Monday, August 29, 2016

என்.ஆர்.ஐ. மம்மி

தலைப்பு சற்று மிஸ்லீடீங்காய் இருக்கிறதே முதலிலேயே மு.கு கொடுக்கவில்லையே என்று ஆதங்கப் படுபவர்களுக்காக சொல்லிவிடுகிறேன். இந்தப் பதிவு நேற்று எழுதிய The man who knew infinity திரைப்பட பதிவின் நீட்சியே.
என்.ஆர்.ஐ. மம்மி இந்தப் பதிவின் ஒரு அங்கமே அன்றி முக்கிய கதாநாயகி அல்ல. அது தவிர திரைப்படத்திலிருக்கும் சில காட்சிகளை இந்தப் பதிவில் விவரித்திருக்கிறேன். படம் பார்க்குமுன் அது பற்றி தெரிய விரும்பாதவர்கள் பதிவைத் தவிர்ப்பது நலம்.
நேற்றைய பதிவில் வந்த பெனத்தாலார் மற்றும் ராம்ஜியின் பின்னூட்டங்களே இந்தப் படம் பற்றிய என்னுடய மேலும் சில கருத்துகள் பதிய ஊக்கப்படுத்தின.(நன்றி அண்ணாச்சிகளா) The Mam who knew infinity-ல் இயக்குனர், வசனங்களோடு விரும்பி செய்த நிறைய subtle nuances கூர்ந்து கவனித்தால் அசத்தும்.

The So called Racism - ரேசிசம் என்பது இன்றைய காலகட்டத்தில் இனவெறுப்பு மட்டுமல்லாது இன. நிற , வகுப்பு, சாதி என்று எல்லாவற்றையும் பொதுவாய் குறிக்கும் ஒரு சொல் மற்றும் உணர்வாகிவிட்டது. ராமானுஜனின் போராட்ட காலம் முதலாம் உலகப் போருக்கு முன்னால் ஆரம்ப கால ஆயிரத்தி தொள்ளாயிர காலம். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்துகொண்டிருந்த ஒரு காலம். இந்தியர்களை பெரும்பாலோர் நடத்தும் விதம் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதைப் பல இடங்களில் இயக்குனர் தைரியமாகக் காண்பித்திருப்பார். ஆனால் அதை விட இந்த மிரட்டல்களை எல்லோரும் எல்லா இடங்களிலும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள் , சில இடங்களில் தள்ளு முள்ளுக்களும் நடக்கும் என்றும் மிக subtleஆக அழகாக காட்டியிருப்பார். மெட்ராஸில் முதன் முதலாக ராமானுஜ்னுக்கு க்ளார்க் வேலை தரும் நாராயணன் அவரை தன் முதலாளி சர் ப்ரான்சிஸிடம் அறிமுகப் படுத்த அழைத்துச் செல்வார். ப்ரான்சிஸ் பார்த்த மாத்திரத்திலேயே ராமானுஜனை துச்சமாக மதித்து இவனையெல்லாம் ஒரு ஆள் என்று கூட்டிவந்துவிட்டீரா என்ற தோரணையில் “நாராயணன் நீங்க என்னிடம் எவ்வளவு காலம் எனக்கு வேலை பார்கிறீர்” என்று கேட்க “ கோதவரி நதியில் அணை கட்ட நான் உங்களுக்கு டிசைன் செய்து கொடுத்த நாள் முதலாய் சார், அதாவது அதிலிருந்து உங்களுக்கு சர் பட்டம் கிடைத்து உங்களை இன்று வரை சர் என்று அழைக்கும் காலத்திலிருந்து” என்று நாராயணன் ஊசி ஏத்துவார் பாருங்கள். வசனம் நச். (on a different note - நம்மூரில் தற்போது ரேசிசம் என்பதில் அது ரேசிசம் என்பதை உணராமலே நாம் எவ்வளவு பங்கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது பெருமூச்சு தான் வருகிறது. நமக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி போன்ற டீட்டெயிலுக்கு தனிப் பதிவே எழுதலாம்)

எல்லா இடங்களிலும் இந்த வெறுப்பு என்பது சாத்தியமான ஒன்று. ஆனால் இப்பேற்பட்ட இடங்களிலும் காலகட்டங்களிலும் அன்பைப் பாராட்டும் நல்லுங்களும் இருப்பார்கள். ப்ரொபசர் ஹார்டி மற்றும் லிட்டில் வுட் இதற்கு அருமையான உதாரணங்கள். மேதாவித்தன போட்டியும் பொறாமையும் நிறைந்து இருக்கும் கேம்பிரிட்ஜில், எங்கேயோ இருக்கும் ஒரு இந்தியனுக்கு வக்காலத்து வாங்கி அவனுடைய மேதமைக்காக மட்டுமே அவனை கொணர்ந்து. ஹார்ட்டி ராமானுஜனுக்காக ஃபெல்லோஷிப் வாங்க படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. படத்தில் சொல்லாத ஒரு நிஜம் ராமானுஜன் இங்கிலாந்து லேசில் வரவில்லை ப்ரொபசர் ஹார்டி ராமானுஜனை இங்கிலாந்து கொண்டு வர மெட்ராசில் ஒன்றம் பின் ஒன்றாக ஆட்களை தூது அனுப்பி ரொம்ப மெனக்கெட வேண்டியிருந்தது. ஹார்டி இல்லாவிட்டால் இன்றைக்கு நமக்கு ராமானுஜன் யார் என்றே தெரிந்திருக்காது. கேம்பிரிட்ஜில் ஹார்டிக்குத் துணையாக லிட்டில்வுடும் இன்னும் சில ப்ரொபசர்களும் பலம் சேர்த்தார்கள். ராமானுஜனைக் கொண்டாடும் நாம் இவர்களுக்கு என்றென்றைக்கும் கடமைப் பட்டுள்ளோம்.
இந்த ரேசிசம் தவிர ஞான செருக்கு பற்றி பல இடஙக்ளில் இயக்குனர்அழகாய் காண்பித்திருப்பார். ராமானுஜன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு அப்பொழுது தான் வந்திறங்கியிருப்பார். மலைப்புடன் பல்கலைக் கழக பிரமாண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ப்ரொபசர் லிட்டில்வுடின் வசனம் கன ஜோராய் இருக்கும். “Yes...the intended effect. ..Don't be intimidated. Great knowledge comes from the humblest of origins" - நிறை குடங்களை அவர்களின் பெருந்தன்மையை அழகாய் வசனத்தில் செதுக்கியிருப்பார் வசனகர்த்தா.

அடுத்தாய் எனக்கு பிடித்த ஒரு உளவியல் ரீதியான அனுகுமுறை ராமானுஜனின் தாய் பற்றியது. பிராமணர்கள் கடல் தாண்டி செல்லக் கூடாது என்ற நம்பிக்கை பலமாய் இருக்கும் குடும்பத்தில் சில பல சில பல சமாதனங்களுக்குப் பிறகு ராமானுஜன் இங்கிலாந்து செல்கிறார். ராமானுஜனின் மனைவி ஜானகியம்மாள் அவரைப் பிரிந்து எப்பொழுது அவருடன் சேருவோம் என்ற மன்நிலையில் இருக்கிறார், அவர் ராமானுஜனுக்கு எழுதும் கடிதங்கள் எதையும் ராமனுஜனின் தாய் கோமளம்மாள் போஸ்ட் செய்யாமல் ஒரு பெட்டியில் ஒளித்து வைத்துவிடுகிறார். அதே போல் ராமானுஜன் அனுப்பும் கடிதங்களையும் மனைவியிடமிருந்து மறைத்து பெட்டியில் வைத்துவிடுகிறார். ராமானுஜனின் மனைவி ஒரு கட்டத்தில் ராமானுஜன் தன்னை மறந்து விட்டார் என்று மனம் வெறுத்து அண்ணன் வீட்டிற்கு கிளம்பிவிடுகிறார். அங்கேயிருக்கும் காலகட்டத்தில் கடைசியாய் ராமானுஜனுக்கு ஒரு கடிதம் எழுதி அதில் அவரின் அம்மாவின் குட்டு வெளிபட்டுவிடுகிறது. வீட்டிற்கு திரும்ப வந்து கடிதங்கள் ஒளித்து வைத்திருக்கப்படும் பெட்டியை கண்டுபிடித்துவிடுகிறார். அப்பொழுது ராமனுஜனின் தாயார் வந்து “நீயும் அங்கே போய்விட்டால் ராமானுஜன் நாட்டிற்கு திரும்ப வரமாட்டான்” என்று கண்ணீர் மல்க சொல்கிறார்.
மற்ற குடும்ப அரசியலை எல்லாம் தவிர்த்துப் பார்த்தால் எனக்கு இது மிக மிக மிக நியாமான கோணமாய் பட்டது. இது கோமளம்மாளுக்கு மட்டுமல்ல எல்லா என்.ஆர்.ஐ மம்மிக்களுக்கும் பொருந்தும். எந்த ஒரு ஆணுக்கும் கல்யாணத்துக்கு முன் அம்மா என்ற இடத்தை கல்யாணமான பின் மனைவியே பூர்த்திசெய்கிறார். இருவரும் ஒரு இடத்தில் இருந்தால் இந்த விஷயமே பொசசிவாய் மாறி சில பல குடும்ப அரசியலுக்கு வித்திடும். ஆனால் ஒரு என்.ஆர்.ஐ. கோணத்தில் ஒரு ஆள் மனைவி கூட இல்லாமல் வெளிநாட்டில் இருப்பது பயங்கர ஹோம் சிக்காவிடும். அதுவும் உடம்பு சரியில்லாமல் போய் தவித்த வாய்க்க்ய் தண்ணீர் தரக் கூட ஆளில்லாமலிருந்தால் “போங்கடா நீஙகளுமாச்சு உங்க டாலருமாச்சு” என்ற முக்தி நிலை வந்துவிடும். நிறைய நண்பர்களிடம் இங்கு பார்த்திருக்கிறேன். ராமானுஜனின் வாழ்க்கையில் அதுவே அவர் பயங்கர ஹோம் சிக் ஆகி நாட்டிற்கு திரும்ப வருகிறார். இதே அவர் மனைவி இங்கிலாந்து சென்றிருந்தால் அவருக்கு கணித்ததின் மீது இருக்கும் காதலால் இங்கிலாந்தில் அவருக்கு வாய்த்த கணித வாய்ப்புகளால் இந்தியா உடனே வந்திருப்பாரா என்பது என்னளவில் மிகப் பெரும் சந்தேகமே. படத்தில் இது பெரிய சீனோ இல்லை வசனமோ அல்ல. ஆனால் இதுவே எனக்கு intended effectஆகப் பட்டது.

No comments:

Post a Comment

Related Posts