Sunday, August 28, 2016

பழி

**********
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பதிவு ரொம்ப ரொம்ப இண்டீசண்டான பதிவு. டீசண்ட் பார்டீஸ் நேரா லெஃப்டுல போய் ரைட்டுல திரும்பவும்.
********
உலகின் தலையாய தர்மசங்கடங்களில் ஒன்று கக்கா போகும் போது மொபைலில் கால் வந்து தொலைவது. ஆண்களுக்கு மொபைல் ஃபோனை கால் சாராய் பையில் வைப்பதால் இந்த சங்கடம் அடிக்கடி நிகழும். இந்த சூப்பர் சிங்கரில் பாடுபவர்கள் எல்லாம் பாடும் போது காற்றில் எஸ் ஒன்றை வெட்டி வெட்டி வரைந்து கொண்டே பாடுவார்களே அது மாதிரி நம்மை சைலைண்ட்டாய் எஸ் வரைந்து கொண்டு கடமை ஆற்ற விடமாட்டார்கள். கரெக்ட்டாய் ஃபோன் வந்துவிடும். வரும் கால் ஒருக்கால் முக்கியமான காலாய் இருந்து தொலைத்தால் எடுத்து தொலைய வேண்டியிருக்கும். அப்படி பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் அந்தப் பக்கம் பேசுபவர் பெண்ணாய் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் அதி விசேஷம். ரகசியக் குரலில் “மேடம்....முக்கியமான மீட்டிங்கில் இருக்கேன்...கொஞ்ச நேரத்துல கால் பண்ணட்டுமா” என்றால் நம்ம “காற்றில் எந்தன் கீதம்” அவருக்கு காதில் விழுந்து தொலையாது. “உங்க சைடு சிக்னல் வீக்கா இருக்கு சார், குரல கொஞ்சம் உசத்திப் பேசுங்க சார்..” என்று விடமாட்டார்கள். “ இங்க என்னோட மேனேஜரோட இம்பார்ட்ண்ட் மீட்டிங்க்ல இருக்கேன் மேடம் கொஞ்ச நேரம் கழிச்சுப் பண்றேன்” என்றால் பக்கத்து டாய்லெட் சக பிரயாணி ட்ரிபிள் மீனிங்கில் கெக்கப் பிக்க என்று சிரிப்பார். 

வேறு சில சந்தர்பங்கள் இன்னும் எசகுபிசகாய் இருக்கும் “எங்க சார்..இருக்கீங்க புரியலை...சத்தமா பேசுங்க புரியலை” என்று அந்தப் பக்கம் இம்சையாய் கேட்கும் போது இந்தப் பக்கம் - பக்கத்து டாய்லெட் க்யூபிகலில் ட்ரம்ஸ் சிவமணியை குடித்தனம் வைத்த மாதிரி தடா முடாவென்று டெல்லி பெல்லி தனியாவர்தனம் செய்து கொண்டிருப்பார். “நீங்க ஏதோ கச்சேரில இருக்கீங்கன்னு நினைக்கிறேன் என்ஜாய் பண்ணுங்க நான் வேணா அப்புறமா பண்ணட்டுமா”ன்னு கால் முடியும் போது ஸ்ஸ்ஸ்ப்பான்னு என்று இருக்கும். 

ஆனால் இந்திய வம்சாவளிக்குத் தான் இந்த லஜ்ஜையெல்லாம் போல. ஆனால் இங்கே பல வெள்ளைக்கார்கள் கவலையே பட மாட்டார்கள். சிலபேர் கான்பரன்ஸ் காலையும் “எஸ் ஆல் டன் ஆன் டைம் - ஹை க்வாலிட்டி டெலிவரி” என்று ஸ்டேடஸ் அப்டேட்டோட ஜோலியோடு ஜோலியாய் இங்கேயே முடித்துவிடுவார்கள். நான் சமீபத்தில் கூசிக் குறுகி வாஷ் பேசினில் ஒரு தோழியுடைய கால் அட்டெண்ட் செய்யவேண்டிய கட்டாயம். ரெண்டு நிமிஷத்தில் திரும்பக் கூப்பிடுகிறேன் என்று சொல்லலாம் என்று எடுத்து “மேனேஜரோடு இம்பார்ட்டண்ட் ..” என்று ஆரம்பிக்கும் போதே பக்கத்து பிரயாணி “குயில் பாட்டு .....வந்ததென்ன இளமானே” பாட்டின் குயில் மாதிரி ஏடாகூடமாய் கூவி தோழி ஒரு மாதிரி சூழ்நிலையை புரிந்து அப்புறம் பேசுகிறேன் என்று கட் பண்ணிவிட்டார். கொலைப் பழியைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால்......சை......இன்று வரை என்னால் ஒரு தன்னிலை விளக்கம் கூட கொடுக்க முடியவில்லை.

1 comment:

Saraswathi said...

Hahaha u r really too good in writing about sensitive/awkward subjects

Post a Comment

Related Posts