Sunday, December 05, 2004

என்டே குருவாயூரப்பா...

for picture version of this post click here


குருவாயூர் கோயிலிலேயே மிகவும் காஸ்ட்லியான பூஜை "உதயாஸ்த்மன பூஜை". இந்த பூஜை செய்வதற்கு கட்டளைதாரரிடம்...ரூபாய் ஐம்பதினாயிரம் வசூலிக்கப் படுகிறது. இதில் என்ன விசேஷ்ம் என்றால் வருடத்திற்கு 130 நாள் நடக்கும் இந்த காஸ்ட்லியான பூஜை 2046-வது வருடம் வரை புக் ஆகிவிட்டதாம். அதாவது கிட்டத்தட்ட ரூபாய் இருபத்தேழு கோடிக்கு மேல் பக்த கோடிகள் பணம் செலுத்தியாகிவிட்டதாம். (புக் செய்யும் போதே முழுப் பணமும் செலுத்தவேண்டுமாம்).

திருப்பதி கோயிலில் இந்த மாதிரி விஷயம் எல்லாம் சர்வ சாதாரணம். நானும் ஆஸ்திகன் தான். எனக்கு கடவுள் பக்தியில் ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்த மாதிரி கட்டுக் கட்டாக (லட்சம், கோடி) போடும் அதீத பக்தியில் மட்டும் சில சிந்தனைகள். இந்த மெகா பக்தர்கள் முழுதாக வருமான வரி செலுத்தியிருப்பார்களா? கோயிலில் லட்சம், கோடி போடுபவர்களெல்லாம் வருமான வரியில் கணக்கு காட்டியிருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் வந்தால் ஒருவேளை உண்டியல் பல்லைக் காட்டிவிடுமோ? இந்த பணக்கார தேவஸ்தானங்களுக்கு கொட்டிக் குடுப்பதை விட, நலிந்தவர், உதவி தேவைப்படும் அனாதை / உனமுற்றோர் / முதியோர் இல்லங்கள் குடுத்தால் உம்மாச்சி இன்னும் கொஞ்சம் கருணை காட்டுவாரோ?

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ...என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானா?

மேலும் படிக்க...

2 comments:

Vinay said...

How do you write tamil post in blos?

rvinaykumar@gmail.com

Krishna Kumar.S said...

Very nice. I appreciate your idea very much. I am also of the same wavelength as you.

Post a Comment

Related Posts