Sunday, October 18, 2009

பொறுமை....

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். பட்டாசெல்லாம் கொளுத்தி...பலகாரமெல்லாம் பக்கத்து வீட்டுக்கு குடுத்து...தெருவில் நண்பர்களோடு கூடி...சாரி சாரி...வழக்கம் போல டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்து தீபாவளியை ஜமாய்ச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

மன்னிக்கவும், வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமாக இருக்கட்டுமே என்று சில பல உபரி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு...இப்போ அது ஏகப்பட்ட பொறுப்புகளாகி.. ரெண்டு தெரு தள்ளி ஒரு குழந்தைக்கு காது குத்த மட்டும் தான் ஒத்துக்கொள்ளவில்லை அந்த அளவில் வந்து நிற்கிறது. எல்லா நேரங்களிலும் வேலை மென்னியப் பிடிக்கிறது. இப்போதெல்லாம் ஆபீஸ் போய் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளமுடிகிறது. இதெல்லாம் போக அடுத்த விடியோ(ஃபிலிம்) ப்ராஜெக்ட்டையும் ஆரம்பித்திருக்கிறேன். பின்னொரு பதிவில் விபரமாய் பதிவிடுகிறேன்.

என் சின்ன மகள் டிஜிட்டல் யுகத்தில் பிறந்ததால் தங்கமணி அவரின் நிறைய சேட்டைகளை மொபைல் போனில் பிடித்து வைத்திருந்தார். அதையெல்லாம் போனில் இருந்து கம்ப்யூட்டருக்கு மாற்றச் சொல்லி மூன்று வருடங்களாய் சொல்லிக் கொண்டிருந்தார். அப்புறம் "உங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லையா...நானும் எவ்வளவு நாள் சொல்றது ...கொஞ்சமாவது மானம் வெட்கம் இருக்கா...இதுக்கு மேல நான் மனுஷியா இருக்க மாட்டேன்"ன்னு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சியதில், சரி என்று பெரிய மனது செய்து மாற்றி அமைத்ததில் எனக்குப் பிடித்த ஒரு கோப்பு ஒன்றை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அமுக்கு போல முகத்தை வைத்துக் கொண்டு இரண்டு வயதில் என் சிறிய பெண் செய்த சத்தியாகிரகம்...ஹூம்ம்ம்ம்ம் இந்த இந்த இந்த டெக்னிக்கு தான் நானும் ரொம்ப நாளா ட்ரை பண்ணுறேன்...பிடி பட மாட்டேங்குது....!!!


ஆரம்பகால மொபைல் போனில் எடுத்தது என்பதால் வீடியோ க்வாலிட்டி மிக மோசமாய் இருக்கும். பொறுத்தருள்க.