"தண்ணி என்றால் என்ன...கிக்கு என்றால் என்ன"ன்னு பழனியாண்டவர் மாதிரி கையில் ஆரஞ் ஜூஸை வைத்துக் கொண்டு நானும் தண்ணியடிக்கும் தர்மவான்களுக்கு கிக்கு ஏறவிடாமல்
நிறைய மொக்கை போட்டிருக்கேன். "யூ நோ...கிக்கு மீன்ஸ் கிக்கு......"ன்னு சில துரைமார்கள் மெனெக்கெட்டிருக்கிறார்கள். "தம்பீ...இதெல்லாம் கலர் மலையாளப் படம் மாதிரி...ஒரு மகோன்னத அனுபவம்...யாராலயும் சொல்லி புரிய வைக்க முடியாது"ன்னு நிறைய உஷார் மாக்கான்கள் நழுவியிருக்கிறார்கள்.
"அந்த கன்றாவில அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துடனும்"ன்னு ரொம்ப நாளாகவே பீடிகை போட்டு வந்தேன். மெட்ராஸில் டூ வீலர் லைசன்ஸ் மாதிரி சப்பையாய் முடிய வேண்டிய மேட்டர், கல்யாணமாகி பத்து வருஷம் நல்லவனாய் நடித்ததில் நேஷனல் பெர்மிட் மாதிரி கொஞ்சம் இழுத்தடித்துவிட்டது. இதில் இரண்டு குழந்தைகளுக்கு வேறு பொறுப்பான அப்பாவாக ஆக்ட் குடுத்துக் கொண்டிருப்பது விஷயங்களை மேலும் சிக்கலாகிவிட்டது.
2012-ல வேற உலகம் அழியப் போகுதுன்னு சொல்லிட்டாங்களேன்னு பிரஷர் ஏற ஆரம்பித்து, ஏதோ ஒரு நல்ல நாளில் ஆரம்பிக்கலாமேன்னு நாளும் குறித்தாயிற்று.
முன்ன பின்ன செத்தா தானே சுடுகாடு தெரியும்ன்னு ஆபிஸில், பக்கத்திலிருந்து ஆளிடம் பேச்சு வாக்கில் "எப்பா ராசா வெள்ளிக்கிழமையானா பாருக்கு கோலம் போடப் போகறியே எங்கூர்லன்னா டாஸ்மார்க்...இந்தூர்ல எந்த ப்ராண்ட்யா நல்லாயிருக்கும்"ன்னு கேட்க அம்புட்டு தான் ஆபிஸ் இருந்த அத்தனை பேரும் ஆளுக்கு ஆள் வந்து ரவுண்டு கட்டி அட்வைஸ் குடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
நான் ஏதோ டபுள் டீர் பிராண்ட் பாஸ்மதி அரிசி மாதிரி ஒரு பெயர சொல்லுவான் கடைக்குப் போய் அதுல ஒரு பாட்டில் பேப்பர் சுத்தி குடுங்கன்னு வாங்கிட்டு வந்துடலாம்ன்னு பார்த்தா...விஷயம் ஏகத்துக்கும் காம்ப்ளிகேட்டாய் இருந்தது.
"பீர்லாம் வேண்டாம் முதல் தரம் பிடிக்கவே பிடிக்காது...வைன்ல ஆரம்பி அதான் உடம்புக்கு நல்லது"
"ஒக்கே...எந்த ப்ராண்ட்..."
"ப்ராண்ட்..ஓ யூ மீன் ஒயிட் ஆர் ரெட்..? .ரெட் வொயின் ஆரம்பி அதான் உன்னை மாதிரி கத்துக் குட்டிக்கெலாம் வாடை குறைய இருக்கும்..."
"ஓ அப்படியா...சரி...(இந்த மரமண்டையனுக்கு ப்ராண்ட்ன்னா தெரியல போல) ...ஓக்கே ரெட் வைன் புரிஞ்சுது ஆனா அதுல எந்த ப்ராண்ட்..ஐ மீன் லேபிள்..."
"லேபிள்...?? ரெட் லேபிள், ப்ளூ லேபிள் அதெல்லாம் விஸ்கில தான் ...வைன்ல கிடையாது...வைன்ல வருஷம் தான் கணக்கு.."
"கிழிஞ்சுது போ...ஓ இது அரிசி மாதிரியா..ஓக்கே பாத்துக்கறேன்..."ன்னுய் நழுவினாலும் விடவில்லை. இந்த வைன் இந்த சாப்பாடு கூட சாப்பிடனும் அந்த வைன் அந்த சாப்பாடோட சாப்பிடனும்ன்னு ஏகத்துக்கு குழப்பினார்கள். எங்கூர் தரமணி டாக்கிஸில் எல்லாத்துக்கும் கொண்டக் கடலை சுண்டலும், அவிச்ச முட்டையும் தானே சைட் டிஷ் வைப்பாங்க...அப்போ ஏமாத்திட்டாங்களான்னு எனக்கு ஏகத்துக்கும் டவுட்டு.
இதுல வைனை எடுத்து அப்படியே மடக்குன்னு குடிக்கக் கூடாதாம். வாயில விட்டு வெல்லப்பாகை சப்புக் கொட்டி சாப்பிடுவது போல மெதுவாய் நாக்கில் படுகிறமாதிரி பதமாய் டேஸ்ட் செய்ய்வேண்டுமாம். போ போ போய்டே இரு...நான்லாம் பரம்பரை ரவுடி...பாட்டில கவுத்தினேன்னா...பாட்டில் வழியா வானம் தெரிஞ்சாத் தான் பாட்டில கீழ இறக்குவேன்னு அப்படியே அவனை விரட்டிவிட்டேன்.
"ஓக்கே ஓக்கே...சூதனமா இருந்துக்கோ...குடிக்கும் போது ஏதாவது டவுட்னா எனக்கு ஒரு போன போடு, நான் க்ளியர் பண்ணறேன்னு ரெண்டு மூனு பேர் ஏகத்துக்கும் நல்லவன்களாய் இருந்தார்கள்.
டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா... கடைக்குப் போய் "அண்ணாச்சி ரெட் கலர்ல ஒரு வைன் குடுங்க"ன்னா குடுத்துட போறாரு. ஆபிஸில வேலைல சந்தேகம்னா ஒரு பயலும் திரும்பிக் கூட பார்க்காதீங்க....இப்படி ஒரு நல்லவன குடிச்சிக் கெடுக்கனும்ன்னா அடுத்த டிப்பார்ட்மென்ட் பெண்மணிகள் முதற்கொண்டு வந்து அட்வைஸ் பண்ணுங்கடான்னு எனக்கு ஏகத்துக்குப் பெருமை.
இருந்தாலும் விஷயம் இன்னும் குழப்பமாய் இருந்ததால், பொறுமை அதிகமாயிருக்கும் கலயாணமாகாத பேச்சிலர் பசங்களில் ஒருத்தனைப் பிடித்து "என்னய்யா குழப்புறாய்ங்க...என்னம்மோ ஐ.ஏ.எஸ் பரிட்சை மாதிரி ஆயிரத்தெட்டு சிக்கல பின்னுறாங்க..."ன்னு புலம்பியதில், நம்ம பேச்சிலர் பல நாடுகளில் இருந்தும் வரும் சரக்குகள் பற்றியும் திராட்சைகள் பற்றியும் அவற்றின் தாத்பரியங்களை பற்றியும் விலாவாரியாக எடுத்துரைத்தார்.
"ஏற்கனவே உங்களுக்கு தலை கால் தெரியாது இதுல முதல் தரம் வேற வைன்லாம் வெளில வெச்சு எங்கயாவது குடிக்கவேண்டாம் முதல்ல வீட்ல கொஞ்சமா ட்ரை பண்ணிப் பாருங்க"ன்னு தங்கமணி ஏக கரிசனம்.
அதுவும் சரிதான் நாம ஏற்கனவெ ரொம்ப பெரிய ரவுடி இதுல சரக்கு உள்ள போச்சுன்னா அப்புறம் எவன் அடிச்சான்னு கூட சொல்லத் தெரியாதுன்னு தலையாட்டிவிட்டேன்.அடுத்த வாரம் டெஸ்கோவிற்க்கு போன போது ஒரு சரக்கு ஆபரில் போட்டிருந்தார்கள். நம்ம பேச்சிலரிடம் நெட்டுறு போட்டதில் எனக்கு சரஸ்வதி சபதம் சிவாஜி மாதிரி "அ..அம்மா...ஆ....ஆடு...இ..இலைன்னு" உடம்பில் நரம்புகள் முறுக்கேறி பட்டென்று வாங்கி வந்துவிட்டேன்.
வெள்ளிக்கிழமை மஹாலெட்சுமிக்கு உகந்த நாள் என்று தங்கமணி தடா போட்டதில் தண்ணி முஹூர்த்தம் சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சனிக்கிழமை மகள்களை அப்படி இப்படி என்று தாஜா காட்டி தூங்கப் போக சொல்லிவிட்டு பாட்டிலை உதறலோடு கையில் எடுத்த போது மணி இரவு பதினொன்று. "ஐயா முதல் தரம் பூஜை போடப் போறேன்...சைட் டிஷெல்லாம் அமர்களப் படுத்திடனும் என்ன...கொண்டக் கடலை சுண்டல், சிப்ஸ் வித் சல்சா டிப்பிங்...ஸ்பைசி கேஷ்யூநட்ஸ், காரமாய் பரோட்டா குருமா..எல்லாம் கரெக்டா இருக்கனும்...சரக்கு உள்ள் போச்சுன்னா அப்புறம் என் பேச்சை நானே கேட்கமாட்டேன் பேஜாராகிடும்"ன்னு தங்கமணிக்கு ஏகப்பட்ட பில்டப் வேறு குடுத்திருந்தேன்.
எத்தனை படங்களில் ட்யூஷன் எடுத்திருப்பார்கள்...பாட்டிலை தலையில் ஒரு தட்டு தட்டி, அடியில் ஒரு தட்டு தட்டி ஸ்க்ரூவை முறுக்கினால் ஈ.ஸியாய் திறக்கலாம்...ன்னு சீலை உடைத்தால் "கார்க்" பெப்பரப்பேன்னு முழித்துக் கொண்டிருந்தது. பாழாய்போன பரதேசி பேச்சிலர் கார்க் போட்டு மூடியிருபார்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டான்.எங்க வீட்டில் சென்னா டின் ஒப்பன் பண்ணும் டின் ஓப்பனர் மட்டுமே.
விட்ட சைட் டிஷ் அலப்பரையில் தங்கமணி ஏற்கனவே செம டென்ஷனாகியிருந்தார். இதுக்குத் தான் இந்த பில்டப்பான்னு காறித் துப்பி விடுவார்ன்னு ராத்திரி அவசரமாய் அலைந்து பக்கத்து கடையில் "வீட்டுல கிச்சன் சிங்க் பைப் புட்டுக்கிச்சு அதை சரி பண்ண அவசரமா கார்க் ஒப்பனர் வேணும்ன்"னு வாங்கி வந்து ஓப்பன் செய்தால் ஒயின் நாற்றமான நாற்றம். நான் வேற பந்தாவா முக்கால் க்ளாஸ் ஊற்றிக் கொண்டுவிட்டேன். இந்த இழவையா குடிக்கப் போறீங்கன்னு தங்கமணிக்கு ஏக சிரிப்பு. "இதெல்லாம் கனவான்கள் குடிக்கிற சோமபானம்"ன்னு அரை க்ளாஸ் உள்ளே போவதற்க்குள் முழி பிதுங்கி இருந்த சைட் டிஷெல்லாம் காலி.
"சும்மா சைட் டிஷ்ஷை மட்டுமே சவசவன்னு மென்னு காலி பண்ணிட்டீங்க..கோட்டா ஓவர் .திரும்பலாம் கிடைக்காது"ன்னு தங்கமணி கறாராய் சொல்லிவிட்டார். இருந்தாலும் நான் குடித்துவிட்டு ஏதாவது கோமாளிக் கூத்தடிப்பேன் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்.
என்னாடா நாம புதுசா இருந்தாலும் அரைக் க்ளாஸ் அல்ரெடி அடிச்சாச்சு...இருந்தும் இந்த கிக்கு ஒன்னும் வரலையே ஒரு வேளை சோடா கலக்கனுமோ..நம்மாள் சிலபஸ்ல அதெல்லாம் சொல்லலையேன்னு எனக்கும் கவலை வர ஆரம்பித்தது.
"என்னங்க ஏதாவது ஏறிச்சா"ன்னு தங்கமணி வேற கார்பரேஷன் தண்ணி டேங்கில் ஏறியாச்சா தொனியில் அடிக்கடி வினவிக்கொண்டிருந்தார்.
"சும்மா தொனதொனக்காத மனுசனை ஒரு ஃபீலிங்காய் இருக்கவிடு இப்பத் தான் ஏறிகிட்டு இருக்கு"ன்னு சமாதானம் சொன்னாலும் கிக்கு ஏன் ஏறவில்லை, ஒரு வேளை டூப்ளிகேட் சரக்கா இருக்குமோன்னு கவலையாயிருந்தது.
"ஒரு வேளை உங்களுக்கு தெரியாம அல்ரெடி கிக்கு ஏறியிருக்கும்...மாடிப் படில ஏறிப் பாருங்க...ஸ்டெடியா இல்லைன்னா தெரிஞ்சிடும்"ன்னு தஙகமணி சொன்ன போது ஏதோ ஹிட்டன் அஜென்டா இருக்கும் என்று உள்மனசு சொன்னாலும் ஏறித் தான் பார்ப்போமே கழுதை ஸ்டெடியா இருகோமான்னு தெரிஞ்சிடப் போகுதுன்னு ஏறியதில்,அபடியே அங்க உணர்த்தி இருக்கும் நைட் டெரெஸ்ஸை எடுத்துக் கொண்டும் வரும் ஆர்டர் தேறியது தான் மிச்சமே தவிர கிக்கு ஒன்னும் ஏறியது மாதிரி தெரியவில்லை.
ரைட்டு நம்ம ஆர்நால்ட் பாடிக்கு அரை கிளாஸெல்லாம் போதாது போலன்னு இன்னும் ஒரு கால் க்ளாஸ் ஏத்தியதில் காய்ச்சல் வந்தால் லேசாய் கண்கள் கணக்குமே அது மாதிரி இருந்தது. வந்தாச்சு...வந்தாச்சு...கிக்கு வந்தாச்சுன்னு மாப்பிள்ளை வீட்டு காரார்கள் வந்த மாதிரி சவுண்டு விட்டதில் தங்கமணி லேசாய் அரண்டு விட்டார். உண்மையிலேயாவா இது எத்தனை சொல்லுங்க..ன்னு விரலெல்லாம் காட்டிக் கேட்க ஆரம்பித்துவிட்டார். நானும் இதான் சாக்குன்னு "மீனா வந்து சரக்கு வைச்சிருக்கேன் இறக்கி வைச்சிருக்கேன் பாட்டு பாடனும்ன்னு" தெகிரியமாய் கோரிக்கை வைக்க...தங்கமணி எனக்கு உண்மையிலேயே ஏறிவிட்டது என்று முடிவுகட்டி "உங்களுக்கு ஏறியாச்சு இதோட போதும்"ன்னு மங்களம் பாடிவிட்டார். அதுக்கு மேல ரவுசு விட்டால் தங்கமணியிடமிருந்து வேற மாதிரியான நிஜ கிக்கு வரும் என்பதால் நானும் மலையேறிவிட்டேன்.
அட கருமாந்திரமே காய்ச்சல் வந்த மாதிரி இருக்கிற இந்த இழவுக்கா குடிக்கிறாங்க இதான் கிக்கா இதுக்கு ரெண்டு பாராசிட்டமால் மாத்திரை போட்டாலே போதுமேன்னு ஏமாற்றமாய் இருந்தது.
பின்னொரு நாளில் சில நெருங்கிய நட்பு வட்டத்தின் ஆன்சைட் ஹெல்ப்புடன் கிக்கு என்றால் என்ன என்று கண்டிப்பாய் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கைடன்ஸுடன் திரும்ப பால பாடம் எடுத்து அஙகேயே ஏத்து ஏத்துன்னு ஏத்தியதில் தலை சுத்தி ஒரு வழியாய் கிக்கு வந்து தொலைத்தது. அதிலும் நட்பு வட்டத்துடன் அடித்த கோமாளிக் கூத்து தான் ரொம்ப ஜாலியாய் இருந்ததே தவிர கிக்கு ஒன்னும் அப்படி ரொம்ப சொல்லிக்கிற மாதிரி இல்லை.