல பாட்டு வேற.
"இப்ப என்ன கணக்கு?" வந்தே விட்டாள். பெண்களுக்கு பொறுமை இல்லை என்று எந்த மஹானுபாவர் கண்டுபிடித்தார்? கைக்கு கிடைத்த மகளின் ஹோம்வொர்க்கை கையில் திணித்து விட்டு..."எல்லாம் கரெக்டாக செஞ்சிருக்கான்னு பாரு...மேத்ஸ்ல இந்த தரம் எப்படியும் சென்டம் வாங்க வைச்சிரனும்...போன தரம் மாதிரி கோட்டை விட்டுரக்கூடாது என்ன.. அதான் டேலி பண்ணிகிட்டு இருக்கேன்...கவனமா எல்லாம் கரெக்டா இருக்கான்னு பாரு" துண்டெடுக்க நாலு கால் பாய்ச்சலில் மாடிக்கு போயேவிட்டேன். இல்லாவிட்டால் கணக்கு கணக்குன்னு ஸ்ரீதேவியக கணக்கு பண்றேன் என்று தவறாக அனர்த்தம் ஆகிவிடும் பாருங்கள் அதான்.
கிறுக்குப் பயலுங்க...இந்தப் படமெல்லாம் இப்பத் தான் போடுவானுங்க...ராத்திரி தேவுடு காத்திட்டு உட்கார்ந்திருந்தா "கும்பமேளா"ன்னு கஞ்சா அடிக்கிற சாமியார்களைப் பற்றி டாக்குமென்டரி போடுவானுங்க. இடியட் பாக்ஸுன்னு சும்மாவா பேருவைச்சிருக்காங்க.
"இங்க வா என்ன அவசரம்..?...பாரு தலையெல்லாம் இன்னும் ஈரமா இருக்கு...நல்ல துவட்டு ஜலதோஷம் பிடிச்சிக்கும்" - கீழே இந்நேரம் கண்டுபிடித்தாகியிருக்கும். உடனே போய் மாட்டிக்கிறதுக்கு நான் என்ன மெகா சீரியல் புருஷனா. "...என்ன துவட்டியிருக்க...நல்ல ஈரம் போகவேணாமா...அந்த ஹேர்டிரையர எடு...போட்டுவிடறேன்"
"சாப்பாடு ரெடி டயமாச்சு...கீழவாங்க ரெண்டு பேரும்" சவுண்டு விடறது எனக்குத் தான். வீரனுக்கு இதெல்லாம் அழகில்லை..."சரி வா கீழ போய் சாப்பிடலாம்"
"என்ன சாப்பாடு சாப்பிடற...? ஊர்ல எல்லாரும் தென்னாலிராமன் குதிரை வளர்த்த மாதிரி வளர்த்திருக்கான்னு சொல்றாங்க...இங்க வா நான் ஊட்டிவிடறேன்...என்ன சாதம் போட்டிருக்க குழந்தைக்கு...கூட கொஞ்சம் போடு " எதிராளி அடி போடறதுக்கு டயமே குடுக்கக் கூடாது நாம் முதல் அடி போட்டுறனும் புதுப்பேட்டையில் செல்வராகவன் சொல்லியிருக்கார்.
"நல்ல காய்கறியெல்லாம் சாப்பிடனும். அதான் ஹெல்தி. யோகா சொல்லித் தரேன் அப்பா புக்குல நிறைய படிச்சிருக்கேன்...முதல்ல பிரீதிங் எக்ஸர்சைஸ்...அப்புறம்..."
"இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்.." பாட்டு அடுக்களையிலிருந்து வந்தாலும் மெசேஜ் எனக்குத் தான். கண்டுக்கவே கூடாது. இருக்கானோ இல்லையோ ஸ்கீரினப் பார்த்து "என்கிட்ட வம்பு வைசுக்காதேன்னு..அப்புறம் அதாகிடுவ இதாகிடுவன்னு" ஹீரோக்கள்லாம் சவுண்டு குடுக்கற மாதிரி எதாவது உளறிக்கிட்டே இருக்கனும். இல்ல எதிராளி சுதாரிச்சிக்குவாங்க.
சானல் சிபிபீஸ்க்கு மாறியிருந்தது. டெலிடப்பீஸ் லூஸு மாதிரி கெக்கபிக்கன்னு சிரித்துக் கொண்டிருந்தது. சதிலீலாவதி எங்க சித்தப்பா பொண்ணு தான்னு பண்ற சதி இது. நாம சேனல திருப்பி மாத்தி நம்மை மறந்து பார்த்துகிட்டு இருப்போம்..வந்து கையும் கள்வுமா மாட்டலாம்ன்னு சதி. "எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்.." பாட்டு கூட நல்லா குன்ஸா தான் இருக்கும். பாட்டு ஆரம்பிச்சிருக்கும் இந்நேரம். மனுஷனுக்கு சகிப்புத் தன்மை ரொம்ப முக்கியம். பிரித்விராஜ் வரும் போது நாங்க இந்த அராஜகமா பண்றோம். இல்ல சித்தார்த் வரும் போது சேனல மாத்துரோமா? எக்கேடும் கெட்டுப் போறான்னு பக்கத்துல இருக்கிற ஜெனிலியாவை பார்த்துகிட்டே சகிப்புத் தன்மை காட்டலையா?
இதாவது பரவாயில்ல ...என்ன ரசனைப்பா...மனுஷனுக்கு ரசனை ரொம்ப முக்கியம். வயசான ஹாலிவுட் தாத்தாக்களையெல்லம் பார்த்து ஜொள்ளுவிட்டுக்கிட்டு....ஜார்ஜ் க்ளூனி, ஷான் கானெரி...ஏன் அவங்க தாத்தாவை ஏன் விட்டுட்டீங்க...? நாங்க மனோரமாவைப் பார்த்து ஜொள்ளு விடறோமா?..அப்பிடி ஒரு கபோதிய மட்டும் என் கண்ணுல காட்டச் சொல்லுங்க.......ரசனை..ரசனை..மனுஷனுக்கு...ரொம்ப முக்கியம்.
"என்ன முனுமுனுப்பு??...சேனல மாத்தனும் போல இருக்குமே...?"
"சே...சே...என் ரசனைய பத்தி என்ன நினைச்சிகிட்டு இருக்க?....உங்கள மாதிரியா ..ஏதோ சூர்யானா கூட ஒத்துக்கலாம்..."
"என்னிக்கு நீங்க சுற்றும் விழிச் சுடரேக்கு ஆடிக் காட்டினீங்களோ அன்னிக்கிலெர்ந்து எனக்கு அவன பிடிக்காம போயிடிச்சு..."
"ஹ...அதெல்லாம் இல்ல...நீங்களெல்லாம் ஓவரா வழிஞ்ச வழிசல்ல மவனே ஒற்றே படம்...அப்படியே ஓய்ஞ்சு போயிட்டான்...இப்ப பாரு விளக்கெண்ணை ஊத்தினா இப்படி எரியும் மண்னெண்ணை ஊத்தினா அப்பிடி எரியும்ன்னு பஸ்ஸடாண்டு பக்கம் பெட்டர்மாஸ்க் விளக்கு வைச்சு லேகியம் விக்கிறவன் மாதிரி டயலாக் பேசிக்கிட்டு திரியறான்".
"இங்க மட்டும் என்ன வாழுதாம்...மீரா ஜாஸ்மினாவது என்ன ஆச்சு?...மல்லிகா கபூர்...அந்த ஒரு படத்துக்கு அப்புறம் தமிழ்ல படத்தையே காணோம்..." இன்னும் பல பெயர்கள் வர ஆரம்பித்தன.
"மனுஷன் கொஞ்சம் நிம்மதியா சாப்பிடட்டுமா...காலைலேர்ந்து பசி உயிரப் போகுது..." வீரம்னா என்ன தெரியுமா பயப்படாத மாதிரி நடிக்கத் தெரிவது குருதிப்புனல்ல தலைவர் சொல்லியிருக்கார்.
ஆய்ஞ்சு ஓய்ஞ்சு கிடைச்ச கேப்ல ரிமோட உஷார் பண்ணி சேனல மாத்தினா....நம்பியார் குழல் புட்டு செய்யற கேனை கையில மாட்டிக்கிட்டு.."மைக் மைக்"ன்னு மைக்கே இல்லாம...பிளாக் அண்ட் ஒயிட் டீவியில சாய்பாபா வில்லன் கமலை காரில் துரத்துவதை பார்த்துக் கொண்டு ரன்னிங் கமெண்ட்ரி குடுத்துக்கிட்டு இருக்கார். கூட இருக்கிற நடிகை வேற ஓவரா ரியாக்ஷன் காட்டுது.
இனிமே சண்டைக் காட்சி தான். தூ இதெல்லாம் ஒரு படமான்னு டீ.வியை அணைத்துவிட்டேன். இவனுங்க திருந்தவே மாட்டனுங்க...
சாய்பாபா மாதிரி முடியை வைத்துக்கொண்டு ஒரு வில்லன் ஜன்னலிலிருந்து துப்பாக்கியால் கமலை குறிவைத்துக் கொண்டிருந்தான். ஸ்ரீதேவி பூவெல்லாம் நடராஜர் மேல் போட.. நடராஜர் இப்பவும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் கண்ணை பொத்திக் கொள்ளாமல் கவுண்டமணி மாதிரி "ஹ.. லெப்ட்ல பூசு ஹ...ரைட்டுல பூசு இங்க பார் இங்க பூசு"ன்னு போஸ் குடுத்துக் கொண்டிருந்தார்.
நடராஜரே கண்ணை முடிக்கவில்லை...இந்தப் படத்தை பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த போது நான் எதுக்காக கண்ணை மூடிக்கொண்டேன் என்று இப்ப வருத்தமாக இருந்தது.
"மாடியில குழந்தை குளிச்சிண்டு இருக்கா துண்டு எடுத்துக் குடுத்துட்டு வாங்க" அடுக்களையில் இருந்து குரல் வந்தது. அதானே...அதெல்லாம் கரெக்டாக மூக்கில வேர்த்திரும்.
ஸ்ரீதேவியைப் (இப்ப) பிடிக்காவிட்டாலும் பாட்டு நல்ல பாட்டே என்று கேட்டுக் கொண்டிருந்தேன். "ஒரு நிமிஷம் இரும்மா...நானே இங்க கணக்கு டேலியாகாம மணடைய பிச்சிக்கிட்டு இருக்கேன்.." என்ன கணக்குன்னு அடுத்து குடைச்சல் கேள்வி வராது என்ற நம்பிக்கையில் அடிச்சிவிட்டேன். மனுஷனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ரொம்ப முக்கியம்ன்னு சுவாமி சுகபோதானந்தா சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே கணக்கு குழப்பத்திலிருப்பவன் மாதிரி குரல் குடுத்ததால் இரண்டு நிமிடம் தாக்குப்பிடித்தது. ஆனால் இரண்டே நிமிடம் தான்...பாட்டு நாலரை நிமிடம். ஸ்ரீதேவி இன்னும் எனர்ஜி லெவெல் குறையாமல் ஆடிக்கொண்டிருந்தார். பாட்டும் நல்ல பாட்டு வேற.
"இப்ப என்ன கணக்கு?" வந்தே விட்டாள். பெண்களுக்கு பொறுமை இல்லை என்று எந்த மஹானுபாவர் கண்டுபிடித்தார்? கைக்கு கிடைத்த மகளின் ஹோம்வொர்க்கை கையில் திணித்து விட்டு..."எல்லாம் கரெக்டாக செஞ்சிருக்கான்னு பாரு...மேத்ஸ்ல இந்த தரம் எப்படியும் சென்டம் வாங்க வைச்சிரனும்...போன தரம் மாதிரி கோட்டை விட்டுரக்கூடாது என்ன.. அதான் டேலி பண்ணிகிட்டு இருக்கேன்...கவனமா எல்லாம் கரெக்டா இருக்கான்னு பாரு" துண்டெடுக்க நாலு கால் பாய்ச்சலில் மாடிக்கு போயேவிட்டேன். இல்லாவிட்டால் கணக்கு கணக்குன்னு ஸ்ரீதேவியக கணக்கு பண்றேன் என்று தவறாக அனர்த்தம் ஆகிவிடும் பாருங்கள் அதான்.
கிறுக்குப் பயலுங்க...இந்தப் படமெல்லாம் இப்பத் தான் போடுவானுங்க...ராத்திரி தேவுடு காத்திட்டு உட்கார்ந்திருந்தா "கும்பமேளா"ன்னு கஞ்சா அடிக்கிற சாமியார்களைப் பற்றி டாக்குமென்டரி போடுவானுங்க. இடியட் பாக்ஸுன்னு சும்மாவா பேருவைச்சிருக்காங்க.
"இங்க வா என்ன அவசரம்..?...பாரு தலையெல்லாம் இன்னும் ஈரமா இருக்கு...நல்ல துவட்டு ஜலதோஷம் பிடிச்சிக்கும்" - கீழே இந்நேரம் கண்டுபிடித்தாகியிருக்கும். உடனே போய் மாட்டிக்கிறதுக்கு நான் என்ன மெகா சீரியல் புருஷனா. "...என்ன துவட்டியிருக்க...நல்ல ஈரம் போகவேணாமா...அந்த ஹேர்டிரையர எடு...போட்டுவிடறேன்"
"சாப்பாடு ரெடி டயமாச்சு...கீழவாங்க ரெண்டு பேரும்" சவுண்டு விடறது எனக்குத் தான். வீரனுக்கு இதெல்லாம் அழகில்லை..."சரி வா கீழ போய் சாப்பிடலாம்"
"என்ன சாப்பாடு சாப்பிடற...? ஊர்ல எல்லாரும் தென்னாலிராமன் குதிரை வளர்த்த மாதிரி வளர்த்திருக்கான்னு சொல்றாங்க...இங்க வா நான் ஊட்டிவிடறேன்...என்ன சாதம் போட்டிருக்க குழந்தைக்கு...கூட கொஞ்சம் போடு " எதிராளி அடி போடறதுக்கு டயமே குடுக்கக் கூடாது நாம் முதல் அடி போட்டுறனும் புதுப்பேட்டையில் செல்வராகவன் சொல்லியிருக்கார்.
"நல்ல காய்கறியெல்லாம் சாப்பிடனும். அதான் ஹெல்தி. யோகா சொல்லித் தரேன் அப்பா புக்குல நிறைய படிச்சிருக்கேன்...முதல்ல பிரீதிங் எக்ஸர்சைஸ்...அப்புறம்..."
"இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்.." பாட்டு அடுக்களையிலிருந்து வந்தாலும் மெசேஜ் எனக்குத் தான். கண்டுக்கவே கூடாது. இருக்கானோ இல்லையோ ஸ்கீரினப் பார்த்து "என்கிட்ட வம்பு வைசுக்காதேன்னு..அப்புறம் அதாகிடுவ இதாகிடுவன்னு" ஹீரோக்கள்லாம் சவுண்டு குடுக்கற மாதிரி எதாவது உளறிக்கிட்டே இருக்கனும். இல்ல எதிராளி சுதாரிச்சிக்குவாங்க.
சானல் சிபிபீஸ்க்கு மாறியிருந்தது. டெலிடப்பீஸ் லூஸு மாதிரி கெக்கபிக்கன்னு சிரித்துக் கொண்டிருந்தது. சதிலீலாவதி எங்க சித்தப்பா பொண்ணு தான்னு பண்ற சதி இது. நாம சேனல திருப்பி மாத்தி நம்மை மறந்து பார்த்துகிட்டு இருப்போம்..வந்து கையும் கள்வுமா மாட்டலாம்ன்னு சதி. "எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்.." பாட்டு கூட நல்லா குன்ஸா தான் இருக்கும். பாட்டு ஆரம்பிச்சிருக்கும் இந்நேரம். மனுஷனுக்கு சகிப்புத் தன்மை ரொம்ப முக்கியம். பிரித்விராஜ் வரும் போது நாங்க இந்த அராஜகமா பண்றோம். இல்ல சித்தார்த் வரும் போது சேனல மாத்துரோமா? எக்கேடும் கெட்டுப் போறான்னு பக்கத்துல இருக்கிற ஜெனிலியாவை பார்த்துகிட்டே சகிப்புத் தன்மை காட்டலையா?
இதாவது பரவாயில்ல ...என்ன ரசனைப்பா...மனுஷனுக்கு ரசனை ரொம்ப முக்கியம். வயசான ஹாலிவுட் தாத்தாக்களையெல்லம் பார்த்து ஜொள்ளுவிட்டுக்கிட்டு....ஜார்ஜ் க்ளூனி, ஷான் கானெரி...ஏன் அவங்க தாத்தாவை ஏன் விட்டுட்டீங்க...? நாங்க மனோரமாவைப் பார்த்து ஜொள்ளு விடறோமா?..அப்பிடி ஒரு கபோதிய மட்டும் என் கண்ணுல காட்டச் சொல்லுங்க.......ரசனை..ரசனை..மனுஷனுக்கு...ரொம்ப முக்கியம்.
"என்ன முனுமுனுப்பு??...சேனல மாத்தனும் போல இருக்குமே...?"
"சே...சே...என் ரசனைய பத்தி என்ன நினைச்சிகிட்டு இருக்க?....உங்கள மாதிரியா ..ஏதோ சூர்யானா கூட ஒத்துக்கலாம்..."
"என்னிக்கு நீங்க சுற்றும் விழிச் சுடரேக்கு ஆடிக் காட்டினீங்களோ அன்னிக்கிலெர்ந்து எனக்கு அவன பிடிக்காம போயிடிச்சு..."
"ஹ...அதெல்லாம் இல்ல...நீங்களெல்லாம் ஓவரா வழிஞ்ச வழிசல்ல மவனே ஒற்றே படம்...அப்படியே ஓய்ஞ்சு போயிட்டான்...இப்ப பாரு விளக்கெண்ணை ஊத்தினா இப்படி எரியும் மண்னெண்ணை ஊத்தினா அப்பிடி எரியும்ன்னு பஸ்ஸடாண்டு பக்கம் பெட்டர்மாஸ்க் விளக்கு வைச்சு லேகியம் விக்கிறவன் மாதிரி டயலாக் பேசிக்கிட்டு திரியறான்".
"இங்க மட்டும் என்ன வாழுதாம்...மீரா ஜாஸ்மினாவது என்ன ஆச்சு?...மல்லிகா கபூர்...அந்த ஒரு படத்துக்கு அப்புறம் தமிழ்ல படத்தையே காணோம்..." இன்னும் பல பெயர்கள் வர ஆரம்பித்தன.
"மனுஷன் கொஞ்சம் நிம்மதியா சாப்பிடட்டுமா...காலைலேர்ந்து பசி உயிரப் போகுது..." வீரம்னா என்ன தெரியுமா பயப்படாத மாதிரி நடிக்கத் தெரிவது குருதிப்புனல்ல தலைவர் சொல்லியிருக்கார்.
ஆய்ஞ்சு ஓய்ஞ்சு கிடைச்ச கேப்ல ரிமோட உஷார் பண்ணி சேனல மாத்தினா....நம்பியார் குழல் புட்டு செய்யற கேனை கையில மாட்டிக்கிட்டு.."மைக் மைக்"ன்னு மைக்கே இல்லாம...பிளாக் அண்ட் ஒயிட் டீவியில சாய்பாபா வில்லன் கமலை காரில் துரத்துவதை பார்த்துக் கொண்டு ரன்னிங் கமெண்ட்ரி குடுத்துக்கிட்டு இருக்கார். கூட இருக்கிற நடிகை வேற ஓவரா ரியாக்ஷன் காட்டுது.
இனிமே சண்டைக் காட்சி தான். தூ இதெல்லாம் ஒரு படமான்னு டீ.வியை அணைத்துவிட்டேன். இவனுங்க திருந்தவே மாட்டனுங்க...
Tuesday, December 11, 2007
சேலஞ்ச் - நன்றி
என்னாடா சேலெஞ்ச்ன்னு சொல்லி ஓட்டெல்லாம் போடச்சொல்லிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் மாதிரி எஸ்ஸாகிட்டானேன்னு நினைச்சிருப்பீங்க. ஆபிஸ் வேலை பின்னுதுங்க. மெயில் கூட பார்க்கமுடியலை.அது ஒரு பக்கம் இருக்கட்டும், ஸ்கூல் எக்ஸாம்க்கு படிக்கும் போது ஒரு மாசத்துக்கு முன்னாடியே புல்ஸேக்ப் பேப்பர்ல தேதியெல்லாம் போட்டு படிக்கறதுக்கு பளானெலாம் போட்டு, அதையெல்லாம் நாளைக்கு நாளைக்குன்னு அப்பிடியே கேரி பார்வர்ட் செய்து, எக்ஸாமுக்கு முந்தின நாள் ராத்திரி படிக்க ஆரம்பித்து ஹாலுக்குள்ள போகும் வரை படித்து சில முக்கிய கொஸ்டின்களை சாய்ஸில் விட்டுக்கலாம்ன்னு நினைத்துப் போனால், நாம சாய்ஸ்ல விட்ட கேள்விகளெல்லாம் ஒரெ ஆப்ஷன் சாய்ஸில் வரும். அது மாதிரி நான் சாய்ஸில் போயிடும் என்று மசாலாவுக்காக சேர்த்த கஷ்டமான ரெண்டு ஆப்ஷன்களை அதிக வோட்டு போட்டு குடுத்திருக்கிறீர்கள். வோட்டு போட்ட அத்தனை சனத்துக்கும் கோடானு கோடி நன்றியைய்யா !!
இதெல்லாம் இந்த மூஞ்சிக்கு தேவையான்னு அனானி கமெண்ட் வரும் என்று நினைத்தேன். ஆனால் ஓட்டு போட்டு பழி வாங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏஞ்ஜலினா ஜோலி எந்த ஊரில் இருக்கிறார் என்பது கூட தெரியாது. பிராட் பிட் நடித்த ட்ராய் படம் பார்த்திருக்கிறேன். தொடையெல்லாம் கும்முன்னு காட்டிக்கொண்டு சண்டையில் பின்னிப் பெடலெடுப்பார். அதே உதறலாய் இருக்கிறது. கனவில் ஏஞ்ஜலினா ஜோலி வருவதை விட பிராட் பிட் தான் அதிகம் வருகிறார் (அவர் உதைப்பது மாதிரி கனவுய்யா...ஓ...அவனா நீயிய்யுன்னுலாம் கேக்காதீங்கப்பூ..என் கவலை எனக்கு :)).
படத்துல நடிக்கிறதப் பத்தி என்ன சொல்ல...அது எனக்கு தண்டனையா இல்ல உங்களுக்கு தண்டனையான்னு என்னால நிச்சியமா சொல்ல முடியலை :)) ஆடுமாடு அண்ணாச்சி உங்களத் தான் மலைபோல நம்பியிருக்கேன்...கைவிட்டுறாதீக...
ஏஞ்ஜலினா ஜோலி ஆப்ஷனுக்கு கள்ள வோட்டு போட்ட அருள் தவிர உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இந்த சேலஞ்சுகளை 2009 புதுவருட பிறப்புக்குள் செய்து முடிக்கப் பார்க்கிறேன். ஏஞ்ஜலினா அம்பாள் அருள் புரியட்டும்.
இதெல்லாம் இந்த மூஞ்சிக்கு தேவையான்னு அனானி கமெண்ட் வரும் என்று நினைத்தேன். ஆனால் ஓட்டு போட்டு பழி வாங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏஞ்ஜலினா ஜோலி எந்த ஊரில் இருக்கிறார் என்பது கூட தெரியாது. பிராட் பிட் நடித்த ட்ராய் படம் பார்த்திருக்கிறேன். தொடையெல்லாம் கும்முன்னு காட்டிக்கொண்டு சண்டையில் பின்னிப் பெடலெடுப்பார். அதே உதறலாய் இருக்கிறது. கனவில் ஏஞ்ஜலினா ஜோலி வருவதை விட பிராட் பிட் தான் அதிகம் வருகிறார் (அவர் உதைப்பது மாதிரி கனவுய்யா...ஓ...அவனா நீயிய்யுன்னுலாம் கேக்காதீங்கப்பூ..என் கவலை எனக்கு :)).
படத்துல நடிக்கிறதப் பத்தி என்ன சொல்ல...அது எனக்கு தண்டனையா இல்ல உங்களுக்கு தண்டனையான்னு என்னால நிச்சியமா சொல்ல முடியலை :)) ஆடுமாடு அண்ணாச்சி உங்களத் தான் மலைபோல நம்பியிருக்கேன்...கைவிட்டுறாதீக...
ஏஞ்ஜலினா ஜோலி ஆப்ஷனுக்கு கள்ள வோட்டு போட்ட அருள் தவிர உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இந்த சேலஞ்சுகளை 2009 புதுவருட பிறப்புக்குள் செய்து முடிக்கப் பார்க்கிறேன். ஏஞ்ஜலினா அம்பாள் அருள் புரியட்டும்.
Subscribe to:
Posts (Atom)
