புத்தாண்டு
சின்ன வயதிலெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் மாதிரி எங்கள் வீட்டில் தமிழ் புத்தாண்டு என்றால் சர்கரைப் பொங்கல், ஆங்கில் புத்தாண்டு என்றால் பால் பாயாசம் சாப்பாட்டில் இருக்கும். ஆங்கில புத்தாண்டு அன்றைக்கு ராத்திரி ஆட்டம் போடலாம். ஆட்டம் என்றால் குட்டைப் பாவாடை குமரிகளோடு கும்மாளம்லாம் இல்லை. ஹூம்... ஊரில் அதுக்கெல்லாம் ஏது வசதி. வீட்டிலிருந்து தப்பிக்க அன்றைக்கு தெரு பசங்களெல்லோரும் சேர்ந்து பஜனை மடத்தில் ஸ்பெஷல் பஜனை ஏற்பாடு செய்துவிடுவோம். (பஜனை என்றால் உண்மையான பஜனை).
மார்கழி மாதமாய் இருக்குமாதலால் பஜனை ஏற்பாடுக்கு ரொம்ப மல்லாட வேண்டியது இல்லை சுலபமாய் முடியும். ரகு அண்ணாவை நச்சரித்தால் அவர்கள் வீட்டிலிருந்து உம்மாச்சிக்கு பிரசாதமும் எங்களுக்கு கடையிலிருந்து அல்வாவும் வாங்கித் தருவார். ராத்திரி பத்து மணிக்கு ஆரம்பிக்கும் பஜனை, பதினோரு மணி வரைக்கும் அல்வா தின்ன தெம்பில் களை கட்டும். அப்புறம் நைசாக பஜனை மட பிரகாரத்த்தில் ஓரமாய் உட்கார்ந்து கொண்டு "ராக்கம்மா கையத்தட்டு" என்று இன்னிசைப்பாடல் பஜனை நடைபெறும். அங்கேயும் நான் தான் கஞ்சிரா வாசிப்பேன். "ராக்கம்மா கையத்தட்டா...? பஜனைமடத்துல பாடற பாட்டாட இது..பல்லத் தட்டு"ன்னு ஏதாவது ஒரு பெருசு வந்து பல்லவி பாடி விட்டு போகும். கரெக்டாக பன்னிரெண்டு மணிக்கு கோவில் மணி முழங்க...கோவிந்தாவோடு ஹேப்பி நியூ இயரும் சொல்லிவிட்டு வந்துவிடுவோம்.
இப்படி போய்க்கொண்டிருந்த புது வருட கொண்டாட்டங்களில் புதுவருட தீர்மானங்களை அறிமுகப் படுத்தியவர் சீனாதானா மாமா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அறுபது வயதுக்கு மேல். அடிக்கடி மாமாவுடன் அரட்டை அடிப்பதற்கு வீட்டுக்கு வருவார்.என் வாயையும் அடிக்கடி கிண்டுவார். நன்றாக இங்கிலிஷ் பேசுவாராகையால் மாமா என்னை அவரிடன் இங்கிலீஷில் பேசச் சொல்லுவார். பசங்கள் கூட்டமாய் அரட்டை அடித்துக்கொண்டிருந்தால் அவரும் வந்து கலந்துகொள்வார். எதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாலும் கவலையே பட மாட்டார் - ஒரு உப கதை சொல்லி அவர் வழியில் பேச்சை திருப்பிவிடுவார். பசங்களுக்கு கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் கடுப்பாக ஆரம்பித்தது. ஓட்ட ஆரம்பித்தார்கள்.
"நான் ஸ்கூல் படிக்கிறச்சே விஸ்வனாதன் விஸ்வநாதன்னு ஒரு பிரண்டு இருந்தான். அவன நாங்களெல்லாம் விசு விசுன்னு கூப்பிடுவோம்.." என்று சீனாதானா மாமா ஆரம்பிப்பார்.
"மாமா இவன் ஸ்கூல் படிக்கிறச்சே குஸ்வனாதன் குஸ்வநாதன்னு ஒரு பிரண்டு இருந்தான் அவன இவங்களெல்லாம்...."- ஒரு வானரம் பதிலுக்கு ஓட்டும்.
"இந்தக் கால பிள்ளேளுக்கு பெரியவா சின்னவான்னு ஒரு மட்டு மரியாதையே இல்லை.." என்று கடுப்பாகிவிடுவார். அதுக்கப்புறம் இங்கிலிஷில் எதிர் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவார். "என்விரான்மெண்டல்....ஸ்பஷ்டமா சொல்லு பார்ப்போம். எம்ஜியார் மெண்டல்ன்னு கும்பகோணம் வெத்தலை போட்ட மாதிரி கொதப்பிண்டு இருக்க...நாளைக்கு இன்டர்வியூக்கு போய் இப்படி தத்து பித்துன்னு உளருங்கோ...உடனே வேலை கொடுத்து உங்கள உட்காத்திருவான்... ஸ்போக்கன் இங்லீஷ் கத்துக்கோங்கடான்னா கிண்டல் அடிச்சுண்டு இருக்கேளே" என்று அதுக்கப்புறம் சீரியஸாகிவிடுவார். சீனாதான மாமா படிப்பு ஸ்போகன் இங்க்லீஷ் என்று ஆரம்பித்துவிட்டாலே பசங்களெல்லாம் உடனே சந்தைக்குப் போனும் ஆத்தா வையும்ன்னு கம்பி நீட்டிவிடுவார்கள்.மாமாவுக்கு பிரெண்டு என்பதால் நான் அவரிடம் வைத்துக்கொள்ளவே மாட்டேன்.
இப்பேற்பட்ட சீனாதானா மாமா ஒருதரம் நியூஇயர் ராத்திரி அரட்டையில் சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டார். "வாட் இஸ் யுவர் நியு இயர் ரெசொலியூஷன்?" என்று தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி மிரட்டலாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார். பசங்களுக்கு ரெசொலியூஷனுக்கு அர்த்தமே தெரியாது. ஒரு வானரம் "ராமா கில்ட் ராவணா" என்று தனக்குத் தெரிந்த விவிதபாரதியை ஆரம்பித்தது. "இந்தியா இஸ் மை கண்ட்ரி ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்.." என்று இன்னொரு வானரம் ஸ்கூல் பிரேயரில் சொல்லுவதை ஒப்பிக்க ஆரம்பித்தது. "புதுவருஷத்துக்கு எதுக்குடா அழப்பிதழ் எல்லாம்?" என்று வானரம் என் முதுகைப் பிராண்ட..."மூதேவி அது இன்விடேஷன்...இது அதில்லை...ரெசோலியூஷன் - எங்களுக்கு இதெல்லாம் அடுத்த வருஷ செல்பஸில் தான் கவராகிறது மாமா" என்று நான் சொல்ல...சீனாதானா மாமா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார். அதுக்கப்புறம் அவர் க்ளாஸ் எடுத்ததில் தான் எங்களுக்கு புத்தாண்டு தீர்மானங்கள் பற்றியே தெரிய ஆரம்பித்தது. அந்த வருஷம் எல்லோரும் ஆளுக்கு ஒரு தீர்மாணம் எடுத்துக் கொண்டு கழுத்தில் போர்ட்டு மாட்டாத குறையாக தம்பட்டம் அடித்துக்கொண்டோம். மார்ச் வருவதற்குள் "டேய் நான் என்ன ரெசோலியூஷன் எடுத்துண்டேன்?" என்று மற்ற வானரங்களிடம் கேட்டு அடிக்கடி நியாபகப் படுத்தவேண்டியதாயிற்று.
அதற்கப்புறம் வருடா வருடம் நானும் எதாவது தீர்மானம் எடுத்துக்கொள்வேன். யாராவது டைரி கொடுத்தால் அதில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்துக் கொள்வேன். சிலவற்றை நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக வரும். "அடுத்த ஒலிம்பிக்ஸில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வேன்" என்று ஒருதரம் தீர்மானம். அந்த வருஷமே ஒலிம்பிக்ஸ் வருகிறது என்று தெரிந்தவுடன் 'அடுத்த'வை அதற்கடுத்த என்று திருத்திவிட்டேன். காலையில் எழுந்து அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் வரை நாலு பேருடன் ஓட்டப் பயிற்சி எடுத்து இரண்டு நாள் வேகமாய் ஓடினேன். மூன்றாம் நாள் நெஞ்சாங்கூட்டில் வலியெடுத்து...இனிமே என்னால முடியாதுப்பா நீங்களெல்லாம் ஒலிம்பிக்ஸ் போங்கோ நான் ஏஷியன் கேம்ஸோடு நிப்பாட்டிக்கிறேன் என்று ஜகா வாங்கி, உடம்புல பிடிக்காம விளையாடலாம் என்று அந்த தீர்மானத்தை அப்புறம் செஸ்க்கு மாற்றிவிட்டேன். அந்த வருஷத்துக்கப்புறம் இந்த மாதிரி ஒலிம்பிக்ஸ் ரேஞ்சுக்கு தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. ஆனால் எடுத்த தீர்மானம் எதையும் நிறைவேற்றியதாக நினைவில் இல்லை. அதுக்கப்புறம் தீர்மானம் எடுப்பதாக இல்லை என்று ஒரு தீர்மானம் எடுத்தேன் அதுதான் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது..
நீங்க எப்படி?
கொஞ்சம் லேட் தான் இருந்தாலும்..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
Thursday, January 04, 2007
Friday, December 29, 2006
ரெடி ஸ்டார்ட் கேமரா
நான் முடிவெட்டிக்கொண்டால் எதாவது விசேஷமாக நடக்கும். அதுவும் முடித்திருத்துபவர் ரொம்ப மெனெக்கெட்டு திறமையெல்லாம் காட்டி கரிச்சான் குஞ்சு ரேஞ்சுக்கு கரம்பியிருந்தால் அதிவிசேஷமாக சம்பவங்கள் நடக்கும். ரெகுலராக பஸ்ஸில் வரும் லொட லொட பாட்டிக்குப் பதிலாக அழகான வெள்ளைக்கார குட்டி வந்து ஆட்டையாம்பட்டிக்கு வழி கேட்பாள். "இம்புட்டு நாளா எங்கம்மா போயிருந்த...மண்டைய கரம்பிட்டு வந்தவுடனே கரெக்டா வந்துடறீங்களேம்மா.." என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே வழியைச் சொல்லுவேன்.
இப்பேற்பட்ட கரம்பின முஹூர்த்ததில் ஒரு நாள் பிரபல ஆங்கில சக ப்ளாகர் பெண்மணியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. விஷயம் இது தான் அந்த அம்மணி என்னுடைய லண்டன் குண்டுவெடிப்பு சம்பவ அனுபவத்தை ஒரு நிமிட டாக்குமென்டரியாக எடுத்து இங்கிலாந்திலுள்ள ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டிக்கு அனுப்ப ஆசைப்பட்டார். எனக்கு தலைகால் புரியவில்லை. " டாக்குமென்ட்ரியா?..அதுவும் நான் நான் நானே நடிக்கனுமா...என் ஃபோட்டோவ முன்ன பின்ன பார்த்திருக்கீங்களா??ஓ நாம நேர்லயே பார்த்திருக்கோமா..உங்களுக்கு ஓ.கேவா...என்னது நாளைக்கே ஷூட்டிங்கா..." இந்த முறை கரிச்சான் குஞ்சு யோகம் பலமாகவே இருந்தது. இரண்டு வாரம் டைம் கேட்டால் அதுக்குள்ளயாவது மண்டையில் கொஞ்சம் புல் முளைத்துவிடாதா என்று கேட்ட வாய்தாவெல்லாம் தள்ளுபடியாகிவிட்டது. சரி அவங்க கேமரா குடுத்து வைத்தது அவ்வளவு தான்னு நேரம் காலமெல்லாம் குறித்துதாகிவிட்டது.
இருபத்திநாலு மணிநேரம் போதாதா. வீட்டில் அலம்பல் படலம் ஆரம்பமாகியது. போன் அடித்தால் "அனேகமாக மணிரத்னமாகத் தான் இருக்கும்...இந்த டைரக்டர்ஸ் தொல்லை தாங்கமுடியலை...மனுஷன் எவ்வளவு போன் கால்ஸ் தான் அட்டெண்ட் பண்ணுவான்...நீயே எடுத்து அய்யா வீட்டுல இல்லை அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கார்ன்னு சொல்லிடு" -ஆரம்ப கட்ட அலம்பல்களுக்கெல்லாம் தங்கமணி கண்ணாலேயே எரித்துக் கொண்டிருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று கண்ணாடி முன்னாடி "ஹலோ ஐ ஆம் சஞ்சய் ராமசாமி" டயலாக் பேசி பழகிய போது, அங்கே ப்யூஸ் புடுங்கி காதில் புகை வர ஆரம்பித்துவிட்டது. "எப்படி இருந்த நான்....இப்படி ஆகிட்டேன்..." அசரீரியாக பதில் தாக்குதல் ஆரம்பித்தது.
"இந்த பாரும்மா...நடிப்புல போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது...கவலப்படாதே...எனக்கு கதவை திறந்துவிடற மாதிரி ஒரு லேடி காரெக்டர்க்கு ஆள் தேடிக்கிட்டு இருக்காங்க...உன்ன வேணா ரெக்கமெண்ட் பண்ணறேன்.."
****
ஒரு மாலை இளவெய்யில் நேரம்...
அழகான...இலையுதிர்.காலம்..
****
"தோடா....நீங்க போறதே சார் போஸ்ட்ன்னு முதுகு மட்டும் தெரியற போஸ்ட்மேன் காரெக்டருக்கு இதுல என்ன வேற ரெக்கமெண்டா..வேண்டவே வேண்டாம்..நான் இப்படியே இருந்துட்டு போறேன்..."
"அப்பாடா எங்க ஒத்துக்குவியோன்னு கவலையா இருந்தது. கவலபடாத வேற ஏதாவது நல்ல காரெக்டர் மாட்டிச்சினா சொல்றேன். இதுக்கு கனிகாவ கமிட் பண்ணிக்கிறேன்.
"ஐய்யோ.பாவம் கனிகா.."
"ஒரு உலகக் கலைஞன் வேல்யூ தெரியாம பேசாத...என் திறமைய பார்த்து சப்பான்லேர்ந்து சாக்கிசான் கூப்பிட்டாக...பின்லாந்துலேர்ந்து பீட்டர் ஜாக்ஸன் கூப்பிட்டாக..."
"ஆமா...சொல்லமறந்துட்டேனே...காலைல ஸ்பீல்பெர்க் கூப்பிட்டாக ...டைனோசருக்கு டூப்பா நடிக்கிறதுக்கு ஆள் வேணுமாம் உங்கள கேட்டாக..க்க்ர்ர் தூ.."
ம்ஹூம்...எனக்கு காதில விழலையே, ஒரு நடிகனுக்கு கலையுல வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப சகஜம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்விட்டேன். லீவு இல்லாததால் ஆபிஸில் பெர்மிஷன் சொல்லிவிட்டு போயிருந்தேன். ஒன்றுக்கு இரண்டு ப்ளாக் உலக பிரபல பெண்மணிகள் - டைரக்டர்ஸ். "கேரவேனெல்லாம் ரெடியா.." என்று லேசாக அலம்பியதில் இதுக்குத் தான் இந்த மாதிரி கேரக்டரையெல்லாம் கூப்பிடாதேன்னு சொன்னேன் - விழியாலே பேசிக்கொண்டார்கள். கிடச்ச சான்ஸும் கோவிந்தா ஆகிடப் போகுதே என்று அப்புறம் நல்ல பிள்ளையாக அவர்கள் சொல் பேச்சு கேட்க ஆரம்பித்தேன். ஒரு அம்மணி அடிக்கடி தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருந்ததில் எனக்கு ஒருவேளை இது தெலுங்கு டப்பிங் படமாக இருக்குமோ என்று டவுட் வந்துவிட்டது. தெலுங்கு டாக்குமென்ட்ரியாக இருந்தாலும் சும்மா பேச்சு துணைக்காச்சு என்று இலியானா..கௌஷா இவங்களெல்லாம் வந்திருக்காங்களா என்று ஒருதரம் ஏமாற்றத்தோடு சுத்திப் பார்த்தேன்.
"இப்ப நாம நீங்க ஆபிஸுக்கு ட்யூப்ல போற மாதிரி எடுக்கப் போறோம். நீங்க அப்பிடியே படியில் இறங்கி வர்றத எடுக்கப்போறோம்...கேஷ்வ்லா அப்பிடியே இறங்கிவாங்க..."
"ஓ இவ்வளவு தானா...இந்த மாதிரி இறங்கி வர்றதெல்லாம் அசால்டா இடது கையாலயே பண்ணுவேன்.." என்னுடைய அலம்பலை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. எனக்கு ஏனோ பாரதிராஜா ஷூட்டிங்கில் பளாரென்று கன்னத்தில் அடிப்பார் என்று படித்ததெல்லாம் நியாபகத்துக்குவந்து... "ஹீ ஹீ சும்மா டமாசு....இருங்க நான் இறங்கி வர்றேன்...கரெக்டா இருக்கா பாருங்க" என்று நல்ல பிள்ளையாக நடிக்க ஆரம்பித்தேன்.
அதுக்கப்புறம் நான் வித விதமான படிக்கட்டுகளில் நடித்தேன் நடித்தேன் நடித்துக் கொண்டே இருந்தேன். ஒரு பெரிய படிகட்டில் நான் மேலிருந்து கீழே நடிப்பதாக ஒரு சீன். பயங்கர சேலஞ்சிங்காக இருந்தது. மேலேருந்து கீழே பாதி வழியில் நான் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு மாமா நடுவில் நாயைக் கூட்டிக்கொண்டு வந்து விட்டார். கட் சொல்லி திரும்ப படிக்கட்டில் மேலேறி நடிக்கச் சொல்லிவிட்டார்கள். அடுத்த முறை ஒரு ட்ரெயின் வந்து கூட்டம் திபு திபுவென வந்து விட்டது. வேற வழி? திரும்பவும் ரிப்பீட்டு. இப்படியே பத்து டேக் வாங்கி ஓகே ஆன பிறகு அந்த அம்மணி கேமராவில் தப்பான செட்டிங் இருப்பதை கண்டு பிடித்தார். எனக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ஆப்புள் ஜூஸ் கேட்டால் அந்த அம்மணிகள் கேமரா மேல் இருந்த கடுப்பில் என்னைக் காட்டிவிடுவார்களோன்னு பயந்து கேட்கவேஇல்லை. லண்டன் அண்டர்கிரவுண்டிலேயே திருப்பதி மலை ஏறுவதாக நினைத்துக் கொண்டு இன்னும் நாலு தரம் படிக்கட்டில் நடித்தேன்.
ஒரு வழியாக கடைசியில் படிக்கட்டு நடிப்பு ஓகே ஆகி நான் பெருமூச்சு விட்ட போது...அவ்ளோ தான் வீட்டுக்குப் போலாம் என்று பேக்கப் சொல்லிவிட்டார்கள். என்னது அவ்ளோதானா..என்னங்க இன்னும் டூயட், ட்ரீம் சீக்வென்ஸ்...இதெல்லாம் எடுக்கவே இல்ல என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அதெல்லாம் க்ராபிக்ஸில் அட்ஜஸ்ட் செய்துவிடுவோம் என்று சொல்லிவிட்டார்கள்.
ஹூம் தமிழ்ப்ளாகர் படமெடுத்திருந்தாலாவது போண்டாவோ சமோசாவோ கிடைத்திருக்கும். மீரா ஜாஸ்மின், கனிகா கால்ஷீட் இருந்தால் சொல்லுங்க...போண்டா கூட வேண்டாம்...சும்மாவே நடிச்சுத் தரேன். தெலுங்கு டப்பிங் படங்களுக்கு முன்னுரிமை குடுக்கப்படும்.
பி.கு - படத்தை நான் பார்த்துவிட்டேன். என்னைத் தவிர படத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது. படம் இன்னும் போஸ்ட் புரோடக்க்ஷன் ஸ்டேஜ்ஜில் இருக்கிறது. கிராபிக்ஸில் எப்படியாவது எனது பெர்சனாலிட்டியை ஏத்தமுடியுமா என்று கேட்டிருக்கிறேன். படம் ரிலீஸானவுடன் பகிர்ந்து கொள்கிறேன். படத்தை பார்த்தலிருந்து தங்கமணி "அப்படியே நடிச்சுக்கிட்டே மாடிக்குப் போய் வர்ஷாவோட ட்ரெஸ்ஸ எடுத்துக் கிட்டு வாங்க...அப்படியே நடிச்சிக்கிட்டே கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வாங்க"ன்னு ஏகப்பட்ட சான்ஸ் குடுக்கிறார். ஒரு உலகக் கலைஞன.....ஹூம் சரி வேணாம் விடுங்க...
இப்பேற்பட்ட கரம்பின முஹூர்த்ததில் ஒரு நாள் பிரபல ஆங்கில சக ப்ளாகர் பெண்மணியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. விஷயம் இது தான் அந்த அம்மணி என்னுடைய லண்டன் குண்டுவெடிப்பு சம்பவ அனுபவத்தை ஒரு நிமிட டாக்குமென்டரியாக எடுத்து இங்கிலாந்திலுள்ள ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டிக்கு அனுப்ப ஆசைப்பட்டார். எனக்கு தலைகால் புரியவில்லை. " டாக்குமென்ட்ரியா?..அதுவும் நான் நான் நானே நடிக்கனுமா...என் ஃபோட்டோவ முன்ன பின்ன பார்த்திருக்கீங்களா??ஓ நாம நேர்லயே பார்த்திருக்கோமா..உங்களுக்கு ஓ.கேவா...என்னது நாளைக்கே ஷூட்டிங்கா..." இந்த முறை கரிச்சான் குஞ்சு யோகம் பலமாகவே இருந்தது. இரண்டு வாரம் டைம் கேட்டால் அதுக்குள்ளயாவது மண்டையில் கொஞ்சம் புல் முளைத்துவிடாதா என்று கேட்ட வாய்தாவெல்லாம் தள்ளுபடியாகிவிட்டது. சரி அவங்க கேமரா குடுத்து வைத்தது அவ்வளவு தான்னு நேரம் காலமெல்லாம் குறித்துதாகிவிட்டது.
இருபத்திநாலு மணிநேரம் போதாதா. வீட்டில் அலம்பல் படலம் ஆரம்பமாகியது. போன் அடித்தால் "அனேகமாக மணிரத்னமாகத் தான் இருக்கும்...இந்த டைரக்டர்ஸ் தொல்லை தாங்கமுடியலை...மனுஷன் எவ்வளவு போன் கால்ஸ் தான் அட்டெண்ட் பண்ணுவான்...நீயே எடுத்து அய்யா வீட்டுல இல்லை அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கார்ன்னு சொல்லிடு" -ஆரம்ப கட்ட அலம்பல்களுக்கெல்லாம் தங்கமணி கண்ணாலேயே எரித்துக் கொண்டிருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று கண்ணாடி முன்னாடி "ஹலோ ஐ ஆம் சஞ்சய் ராமசாமி" டயலாக் பேசி பழகிய போது, அங்கே ப்யூஸ் புடுங்கி காதில் புகை வர ஆரம்பித்துவிட்டது. "எப்படி இருந்த நான்....இப்படி ஆகிட்டேன்..." அசரீரியாக பதில் தாக்குதல் ஆரம்பித்தது.
"இந்த பாரும்மா...நடிப்புல போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது...கவலப்படாதே...எனக்கு கதவை திறந்துவிடற மாதிரி ஒரு லேடி காரெக்டர்க்கு ஆள் தேடிக்கிட்டு இருக்காங்க...உன்ன வேணா ரெக்கமெண்ட் பண்ணறேன்.."
****
ஒரு மாலை இளவெய்யில் நேரம்...
அழகான...இலையுதிர்.காலம்..
****
"தோடா....நீங்க போறதே சார் போஸ்ட்ன்னு முதுகு மட்டும் தெரியற போஸ்ட்மேன் காரெக்டருக்கு இதுல என்ன வேற ரெக்கமெண்டா..வேண்டவே வேண்டாம்..நான் இப்படியே இருந்துட்டு போறேன்..."
"அப்பாடா எங்க ஒத்துக்குவியோன்னு கவலையா இருந்தது. கவலபடாத வேற ஏதாவது நல்ல காரெக்டர் மாட்டிச்சினா சொல்றேன். இதுக்கு கனிகாவ கமிட் பண்ணிக்கிறேன்.
"ஐய்யோ.பாவம் கனிகா.."
"ஒரு உலகக் கலைஞன் வேல்யூ தெரியாம பேசாத...என் திறமைய பார்த்து சப்பான்லேர்ந்து சாக்கிசான் கூப்பிட்டாக...பின்லாந்துலேர்ந்து பீட்டர் ஜாக்ஸன் கூப்பிட்டாக..."
"ஆமா...சொல்லமறந்துட்டேனே...காலைல ஸ்பீல்பெர்க் கூப்பிட்டாக ...டைனோசருக்கு டூப்பா நடிக்கிறதுக்கு ஆள் வேணுமாம் உங்கள கேட்டாக..க்க்ர்ர் தூ.."
ம்ஹூம்...எனக்கு காதில விழலையே, ஒரு நடிகனுக்கு கலையுல வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப சகஜம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்விட்டேன். லீவு இல்லாததால் ஆபிஸில் பெர்மிஷன் சொல்லிவிட்டு போயிருந்தேன். ஒன்றுக்கு இரண்டு ப்ளாக் உலக பிரபல பெண்மணிகள் - டைரக்டர்ஸ். "கேரவேனெல்லாம் ரெடியா.." என்று லேசாக அலம்பியதில் இதுக்குத் தான் இந்த மாதிரி கேரக்டரையெல்லாம் கூப்பிடாதேன்னு சொன்னேன் - விழியாலே பேசிக்கொண்டார்கள். கிடச்ச சான்ஸும் கோவிந்தா ஆகிடப் போகுதே என்று அப்புறம் நல்ல பிள்ளையாக அவர்கள் சொல் பேச்சு கேட்க ஆரம்பித்தேன். ஒரு அம்மணி அடிக்கடி தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருந்ததில் எனக்கு ஒருவேளை இது தெலுங்கு டப்பிங் படமாக இருக்குமோ என்று டவுட் வந்துவிட்டது. தெலுங்கு டாக்குமென்ட்ரியாக இருந்தாலும் சும்மா பேச்சு துணைக்காச்சு என்று இலியானா..கௌஷா இவங்களெல்லாம் வந்திருக்காங்களா என்று ஒருதரம் ஏமாற்றத்தோடு சுத்திப் பார்த்தேன்.
"இப்ப நாம நீங்க ஆபிஸுக்கு ட்யூப்ல போற மாதிரி எடுக்கப் போறோம். நீங்க அப்பிடியே படியில் இறங்கி வர்றத எடுக்கப்போறோம்...கேஷ்வ்லா அப்பிடியே இறங்கிவாங்க..."
"ஓ இவ்வளவு தானா...இந்த மாதிரி இறங்கி வர்றதெல்லாம் அசால்டா இடது கையாலயே பண்ணுவேன்.." என்னுடைய அலம்பலை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. எனக்கு ஏனோ பாரதிராஜா ஷூட்டிங்கில் பளாரென்று கன்னத்தில் அடிப்பார் என்று படித்ததெல்லாம் நியாபகத்துக்குவந்து... "ஹீ ஹீ சும்மா டமாசு....இருங்க நான் இறங்கி வர்றேன்...கரெக்டா இருக்கா பாருங்க" என்று நல்ல பிள்ளையாக நடிக்க ஆரம்பித்தேன்.
அதுக்கப்புறம் நான் வித விதமான படிக்கட்டுகளில் நடித்தேன் நடித்தேன் நடித்துக் கொண்டே இருந்தேன். ஒரு பெரிய படிகட்டில் நான் மேலிருந்து கீழே நடிப்பதாக ஒரு சீன். பயங்கர சேலஞ்சிங்காக இருந்தது. மேலேருந்து கீழே பாதி வழியில் நான் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு மாமா நடுவில் நாயைக் கூட்டிக்கொண்டு வந்து விட்டார். கட் சொல்லி திரும்ப படிக்கட்டில் மேலேறி நடிக்கச் சொல்லிவிட்டார்கள். அடுத்த முறை ஒரு ட்ரெயின் வந்து கூட்டம் திபு திபுவென வந்து விட்டது. வேற வழி? திரும்பவும் ரிப்பீட்டு. இப்படியே பத்து டேக் வாங்கி ஓகே ஆன பிறகு அந்த அம்மணி கேமராவில் தப்பான செட்டிங் இருப்பதை கண்டு பிடித்தார். எனக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ஆப்புள் ஜூஸ் கேட்டால் அந்த அம்மணிகள் கேமரா மேல் இருந்த கடுப்பில் என்னைக் காட்டிவிடுவார்களோன்னு பயந்து கேட்கவேஇல்லை. லண்டன் அண்டர்கிரவுண்டிலேயே திருப்பதி மலை ஏறுவதாக நினைத்துக் கொண்டு இன்னும் நாலு தரம் படிக்கட்டில் நடித்தேன்.
ஒரு வழியாக கடைசியில் படிக்கட்டு நடிப்பு ஓகே ஆகி நான் பெருமூச்சு விட்ட போது...அவ்ளோ தான் வீட்டுக்குப் போலாம் என்று பேக்கப் சொல்லிவிட்டார்கள். என்னது அவ்ளோதானா..என்னங்க இன்னும் டூயட், ட்ரீம் சீக்வென்ஸ்...இதெல்லாம் எடுக்கவே இல்ல என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அதெல்லாம் க்ராபிக்ஸில் அட்ஜஸ்ட் செய்துவிடுவோம் என்று சொல்லிவிட்டார்கள்.
ஹூம் தமிழ்ப்ளாகர் படமெடுத்திருந்தாலாவது போண்டாவோ சமோசாவோ கிடைத்திருக்கும். மீரா ஜாஸ்மின், கனிகா கால்ஷீட் இருந்தால் சொல்லுங்க...போண்டா கூட வேண்டாம்...சும்மாவே நடிச்சுத் தரேன். தெலுங்கு டப்பிங் படங்களுக்கு முன்னுரிமை குடுக்கப்படும்.
பி.கு - படத்தை நான் பார்த்துவிட்டேன். என்னைத் தவிர படத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது. படம் இன்னும் போஸ்ட் புரோடக்க்ஷன் ஸ்டேஜ்ஜில் இருக்கிறது. கிராபிக்ஸில் எப்படியாவது எனது பெர்சனாலிட்டியை ஏத்தமுடியுமா என்று கேட்டிருக்கிறேன். படம் ரிலீஸானவுடன் பகிர்ந்து கொள்கிறேன். படத்தை பார்த்தலிருந்து தங்கமணி "அப்படியே நடிச்சுக்கிட்டே மாடிக்குப் போய் வர்ஷாவோட ட்ரெஸ்ஸ எடுத்துக் கிட்டு வாங்க...அப்படியே நடிச்சிக்கிட்டே கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வாங்க"ன்னு ஏகப்பட்ட சான்ஸ் குடுக்கிறார். ஒரு உலகக் கலைஞன.....ஹூம் சரி வேணாம் விடுங்க...
Sunday, December 03, 2006
என் இனிய...
சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விட்டேன். இது ஒன்றும் புதிதில்லை என்றாலும் மன்னிக்கவும். அக்டோபர் மாதத்திலிருந்து ஆபிஸ், வீடு, வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்று எனக்கு திரும்பிய பககமெல்லாம் ஆப்பு தான். இன்னும் வேலைப்பளுவும் மன அழுத்தமும் குறைந்த பாடில்லை. இன்னும் தொடரும் என்று நினைக்கிறேன். அதுவரை இங்கு வழக்கம் போல் வந்து போக முடியாது, அட்டென்டன்ஸ் குறைவாகத் தான் இருக்கும் ஒன்றும் குறைந்துவிடாது! மெயிலிலும் இங்கே பின்னூட்டத்திலும் விசாரித்த அனைவருக்கும் நன்றி. அட்லாஸ் வாலிபர் மாதம் செம ஊத்தல். இதற்கு மேலும் சொதப்ப முடியாத படி சொதப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன். இதில் ஒரு சயின்ஸ் பிக்க்ஷன் கதை வேறு உள்ளடக்கம். மைக்கும், கேட்பதற்கு நாலு பேரும் கிடைத்துவிட்டால் தியாகராஜ பாகவதர் எங்க தாத்தா தான்னு குஷி பிறப்பது போல இன்னும் என்னவெல்லாமோ எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த்தேன். நேரம் ஓடிவிட்டது, கொஞ்சம் லேட்டாக போய் வாய்பளித்தமைக்கு நன்றி சொல்லப் போனால் "ரொம்ப ஊத்தாத, கிளம்பு காத்து வரட்டும்" என்று லாகினைப் பறித்து விட்டார்கள் :) வாய்ப்புக் கொடுத்த சங்கத்தினருக்கு நன்றியும், சொதப்பியதற்க்கு மன்னிப்பும்.(அதாவது மன்னிப்பு நான் கேட்டுக்கிறேன்)
நடுவில் என்னடா இயந்திரமயமான வாழ்க்கை என்று வெறுத்துவிட்டது. என்னத்தையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆபிஸ், வீடு, வாசல், பணம்,மீரா ஜாஸ்மின் ,பிட்ஸா, பொங்கல், பினாயில் - அடப் போங்கடா எல்லாம் மாயை போதும் என்றாகிவிட்டது. ஏதோ சயன்ஸ் சானலில் இன்னும் டிரில்லியன் ஒளி ஆண்டிற்கு அப்பால் இன்னொரு பால்வெளி (மில்கி வே) இருக்கிறது என்று காட்டினார்கள். இந்த அண்ட வெளியில் நாமெல்லாம் தூசு. வாழப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கும் நூறு ஆண்டுகளில் எத்தனை தேறப் போகிறதோ...இதற்கு இந்த நாய் படாத பாடு...பேசாமல் ஒரு ரெண்டு வருஷத்துக்கு சாமியாராக போய்விட்டு திரும்ப வரலாமா என்று பலமான யோசனை வேறு. அப்புறம் சரவணா பவனில் மிக்ஸட் வெஜிடபள் பராட்டா சாப்பிட்டுவிட்டு, ஸ்வீட் பீடா போட்டுக் கொண்டே பல்லைக் குத்திக் கொண்டிருந்த போது "ஹகூனா மடாடா" (Hakuna Matata) தத்துவம் சித்தித்தது.
இடைப்பட்ட காலத்தில் சில நல்ல படங்களையும் வழக்கம் போல் ஏகப்பட்ட குப்பைகளையும் பார்த்து வைத்தேன். பாலாஜி எஸ் ராஜன் தயவில் "ப்ளாக்" (Black) ஹிந்தி படம் பார்த்தேன். ஹாலிவுடில் சிலபேர்கள் எடுப்பது மாதிரி நம்மாட்கள் நுண்ணிய உணர்வுகளை மையப் படுத்தி எடுக்கவே மாட்டார்களா என்ற ஏக்கத்தை இந்தப் படம் சிறிது போக்கியிருக்கிறது. "ப்ளாக்" பிழியப் பிழிய அழ வைக்கக்கூடிய தன்மை வாய்ந்தது.அட்லீஸ்ட் தொண்டையையாவது அடைக்கும் நான் கியாரண்டி. ராணி முகர்ஜி நடிப்பை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அமிதாப் பச்சன் நடிப்பை இப்போது தான் பார்க்கிறேன் (அவர் படமெல்லாம் ரொம்ப பார்த்ததில்லை). இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். படத்தில் வரும் குடும்பம் தான் கொஞ்சம் செயற்கைத் தனமாக இருக்கிறது ஆனால் இந்த இருவரின் நடிப்புக்காக அதையெல்லாம் மன்னித்துவிடலாம்.
வீட்டில் வேறு கட்டுமான வேலை ஆரம்பித்தாகிவிட்டது. டீ.வி கம்ப்யூட்டர் எல்லாவற்றையும் குப்பயோடு குப்பையாக கட்டி வைத்திருக்கிறோம். கன்னிகா வந்ததிலிருந்து இப்போதான் தங்கவேட்டை பார்க்க ஆரம்பித்தேன்...தக தகவென்று இருக்கிறார்..ஹூம் வீட்டு வேலை முடியும் வரையில் அவர் தொடர்ந்து தங்கவேட்டையில் இருக்கவேண்டும் என்று முருகனுக்கு இரண்டு ரூபாய் முடிந்து வைத்திருக்கிறேன்.
வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் செஞ்சு பார்ன்னு பழமொழியெல்லாம் பிரெஞ்சு காண்டிராக்டரிடம் சொல்லிப் பார்த்தேன், பத்து பைசா கூட குறைக்கமாட்டேன் என்று கறாராக சொல்லி விட்டார். இந்த பழமொழியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டும் ஏன் கல்யாணம் கட்டிக்கிட்டன்னு நக்கல் வேறு. செங்கல் லோடு இறக்குகிற அன்னிக்கு அவனை தங்கமணி கிட்ட போட்டுக்கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். வீட்டை இடிக்க ஆரம்பித்தைலிருந்து வீடு முழுக்க ஒரே தூசி. எல்லா இடத்திலும் மண் பரவியிருக்கிறது. சாப்பாடு மண்ணு மாதிரி இருக்குன்னு தங்கமணியிடம் தெகிரியமா சொல்ல முடிகிறது.
எல்லா சாமான்களையும் ஒரு பெட்ரூமில் போட்டு பூட்டிவிட்டு இன்னொரு பெட்ரூமில் ஒண்டிக் குடித்தனம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நடுவில் டுபுக்கு ஊரை விட்டு ஓடிப் போய் உத்த்மனாய் வாழ ஆரம்பித்துவிட்டார் என்று யாரும் கதை கட்டிவிட்டுவிடக் கூடாதே என்று ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்.
கொஞ்ச நாள் வெளிஉலக தொடர்பே இல்லாமல் ப்ளாக் உலகை திரும்ப வந்து பார்த்தால் தமிழ் வலையுலகில் நிறைய மாற்றங்கள். போண்டாவும், பூரிக் கிழங்குமாய் களை கட்டிக்கொண்டிருந்த வலைபதிவர் சந்திப்புகளை போண்டா வேண்டா சங்கம்...கருத்தரங்கம் எல்லாம் நடத்தி கட்சி,சங்கமெல்லாம் உருவாகிவிடுவார்கள் போல இருக்கிறது. அடப்பாவிகளா...அப்போ ஓசி போண்டாவெல்லாம் அவ்வளவு தானா? இது வரைக்கும் ஒரு ஓசி போண்டா கூட தேத்தலையே..கருத்தரங்க தலைப்புகளையெல்லாம் வேறு பார்த்தால் பயமாய் இருக்கிறது.மக்கள் திருந்திருவாங்க போல இருக்கே...
எல்லாம் சரி..நடுவில் நான் ஒரு படத்தில்(சினிமா அல்ல) வேறு நடித்திருக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? அடுத்த பதிவில்...விபரமாய் எழுதுகிறேன்.
நடுவில் என்னடா இயந்திரமயமான வாழ்க்கை என்று வெறுத்துவிட்டது. என்னத்தையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆபிஸ், வீடு, வாசல், பணம்,மீரா ஜாஸ்மின் ,பிட்ஸா, பொங்கல், பினாயில் - அடப் போங்கடா எல்லாம் மாயை போதும் என்றாகிவிட்டது. ஏதோ சயன்ஸ் சானலில் இன்னும் டிரில்லியன் ஒளி ஆண்டிற்கு அப்பால் இன்னொரு பால்வெளி (மில்கி வே) இருக்கிறது என்று காட்டினார்கள். இந்த அண்ட வெளியில் நாமெல்லாம் தூசு. வாழப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கும் நூறு ஆண்டுகளில் எத்தனை தேறப் போகிறதோ...இதற்கு இந்த நாய் படாத பாடு...பேசாமல் ஒரு ரெண்டு வருஷத்துக்கு சாமியாராக போய்விட்டு திரும்ப வரலாமா என்று பலமான யோசனை வேறு. அப்புறம் சரவணா பவனில் மிக்ஸட் வெஜிடபள் பராட்டா சாப்பிட்டுவிட்டு, ஸ்வீட் பீடா போட்டுக் கொண்டே பல்லைக் குத்திக் கொண்டிருந்த போது "ஹகூனா மடாடா" (Hakuna Matata) தத்துவம் சித்தித்தது.
இடைப்பட்ட காலத்தில் சில நல்ல படங்களையும் வழக்கம் போல் ஏகப்பட்ட குப்பைகளையும் பார்த்து வைத்தேன். பாலாஜி எஸ் ராஜன் தயவில் "ப்ளாக்" (Black) ஹிந்தி படம் பார்த்தேன். ஹாலிவுடில் சிலபேர்கள் எடுப்பது மாதிரி நம்மாட்கள் நுண்ணிய உணர்வுகளை மையப் படுத்தி எடுக்கவே மாட்டார்களா என்ற ஏக்கத்தை இந்தப் படம் சிறிது போக்கியிருக்கிறது. "ப்ளாக்" பிழியப் பிழிய அழ வைக்கக்கூடிய தன்மை வாய்ந்தது.அட்லீஸ்ட் தொண்டையையாவது அடைக்கும் நான் கியாரண்டி. ராணி முகர்ஜி நடிப்பை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அமிதாப் பச்சன் நடிப்பை இப்போது தான் பார்க்கிறேன் (அவர் படமெல்லாம் ரொம்ப பார்த்ததில்லை). இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். படத்தில் வரும் குடும்பம் தான் கொஞ்சம் செயற்கைத் தனமாக இருக்கிறது ஆனால் இந்த இருவரின் நடிப்புக்காக அதையெல்லாம் மன்னித்துவிடலாம்.
வீட்டில் வேறு கட்டுமான வேலை ஆரம்பித்தாகிவிட்டது. டீ.வி கம்ப்யூட்டர் எல்லாவற்றையும் குப்பயோடு குப்பையாக கட்டி வைத்திருக்கிறோம். கன்னிகா வந்ததிலிருந்து இப்போதான் தங்கவேட்டை பார்க்க ஆரம்பித்தேன்...தக தகவென்று இருக்கிறார்..ஹூம் வீட்டு வேலை முடியும் வரையில் அவர் தொடர்ந்து தங்கவேட்டையில் இருக்கவேண்டும் என்று முருகனுக்கு இரண்டு ரூபாய் முடிந்து வைத்திருக்கிறேன்.
வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் செஞ்சு பார்ன்னு பழமொழியெல்லாம் பிரெஞ்சு காண்டிராக்டரிடம் சொல்லிப் பார்த்தேன், பத்து பைசா கூட குறைக்கமாட்டேன் என்று கறாராக சொல்லி விட்டார். இந்த பழமொழியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டும் ஏன் கல்யாணம் கட்டிக்கிட்டன்னு நக்கல் வேறு. செங்கல் லோடு இறக்குகிற அன்னிக்கு அவனை தங்கமணி கிட்ட போட்டுக்கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். வீட்டை இடிக்க ஆரம்பித்தைலிருந்து வீடு முழுக்க ஒரே தூசி. எல்லா இடத்திலும் மண் பரவியிருக்கிறது. சாப்பாடு மண்ணு மாதிரி இருக்குன்னு தங்கமணியிடம் தெகிரியமா சொல்ல முடிகிறது.
எல்லா சாமான்களையும் ஒரு பெட்ரூமில் போட்டு பூட்டிவிட்டு இன்னொரு பெட்ரூமில் ஒண்டிக் குடித்தனம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நடுவில் டுபுக்கு ஊரை விட்டு ஓடிப் போய் உத்த்மனாய் வாழ ஆரம்பித்துவிட்டார் என்று யாரும் கதை கட்டிவிட்டுவிடக் கூடாதே என்று ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்.
கொஞ்ச நாள் வெளிஉலக தொடர்பே இல்லாமல் ப்ளாக் உலகை திரும்ப வந்து பார்த்தால் தமிழ் வலையுலகில் நிறைய மாற்றங்கள். போண்டாவும், பூரிக் கிழங்குமாய் களை கட்டிக்கொண்டிருந்த வலைபதிவர் சந்திப்புகளை போண்டா வேண்டா சங்கம்...கருத்தரங்கம் எல்லாம் நடத்தி கட்சி,சங்கமெல்லாம் உருவாகிவிடுவார்கள் போல இருக்கிறது. அடப்பாவிகளா...அப்போ ஓசி போண்டாவெல்லாம் அவ்வளவு தானா? இது வரைக்கும் ஒரு ஓசி போண்டா கூட தேத்தலையே..கருத்தரங்க தலைப்புகளையெல்லாம் வேறு பார்த்தால் பயமாய் இருக்கிறது.மக்கள் திருந்திருவாங்க போல இருக்கே...
எல்லாம் சரி..நடுவில் நான் ஒரு படத்தில்(சினிமா அல்ல) வேறு நடித்திருக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? அடுத்த பதிவில்...விபரமாய் எழுதுகிறேன்.
Tuesday, October 03, 2006
Orkut
ப்ளாக் எழுதுவதை விட வேற வெட்டியான வேலை எதுவும் இருக்கா என்ற எனது நீண்டநாளைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிட்டது. “Orkut” என்ற வலைத்தளத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன என்று பார்த்ததில்லை. தற்போதைய மெம்பர்கள் யாராவது அழைப்பு அனுப்பித்தால் தான் சேரமுடியும் என்று சொன்னவுடன் ஆர்வம் அதிகரித்துவிட்டது. கையிலவிழுந்து கால்லவிழுந்து கடைசியில் நம்ம வெட்டிபயல் அழைப்பு அனுப்பி, சேர்ந்துவிட்டேன். சரி என்னாடான்னு போய் பார்த்தா...மஹாவெட்டி...பைசாக்கு பிரோஜனம் இல்லை. இப்படியும் பொழுதைப் போக்கமுடியுமா என்று கேவலமாக இருந்தது. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நமக்கு ரொம்ப பிடிக்குமே என்று நானும் ஜோதியில் ஐய்கியமாகியாச்சு. வெட்டி ஆட்டத்தில் நானெல்லாம் ஜுஜுபி. அவ்வளவு வெட்டிகள் அங்கு இருக்கிறார்கள், ஆஹா நாம கொஞ்சம் பரவாயில்ல போலன்னு சந்தோஷமாக இருந்தது. கொஞ்சம் நோண்டி பார்த்ததில் நம்ம தமிழ் வலைப்பதிவாளர்கள் சிலர் தென்பட்டனர்.
நம்ம கமெண்ட்ஸ் பொட்டி மாதிரி அங்க ஸ்கிராப் புக் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. ஆனா எந்த மூதேவி கண்டுபிடித்தானோ.தெரியவில்லை..அந்த விளையாட்டில் ஒருவர் நம் ஸ்கிராப் புக்கில் கேள்வி கேட்டால் நாம் இங்கேயே பதில் சொல்லக்கூடாதாம். அவருடைய ஸ்கிராப் புத்தகத்தில் பதில் சொல்லவேண்டுமாம். இது தெரியாமல் இவங்களெல்லாம் என்ன லூஸா...சம்பந்தமே இல்லாமல் பேசிக்கிறாங்களேன்னு சிலருடைய ஸ்கிராப் புத்தகத்தைப் பார்த்து திரு திருவென முழித்துக்கொண்டிருக்கும் போது வெட்டிப்பயல் திரும்பவும் உதவிக்கு வந்து ஐய்யப்பாட்டை அகற்றினார். ஹூம் இதனால் சுவாரசியமான அரட்டைகளை எல்லாம் பக்கத்தில் போனில் பேசுபவரிடம் ஒட்டு கேட்பது போல் ஒருபக்கமாகத் தான் கேட்கமுடிகிறது. அந்தப் பக்கம் என்ன பதில் சொன்னர்கள் என்பதைப் பார்க்க அங்கு போக வேண்டி இருக்கிறது. அடப் போங்கப்பா…பண்றதே வெட்டி வேலை இதுல என்ன ப்ரொடோகால்? தங்கிலிஷ் பிகர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஆம்பளை கபோதிகளுக்கு சொந்த வீட்டில் மட்டும் தான் சிறப்பு, கல்யாணமான கபோதிகளுக்கு அதுவும் கிடையாதுன்னு ஔவையார் சும்மாவா சொன்னாங்க, ஸ்கிராப் புத்தகத்தில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
நிற்க. இருக்கிற வெட்டிவேலைகள் போதாதென்று சென்ற வாரம் வேட்டையாடு விளையாடு பார்த்தேன்.கவுத்திட்டாங்க. "காக்க காக்க" ரீமேக்கை கேவலமாகச் செய்திருக்கிறார்கள். இந்த இழவ பார்கறதுக்கு ஒரிஜினல் டி.வி.டிக்காக காத்திருந்தேன். கோலங்கள் விளம்பர இடைவேளையில் பார்தால் போதுமானதாக இருந்திருக்கும். இதை விட ஜி.சி.டி மாணவர்களே பட்டையைக் கிளப்பி இருப்பர்கள். பிரேமலதா அக்கா புண்யத்தில் ஏழு திகில் படங்கள் வேறு பார்த்தேன். "The Forgotten " படம் கிடைத்தால் பாருங்கள். எனக்கு மிக மிக பிடித்தது. வித்யாசமான கதைக் களம், எதிர்பாராத முடிவு. அருமையாக எடுதிருக்கிறார்கள். கிடைத்தால் தவறாமல் பாருங்கள்.
மேலும் நிற்க. எனது சேவையை பாராட்டி (நான் இங்கே ரொம்ப கிழிக்கிறேன்னு வாசிக்கவும்) வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் "அட்லாஸ் வாலிபர்" கவுரவத்தை அளித்து அக்டோபர் மாதம் என்னை அங்கு எழுதச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு எனது படைப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களைப் படிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
(இனிமே உட்கார்ந்துக்கலாம்)
நம்ம கமெண்ட்ஸ் பொட்டி மாதிரி அங்க ஸ்கிராப் புக் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. ஆனா எந்த மூதேவி கண்டுபிடித்தானோ.தெரியவில்லை..அந்த விளையாட்டில் ஒருவர் நம் ஸ்கிராப் புக்கில் கேள்வி கேட்டால் நாம் இங்கேயே பதில் சொல்லக்கூடாதாம். அவருடைய ஸ்கிராப் புத்தகத்தில் பதில் சொல்லவேண்டுமாம். இது தெரியாமல் இவங்களெல்லாம் என்ன லூஸா...சம்பந்தமே இல்லாமல் பேசிக்கிறாங்களேன்னு சிலருடைய ஸ்கிராப் புத்தகத்தைப் பார்த்து திரு திருவென முழித்துக்கொண்டிருக்கும் போது வெட்டிப்பயல் திரும்பவும் உதவிக்கு வந்து ஐய்யப்பாட்டை அகற்றினார். ஹூம் இதனால் சுவாரசியமான அரட்டைகளை எல்லாம் பக்கத்தில் போனில் பேசுபவரிடம் ஒட்டு கேட்பது போல் ஒருபக்கமாகத் தான் கேட்கமுடிகிறது. அந்தப் பக்கம் என்ன பதில் சொன்னர்கள் என்பதைப் பார்க்க அங்கு போக வேண்டி இருக்கிறது. அடப் போங்கப்பா…பண்றதே வெட்டி வேலை இதுல என்ன ப்ரொடோகால்? தங்கிலிஷ் பிகர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஆம்பளை கபோதிகளுக்கு சொந்த வீட்டில் மட்டும் தான் சிறப்பு, கல்யாணமான கபோதிகளுக்கு அதுவும் கிடையாதுன்னு ஔவையார் சும்மாவா சொன்னாங்க, ஸ்கிராப் புத்தகத்தில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
நிற்க. இருக்கிற வெட்டிவேலைகள் போதாதென்று சென்ற வாரம் வேட்டையாடு விளையாடு பார்த்தேன்.கவுத்திட்டாங்க. "காக்க காக்க" ரீமேக்கை கேவலமாகச் செய்திருக்கிறார்கள். இந்த இழவ பார்கறதுக்கு ஒரிஜினல் டி.வி.டிக்காக காத்திருந்தேன். கோலங்கள் விளம்பர இடைவேளையில் பார்தால் போதுமானதாக இருந்திருக்கும். இதை விட ஜி.சி.டி மாணவர்களே பட்டையைக் கிளப்பி இருப்பர்கள். பிரேமலதா அக்கா புண்யத்தில் ஏழு திகில் படங்கள் வேறு பார்த்தேன். "The Forgotten " படம் கிடைத்தால் பாருங்கள். எனக்கு மிக மிக பிடித்தது. வித்யாசமான கதைக் களம், எதிர்பாராத முடிவு. அருமையாக எடுதிருக்கிறார்கள். கிடைத்தால் தவறாமல் பாருங்கள்.
மேலும் நிற்க. எனது சேவையை பாராட்டி (நான் இங்கே ரொம்ப கிழிக்கிறேன்னு வாசிக்கவும்) வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் "அட்லாஸ் வாலிபர்" கவுரவத்தை அளித்து அக்டோபர் மாதம் என்னை அங்கு எழுதச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு எனது படைப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களைப் படிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
(இனிமே உட்கார்ந்துக்கலாம்)
Subscribe to:
Posts (Atom)
