அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். பட்டாசெல்லாம் கொளுத்தி...பலகாரமெல்லாம் பக்கத்து வீட்டுக்கு குடுத்து...தெருவில் நண்பர்களோடு கூடி...சாரி சாரி...வழக்கம் போல டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்து தீபாவளியை ஜமாய்ச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
மன்னிக்கவும், வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமாக இருக்கட்டுமே என்று சில பல உபரி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு...இப்போ அது ஏகப்பட்ட பொறுப்புகளாகி.. ரெண்டு தெரு தள்ளி ஒரு குழந்தைக்கு காது குத்த மட்டும் தான் ஒத்துக்கொள்ளவில்லை அந்த அளவில் வந்து நிற்கிறது. எல்லா நேரங்களிலும் வேலை மென்னியப் பிடிக்கிறது. இப்போதெல்லாம் ஆபீஸ் போய் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளமுடிகிறது. இதெல்லாம் போக அடுத்த விடியோ(ஃபிலிம்) ப்ராஜெக்ட்டையும் ஆரம்பித்திருக்கிறேன். பின்னொரு பதிவில் விபரமாய் பதிவிடுகிறேன்.
என் சின்ன மகள் டிஜிட்டல் யுகத்தில் பிறந்ததால் தங்கமணி அவரின் நிறைய சேட்டைகளை மொபைல் போனில் பிடித்து வைத்திருந்தார். அதையெல்லாம் போனில் இருந்து கம்ப்யூட்டருக்கு மாற்றச் சொல்லி மூன்று வருடங்களாய் சொல்லிக் கொண்டிருந்தார். அப்புறம் "உங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லையா...நானும் எவ்வளவு நாள் சொல்றது ...கொஞ்சமாவது மானம் வெட்கம் இருக்கா...இதுக்கு மேல நான் மனுஷியா இருக்க மாட்டேன்"ன்னு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சியதில், சரி என்று பெரிய மனது செய்து மாற்றி அமைத்ததில் எனக்குப் பிடித்த ஒரு கோப்பு ஒன்றை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அமுக்கு போல முகத்தை வைத்துக் கொண்டு இரண்டு வயதில் என் சிறிய பெண் செய்த சத்தியாகிரகம்...ஹூம்ம்ம்ம்ம் இந்த இந்த இந்த டெக்னிக்கு தான் நானும் ரொம்ப நாளா ட்ரை பண்ணுறேன்...பிடி பட மாட்டேங்குது....!!!
ஆரம்பகால மொபைல் போனில் எடுத்தது என்பதால் வீடியோ க்வாலிட்டி மிக மோசமாய் இருக்கும். பொறுத்தருள்க.
Sunday, October 18, 2009
Tuesday, September 01, 2009
கல்யாணம் - Prequel
ஏன்டி சுஜா சித்த பளிச்சுன்னு ட்ரெஸ் பண்ணிண்டு சின்ன மாமாவ கூட்டிண்டு நாலு தெருவுக்கு பத்திரிக்கை குடுத்து நேர்ல அழைச்சிட்டு வந்துடேன்..இந்த் பேப்பர்ல பெயர் அட்ரெஸ் இருக்கு, அத்தோட யார் யார எதுக்கு கூப்பிடனும்ன்னு டீடெயில்ஸும் இருக்கு. பெயருக்கு நேர ஒரு க்ராஸ் போட்டிருந்தா கல்யாணத்துக்கு மட்டும் கூப்பிடு. ரெண்டு கிராஸ் போட்டிருந்தா ஜானவாசத்துக்கும் கூப்பிடு. மூனு இருந்தா ரிசெப்ஷன் வரைக்கும் இருந்துட்டு தான் போகனும்ன்னு வருத்திக் கூப்பிடு என்ன..
என் பிராஜெக்ட் மேனேஜர் மாதிரி சரியான இம்சைமா நீ...ரிக்வைர்மென்ட் ஸ்பெசிபிகேஷன்லாம் டீட்டெய்லா குடு...இதெல்லாம் நீயே பார்த்துக்க கூடாதா....இல்ல வானுயர வளர்ந்து நிக்கிறானே உன் தம்பி அவன் கிட்ட குடுக்க கூடாதா...கல்யாணத்துக்கு வந்த இடத்துல அழைச்சிட்டு வா தொலைச்சிட்டு வான்னு....
ஏன்டி உன் சின்ன மாமாக்கு இந்தூர்ல யாரடி தெரியும் அவனே இங்க எப்பவோ வரான் எப்பவோ போறான்...
யாரு...உன் தம்பி...ராது ப்ரெண்ட்ஸ் அத்தனை பேர் வீடும் அவனுக்கு அத்துப்படி...அவங்க போன் நம்பர் வேணும்னா நானே அவன கேட்டுத் தான் தெரிஞ்சிக்கிறேன்...வயசுப் பெண்களின் நடமாடும் டைரக்ட்ரிமா உன் தம்பி...
அஞ்சு வயசு வித்தியாசத்துல உனக்கு மாமாவா வந்து பொறந்தேன் பாரு ...எல்லாம் எங்கப்பாவ சொல்லனும்.... அன்னிக்கு ராது கூட ஸ்ரீலேகா ஆத்துக்கு போயிருந்தேன் அவ அம்மாக்கு நல்ல முட்டா மஞ்சள் வேணும்ன்னு போன் நம்பர் குடுத்தா...டீ.நகர்ல ரங்கநாதன் தெரு பக்கத்துல...
ஏன்டி உன்ன கல்யாணத்துக்கு கூப்பிட்டு வான்னு சொன்னா அவன போய் கிண்டின்டு...சாப்ட்வேர் கம்பேனில வேலை பார்தா..? ரொம்ப தான் வாய் வந்திடுத்து உனக்கு... நாளைக்கு உனக்கு கல்யாணம்ன்னு வரும் போது அவன் தான் திரும்பவும் ஓடியாடி வேலை செய்யப் போறான்...
ஆஹா சந்தடி சாக்குல அடுத்த கல்யாணத்துக்கும் ஓசி எடுபிடியா இப்பவே அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர குடுக்கிறியே அக்கா...
நோ வே...என்னோட கல்யாணத்துக்கெல்லாம் முந்தின நாள் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பறேன்...காலம்பற கிளம்பி வந்து சேரு...சிம்பிளா லிப் டு லிப் குடுத்து கல்யாணம்...ரெஸ்டாரண்ட்ல புஃபே. நாலு மணிக்கு எல்லாரும் இடத்த காலி பண்ணிடனும். நாங்க பர்ஸ்ட் நைட்டுக்கு பிரிப்பேர் ஆகி அடுத்த நாள் காலம்பற முதல் ப்ளைட்ல ஹனிமூனுக்கு எஸ்கேப் ஆகிடுவோம்...
ஆஹா இந்த ஐடியா சூப்பரா இருக்கே...சுஜா எனக்கும் ஒன்னு செட் பண்ணேன்
இதோ பாரு...நீ தான் எனக்கு மாமா..நான் உனக்கு இல்ல புரிஞ்சுதா...சரியான அலையாண்டி மாமாவா இருக்கியே...
ஏன்டி ஒரு அம்மா முன்ன பேசற மாதிரியா பேசற...ரொம்ப ஆட்டம் போடதடி உங்க பாட்டி காதுல விழுந்துடப் போறது. நானும் உன்ன மாதிரி ஒரு காலத்துல ஈஸ்ட்மென்ட் கலர்ல கனவு கண்டவ தான்..இன்னிக்கு உங்கள பெத்துட்டு கிரைண்டர்ல தோச மாவு அரைச்சிண்டு இருக்கேன்...
டேய் நீ நம்ம குமார் பையன் தானேடா...என்ன படிக்கிற
இப்போ தான் ப்ரி கே.ஜி சேர்த்திருக்கோம் மாமா...
ம்ம்ம்..வெரி குட்..நல்ல கவனமா படிக்கிறானா...குட் பாய்...நல்ல படிக்கணும் என்ன....பெரியவனாகி என்ன ஆகப் போற....டாக்டரா...இல்ல இஞ்சினியரா
....ம்ம்ம்
..சொல்லுடா...பெரியவனாகி என்ன ஆகப் போற...??
ம்ம்ம்...நான் பெரியவனாகி....ம்ம்..அப்பா ஆகப் போறேன்....
உங்க பெரியப்பாவுக்கு தேவை தான்...சின்னப் பிஞ்சு அவன்...அவனப் போய் டாக்டராகறியா கம்பவுன்டர் ஆகறியன்னு ப்ரஷர் போட்டுண்டு....கரெக்டா சமாளிச்சான் பார்த்தல்ல...இவன் வயசுல எனக்கெல்லாம் இவ்வளவு சாமர்த்தியமில்லை....
...ம்க்கும்... உங்களுக்கா...எங்க அதான் கையில ஒன்னு வயித்தில ஒன்னுன்னு..பேச்சப் பாரு...அப்பா ஆகப் போறானாம்...இந்த குறுக்கு புத்திக்கு அப்படியே அப்பனக் கொண்டிருக்கான்...
டேய் ராகவ்...பந்தக்கால் நடறதுக்க்கு ஆள் சொல்லிட்டு வரச் சொன்னேனே..ஆச்சா
ஓவரா சீன் போடாதம்மா....அதெல்லாம் அப்பவே ஆச்சு...எனக்கு ஒரு ஆயிரம் ரூபா கைல குடுத்து வை...அவசரத்துக்கு வேணும்ன்னு கேட்டேனே என்னாச்சு...
அவசரத்துக்கு ஆயிரமா...அப்பிடி என்ன அவசரம் உனக்கு...?
அக்கா கல்யாணத்துக்கு பார்ட்டி எங்கடான்னு ப்ரெண்ட்ஸெல்லாம் ஒரே நச்சரிப்பும்மா...
சரி சரி...இந்தா நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோடா...நான் வெஜ்லாம் திங்காதடா...பாட்டி கேட்டா என் உசிர எடுத்துடுவா...
ஆமாண்டா ராகவ்...நல்ல சைவ உடுப்பி ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோ...யெப்பா தாங்கலடா சாமி...அம்மாவும் பிள்ளையும் ட்ராமா கம்பெனி ஆரம்பிக்கலாம்டா...சாப்பாடு சாப்பிட ஆயிரம் ரூபாயாம்...என்ன பார்ட்டின்னு எங்களுக்கு தெரியாதா....கேக்கிற மாதிரி கேக்கிறதென்ன...குடுக்கிற மாதிரி குடுக்கிறதென்ன....யெப்பா...வீட்டுல..முழிச்சிண்டிருக்கிற போதே முழியப் பிடுங்குறீங்களேப்பா...
என்ன சுஜா மேடம்...வீட்டுல மூக்கும் முழியுமா வாட்ட சாட்டமா புதுசா ஒரு பையன் வந்திருக்கான் போல...
ஏய் சும்மா கிண்டாடதடி...அவன் எங்க அத்தையோடு நாத்தனார் பிள்ளை...தூரத்து சொந்தம்
ஓ அப்போ உனக்கு அண்ணா முறையா...
சீச் சீ...வாய பினாயில் விட்டு கழுவு...தூரத்து முறைப் பையன்டி
ஓ அதான் தூரத்திலேர்ந்து உன்னையே முறைச்சிண்டே இருக்கானா
ஏய்...அப்படியே ஓடி போயிடு இது நம்ம கோட்டா...தெரியுமில்ல...
இதோ பாருங்கோ இங்க கல்யாணத்துக்கு வந்திருக்கிறவா முன்னாடி என் புடவைய பிடிச்சிண்டு பின்னாடியே வராதீங்கோ...மானம் போறது. ராத்திரி ஆம்பிளைகள் படுத்துக்கறதுக்கு ஹால்லயும் மொட்டைமாடிலயும் ஏற்பாடு பண்ணியிருக்கா...என் கூடத் தான் படுத்துப்பேன்னு சாக்கு போக்கு சொல்லதீங்கோ...உங்க அக்கா பெண்களெல்லாம் கிண்டல் தாங்க முடியலை...
என்ன மாமி மாமா என்ன சொல்றார்....ராத்திரி உங்க கூடத் தான் படுத்துப்பேங்கிறாரா...மொட்டை மாடில படுத்துண்டா ஜலதோஷம் வந்திரும்....இல்லையா மாமா..??
பார்க்கத் தான் போறேன்டி...நாளைக்கு உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி உங்க ஆத்துகாரரையெல்லாம் எங்க அனுப்பறீங்கன்னு...சை...என்ன பொழப்புடா இது ...பூஞ்சை உடம்புக்காரன மொட்டைமாடில படு, கட்டைமாடில படுன்னு...
வேன் காலம்பற அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடும்...மூனு ட்ரிப் அடிக்கும்...கிச்சு டெம்போக்கும் சொல்லி இருக்கேன்...மத்த சாமானையெல்லாம் நீ ஏத்திண்டு அதுல வந்துடு...நான் இவாள எல்லாரையும் பேக்கப் பண்ணிண்டு வந்துடறேன்...
ஐய்யோ ஐய்யோ...லைட்ட போடுங்கோ போடுங்கொ....கழிசல்ல போக யாரோ என் இடுப்ப பிடிச்சிட்டா.....லைட்ட போடுங்கோ
மாமி சத்தம் போடாதீங்கோ....நான் தான்...மொட்டை மாடில படுத்துண்டு..வாடைக் காத்துல நெஞ்சடைக்கிற மாதிரி இருந்துது...என் பெண்டாட்டின்னு நினைச்சு...விக்ஸ் இருக்கான்னு கேக்கலாம்ன்னு...சாரி அவள நினைச்சு உங்களை எழுப்பிட்டேன்...
ஏன்டா பிரம்மஹத்தி....பெண்டாட்டிய எழுப்பறவன் இப்படியாடா இடுப்ப பிடிச்சு நிமிண்டுவ...ராத்திரி நெஞ்சடைக்கறது .கு**%*(அடைக்கிறதுன்னு ஏதாவது சாக்கு போக்கு....மே மாசத்துல எங்கடா வாடை காத்து அடிக்கிறது.. கட்டைல போறவனே...என்னம்மா நிமிண்டிட்ட.... சௌம்யா எப்படித்தான் இவன சமாளிக்கிறயோ...நானும் ஏழு பெத்திருக்கேன்...எங்காத்துக்காரர்லாம் இவ்வளவு இல்லைம்மா...
ஸ்ஸ்ஸ் ஏன்னா உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா...அப்பவே படிச்சு படிச்சு சொன்னே கேட்டேளா...பெண்டாட்டிக்கும் பெருச்சாளிக்கும் வித்தியாசம் தெரியாதா...உங்க அத்தைபாட்டி மாதிரியா இருக்கேன் நான்...எனக்கென்ன இத்தோட ஓயாது நாளைக்கு...பி.பி.சி ப்ளாஷ் நியூஸ் மாதிரி மண்டபம் புல்லா நாறடிக்கப் போறா...கொஞ்சம் கூட வெட்கமே இல்லாத ஜென்மம்...உங்களப் போய் எங்கேர்ந்து பிடிச்சேனோ...சே...
ஏன்டி விசாலம் உம் பொண்ணு குளிக்கப் போனாளா இல்ல கிணறு வெட்டப் போனாளா...எம்புட்டு நேரமாச்சுடி பாத்ரூமுக்குள்ள போய்....வேன் வந்து காத்திண்டு இருக்கு....சீக்கிரம் வரச் சொல்லுடி...
ஏன்னா...இந்தாங்கோ இவன பிடிங்கோ...இவன கக்கா போக வைக்க வேண்டியது உங்க பொறுப்பு...உசிர வாங்கறான்...பட்டுப் புடவைய உடுத்திண்டு வேன்ல ஏறி மடில உட்கார்ந்த உடனே டான்னு மணியடிச்ச மாதிரி கக்கா வந்துடும் உங்க புள்ளைக்கு....என்னால வைச்சுக்கு முடியாது உங்க பாடு
கிச்சு சாமானெல்லாம் ஏத்தியாச்சா.....நீ முன்னாடி கிளம்பு...நாங்க வந்துண்ட்டே இருக்கோம்....விசாலம் எல்லாம் எடுத்துண்டாச்சா...நல்ல சகுனமா பாத்து வண்டிய கிளப்புப்பா...முக்குப் பிள்ளையார் கோவில்ல கொஞ்சம் நிறுத்துப்பா தேங்காய விடல் போட்டுட்டு அப்படியே கிளப்பிடலாம்...ம்ம் ரை ரைட்..
இதன் தொடர்ச்சி தான் நான் 2007ல் எழுதிய "கல்யாணம்". அதையும் ஒரு தரம் ரிவைஸ் பண்ணிக்கலாமே :))
என் பிராஜெக்ட் மேனேஜர் மாதிரி சரியான இம்சைமா நீ...ரிக்வைர்மென்ட் ஸ்பெசிபிகேஷன்லாம் டீட்டெய்லா குடு...இதெல்லாம் நீயே பார்த்துக்க கூடாதா....இல்ல வானுயர வளர்ந்து நிக்கிறானே உன் தம்பி அவன் கிட்ட குடுக்க கூடாதா...கல்யாணத்துக்கு வந்த இடத்துல அழைச்சிட்டு வா தொலைச்சிட்டு வான்னு....
ஏன்டி உன் சின்ன மாமாக்கு இந்தூர்ல யாரடி தெரியும் அவனே இங்க எப்பவோ வரான் எப்பவோ போறான்...
யாரு...உன் தம்பி...ராது ப்ரெண்ட்ஸ் அத்தனை பேர் வீடும் அவனுக்கு அத்துப்படி...அவங்க போன் நம்பர் வேணும்னா நானே அவன கேட்டுத் தான் தெரிஞ்சிக்கிறேன்...வயசுப் பெண்களின் நடமாடும் டைரக்ட்ரிமா உன் தம்பி...
அஞ்சு வயசு வித்தியாசத்துல உனக்கு மாமாவா வந்து பொறந்தேன் பாரு ...எல்லாம் எங்கப்பாவ சொல்லனும்.... அன்னிக்கு ராது கூட ஸ்ரீலேகா ஆத்துக்கு போயிருந்தேன் அவ அம்மாக்கு நல்ல முட்டா மஞ்சள் வேணும்ன்னு போன் நம்பர் குடுத்தா...டீ.நகர்ல ரங்கநாதன் தெரு பக்கத்துல...
ஏன்டி உன்ன கல்யாணத்துக்கு கூப்பிட்டு வான்னு சொன்னா அவன போய் கிண்டின்டு...சாப்ட்வேர் கம்பேனில வேலை பார்தா..? ரொம்ப தான் வாய் வந்திடுத்து உனக்கு... நாளைக்கு உனக்கு கல்யாணம்ன்னு வரும் போது அவன் தான் திரும்பவும் ஓடியாடி வேலை செய்யப் போறான்...
ஆஹா சந்தடி சாக்குல அடுத்த கல்யாணத்துக்கும் ஓசி எடுபிடியா இப்பவே அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர குடுக்கிறியே அக்கா...
நோ வே...என்னோட கல்யாணத்துக்கெல்லாம் முந்தின நாள் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பறேன்...காலம்பற கிளம்பி வந்து சேரு...சிம்பிளா லிப் டு லிப் குடுத்து கல்யாணம்...ரெஸ்டாரண்ட்ல புஃபே. நாலு மணிக்கு எல்லாரும் இடத்த காலி பண்ணிடனும். நாங்க பர்ஸ்ட் நைட்டுக்கு பிரிப்பேர் ஆகி அடுத்த நாள் காலம்பற முதல் ப்ளைட்ல ஹனிமூனுக்கு எஸ்கேப் ஆகிடுவோம்...
ஆஹா இந்த ஐடியா சூப்பரா இருக்கே...சுஜா எனக்கும் ஒன்னு செட் பண்ணேன்
இதோ பாரு...நீ தான் எனக்கு மாமா..நான் உனக்கு இல்ல புரிஞ்சுதா...சரியான அலையாண்டி மாமாவா இருக்கியே...
ஏன்டி ஒரு அம்மா முன்ன பேசற மாதிரியா பேசற...ரொம்ப ஆட்டம் போடதடி உங்க பாட்டி காதுல விழுந்துடப் போறது. நானும் உன்ன மாதிரி ஒரு காலத்துல ஈஸ்ட்மென்ட் கலர்ல கனவு கண்டவ தான்..இன்னிக்கு உங்கள பெத்துட்டு கிரைண்டர்ல தோச மாவு அரைச்சிண்டு இருக்கேன்...
டேய் நீ நம்ம குமார் பையன் தானேடா...என்ன படிக்கிற
இப்போ தான் ப்ரி கே.ஜி சேர்த்திருக்கோம் மாமா...
ம்ம்ம்..வெரி குட்..நல்ல கவனமா படிக்கிறானா...குட் பாய்...நல்ல படிக்கணும் என்ன....பெரியவனாகி என்ன ஆகப் போற....டாக்டரா...இல்ல இஞ்சினியரா
....ம்ம்ம்
..சொல்லுடா...பெரியவனாகி என்ன ஆகப் போற...??
ம்ம்ம்...நான் பெரியவனாகி....ம்ம்..அப்பா ஆகப் போறேன்....
உங்க பெரியப்பாவுக்கு தேவை தான்...சின்னப் பிஞ்சு அவன்...அவனப் போய் டாக்டராகறியா கம்பவுன்டர் ஆகறியன்னு ப்ரஷர் போட்டுண்டு....கரெக்டா சமாளிச்சான் பார்த்தல்ல...இவன் வயசுல எனக்கெல்லாம் இவ்வளவு சாமர்த்தியமில்லை....
...ம்க்கும்... உங்களுக்கா...எங்க அதான் கையில ஒன்னு வயித்தில ஒன்னுன்னு..பேச்சப் பாரு...அப்பா ஆகப் போறானாம்...இந்த குறுக்கு புத்திக்கு அப்படியே அப்பனக் கொண்டிருக்கான்...
டேய் ராகவ்...பந்தக்கால் நடறதுக்க்கு ஆள் சொல்லிட்டு வரச் சொன்னேனே..ஆச்சா
ஓவரா சீன் போடாதம்மா....அதெல்லாம் அப்பவே ஆச்சு...எனக்கு ஒரு ஆயிரம் ரூபா கைல குடுத்து வை...அவசரத்துக்கு வேணும்ன்னு கேட்டேனே என்னாச்சு...
அவசரத்துக்கு ஆயிரமா...அப்பிடி என்ன அவசரம் உனக்கு...?
அக்கா கல்யாணத்துக்கு பார்ட்டி எங்கடான்னு ப்ரெண்ட்ஸெல்லாம் ஒரே நச்சரிப்பும்மா...
சரி சரி...இந்தா நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோடா...நான் வெஜ்லாம் திங்காதடா...பாட்டி கேட்டா என் உசிர எடுத்துடுவா...
ஆமாண்டா ராகவ்...நல்ல சைவ உடுப்பி ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோ...யெப்பா தாங்கலடா சாமி...அம்மாவும் பிள்ளையும் ட்ராமா கம்பெனி ஆரம்பிக்கலாம்டா...சாப்பாடு சாப்பிட ஆயிரம் ரூபாயாம்...என்ன பார்ட்டின்னு எங்களுக்கு தெரியாதா....கேக்கிற மாதிரி கேக்கிறதென்ன...குடுக்கிற மாதிரி குடுக்கிறதென்ன....யெப்பா...வீட்டுல..முழிச்சிண்டிருக்கிற போதே முழியப் பிடுங்குறீங்களேப்பா...
என்ன சுஜா மேடம்...வீட்டுல மூக்கும் முழியுமா வாட்ட சாட்டமா புதுசா ஒரு பையன் வந்திருக்கான் போல...
ஏய் சும்மா கிண்டாடதடி...அவன் எங்க அத்தையோடு நாத்தனார் பிள்ளை...தூரத்து சொந்தம்
ஓ அப்போ உனக்கு அண்ணா முறையா...
சீச் சீ...வாய பினாயில் விட்டு கழுவு...தூரத்து முறைப் பையன்டி
ஓ அதான் தூரத்திலேர்ந்து உன்னையே முறைச்சிண்டே இருக்கானா
ஏய்...அப்படியே ஓடி போயிடு இது நம்ம கோட்டா...தெரியுமில்ல...
இதோ பாருங்கோ இங்க கல்யாணத்துக்கு வந்திருக்கிறவா முன்னாடி என் புடவைய பிடிச்சிண்டு பின்னாடியே வராதீங்கோ...மானம் போறது. ராத்திரி ஆம்பிளைகள் படுத்துக்கறதுக்கு ஹால்லயும் மொட்டைமாடிலயும் ஏற்பாடு பண்ணியிருக்கா...என் கூடத் தான் படுத்துப்பேன்னு சாக்கு போக்கு சொல்லதீங்கோ...உங்க அக்கா பெண்களெல்லாம் கிண்டல் தாங்க முடியலை...
என்ன மாமி மாமா என்ன சொல்றார்....ராத்திரி உங்க கூடத் தான் படுத்துப்பேங்கிறாரா...மொட்டை மாடில படுத்துண்டா ஜலதோஷம் வந்திரும்....இல்லையா மாமா..??
பார்க்கத் தான் போறேன்டி...நாளைக்கு உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி உங்க ஆத்துகாரரையெல்லாம் எங்க அனுப்பறீங்கன்னு...சை...என்ன பொழப்புடா இது ...பூஞ்சை உடம்புக்காரன மொட்டைமாடில படு, கட்டைமாடில படுன்னு...
வேன் காலம்பற அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடும்...மூனு ட்ரிப் அடிக்கும்...கிச்சு டெம்போக்கும் சொல்லி இருக்கேன்...மத்த சாமானையெல்லாம் நீ ஏத்திண்டு அதுல வந்துடு...நான் இவாள எல்லாரையும் பேக்கப் பண்ணிண்டு வந்துடறேன்...
ஐய்யோ ஐய்யோ...லைட்ட போடுங்கோ போடுங்கொ....கழிசல்ல போக யாரோ என் இடுப்ப பிடிச்சிட்டா.....லைட்ட போடுங்கோ
மாமி சத்தம் போடாதீங்கோ....நான் தான்...மொட்டை மாடில படுத்துண்டு..வாடைக் காத்துல நெஞ்சடைக்கிற மாதிரி இருந்துது...என் பெண்டாட்டின்னு நினைச்சு...விக்ஸ் இருக்கான்னு கேக்கலாம்ன்னு...சாரி அவள நினைச்சு உங்களை எழுப்பிட்டேன்...
ஏன்டா பிரம்மஹத்தி....பெண்டாட்டிய எழுப்பறவன் இப்படியாடா இடுப்ப பிடிச்சு நிமிண்டுவ...ராத்திரி நெஞ்சடைக்கறது .கு**%*(அடைக்கிறதுன்னு ஏதாவது சாக்கு போக்கு....மே மாசத்துல எங்கடா வாடை காத்து அடிக்கிறது.. கட்டைல போறவனே...என்னம்மா நிமிண்டிட்ட.... சௌம்யா எப்படித்தான் இவன சமாளிக்கிறயோ...நானும் ஏழு பெத்திருக்கேன்...எங்காத்துக்காரர்லாம் இவ்வளவு இல்லைம்மா...
ஸ்ஸ்ஸ் ஏன்னா உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா...அப்பவே படிச்சு படிச்சு சொன்னே கேட்டேளா...பெண்டாட்டிக்கும் பெருச்சாளிக்கும் வித்தியாசம் தெரியாதா...உங்க அத்தைபாட்டி மாதிரியா இருக்கேன் நான்...எனக்கென்ன இத்தோட ஓயாது நாளைக்கு...பி.பி.சி ப்ளாஷ் நியூஸ் மாதிரி மண்டபம் புல்லா நாறடிக்கப் போறா...கொஞ்சம் கூட வெட்கமே இல்லாத ஜென்மம்...உங்களப் போய் எங்கேர்ந்து பிடிச்சேனோ...சே...
ஏன்டி விசாலம் உம் பொண்ணு குளிக்கப் போனாளா இல்ல கிணறு வெட்டப் போனாளா...எம்புட்டு நேரமாச்சுடி பாத்ரூமுக்குள்ள போய்....வேன் வந்து காத்திண்டு இருக்கு....சீக்கிரம் வரச் சொல்லுடி...
ஏன்னா...இந்தாங்கோ இவன பிடிங்கோ...இவன கக்கா போக வைக்க வேண்டியது உங்க பொறுப்பு...உசிர வாங்கறான்...பட்டுப் புடவைய உடுத்திண்டு வேன்ல ஏறி மடில உட்கார்ந்த உடனே டான்னு மணியடிச்ச மாதிரி கக்கா வந்துடும் உங்க புள்ளைக்கு....என்னால வைச்சுக்கு முடியாது உங்க பாடு
கிச்சு சாமானெல்லாம் ஏத்தியாச்சா.....நீ முன்னாடி கிளம்பு...நாங்க வந்துண்ட்டே இருக்கோம்....விசாலம் எல்லாம் எடுத்துண்டாச்சா...நல்ல சகுனமா பாத்து வண்டிய கிளப்புப்பா...முக்குப் பிள்ளையார் கோவில்ல கொஞ்சம் நிறுத்துப்பா தேங்காய விடல் போட்டுட்டு அப்படியே கிளப்பிடலாம்...ம்ம் ரை ரைட்..
இதன் தொடர்ச்சி தான் நான் 2007ல் எழுதிய "கல்யாணம்". அதையும் ஒரு தரம் ரிவைஸ் பண்ணிக்கலாமே :))
Monday, August 24, 2009
கசகசா
"ஹலோ டுபுக்கா...நான் குப்புசாமி பிரெண்டு கப்புசாமி பேசறேன்..."
"ஆங் சொல்லுங்க சார்...குப்புசாமி நேத்திக்கு தான் போன் பண்ணினார்...யூகேக்கு இப்போ தான் வந்திருக்கீங்கன்னு சொன்னார்...என்ன...செட்டிலாகிட்டீங்களா?"
"ஆங் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா ஆகிட்டிருக்கோம்...அது விஷயமாத் தான் போன் பண்ணினேன்...எனக்கு தயிர்னா உயிர்...இங்க பக்கத்து கடையில வாங்கின தயிரு ரொம்ப புளிக்குது....அத்தோட பிரியாணிக்கு கசகசாவும் வேணும்...இங்க நம்ம ஊரு மளிகை கடை எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா..."
"**** ஆஹா கிளி கூண்டுக்குள்ள சிக்கிடிச்சு....*** நீங்க இருக்கிற ஏரியாலேர்ந்து வழி கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்...ஒன்னு பண்ணுங்க...நான் எங்க வீட்டுக்கு வழி சொல்றேன்..நீங்க பேசாம இங்க கிளம்பி வந்துருங்க...வந்தீங்கண்ணா..டீ குடிச்சிக்கிட்டே நான் மேப் போட்டு கசகசா விக்கிற இடத்தைக் குறிச்சு தரேன்..."
"அப்டீங்கிறீங்களா...அதுவும் சரிதான்..வந்திடறேன்."
ஆஹா இப்படி கசகசாவை வைத்து கிளியை பிடிக்க வழியிருக்கான்னு..பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே மனுஷன் வந்துவிட்டார். மனுசன் பிரியாணிக்கு ஏகத்துக்கு காய்ஞ்சி போய் இருந்தார் போல.
"இந்த கசகசா..."
"முதல்லலாம்...இந்த கசகசாவை கேரளாக்காரங்க ஏத்துமதி பண்ணிக்கிட்டு இருந்தாங்க...அது ப்ரான்ஸ் போயிட்டு வரும்...இப்போ கொஞ்ச நாளா...அங்க கெடுபிடி ஆகிட்டதுனால..சுவிட்சர்லாந்துக்கு தான் அதிகமா ஏத்துமதி பண்றாங்க..."
"ஐயைய்யோ..அப்போ இங்க யூகேல கசகசா கிடைக்காதா..."
"***என்ன கூண்டுக்கிளி மக்கர் பண்ணுது...**** இல்லீங்க இங்கயும் கிடைக்கும்...சுவிஸ்ல கசகசா சகாயவிலையில் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு சொல்ல வந்தேன்..."
"அப்பாடா நான் ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்..."
"நீங்க...போன வாரம் ஃபோன் பண்ணியிருந்தீங்கன்னு வையுங்க உங்களுக்கு அலேக்கா அப்படியே ஒரு கிலோவோ ரெண்டு கிலோவோ கசகசா வாங்கி வந்திருப்பேனே..."
"இல்லீங்க நமக்கு அவ்வளவு தேவைப்படாது..."
"** மக்கர் கிளியா இருக்கேன்னு பார்த்தா சரியான மக்கு கிளியா இருக்கே..**** இல்லீங்க இங்க யூகேல இருநூறு கிராம் கசகசா வாங்குறதுக்கு சுவிஸ்ல ஒரு கிலோ வாங்கலாம்ன்னு சொல்லவந்தேன்..."
"ஓ...தயிரு புளிக்காம கிடைக்குமா..."
"சுவிஸ்ல பால்தாங்க விசேஷம்...சூப்பரா இருக்கும்...அப்போ தயிரு எப்படி இருக்கும்ன்னு பார்த்துக்கோங்களேன்..."
"இல்லீங்க நான் யூகேல கேட்டேன்..."
"*** இன்னிக்கு ஒரு கப்பு டீ வேஸ்டாயிடும் போல இருக்கே**** ஆங் இங்கயும் கிடைக்கும் கிடைக்கும்....ஆனா சுவிஸ் மாதிரி டேஸ்டா கிடைக்காது..."
"இங்க எங்க தயிர் கிடைக்கும்"
" ***** &($*&*$(£$*$( ***** ....."
"நீங்க சமீபத்துல சுவிஸ் போயிருந்தீங்களா...."
"*** எனக்குத் தெரியும் உழைச்ச காசுல போட்ட டீ என்னிக்குமே வேஸ்டா போகாதுன்னு எங்க தாத்தா அன்னிக்கே சொல்லியிருக்கார்**** ஆமாங்க சும்மா போய் சுத்தி பார்த்துட்டு வரலாமேன்னு போன வாரம் போயிருந்தேங்க....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...கண்மணி...பொண்மணி....சுவிஸ்....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...."
"சூப்பர்ங்க அப்போ சுவிஸ் சூப்பரா சுத்தினீங்கன்னு சொல்லுங்க..."
"ஆமாங்க நம்ம பதிவர் மகேஷ் கூட சுவிஸ்க்கு வேலை நிமித்தம் வந்திருந்தார்...வந்து சுவிஸ்ல இந்திய உணவகத்துக்கும் வழியெல்லாம் சொன்னாருன்னா பார்த்துக்கோங்களேன். மனுசன் ரொம்ப நல்லவர்ங்க... ஜெனிவால ரெண்டு நாள் தொடர்ந்து வந்து கைடு காசு மிச்சப் படுத்திட்டார்னா பார்த்துக்கோங்களேன்....""
"ஓ அப்பிடியா...கொஞ்சம் மளிகை கடைக்கு வழி சொல்றீங்களா..."
"இங்கேர்ந்து நேரா உங்க வீட்டுக்கு திரும்பி போங்க....கார நிப்பாட்டிட்டு லெப்ட் சந்துல அஞ்சு நிமிஷம் பொடி நடை நடந்தீங்கன்னா...சூப்பர் இந்திய மளிகை கடை இருக்கு...எல்லாம் கிடைக்கும்....
"....???????"
"இருங்க போயிடாதீங்க...கீழே இருக்கிற படத்த கிள்க் பண்ணி நல்லா பாருங்க...அதுல பனியில பின்னாடி கோடு போட்ட மாதிரி ஒரு பாதை தெரியுதா...அதுல அப்பீடீக்கா அஞ்சு நிமிஷம் போனா கசகசா விக்கிற கடை வந்துறும்...உங்களுக்கு வழி கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கக் கூடாதேன்னு தான் இந்த படம் காண்பிச்சேன்..."

*** நம்மளுக்கு உன்னால் முடியும் தம்பிக்கு பக்கத்துல தேறுகிறதே ஆயிரத்துல ஒரு போட்டோ...அத பார்க்க வைக்கிறதுக்கு இன்னா கதவுட வேண்டியிருக்குடா சாமீ.....*******
பி.கு - இந்தப் பதிவிற்க்கு போட்டோ சூப்பர்...போன்ற பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும். உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி இருக்கீங்கன்னு வரும் கமெண்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தங்கமணி மாதிரி காறித் துப்பும் பின்னூட்டங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.
"ஆங் சொல்லுங்க சார்...குப்புசாமி நேத்திக்கு தான் போன் பண்ணினார்...யூகேக்கு இப்போ தான் வந்திருக்கீங்கன்னு சொன்னார்...என்ன...செட்டிலாகிட்டீங்களா?"
"ஆங் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா ஆகிட்டிருக்கோம்...அது விஷயமாத் தான் போன் பண்ணினேன்...எனக்கு தயிர்னா உயிர்...இங்க பக்கத்து கடையில வாங்கின தயிரு ரொம்ப புளிக்குது....அத்தோட பிரியாணிக்கு கசகசாவும் வேணும்...இங்க நம்ம ஊரு மளிகை கடை எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா..."
"**** ஆஹா கிளி கூண்டுக்குள்ள சிக்கிடிச்சு....*** நீங்க இருக்கிற ஏரியாலேர்ந்து வழி கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்...ஒன்னு பண்ணுங்க...நான் எங்க வீட்டுக்கு வழி சொல்றேன்..நீங்க பேசாம இங்க கிளம்பி வந்துருங்க...வந்தீங்கண்ணா..டீ குடிச்சிக்கிட்டே நான் மேப் போட்டு கசகசா விக்கிற இடத்தைக் குறிச்சு தரேன்..."
"அப்டீங்கிறீங்களா...அதுவும் சரிதான்..வந்திடறேன்."
ஆஹா இப்படி கசகசாவை வைத்து கிளியை பிடிக்க வழியிருக்கான்னு..பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே மனுஷன் வந்துவிட்டார். மனுசன் பிரியாணிக்கு ஏகத்துக்கு காய்ஞ்சி போய் இருந்தார் போல.
"இந்த கசகசா..."
"முதல்லலாம்...இந்த கசகசாவை கேரளாக்காரங்க ஏத்துமதி பண்ணிக்கிட்டு இருந்தாங்க...அது ப்ரான்ஸ் போயிட்டு வரும்...இப்போ கொஞ்ச நாளா...அங்க கெடுபிடி ஆகிட்டதுனால..சுவிட்சர்லாந்துக்கு தான் அதிகமா ஏத்துமதி பண்றாங்க..."
"ஐயைய்யோ..அப்போ இங்க யூகேல கசகசா கிடைக்காதா..."
"***என்ன கூண்டுக்கிளி மக்கர் பண்ணுது...**** இல்லீங்க இங்கயும் கிடைக்கும்...சுவிஸ்ல கசகசா சகாயவிலையில் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு சொல்ல வந்தேன்..."
"அப்பாடா நான் ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்..."
"நீங்க...போன வாரம் ஃபோன் பண்ணியிருந்தீங்கன்னு வையுங்க உங்களுக்கு அலேக்கா அப்படியே ஒரு கிலோவோ ரெண்டு கிலோவோ கசகசா வாங்கி வந்திருப்பேனே..."
"இல்லீங்க நமக்கு அவ்வளவு தேவைப்படாது..."
"** மக்கர் கிளியா இருக்கேன்னு பார்த்தா சரியான மக்கு கிளியா இருக்கே..**** இல்லீங்க இங்க யூகேல இருநூறு கிராம் கசகசா வாங்குறதுக்கு சுவிஸ்ல ஒரு கிலோ வாங்கலாம்ன்னு சொல்லவந்தேன்..."
"ஓ...தயிரு புளிக்காம கிடைக்குமா..."
"சுவிஸ்ல பால்தாங்க விசேஷம்...சூப்பரா இருக்கும்...அப்போ தயிரு எப்படி இருக்கும்ன்னு பார்த்துக்கோங்களேன்..."
"இல்லீங்க நான் யூகேல கேட்டேன்..."
"*** இன்னிக்கு ஒரு கப்பு டீ வேஸ்டாயிடும் போல இருக்கே**** ஆங் இங்கயும் கிடைக்கும் கிடைக்கும்....ஆனா சுவிஸ் மாதிரி டேஸ்டா கிடைக்காது..."
"இங்க எங்க தயிர் கிடைக்கும்"
" ***** &($*&*$(£$*$( ***** ....."
"நீங்க சமீபத்துல சுவிஸ் போயிருந்தீங்களா...."
"*** எனக்குத் தெரியும் உழைச்ச காசுல போட்ட டீ என்னிக்குமே வேஸ்டா போகாதுன்னு எங்க தாத்தா அன்னிக்கே சொல்லியிருக்கார்**** ஆமாங்க சும்மா போய் சுத்தி பார்த்துட்டு வரலாமேன்னு போன வாரம் போயிருந்தேங்க....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...கண்மணி...பொண்மணி....சுவிஸ்....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...."
"சூப்பர்ங்க அப்போ சுவிஸ் சூப்பரா சுத்தினீங்கன்னு சொல்லுங்க..."
"ஆமாங்க நம்ம பதிவர் மகேஷ் கூட சுவிஸ்க்கு வேலை நிமித்தம் வந்திருந்தார்...வந்து சுவிஸ்ல இந்திய உணவகத்துக்கும் வழியெல்லாம் சொன்னாருன்னா பார்த்துக்கோங்களேன். மனுசன் ரொம்ப நல்லவர்ங்க... ஜெனிவால ரெண்டு நாள் தொடர்ந்து வந்து கைடு காசு மிச்சப் படுத்திட்டார்னா பார்த்துக்கோங்களேன்....""
"ஓ அப்பிடியா...கொஞ்சம் மளிகை கடைக்கு வழி சொல்றீங்களா..."
"இங்கேர்ந்து நேரா உங்க வீட்டுக்கு திரும்பி போங்க....கார நிப்பாட்டிட்டு லெப்ட் சந்துல அஞ்சு நிமிஷம் பொடி நடை நடந்தீங்கன்னா...சூப்பர் இந்திய மளிகை கடை இருக்கு...எல்லாம் கிடைக்கும்....
"....???????"
"இருங்க போயிடாதீங்க...கீழே இருக்கிற படத்த கிள்க் பண்ணி நல்லா பாருங்க...அதுல பனியில பின்னாடி கோடு போட்ட மாதிரி ஒரு பாதை தெரியுதா...அதுல அப்பீடீக்கா அஞ்சு நிமிஷம் போனா கசகசா விக்கிற கடை வந்துறும்...உங்களுக்கு வழி கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கக் கூடாதேன்னு தான் இந்த படம் காண்பிச்சேன்..."

*** நம்மளுக்கு உன்னால் முடியும் தம்பிக்கு பக்கத்துல தேறுகிறதே ஆயிரத்துல ஒரு போட்டோ...அத பார்க்க வைக்கிறதுக்கு இன்னா கதவுட வேண்டியிருக்குடா சாமீ.....*******
பி.கு - இந்தப் பதிவிற்க்கு போட்டோ சூப்பர்...போன்ற பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும். உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி இருக்கீங்கன்னு வரும் கமெண்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தங்கமணி மாதிரி காறித் துப்பும் பின்னூட்டங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.
Thursday, August 06, 2009
நியாபகங்கள்
உலகமே வெறுத்து யாரையாவது நாலு பேரை போட்டுத் தள்ளிடலாம் என்றளவுக்கு வெறுப்பு தட்டும் போதெல்லாம் தவறாமல் சமையல் பக்கம் போவேன். இதே மாதிரி தங்கமணிக்கும் மூட் அவுட்டாகி குறைந்தபட்சம் மூனு பேரையாவது போட்டுத் தள்ளிட தோன்றும் போதெல்லாம் புதுசாக ஏதாவது ஒரு டிஷ் ட்ரை பண்ணுவார்.
"ஐய்யைய்யோ சமையலா..நீங்களா..?...நான் கூட நின்னு எடுத்தாவது தரேன்"
"இதோ பாரு சிங்கம் என்னிக்கும் சிங்கிளாத் தான் சமைக்கும்"
"கிழிக்கும்...சிங்கம் சிங்கிளா சமைச்சா...கிச்சன் பன்னிங்க கூட்டமா வந்து கும்மியடிச்சிட்டுப் போன மாதிரி ஆயிடும்...நோ வே..போன தரம் பால்கோவா கிண்டறேன்னு எவர்சில்வர் குக்கர நான் ஸ்டிக் குக்கர் மாதிரி கரிச்ச உங்க பிரதாபம் போதும்..முதல்ல இடத்த காலி பண்ணுங்க" - நான் சமையல் அறை பக்கம் சமைக்க வந்தாலே தங்கமணி டெரர் ஆகிவிடுவார்.
அப்புறம் எதாவது சொல்லி சமாதானப் படுத்தி "அன்னிக்கு ஒரு நாள் சப்பாத்திக்கு செஞ்சியே கோபி மஞ்சூரியன் அத எப்படி செஞ்ச சொல்லு...? கரெக்டா செஞ்சியான்னு செக் பண்ணிக்கறேன்" என்று ஒரு ரெசிப்பி கேட்பேன். உடனே தங்கமணியும் மணாளனே மங்கையில் பாக்கியம் அஞ்சலி தேவி மாதிரி தேம்பி தேம்பி ரெசிப்பியை சொல்லுவார்.
நான் செய்யும் எல்லா டிஷ்ஷிலும் கட்டாயம் உருளைக்கிழங்கு இருக்கும். முதலாளி...அதில் ஒரு தொழில் ரகசியம் என்னான்னா... என் மகள்கள் இருவருக்கும் உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். வெறும்ன வெந்து மேஷ் செய்து குடுத்தாலே "எப்படிப்பா இப்படி டேஸ்டியா சமைக்கிற"ன்னு சிங்கத்துக்கு சிடுக்கெடுத்து விடுவார்கள். தங்கமணி முன்னால் சொன்ன கோபி மஞ்சூரியன் ரெசிபியை கொஞ்சம் உல்டா செய்து, உருளைக்கிழங்கை வெந்து ஒரு கப் மாதிரி குடைந்தெடுத்து கோபி மஞ்சூரியனை அதில் போட்டு இட்டாலியன் டிஷ் என்று குடுப்பேன். "எப்படீப்பா இப்படி சூப்பரா.." என்று மகள்கள் திரும்பவும் ஆரம்பிக்கும் போது "இதெல்லாம் ரொம்ப ஓவர்டி...சிங்கத்துக்கு ரொம்ப தான் சிங்கியடிக்கிறீங்க ரெண்டு பேரும்" என்று தங்க்ஸ் மங்களம் பாடி விடுவார்.
நிற்க. என்னாடா சினிமா விமர்சனமாய் இருக்குமோன்னு பார்த்தால் திரும்பவும் சொந்தக் கதை சோகக் கதைய சொல்றானேன்னு நினைக்காதீங்க. என் சொந்தக் கதை பிசினெஸ் மாடலுக்கும் ஞாபகங்கள் பட பிசினெஸ் மாடலுக்கும் வித்தியாசம் அதிகமில்லை ஜென்டில்மேன்.
ரெயின் கோட் படத்தை லேசாக உல்டா செய்து அதை நண்பனின் சொந்தக் கதை என்று பேக் செய்திருக்கிறார்கள் அவ்வளவு தான். முடிவு மட்டும் நண்பனின் கதையா இல்லை படம் முழுவதுமேவா என்பதை தெளிவு படுத்தியிருக்கலாம்.
இது பா.விஜய்யின் முதல் படம். முதல் படத்திற்கு பரவாயில்லை. எடுத்த விஷயத்தில் ரொம்ப கத்தி போட்டு போர் அடித்து பாதியிலேயே படத்தை விட்டு எழுந்து போகுமளவுக்கு செய்யாமல் ஓரளவுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். இதையும் டைரக்டருக்கு முதல் படம் என்பதால் மட்டுமே சொல்லமுடிகிறது. மற்றபடி இதைக் கருத்தில் கொள்ளாமல் மற்ற படங்களோடு ஒப்பிட்டால் ரொம்பவே சுமார் ரகம் தான். பா.விஜய் டைரக்க்ஷனோடு நிப்பாட்டிக்கொண்டு ஹீரோவாய் வேறு யாரையாவது போட்டிருக்கலாம் என்பது என் தனிபட்ட எண்ணம். பாட்டு டேன்ஸ் என்று வரும் போது ரொம்பவே பொறுமையை படம் சோதிக்கிறது. படம் நெடுக வருபவர்கள் ரொம்பவே செயற்கையாக வசனம் பேசுகிறார்கள். ஹீரோவும் கவிதை எழுதுபவர் என்று திரைக்கதையை வைத்துக்கொண்டு தனிபட்ட முறையில் குடுக்கவேண்டியவர்களுக்கெலாம் கணக்கு செட்டில் செய்துவிட்டார் போலும். ஏதோ ஒரு பெருந்தலையை வேறு சாடுகிறார். மனுஷன் யாருன்னு தான் பிடி பட மாட்டேங்குது.
பா.விஜய் நடிப்பில் சேரனை இமிடேட் செய்கிறாரா என்று தெரியவில்லை அழும் போது அவரை மாதிரியே (கேவலமாக) இருக்கிறது. இதை கொஞ்சம் கவனித்தால் நலமாயிருக்கும். அவருடைய கவிதை வரிகள் வழக்கம் போல் நன்றாக வந்துள்ளன. கல்லூரி விழாவில் கவிதை வாசிப்பது, வாசிக்கும் போது திணறுவது, திணறும் போது முதல் வரிசையில் மூனாவது ஆளும், நாலாவது வரிசையில் ஆறாவது ஆளும் எழுந்து நின்று குடுத்த காசுக்கு தெம்பா திரும்பிப் போன்னு சொல்லுவது உடனே ஹீரோவிற்கு சக்தி வந்து அருவி மாதிரி கொட்டுவது ஹைய்யோ ஹைய்யோ....அடுத்த படத்திற்க்கு கூட நல்ல துடிப்பான அசிஸ்டெண்ட் டைரக்டர்களை வைத்துக் கொள்ளுங்கள் விஜய்...
Saturday, August 01, 2009
சுவாரஸ்ய பதிவர்கள்
முதலில் இந்த விருது பட்டர்ப்ளை அவார்ட் என்று ஒரு வருடத்திற்கு (போன வருஷம் தானே?) முன் ஒரு ரவுண்டு வந்தது. அப்போது Boo மற்றும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இருவரிடமிருந்தும் இதைப் பெறும் பாக்கியம் கிடைத்தது. (இருவரும் என்னை மன்னிக்கவும்...சாரி அப்போது என்னால் அதை தொடரமுடியவில்லை) இந்த முறை இன்ட்ரெஸ்டிங் ப்ளாக் என்ற வேர்ஷனில் ராப், வசந்தகுமார் மற்றும் வெட்டிப்பயல் ஆகியோரிடமிருந்து விருது பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. விருதை வழங்கிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. விதிமுறைப்படி நானும் எனக்குப் பிடிக்கும் சில ப்ளாக்குகளுக்கு இதைக் குடுக்கவேண்டும்.
அதற்க்கு முன்னால் இதை ஒரு அட்டகாசமான சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டும் ஒரு விஷயத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இங்கே நான் எழுதுவதை பாராட்டி ஈமெயிலிலும், பின்னூட்டத்திலும் மிக சிரமம் மேற்கொண்டு நீங்கள் எல்லாரும் நிறைய ஊக்குவித்து வருகிறீர்கள். ஆனால் இதில் நூற்றில் ஒரு பங்கு கூட நான் செய்வதில்லை. இது என் மனதில் நீண்ட நாளாய் உறுத்திக்கொண்டே இருக்கிறது. இது செய்யவேண்டாம் என்ற நோக்கத்தோடு நான் செய்யவில்லை. ஆனால் தற்போது சில நாட்களாய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய ப்ளாக்குகளுக்குப் போய் பின்னூட்டம் போட முயற்சித்து வருகிறேன். முதலில் இந்த விருதுக்கு முற்றிலும் புதிய ப்ளாக்குகளாய் அறிமுகப் படுத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தற்போது கொஞ்ச காலமாய் ப்ளாக் பக்கம் அதிகம் வர முடியவில்லை. (செந்தழல் ரவி இந்த அவார்ட்டையே ஏதோ தமிழ் ப்ளாக் உலகில் எரிந்து கொண்டிருந்த பிரச்சனையை தீர்பதற்குத் தான் ஆரம்பித்தார் என்று படித்தேன்...என்ன பிரச்சினை என்று கூட தெரியாத அளவில் தான் நான் ப்ளாக் படிக்கும் லட்சணம்). தற்போதைய தமிழ் ப்ளாக் இருக்கும் எண்ணிக்கையில் திருவிழாவில் தொலைந்த குழந்தை கதையாகி இந்தத் பதிவு ரொம்ப லேட்டாகிவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். அத்தோடு இந்த விருது சுற்றி வரும் வேகத்தைப் பார்த்தால் நான் குடுப்பதற்க்குள் ஆட்டமே முடிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால் தெரிந்த, படித்த பிடித்த சில பதிவர்களையே நானும் லிஸ்ட் எடுத்திருக்கிறேன்.
சுவாரஸ்சியம் என்பது தனிப்பட்ட விருபத்தைச் சார்ந்தது. என்னைப் பொறுத்த வரையில் போட்டிருக்கும் பதிவு போரடிக்காமல் கடைசி மட்டும் படிக்க வைத்து சில சமயங்களில் பின்னூட்டத்தையும் படிக்க வைக்கும் பதிவுகள் இந்த வகையில் சார்ந்தது. இதில் தொடர்ச்சியாய் நிறைய பதிவர்கள் லெவல் காட்டி வருகிறார்கள். எனக்கு முகம் தெரிந்த நட்பு வட்டத்தை இந்த விருதுகளிலிருந்து எடுத்துவிட்டேன். கீழே இருப்பவர்கள் போக இன்னமும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லாரையும் போட்டால் இது ஒரு மெகா சீரியல் நீள பதிவாக ஆகிவிடும் என்பதால் சுருக்கியுள்ளேன். விடுபட்டவர்கள் தவறாக நினையாதீர்கள்.
(சுட்டிகளின் ஆங்கில அகர வரிசைப் படி)
ஆசிப் அண்ணாச்சி - இவருடைய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது நவீன பின் தத்துவமாய் சொன்ன காக்கா வடையை சுட்ட கதை. இவருடைய பதிவுகளில் எங்க திருநெல்வேலி தமிழில் இருக்கும் நக்கல் எனக்கு மிகப் பிடிக்கும்.
Boo - ஆங்கிலப் பதிவர். இவர் பதிவுகளில் இருக்கும் உயிரோட்டம் அலாதியானது. ரெண்டு சுட்டிகளின் அம்மாவாய் பதியும் பதிவுகளில் இருக்கும் மெல்லிய நகைச்சுவை மிக ரசிக்கும் படியாக இருக்கும். இவர் என்னைப் பற்றி முன்பு எழுதியிருப்பதால் நான் மேலும் சொல்லுவதெல்லாம் பதில் மரியாதை செய்வது மாதிரி ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
பிரபு கார்த்திக் - இவர் ஆங்கிலப் பதிவர். சீரியசான பல மேட்டர்களை இவர் எழுதும் பாணி எனக்கு மிக பிடிக்கும். இவருடைய ஹீ ஹீ பதிவுகள் மிக ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் ஏனோ தற்போது அந்த மாதிரி பதிவுகள் இவரிமிருந்து கொஞ்சம் குறைந்துவிட்டது. நிறைய எழுதுங்க சார் (இத யார் சொல்றதுன்னு வெவஸ்தை இல்லையான்னு நீங்க சொல்றது கேட்கிறது...இருந்தாலும் சொல்லுவோம்ல :))
ஜொள்ளுப்பேட்டை - ஜொள்ளிங்க்ஸின் அத்தாரிட்டியே அண்ணாச்சி தான். ரசிக்கும் படி அழகாக எழுதுவார். என்ன..பதிவுகளில் படங்கள் காரணமாக ஆபிஸில் இவருடைய ப்ளாகை தெகிரியமாய் ஒப்பன் பண்ணமுடியாது...மினிமைஸ் பண்ணி படங்களை கவனமாய் பார்த்த பின் ஒப்பன் செய்துவருகிறேன்.
குந்தவை - இவரின் பதிவுகளில் துள்ளல் நடையில் இழையோடும் நகைச்சுவை கலக்கலாய் இருக்கும். ரங்கமணி கலாய்க்கும் சங்கத்தில் போர்டு மெம்பராய் இருக்கிறார். அன்றாட நிகழ்வுகளில் கலாய்த்து வருகிறார்.
குசும்பன் - சொல்லவே வேண்டாம்...இவரின் டைமிங் மற்றும் குசும்புகள் கலக்கல் ரகம். மிக ரசிக்கும் பதிவர்களில் ஒருவர். அரசியலிருந்து அன்றாட நிகழ்வுகள் வரை பதியும் அனைத்திலும் நையாண்டி சூப்பராய் இருக்கும்.
நவீன் - எனக்கும் கவிதைக்கும் ரொம்பவே தூரம். விதிவிலக்காய் இவரின் கவிதைகள் மட்டும் படித்துவருகிறேன். எதோ ஒரு பதிவை படித்துவிட்டு தொடர்ந்து படித்துவருகிறேன். பயமுறுத்தாத புரியும் தமிழில் அழகாய் சுவாரஸ்யமாய் எழுதிவருகிறார். கவிதைக்கு ஏத்த படங்கள் எங்கிருந்து தான் பிடிக்கிறாரோ மனுஷன். இவர் ப்ளாக் படித்த பின் தான் என்க்கு ஒரு ஞானோதயம் வந்தது. காதல் கவிதைகளுக்கு போடும் படியாக சினிமா தவிர்த்த இந்திய புகைப்படங்களே அவ்வளவாக இல்லவே இல்லை. கலாச்சாரம் என்ற பெயரில் என்னம்மோ பினாத்திக் கொண்டு வறட்சியாய் ஆக்கிவிட்டோமோ? இப்ப புரியுது தலைவர் குஞ்சுமோன் ஏன் பஸ்ஸ்டாப் சீனில் கூட வெள்ளைக்காரனை வைத்து படம் பிடித்தார் என்று ஹூம்
உருப்படாதது - நாரயணின் எழுத்து நடை வசீகரமானது. புதுப்பேட்டை சினிமா சமயத்தில் நார்த் மெட்ராஸ் நிழலுலகம் பற்றி இவர் எழுதிய பதிவுகள் அட்டகாசமானவை. புதுப்பேட்டை சினிமாவை விட அவை மிக சுவாரஸ்யமாக இருந்ததாக எனக்குப் பட்டது.
வெட்டிப்பயல் - ஐ.டி கம்பெனிகளில் அன்னாரின் பதிவுகள் மிகப் பிரபலம். சுவாரஸ்மாய் எழுதுவதில் விற்பன்னர். இவரும் எனக்கு இந்த விருது குடுத்து பாராட்டி இருப்பதால் மேலும் எழுதினால் பதில் மரியாதை ஆகிவிடும். ஆகவே அடக்கி வாசித்துக் கொள்கிறேன்.
அதற்க்கு முன்னால் இதை ஒரு அட்டகாசமான சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டும் ஒரு விஷயத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இங்கே நான் எழுதுவதை பாராட்டி ஈமெயிலிலும், பின்னூட்டத்திலும் மிக சிரமம் மேற்கொண்டு நீங்கள் எல்லாரும் நிறைய ஊக்குவித்து வருகிறீர்கள். ஆனால் இதில் நூற்றில் ஒரு பங்கு கூட நான் செய்வதில்லை. இது என் மனதில் நீண்ட நாளாய் உறுத்திக்கொண்டே இருக்கிறது. இது செய்யவேண்டாம் என்ற நோக்கத்தோடு நான் செய்யவில்லை. ஆனால் தற்போது சில நாட்களாய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய ப்ளாக்குகளுக்குப் போய் பின்னூட்டம் போட முயற்சித்து வருகிறேன். முதலில் இந்த விருதுக்கு முற்றிலும் புதிய ப்ளாக்குகளாய் அறிமுகப் படுத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தற்போது கொஞ்ச காலமாய் ப்ளாக் பக்கம் அதிகம் வர முடியவில்லை. (செந்தழல் ரவி இந்த அவார்ட்டையே ஏதோ தமிழ் ப்ளாக் உலகில் எரிந்து கொண்டிருந்த பிரச்சனையை தீர்பதற்குத் தான் ஆரம்பித்தார் என்று படித்தேன்...என்ன பிரச்சினை என்று கூட தெரியாத அளவில் தான் நான் ப்ளாக் படிக்கும் லட்சணம்). தற்போதைய தமிழ் ப்ளாக் இருக்கும் எண்ணிக்கையில் திருவிழாவில் தொலைந்த குழந்தை கதையாகி இந்தத் பதிவு ரொம்ப லேட்டாகிவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். அத்தோடு இந்த விருது சுற்றி வரும் வேகத்தைப் பார்த்தால் நான் குடுப்பதற்க்குள் ஆட்டமே முடிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால் தெரிந்த, படித்த பிடித்த சில பதிவர்களையே நானும் லிஸ்ட் எடுத்திருக்கிறேன்.
சுவாரஸ்சியம் என்பது தனிப்பட்ட விருபத்தைச் சார்ந்தது. என்னைப் பொறுத்த வரையில் போட்டிருக்கும் பதிவு போரடிக்காமல் கடைசி மட்டும் படிக்க வைத்து சில சமயங்களில் பின்னூட்டத்தையும் படிக்க வைக்கும் பதிவுகள் இந்த வகையில் சார்ந்தது. இதில் தொடர்ச்சியாய் நிறைய பதிவர்கள் லெவல் காட்டி வருகிறார்கள். எனக்கு முகம் தெரிந்த நட்பு வட்டத்தை இந்த விருதுகளிலிருந்து எடுத்துவிட்டேன். கீழே இருப்பவர்கள் போக இன்னமும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லாரையும் போட்டால் இது ஒரு மெகா சீரியல் நீள பதிவாக ஆகிவிடும் என்பதால் சுருக்கியுள்ளேன். விடுபட்டவர்கள் தவறாக நினையாதீர்கள்.
(சுட்டிகளின் ஆங்கில அகர வரிசைப் படி)
ஆசிப் அண்ணாச்சி - இவருடைய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது நவீன பின் தத்துவமாய் சொன்ன காக்கா வடையை சுட்ட கதை. இவருடைய பதிவுகளில் எங்க திருநெல்வேலி தமிழில் இருக்கும் நக்கல் எனக்கு மிகப் பிடிக்கும்.
Boo - ஆங்கிலப் பதிவர். இவர் பதிவுகளில் இருக்கும் உயிரோட்டம் அலாதியானது. ரெண்டு சுட்டிகளின் அம்மாவாய் பதியும் பதிவுகளில் இருக்கும் மெல்லிய நகைச்சுவை மிக ரசிக்கும் படியாக இருக்கும். இவர் என்னைப் பற்றி முன்பு எழுதியிருப்பதால் நான் மேலும் சொல்லுவதெல்லாம் பதில் மரியாதை செய்வது மாதிரி ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
பிரபு கார்த்திக் - இவர் ஆங்கிலப் பதிவர். சீரியசான பல மேட்டர்களை இவர் எழுதும் பாணி எனக்கு மிக பிடிக்கும். இவருடைய ஹீ ஹீ பதிவுகள் மிக ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் ஏனோ தற்போது அந்த மாதிரி பதிவுகள் இவரிமிருந்து கொஞ்சம் குறைந்துவிட்டது. நிறைய எழுதுங்க சார் (இத யார் சொல்றதுன்னு வெவஸ்தை இல்லையான்னு நீங்க சொல்றது கேட்கிறது...இருந்தாலும் சொல்லுவோம்ல :))
ஜொள்ளுப்பேட்டை - ஜொள்ளிங்க்ஸின் அத்தாரிட்டியே அண்ணாச்சி தான். ரசிக்கும் படி அழகாக எழுதுவார். என்ன..பதிவுகளில் படங்கள் காரணமாக ஆபிஸில் இவருடைய ப்ளாகை தெகிரியமாய் ஒப்பன் பண்ணமுடியாது...மினிமைஸ் பண்ணி படங்களை கவனமாய் பார்த்த பின் ஒப்பன் செய்துவருகிறேன்.
குந்தவை - இவரின் பதிவுகளில் துள்ளல் நடையில் இழையோடும் நகைச்சுவை கலக்கலாய் இருக்கும். ரங்கமணி கலாய்க்கும் சங்கத்தில் போர்டு மெம்பராய் இருக்கிறார். அன்றாட நிகழ்வுகளில் கலாய்த்து வருகிறார்.
குசும்பன் - சொல்லவே வேண்டாம்...இவரின் டைமிங் மற்றும் குசும்புகள் கலக்கல் ரகம். மிக ரசிக்கும் பதிவர்களில் ஒருவர். அரசியலிருந்து அன்றாட நிகழ்வுகள் வரை பதியும் அனைத்திலும் நையாண்டி சூப்பராய் இருக்கும்.
நவீன் - எனக்கும் கவிதைக்கும் ரொம்பவே தூரம். விதிவிலக்காய் இவரின் கவிதைகள் மட்டும் படித்துவருகிறேன். எதோ ஒரு பதிவை படித்துவிட்டு தொடர்ந்து படித்துவருகிறேன். பயமுறுத்தாத புரியும் தமிழில் அழகாய் சுவாரஸ்யமாய் எழுதிவருகிறார். கவிதைக்கு ஏத்த படங்கள் எங்கிருந்து தான் பிடிக்கிறாரோ மனுஷன். இவர் ப்ளாக் படித்த பின் தான் என்க்கு ஒரு ஞானோதயம் வந்தது. காதல் கவிதைகளுக்கு போடும் படியாக சினிமா தவிர்த்த இந்திய புகைப்படங்களே அவ்வளவாக இல்லவே இல்லை. கலாச்சாரம் என்ற பெயரில் என்னம்மோ பினாத்திக் கொண்டு வறட்சியாய் ஆக்கிவிட்டோமோ? இப்ப புரியுது தலைவர் குஞ்சுமோன் ஏன் பஸ்ஸ்டாப் சீனில் கூட வெள்ளைக்காரனை வைத்து படம் பிடித்தார் என்று ஹூம்
உருப்படாதது - நாரயணின் எழுத்து நடை வசீகரமானது. புதுப்பேட்டை சினிமா சமயத்தில் நார்த் மெட்ராஸ் நிழலுலகம் பற்றி இவர் எழுதிய பதிவுகள் அட்டகாசமானவை. புதுப்பேட்டை சினிமாவை விட அவை மிக சுவாரஸ்யமாக இருந்ததாக எனக்குப் பட்டது.
வெட்டிப்பயல் - ஐ.டி கம்பெனிகளில் அன்னாரின் பதிவுகள் மிகப் பிரபலம். சுவாரஸ்மாய் எழுதுவதில் விற்பன்னர். இவரும் எனக்கு இந்த விருது குடுத்து பாராட்டி இருப்பதால் மேலும் எழுதினால் பதில் மரியாதை ஆகிவிடும். ஆகவே அடக்கி வாசித்துக் கொள்கிறேன்.
Thursday, July 23, 2009
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.9
முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6   Part 2.7   Part 2.8
ஜொள்ளிங்க்ஸ்...ஒரு மிகப் பெரிய ப்ராசஸ். ஜொள்ளு விடுவது என்பது...ஐ.ஐ.டியில் ஸ்டேட் ராங்க் வாங்குவது மாதிரி அத்தனை எளிது கிடையாது. கொஞ்சம் கரணம் தப்பினாலும் கேனப்பயலாகிவிடுவோம். ஜொள்ளுவிடுவது நாமாயிருந்தாலும் சுத்தி இருப்பவர்களும் சூழ்நிலையும் உதவ வேண்டும், உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும். ஜொள்ளிங்க்ஸ் ப்ராஸசில் மிக உதவியாய் இருக்கும் பெர்சனாலிட்டிகளை ஒன்று இரண்டு என்று ஔவைய்யார் மாதிரி வரிசைப் படுத்தினால், முதலில் வருவது குழந்தைகள், இரண்டாவது பெரிசுகள். "என்னூடா செல்லம்...என்னூனூ பண்ணூறா ...ஜிஜுலிக்கு என்னூ வேணூமா.....இங்கூஉ பாரூடா குட்டீ...அஔ...?" என்று கொஞ்சும் போது இன்ஸ்டென்ட் பக்கவாதம் வர வைக்கும் மழலைகளின் பணி ஜொள்ளிங்ஸில் இன்றியமையாதது.
சினிமா கெடுத்ததோ இல்லை பார்த்துக் கற்றுக்கொண்டதோ, அது என்னமோ தெரியவில்லை...எல்லா வயதுப் பெண்களுக்கும் இந்த குட்டீஸ் பட்டாளத்தை ரொம்பவே பிடிக்கும். அதுவும் எங்க ஊர் அம்பாசமுத்திரம் மாதிரி பெரிய சிட்டிக்கு சென்னை, பம்பாய், பெங்களூர் மாதிரி கிராமத்திலிருந்து வரும் வயதுக் குமாரிகளெல்லாம் எப்போதும் மணிரத்னம் பட கதாநாயகிகள் மாதிரி கூடவே நாலு குட்டீஸ் பட்டாளத்தைக் கூட்டிக் கொண்டே திரிவாரகள். அது வரையிலும் பரட்டை தலை பர்சனாலிட்டியாயிருக்கும் ஜந்துக்களெல்லாம் உடனே க்ரிப்ட்டாலஜிஸ்ட் என்று ரோஜா அர்விந்த்சாமி பெர்ச்னாலிட்டிக்கு அப்கிரேடு ஆகிவிடும். உடனே ஊரில் இருக்கும் கிழவிகளையெல்லாம் தூக்கி கொண்டு தெருவில் நடக்க தோன்றும். எங்கேயாவது வைக்கப்போர் இருந்தால் அது மேலே ஹாயாக படுத்துக் கொண்டு சும்மாவாச்சும் வானத்தைப் பார்த்து ரசிக்கத் தோன்றும். தலையை ஸ்டையிலாய் ஒரு பக்கமாய் கோதிவிட்டு..."ஐ லைக் வில்லேஜ் கேர்ல்ஸ்"ன்னு ஃபீலிங்காய் டயலாக் பேசத் தோன்றும்.நதியையோ குளத்தையோ பார்த்தால் சும்மா ஒரு கை தண்ணிரை எடுத்து போவோர் வருவோர் மேல் செல்லமாய் தெளிக்கத் தோன்றும். (ஆனால் அவர்கள் சினிமாவில் வருவது மாதிரி காட்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்...காட்டு காட்டுவென காட்டிவிடுவார்கள் என்பது வேறுவிஷயம்)
ஆனால் நம்ம ஜிகிடி கூட சுத்தும் நம் வாண்டுக் கூட்டதுக்கு நம்ம அவஸ்தை என்றுமே புரியாது. அது வரைக்கும் "அண்ணா ப்ளீஸ் என்னை உங்க சைக்கிளில் ஒரே ஒரு ரவுண்டு அடிங்கண்ணா" என்று கெஞ்சிக்கொண்டிருக்கும் வாண்டுகள் எல்லாம் ஒரே நாளில் கட்சி தாவிவிடும். "அந்த அக்கா வாடகை சைக்கிள் வாங்க அம்பது பைசா குடுத்தாளே.." என்று நம் இயலாமையை வாண்டுகள் எள்ளி நகையாடும் போது மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும். எல்லாம் இருபத்தி இரண்டு வினாடிகள் தான் அதுக்கப்புறம்..."இன்னிக்கு என்ன இன்னும் நம்ம ஃபிகர வெளியிலயே காணுமே"ன்னு கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.
விடலைப் பருவத்தில் குமரிகளுக்குப் பிடித்தது தான் நமக்கும் பிடிக்குமே...குரங்குக் குசாலா கூட்டத்தில் இந்தப் பக்கம் ஒருவன் நேரு மாமாக்கே நான் தான் மாமா என்று ரோஜாவின் ராஜாவாய் குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான், அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும். இந்த மாதிரி ஐடியா எதுவும் தோன்றாமல் மசனையாய் இருக்கும் வயெத்தெரிச்சல் கூட்டம் மட்டும் வழக்கம் போல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இந்த கடமை வீரர்களைப் பார்த்து கெக்கலித்து ஃபிகர்கள் முன்னால் எவ்வளவு வார முடியுமோ அவ்வளவு வாரி விட்டுக்கொண்டிருக்கும்.
வாட்டர் கோவிந்து என்னுடைய மழலை கொஞ்சல்ஸில் தொழில் முறை பார்ட்னர். முறையாகச் சொல்வதானால் ஜொள்ளிங்ஸில் பார்னர்ஷிப்பே கிடையாது நம்மைத் தவிர எல்லாருமே எதிரி தான். ஆனால் "யுவர் ஆனர்..." என்று சினிமாவில் வரும் சோப்ளாங்கி எதிர் தரப்பு வக்கீல் கெட்டப்பில் வாட்டர் கோவிந்து செய்யும் பெரும்பாலான சில்மிஷங்கள் எனக்கு சாதகமாய் தீர்ப்பாகிவிடும் என்பதால் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்துக்கொண்டிருந்தேன். வாட்டர் கோவிந்தும் என்னை மாதிரி சுத்த சைவம் ஆனால் சில சமயம் வாட்டர் குடுத்தாலே க்வாட்டர் குடித்த மாதிரி சவுண்டுவிடுவதால் வாட்டர் கோவிந்து என வழங்கப்பட்டு வந்தான். கொஞ்சம் வளர்ந்த வாண்டுக்கள் நேரம் காலம் தெரியாமல் பாக்யராஜ் படத்தில் வருவது மாதிரி வாரிவிட்டுவிடும் என்பதால் குழந்தையும் தெய்வமும் ஒன்று பாலிசி எடுத்து இன்னும் பேசவராத பொக்கைவாய் மழலை கைக்குழந்தைகளை மட்டுமே வைத்து நானும் வாட்டர் கோவிந்தும் ஷோ காட்டிக் கொண்டிருந்தோம்.
ஆனால் இந்த மழலை குழந்தைகளை வைத்து ஷோ காட்டும் விஷயத்தில் தொன்று தொட்டு வயதுக் குமரிகளுக்கெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. நாம் எதார்த்தமாய் "செல்லம் இங்க என்னை பாருடா...என்னை பார்த்து சிரிடா செல்லம்..." என்று குழந்தையைக் கொஞ்சினால் ஏதோ ஜாடைமாடையாய் அவர்களுக்கு தான் மெசெஜ் குடுக்கிறோம் என்று அனர்த்தம் செய்துகொள்கிறார்கள். கல்யாணத்திற்கு முன் "மாமாக்கு ஒரு முத்தா தாடா செல்லம்"ன்னு தங்கமணி மட்டும் இருக்கும் போது தங்கமணி வீட்டில் இருந்த ஒரு குழந்தையை நான் எதார்த்தமாய் கொஞ்சியதை இன்று வரை அனர்த்தம் செய்து கொண்டு நான் என்னம்மோ அலையாண்டிக் குப்பத்தைச் சேந்தவன் மாதிரி சாடிக்கொண்டிருக்கிறார். ஹும்....பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை அவர்கள் வயது அப்படி...கற்பனை கண்ணை மறைக்கிறது. (நான் இப்பவும் சொல்றேன் அந்தக் குழந்தை கிட்ட தான் முத்தா கேட்டேன்..இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்)
ஆனால் எங்கள் தெருவில் கொஞ்சம் மழலை பஞ்சம். இருக்கும் முக்கால் வாசி மாமிபாட்டிகளுக்கு மத்தியில் புதிதாய் தெருவிற்கு குடிவந்த சந்திரா அக்கா மட்டும் தான் கொஞ்சம் இனிமையாய் பேசுவார். "நீங்க ஐய்யோ பாவம்..உங்களுக்கு...ஏகப்பட்ட வேலை....கிச்சுவ பத்தி கவலயே படாதீங்கோ தெருவில சுத்திக் காட்டி அவன அழாம நாங்க பார்த்துக்கறோம்..." என்று தொழில்ரீதியாக நாங்கள் கிச்சுவை அபேஸ் செய்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்.
தொழில் முறை போட்டியில் ஒரு தடவை நான் கிச்சுவை வைத்து ஜிகிடியிடம் கூட இரண்டு மார்க் வாங்கிவிட்டேன் என்று வாட்டர் கோவிந்து டென்ஷனாகி கிச்சுவை என் கையில் இருந்து பிடுங்கி "பிள்ளை நிலா" பாட்டு பாடி கிச்சுவை தூக்கி தூக்கி பிடித்து "அங்க காக்கா பாருடா செல்லம்"ன்னு கொஞ்ச, வாட்டர் கோவிந்து குலுக்கின குலுக்கலில் கிச்சு காக்காயைப் பார்க்காமல் போட்டிருந்து தொள தொளா க்ரீம் கலர் ஜெட்டிக்கு மேட்சிங்காய் முந்தின நாள் செரிலாக்கை கக்கா போய்விட்டான். ஜிகிடி முன்னால் கிச்சுவின் காக்காய்க்கு பதில் கக்கா மேட்டர் தெரிந்துவிடக் கூடாதே என்று வாட்டர் கோவிந்து அப்புறம் நெளி நெளியென்று நெளிந்து மேட்டரும் கக்காவும் வெளியே வராமல் சமாளித்து போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஆத்திரத்தில் வாட்டர் கோவிந்து கிச்சுவை நைஸாய் நுள்ளி கிச்சு அழுது அதற்கப்புறம் சந்திரா அக்கா எங்கள் கிச்சு மழலை பாலிசியைக் கேன்சல் செய்துவிட்டார்.
"உன்னை எவன்டா காக்காய பாரு குருவியப் பாருன்னு ஓவராக்ட் செய்யச் சொன்னது? என்னம்மோ பத்து புள்ள பெத்து எக்ஸ்பீரியன்ஸ் போட்ட மாதிரி ஓவர் சீன் போட்ட கை மேல பலன்...வேண்டியது தான் உனக்கு" - எனக்கு ஏக எரிச்சல்
" சரி விடுறா..மழலைச் செல்வங்கள் கொஞ்சம் இம்சைடா...அப்பப்போ நாறிடறது. பேசாம நாம முதியோர் நலத் திட்டம் ஆரம்பிச்சா என்ன..அதான் பிரச்சனையே இருக்காது" என்று வாட்டர் கோவிந்து அப்புறம் எம்ஜியார் கட்சி ஆரம்பித்துவிட்டான்.
தொடரும்
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6   Part 2.7   Part 2.8
ஜொள்ளிங்க்ஸ்...ஒரு மிகப் பெரிய ப்ராசஸ். ஜொள்ளு விடுவது என்பது...ஐ.ஐ.டியில் ஸ்டேட் ராங்க் வாங்குவது மாதிரி அத்தனை எளிது கிடையாது. கொஞ்சம் கரணம் தப்பினாலும் கேனப்பயலாகிவிடுவோம். ஜொள்ளுவிடுவது நாமாயிருந்தாலும் சுத்தி இருப்பவர்களும் சூழ்நிலையும் உதவ வேண்டும், உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும். ஜொள்ளிங்க்ஸ் ப்ராஸசில் மிக உதவியாய் இருக்கும் பெர்சனாலிட்டிகளை ஒன்று இரண்டு என்று ஔவைய்யார் மாதிரி வரிசைப் படுத்தினால், முதலில் வருவது குழந்தைகள், இரண்டாவது பெரிசுகள். "என்னூடா செல்லம்...என்னூனூ பண்ணூறா ...ஜிஜுலிக்கு என்னூ வேணூமா.....இங்கூஉ பாரூடா குட்டீ...அஔ...?" என்று கொஞ்சும் போது இன்ஸ்டென்ட் பக்கவாதம் வர வைக்கும் மழலைகளின் பணி ஜொள்ளிங்ஸில் இன்றியமையாதது.
சினிமா கெடுத்ததோ இல்லை பார்த்துக் கற்றுக்கொண்டதோ, அது என்னமோ தெரியவில்லை...எல்லா வயதுப் பெண்களுக்கும் இந்த குட்டீஸ் பட்டாளத்தை ரொம்பவே பிடிக்கும். அதுவும் எங்க ஊர் அம்பாசமுத்திரம் மாதிரி பெரிய சிட்டிக்கு சென்னை, பம்பாய், பெங்களூர் மாதிரி கிராமத்திலிருந்து வரும் வயதுக் குமாரிகளெல்லாம் எப்போதும் மணிரத்னம் பட கதாநாயகிகள் மாதிரி கூடவே நாலு குட்டீஸ் பட்டாளத்தைக் கூட்டிக் கொண்டே திரிவாரகள். அது வரையிலும் பரட்டை தலை பர்சனாலிட்டியாயிருக்கும் ஜந்துக்களெல்லாம் உடனே க்ரிப்ட்டாலஜிஸ்ட் என்று ரோஜா அர்விந்த்சாமி பெர்ச்னாலிட்டிக்கு அப்கிரேடு ஆகிவிடும். உடனே ஊரில் இருக்கும் கிழவிகளையெல்லாம் தூக்கி கொண்டு தெருவில் நடக்க தோன்றும். எங்கேயாவது வைக்கப்போர் இருந்தால் அது மேலே ஹாயாக படுத்துக் கொண்டு சும்மாவாச்சும் வானத்தைப் பார்த்து ரசிக்கத் தோன்றும். தலையை ஸ்டையிலாய் ஒரு பக்கமாய் கோதிவிட்டு..."ஐ லைக் வில்லேஜ் கேர்ல்ஸ்"ன்னு ஃபீலிங்காய் டயலாக் பேசத் தோன்றும்.நதியையோ குளத்தையோ பார்த்தால் சும்மா ஒரு கை தண்ணிரை எடுத்து போவோர் வருவோர் மேல் செல்லமாய் தெளிக்கத் தோன்றும். (ஆனால் அவர்கள் சினிமாவில் வருவது மாதிரி காட்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்...காட்டு காட்டுவென காட்டிவிடுவார்கள் என்பது வேறுவிஷயம்)
ஆனால் நம்ம ஜிகிடி கூட சுத்தும் நம் வாண்டுக் கூட்டதுக்கு நம்ம அவஸ்தை என்றுமே புரியாது. அது வரைக்கும் "அண்ணா ப்ளீஸ் என்னை உங்க சைக்கிளில் ஒரே ஒரு ரவுண்டு அடிங்கண்ணா" என்று கெஞ்சிக்கொண்டிருக்கும் வாண்டுகள் எல்லாம் ஒரே நாளில் கட்சி தாவிவிடும். "அந்த அக்கா வாடகை சைக்கிள் வாங்க அம்பது பைசா குடுத்தாளே.." என்று நம் இயலாமையை வாண்டுகள் எள்ளி நகையாடும் போது மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும். எல்லாம் இருபத்தி இரண்டு வினாடிகள் தான் அதுக்கப்புறம்..."இன்னிக்கு என்ன இன்னும் நம்ம ஃபிகர வெளியிலயே காணுமே"ன்னு கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.
விடலைப் பருவத்தில் குமரிகளுக்குப் பிடித்தது தான் நமக்கும் பிடிக்குமே...குரங்குக் குசாலா கூட்டத்தில் இந்தப் பக்கம் ஒருவன் நேரு மாமாக்கே நான் தான் மாமா என்று ரோஜாவின் ராஜாவாய் குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான், அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும். இந்த மாதிரி ஐடியா எதுவும் தோன்றாமல் மசனையாய் இருக்கும் வயெத்தெரிச்சல் கூட்டம் மட்டும் வழக்கம் போல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இந்த கடமை வீரர்களைப் பார்த்து கெக்கலித்து ஃபிகர்கள் முன்னால் எவ்வளவு வார முடியுமோ அவ்வளவு வாரி விட்டுக்கொண்டிருக்கும்.
வாட்டர் கோவிந்து என்னுடைய மழலை கொஞ்சல்ஸில் தொழில் முறை பார்ட்னர். முறையாகச் சொல்வதானால் ஜொள்ளிங்ஸில் பார்னர்ஷிப்பே கிடையாது நம்மைத் தவிர எல்லாருமே எதிரி தான். ஆனால் "யுவர் ஆனர்..." என்று சினிமாவில் வரும் சோப்ளாங்கி எதிர் தரப்பு வக்கீல் கெட்டப்பில் வாட்டர் கோவிந்து செய்யும் பெரும்பாலான சில்மிஷங்கள் எனக்கு சாதகமாய் தீர்ப்பாகிவிடும் என்பதால் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்துக்கொண்டிருந்தேன். வாட்டர் கோவிந்தும் என்னை மாதிரி சுத்த சைவம் ஆனால் சில சமயம் வாட்டர் குடுத்தாலே க்வாட்டர் குடித்த மாதிரி சவுண்டுவிடுவதால் வாட்டர் கோவிந்து என வழங்கப்பட்டு வந்தான். கொஞ்சம் வளர்ந்த வாண்டுக்கள் நேரம் காலம் தெரியாமல் பாக்யராஜ் படத்தில் வருவது மாதிரி வாரிவிட்டுவிடும் என்பதால் குழந்தையும் தெய்வமும் ஒன்று பாலிசி எடுத்து இன்னும் பேசவராத பொக்கைவாய் மழலை கைக்குழந்தைகளை மட்டுமே வைத்து நானும் வாட்டர் கோவிந்தும் ஷோ காட்டிக் கொண்டிருந்தோம்.
ஆனால் இந்த மழலை குழந்தைகளை வைத்து ஷோ காட்டும் விஷயத்தில் தொன்று தொட்டு வயதுக் குமரிகளுக்கெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. நாம் எதார்த்தமாய் "செல்லம் இங்க என்னை பாருடா...என்னை பார்த்து சிரிடா செல்லம்..." என்று குழந்தையைக் கொஞ்சினால் ஏதோ ஜாடைமாடையாய் அவர்களுக்கு தான் மெசெஜ் குடுக்கிறோம் என்று அனர்த்தம் செய்துகொள்கிறார்கள். கல்யாணத்திற்கு முன் "மாமாக்கு ஒரு முத்தா தாடா செல்லம்"ன்னு தங்கமணி மட்டும் இருக்கும் போது தங்கமணி வீட்டில் இருந்த ஒரு குழந்தையை நான் எதார்த்தமாய் கொஞ்சியதை இன்று வரை அனர்த்தம் செய்து கொண்டு நான் என்னம்மோ அலையாண்டிக் குப்பத்தைச் சேந்தவன் மாதிரி சாடிக்கொண்டிருக்கிறார். ஹும்....பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை அவர்கள் வயது அப்படி...கற்பனை கண்ணை மறைக்கிறது. (நான் இப்பவும் சொல்றேன் அந்தக் குழந்தை கிட்ட தான் முத்தா கேட்டேன்..இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்)
ஆனால் எங்கள் தெருவில் கொஞ்சம் மழலை பஞ்சம். இருக்கும் முக்கால் வாசி மாமிபாட்டிகளுக்கு மத்தியில் புதிதாய் தெருவிற்கு குடிவந்த சந்திரா அக்கா மட்டும் தான் கொஞ்சம் இனிமையாய் பேசுவார். "நீங்க ஐய்யோ பாவம்..உங்களுக்கு...ஏகப்பட்ட வேலை....கிச்சுவ பத்தி கவலயே படாதீங்கோ தெருவில சுத்திக் காட்டி அவன அழாம நாங்க பார்த்துக்கறோம்..." என்று தொழில்ரீதியாக நாங்கள் கிச்சுவை அபேஸ் செய்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்.
தொழில் முறை போட்டியில் ஒரு தடவை நான் கிச்சுவை வைத்து ஜிகிடியிடம் கூட இரண்டு மார்க் வாங்கிவிட்டேன் என்று வாட்டர் கோவிந்து டென்ஷனாகி கிச்சுவை என் கையில் இருந்து பிடுங்கி "பிள்ளை நிலா" பாட்டு பாடி கிச்சுவை தூக்கி தூக்கி பிடித்து "அங்க காக்கா பாருடா செல்லம்"ன்னு கொஞ்ச, வாட்டர் கோவிந்து குலுக்கின குலுக்கலில் கிச்சு காக்காயைப் பார்க்காமல் போட்டிருந்து தொள தொளா க்ரீம் கலர் ஜெட்டிக்கு மேட்சிங்காய் முந்தின நாள் செரிலாக்கை கக்கா போய்விட்டான். ஜிகிடி முன்னால் கிச்சுவின் காக்காய்க்கு பதில் கக்கா மேட்டர் தெரிந்துவிடக் கூடாதே என்று வாட்டர் கோவிந்து அப்புறம் நெளி நெளியென்று நெளிந்து மேட்டரும் கக்காவும் வெளியே வராமல் சமாளித்து போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஆத்திரத்தில் வாட்டர் கோவிந்து கிச்சுவை நைஸாய் நுள்ளி கிச்சு அழுது அதற்கப்புறம் சந்திரா அக்கா எங்கள் கிச்சு மழலை பாலிசியைக் கேன்சல் செய்துவிட்டார்.
"உன்னை எவன்டா காக்காய பாரு குருவியப் பாருன்னு ஓவராக்ட் செய்யச் சொன்னது? என்னம்மோ பத்து புள்ள பெத்து எக்ஸ்பீரியன்ஸ் போட்ட மாதிரி ஓவர் சீன் போட்ட கை மேல பலன்...வேண்டியது தான் உனக்கு" - எனக்கு ஏக எரிச்சல்
" சரி விடுறா..மழலைச் செல்வங்கள் கொஞ்சம் இம்சைடா...அப்பப்போ நாறிடறது. பேசாம நாம முதியோர் நலத் திட்டம் ஆரம்பிச்சா என்ன..அதான் பிரச்சனையே இருக்காது" என்று வாட்டர் கோவிந்து அப்புறம் எம்ஜியார் கட்சி ஆரம்பித்துவிட்டான்.
தொடரும்
Sunday, July 19, 2009
அராகிஸ் ஹைப்பொகியா
"லீட்ஸ் போகும் ட்ரெயின் போய்விட்டதா...?"
"இன்னும் இல்லை ஆனால் நீ போய் பிடிப்பதற்க்குள் கிளம்பினாலும் கிளம்பிவிடும், அன்டர்வேரில பாம் கட்டி தொங்கவிட்ட மாதிரி நீ ஓடினால் ஒழிய ட்ரெயினை பிடிப்பதற்கு சான்ஸே இல்லை. ஒருவேளை பிடித்துவிட்டாயானால் லீட்ஸில் இறங்கும் போது உனக்கு ஒரு கோப்பை குடுக்க செய்தி அனுப்புகிறேன்"
"உன் எடை அனேகமாக தொன்னூற்றி இரண்டு கிலோ இருக்குமே..."
"...?"
"இல்லை உனக்கு இருக்கும் கொழுப்பை வைத்து உன் எடையை ஒரு அனுமானம் செய்தேன்..." சொல்லிவிட்டு அந்த ரயில்வே சிப்பந்தியை திரும்பிப் பார்க்காமலேயே பாம் வைத்தது மாதிரி ஓடியதில் ட்ரெயினை பிடித்தேவிட்டேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி உட்கார்ந்திருந்த இருபத்தி சொற்ப எண்ணிக்கைக்கு இன்னும் கொஞ்சம் நேரம் நின்று கூட்டத்தை ஏற்றிப் போனால் ரயில்வே நஷ்டத்தை குறைக்கலாம் என்று தோன்றியது.
கிடைத்த ஒரே ஒரு ஜன்னலோர இருக்கைக்கு எதிரே பை மட்டும் இருந்தது ஆளை காணோம். ரொம்ப தள்ளி இரண்டு இந்தியப் பெண்மணிகள் எதிரும் புதிருமாய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. என்னை மாதிரி நீங்களும் மூளையை ரொம்பவே கசக்கி யோசித்திர்களானால் கண்டுபிடித்துவிடுவீர்கள். பிரபுதேவா படங்களில் அவர் நடனமமைத்த பாட்டுகளில் கதாநாயகனுக்கு இடமும் வலமுமாக இரண்டு பெண்கள் இடுப்பில் வட்டமாக கொட்டு வைத்துக்கொண்டு குலுக்கல் குத்தாட்டம் போடுவார்கள். ஒருவர் கொஞ்சம் வஞ்சனையில்லாமல் திடகாத்திரமாக இருப்பார்...இன்னொரு பெண்மணி ஒடிசலாய் மாடலிங் கச்சிதமாய் இருப்பார். பத்துக்கு ஆறு படங்களில் விஜய் இவர்களுக்கு நடுவில் கழுத்தில் கர்சீப் சகிதம் நட்பைப் பற்றியோ, உலகத்தைப் பற்றியோ நீயும் நானும் என்று உங்களைப் பார்த்து தத்துவ வரிகள் பாடிக்கொண்டிருப்பார். இவர்களும் சளைக்காமல் சுத்தி சுத்தி ஆடுவார்கள். அவர்கள் இருவரும் டேன்ஸ் பெண்மணிகள் மாதிரியே இருந்தார்கள்.
ஆனால் அவர்கள் நம் கதைக்கு உப்புப் பெறமாட்டார்கள். நீங்கள் அந்தப் பெண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த கொண்டிருந்த போது என் எதிரே வந்து உட்கார்ந்த காக்கேசிய (வெள்ளைக்கார) பதுமையை தவறவிட்டுவிட்டீர்கள். கண்கள் நாலாப் பக்கமும் இருக்கனும்..இல்லாட்டா இந்தக் காலத்துல தூக்கி சாப்பிடுவாங்க. நம் பதுமை மிக அழகாய் இருந்தாள். கருப்புக்கும் பிரவுனுக்கு நடுக் கலரில் இருந்த தலை முடி அவளை பளிச்சென்று காட்டியது. கல்யாணமாகாத என்னை மாதிரி இருபத்தைந்து வயது இளைஞர்களை சோதிப்பதற்காகவே கடவுள் அனுப்பி வைத்த மாதிரி இருந்தது. பெத்தாய்ங்களா செய்ஞ்சாங்களான்னு டவுட்டே வரவில்லை ...கண்டிப்பாக செய்திருப்பார்கள்.
"ஹலோ..எப்படி இருக்கிறீர்கள்" கூச்சமே இல்லாமல் அராகிஸ் ஹைப்பொகியா சாகுபடியை ஆரம்பித்தேன்(அதாங்க கடலை). இந்த ஒரு விஷயத்திற்காகவே வெள்ளைக்காரர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். யாரிடம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.
"நான் நலம் நீங்கள்..?" கண்டிப்பாய் திரும்ப கேட்பாள் என்று தெரியும்.
"உங்களை பார்க்கும் வரை நன்றாகத் தான் இருந்தேன்..." "..." அவள் மணிரத்னம் படம் பார்த்ததே இல்லை என்று அப்பட்டமாக தெரிந்தது.
"நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்"
"நன்றி.." நீங்களும் அழகாக இருக்கிறீர்கள் என்று அவள் திரும்பச் சொல்லுவாள் என்று எதிர்பார்த்தது என் தப்பு. கீதையில் கிச்சு சொன்னதை நியாபகப் படுத்திக்கொண்டேன்.
"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது எனக்கு..." யோசிக்க கூட இல்லாமல் அவள் உதட்டில் கசிந்த புன்னகை ஆயிரம் நக்கல் செய்தது. சே அழகாய் இருக்கிறாள் என்று சொன்னதற்கு முன்பு சொல்லி இருக்கவேண்டும். எனக்கு ஏன் அழகான பெண்களை எல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று தெரியவில்லை. வெள்ளை தோலுக்கு அம்சமான கலரில் உடையணிந்திருந்தாள். சீசனுக்கு பூக்கும் பூக்களுக்கு ஏத்த மாதிரி உடையை தேர்ந்தெடுப்பாள் போலும். உறுத்தாத கலரில் மேட்ச்சிங்காய் நெயில் பாலீஷ்.
"நீங்கள் மங்கையர் மலர் படிப்பீர்களா...?"
"..மங்கேயெ....???" அவள் இதழ் பெயரை எசகுபிசகாய் இழுத்த போதே தெரிந்து விட்டது கண்டிப்பாக படித்திருக்க மாட்டாள்.
"இல்லை...டெய்லி பன்னீரில் ரோஜா பூவைப் போட்டு ரெண்டு மணி நேரம் அழுக்கு துணியை ஊறவைப்பது போல கையை ஊற வைத்தால் கைகள் இந்த மாதிரி பட்டு போல இருக்கும் என்று எங்க ஊர் மங்கையர் மலரில் கீரனூர் பாக்யலட்சுமி டிப்ஸ் குடுத்திருந்தார்..ஒருவேளை படித்துவிட்டு ட்ரை செய்திருப்பீர்களோ என்று கேட்டேன்..." இந்த முறை அவளின் பலமான புன்னகை நான் ஜொள்ளு விடுவதாக அனர்த்தம் செய்து கொண்டதை பறை சாற்றியது. தலைக்கு மேலே போன பின் ஜானென்ன பீட்டரென்ன என்று நானும் முக்காடை தூக்கிவிட்டேன்.
வெள்ளைக்கார பெண்மணிகளின் வயதை கண்டுபிடிப்பது மட்டும் மிக கடினமான விஷயம். நிறைய முப்பத்தி சொச்சத்தை எல்லாம் இருபத்தி சொச்சம் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கேன். பார்க்க அவ்வளவு இளமையாக இருப்பார்கள். இவளுக்கு அனேகமாய் என்னை விட இரண்டு வயது கூட இருக்கலாம் ஆனால் இருபது மாதிரி தான் தெரிந்தாள். டெண்டுல்கரை ரோல் மாடலாய் தத்து எடுத்துக் கொண்டு சாகுபடியை தொடர்ந்தேன்.
"உங்களுக்கு லீட்ஸா..."
"இல்லை நியூகாஸில்..லீட்ஸில் ட்ரெயின் மாறவேண்டும் "
"லண்டனுக்கு அடிக்கடி வருவீர்களா....?"
"ஆம் வேலை விஷயமாக வருவேன்..நீங்கள்..?"
"எனக்கு லண்டன்...வேலை விஷயமாய் எடின்பரோ போகிறேன்..." எண்பது பெர்சண்ட் எங்களுக்குள் ஒற்றுமை இருந்தது எனக்கு ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது. அவளுக்கு புடவை உடுத்திக் கொள்ளச் சொல்லிக்குடுக்கவேண்டும்...புடவையில் கொள்ளையழகாக இருப்பாள்.
"உங்களுக்கு கல்யாணமாகிவிட்டதா...?"
"எக்ஸ்க்யூஸ்மீ...??" அவள் பார்வையில் அத்தனை சினேகமும் பட்டென வடிந்திருந்தது. எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கேட்டிருக்க கூடாது. சுபஸ்ய சீக்கிரம்ன்னு ஓவராய் எக்சைட்டட் ஆகிவிட்டேன். இன்னும் மூனு மணி நேர பிரயாணம் இருக்கிறது ஒரு வேளை அவள் எடுத்த ஸ்டேஷனில் இறங்குவதாய் இருந்தாலும் கூட ஒரு மணி நேரம் இருக்கிறது. கடலையை பதமாய் வறுத்திருக்கவேண்டும்
அதற்கப்புறம் அவள் ஒரு புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். நானும் லேப்டாபை திறந்து ஆபிஸ் வேலை பர்ப்பது மாதிரி கதை படிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் கதையில் ஒன்றிப் போயிருந்த அடுத்த பதினைந்து நிமிடத்தில் "ஆர் யூ சிங்கிள் ...." என்று அவள் கேட்ட போது எனக்கு பல்லெல்லாம் வாயாயிருந்தது.இவளுக்கு முதலில் மணமாய் வத்தகுழம்பு வைக்க சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்புறம் முட்டைக்கோஸ் பருப்பு உசிலி.
அப்புறம் பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம். அவளும் எக்சைட் ஆகி சளைக்காமல் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தாள். என் ஆபீஸைப் பற்றி கேட்டாள் டிப்பார்ட்மென்ட் ஹெட் பற்றிக் கேட்டாள்...சில பேரோடு இமெயில் கேட்டாள் பல பேரோடு எக்ஸ்டென்ஷன் நம்பரெல்லாம் கேட்டாள்..வயசுப் பையனிடம் பேசும் போது ஏதோ பேச்சை வளர்கனுமே என்று இந்த டாப்பிக் தான் என்று இல்லாமல் இன்னமும் என் கம்பெனி பற்றி ஏதேதோ கேட்டாள். ஆனால் நான் ரொம்ப உஷாராக தேவை இல்லாதையெல்லாம் கேட்காமல் அவள் எங்கே நெயில் பாலீஷ் வாங்கினாள், டேவிட் பெக்காம் பெண்டாட்டி விக்டோரியா பெக்காம் பற்றி என்ன நினைக்கிறாள் என்று அவளே அறியாமல் அவளைப் பற்றிய விஷயங்களை கறந்துகொண்டிருந்தேன். அவளும் பெக்க பெக்கவென்று விஷயங்களை உளறிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன், பான்ட்ரீ காரிலிருந்து ஹாட் சாக்லேட் வாங்கிக் கொடுத்தாள். கண்டிப்பாய் இவளுக்கு வசந்த பவனில் பில்டர் காப்பி வாங்கிக்கொடுக்கவேண்டும். சொக்கிப் போய்விடுவாள். அப்புறமும் லீட்ஸ் வரை ஏகத்துக்கு பேசிக்கொண்டே வந்தோம். இறங்குவதற்க்கு முன் அவளோட போன் நம்பர் கேட்டேன். என்னை ரொம்ப பிடித்ததால் அவளுடைய பிஸினஸ் கார்டு குடுத்தாள். லீட்ஸில்
அவள் இறங்கியபின் யோசித்ததில் அவளை இதற்கு முன் எங்கே பார்த்திருக்கிறேன் என்று நியாபகம் வந்துவிட்டது. அவள் கம்பெனியின் ப்ராடெக்டை எங்கள் கம்பெனிக்கு விற்பதற்காக ப்ராடெக்ட் டெமோவுக்கு வந்திருந்தாள். எங்கள் கம்பெனி பெரிய கம்பெனி என்பதால் பெரிய ஆர்டருக்கு இன்னமும் பிரம்மப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவள் மட்டும் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் நான் கதை படிப்பது மாதிரி பாவலா காட்டிய போது என் லேப்டாப்பில் இருக்கும் எங்கள் கம்பெனி ஸ்டிக்கரை நோட் செய்து நூல் விட்டு அவள் ப்ராடெக்ட் விற்பனைக்கு சம்பந்தமான கேள்விகள் கேட்டிருக்கலாம்...என்னைப் பார்த்ததில் கொஞ்சம் ஓவர் எக்சைட் ஆகிவிட்டாள் அவ்வளவு தான். கண்கள் நாலுபக்கமும் இருக்கவேண்டாமா..இல்லாவிட்டால் இந்தக் காலத்தில் தூக்கி சாப்பிட்டுவிட மாட்டார்களா...இருந்தாலும் அந்த நெயில் பாலிஷ் அவளுக்கு ஏகத்துக்கு எடுப்பாய் இருந்தது. மல்லிகைப்பூ வைத்து பின்னிக் கொள்ளச் சொல்லிக் குடுக்கவேண்டும்.
அடுத்த ஸ்டேஷனில் அவளிடத்தில் வந்து உட்கார்ந்த அடுத்த காக்கேசியப் பெண்மணி அவளை விட அழகாக இருந்தாள். எனக்கு இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
"நீங்கள் மங்கையர் மலர் படிப்பீர்களா"
"இன்னும் இல்லை ஆனால் நீ போய் பிடிப்பதற்க்குள் கிளம்பினாலும் கிளம்பிவிடும், அன்டர்வேரில பாம் கட்டி தொங்கவிட்ட மாதிரி நீ ஓடினால் ஒழிய ட்ரெயினை பிடிப்பதற்கு சான்ஸே இல்லை. ஒருவேளை பிடித்துவிட்டாயானால் லீட்ஸில் இறங்கும் போது உனக்கு ஒரு கோப்பை குடுக்க செய்தி அனுப்புகிறேன்"
"உன் எடை அனேகமாக தொன்னூற்றி இரண்டு கிலோ இருக்குமே..."
"...?"
"இல்லை உனக்கு இருக்கும் கொழுப்பை வைத்து உன் எடையை ஒரு அனுமானம் செய்தேன்..." சொல்லிவிட்டு அந்த ரயில்வே சிப்பந்தியை திரும்பிப் பார்க்காமலேயே பாம் வைத்தது மாதிரி ஓடியதில் ட்ரெயினை பிடித்தேவிட்டேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி உட்கார்ந்திருந்த இருபத்தி சொற்ப எண்ணிக்கைக்கு இன்னும் கொஞ்சம் நேரம் நின்று கூட்டத்தை ஏற்றிப் போனால் ரயில்வே நஷ்டத்தை குறைக்கலாம் என்று தோன்றியது.
கிடைத்த ஒரே ஒரு ஜன்னலோர இருக்கைக்கு எதிரே பை மட்டும் இருந்தது ஆளை காணோம். ரொம்ப தள்ளி இரண்டு இந்தியப் பெண்மணிகள் எதிரும் புதிருமாய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. என்னை மாதிரி நீங்களும் மூளையை ரொம்பவே கசக்கி யோசித்திர்களானால் கண்டுபிடித்துவிடுவீர்கள். பிரபுதேவா படங்களில் அவர் நடனமமைத்த பாட்டுகளில் கதாநாயகனுக்கு இடமும் வலமுமாக இரண்டு பெண்கள் இடுப்பில் வட்டமாக கொட்டு வைத்துக்கொண்டு குலுக்கல் குத்தாட்டம் போடுவார்கள். ஒருவர் கொஞ்சம் வஞ்சனையில்லாமல் திடகாத்திரமாக இருப்பார்...இன்னொரு பெண்மணி ஒடிசலாய் மாடலிங் கச்சிதமாய் இருப்பார். பத்துக்கு ஆறு படங்களில் விஜய் இவர்களுக்கு நடுவில் கழுத்தில் கர்சீப் சகிதம் நட்பைப் பற்றியோ, உலகத்தைப் பற்றியோ நீயும் நானும் என்று உங்களைப் பார்த்து தத்துவ வரிகள் பாடிக்கொண்டிருப்பார். இவர்களும் சளைக்காமல் சுத்தி சுத்தி ஆடுவார்கள். அவர்கள் இருவரும் டேன்ஸ் பெண்மணிகள் மாதிரியே இருந்தார்கள்.
ஆனால் அவர்கள் நம் கதைக்கு உப்புப் பெறமாட்டார்கள். நீங்கள் அந்தப் பெண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த கொண்டிருந்த போது என் எதிரே வந்து உட்கார்ந்த காக்கேசிய (வெள்ளைக்கார) பதுமையை தவறவிட்டுவிட்டீர்கள். கண்கள் நாலாப் பக்கமும் இருக்கனும்..இல்லாட்டா இந்தக் காலத்துல தூக்கி சாப்பிடுவாங்க. நம் பதுமை மிக அழகாய் இருந்தாள். கருப்புக்கும் பிரவுனுக்கு நடுக் கலரில் இருந்த தலை முடி அவளை பளிச்சென்று காட்டியது. கல்யாணமாகாத என்னை மாதிரி இருபத்தைந்து வயது இளைஞர்களை சோதிப்பதற்காகவே கடவுள் அனுப்பி வைத்த மாதிரி இருந்தது. பெத்தாய்ங்களா செய்ஞ்சாங்களான்னு டவுட்டே வரவில்லை ...கண்டிப்பாக செய்திருப்பார்கள்.
"ஹலோ..எப்படி இருக்கிறீர்கள்" கூச்சமே இல்லாமல் அராகிஸ் ஹைப்பொகியா சாகுபடியை ஆரம்பித்தேன்(அதாங்க கடலை). இந்த ஒரு விஷயத்திற்காகவே வெள்ளைக்காரர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். யாரிடம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.
"நான் நலம் நீங்கள்..?" கண்டிப்பாய் திரும்ப கேட்பாள் என்று தெரியும்.
"உங்களை பார்க்கும் வரை நன்றாகத் தான் இருந்தேன்..." "..." அவள் மணிரத்னம் படம் பார்த்ததே இல்லை என்று அப்பட்டமாக தெரிந்தது.
"நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்"
"நன்றி.." நீங்களும் அழகாக இருக்கிறீர்கள் என்று அவள் திரும்பச் சொல்லுவாள் என்று எதிர்பார்த்தது என் தப்பு. கீதையில் கிச்சு சொன்னதை நியாபகப் படுத்திக்கொண்டேன்.
"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது எனக்கு..." யோசிக்க கூட இல்லாமல் அவள் உதட்டில் கசிந்த புன்னகை ஆயிரம் நக்கல் செய்தது. சே அழகாய் இருக்கிறாள் என்று சொன்னதற்கு முன்பு சொல்லி இருக்கவேண்டும். எனக்கு ஏன் அழகான பெண்களை எல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று தெரியவில்லை. வெள்ளை தோலுக்கு அம்சமான கலரில் உடையணிந்திருந்தாள். சீசனுக்கு பூக்கும் பூக்களுக்கு ஏத்த மாதிரி உடையை தேர்ந்தெடுப்பாள் போலும். உறுத்தாத கலரில் மேட்ச்சிங்காய் நெயில் பாலீஷ்.
"நீங்கள் மங்கையர் மலர் படிப்பீர்களா...?"
"..மங்கேயெ....???" அவள் இதழ் பெயரை எசகுபிசகாய் இழுத்த போதே தெரிந்து விட்டது கண்டிப்பாக படித்திருக்க மாட்டாள்.
"இல்லை...டெய்லி பன்னீரில் ரோஜா பூவைப் போட்டு ரெண்டு மணி நேரம் அழுக்கு துணியை ஊறவைப்பது போல கையை ஊற வைத்தால் கைகள் இந்த மாதிரி பட்டு போல இருக்கும் என்று எங்க ஊர் மங்கையர் மலரில் கீரனூர் பாக்யலட்சுமி டிப்ஸ் குடுத்திருந்தார்..ஒருவேளை படித்துவிட்டு ட்ரை செய்திருப்பீர்களோ என்று கேட்டேன்..." இந்த முறை அவளின் பலமான புன்னகை நான் ஜொள்ளு விடுவதாக அனர்த்தம் செய்து கொண்டதை பறை சாற்றியது. தலைக்கு மேலே போன பின் ஜானென்ன பீட்டரென்ன என்று நானும் முக்காடை தூக்கிவிட்டேன்.
வெள்ளைக்கார பெண்மணிகளின் வயதை கண்டுபிடிப்பது மட்டும் மிக கடினமான விஷயம். நிறைய முப்பத்தி சொச்சத்தை எல்லாம் இருபத்தி சொச்சம் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கேன். பார்க்க அவ்வளவு இளமையாக இருப்பார்கள். இவளுக்கு அனேகமாய் என்னை விட இரண்டு வயது கூட இருக்கலாம் ஆனால் இருபது மாதிரி தான் தெரிந்தாள். டெண்டுல்கரை ரோல் மாடலாய் தத்து எடுத்துக் கொண்டு சாகுபடியை தொடர்ந்தேன்.
"உங்களுக்கு லீட்ஸா..."
"இல்லை நியூகாஸில்..லீட்ஸில் ட்ரெயின் மாறவேண்டும் "
"லண்டனுக்கு அடிக்கடி வருவீர்களா....?"
"ஆம் வேலை விஷயமாக வருவேன்..நீங்கள்..?"
"எனக்கு லண்டன்...வேலை விஷயமாய் எடின்பரோ போகிறேன்..." எண்பது பெர்சண்ட் எங்களுக்குள் ஒற்றுமை இருந்தது எனக்கு ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது. அவளுக்கு புடவை உடுத்திக் கொள்ளச் சொல்லிக்குடுக்கவேண்டும்...புடவையில் கொள்ளையழகாக இருப்பாள்.
"உங்களுக்கு கல்யாணமாகிவிட்டதா...?"
"எக்ஸ்க்யூஸ்மீ...??" அவள் பார்வையில் அத்தனை சினேகமும் பட்டென வடிந்திருந்தது. எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கேட்டிருக்க கூடாது. சுபஸ்ய சீக்கிரம்ன்னு ஓவராய் எக்சைட்டட் ஆகிவிட்டேன். இன்னும் மூனு மணி நேர பிரயாணம் இருக்கிறது ஒரு வேளை அவள் எடுத்த ஸ்டேஷனில் இறங்குவதாய் இருந்தாலும் கூட ஒரு மணி நேரம் இருக்கிறது. கடலையை பதமாய் வறுத்திருக்கவேண்டும்
அதற்கப்புறம் அவள் ஒரு புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். நானும் லேப்டாபை திறந்து ஆபிஸ் வேலை பர்ப்பது மாதிரி கதை படிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் கதையில் ஒன்றிப் போயிருந்த அடுத்த பதினைந்து நிமிடத்தில் "ஆர் யூ சிங்கிள் ...." என்று அவள் கேட்ட போது எனக்கு பல்லெல்லாம் வாயாயிருந்தது.இவளுக்கு முதலில் மணமாய் வத்தகுழம்பு வைக்க சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்புறம் முட்டைக்கோஸ் பருப்பு உசிலி.
அப்புறம் பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம். அவளும் எக்சைட் ஆகி சளைக்காமல் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தாள். என் ஆபீஸைப் பற்றி கேட்டாள் டிப்பார்ட்மென்ட் ஹெட் பற்றிக் கேட்டாள்...சில பேரோடு இமெயில் கேட்டாள் பல பேரோடு எக்ஸ்டென்ஷன் நம்பரெல்லாம் கேட்டாள்..வயசுப் பையனிடம் பேசும் போது ஏதோ பேச்சை வளர்கனுமே என்று இந்த டாப்பிக் தான் என்று இல்லாமல் இன்னமும் என் கம்பெனி பற்றி ஏதேதோ கேட்டாள். ஆனால் நான் ரொம்ப உஷாராக தேவை இல்லாதையெல்லாம் கேட்காமல் அவள் எங்கே நெயில் பாலீஷ் வாங்கினாள், டேவிட் பெக்காம் பெண்டாட்டி விக்டோரியா பெக்காம் பற்றி என்ன நினைக்கிறாள் என்று அவளே அறியாமல் அவளைப் பற்றிய விஷயங்களை கறந்துகொண்டிருந்தேன். அவளும் பெக்க பெக்கவென்று விஷயங்களை உளறிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன், பான்ட்ரீ காரிலிருந்து ஹாட் சாக்லேட் வாங்கிக் கொடுத்தாள். கண்டிப்பாய் இவளுக்கு வசந்த பவனில் பில்டர் காப்பி வாங்கிக்கொடுக்கவேண்டும். சொக்கிப் போய்விடுவாள். அப்புறமும் லீட்ஸ் வரை ஏகத்துக்கு பேசிக்கொண்டே வந்தோம். இறங்குவதற்க்கு முன் அவளோட போன் நம்பர் கேட்டேன். என்னை ரொம்ப பிடித்ததால் அவளுடைய பிஸினஸ் கார்டு குடுத்தாள். லீட்ஸில்
அவள் இறங்கியபின் யோசித்ததில் அவளை இதற்கு முன் எங்கே பார்த்திருக்கிறேன் என்று நியாபகம் வந்துவிட்டது. அவள் கம்பெனியின் ப்ராடெக்டை எங்கள் கம்பெனிக்கு விற்பதற்காக ப்ராடெக்ட் டெமோவுக்கு வந்திருந்தாள். எங்கள் கம்பெனி பெரிய கம்பெனி என்பதால் பெரிய ஆர்டருக்கு இன்னமும் பிரம்மப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவள் மட்டும் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் நான் கதை படிப்பது மாதிரி பாவலா காட்டிய போது என் லேப்டாப்பில் இருக்கும் எங்கள் கம்பெனி ஸ்டிக்கரை நோட் செய்து நூல் விட்டு அவள் ப்ராடெக்ட் விற்பனைக்கு சம்பந்தமான கேள்விகள் கேட்டிருக்கலாம்...என்னைப் பார்த்ததில் கொஞ்சம் ஓவர் எக்சைட் ஆகிவிட்டாள் அவ்வளவு தான். கண்கள் நாலுபக்கமும் இருக்கவேண்டாமா..இல்லாவிட்டால் இந்தக் காலத்தில் தூக்கி சாப்பிட்டுவிட மாட்டார்களா...இருந்தாலும் அந்த நெயில் பாலிஷ் அவளுக்கு ஏகத்துக்கு எடுப்பாய் இருந்தது. மல்லிகைப்பூ வைத்து பின்னிக் கொள்ளச் சொல்லிக் குடுக்கவேண்டும்.
அடுத்த ஸ்டேஷனில் அவளிடத்தில் வந்து உட்கார்ந்த அடுத்த காக்கேசியப் பெண்மணி அவளை விட அழகாக இருந்தாள். எனக்கு இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
"நீங்கள் மங்கையர் மலர் படிப்பீர்களா"
Tuesday, July 14, 2009
அவன்
சிகரெட் வாடை மூக்கைத் தாக்கிய போது தான் அவன் பஸ் ஸ்டாப்பில் என் பின்னால் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவன் எப்போது வந்தான், திரும்பி லேசாக அவனைப் பார்த்த போது எனக்கு கலவரமாகியது. நல்ல பரட்டையாய் தலை, நாலு நாள் சவரம் செய்யாத தாடி, ஒழுங்கு படுத்தாமல் கொஞ்சம் தாறுமாறாக வளர்ந்த மீசை. லுங்கி அணிந்திருந்தான். சட்டையில் மேல் பட்டன் போடாமல் முழுக் கையை மடக்கிவிட்டிருந்தான். தலை முடி அழுந்த வார முயற்சித்து தோற்றுப் போயிருந்தது தெரிந்தது.
பேங்கிலிருந்து லட்ச ரூபாயை இப்படி ஹாட் கேஷாக எடுத்துப் போக தனியாளாக வந்திருக்க கூடாது. சேகரையாவது துணைக்கு கூட்டி வந்திருக்க வேண்டும். இப்படி சினிமாவில் வருவது மாதிரி வானம் தீடீரென்று இருட்டி இந்த ஒதுக்குப் புற பஸ்ஸடாப்பில் தனியாக நிற்பேன் என்று சத்தியமாக கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. இப்படியா ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் பேங்கை திறப்பார்கள். "ஆட்டோல மட்டும் ஏறிடாத...இந்த மாதிரி நிறைய கேஷ் எடுக்கும் போது உள்ளையே ஒருத்தன் நோட்டம் பார்த்து தகவல் குடுத்திருப்பான்...இவன் சும்மா ஆட்டோல வர்ற மாதிரி வந்து ..தெரு முக்குல இன்னொருத்தன் முன்னாடி ஏறிப்பான்...அப்புறம் சவுக்குத் தோப்புல உன்னை கட்டிப் போட்டுட்டு பெட்டியோட அவங்க கம்பி நீட்டிடுவாங்க" - அவசரமாய் பணம் எடுக்க போகிறேன் என்று பக்கத்து வீட்டுக்காரார்கள் குடுத்த இலவச அட்வைஸில், வந்த ஒரு ஆட்டோவையும் வேண்டாமென்று சொல்லிவிட்டு இப்படி அம்போவென்று பஸ்ஸுக்கு நின்று கொண்டிருக்கிறேன்.
சிகரெட்டை பீடி மாதிரி பிடித்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவன் என்னையே முறைத்துக் கொண்டிருந்தது எனக்கு முதுகில் ஊறியது. அவன் முகம் எங்கேயோ பார்த்தது மாதிரி வேறு இருந்தது. போன வார தினமலரில் எச்சரிக்கை விளம்பரத்தில் எதிலாவது பார்த்தேனா என்று யோசிக்க ஆரம்பித்தேன். இல்லை அன்று ஆபீஸுக்கு பக்கத்தில் நடந்த சண்டையில் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தானே அவனா...-ம்கூம்...வேறு எங்கேயோ பார்த்திருக்கிறேன்.
"டைம் என்னா சார்" - அவன் கேட்ட போது எனக்கு உதறல் கூட ஆரம்பித்தது. பாழாய் போன பஸ் வந்து தொலைய மாடேங்கிறதே என்றிருந்தது.
அவனும் என்னுடன் வந்து நிற்க ஆரம்பித்த போது எனக்கு டென்ஷன் அதிகமாக ஆரம்பித்தது. சைட் வாக்கில் பஸ்ஸை நோட்டம் விடுவது போல் பார்த்தில் மூளையில் மின்னல் மாதிரி வெட்டியது. எங்கே பார்த்தேன் என்று நியாபகம் வந்து விட்டது.
திரும்பவும் பார்த்ததில் அவனுடைய சைட் போஸ் ஊர்ஜிதப்படுத்தியது. அடப்பாவி அவனா இவன்..சந்தேகமேயில்லை அவனே தான். யாரு என்று தெரிந்ததற்கப்புறம் கேட்டுவிட எனக்கு நாக்கு பரபரத்தது.
"எக்ஸ்யூஸ்மீ... நீங்க இப்போ சமீபத்துல வந்த "ஒரு கமர்கட்டும் நாலு கடலை மிட்டாயும்" படத்துல நடிச்ச ஹீரோ தானே?"
அவன் முகத்தில் ஒரு ஆச்சரியம். ஆனால் தீனமாய் மறுத்தான்.
"இல்லீங்க அது நான் இல்லை"
"ஓ..சாரி படப் பெயரைக் குழப்பிட்டேன்...நீங்க "நேத்து வைச்ச கஞ்சி" அந்த ஹீரோ தானே உங்கள சைட் போஸில பார்த்த அப்புறம் தான் ஸ்ட்ரைக் ஆச்சு "
"இல்லீங்க...நீங்க வேறங்க...நான் அந்த படத்துக்கு ஹீரோவா செலெக்ட் ஆகி இருப்பேன்...நீங்க சொன்ன அதே சைட் போஸில நான் கொஞ்சம் படிச்சவன் கணக்கா டீசென்டா இருக்கேனாம்..அதுனால வேண்டாம்ன்னுட்டாங்க..இப்போ மூக்கின்னு ஒரு படத்துக்கு அனேகமா செலெக்ட் ஆகிடுவேன்னு நினைக்கிறேன் ஸ்க்ரீன் டெஸ்டெல்லாம் நேத்து தான் முடிஞ்சிது...உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கனும்"
பேங்கிலிருந்து லட்ச ரூபாயை இப்படி ஹாட் கேஷாக எடுத்துப் போக தனியாளாக வந்திருக்க கூடாது. சேகரையாவது துணைக்கு கூட்டி வந்திருக்க வேண்டும். இப்படி சினிமாவில் வருவது மாதிரி வானம் தீடீரென்று இருட்டி இந்த ஒதுக்குப் புற பஸ்ஸடாப்பில் தனியாக நிற்பேன் என்று சத்தியமாக கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. இப்படியா ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் பேங்கை திறப்பார்கள். "ஆட்டோல மட்டும் ஏறிடாத...இந்த மாதிரி நிறைய கேஷ் எடுக்கும் போது உள்ளையே ஒருத்தன் நோட்டம் பார்த்து தகவல் குடுத்திருப்பான்...இவன் சும்மா ஆட்டோல வர்ற மாதிரி வந்து ..தெரு முக்குல இன்னொருத்தன் முன்னாடி ஏறிப்பான்...அப்புறம் சவுக்குத் தோப்புல உன்னை கட்டிப் போட்டுட்டு பெட்டியோட அவங்க கம்பி நீட்டிடுவாங்க" - அவசரமாய் பணம் எடுக்க போகிறேன் என்று பக்கத்து வீட்டுக்காரார்கள் குடுத்த இலவச அட்வைஸில், வந்த ஒரு ஆட்டோவையும் வேண்டாமென்று சொல்லிவிட்டு இப்படி அம்போவென்று பஸ்ஸுக்கு நின்று கொண்டிருக்கிறேன்.
சிகரெட்டை பீடி மாதிரி பிடித்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவன் என்னையே முறைத்துக் கொண்டிருந்தது எனக்கு முதுகில் ஊறியது. அவன் முகம் எங்கேயோ பார்த்தது மாதிரி வேறு இருந்தது. போன வார தினமலரில் எச்சரிக்கை விளம்பரத்தில் எதிலாவது பார்த்தேனா என்று யோசிக்க ஆரம்பித்தேன். இல்லை அன்று ஆபீஸுக்கு பக்கத்தில் நடந்த சண்டையில் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தானே அவனா...-ம்கூம்...வேறு எங்கேயோ பார்த்திருக்கிறேன்.
"டைம் என்னா சார்" - அவன் கேட்ட போது எனக்கு உதறல் கூட ஆரம்பித்தது. பாழாய் போன பஸ் வந்து தொலைய மாடேங்கிறதே என்றிருந்தது.
அவனும் என்னுடன் வந்து நிற்க ஆரம்பித்த போது எனக்கு டென்ஷன் அதிகமாக ஆரம்பித்தது. சைட் வாக்கில் பஸ்ஸை நோட்டம் விடுவது போல் பார்த்தில் மூளையில் மின்னல் மாதிரி வெட்டியது. எங்கே பார்த்தேன் என்று நியாபகம் வந்து விட்டது.
திரும்பவும் பார்த்ததில் அவனுடைய சைட் போஸ் ஊர்ஜிதப்படுத்தியது. அடப்பாவி அவனா இவன்..சந்தேகமேயில்லை அவனே தான். யாரு என்று தெரிந்ததற்கப்புறம் கேட்டுவிட எனக்கு நாக்கு பரபரத்தது.
"எக்ஸ்யூஸ்மீ... நீங்க இப்போ சமீபத்துல வந்த "ஒரு கமர்கட்டும் நாலு கடலை மிட்டாயும்" படத்துல நடிச்ச ஹீரோ தானே?"
அவன் முகத்தில் ஒரு ஆச்சரியம். ஆனால் தீனமாய் மறுத்தான்.
"இல்லீங்க அது நான் இல்லை"
"ஓ..சாரி படப் பெயரைக் குழப்பிட்டேன்...நீங்க "நேத்து வைச்ச கஞ்சி" அந்த ஹீரோ தானே உங்கள சைட் போஸில பார்த்த அப்புறம் தான் ஸ்ட்ரைக் ஆச்சு "
"இல்லீங்க...நீங்க வேறங்க...நான் அந்த படத்துக்கு ஹீரோவா செலெக்ட் ஆகி இருப்பேன்...நீங்க சொன்ன அதே சைட் போஸில நான் கொஞ்சம் படிச்சவன் கணக்கா டீசென்டா இருக்கேனாம்..அதுனால வேண்டாம்ன்னுட்டாங்க..இப்போ மூக்கின்னு ஒரு படத்துக்கு அனேகமா செலெக்ட் ஆகிடுவேன்னு நினைக்கிறேன் ஸ்க்ரீன் டெஸ்டெல்லாம் நேத்து தான் முடிஞ்சிது...உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கனும்"
Sunday, June 14, 2009
மல்லீ
இந்தக் கதை "'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் போட்டிக்காக எழுதப்பட்டது"
***********************************
"அம்மா பூ கொண்டாந்திருக்கேன்.." என்று சத்தம் கேட்டாலே அது கனகுவாய் தான் இருக்கும். சத்தம் குடுத்த கையோடு முன் அறையில் சவுகரியமாய் உட்கார்ந்து கொள்வாள். கனகு என் மனைவியின் ஆஸ்தான பூக்காரி. தோள் எலும்பு தெரிய வரும் கனகுவுக்கு ஓரத்தில் நரை முடி தெரியும். எப்பவோ கணவன் விட்டுப் போயிருந்தாலும், பெரிய பொட்டு மட்டும் குடுத்தியான முகத்தில் பிரதானமாய் இருக்கும். வீட்டம்மா வெளில போயிருக்கு இன்னிக்கு பூ வேண்டாமென்று நான் சொன்னாலும் விடமாட்டாள். “அம்மா விளக்குக்கு வைக்கவாது நூறு பூ வாங்குவாங்க அப்புறம் உங்கள சண்டை பிடிக்கப் போகுது”ன்னு பிடிவாதமாய் சத்தியாகிரகம் செய்வாள்.
கனகு எனக்கு கல்யாணமான வருடத்திலிருந்து வீட்டிற்கு பூ போட கரெக்டாய் வந்துவிடுவாள். "பத்தாம் நெம்பர் வீட்டுல வேலை செஞ்சிக்கிட்டிருந்தால்ல கவுரி...அவள நேத்து போலீஸுல பிடிச்சிட்டுப் போய் அடி நிமித்திட்டாங்கம்மா...நீங்க நான் சொன்னபோது நம்பல...அவ தான் அந்த வூட்டுப் பிள்ளையோடு செயின களவாடியிருக்களாம்...இந்தக் காலத்துல உழைச்சுத் திங்கிதே நிக்க மாட்டேங்குது இதுல களவாடினா வெளங்குமா..." கொசுறாக ஊர் சேதியெல்லாம் என் மனைவிக்கு அப்டேட் செய்வதே கனகுதான்.
"நானா கேட்டேன்...எனக்கு அந்த கவுரி யாருன்னே தெரியாது...இவளுக்கு யார்கிட்டயாது சொல்லனும் என்கிட்ட அன்யோன்யமா சொல்லறா...சொல்லிட்டுப் போகட்டுமே...பாவம்...நல்ல பூக்காரம்மா...நீங்க எதுக்கு நாங்க பேசறதையெல்லாம் ஒட்டுக் கேட்டுண்டு" என மனைவி கனகுவை சில சமயம் விட்டே குடுக்கமாட்டாள்.
"சித்ரா பௌர்ணமி விளக்க சுத்தி நல்ல பூவு வைங்கம்மா...வீடு நல்ல லெஷ்மி கதாட்சமாய் இருக்கும்" கனகுவுக்கு செண்டிமென்ட் ஜாஸ்தி. "இன்னிக்கு ஜாதி மல்லி ஏலம் எடுத்தேம்மா...மொத போனியே நம்மூட்டுக்குத் தான்...கூட நூறு வாங்கிக்கோங்க...உங்க கை எனக்கு ராசியா இருக்கும்....எம்ம்பொண்ணுக்கும் உன்ன மாதிரி நல்ல நீளமான முடிம்மா...ஆனா வாத்தி புள்ள மக்குன்னு பூ வைடின்னு சொன்ன கேட்டாத் தானே...எல்லாருக்கும்மா நீளமா முடி வாய்க்குது...நீ நிறைய பூ வைம்மா...வீட்டுக்கும் புருஷன் ஆயுசுக்கும் நல்லதும்மா " என மனைவி அவளுடைய சென்டிமெண்டுக்கு எல்லாம் ஈசியாய் மசிவாள்.
"ஏம்மா நீ ஏன் ராகினிகிட்ட மாம்பழத்துக்கு பேரம் பேசி தொண்டத் தண்ணிய வுடுறீங்க...என்னாண்ட சொல்லுங்க நான் வாங்கித்தரேன் எவ்ளோ வேணும்..." சில சமயம் கூடுதல் வியாபாரமும் நடக்கும்.
"இவளுக்கு மாம்பழத்துல கண்டிப்பா கமிஷன் இருக்கும்" என்று நான் சொன்னாலும்..."இருக்கட்டுமே நமக்கு எனிவே இந்த விலைக்கு கிடைக்காது....அவளும் பொழச்சிக்கட்டுமே...அவளுக்கும் ஒரு பொண்ணு இருக்குங்க...எல்லாமே வயத்துக்குத் தானே" என்று எனக்கு பதில் உபதேசம் தான் கிடைக்கும்.
"மல்லீ வந்திருக்கு...."ன்னு ஒரு நாள் வயதுப் பெண் வந்த போது எனக்கு அது கனகுவின் பெண் என்று தெரியவில்லை.
"இங்க வழக்கமா ஒரு அம்மா பூ போடுவாங்க...அம்மா அவங்க கிட்ட தான் வாங்குவாங்கம்மா.."ன்னு சொன்னவுடன் அவளுக்கு முகத்தில் ஏகப் பெருமை.
"அண்ணா அது எங்கம்மா தான்ணா...அம்மாவுக்கு காய்ச்சல் அதான் நான் வந்திருக்கேன்.."
"ப்ள்ஸ் டூ படிக்கிறன்னாங்களே உங்க அம்மா ...நல்லா படிக்கிறியா...நல்ல படிச்சு வேலைக்கு போகனும் என்ன" என் மனைவிக்கு அவளை தெரிந்திருந்தது. நான் அவள் பெயர் கேட்டுக்கொள்ளவில்லை ஆனால் அவள் மல்லீ என்று ராகம் போட்டு விற்பதால் அவளை மல்லீ என்றே அழைப்பேன். அவளும் வாய் நிறைய அண்ணா அண்ணா என்று அழைப்பாள்.
"ஏண்ணா...அண்ணிக்கு கூட கொஞ்சம் பூ வாங்கி வைங்கண்ணா..நேத்து அம்மன் கோயிலாண்ட பார்த்தேன் ப்ளூ சாரியில அண்ணீ சூப்பராய் இருந்தது..." - கனகுவின் வியாபார உத்தி அப்பிடியே இவளிடம் இருக்கும் செண்டிமென்ட் உள்பட. ஒரு தரம் எங்கள் வீட்டு நிலைவாசலில் ஒரு துண்டு மல்லிகை மாட்டியிருந்தது.
"நாந்தாண்ணா வைச்சேன்... நிலைவாசல்ல பூ வைச்சா வீட்டுல சந்தோஷம் பெருகும்ன்னு அம்மா சொல்லுவாங்க..அதான் வைச்சேன்"
"மல்லீ...நீ பூ விக்க வேண்டியவளே இல்ல...நல்ல படிச்சு கார்பரேட்ல வேலை பார்க்க வேண்டியவ...நல்ல மார்க்கெட்டிங் டெக்னிக்"ன்னு நான் சொன்ன போது அவள் முகம் பிரகாசமாயிருந்தது.
அதற்கப்புறம் கொஞ்ச நாளில் கனகு அம்மன்கோவில் பக்கம் ஒரு சின்ன கடை போட்டுவிட்டாள்.
"சுகர் வந்திருச்சிம்மா அலைய முடியலை அதான் கைல இருக்கிறதையெல்லாம் போட்டு கடைய ஏலம் எடுத்திருக்கேன்...உனக்கு வேணா மகள வீட்டுல வந்து குடுக்கச் சொல்லட்டுமா"
"இல்ல பரவாயில்ல படிக்கிற பொண்ணு...நானே வந்து வாங்கிக்கறேன்...டெய்லி இத சாக்கா வைச்சாவது அம்மன்கோயிலுக்கும் வருவேன்" என் மனைவிக்கும் கனகுவின் தொடர்பை விடப் பிடிக்கவில்லை. இரண்டே வாரம் தான். கனகு மீண்டும் வீட்டிற்கே பூ போட வந்தாள்.
"என்னத்த சொல்றது என் தலையெழுத்து...அந்த நீலவேணி நான் அவ கடைய ஏலமெடுத்தேன்னு என்னைய ஆள வைச்சு தகராறு பண்றாம்மா...குடிச்சிப்புட்டு வீட்டுப் பக்கமும் வந்துட்டாங்க..வயசுப் புள்ளைய வைச்சிக்கிட்டு நமக்கு ஆள் இருக்கா அம்பு இருக்கா...அதான் கடைய விட்டுக்கொடுத்திட்டேன்...இப்போ குத்தைகாரன் கிட்ட காசுக்கு அலைஞ்சிகிட்டு இருக்கேன்...எனக்கு இது தேவையா... ஆனா நல்ல வாழற உங்க வீட்டுல வைச்சு சொல்லக்க்கூடாது அவ அதுக்கு அனுபவிப்பாம்மா...அந்த அம்மன் அவளுக்கு கொடை கூலி குடுக்கும் பார்த்துக்கிட்டே இருங்க.."
எல்லாம் கொஞ்ச நாள் தான் அதற்கப்புறம் மீண்டும் கனகுவை வீட்டுப் பக்கம் காணவே இல்லை. என் மனைவிக்கு பூ வாங்குவதை விட அவளைப் பற்றியே கவலையாய் இருந்தது. "ஏங்க கொஞ்சம் விசாரிங்க...அவ கிட்ட காசுக்கு அவங்க ஏதாவது தகறாரு பண்ணியிருப்பாங்க"ன்னு என்னை கொஞ்ச நாள் நச்சரித்துக்கொண்டிருந்தாள்.
"நான் எங்க போய் விசாரிப்பேன்...டோன்ட் வொர்ரி அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது..." என்று நான் சொன்னாலும் எனக்கும் அதே சந்தேகம் தான் இருந்தது.
"கனகு வீடு பூட்டியிருக்கு அவ வீட்டைக் காலி பண்ணிட்டாளாம்..பக்கத்து விட்டு சுலோச்சனாம்மா வீட்டு வேலைக்காரி சொன்னாளாம்" என்று என் மனைவி சொன்ன போது பூக்கடையில் கூட இவ்வளவு பாலிடிக்ஸா என்று எனக்கு வருத்தமாய் இருந்தது.
"கவலப் படாத...அவ நல்லா தான் இருப்பா...எத்தனை தரம் நமக்கே பூ குடுத்து ஆசிர்வாதம் பண்ணியிருக்கா அந்த நல்ல மனசுக்கே அவளுக்கு எங்க போனாலும் நல்லா தான் இருப்பா " என்று சமாதானம் மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. அதற்கப்புறம் சில மாதங்கள் பிறகு கனகுவை மறக்கவில்லை என்றாலும் அவளைப் பற்றி நானும் மனைவியும் அதிகம் பேசவில்லை. என் மனைவி மனதே இல்லாமல் அம்மன் கோயில் கடை தவிர்தலாக மற்ற கடைகளில் பூ வாங்கிக் கொள்ள ஆரம்பித்தாள்.
ப்ளஸ் டூ வில் அந்த தரமும் மாணவிகளே அதிக மதிப்பெண் எடுத்தார்கள் என்று பேப்பரில் படித்த போது எனக்கு மல்லீயின் நியாபகம் தீற்றலாய் வந்தது.
பின்னொரு நாளில் மெடிக்கல் ஷாப் சேகரிடம் பேசிக்கொண்டிருந்த போது அந்த முரட்டு மீசை ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்க வந்தான். கனகு பற்றி சும்மா கேட்பது மாதிரி அவனிடம் கேட்டேன்.
"அதெல்லாம் அன்னிக்கே ஃபைசல் பண்ணியாச்சு சார்...அவ காசு எனக்கெதுக்கு சார்...நான் விளங்க வேண்டாமா...அதெல்லாம் கனகு செம உஷார் பார்ட்டி சார்...மேட்டர் வேற சார்...அவ புள்ள... பூ போடற வீட்டுல காதல் பண்ணி இழுத்துகிட்டு ஓடிப் போயிரிச்சி. அப்புறம் அவங்க போலிஸ்ல சொல்லி கனகு வீட்டைக் காலி பண்ணிரிச்சி. ரெண்டு மாசம் மின்னாடி கண்டுபிடிச்சி.. அவங்க பையன கூட்டிட்டு போயிட்டாங்க..இப்போ கனகும் அந்தப் புள்ளையும் எம்ஜியார் நகர்ல வீடெடுத்திருக்கிறதா பசங்க சொன்னாங்க.” எனக்கு கனகுவைப் பற்றி ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது. அதற்கு மேலும் அங்கு நிற்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டேன்.
அப்புறம் எம்ஜியார் நகர் கடக்கும் போது நியாபகம் வரும் போதெல்லாம் கனகு எங்கேயாவது தட்டுப் படுகிறாளா என்று பூக்கடையெல்லாம் பார்ப்பேன்.
ஒரு நாள் என் மாமியாரை அயோத்யா மண்டபத்தில் கச்சேரிக்கு ட்ராப் செய்துவிட்டு வரும் போது வெஸ்ட் மாம்பலத்தின் ஒரு சந்தின் திருப்பத்தில், முற்றிலும் எதிர்பார்க்காத தருணத்தில் மல்லியைய் சந்திக்க நேர்ந்தது. ட்ராபிக் நகர காதிருந்த போது "மல்லீ..." என்று தெரிந்த குரல் கேட்க தலை அனிச்சயாய் திரும்பியது.
ஒரு குட்டி ஒன்டிக் குடித்தனத்தில் வாசலில் டேபிளில் மல்லிகையும் கனகாம்பரமும் அடுக்கி மல்லீ விற்றுக்கொண்டிருந்தாள். கனகு ஒரு பெட்டியை வீட்டிற்குள் நகர்த்திக் கொண்டிருந்தாள், நான் பார்த்த மல்லியா இது என்று எனக்கு தூக்கிவாரிப் போட்டது. தலை மொட்டையடித்து வளரவே விடாமல் ஒட்ட கிராப் செய்யப் பட்டிருந்தது. மூக்குத்தி குத்தியிருந்தாள். அந்த சந்தர்பத்தில் ஒதுங்கி இருக்கும் அவர்களை சந்தித்து நோகடிக்க விரும்பவில்லை. என் மனைவியிடம் சொல்லி உதவி செய்யச் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
முகத்தைத் திரும்பி கிளம்பும் போது தான் கவனித்தேன்...அவர்கள் வீட்டு நிலைவாசலில் பூ மாட்டியிருந்தது.
***********************************
"அம்மா பூ கொண்டாந்திருக்கேன்.." என்று சத்தம் கேட்டாலே அது கனகுவாய் தான் இருக்கும். சத்தம் குடுத்த கையோடு முன் அறையில் சவுகரியமாய் உட்கார்ந்து கொள்வாள். கனகு என் மனைவியின் ஆஸ்தான பூக்காரி. தோள் எலும்பு தெரிய வரும் கனகுவுக்கு ஓரத்தில் நரை முடி தெரியும். எப்பவோ கணவன் விட்டுப் போயிருந்தாலும், பெரிய பொட்டு மட்டும் குடுத்தியான முகத்தில் பிரதானமாய் இருக்கும். வீட்டம்மா வெளில போயிருக்கு இன்னிக்கு பூ வேண்டாமென்று நான் சொன்னாலும் விடமாட்டாள். “அம்மா விளக்குக்கு வைக்கவாது நூறு பூ வாங்குவாங்க அப்புறம் உங்கள சண்டை பிடிக்கப் போகுது”ன்னு பிடிவாதமாய் சத்தியாகிரகம் செய்வாள்.
கனகு எனக்கு கல்யாணமான வருடத்திலிருந்து வீட்டிற்கு பூ போட கரெக்டாய் வந்துவிடுவாள். "பத்தாம் நெம்பர் வீட்டுல வேலை செஞ்சிக்கிட்டிருந்தால்ல கவுரி...அவள நேத்து போலீஸுல பிடிச்சிட்டுப் போய் அடி நிமித்திட்டாங்கம்மா...நீங்க நான் சொன்னபோது நம்பல...அவ தான் அந்த வூட்டுப் பிள்ளையோடு செயின களவாடியிருக்களாம்...இந்தக் காலத்துல உழைச்சுத் திங்கிதே நிக்க மாட்டேங்குது இதுல களவாடினா வெளங்குமா..." கொசுறாக ஊர் சேதியெல்லாம் என் மனைவிக்கு அப்டேட் செய்வதே கனகுதான்.
"நானா கேட்டேன்...எனக்கு அந்த கவுரி யாருன்னே தெரியாது...இவளுக்கு யார்கிட்டயாது சொல்லனும் என்கிட்ட அன்யோன்யமா சொல்லறா...சொல்லிட்டுப் போகட்டுமே...பாவம்...நல்ல பூக்காரம்மா...நீங்க எதுக்கு நாங்க பேசறதையெல்லாம் ஒட்டுக் கேட்டுண்டு" என மனைவி கனகுவை சில சமயம் விட்டே குடுக்கமாட்டாள்.
"சித்ரா பௌர்ணமி விளக்க சுத்தி நல்ல பூவு வைங்கம்மா...வீடு நல்ல லெஷ்மி கதாட்சமாய் இருக்கும்" கனகுவுக்கு செண்டிமென்ட் ஜாஸ்தி. "இன்னிக்கு ஜாதி மல்லி ஏலம் எடுத்தேம்மா...மொத போனியே நம்மூட்டுக்குத் தான்...கூட நூறு வாங்கிக்கோங்க...உங்க கை எனக்கு ராசியா இருக்கும்....எம்ம்பொண்ணுக்கும் உன்ன மாதிரி நல்ல நீளமான முடிம்மா...ஆனா வாத்தி புள்ள மக்குன்னு பூ வைடின்னு சொன்ன கேட்டாத் தானே...எல்லாருக்கும்மா நீளமா முடி வாய்க்குது...நீ நிறைய பூ வைம்மா...வீட்டுக்கும் புருஷன் ஆயுசுக்கும் நல்லதும்மா " என மனைவி அவளுடைய சென்டிமெண்டுக்கு எல்லாம் ஈசியாய் மசிவாள்.
"ஏம்மா நீ ஏன் ராகினிகிட்ட மாம்பழத்துக்கு பேரம் பேசி தொண்டத் தண்ணிய வுடுறீங்க...என்னாண்ட சொல்லுங்க நான் வாங்கித்தரேன் எவ்ளோ வேணும்..." சில சமயம் கூடுதல் வியாபாரமும் நடக்கும்.
"இவளுக்கு மாம்பழத்துல கண்டிப்பா கமிஷன் இருக்கும்" என்று நான் சொன்னாலும்..."இருக்கட்டுமே நமக்கு எனிவே இந்த விலைக்கு கிடைக்காது....அவளும் பொழச்சிக்கட்டுமே...அவளுக்கும் ஒரு பொண்ணு இருக்குங்க...எல்லாமே வயத்துக்குத் தானே" என்று எனக்கு பதில் உபதேசம் தான் கிடைக்கும்.
"மல்லீ வந்திருக்கு...."ன்னு ஒரு நாள் வயதுப் பெண் வந்த போது எனக்கு அது கனகுவின் பெண் என்று தெரியவில்லை.
"இங்க வழக்கமா ஒரு அம்மா பூ போடுவாங்க...அம்மா அவங்க கிட்ட தான் வாங்குவாங்கம்மா.."ன்னு சொன்னவுடன் அவளுக்கு முகத்தில் ஏகப் பெருமை.
"அண்ணா அது எங்கம்மா தான்ணா...அம்மாவுக்கு காய்ச்சல் அதான் நான் வந்திருக்கேன்.."
"ப்ள்ஸ் டூ படிக்கிறன்னாங்களே உங்க அம்மா ...நல்லா படிக்கிறியா...நல்ல படிச்சு வேலைக்கு போகனும் என்ன" என் மனைவிக்கு அவளை தெரிந்திருந்தது. நான் அவள் பெயர் கேட்டுக்கொள்ளவில்லை ஆனால் அவள் மல்லீ என்று ராகம் போட்டு விற்பதால் அவளை மல்லீ என்றே அழைப்பேன். அவளும் வாய் நிறைய அண்ணா அண்ணா என்று அழைப்பாள்.
"ஏண்ணா...அண்ணிக்கு கூட கொஞ்சம் பூ வாங்கி வைங்கண்ணா..நேத்து அம்மன் கோயிலாண்ட பார்த்தேன் ப்ளூ சாரியில அண்ணீ சூப்பராய் இருந்தது..." - கனகுவின் வியாபார உத்தி அப்பிடியே இவளிடம் இருக்கும் செண்டிமென்ட் உள்பட. ஒரு தரம் எங்கள் வீட்டு நிலைவாசலில் ஒரு துண்டு மல்லிகை மாட்டியிருந்தது.
"நாந்தாண்ணா வைச்சேன்... நிலைவாசல்ல பூ வைச்சா வீட்டுல சந்தோஷம் பெருகும்ன்னு அம்மா சொல்லுவாங்க..அதான் வைச்சேன்"
"மல்லீ...நீ பூ விக்க வேண்டியவளே இல்ல...நல்ல படிச்சு கார்பரேட்ல வேலை பார்க்க வேண்டியவ...நல்ல மார்க்கெட்டிங் டெக்னிக்"ன்னு நான் சொன்ன போது அவள் முகம் பிரகாசமாயிருந்தது.
அதற்கப்புறம் கொஞ்ச நாளில் கனகு அம்மன்கோவில் பக்கம் ஒரு சின்ன கடை போட்டுவிட்டாள்.
"சுகர் வந்திருச்சிம்மா அலைய முடியலை அதான் கைல இருக்கிறதையெல்லாம் போட்டு கடைய ஏலம் எடுத்திருக்கேன்...உனக்கு வேணா மகள வீட்டுல வந்து குடுக்கச் சொல்லட்டுமா"
"இல்ல பரவாயில்ல படிக்கிற பொண்ணு...நானே வந்து வாங்கிக்கறேன்...டெய்லி இத சாக்கா வைச்சாவது அம்மன்கோயிலுக்கும் வருவேன்" என் மனைவிக்கும் கனகுவின் தொடர்பை விடப் பிடிக்கவில்லை. இரண்டே வாரம் தான். கனகு மீண்டும் வீட்டிற்கே பூ போட வந்தாள்.
"என்னத்த சொல்றது என் தலையெழுத்து...அந்த நீலவேணி நான் அவ கடைய ஏலமெடுத்தேன்னு என்னைய ஆள வைச்சு தகராறு பண்றாம்மா...குடிச்சிப்புட்டு வீட்டுப் பக்கமும் வந்துட்டாங்க..வயசுப் புள்ளைய வைச்சிக்கிட்டு நமக்கு ஆள் இருக்கா அம்பு இருக்கா...அதான் கடைய விட்டுக்கொடுத்திட்டேன்...இப்போ குத்தைகாரன் கிட்ட காசுக்கு அலைஞ்சிகிட்டு இருக்கேன்...எனக்கு இது தேவையா... ஆனா நல்ல வாழற உங்க வீட்டுல வைச்சு சொல்லக்க்கூடாது அவ அதுக்கு அனுபவிப்பாம்மா...அந்த அம்மன் அவளுக்கு கொடை கூலி குடுக்கும் பார்த்துக்கிட்டே இருங்க.."
எல்லாம் கொஞ்ச நாள் தான் அதற்கப்புறம் மீண்டும் கனகுவை வீட்டுப் பக்கம் காணவே இல்லை. என் மனைவிக்கு பூ வாங்குவதை விட அவளைப் பற்றியே கவலையாய் இருந்தது. "ஏங்க கொஞ்சம் விசாரிங்க...அவ கிட்ட காசுக்கு அவங்க ஏதாவது தகறாரு பண்ணியிருப்பாங்க"ன்னு என்னை கொஞ்ச நாள் நச்சரித்துக்கொண்டிருந்தாள்.
"நான் எங்க போய் விசாரிப்பேன்...டோன்ட் வொர்ரி அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது..." என்று நான் சொன்னாலும் எனக்கும் அதே சந்தேகம் தான் இருந்தது.
"கனகு வீடு பூட்டியிருக்கு அவ வீட்டைக் காலி பண்ணிட்டாளாம்..பக்கத்து விட்டு சுலோச்சனாம்மா வீட்டு வேலைக்காரி சொன்னாளாம்" என்று என் மனைவி சொன்ன போது பூக்கடையில் கூட இவ்வளவு பாலிடிக்ஸா என்று எனக்கு வருத்தமாய் இருந்தது.
"கவலப் படாத...அவ நல்லா தான் இருப்பா...எத்தனை தரம் நமக்கே பூ குடுத்து ஆசிர்வாதம் பண்ணியிருக்கா அந்த நல்ல மனசுக்கே அவளுக்கு எங்க போனாலும் நல்லா தான் இருப்பா " என்று சமாதானம் மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. அதற்கப்புறம் சில மாதங்கள் பிறகு கனகுவை மறக்கவில்லை என்றாலும் அவளைப் பற்றி நானும் மனைவியும் அதிகம் பேசவில்லை. என் மனைவி மனதே இல்லாமல் அம்மன் கோயில் கடை தவிர்தலாக மற்ற கடைகளில் பூ வாங்கிக் கொள்ள ஆரம்பித்தாள்.
ப்ளஸ் டூ வில் அந்த தரமும் மாணவிகளே அதிக மதிப்பெண் எடுத்தார்கள் என்று பேப்பரில் படித்த போது எனக்கு மல்லீயின் நியாபகம் தீற்றலாய் வந்தது.
பின்னொரு நாளில் மெடிக்கல் ஷாப் சேகரிடம் பேசிக்கொண்டிருந்த போது அந்த முரட்டு மீசை ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்க வந்தான். கனகு பற்றி சும்மா கேட்பது மாதிரி அவனிடம் கேட்டேன்.
"அதெல்லாம் அன்னிக்கே ஃபைசல் பண்ணியாச்சு சார்...அவ காசு எனக்கெதுக்கு சார்...நான் விளங்க வேண்டாமா...அதெல்லாம் கனகு செம உஷார் பார்ட்டி சார்...மேட்டர் வேற சார்...அவ புள்ள... பூ போடற வீட்டுல காதல் பண்ணி இழுத்துகிட்டு ஓடிப் போயிரிச்சி. அப்புறம் அவங்க போலிஸ்ல சொல்லி கனகு வீட்டைக் காலி பண்ணிரிச்சி. ரெண்டு மாசம் மின்னாடி கண்டுபிடிச்சி.. அவங்க பையன கூட்டிட்டு போயிட்டாங்க..இப்போ கனகும் அந்தப் புள்ளையும் எம்ஜியார் நகர்ல வீடெடுத்திருக்கிறதா பசங்க சொன்னாங்க.” எனக்கு கனகுவைப் பற்றி ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது. அதற்கு மேலும் அங்கு நிற்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டேன்.
அப்புறம் எம்ஜியார் நகர் கடக்கும் போது நியாபகம் வரும் போதெல்லாம் கனகு எங்கேயாவது தட்டுப் படுகிறாளா என்று பூக்கடையெல்லாம் பார்ப்பேன்.
ஒரு நாள் என் மாமியாரை அயோத்யா மண்டபத்தில் கச்சேரிக்கு ட்ராப் செய்துவிட்டு வரும் போது வெஸ்ட் மாம்பலத்தின் ஒரு சந்தின் திருப்பத்தில், முற்றிலும் எதிர்பார்க்காத தருணத்தில் மல்லியைய் சந்திக்க நேர்ந்தது. ட்ராபிக் நகர காதிருந்த போது "மல்லீ..." என்று தெரிந்த குரல் கேட்க தலை அனிச்சயாய் திரும்பியது.
ஒரு குட்டி ஒன்டிக் குடித்தனத்தில் வாசலில் டேபிளில் மல்லிகையும் கனகாம்பரமும் அடுக்கி மல்லீ விற்றுக்கொண்டிருந்தாள். கனகு ஒரு பெட்டியை வீட்டிற்குள் நகர்த்திக் கொண்டிருந்தாள், நான் பார்த்த மல்லியா இது என்று எனக்கு தூக்கிவாரிப் போட்டது. தலை மொட்டையடித்து வளரவே விடாமல் ஒட்ட கிராப் செய்யப் பட்டிருந்தது. மூக்குத்தி குத்தியிருந்தாள். அந்த சந்தர்பத்தில் ஒதுங்கி இருக்கும் அவர்களை சந்தித்து நோகடிக்க விரும்பவில்லை. என் மனைவியிடம் சொல்லி உதவி செய்யச் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
முகத்தைத் திரும்பி கிளம்பும் போது தான் கவனித்தேன்...அவர்கள் வீட்டு நிலைவாசலில் பூ மாட்டியிருந்தது.
Wednesday, May 13, 2009
அன்புள்ள தங்கமணிக்கு...
வாவ்...இந்தப் புடவை எப்போ எடுத்தோம்...இதுல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா...அப்படியே ஜன்னல் பக்கத்துல வானத்துல காக்காய பார்க்கற மாதிரி கன்னத்துல கைய வெச்சிண்டு ஒரு போஸ் குடு...டக்குன்னு கேமிரால பிடிச்சுடறேன்...என் அடுத்த படத்துக்கு இந்த மாதிரி ஒரு ப்யூட்டிய தான் தேடிண்டு இருந்தேன்....
தேங்ஸ் பட் நோ தேங்க்ஸ்..தெளிவாவே சொல்லிடறேன்...கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி என்னால சப்பாத்தியும் சன்னா மசாலாவும் பண்ணவே முடியாது...!!!!!!
சே மனுஷன் சன்னா மசாலாவுக்கெல்லாம் பொய் சொல்லி பிச்சை எடுக்க வேண்டியதாப் போச்சு...சனியன் நானும் அத எவ்வளவு வருஷமா பண்ணிப் பார்க்கறேன் ஒரு தரமாவது நல்லா வந்து தொலைய மாட்டேங்குது...நீயும் அடுக்களையில எவ்வளவு தான் கஷ்டப்படற...இதுக்கு தான் ஒரு வெள்ளக்காரிய வீட்டோடு கொண்டு வந்துடறேன்னு சொல்றேன்...அவளும் கூட மாட ஹெல்ப் பண்றதோட அக்கா அக்கான்னு உங்கிட்ட ஆசையா இருப்பா...நீ தான் கேக்க மாட்டேங்கிற
ஏன் அதுக்கு பதிலா நான் ஒரு ஆள கூட்டிண்டு வரேனே ...அவன் கூட தான் உங்கள அண்ணா அண்ணான்னு கூப்பிடறதோட உங்களுக்கும் ஒத்தாசையா இருப்பார்...நம்ம அடுத்த தெரு ஆப்பிரிக்க நண்பர் எப்படி வசதி...?
அடிப்பாவி அந்த ஆள் "கேய்"ன்னு தெரிஞ்சு பழிவாங்குறியா...அவன் ஆள் இருக்கிற சைஸ்சுக்கு...உனக்குள்ள இப்படி ஒரு சொர்னாக்கா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை....
என்னடி கெக்கபிக்கன்னு பார்த்துண்டு இருக்க...ஹோம்வொர்க்க எடுத்துண்டு வா. டி.வி.யப் பார்க்காம அந்த சோபால என்ன பார்த்து இப்படி திரும்பி உட்காரு...கான்சென்ட்ரேஷன் இம்ப்ரூவ் ஆகும். இந்தா இந்த டி.வி ரீமோட்ட பக்கத்துல வைச்சிக்கோ...மாடிலேர்ந்து அம்மா கீழ இறங்கி வர்ற சத்தம் கேட்டா டி.விய டக்குன்னு ஆஃப் பண்ணிட்டு ரிமோட்ட உன் பக்கத்துலேயே வெச்சிக்கோ. இல்லைன்னா அப்புறம் டீ.விய பார்த்துண்டே ஹோம்வொர்க் பண்றன்னு உன்ன தான் சத்தம் போடுவா...
அம்மா....டீ.வில பில்லா போடறான்...அப்பா நயன் தாரா பார்க்கறார்....
தாயைப் போல் பிள்ளைன்னு சும்மாவா சொன்னான்...ஒரு மட்டு மரியாதையே தெரியல உனக்கு.....இப்படியா நயன் தாரான்னு மண்டைல அடிச்ச மாதிரி சொல்றது...சித்தின்னு அழகா சொல்லுடா...சரி சரி உக்காரு...உடனே எழுந்து போய் மாடில உங்கம்மா கிட்ட ஊத வேண்டாம்..இன்னிக்கு கோட்டா அல்ரெடி ஓவர்...நாளைக்குப் பார்த்துக்கலாம்...ஹூம்...சோபால பூனைய வைச்சிண்டு சகுனம் பார்த்தேன் பாரு என்ன சொல்லனும்...
டாட் ...ஷீ இஸ் புல்லியிங் மீ....நான் தானே உங்க கடைசிப் பொண்ணு....ஷீ சேஸ் ஷி இஸ் தெ ஒன்
அவ சொன்னா சொல்லட்டும்...கண்டுக்காத...அதெல்லாம் இருக்கட்டும்...இங்க பாருடா செல்லம்...நான் உன்கிட்ட முன்னாடியே நிறைய தரம் சொல்லி இருக்கேன்...நீ என்னோட ரெண்டாவது பொண்ணுன்னு சொல்லிக்கோ ஆனா நீதான் கடைசிப் பொண்ணா இல்லியான்னு நானும் உங்க அம்மாவும் தான் பேசி ஒரு முடிவெடுக்கனும் ஓ.கேவா...
குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.
நீங்க வாழ்க்கையில எடுத்த ரெண்டாவது கரெக்ட் முடிவு காமிராக்கு பின்னாடி நிக்கனும்ன்னு எடுத்த முடிவு தான்....
என்ன இருந்தாலும் நீ செம ஷார்ப்டி...பயங்கர புத்திசாலி....உன்னளவுக்கு நான் போறாது...
என்னாச்சு இன்னிக்கு உண்மையெல்லாம் பயங்கரமா ஒத்துக்கறீங்க...?
ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...நீ என்ன செலெக்ட் பண்ணின நான் உன்ன செலக்ட் பண்ணினேன்...இப்பவும் சொல்றேன் நீ பயங்கர ஷார்ப்மா...
அன்புள்ள தங்கமணிக்கு...தந்தை மகளுக்கு எழுதிய கடிதம், மகள் தந்தைக்கு எழுதிய கடிதம் வரிசையில் புருஷன் பெண்டாட்டிக்கு எழுதிய கடிதமாக இந்நேரம் இநத பதிவு மூலம் சரித்திரத்தில் இடம் பிடித்திருப்போம் (ஹீ ஹீ) . நம் மணவாழ்க்கையில் அஃபீஷியலாக பத்து வருடம் ஓடியே விட்டது. திரும்பிப் பார்க்கிறேன், ஓரமாய் நின்று பார்க்கிறேன் ஒன்றரைக் கண் விட்டுப் பார்க்கிறேன் என்று போரடிக்காமல் நேர விஷயத்திற்கு வருகிறேன். எத்தனையோ தரம் நீ சொல்லி நான் மறுத்திருந்தாலும்.....தஙகமணியில்லையேல் டுபுக்கில்லை என்று இன்று ஒத்துக்கிறேன். எனது வாழ்வில் நகைச்சுவையை மேம்படுத்தியது நீ தான் என்று ஒத்துக்கொள்கிறேன். எதைச் சொல்வேன் கண்மணி...தெள்ளிய நீரோடையில் வெள்ளியென..என்று ப்ளாக் கிடைத்ததே என்று ஓவராய் ஃபிலிம் காட்டாமல் "காக்க காக்க" ஜோதிகா மாதிரி (நினைப்பில்) நீ நம் வீட்டு கர்டன்களை திறந்துவிட்டு என்னைப் பார்த்து பேசும் டயலாக்கிற்கு அதில் என்றும் ஒரு சிறப்பிடம் என்ற ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
சொந்தக் கவிதை எழுதி டார்ச்சர் பண்ணாமல்...சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, நமக்கு மிகவும் பொருந்தும் சினிமா பாட்டையே போட்டுவிடுகிறேன்
எனக்குத் தெரியும் என்ன தான் வில்லு படத்திலேர்ந்து பாட்டெல்லாம் சுட்டுப் போட்டாலும் நீ சென்டி ஆக மாட்ட....அதே தான் கரெக்ட்...இந்த வாரம் சப்பாத்தி சன்னா மசாலா...அதே தான்...ப்ளீஸ்...சினிமாலேர்ந்து பாட்டெல்லாம் மேற்கோள் காட்டி போட்டிருக்கேன்....ஏதோ பார்த்து செய்யுங்க மேடம்...
தேங்ஸ் பட் நோ தேங்க்ஸ்..தெளிவாவே சொல்லிடறேன்...கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி என்னால சப்பாத்தியும் சன்னா மசாலாவும் பண்ணவே முடியாது...!!!!!!
சே மனுஷன் சன்னா மசாலாவுக்கெல்லாம் பொய் சொல்லி பிச்சை எடுக்க வேண்டியதாப் போச்சு...சனியன் நானும் அத எவ்வளவு வருஷமா பண்ணிப் பார்க்கறேன் ஒரு தரமாவது நல்லா வந்து தொலைய மாட்டேங்குது...நீயும் அடுக்களையில எவ்வளவு தான் கஷ்டப்படற...இதுக்கு தான் ஒரு வெள்ளக்காரிய வீட்டோடு கொண்டு வந்துடறேன்னு சொல்றேன்...அவளும் கூட மாட ஹெல்ப் பண்றதோட அக்கா அக்கான்னு உங்கிட்ட ஆசையா இருப்பா...நீ தான் கேக்க மாட்டேங்கிற
ஏன் அதுக்கு பதிலா நான் ஒரு ஆள கூட்டிண்டு வரேனே ...அவன் கூட தான் உங்கள அண்ணா அண்ணான்னு கூப்பிடறதோட உங்களுக்கும் ஒத்தாசையா இருப்பார்...நம்ம அடுத்த தெரு ஆப்பிரிக்க நண்பர் எப்படி வசதி...?
அடிப்பாவி அந்த ஆள் "கேய்"ன்னு தெரிஞ்சு பழிவாங்குறியா...அவன் ஆள் இருக்கிற சைஸ்சுக்கு...உனக்குள்ள இப்படி ஒரு சொர்னாக்கா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை....
என்னடி கெக்கபிக்கன்னு பார்த்துண்டு இருக்க...ஹோம்வொர்க்க எடுத்துண்டு வா. டி.வி.யப் பார்க்காம அந்த சோபால என்ன பார்த்து இப்படி திரும்பி உட்காரு...கான்சென்ட்ரேஷன் இம்ப்ரூவ் ஆகும். இந்தா இந்த டி.வி ரீமோட்ட பக்கத்துல வைச்சிக்கோ...மாடிலேர்ந்து அம்மா கீழ இறங்கி வர்ற சத்தம் கேட்டா டி.விய டக்குன்னு ஆஃப் பண்ணிட்டு ரிமோட்ட உன் பக்கத்துலேயே வெச்சிக்கோ. இல்லைன்னா அப்புறம் டீ.விய பார்த்துண்டே ஹோம்வொர்க் பண்றன்னு உன்ன தான் சத்தம் போடுவா...
அம்மா....டீ.வில பில்லா போடறான்...அப்பா நயன் தாரா பார்க்கறார்....
தாயைப் போல் பிள்ளைன்னு சும்மாவா சொன்னான்...ஒரு மட்டு மரியாதையே தெரியல உனக்கு.....இப்படியா நயன் தாரான்னு மண்டைல அடிச்ச மாதிரி சொல்றது...சித்தின்னு அழகா சொல்லுடா...சரி சரி உக்காரு...உடனே எழுந்து போய் மாடில உங்கம்மா கிட்ட ஊத வேண்டாம்..இன்னிக்கு கோட்டா அல்ரெடி ஓவர்...நாளைக்குப் பார்த்துக்கலாம்...ஹூம்...சோபால பூனைய வைச்சிண்டு சகுனம் பார்த்தேன் பாரு என்ன சொல்லனும்...
டாட் ...ஷீ இஸ் புல்லியிங் மீ....நான் தானே உங்க கடைசிப் பொண்ணு....ஷீ சேஸ் ஷி இஸ் தெ ஒன்
அவ சொன்னா சொல்லட்டும்...கண்டுக்காத...அதெல்லாம் இருக்கட்டும்...இங்க பாருடா செல்லம்...நான் உன்கிட்ட முன்னாடியே நிறைய தரம் சொல்லி இருக்கேன்...நீ என்னோட ரெண்டாவது பொண்ணுன்னு சொல்லிக்கோ ஆனா நீதான் கடைசிப் பொண்ணா இல்லியான்னு நானும் உங்க அம்மாவும் தான் பேசி ஒரு முடிவெடுக்கனும் ஓ.கேவா...
குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.
நீங்க வாழ்க்கையில எடுத்த ரெண்டாவது கரெக்ட் முடிவு காமிராக்கு பின்னாடி நிக்கனும்ன்னு எடுத்த முடிவு தான்....
என்ன இருந்தாலும் நீ செம ஷார்ப்டி...பயங்கர புத்திசாலி....உன்னளவுக்கு நான் போறாது...
என்னாச்சு இன்னிக்கு உண்மையெல்லாம் பயங்கரமா ஒத்துக்கறீங்க...?
ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...நீ என்ன செலெக்ட் பண்ணின நான் உன்ன செலக்ட் பண்ணினேன்...இப்பவும் சொல்றேன் நீ பயங்கர ஷார்ப்மா...
அன்புள்ள தங்கமணிக்கு...தந்தை மகளுக்கு எழுதிய கடிதம், மகள் தந்தைக்கு எழுதிய கடிதம் வரிசையில் புருஷன் பெண்டாட்டிக்கு எழுதிய கடிதமாக இந்நேரம் இநத பதிவு மூலம் சரித்திரத்தில் இடம் பிடித்திருப்போம் (ஹீ ஹீ) . நம் மணவாழ்க்கையில் அஃபீஷியலாக பத்து வருடம் ஓடியே விட்டது. திரும்பிப் பார்க்கிறேன், ஓரமாய் நின்று பார்க்கிறேன் ஒன்றரைக் கண் விட்டுப் பார்க்கிறேன் என்று போரடிக்காமல் நேர விஷயத்திற்கு வருகிறேன். எத்தனையோ தரம் நீ சொல்லி நான் மறுத்திருந்தாலும்.....தஙகமணியில்லையேல் டுபுக்கில்லை என்று இன்று ஒத்துக்கிறேன். எனது வாழ்வில் நகைச்சுவையை மேம்படுத்தியது நீ தான் என்று ஒத்துக்கொள்கிறேன். எதைச் சொல்வேன் கண்மணி...தெள்ளிய நீரோடையில் வெள்ளியென..என்று ப்ளாக் கிடைத்ததே என்று ஓவராய் ஃபிலிம் காட்டாமல் "காக்க காக்க" ஜோதிகா மாதிரி (நினைப்பில்) நீ நம் வீட்டு கர்டன்களை திறந்துவிட்டு என்னைப் பார்த்து பேசும் டயலாக்கிற்கு அதில் என்றும் ஒரு சிறப்பிடம் என்ற ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
சொந்தக் கவிதை எழுதி டார்ச்சர் பண்ணாமல்...சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, நமக்கு மிகவும் பொருந்தும் சினிமா பாட்டையே போட்டுவிடுகிறேன்
நீ கோபப் பட்டால்...நானும் கோபப்படுவேன்
நீ பார்க்காவிட்டால்...நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால்...நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால்...நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால்...நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்....உயிரை விடுவேன் (சும்மா உல்லாகட்டிக்கு)
நீ கேக்காமல் போனாலும்...கத்தி சொல்லுவேன்...பேபி ஐ...லவ்..யூ (பேபி யாருன்னு கேக்கப்பிடாது சொல்லிட்டேன் ஆமா)
எனக்குத் தெரியும் என்ன தான் வில்லு படத்திலேர்ந்து பாட்டெல்லாம் சுட்டுப் போட்டாலும் நீ சென்டி ஆக மாட்ட....அதே தான் கரெக்ட்...இந்த வாரம் சப்பாத்தி சன்னா மசாலா...அதே தான்...ப்ளீஸ்...சினிமாலேர்ந்து பாட்டெல்லாம் மேற்கோள் காட்டி போட்டிருக்கேன்....ஏதோ பார்த்து செய்யுங்க மேடம்...
Wednesday, April 29, 2009
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.8
இந்த தரம் ஒரு குறும்படம்.
தேர்வு சமயம், தொடர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம்/ கால கட்டம், உறைய வைக்கும் மைனஸ் நான்கு டிகிரி குளிர்...தொடர்ந்து அரைமணி நேரம் வெளியே நின்றால் நடுவில் முடிந்த போது காரிலோ பக்கத்தில் இருக்கும் கடையிலோ வீட்டிலோ போய் ஹீட்டரில் கை கொஞ்சம் குளிர் காய்ந்து ஏகப்பட்ட கமிட்மெண்டுடன் நடித்துக் கொடுத்த மூவருக்கும் மனமார்ந்த நன்றி. அதை விட ஏதோ கத்துக்குட்டி கேட்கிறானே என்று பெருந்தன்மையாய் அவர்களை நடிக்க அனுமதித்த அவர்களது பெற்றோர்களுக்கு கோடானு கோடி நன்றி.
இது மூன்றாவது குறும்படம் தான். இன்னும் கற்றுக்கொள்ளும் மாணவனாய் எடுத்த படம் தான்.எந்த வித பொரஃபஷனல் உபகரணங்களையும் உபயோகப் படுத்தாமல் சாதாரண கேம்கார்டரில் எடுத்த படம் தான். ஏதோ பார்த்து பெரிய மனது பண்ணி உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள், நன்றியுடையவனாய் இருப்பேன். இப்பொழுது வெகு சமீபத்தில் கேமிரா உட்பட பொரபஃஷனல் சமாச்சாரங்கள் வாங்கியுள்ளேன் அதனால் அடுத்த குறும்படத்தில் ஒலி மற்றும் ஒளி இன்னும் கொஞ்சம் தரமாகவே இருக்கும் என்று நம்புகிறேன் (படத்தின் தரம் அல்ல :) ). மற்றபடி அதே படபடப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் உங்கள் பின்னூட்டத்திற்கு காத்திருக்கிறேன்.
தேர்வு சமயம், தொடர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம்/ கால கட்டம், உறைய வைக்கும் மைனஸ் நான்கு டிகிரி குளிர்...தொடர்ந்து அரைமணி நேரம் வெளியே நின்றால் நடுவில் முடிந்த போது காரிலோ பக்கத்தில் இருக்கும் கடையிலோ வீட்டிலோ போய் ஹீட்டரில் கை கொஞ்சம் குளிர் காய்ந்து ஏகப்பட்ட கமிட்மெண்டுடன் நடித்துக் கொடுத்த மூவருக்கும் மனமார்ந்த நன்றி. அதை விட ஏதோ கத்துக்குட்டி கேட்கிறானே என்று பெருந்தன்மையாய் அவர்களை நடிக்க அனுமதித்த அவர்களது பெற்றோர்களுக்கு கோடானு கோடி நன்றி.
இது மூன்றாவது குறும்படம் தான். இன்னும் கற்றுக்கொள்ளும் மாணவனாய் எடுத்த படம் தான்.எந்த வித பொரஃபஷனல் உபகரணங்களையும் உபயோகப் படுத்தாமல் சாதாரண கேம்கார்டரில் எடுத்த படம் தான். ஏதோ பார்த்து பெரிய மனது பண்ணி உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள், நன்றியுடையவனாய் இருப்பேன். இப்பொழுது வெகு சமீபத்தில் கேமிரா உட்பட பொரபஃஷனல் சமாச்சாரங்கள் வாங்கியுள்ளேன் அதனால் அடுத்த குறும்படத்தில் ஒலி மற்றும் ஒளி இன்னும் கொஞ்சம் தரமாகவே இருக்கும் என்று நம்புகிறேன் (படத்தின் தரம் அல்ல :) ). மற்றபடி அதே படபடப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் உங்கள் பின்னூட்டத்திற்கு காத்திருக்கிறேன்.
Monday, April 27, 2009
உதவி - வருத்தங்கள்
போன பதிவில் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி கேட்டிருந்தேன். வந்த பின்னூட்டங்களில் ஸ்ரீதர் நாராயணன் உங்களின் இந்த பதிவே பொறுப்பில்லாமல் இருக்கிறது என்று கூறியிருந்தார். அவரின் அந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். விஷயத்தை விவரமாய் கூறாமல் ஏனோ தனோ என்று போட்டதில் வட தென் துருவங்களுக்கு போய் வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்கு பதில் அவர் ஏதோ அம்மாபட்டிக்கு போய் வந்த மாதிரி ஆகி, டி.வி.யில் அரைமணி நேர கச்சேரி ஸ்லாட்டுக்கு பிச்சையெடுப்பது மாதிரி ஆகிவிட்டது. பத்ரியின் அரைமணி நேர டி.வி. ஸ்லாட் பின்னூட்டம் எனக்கு மிக மிக எள்ளும் தொனியில் பட்டது (and felt very rude and offensive) ஆனால் தவறில் எனக்கும் பங்கு உண்டு. விஷயத்தை இன்னும் விவரமாய் பதிந்திருக்கலாம்.
விஷயத்துக்கு வருவோம். வட துருவத்துக்கோ தென் துருவத்துக்கோ ஏதோ ஒரு துருவத்துக்கு போவதே பெரிய விஷயம். இதைப் பற்றி சில ஹாலிவுட் படங்களே எடுத்திருக்கிறார்கள்.. ஆனால் சரஸ்வதி காமேஸ்வரன் ஏகப்பட்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு இரண்டே இரண்டு பெண்மனிகள் கொண்ட குழுவில் எந்த ஸ்பான்சரும் இல்லாமல் தன் சுயமுயற்சியில் இரண்டு துருவங்களுக்கும் 2007ல் போய் வந்திருக்கிறார். இவர் இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றிருப்பதாக நண்பி பொயட்ரீ கூறுகிறார்.
பத்ரீ மற்றும் ஸ்ரீதர் நாராயணன் கூறிய குறிப்புகள் பதிவுகள் அவர் அப்பொழுதே இங்கே மற்றும் இங்கே லைவாக விவரமாக அன்றாட குறிப்புகளாக படங்களுடன் பதிந்திருக்கிறார்.
இவரின் இந்த இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி தகவல் சரியான முயற்சி இல்லாமல் இந்த பெருமை சரியாக வெளியே வராமல் போய்விட்டது. இப்பொழுது சமீபமாக 2010ல் இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் ஒரு பெண்மணிக்கு "இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் முதல் இந்தியப் பெண்மணி" என்ற தவறான பட்டத்தை ஊடகங்கள் வழங்குவதைப் பார்த்து நண்பி பொயட்ரீ கொதித்துப் போய் எழுந்து உதவ முடியுமா என்று கேட்டு வந்தார். அதுவும் எப்பொழுது.. செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கும் எல்லா ஊடகங்களையும் ஆன மட்டும் தொடர்பு கொண்டு எழுதி பயனில்லாத போது.2010ல் பயணிக்கப்போகும் பெண்ணின் குழு அமைப்பாளருடன் பேசியும் பயனில்லை. எல்லாமே (Daily India, ANI International and Felicity Aston) கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.
ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிடுகிறேன் - முன்னால் அவர் எனது ப்ளாகில் பின்னூட்டம் இட்டிருந்தாலும் நண்பி பொயட்ரீயை எனக்கு இந்த விஷயத்தின் போது தான் அறிமுகம் கிடைத்தது. நம்மூர் பெண்மணியின் பெருமையை யாருக்கோ வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆன மட்டும் முட்டிப் பார்த்துவிட்டேன் இப்பொழுது வலைப்பதிவுகள் மூலமாகவாவது செய்தியைப் பரப்பி உதவி கிடைக்குமா என்று கேட்ட போது உடனே பதியவேண்டும் என்று தோன்றியது.
நான் பதிவில் போட்டதை மற்றவர் உல்டா பண்ணிப் போட்டாலே கோவம் வருகிறது, பதிப்புலகில் இதுவே பெரிய சர்ச்சையாகுகிறது...ஆனால் ஒருவர் 2007ல் "முதல் இந்தியப் பெண்மணி" என்ற பெற்ற சாதனையை இப்பொழுது மறுக்கப்படும் பொழுது கொதிக்கவே செய்கிறது. இவரின் இந்த சாதனை முதலில் இமயத்தை தொட்ட இந்தியப் பெண்மணி, முதலில் விண்வெளிக்குப் போன இந்தியப் பெண்மணி என்ற வரிசையில் தான் நான் பார்க்கிறேன். இதுவே இதே இடத்தில் கல்பனா சாவ்லாவாக இருந்த்திருந்தால் உதவி புரிந்திருக்க மாட்டோமா? "ப்ளாக்ல போடு சந்தோஷப் படு அதுவே பெரிய சாதனை தான் ....ஐய்யோ வரலையேன்னு புலம்பக் கூடதூன்"னு பின்னூட்டம் போட்டிருப்போமா? அதுவும் பதிப்புலகில் இருக்கும் பத்ரி மாதிரியான ஆட்கள் இதைச் சொல்வது மிக மிக வருத்தமாய் இருக்கிறது. கல்பனா சாவ்லா மாதிரி சாதனையில் இது எந்த விதத்தில் குறைந்து விட்டது? உங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவயில்லை...டி.வியில் அரைமணி நேர ஸ்லாட் என்றெல்லாம் அடுத்தவரின் சாதனையை ரொம்பவே கேவலப் படுத்தாதிர்கள்.
என் போன்ற ப்ளாகில் செய்தி வருகிறது என்பதால் அவரின் சாதனை எந்த விதத்திலும் குறைந்ததில்லை
விஷயத்துக்கு வருவோம். வட துருவத்துக்கோ தென் துருவத்துக்கோ ஏதோ ஒரு துருவத்துக்கு போவதே பெரிய விஷயம். இதைப் பற்றி சில ஹாலிவுட் படங்களே எடுத்திருக்கிறார்கள்.. ஆனால் சரஸ்வதி காமேஸ்வரன் ஏகப்பட்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு இரண்டே இரண்டு பெண்மனிகள் கொண்ட குழுவில் எந்த ஸ்பான்சரும் இல்லாமல் தன் சுயமுயற்சியில் இரண்டு துருவங்களுக்கும் 2007ல் போய் வந்திருக்கிறார். இவர் இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றிருப்பதாக நண்பி பொயட்ரீ கூறுகிறார்.
பத்ரீ மற்றும் ஸ்ரீதர் நாராயணன் கூறிய குறிப்புகள் பதிவுகள் அவர் அப்பொழுதே இங்கே மற்றும் இங்கே லைவாக விவரமாக அன்றாட குறிப்புகளாக படங்களுடன் பதிந்திருக்கிறார்.
இவரின் இந்த இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி தகவல் சரியான முயற்சி இல்லாமல் இந்த பெருமை சரியாக வெளியே வராமல் போய்விட்டது. இப்பொழுது சமீபமாக 2010ல் இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் ஒரு பெண்மணிக்கு "இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் முதல் இந்தியப் பெண்மணி" என்ற தவறான பட்டத்தை ஊடகங்கள் வழங்குவதைப் பார்த்து நண்பி பொயட்ரீ கொதித்துப் போய் எழுந்து உதவ முடியுமா என்று கேட்டு வந்தார். அதுவும் எப்பொழுது.. செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கும் எல்லா ஊடகங்களையும் ஆன மட்டும் தொடர்பு கொண்டு எழுதி பயனில்லாத போது.2010ல் பயணிக்கப்போகும் பெண்ணின் குழு அமைப்பாளருடன் பேசியும் பயனில்லை. எல்லாமே (Daily India, ANI International and Felicity Aston) கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.
ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிடுகிறேன் - முன்னால் அவர் எனது ப்ளாகில் பின்னூட்டம் இட்டிருந்தாலும் நண்பி பொயட்ரீயை எனக்கு இந்த விஷயத்தின் போது தான் அறிமுகம் கிடைத்தது. நம்மூர் பெண்மணியின் பெருமையை யாருக்கோ வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆன மட்டும் முட்டிப் பார்த்துவிட்டேன் இப்பொழுது வலைப்பதிவுகள் மூலமாகவாவது செய்தியைப் பரப்பி உதவி கிடைக்குமா என்று கேட்ட போது உடனே பதியவேண்டும் என்று தோன்றியது.
நான் பதிவில் போட்டதை மற்றவர் உல்டா பண்ணிப் போட்டாலே கோவம் வருகிறது, பதிப்புலகில் இதுவே பெரிய சர்ச்சையாகுகிறது...ஆனால் ஒருவர் 2007ல் "முதல் இந்தியப் பெண்மணி" என்ற பெற்ற சாதனையை இப்பொழுது மறுக்கப்படும் பொழுது கொதிக்கவே செய்கிறது. இவரின் இந்த சாதனை முதலில் இமயத்தை தொட்ட இந்தியப் பெண்மணி, முதலில் விண்வெளிக்குப் போன இந்தியப் பெண்மணி என்ற வரிசையில் தான் நான் பார்க்கிறேன். இதுவே இதே இடத்தில் கல்பனா சாவ்லாவாக இருந்த்திருந்தால் உதவி புரிந்திருக்க மாட்டோமா? "ப்ளாக்ல போடு சந்தோஷப் படு அதுவே பெரிய சாதனை தான் ....ஐய்யோ வரலையேன்னு புலம்பக் கூடதூன்"னு பின்னூட்டம் போட்டிருப்போமா? அதுவும் பதிப்புலகில் இருக்கும் பத்ரி மாதிரியான ஆட்கள் இதைச் சொல்வது மிக மிக வருத்தமாய் இருக்கிறது. கல்பனா சாவ்லா மாதிரி சாதனையில் இது எந்த விதத்தில் குறைந்து விட்டது? உங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவயில்லை...டி.வியில் அரைமணி நேர ஸ்லாட் என்றெல்லாம் அடுத்தவரின் சாதனையை ரொம்பவே கேவலப் படுத்தாதிர்கள்.
என் போன்ற ப்ளாகில் செய்தி வருகிறது என்பதால் அவரின் சாதனை எந்த விதத்திலும் குறைந்ததில்லை
Sunday, April 26, 2009
உதவி
எப்படி இருக்கீங்க. நம் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி தேவை. அவர்களின் நண்பி சரஸ்வதி காமேஸ்வரன் மிகுந்த முயற்சிக்கு பிறகு வட மற்றும் தென் துருவங்களுக்கு 2007ல் பயணித்திருக்கிறார். இரண்டு துருவங்களுக்கும் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றும் இவருக்கு சரியான மீடியா அறிமுகம் கிடைக்கவில்லை. அவர்கள் முயன்று பார்த்தும் இந்த செய்தி சரி வர ஊடக வாயிலாக வெளியே வரவேயில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் சமீபத்தில் 2010ல் ஒரு பெண்மணி இதே இரண்டு துருவங்களுக்கும் போகிறார் என்றும் அவரே இந்தியாவின் முதல் பெண்ணாக இருப்பார் என்றும் செய்திகள் வெளி வரத் துவங்கி இருக்கின்றன. நம் வலையுல நண்பர்கள் யாரேனும் பத்திரிகை துறையில் இருந்தாலோ அல்லலது அவர்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலோ, இந்த செய்தி(உண்மை) வெளி வர உதவ முடியுமென்றால் தயவு செய்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன் ப்ளீஸ்....மிக்க நன்றி.
Sunday, March 29, 2009
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.7
முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6
"இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று" கண்ணதாசன் எழுதிய பாடலை நம்பி வாழ்க்கையில் நிறைய இடத்தில் முயற்சியே பண்ணாமல் கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் தேவன் சில இன்னார்களுக்கு மட்டும் வகை தொகையே இல்லாமல் எக்கச்சக்கமாய் எழுதிவைத்துவிடுகிறார். இந்த மாதிரி இன்னார்களை பார்க்கும் போது நாபிக் கமலத்திலிருந்து கப்புன்னு புகை மாதிரி ஒன்று எக்கச்சக்கதிற்கு கிளம்பும். அவனை முதல் முறை பார்த்ததே நாலைந்து பெண்கள் சுத்தி சூழத் தான். சுத்தியிருந்த யுவதிகள் கொள்ளை அழகு. எல்லாரும் மிஸ் யுனிவேர்ஸ் போட்டி நடக்கும் இடத்துக்கு வழி கேட்டுக்கொண்டிருந்த மாதிரி தான் இருந்தது. "இங்கே சகலவிதமான இடங்களுக்கும் வழி சொல்லப்படும்"ன்னு கழுத்தில் போர்டு மாட்டிக் கொள்ளத்தூண்டும் அழகு.
"எப்படீங்க இதெல்லாம்...அடுக்குமா அப்புறம் நாங்களெல்லாம் எங்க போறதாம்...?"
"....?"
"இல்ல...நீங்க ரெண்டு பேருக்கு வழி சொல்லிட்டு மிச்ச பேரெல்லாம் அங்க போய் வழி கேட்டுக்கோங்கன்னு இங்க எங்க பக்கம் கொஞ்சம் அனுப்பி இருக்கலாம்ல"
பெருமிதமும் வெட்கமும் கலந்து சிரித்தான். கபால்லுன்னு உடனே அவனை தோஸ்தாக்கிக் கொண்டேன். இந்த இந்தி படத்தில் அண்ணாக்கு கல்யாணம் ஆகும், அப்படியே அண்ணியோட குடும்பத்திலிருந்து தம்பிக்கு ஒன்னு செட் ஆகும்...உடனே ப்யார்...சிந்தகி...சப்னே. என்னைச் சொல்லி குற்றமில்லை ஹிந்தி படம் இந்த பச்சைமண்ணை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருந்தது. ஆனால் இதற்க்கெல்லாம் மேலே நேரம் என்று ஒன்று இருக்கிறதே. என்ன தான் தாடியெல்லாம் வைத்திருந்தாலும் ஆட்டுக்கு வால் அரை கிலோமீட்டரா வைத்திருக்கிறார் கடவுள்?
சில பெண்களுக்கு கண்ணே தெரியாது....என்னடா இங்க ஒருத்தன் வழி சொல்றதுக்குன்னே ராப்பகலா படிச்சிட்டு வந்து நிக்கிறானேன்னு ஒரு இங்கிதமே இருக்காது, நேரே போய் நம்ம இன்னாரிடம் போய் நிற்பார்கள். இன்னாரும் "நேரா போய் பீச்சாங்கைப் பக்கம் திரும்பு"ன்னு வழியைச் சொல்லாமல் தார் யாரு கண்டுபிடிச்சா, ரோடு யாரு போட்டான்னு பாடமெடுத்துக் கொண்டிருப்பான். "என்னாது கஜினியை ஹிந்தில எடுக்கப் போறாங்களா"ன்னு நைஸா ஜனரஞ்சகமாக ஜோதியில் ஐக்கியமாகப் பார்த்தாலும் நடக்காது. அந்தப் யுவதிகளுக்கு நம்மள மாதிரி ஹிந்தி பெர்சனாலிட்டியையெல்லாம் பிடிக்காது நடையைக் கட்டிவிடும். என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன். இன்னாரும் எனக்கு ஆறுதல் சொல்லுவது மாதிரி சிரித்துக்கொண்டே அந்தப்பக்கம் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருப்பான்.
கன்னுக்குட்டி கணேசனிடம் கன்சல்டேஷன் பண்ணியதில்...இதற்கெல்லாம் சபையில் சொல்ல முடியாத ஒரு இடத்தில் மச்சம் இருக்கவேண்டும் என்று வாத்ஸ்யாயணர் சொல்லி இருப்பதாக தகவல் சொன்னான். அத்தோடு அவனையும் இந்தி பெர்ச்னாலிட்டியில் சேர்த்துக் கொண்டு "இதுக்கெல்லாம் கவலப்படாதடா மச்சி...நம்மள மாதிரி இந்தி பெர்சனாலிட்டிக்கெல்லாம் மெட்ராஸுல தான் மவுஸ் ஜாஸ்தி" என்றும், கிண்டியில் ஊரிலிருந்து வரும் பஸ் நிற்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே எங்கள் வரவை ஆவலோடு யுவதிகள் எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் உபரி தகவலும் குடுத்தான். சரி நம்பளுக்கான இன்னாரை மெட்ராஸுல எழுதிவைச்சிருக்கான் போல இருக்குன்னு ரொம்பவே ஆறுதலாக இருந்தது. மீசை ரொம்ப வளராவிட்டால் தெருவில் எல்லாரும் கன்வேர்ட்டேர்ட் ஹிந்தி பெர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள். எனக்கு வளர் சிதை மாற்றத்தின்(அடலெசன்ஸ்) ஆரம்பத்தில் அரும்பு மீசைக்கு முந்தய ஸ்டேஜில் இருந்தது.
ஆனால் இன்னார் கொஞ்சம் பர்சனாலிட்டியாய் கலராய் இருப்பான். அரும்பு மீசையும் அழகாய் இருக்கும். அதனாலேயே இன்னார் பக்கத்தில் இருந்தால் யுவதிகள் கூட்டம் நம்ம பக்கம் திரும்பி கூட பார்க்காது. இருந்தாலும் இன்னாரிடம் வழிகேட்டு விட்டு என்னிடம் இன்னார் சொன்ன வழி கரெக்ட்டு தானா என்று பேருக்கு சும்மா கன்பார்மாவது பண்ணிக் கொள்ளக்கூடாதா என்று நிறைய ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆதங்கம் சில சமயம் சமுதாயத்தின் மீது வெறுப்பாய் மாறி பேசாமல் வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு நெற்றியில் குங்கமத்தை கொழப்பி வெற்றித் திலகமிட்டுக் கொண்டு ஓம் கேசட்டை டேப்ரெக்கார்டரில் பிஜிம்யில் போட்டு விட்டு வெள்ளைக்காரர்களுக்கு குல சாமியாராய் போய்விடலாமா என்று தோன்றும். ஓம் கேஸட் வாங்க போதுமான பைனான்ஸ் இல்லாமல் வெள்ளைக்காரர்களுக்கு குலசாமியாய் போகும் முடிவுக்கு நிறைய தடவை (வெள்ளைக்காரர்களுக்கு) காலம் கனியட்டும் என்று ஒத்திவைப்பு தீர்மாணம் நடத்தியிருக்கிறேன்.
அப்புறம் காலம் கனிந்து "அட கிறுக்குப் பயலே உனக்கு இன்னார் கிண்டியில இல்லைடா இங்கயே பக்கத்திலயே அடுத்த ஊரில் இருக்கார்டா"ன்னு கடவுள் கனவில் வந்து சொன்னதுக்கப்புறம் ஓம் சாமியார் ஐடியாவை மூட்டைக் கட்டிவிட்டு...யுவதிகளுக்கு வழி சொல்வதெல்லாம் தூ....ஒரு பொழைப்பா...போங்கடா போங்கடா போய் புள்ளைக் குட்டிய படிக்க வைக்கிற வழியப் பாருங்கடான்னு பரம்பரை நல்லவனாய் மாறி..ஏறி உட்கார்ந்து மிதித்தால் ஒரு அட்ரெஸுக்கு தானாகவே போகிற மாதிரி சைக்கிளை ஆட்டோ ப்ரொக்ராம் செய்து விட்டேன்.
அப்புறம் காலம் போன போக்கில் வழி சொல்லிக் கொண்டிருந்த இன்னார் வெளியூருக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போய் இந்தியில் வழி சொல்லிக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன். அனேகமாய் இப்போது அவனுக்கும் கல்யாணமாகி செட்டிலாகியிருப்பான். ஊருக்கே வழி சொன்ன அவனுக்கு ஒரு வழி அமையாமலா இருந்திருக்கும். இருந்தாலும் எந்த ஊரில் வழி அமைந்து எந்த இன்னாரோன்னு என்று இன்னாரைப் பற்றி நியாபகம் வரும்போதெல்லாம் ஆர்வமாய் இருக்கும்.
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6
"இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று" கண்ணதாசன் எழுதிய பாடலை நம்பி வாழ்க்கையில் நிறைய இடத்தில் முயற்சியே பண்ணாமல் கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் தேவன் சில இன்னார்களுக்கு மட்டும் வகை தொகையே இல்லாமல் எக்கச்சக்கமாய் எழுதிவைத்துவிடுகிறார். இந்த மாதிரி இன்னார்களை பார்க்கும் போது நாபிக் கமலத்திலிருந்து கப்புன்னு புகை மாதிரி ஒன்று எக்கச்சக்கதிற்கு கிளம்பும். அவனை முதல் முறை பார்த்ததே நாலைந்து பெண்கள் சுத்தி சூழத் தான். சுத்தியிருந்த யுவதிகள் கொள்ளை அழகு. எல்லாரும் மிஸ் யுனிவேர்ஸ் போட்டி நடக்கும் இடத்துக்கு வழி கேட்டுக்கொண்டிருந்த மாதிரி தான் இருந்தது. "இங்கே சகலவிதமான இடங்களுக்கும் வழி சொல்லப்படும்"ன்னு கழுத்தில் போர்டு மாட்டிக் கொள்ளத்தூண்டும் அழகு.
"எப்படீங்க இதெல்லாம்...அடுக்குமா அப்புறம் நாங்களெல்லாம் எங்க போறதாம்...?"
"....?"
"இல்ல...நீங்க ரெண்டு பேருக்கு வழி சொல்லிட்டு மிச்ச பேரெல்லாம் அங்க போய் வழி கேட்டுக்கோங்கன்னு இங்க எங்க பக்கம் கொஞ்சம் அனுப்பி இருக்கலாம்ல"
பெருமிதமும் வெட்கமும் கலந்து சிரித்தான். கபால்லுன்னு உடனே அவனை தோஸ்தாக்கிக் கொண்டேன். இந்த இந்தி படத்தில் அண்ணாக்கு கல்யாணம் ஆகும், அப்படியே அண்ணியோட குடும்பத்திலிருந்து தம்பிக்கு ஒன்னு செட் ஆகும்...உடனே ப்யார்...சிந்தகி...சப்னே. என்னைச் சொல்லி குற்றமில்லை ஹிந்தி படம் இந்த பச்சைமண்ணை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருந்தது. ஆனால் இதற்க்கெல்லாம் மேலே நேரம் என்று ஒன்று இருக்கிறதே. என்ன தான் தாடியெல்லாம் வைத்திருந்தாலும் ஆட்டுக்கு வால் அரை கிலோமீட்டரா வைத்திருக்கிறார் கடவுள்?
சில பெண்களுக்கு கண்ணே தெரியாது....என்னடா இங்க ஒருத்தன் வழி சொல்றதுக்குன்னே ராப்பகலா படிச்சிட்டு வந்து நிக்கிறானேன்னு ஒரு இங்கிதமே இருக்காது, நேரே போய் நம்ம இன்னாரிடம் போய் நிற்பார்கள். இன்னாரும் "நேரா போய் பீச்சாங்கைப் பக்கம் திரும்பு"ன்னு வழியைச் சொல்லாமல் தார் யாரு கண்டுபிடிச்சா, ரோடு யாரு போட்டான்னு பாடமெடுத்துக் கொண்டிருப்பான். "என்னாது கஜினியை ஹிந்தில எடுக்கப் போறாங்களா"ன்னு நைஸா ஜனரஞ்சகமாக ஜோதியில் ஐக்கியமாகப் பார்த்தாலும் நடக்காது. அந்தப் யுவதிகளுக்கு நம்மள மாதிரி ஹிந்தி பெர்சனாலிட்டியையெல்லாம் பிடிக்காது நடையைக் கட்டிவிடும். என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன். இன்னாரும் எனக்கு ஆறுதல் சொல்லுவது மாதிரி சிரித்துக்கொண்டே அந்தப்பக்கம் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருப்பான்.
கன்னுக்குட்டி கணேசனிடம் கன்சல்டேஷன் பண்ணியதில்...இதற்கெல்லாம் சபையில் சொல்ல முடியாத ஒரு இடத்தில் மச்சம் இருக்கவேண்டும் என்று வாத்ஸ்யாயணர் சொல்லி இருப்பதாக தகவல் சொன்னான். அத்தோடு அவனையும் இந்தி பெர்ச்னாலிட்டியில் சேர்த்துக் கொண்டு "இதுக்கெல்லாம் கவலப்படாதடா மச்சி...நம்மள மாதிரி இந்தி பெர்சனாலிட்டிக்கெல்லாம் மெட்ராஸுல தான் மவுஸ் ஜாஸ்தி" என்றும், கிண்டியில் ஊரிலிருந்து வரும் பஸ் நிற்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே எங்கள் வரவை ஆவலோடு யுவதிகள் எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் உபரி தகவலும் குடுத்தான். சரி நம்பளுக்கான இன்னாரை மெட்ராஸுல எழுதிவைச்சிருக்கான் போல இருக்குன்னு ரொம்பவே ஆறுதலாக இருந்தது. மீசை ரொம்ப வளராவிட்டால் தெருவில் எல்லாரும் கன்வேர்ட்டேர்ட் ஹிந்தி பெர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள். எனக்கு வளர் சிதை மாற்றத்தின்(அடலெசன்ஸ்) ஆரம்பத்தில் அரும்பு மீசைக்கு முந்தய ஸ்டேஜில் இருந்தது.
ஆனால் இன்னார் கொஞ்சம் பர்சனாலிட்டியாய் கலராய் இருப்பான். அரும்பு மீசையும் அழகாய் இருக்கும். அதனாலேயே இன்னார் பக்கத்தில் இருந்தால் யுவதிகள் கூட்டம் நம்ம பக்கம் திரும்பி கூட பார்க்காது. இருந்தாலும் இன்னாரிடம் வழிகேட்டு விட்டு என்னிடம் இன்னார் சொன்ன வழி கரெக்ட்டு தானா என்று பேருக்கு சும்மா கன்பார்மாவது பண்ணிக் கொள்ளக்கூடாதா என்று நிறைய ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆதங்கம் சில சமயம் சமுதாயத்தின் மீது வெறுப்பாய் மாறி பேசாமல் வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு நெற்றியில் குங்கமத்தை கொழப்பி வெற்றித் திலகமிட்டுக் கொண்டு ஓம் கேசட்டை டேப்ரெக்கார்டரில் பிஜிம்யில் போட்டு விட்டு வெள்ளைக்காரர்களுக்கு குல சாமியாராய் போய்விடலாமா என்று தோன்றும். ஓம் கேஸட் வாங்க போதுமான பைனான்ஸ் இல்லாமல் வெள்ளைக்காரர்களுக்கு குலசாமியாய் போகும் முடிவுக்கு நிறைய தடவை (வெள்ளைக்காரர்களுக்கு) காலம் கனியட்டும் என்று ஒத்திவைப்பு தீர்மாணம் நடத்தியிருக்கிறேன்.
அப்புறம் காலம் கனிந்து "அட கிறுக்குப் பயலே உனக்கு இன்னார் கிண்டியில இல்லைடா இங்கயே பக்கத்திலயே அடுத்த ஊரில் இருக்கார்டா"ன்னு கடவுள் கனவில் வந்து சொன்னதுக்கப்புறம் ஓம் சாமியார் ஐடியாவை மூட்டைக் கட்டிவிட்டு...யுவதிகளுக்கு வழி சொல்வதெல்லாம் தூ....ஒரு பொழைப்பா...போங்கடா போங்கடா போய் புள்ளைக் குட்டிய படிக்க வைக்கிற வழியப் பாருங்கடான்னு பரம்பரை நல்லவனாய் மாறி..ஏறி உட்கார்ந்து மிதித்தால் ஒரு அட்ரெஸுக்கு தானாகவே போகிற மாதிரி சைக்கிளை ஆட்டோ ப்ரொக்ராம் செய்து விட்டேன்.
அப்புறம் காலம் போன போக்கில் வழி சொல்லிக் கொண்டிருந்த இன்னார் வெளியூருக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போய் இந்தியில் வழி சொல்லிக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன். அனேகமாய் இப்போது அவனுக்கும் கல்யாணமாகி செட்டிலாகியிருப்பான். ஊருக்கே வழி சொன்ன அவனுக்கு ஒரு வழி அமையாமலா இருந்திருக்கும். இருந்தாலும் எந்த ஊரில் வழி அமைந்து எந்த இன்னாரோன்னு என்று இன்னாரைப் பற்றி நியாபகம் வரும்போதெல்லாம் ஆர்வமாய் இருக்கும்.
Monday, March 09, 2009
ஹாலிடே - குறும்படம்
ரொம்ப நாளாய் ஃபிலிம் காட்டிக்கொண்டிருந்த இரண்டாவது குறும்படம் ஹாலிடே உங்கள் பார்வைக்கு. முதல் குறும்படதின் அதே உதறலுடன் உங்கள் கிழிச்சுலு தொங்கப்போடலுவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்ச நாளாய் லண்டன் ஃபிலிம் அக்காடமியில் பாடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகும், எடிட்டிங்கின் போதும் இந்த படதில் சில குறைகள் தெரிகின்றன. ஆனால் இந்தப் படத்தின் இடம் பொருள் ஏவல் வைத்துப் பார்க்கும் போது மனதுக்கு நிறைவாகவே இருக்கிறது. இதையே வேறு முறையில் சொல்லலாம் என்று இப்போது தோன்றினாலும் அதையெல்லம் பின்னொரு நாளுக்கு பின் தள்ளி இப்போது உங்கள் பார்வைக்கு. ஆனால் அதற்கு முன்
இடம்
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தாலாவது ஏதாவது லாஜிக் இருக்கும், ஆனால் கமர்கட்டு வாங்கப்போய் கழுதை வாங்கி வந்தால்? வாழ்த்து சொல்லப் போன இடத்தில் மண்டபம் பிடித்து அங்கேயே உடனேயே கல்யாணம் செய்துகொண்ட கதையாய் ஹாலிடேக்கு போன இடத்தில் மனதுக்குப் பிடித்துப் போய் குறும்படம்.
பொருள்
கதை திரைக் கதை எல்லாம் ரூம் போட்டு யோசிக்க டைம் இல்லாமல் டாய்லெட்டில் கூட பத்து நிமிஷம் தியானம் செய்து மிச்சத்தை களத்திலேயே மானே தேனே பொன்மானே போட்டு எடுத்தது. கையில் ஒரு டப்பா கேமிராவும் 60 வாட்ஸ் பல்பும் போடறதுக்கு ஒரு ப்ளாகும் இருந்தா மனசுல பெரிய டைரடக்கர்ன்னு நினைப்பான்னு திட்டாதீர்கள் நிறைய எனக்கு நானே கேட்டாகிவிட்டது.
ஏவல்
பள்ளிக்கூடத்துல ஆபிஸுலன்னு எவ்வளவு நடிச்சிருப்போம் எல்லாம் அத மாதிரி தான்..நீங்க சும்ம போட்டோக்கு போஸ் குடுக்கிற மாதிரி நின்னா போதும் மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்னு அரி அரின்னு அரிச்சதில் இவன் கொசுக்கடி தாங்கலைடான்னு நடிக்க ஒத்துக்கொண்ட இரண்டு புண்யாத்மாக்களுக்கு கோடானு கோடி நன்றி. இவர்கள் ப்ரொபஷனல் நடிகர்கள் இல்லையென்றாலும் வந்த இடத்தில் உடம்புக்கு முடியாத போதும் நான் என்னமோ கோடியைக் கொட்டி எடுக்கிற மாதிரி சின்சியராய் முடித்துகுடுத்ததிற்க்கு ஸ்பெஷல் நன்றி.
சரி சரி இதுக்கு மேலே அப்புறம் நீங்க தம்மடிக்க போய்விடுவீர்கள் என்பதால் இத்தோடு முடிச்சிக்கிறேன்...பார்த்துட்டு என்ன பழிவாங்குறத வாங்குங்க ....ஐ ஆம் தி வெயிட்டிங் :)
யூ டியூப் வழக்கம் போல் படத்தின் தரத்தை குறைத்துள்ளது. புல் ஸ்க்ரீனில் பெரிதுபடுத்திப் பார்த்தால் பிக்சல்கள் பிசிறடிக்கின்றன.
யூ டியூப் சைட்டில் நேராக பார்ப்பதற்க்கு - http://www.youtube.com/watch?v=7cl_soBE8IM
இடம்
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தாலாவது ஏதாவது லாஜிக் இருக்கும், ஆனால் கமர்கட்டு வாங்கப்போய் கழுதை வாங்கி வந்தால்? வாழ்த்து சொல்லப் போன இடத்தில் மண்டபம் பிடித்து அங்கேயே உடனேயே கல்யாணம் செய்துகொண்ட கதையாய் ஹாலிடேக்கு போன இடத்தில் மனதுக்குப் பிடித்துப் போய் குறும்படம்.
பொருள்
கதை திரைக் கதை எல்லாம் ரூம் போட்டு யோசிக்க டைம் இல்லாமல் டாய்லெட்டில் கூட பத்து நிமிஷம் தியானம் செய்து மிச்சத்தை களத்திலேயே மானே தேனே பொன்மானே போட்டு எடுத்தது. கையில் ஒரு டப்பா கேமிராவும் 60 வாட்ஸ் பல்பும் போடறதுக்கு ஒரு ப்ளாகும் இருந்தா மனசுல பெரிய டைரடக்கர்ன்னு நினைப்பான்னு திட்டாதீர்கள் நிறைய எனக்கு நானே கேட்டாகிவிட்டது.
ஏவல்
பள்ளிக்கூடத்துல ஆபிஸுலன்னு எவ்வளவு நடிச்சிருப்போம் எல்லாம் அத மாதிரி தான்..நீங்க சும்ம போட்டோக்கு போஸ் குடுக்கிற மாதிரி நின்னா போதும் மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்னு அரி அரின்னு அரிச்சதில் இவன் கொசுக்கடி தாங்கலைடான்னு நடிக்க ஒத்துக்கொண்ட இரண்டு புண்யாத்மாக்களுக்கு கோடானு கோடி நன்றி. இவர்கள் ப்ரொபஷனல் நடிகர்கள் இல்லையென்றாலும் வந்த இடத்தில் உடம்புக்கு முடியாத போதும் நான் என்னமோ கோடியைக் கொட்டி எடுக்கிற மாதிரி சின்சியராய் முடித்துகுடுத்ததிற்க்கு ஸ்பெஷல் நன்றி.
சரி சரி இதுக்கு மேலே அப்புறம் நீங்க தம்மடிக்க போய்விடுவீர்கள் என்பதால் இத்தோடு முடிச்சிக்கிறேன்...பார்த்துட்டு என்ன பழிவாங்குறத வாங்குங்க ....ஐ ஆம் தி வெயிட்டிங் :)
யூ டியூப் வழக்கம் போல் படத்தின் தரத்தை குறைத்துள்ளது. புல் ஸ்க்ரீனில் பெரிதுபடுத்திப் பார்த்தால் பிக்சல்கள் பிசிறடிக்கின்றன.
யூ டியூப் சைட்டில் நேராக பார்ப்பதற்க்கு - http://www.youtube.com/watch?v=7cl_soBE8IM
Tuesday, March 03, 2009
தமிழ்மண விருது - நன்றி
குழப்பங்கள் அதிகமாகும், மன உளைச்சல் தீவிரமாக இருக்கும். பணம் விரயமாவதை தவிர்த்தல் நல்லது. அடுத்த வீட்டுக்காரர் குட்மார்னிங் சொல்ல மாட்டார். வீட்டு ஆட்டுக்குட்டிக்கு சுகப்பிரசவம் ஆகும் என்று வரும் பேப்பர் ஜோசியம் மாதிரி கொஞ்சம் நிஜமாகவே குழப்பம் இருக்கிறது. கவனம் வேறு இப்போது வேறு பக்கத்தில் இருக்கிறது. அதனால் தான் இங்கே கொஞ்ச நாளாக எழுதவே இல்லை. இங்கே கூடுதலாக கொஞ்சம் லீவு போடலாம் என்று வேறு எண்ணம். இந்த சமயத்தில் தமிழ்மணம் விருதுகள் ரொம்பவே ஆறுதலாக இருக்கிறது.
வழக்கமாக போட்டி வெச்சிருக்காங்க ஐய்யா போய் வோட்டு போடுங்கன்னு சொல்லுவேன்...நீங்களும் உங்களுக்கில்லாமயான்னு போய் வோட்டு போடாம கரெக்ட்டா கவுதிருவீங்க. ஆனா இந்த தரம் என்னம்மோ சொல்லாமலே உங்கள ஏமாத்திட்டேன். பார்த்தா குறும்படத்துக்கு பர்ஸ்ட் ப்ரைசும், நகைச்சுவை பிரிவில் மூனாவது இடமும் கிடைச்சிருக்கு. எனக்கே ஆச்சரியம் தாங்க முடியலை...பெரிய மனசு பண்ணி வோட்டு போட்டு செயிக்க வெச்ச அத்தனை சனத்துக்கும் கோடானு கோடி நன்றியைய்யா...!!!!!
எனக்கு இங்க எழுதாம முடியாது. இங்கே டெய்லி நிறைய பேர் வந்து பார்த்து ஏமாந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் ஸ்டட் கவுண்டர் சொல்லுது. உங்களை ஏமாற்றுவதற்கு ரொம்ப வருந்துகிறேன். ஆனால் ஏனோ தானோன்னு எழுதி கடுப்பேற்றுவதை விட இது எவ்வளவோ தேவலாம் என்று தோன்றுகிறது. நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு ஸ்டேட்மென்ட் விடுவது மாதிரி தோன்றலாம் எனக்கும் தெரியும் ஆனாலும் இங்கே வந்து போய்க்கொண்டிருப்பவர்களுக்காக நீங்கள் அப்படி நினைத்தாலும் இதைச் சொல்லிக்கொள்கிறேன்.
அடுத்த வாரத்திலிருந்து கண்டிப்பாக முடிந்தாலும் முடியாவிட்டாலும் எழுதுகிறேன். மார்ச் 9ம் தேதிக்கு முன்னால் அடுத்த பதிவு கண்டிப்பாக இருக்கும்.
தமிழ்மண விருதுகளில் தேர்ந்தெடுத்ததிற்க்கு மனமார்ந்த நன்றி.
வழக்கமாக போட்டி வெச்சிருக்காங்க ஐய்யா போய் வோட்டு போடுங்கன்னு சொல்லுவேன்...நீங்களும் உங்களுக்கில்லாமயான்னு போய் வோட்டு போடாம கரெக்ட்டா கவுதிருவீங்க. ஆனா இந்த தரம் என்னம்மோ சொல்லாமலே உங்கள ஏமாத்திட்டேன். பார்த்தா குறும்படத்துக்கு பர்ஸ்ட் ப்ரைசும், நகைச்சுவை பிரிவில் மூனாவது இடமும் கிடைச்சிருக்கு. எனக்கே ஆச்சரியம் தாங்க முடியலை...பெரிய மனசு பண்ணி வோட்டு போட்டு செயிக்க வெச்ச அத்தனை சனத்துக்கும் கோடானு கோடி நன்றியைய்யா...!!!!!
எனக்கு இங்க எழுதாம முடியாது. இங்கே டெய்லி நிறைய பேர் வந்து பார்த்து ஏமாந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் ஸ்டட் கவுண்டர் சொல்லுது. உங்களை ஏமாற்றுவதற்கு ரொம்ப வருந்துகிறேன். ஆனால் ஏனோ தானோன்னு எழுதி கடுப்பேற்றுவதை விட இது எவ்வளவோ தேவலாம் என்று தோன்றுகிறது. நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு ஸ்டேட்மென்ட் விடுவது மாதிரி தோன்றலாம் எனக்கும் தெரியும் ஆனாலும் இங்கே வந்து போய்க்கொண்டிருப்பவர்களுக்காக நீங்கள் அப்படி நினைத்தாலும் இதைச் சொல்லிக்கொள்கிறேன்.
அடுத்த வாரத்திலிருந்து கண்டிப்பாக முடிந்தாலும் முடியாவிட்டாலும் எழுதுகிறேன். மார்ச் 9ம் தேதிக்கு முன்னால் அடுத்த பதிவு கண்டிப்பாக இருக்கும்.
தமிழ்மண விருதுகளில் தேர்ந்தெடுத்ததிற்க்கு மனமார்ந்த நன்றி.
Saturday, January 24, 2009
உள்ளேன் ஐய்யா
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்ன்னு சொன்னா "எந்த வருஷத்துக்கு..?"ன்னு கோச்சிப்பீங்கன்னா அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸா வைச்சிக்கோங்க. பொங்கல்லாம் சிறப்பா கொண்டாடியிரு...சரி வேணாம்...ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா...? வெக்கமாயில்ல....வேலை மெனெக்கெட்டு இங்க வந்து வாழ்த்து சொன்னா ஒரு மரியாதைக்கு திரும்ப ஒரு வாழ்த்து கூட சொல்ல வேணாம்...சின்னதா ஒரு டேங்க்ஸ் சொல்லக் கூடவா முடியலை..ஏன் எங்களுக்கெல்லாம் வேலையில்லையா...நீ மட்டும் தான் உலக மகா ஆபிஸரா?...திட்டி உங்க வாய் வலிக்க கூடாது..(ஐய்...ஐஸ் ஐஸ்..) நானே திட்டிக்கிறேன்.
புதுவருடம் அமர்களமாக ஆரம்பித்திருக்கிறது. நீங்க மறந்தாலும் நான் மறக்கவில்லை. பெரிய இவனாட்டம் சேரிட்டி சேலென்ஞ் என்று இரண்டு சவால்களை எடுத்திருந்தாலும் இரண்டையும் முடிக்கவேயில்லை. ஆனால் அபராதமாக குடுக்க இருந்த தொகையை இரட்டித்துவிடுவதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வருடமாவது முடிக்க முடிகிறதா என்று பார்ப்போம். இரண்டு சவால்களில் ஒன்று திரைப்படத்தில் தலையைக் காட்டுவது. ஆனால் சினிமா பித்தம் தலைக்கேறி இருக்கிறது. நடிப்பதற்கு இல்லை டைரடக்கராவதற்கு. லண்டன் ஃபிலிம் அகாடமியில் கோர்ஸ் புக் பண்ணி ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறேன்.
கிறிஸ்துமஸ் லீவில் ஒரு குறும்படம் எடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன். நம்ம ட்ரேட் மார்க் ஜொள்ளித்திருந்த காலத்தை குறும்படமாக எடுக்கவேண்டும் என்று ரொம்ப ஆசை. குடும்ப நண்பர் வட்டத்தில் நடிப்பதற்க்கு கேட்டதற்க்கு சரி சொன்னார்கள். பரவாயில்லை நான் இது வரை படமெடுக்கவில்லை என்றாலும் நம்பிக்கை வைத்து சரி சொன்னார்களே என்று ரொம்ப ஃபீலிங்ஸ்காக இருந்தது. அவர்கள் குடும்பத்திற்க்கு இங்கு எக்கச்சக்க நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஸ்காட்லாண்டிற்கு முதல் வாரம் நண்பர்களோடு போய்விட்டு வந்து அடுத்த வாரம் படப்பிடிப்பு என்று ப்ரொடெக்க்ஷன் ப்ளானிங்காயிருந்தது. ஸ்காட்லேண்ட் அருமையான இடம். இவ்வளவு நாள் இங்கிருந்தாலும் இப்போது தான் போகிறோம். நண்பரகளோடு சரி ஜாலியாக இருந்தது. லண்டன்லிருந்து ஸ்காட்லேண்ட்டின் ஒரு அத்த மூலைக்கு பத்து மணிநேரம் காரை ஓட்டிக்கொண்டேடேடே போனதில் போய் சேரும் போது நல்ல இருட்டியிருந்தது. கும்மிருட்டில் ஒரு அத்துவானக் காட்டில் தெக்காலே போய் வடக்காலே திரும்பினால் நீங்க தங்குகிற வீடு இருக்கும் என்று உத்தேசமாய் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இடம் பாலுமேந்திரா படத்தில் வருவது மாதிரி ஒரு பயங்கர காடு. மலைச்சரிவில் ஒரு கார் மட்டுமே போகக் கூடிய பாதை. சரிவில் கீழே தன்னீர் ஓடுகிற சத்தம் வேறு. மலையூர் மம்பட்டியான் பாட்டை பாடிக்கொண்டே போனால் வீடு வருகிற வழியைக் காணும். ஒருவேளை பாதை தவறிவிட்டோமோ என்றால் காரைத் திருப்பக் கூட வழியில்லை. மறக்க முடியாத சரியான திகில் அனுபவம். நம்பிக்கையே இல்லாமல் அப்புறம் எப்படியோ ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தோம். இப்படி ஒரு இடத்தில் திகில் படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு சாமி வந்துவிட்டது. கூட வந்த நண்பர்களை பேசி சம்மதிக்க வைத்து அவர்களும் இல்லாவிட்டால் இவன் தூங்கும் போது கல்லைத் தூக்கிப்போட்டாலும் போட்டுவிடுவான் என்று பயந்து போய் சம்மதித்தார்கள். நண்பர்களுக்கும் இங்கே நன்றியை சொல்லிக்கொள்கிறேன். ஆக இரண்டு படம் என்று ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொக்க்ஷனில் இருக்கிறது :)) சீக்கிரமே ரிலீஸ் பண்ணிவிடுவேன். நீங்க தான் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லவேண்டும்.
அதுனால தான் இங்க எழுத கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இருந்தாலும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கலாம் என்று தான் இந்தப் பதிவு. தோ..... வந்துக்கிடே இருக்கேன்.
நீங்க திட்டினாலும் பரவாயில்லை...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
புதுவருடம் அமர்களமாக ஆரம்பித்திருக்கிறது. நீங்க மறந்தாலும் நான் மறக்கவில்லை. பெரிய இவனாட்டம் சேரிட்டி சேலென்ஞ் என்று இரண்டு சவால்களை எடுத்திருந்தாலும் இரண்டையும் முடிக்கவேயில்லை. ஆனால் அபராதமாக குடுக்க இருந்த தொகையை இரட்டித்துவிடுவதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வருடமாவது முடிக்க முடிகிறதா என்று பார்ப்போம். இரண்டு சவால்களில் ஒன்று திரைப்படத்தில் தலையைக் காட்டுவது. ஆனால் சினிமா பித்தம் தலைக்கேறி இருக்கிறது. நடிப்பதற்கு இல்லை டைரடக்கராவதற்கு. லண்டன் ஃபிலிம் அகாடமியில் கோர்ஸ் புக் பண்ணி ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறேன்.
கிறிஸ்துமஸ் லீவில் ஒரு குறும்படம் எடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன். நம்ம ட்ரேட் மார்க் ஜொள்ளித்திருந்த காலத்தை குறும்படமாக எடுக்கவேண்டும் என்று ரொம்ப ஆசை. குடும்ப நண்பர் வட்டத்தில் நடிப்பதற்க்கு கேட்டதற்க்கு சரி சொன்னார்கள். பரவாயில்லை நான் இது வரை படமெடுக்கவில்லை என்றாலும் நம்பிக்கை வைத்து சரி சொன்னார்களே என்று ரொம்ப ஃபீலிங்ஸ்காக இருந்தது. அவர்கள் குடும்பத்திற்க்கு இங்கு எக்கச்சக்க நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஸ்காட்லாண்டிற்கு முதல் வாரம் நண்பர்களோடு போய்விட்டு வந்து அடுத்த வாரம் படப்பிடிப்பு என்று ப்ரொடெக்க்ஷன் ப்ளானிங்காயிருந்தது. ஸ்காட்லேண்ட் அருமையான இடம். இவ்வளவு நாள் இங்கிருந்தாலும் இப்போது தான் போகிறோம். நண்பரகளோடு சரி ஜாலியாக இருந்தது. லண்டன்லிருந்து ஸ்காட்லேண்ட்டின் ஒரு அத்த மூலைக்கு பத்து மணிநேரம் காரை ஓட்டிக்கொண்டேடேடே போனதில் போய் சேரும் போது நல்ல இருட்டியிருந்தது. கும்மிருட்டில் ஒரு அத்துவானக் காட்டில் தெக்காலே போய் வடக்காலே திரும்பினால் நீங்க தங்குகிற வீடு இருக்கும் என்று உத்தேசமாய் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இடம் பாலுமேந்திரா படத்தில் வருவது மாதிரி ஒரு பயங்கர காடு. மலைச்சரிவில் ஒரு கார் மட்டுமே போகக் கூடிய பாதை. சரிவில் கீழே தன்னீர் ஓடுகிற சத்தம் வேறு. மலையூர் மம்பட்டியான் பாட்டை பாடிக்கொண்டே போனால் வீடு வருகிற வழியைக் காணும். ஒருவேளை பாதை தவறிவிட்டோமோ என்றால் காரைத் திருப்பக் கூட வழியில்லை. மறக்க முடியாத சரியான திகில் அனுபவம். நம்பிக்கையே இல்லாமல் அப்புறம் எப்படியோ ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தோம். இப்படி ஒரு இடத்தில் திகில் படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு சாமி வந்துவிட்டது. கூட வந்த நண்பர்களை பேசி சம்மதிக்க வைத்து அவர்களும் இல்லாவிட்டால் இவன் தூங்கும் போது கல்லைத் தூக்கிப்போட்டாலும் போட்டுவிடுவான் என்று பயந்து போய் சம்மதித்தார்கள். நண்பர்களுக்கும் இங்கே நன்றியை சொல்லிக்கொள்கிறேன். ஆக இரண்டு படம் என்று ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொக்க்ஷனில் இருக்கிறது :)) சீக்கிரமே ரிலீஸ் பண்ணிவிடுவேன். நீங்க தான் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லவேண்டும்.
அதுனால தான் இங்க எழுத கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இருந்தாலும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கலாம் என்று தான் இந்தப் பதிவு. தோ..... வந்துக்கிடே இருக்கேன்.
நீங்க திட்டினாலும் பரவாயில்லை...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
Sunday, December 21, 2008
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.6
முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5
அந்த கம்பெனியில் நான் சேர்ந்து முப்பத்திநான்கு நாட்கள் இரண்டுமணி நேரம் தான் ஆகியிருக்கும். போன புதிதில் அலுவலக வண்டவாளங்கள் வெளிவராதால் அது சொர்கபுரியாய் இருந்தது. எப்போ வேணா வரலாம் போகலாம். முதல் நாள் ஒன்பது மணிக்கே போய் தேவுடு காத்து, பதினோரு மணிக்கு டிப்பார்ட்மெண்ட் ஹெட் வந்து, நான் குட்மார்னிங் சொல்லி அவர் குட் ஆப்டர்நூன் சொல்லி, எத்தனை மணிக்கு வந்தேன்னு கேட்டு, ஒன்பது மணிக்கு வந்தேன்னு சொல்லி, ஒம்போது மணிக்கா...அதெல்லாம் ஆபீஸ் வர்ற நேரமான்னு நாளைலேர்ந்து பதினோரு மணிக்கு...வான்னு அறிவுரை சொல்லி, நீங்க தான் சார் என் குலதெய்வம்ன்னு கால்ல விழுந்து...அடுத்த நாள்லேர்ந்து பன்னிரெண்டு மணிக்கு ஆபீஸ் போய்...இந்த சொட்டத்தலையன் தொல்லை தாங்கல...அதான் லேட்டா வந்தாலும் லேட்டா தான் போறோம்ல..அப்புறம் ஏன் ஒருமாதிரி பார்க்கிறான்"னு அப்போது தான் அலுவலகத்தில் சௌஜன்யமாகிக் கொண்டிருந்தேன்.
சீட்டில் செட்டிலாகி முதல் அரைமணிநேரம் ஆர்யபட்டா சொன்னார்,அப்துல் கலாம் சொன்னார், நாரயணமூர்த்தி அவர் வீட்டு கக்கூஸை இன்னுமும் அவரே கழுவுகிறார்ன்னு வந்திருக்கும் மெயில் பார்வேர்ட்டையெல்லாம் படித்துவிட்டு, எத்தனை பார்வேர்டு மெயில் வருகிறது/அனுப்புகிறோம் என்பதற்கேற்ற மாதிரி தான் சம்பளம் என்ற நம்பிக்கையில், வந்த மெயிலை எல்லாம் நாமும் சகட்டு மேனிக்கு சி.இ.ஓ தவிரதலாக நமக்கு அனுப்பியவன் உள்பட(இப்படி கடுப்பேதுவதே ஒரு பெரிய சுகம்) மத்த எல்லாருக்கும் மாஸ் பார்வேர்ட் விட்டு இந்தப் பக்கம் திரும்பினால் சாப்பாட்டுக்கு மணியடித்திருப்பார்கள். கல்யாணமான புதிதில் ஆரம்பித்த பழக்கத்தில் தங்கமணி மூன்று அடுக்கு கேரியரில் லெவெல் காட்டியிருப்பார். முன்வினை பின்வினை தெரியாமல் முன்னால் செய்த வழிப்பறிக்கு, கூட இருக்கும் பஞ்சத்தில் அடிபட்ட கூட்டம் பதில் மரியாதை செய்தது போக மிச்சத்தை தொண்டைக்குழியில் அடைத்துவிட்டு வந்து உட்கார்ந்தால் மானிட்டர் - மானிட்டர் அடித்தது மாதிரி சொக்குப் பொடி போட்டு கண்ணைச் சொருகும்.
செஞ்சோற்றுக் கடனுக்கு ரெண்டு மூனு ஆபிஸ் மெயிலை "எஸ் ஆபிஸர்...ஓ.கே. ஆபிஸர்...டன் அந்தக் கப்பலை அஞ்சு கோடிக்கு முடிச்சிடலாம்"ன்னு விவரமா மெயில் அனுப்பிவிட்டு திரும்பவும் கடிகாரத்தைப் பார்த்தால் டீ.க்கு நேரமாகியிருக்கும். விவரம்கெட்ட ஆபீஸில் டெஸ்க்கில் கொண்டு வந்து குடுக்காமல் காண்டீனுக்கு வந்து குடிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். "துன்ன சாப்பாடே இன்னும் செரிக்கலை..அதுக்குள்ள டீயா..ஏகப்பட்ட வேலை இருக்கு.."ன்னு அலம்பலுக்கு நடுவில் கவர்மெண்ட் ஆபீஸில் எப்படி வேலையே பண்ணுவதில்லை என்பதையும் பேசிக்கொண்டே டீயைக் குடித்துவிட்டு வந்தால் டிப்பார்ட்மெண்ட் ஹெட், அமெரிக்காவில் சாட்டிலைட் விட்டு படியளக்கும் பகவானிடம் டெலிகான் அரெஞ்ச் பண்ணியிருப்பார். டெலிகானில் தோராயமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு மணி நேரத்தில் ஆன்சைட் மேனேஜர் கூப்பிட்டு இங்கிலீஸ் டு இங்கிலீஸ் ட்ரான்ஸ்லேஷன் பண்ணி பகவான் என்ன சொன்னார்ன்னு சொல்லுவார். 'அட அப்படியா சொன்னான் அந்த கம்மனாட்டி'ன்னு என்னம்மோ புரிந்தது மாதிரி காட்டிக்கொண்டு அந்த கோட் கமெண்ட் பண்ணி கம்பைல் பண்ணுவெதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு இங்கி பின்கி பாங்கிபோட்டு தோராயமா நாலு நாளாகும் என்று கணக்குப் போட்டு சொன்னால் ஆன்சைட் மேனேஜர் ஒரு வாரம் என்று ரவுண்ட் செய்து பகவானிடம் ஆட்டையப் போட்டு ஓக்கே வாங்கிவிடுவார்.
இந்த மாதிரி நிறைய அமெரிக்கா பகவான்களிடம் ஆட்டையப் போட்டு போட்டு ஆபிஸில் சாயங்காலம் ஆறு மணிக்கு அடையாறு ஆனந்தா பவனிலிருந்து இலவச ஸ்வீட் காரம் காபி ஏற்பாடு செய்திருப்பார்கள். 'அடுத்தாப்புல முந்திரி பக்கோடா என்னிக்கு"ன்னு விவராமாய் விசாரித்துகோண்டே மேய்ந்துவிட்டு அங்கே இருக்கும் டேபிள் டென்னிஸோ, பாஸ்கெட் பாலோ இருக்கிற பக்கமா ஒரு ரவுண்டு வந்து "இப்படி இப்படி விளையாடனும்...நான் சொல்லிக்குடுத்ததெலாம் ஞாபகம் இருக்கில்ல...? ஸ்டெப்பு ஸ்டெப்பு...."ன்னு போகிற போக்கில் தின்னது செரிக்க நாலு இலவச டிப்ஸை அள்ளிவிட்டு வந்து உட்கார்ந்து யாகூ ஹாட்மெயில்ன்னு மத்த மெயிலெல்லாம் பார்த்துமுடிக்கும் போது ஹெட் கிளம்பிபோயிருப்பார். இன்னிக்கு ரொம்ப வேலை...எல்லாத்தையும் டீபக்(கமெண்ட்) பண்ணிட்டேன் நாளைக்கு மிச்சத்தை பார்த்துக்கலாம்ன்னு அப்படியே அப்பீட்டு.
பக்கத்து டீமிலிருந்தாலும் அவர் மட்டும் சாப்பாடு நேரத்தில் "சாப்பிட வர்றீங்களா"ன்னு கலயாணவீட்டில் சம்பந்தியைக் கூப்பிடுவது மாதிரி என்னை எப்போதும் மரியாதையாய் அழைப்பார். நூத்துக்கு தொன்னூறு முறை நான் போகவில்லை என்றாலும் கூப்பிட மறக்க மாட்டார். ஒரு நாள் அவர் தனியாய் உட்கார்த்து சாப்பிடுவதைப் பார்த்து பாவமாகி, தங்கமணி ஊருக்கு போய் காண்டினில் சாப்பாடு என்று இருந்த ஒரு வாரம் முழுவதும் அவர் கூட சாப்பிட போனேன். ரொம்ப மிருதுவான சுபாவம். பேச்சுவாக்கில் அவர் காலேஜ் ப்ரெஷர் என்று தெரிந்தது. அப்புறம் நண்பர் ஆபிஸ் மெயிலில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது க்ளையன்ட் கிட்ட பேசும் போது எப்படி பேசனும் என்று அங்கே இங்கே என்று பேசி டாபிக் கடைசியில் லவ்வுக்கு மாறியது. பார்ட்டி நம்ம சினிமா முரளிக்கு நெருங்கின சொந்த ரகம். காதல் தெய்வீகமானது, அதையும் தாண்டி புனிதமானது என்று பழுத்த காதல் பக்திமான். ஒரு நாள் பக்திமானின் காதல் கலாட்சேபத்தைக் கேட்டுக்கொண்டிருந்து கேண்டீனில் கொத்தமல்லி சட்னி காலியாகிவிட்டது.
அதிலிருந்து "எப்பா ராசா...சித்த பொறு...அங்க சட்டிய தேய்ச்சு கவுத்திருவானுக...இன்னிக்கு வத்தக் குழம்பு வேற சூப்பரா இருக்குன்னு" நழுவிவிடுவேன். பக்திமான் மனம் தளரமாட்டார் கலாட்சேபத்தை பாஸ் பண்ணிவிட்டு மீண்டும் ரெஸ்யூம் செய்வார். அப்புறம் இதெல்லாம் சரிபட்டு வராது என்று "ரெண்டாவது ப்ளோர்ல உன்னை மாதிரி காதலிக்காக மூக்கை வெட்டிக்கிறவன் ஒருத்தன் இருக்கான் அவன நாளைக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்"ன்னு சொல்லி வைத்தேன். "நீங்க காதலை ரொம்ப கேவலப்படுத்தறீங்க"ன்னு பக்திமான் வீறு கொண்டு எழுந்துவிட்டார்.
"எப்பா கேவலமெல்லாம் படுத்தல...நானும் லவ்ஸ் விட்டிருக்கேன்...என்ன என் லவ்ஸ் ட்ராஜடில முடிஞ்சிடிச்சு....அதான் வித்தியாசம்..."
"ஓ சாரி..அதான் காதல் பத்தி வெக்ஸாகியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்..."
"இல்ல பரவாயில்ல...இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க...எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சிருச்சின்னுங்கிறதத் தான் அப்படி சொன்னேன்"
அதுக்கப்புறம் பக்திமான் பேஜாராகி என்னை காதல் துரோகியாய் பாவித்து கொஞ்ச நாள் காதல் பத்தி அடக்கியே வாசித்தார். இருந்தாலும் எனக்கு அவரை சீண்டுவதே கொள்ளை இன்பமாக இருந்தது. அப்புறம் உங்க காதல் ஜோதி எந்த மட்டுக்கும் எரியுதுன்னு டெய்லி ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்பேன். (கவுண்டமணி) செந்தில் "போங்கண்ணே..."ரேஞ்சுக்கு பக்திமான் வெட்கப்படுவார். எத்தன நாளைக்குத் தான் நானும் இதையே வெச்சு ஓட்டறது..உங்க ஒயிட் டவ்வ கொஞ்சம் அடையாளம் காட்டினா நானும் நாலுபேர் கிட்ட கிசுகிசுக்க வசதியா இருக்கும்லன்னு டெய்லி கிண்டுவேன். "நீங்க வேற நானே இன்னும் லவ்வ சொல்லலை...சக்சஸான முதல் ட்ரீட் உங்களுக்குத் தான்"ன்னு பக்திமான் சத்தியம் செய்தார். ஆஹா ஆன் சைட் மேனேஜர் வந்தா ஆட்டையப் போடலாம்ன்னு ரிசர்வ் பண்ணி வைச்சிருந்த அந்த திரி ஸ்டார் ஓட்டல்ல பக்திமானுக்கு இலாகா மாத்திடலாம் போல இருக்கேன்னு "நீ அழகான பெண்ணை காதலிக்கவில்லை...நீ காதலித்ததால் அவள் அழகானாள்"ன்னு அங்க இங்கேர்ந்து தேத்தி தேத்தி கே.ஏ.ஏஸ் சேகர் கடையில லாட்டரி விற்பது மாதிரி அவனுக்கு டெய்லி கோடீஸ்வரன் ஃபீலிங்க்ஸை ஏத்தினேன்.
அப்புறம் தான் தெரிந்தது பையன் லவ்விக் கொண்டிருந்தது ஹெச் ஆர் எக்ஸிக்யூட்டிவ்வ. அவங்க கல்லூரி காம்பஸ்ஸில் கண்ட நாள் முதலாம். அடங்கொக்க மக்கா விவரமாத்தேன் இருக்கான்...நாமளும் ஒருதரம் ஏர்லைன்ஸ் மேனேஜரை கம்ப்ளையிண்டுக்காக பார்த்தோம்...ஹும்ம்ம்ம் டிக்கெட்டுக்காவது மிச்சமாயிருக்கும்ன்னு எனக்கு ஏப்பம் வந்து, அப்புறம் ஒரு படத்தில் கோர்ட் சீனில் வக்கீல் சுஜாதா "குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவனுக்குத் தான் தண்டனை அதிகம்"ன்னு பாயிண்ட்டாய் ஒரு டைகர் தயாநிதியை மாமாவூட்டுக்கு அனுப்பியது நியாபகம் வந்து, "எய்யா ராசா...டீம்ல பிரச்சனைன்னா மேனேஜர் கிட்ட சொல்லலாம்...மேனேஜர் கிட்ட பிரச்சனைன்னா ஹெச் ஆர்ல சொல்ல்லாம்..நீ ஹெச் ஆர்லயே பிரச்சனை பண்ற..இன்ஸ்டண்ட் சங்கு தான்...பார்த்துக்கோ"ன்னு நழுவி விட்டேன்.
அப்புறம் நான் அந்தக் கம்பெனியில் இருந்த அடுத்த நாலு மாதமும் பக்திமான் தூணுக்கு பின்னால் மறைந்து மறைந்து பிலீங்க்ஸாய் எக்ஸிக்யூடிவ்வை பார்த்துக் கொண்டிருப்பார். ஹெச் ஆர் மேடம் குடுத்த வேலை கன்பேர்மேஷன் ஆர்டரை ரூமில் ப்ரேம் போட்டு மாட்டியிருந்ததாக அவன் ரூமேட் தெய்வம் அசரீரி சொன்ன்னது. அப்புறம் நான் கம்பெனி மாறிவிட்டேன். சொல்ல முடியாது ....அவனிடம் இருந்த கடமையுணர்ச்சி சில சமயம் யோசிக்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும். கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5
அந்த கம்பெனியில் நான் சேர்ந்து முப்பத்திநான்கு நாட்கள் இரண்டுமணி நேரம் தான் ஆகியிருக்கும். போன புதிதில் அலுவலக வண்டவாளங்கள் வெளிவராதால் அது சொர்கபுரியாய் இருந்தது. எப்போ வேணா வரலாம் போகலாம். முதல் நாள் ஒன்பது மணிக்கே போய் தேவுடு காத்து, பதினோரு மணிக்கு டிப்பார்ட்மெண்ட் ஹெட் வந்து, நான் குட்மார்னிங் சொல்லி அவர் குட் ஆப்டர்நூன் சொல்லி, எத்தனை மணிக்கு வந்தேன்னு கேட்டு, ஒன்பது மணிக்கு வந்தேன்னு சொல்லி, ஒம்போது மணிக்கா...அதெல்லாம் ஆபீஸ் வர்ற நேரமான்னு நாளைலேர்ந்து பதினோரு மணிக்கு...வான்னு அறிவுரை சொல்லி, நீங்க தான் சார் என் குலதெய்வம்ன்னு கால்ல விழுந்து...அடுத்த நாள்லேர்ந்து பன்னிரெண்டு மணிக்கு ஆபீஸ் போய்...இந்த சொட்டத்தலையன் தொல்லை தாங்கல...அதான் லேட்டா வந்தாலும் லேட்டா தான் போறோம்ல..அப்புறம் ஏன் ஒருமாதிரி பார்க்கிறான்"னு அப்போது தான் அலுவலகத்தில் சௌஜன்யமாகிக் கொண்டிருந்தேன்.
சீட்டில் செட்டிலாகி முதல் அரைமணிநேரம் ஆர்யபட்டா சொன்னார்,அப்துல் கலாம் சொன்னார், நாரயணமூர்த்தி அவர் வீட்டு கக்கூஸை இன்னுமும் அவரே கழுவுகிறார்ன்னு வந்திருக்கும் மெயில் பார்வேர்ட்டையெல்லாம் படித்துவிட்டு, எத்தனை பார்வேர்டு மெயில் வருகிறது/அனுப்புகிறோம் என்பதற்கேற்ற மாதிரி தான் சம்பளம் என்ற நம்பிக்கையில், வந்த மெயிலை எல்லாம் நாமும் சகட்டு மேனிக்கு சி.இ.ஓ தவிரதலாக நமக்கு அனுப்பியவன் உள்பட(இப்படி கடுப்பேதுவதே ஒரு பெரிய சுகம்) மத்த எல்லாருக்கும் மாஸ் பார்வேர்ட் விட்டு இந்தப் பக்கம் திரும்பினால் சாப்பாட்டுக்கு மணியடித்திருப்பார்கள். கல்யாணமான புதிதில் ஆரம்பித்த பழக்கத்தில் தங்கமணி மூன்று அடுக்கு கேரியரில் லெவெல் காட்டியிருப்பார். முன்வினை பின்வினை தெரியாமல் முன்னால் செய்த வழிப்பறிக்கு, கூட இருக்கும் பஞ்சத்தில் அடிபட்ட கூட்டம் பதில் மரியாதை செய்தது போக மிச்சத்தை தொண்டைக்குழியில் அடைத்துவிட்டு வந்து உட்கார்ந்தால் மானிட்டர் - மானிட்டர் அடித்தது மாதிரி சொக்குப் பொடி போட்டு கண்ணைச் சொருகும்.
செஞ்சோற்றுக் கடனுக்கு ரெண்டு மூனு ஆபிஸ் மெயிலை "எஸ் ஆபிஸர்...ஓ.கே. ஆபிஸர்...டன் அந்தக் கப்பலை அஞ்சு கோடிக்கு முடிச்சிடலாம்"ன்னு விவரமா மெயில் அனுப்பிவிட்டு திரும்பவும் கடிகாரத்தைப் பார்த்தால் டீ.க்கு நேரமாகியிருக்கும். விவரம்கெட்ட ஆபீஸில் டெஸ்க்கில் கொண்டு வந்து குடுக்காமல் காண்டீனுக்கு வந்து குடிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். "துன்ன சாப்பாடே இன்னும் செரிக்கலை..அதுக்குள்ள டீயா..ஏகப்பட்ட வேலை இருக்கு.."ன்னு அலம்பலுக்கு நடுவில் கவர்மெண்ட் ஆபீஸில் எப்படி வேலையே பண்ணுவதில்லை என்பதையும் பேசிக்கொண்டே டீயைக் குடித்துவிட்டு வந்தால் டிப்பார்ட்மெண்ட் ஹெட், அமெரிக்காவில் சாட்டிலைட் விட்டு படியளக்கும் பகவானிடம் டெலிகான் அரெஞ்ச் பண்ணியிருப்பார். டெலிகானில் தோராயமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு மணி நேரத்தில் ஆன்சைட் மேனேஜர் கூப்பிட்டு இங்கிலீஸ் டு இங்கிலீஸ் ட்ரான்ஸ்லேஷன் பண்ணி பகவான் என்ன சொன்னார்ன்னு சொல்லுவார். 'அட அப்படியா சொன்னான் அந்த கம்மனாட்டி'ன்னு என்னம்மோ புரிந்தது மாதிரி காட்டிக்கொண்டு அந்த கோட் கமெண்ட் பண்ணி கம்பைல் பண்ணுவெதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு இங்கி பின்கி பாங்கிபோட்டு தோராயமா நாலு நாளாகும் என்று கணக்குப் போட்டு சொன்னால் ஆன்சைட் மேனேஜர் ஒரு வாரம் என்று ரவுண்ட் செய்து பகவானிடம் ஆட்டையப் போட்டு ஓக்கே வாங்கிவிடுவார்.
இந்த மாதிரி நிறைய அமெரிக்கா பகவான்களிடம் ஆட்டையப் போட்டு போட்டு ஆபிஸில் சாயங்காலம் ஆறு மணிக்கு அடையாறு ஆனந்தா பவனிலிருந்து இலவச ஸ்வீட் காரம் காபி ஏற்பாடு செய்திருப்பார்கள். 'அடுத்தாப்புல முந்திரி பக்கோடா என்னிக்கு"ன்னு விவராமாய் விசாரித்துகோண்டே மேய்ந்துவிட்டு அங்கே இருக்கும் டேபிள் டென்னிஸோ, பாஸ்கெட் பாலோ இருக்கிற பக்கமா ஒரு ரவுண்டு வந்து "இப்படி இப்படி விளையாடனும்...நான் சொல்லிக்குடுத்ததெலாம் ஞாபகம் இருக்கில்ல...? ஸ்டெப்பு ஸ்டெப்பு...."ன்னு போகிற போக்கில் தின்னது செரிக்க நாலு இலவச டிப்ஸை அள்ளிவிட்டு வந்து உட்கார்ந்து யாகூ ஹாட்மெயில்ன்னு மத்த மெயிலெல்லாம் பார்த்துமுடிக்கும் போது ஹெட் கிளம்பிபோயிருப்பார். இன்னிக்கு ரொம்ப வேலை...எல்லாத்தையும் டீபக்(கமெண்ட்) பண்ணிட்டேன் நாளைக்கு மிச்சத்தை பார்த்துக்கலாம்ன்னு அப்படியே அப்பீட்டு.
பக்கத்து டீமிலிருந்தாலும் அவர் மட்டும் சாப்பாடு நேரத்தில் "சாப்பிட வர்றீங்களா"ன்னு கலயாணவீட்டில் சம்பந்தியைக் கூப்பிடுவது மாதிரி என்னை எப்போதும் மரியாதையாய் அழைப்பார். நூத்துக்கு தொன்னூறு முறை நான் போகவில்லை என்றாலும் கூப்பிட மறக்க மாட்டார். ஒரு நாள் அவர் தனியாய் உட்கார்த்து சாப்பிடுவதைப் பார்த்து பாவமாகி, தங்கமணி ஊருக்கு போய் காண்டினில் சாப்பாடு என்று இருந்த ஒரு வாரம் முழுவதும் அவர் கூட சாப்பிட போனேன். ரொம்ப மிருதுவான சுபாவம். பேச்சுவாக்கில் அவர் காலேஜ் ப்ரெஷர் என்று தெரிந்தது. அப்புறம் நண்பர் ஆபிஸ் மெயிலில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது க்ளையன்ட் கிட்ட பேசும் போது எப்படி பேசனும் என்று அங்கே இங்கே என்று பேசி டாபிக் கடைசியில் லவ்வுக்கு மாறியது. பார்ட்டி நம்ம சினிமா முரளிக்கு நெருங்கின சொந்த ரகம். காதல் தெய்வீகமானது, அதையும் தாண்டி புனிதமானது என்று பழுத்த காதல் பக்திமான். ஒரு நாள் பக்திமானின் காதல் கலாட்சேபத்தைக் கேட்டுக்கொண்டிருந்து கேண்டீனில் கொத்தமல்லி சட்னி காலியாகிவிட்டது.
அதிலிருந்து "எப்பா ராசா...சித்த பொறு...அங்க சட்டிய தேய்ச்சு கவுத்திருவானுக...இன்னிக்கு வத்தக் குழம்பு வேற சூப்பரா இருக்குன்னு" நழுவிவிடுவேன். பக்திமான் மனம் தளரமாட்டார் கலாட்சேபத்தை பாஸ் பண்ணிவிட்டு மீண்டும் ரெஸ்யூம் செய்வார். அப்புறம் இதெல்லாம் சரிபட்டு வராது என்று "ரெண்டாவது ப்ளோர்ல உன்னை மாதிரி காதலிக்காக மூக்கை வெட்டிக்கிறவன் ஒருத்தன் இருக்கான் அவன நாளைக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்"ன்னு சொல்லி வைத்தேன். "நீங்க காதலை ரொம்ப கேவலப்படுத்தறீங்க"ன்னு பக்திமான் வீறு கொண்டு எழுந்துவிட்டார்.
"எப்பா கேவலமெல்லாம் படுத்தல...நானும் லவ்ஸ் விட்டிருக்கேன்...என்ன என் லவ்ஸ் ட்ராஜடில முடிஞ்சிடிச்சு....அதான் வித்தியாசம்..."
"ஓ சாரி..அதான் காதல் பத்தி வெக்ஸாகியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்..."
"இல்ல பரவாயில்ல...இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க...எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சிருச்சின்னுங்கிறதத் தான் அப்படி சொன்னேன்"
அதுக்கப்புறம் பக்திமான் பேஜாராகி என்னை காதல் துரோகியாய் பாவித்து கொஞ்ச நாள் காதல் பத்தி அடக்கியே வாசித்தார். இருந்தாலும் எனக்கு அவரை சீண்டுவதே கொள்ளை இன்பமாக இருந்தது. அப்புறம் உங்க காதல் ஜோதி எந்த மட்டுக்கும் எரியுதுன்னு டெய்லி ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்பேன். (கவுண்டமணி) செந்தில் "போங்கண்ணே..."ரேஞ்சுக்கு பக்திமான் வெட்கப்படுவார். எத்தன நாளைக்குத் தான் நானும் இதையே வெச்சு ஓட்டறது..உங்க ஒயிட் டவ்வ கொஞ்சம் அடையாளம் காட்டினா நானும் நாலுபேர் கிட்ட கிசுகிசுக்க வசதியா இருக்கும்லன்னு டெய்லி கிண்டுவேன். "நீங்க வேற நானே இன்னும் லவ்வ சொல்லலை...சக்சஸான முதல் ட்ரீட் உங்களுக்குத் தான்"ன்னு பக்திமான் சத்தியம் செய்தார். ஆஹா ஆன் சைட் மேனேஜர் வந்தா ஆட்டையப் போடலாம்ன்னு ரிசர்வ் பண்ணி வைச்சிருந்த அந்த திரி ஸ்டார் ஓட்டல்ல பக்திமானுக்கு இலாகா மாத்திடலாம் போல இருக்கேன்னு "நீ அழகான பெண்ணை காதலிக்கவில்லை...நீ காதலித்ததால் அவள் அழகானாள்"ன்னு அங்க இங்கேர்ந்து தேத்தி தேத்தி கே.ஏ.ஏஸ் சேகர் கடையில லாட்டரி விற்பது மாதிரி அவனுக்கு டெய்லி கோடீஸ்வரன் ஃபீலிங்க்ஸை ஏத்தினேன்.
அப்புறம் தான் தெரிந்தது பையன் லவ்விக் கொண்டிருந்தது ஹெச் ஆர் எக்ஸிக்யூட்டிவ்வ. அவங்க கல்லூரி காம்பஸ்ஸில் கண்ட நாள் முதலாம். அடங்கொக்க மக்கா விவரமாத்தேன் இருக்கான்...நாமளும் ஒருதரம் ஏர்லைன்ஸ் மேனேஜரை கம்ப்ளையிண்டுக்காக பார்த்தோம்...ஹும்ம்ம்ம் டிக்கெட்டுக்காவது மிச்சமாயிருக்கும்ன்னு எனக்கு ஏப்பம் வந்து, அப்புறம் ஒரு படத்தில் கோர்ட் சீனில் வக்கீல் சுஜாதா "குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவனுக்குத் தான் தண்டனை அதிகம்"ன்னு பாயிண்ட்டாய் ஒரு டைகர் தயாநிதியை மாமாவூட்டுக்கு அனுப்பியது நியாபகம் வந்து, "எய்யா ராசா...டீம்ல பிரச்சனைன்னா மேனேஜர் கிட்ட சொல்லலாம்...மேனேஜர் கிட்ட பிரச்சனைன்னா ஹெச் ஆர்ல சொல்ல்லாம்..நீ ஹெச் ஆர்லயே பிரச்சனை பண்ற..இன்ஸ்டண்ட் சங்கு தான்...பார்த்துக்கோ"ன்னு நழுவி விட்டேன்.
அப்புறம் நான் அந்தக் கம்பெனியில் இருந்த அடுத்த நாலு மாதமும் பக்திமான் தூணுக்கு பின்னால் மறைந்து மறைந்து பிலீங்க்ஸாய் எக்ஸிக்யூடிவ்வை பார்த்துக் கொண்டிருப்பார். ஹெச் ஆர் மேடம் குடுத்த வேலை கன்பேர்மேஷன் ஆர்டரை ரூமில் ப்ரேம் போட்டு மாட்டியிருந்ததாக அவன் ரூமேட் தெய்வம் அசரீரி சொன்ன்னது. அப்புறம் நான் கம்பெனி மாறிவிட்டேன். சொல்ல முடியாது ....அவனிடம் இருந்த கடமையுணர்ச்சி சில சமயம் யோசிக்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும். கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.
Monday, December 08, 2008
"அச்சமுண்டு அச்சமுண்டு" அருண் - பேட்டி
முக்கியமான அப்டேட் - சினேகாவின் எக்ஸ்க்ளூசிவ் படம் (கடைசியில்) அப்டேட் செய்யப்பட்டுள்ளது..பக்தகோடிகள் க்யூவில் தள்ளுமுள்ளு செய்யாமல் தரிசனம் செய்யவேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - என்றும் இறைபணியில் தர்மகர்தா. படம் அன்பளிப்பு அருண் வைத்தியநாதன்

ஏ எல்லாரும் கேட்டுக்கோங்க பார்த்துக்கோங்க நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி...என்னா கேட்டீங்க தமிழ் திரைப்பட உலகிற்கும் எனக்கும் ஏதாவது சமபந்தம் இருக்கான்னா.. யாரப் பார்த்து என்னா கேள்வி கேட்டீங்கோ....இப்போ ப்ரெஷ்ஷா வந்திருக்காரே அச்சமுண்டு அச்சமுண்டு அருண்....அவர டவுசர் போட்டுக்கொண்டு மூக்கு ஒழுகிக்கொண்டிருந்த காலதுலயே எனக்கு தெரியும்ன்னு சொல்ல ரொம்ப ஆசை தான். ஆனா இந்த போஸ்டை அவரும் படிப்பார் அதுனால அப்புறமா அவர் படிக்காத போது சொல்றேன்...:))
அருண் வைத்தியநாதன் - 2004/5 ல் தமிழில் ப்ளாகிக் கொண்டிருந்தவர்களுக்கு பரிச்சயமான பெயர். நம்மள மாதிரி ப்ளாகில் ஜொள்ளுவிட்டதை பற்றி எழுதாமல் நியூயார்க் பிலிம் அக்காடமி, குறும்படம்ன்னு லெவல் காட்டிக்கொண்டிருந்தார். இவரின் குறும்படங்கள் பார்த்து அப்பவே இது படிக்கற புள்ள...இவர் பின்னாளில் பெரிய டைரடக்கராக வருவார் என்று துண்டு போட்ட (நம்பிக்கை வைத்த) தொண்டரடிப் பொடியாழ்வாரில் அடியேனும் ஒருவன் (ஹி...ஹீ நல்ல படியில ஏறாத ரோலா பார்த்து மீட்டருக்கு மேல போட்டுக் குடுங்க அருண் :) ).
ப்ரெண்டு ஒருத்தருக்கு சுகாசினி மணிரத்னம் ரொம்ப தோஸ்த், அதுக்கே நான் "இந்த ஹாசினி இருக்காங்களே நம்பளுக்கு ரொம்ப க்ளோஸ்"ன்னு தான் ப்லிம் காட்டிக்கிட்டு திரியறது. இதுல அருண் வைத்தியநாதனை ஏற்கனவே ஐஸ் பொட்டில பாக்கிங் செஞ்சாச்சு விட்டுருவோமா...பேட்டி பேட்டின்னு கோட்டியா அலைஞ்சு...அவரு நேரம் அவரும் ஒத்துக்கிட்டாரு.

தற்போது அருண் அச்சமுண்டு அச்சமுண்டு தமிழ் திரில்லரை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் ப்ரசன்னா, ஸ்னேகா நடிக்கிறார்கள். ஹாலிவுட் ஜான் ஷியா வில்லனாகவும் படத்தில் இன்னும் நிறைய ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கிறார்கள். "அச்சமுண்டு அச்சமுண்டு" இந்தியாவிலேயே முதன் முறையாக ரெட் கேமிராவினால் ஹை டெபினிஷனில் படமாக்கப்பட்டு போஸ்ட் பொரடக்க்ஷன் ஸ்டேஜில் இருக்கிறது.
இன்னும் வாயில் நுழையாத ஜார்கனெல்லாம் தட்டுப்படவே அருணையே கேள்விகளால் துளைத்தார் சினிமா நண்டு டுபுக்கார்.
1. வணக்கம் அருண். அச்சமுண்டு அச்சமுண்டு பற்றி ரெட் ஒன், ஹாலிவுடின் பிரபல பெயர்கள் என்று என்னவெல்லாமோ பெருமையாக கேள்விப் படுகிறோம். நேரா படம் சம்பந்தப்பட்ட டெக்னிகல் கேள்விகளுக்கு போய் விடுவோம். ஸ்னேகா படத்திற்க்காக அமெரிக்கா வந்திருக்கிறார் என்று படித்தோம். ஸ்னேகாவுக்கு பிடித்த டிபன் என்ன? ஸ்னேகா நம்மூர் இட்லி பூரிக்கிழங்கு சாப்பிட்டாரா இல்லை அந்தவூர் கெல்லாக்ஸ் கார்ன்ப்ளேக்ஸே அட்ஜீஸ் பண்ணிக்கொண்டாரா?
இந்தக் கேள்வியை நான் ஆண்வர்க்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். அது என்ன சினேகா பூரி சாப்பிட்டாரா, இட்லி சாப்பிட்டாரா என்றொரு கேள்வி? பிரசன்னாவையும் இந்தக் கேள்வியில் சும்மானாச்சுக்குமாவது சேர்த்திருக்க வேண்டும். ஊரிலிருந்து கிளம்பும் போது, 'We want only American food' அப்டீன்னு சப்புக்கொட்டிட்டுக் கெளம்புனவங்க...நாலாவது நாள், 'கொஞ்சம் ரவா உப்புமா கெடைக்குமா?' என்ற ரேஞ்சுக்கு இறங்கி, நமது உணவுக் கலாச்சாரத்தைப் பேணிக் காத்தார்கள்.
(நீங்க சொல்வது மிக்க சரி அருண்...பிரசன்னா என்னத்தையோ கொட்டிக்கும் போது சினகா இட்லி சாப்பிட்டாரான்னு கேட்டிருக்கனும்...இனிமே கவனமா கேக்கிறேன் )
2. சாப்ட்வேரிலிருந்து ப்ளாக் அடித்து சமபளம் வாங்கினது போதும் சினிமாவுக்கு போகனும்ன்னு என்று எப்படி தோன்றியது. இல்லை சாப்ட்வேரே நானும் கச்சேரிக்குப் போனேன் கதை தானா?
இது சாப்ட்வேர் காலத்தில் தோன்றியது இல்லை -அண்டர்வேர் அணியும் காலத்திலேயே தோன்றியது. ஆனால், அப்பா அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்பதால், எனது கனவுகளும் 'இனிய பாடல் சண்டைக்காட்சிகளோடு' அவ்வப்போது முடிவடைந்துவிடும். நான் உறுதியாய் இருப்பதைப் பார்த்தவுடன், 'சரி...உனக்குன்னு ஒரு உத்தியோகம் கெடைச்சதுக்கப்புறம், என்ன வேணும்னாலும் பண்ணு!' என்று ஒரு மாதிரி க்ரீன் சிக்னல் கிடைத்தது. சினிமாவுக்குத் தான் தடையேயொழிய, கலை சார்ந்த விஷயங்களுக்கும், சினிமா(க்கள்) பார்ப்பதற்கும் எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை என்பது ஒரு ஆறுதல் பரிசு. மனசு எப்போதும் சாப்ட்வேரில் ஒரு கால், சினிமாவில் ஒரு கால் என்று தான் வேலை பார்க்கும் தருணங்களிலும் இருந்தது. சாப்ட்வேரில் வேலை பார்த்தது, கச்சேரிக்குப் போன கதையென்றே சொன்னாலும்...தேங்காய்மூடிக் கச்சேரி கிடையாது! 9லிருந்து 5மணி வரை செய்யும் வேலையில் எனக்கான சலிப்பை அனுதினம் கேட்டு கேட்டு, எனது தங்கமணி (ஹி..ஹி) 'அப்புறம் எப்போ பட வேலையை ஆரம்பிக்கிறீங்க?' என்று கேட்காத குறைதான்!
3. தாலி, தாய்மாமா, காதல், ஆக்க்ஷன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு முதல் படத்திலேயே தமிழ் கூறும் நல்லுலகம் அதிகம் பார்த்திராத திரில்லர் களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். அதைப் பற்றி சொல்லுங்களேன்.
தாய்மாமா மட்டும் தான் நீங்கள் சொன்னதில் இல்லை. தாலி, காதல், ஆக் ஷன் எல்லாம் இருக்கிறது. தாலி எனது கதாநாயகி மாலினியின் கழுத்தில், காதல் செந்தில்குமார் - மாலினியிடத்தில், ஆக் ஷன் எங்கே எப்படி என்பது சஸ்பென்ஸ்! Genre films தமிழில் வரவேண்டும் என்ற ஆசையினாலும், த்ரில்லர்களுக்கு எப்போதுமே மவுசு என்ன கீபோர்டே உண்டு என்பதாலும்...இது போன்றதொரு முயற்சி. சுவாரஸ்யமாக ஒரு விஷயத்தை சொன்னால், 'அச்சு பிச்சு காமெடி', 'டண்டணக்கா டான்ஸ்' தேவைப்படாது என்ற எனது அபரிதமான நம்பிக்கையின் ஒரு வடிவம் தான் 'அச்சமுண்டு! அச்சமுண்டு!'. குறிப்பாக, இது 'இத்தாலி படத்திலேந்து சுட்டது, ஜெர்மன் படம் 'ப்ரிஞ்சால்'லே இதே சீன் இருக்கு' என்ற அபாயங்களும் இல்லாத படமாக இருக்கும்.
4.படத்தில் லைவ் சவுண்ட் உபயோகப் படுத்தியிருக்கிறீர்கள் என்று வேற நல்ல பேட்டிகளில் சொல்லி இருக்கிறீர்கள். ஹே ராமில் கமல் லைவ் சவுண்ட் உபயோகப்படுத்தி, கூட இருந்தவர் "மாப்ள படம் எப்போ போடுவாங்க"ன்னு கேட்டது தான் நியாபகம் வந்தது. ஏன் லைவ் சவுண்ட்...? த்ரில்லர் களம் என்பதால் ஏதாவது ஸ்பெஷல் காரண்ங்கள் உண்டா...?
பேட்டிகளில் நல்ல பேட்டி, டுபுக்கு பேட்டி என்று உண்டா என்ன? இந்தியத் திரைப்படங்களைத் தவிர, மற்ற முக்கால்வாசி நாடுகளில் 'லைவ் சவுண்ட்' முறையில் தான் படங்கள் எடுக்கப்படுகிறது. பாலிவுட்டில் பல பெரிய படங்கள் 'லைவ் சவுண்டு'க்கு மாறி ரொம்ப நாட்களாகி விட்டன. ஆனாலும், இன்னும் இந்தியாவில் பெரும்பான்மையான படங்கள் டப்பிங் முறையில் தான் எடுக்கப்படுகிறது. நீங்கள் சமையல் கட்டில் உங்கள் மனைவியோடு பேசுகிறீர்கள் என்பது தான் காட்சி என்றால், அங்கு கேஸ் அடுப்பு எரியும் சத்தம் கேட்க வேண்டும், ரசம் கொதிக்கும் சத்தம் கேட்க வேண்டும், வசனங்கள் நிஜ வாழ்வில் பேசுவது போலவே இருக்க வேண்டும் ...இத்தனை 'வேண்டும்'களும் வேண்டும் என்றால், லைவ் சவுண்ட் தான் ஒரே வழி. (பின்னணியில் கேட்கும் சத்தங்களில் சவுண்ட் எடிட்டிங்கிற்கும் பெரிய பங்குண்டு). இந்தப் படத்தில் லைவ் சவுண்ட் செய்த 'டென்னிஸ்', பல படங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அதே போல 'மிக்ஸிங்'கும் 'Grudge','Exorcism of Emily Rose', 'Strangers' போன்ற படங்களை செய்த மார்ட்டி ஹம்ப்ரியோடு ஹாலிவுட்டிலேயே தான் நடக்கிறது. துல்லியமான துள்ளல் ஒலிக்கு நான் கியாரண்டி! (நான் சட்டசபை தேர்தல் கணக்கா வாக்குறுதிகளை அள்ளி வீசறேன்...மவனே அடங்குடா அப்டீன்னு மனசு சொல்ற சவுண்டு சப் வூஃபர்லே கேக்குது!)
5. இந்தப் படத்தில் "அப்பாடா பாதி கிணறு தாண்டிவிட்டோம்" என்று எந்த தருணத்தில் தோன்றியது?
பாதி கிணறு தாண்டிய உடனே.... (ஹி...ஹி)
(நான் சொல்லல...அருண் 2004லயே தமிழ் ப்ளாக் உலகில் பழம் தின்று மொக்கை போட்டவர்ன்னு :)))) )
6. CTRL C & CTRL V தவிர சாப்ட்வேர் உலகில் கற்றுக்கொண்டது ஏதாவது தற்போது தங்களைய டைரடக்கர் ரோலுக்கு உதவுகிறதா?
கணிப்பொறியில் தமிழ் அடிப்பதில் நல்ல பரிச்சயம் இருப்பதால், முழு திரைக்கதையையும் தமிழிலேயே அடிக்க முடிந்தது. அதனால் திருத்தங்களும் சுலபமாக செய்ய முடிந்தது. அதைத் தவிர, டைரடக்கர் ரோலுக்கு தேவை சாப்ட்வேர் அறிவு அல்ல - கதை சொல்லும் அறிவும், திரைப்படத் தொழில் நுட்ப அறிவும் தான்!
7. அமெரிக்காவிலிருந்து பார்க்கும் போது கோடம்பாக்கம் எப்படி தெரிகிறது?
இன்றைக்கு எத்தனையோ ஹாலிவுட் படங்களையும், வெளிநாட்டுப் படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றாலும்...எங்கள் ஊரில் நான் பார்த்த நடிகர் திலகம் படங்களையும், கமல்ஹாசன் படங்களையும் மறக்க முடியுமா? சினிமா மீதான காதல், இன்று கல்யாணத்தில் முடிந்ததற்கு கோடம்பாக்கம் தானே முன்னுரை எழுதியது! என்னைப் பொறுத்தவரை, மொழிகள் கடந்து, காலம் கடந்து நிற்கும் எந்தவொரு படைப்பும் சிறப்பான விஷயம். அப்படிப்பட்ட சினிமாவானது உலகின் மூலை முடுக்களிலிருந்தெல்லாம் வருகிறது - நமது ஊரிலிருந்தும் எப்போதாவது அத்திப் பூத்தால் போல் வருகிறது. இன்னும் புதுப்புது வித்தியாசமான முயற்சிகள் நிறைய வரவேண்டும். மக்களும், படைப்பாளிகளும் ஒரே அலைவரிசையில் மாற்றம் நோக்கி சிந்தித்தால் தான், கோடம்பாக்கம் கோல்டன்பாக்கமாக மாறும்!
8. ஒரு சக ப்ளாகரிலிருந்து டைரடக்கராக மாறியிருக்கிறீர்கள். படத்தில் இங்கே கதை லொட்டு அங்கே நடிப்பு லொசுக்கு, இரண்டாவது ரீலில் நாலாவது சீனை இப்படி எடுத்திருக்கலாம், க்ளைமாக்ஸில் லைட்டிங் நல்லா இருந்திருக்கலாம் என்று என்னை மாதிரி அரைவேக்காடுகள் ப்ளாகில் மூவி சுப்புடுகளாக விமர்சனம் பண்ணும் போது ஒரு டைரடக்கராக என்ன தோன்றும்?
கஷ்டப்பட்டு தங்கமணி சமைச்சுப் போட்டதை, 'இன்னும் கொஞ்சம் உப்பு ரெண்டு சிட்டிகை அதிகமா போட்டிருக்கலாம்!' என்று நீங்கள் சர்வ சாதாரணமாய் சொல்லும் போது 'சமைச்சுப் பார்த்தா தெரியும்!' என்று அங்கிருந்து டாணென்று பதில் வரும். ஆனால், அதே போல ஒரு பதில் சரவணபவனில் சாப்பிடும் போது வந்தால், பிரச்சினை தான்! காசு கொடுத்து பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அவர்களுக்கு அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கும். எல்லாவற்றையும் தாமரை இலை தண்ணீர் போல் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தான். ஆனால் ஒரு விஷயம், சினிமா எடுப்பது என்பது ஒரு பிரசவம், போர், வலி! ஒரு நல்ல விமர்சனம் என்பது 'சாண்ட்விச்' முறையில் இருக்க வேண்டும். படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை முதலில் சொல்லி, மெதுவாக பிடிக்காத விஷயங்களை வரிசைப்படுத்தி, மீண்டும் நல்ல விஷயத்தோடு முடிப்பதென்பது எந்த ஒரு கலைக்கும், கலைஞனுக்கும் இதமாய் இருக்கும்.
9. "நானும் ஒரு நாள் படமெடுத்தே தீருவேன்" என்று என்னை மாதிரி மந்திரித்த கோழிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? எங்கே தொடங்குவது?
முதலில் 'திரைப்படம்' என்பது சுலபமான விஷயமில்லை. இதற்காக நீங்கள் கொடுக்க வேண்டிய விலை, செய்ய வேண்டிய தியாகங்கள் நிறைய. கேம்கார்டரில் நான்கு நண்பர்களை நடிக்க வைத்து, அதை சுமாராக எடிட் செய்து, பின்னணி இசையாக 'ஹௌ டு நேம் இட்'ன் வயலினிசையை ஜம்மென்று போட்டு...'ஆத்தா....நான் படமெடுத்துட்டேன்!' என்று சொல்வதல்ல சினிமா. மேற்கூறியவை ஒரு நல்ல தொடக்கம் என்று வேண்டுமானால் கூறலாம். திரைப்படமெடுக்க ஆசைப்படும் முன் நல்லதாய் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் படிப்பது சாலச்சிறந்தது. திரைக்கதை எழுதுவது சம்பந்தமாக பல புத்தகங்கள் (ஆங்கிலத்தில்) இருக்கின்றன, படமெடுப்பது குறித்தும் பல புத்தகங்கள் கிடைக்கப்பெறும். (தமிழிலும் இது போல புத்தகங்கள் பல வருவது அத்தியாவசியமான ஒன்று - பதிப்பாளர்கள் செய்வார்களென்று நம்புகிறேன்). குறிப்பாக, நண்பர்கள் வட்டத்தையும் தாண்டி, ஒரு புரொஃபஷனல் க்ரூவை வைத்து மூன்று குறும்படங்களாவது செய்ய வேண்டும். அது எத்தகைய வரவேற்பைப் பெறுகிறது என்பதும், எத்தனை திரைப்பட விழாக்களில் கலந்து கொள்கிறதென்பதும் உங்கள் திறமைக்கு அளவுகோலாய் இருக்கும். அசிஸ்டெண்டாக ஒரு ஐந்து ஆண்டுகள் இருந்து விட்டு, சந்து கேப்பில் ஹீரோவிடம் 'கதைப்படி நீங்க பொறுக்கி சார்!' என்று சொல்லி இம்ப்ரெஸ் செய்து தான் 'டைரக்டர்' ஆக வேண்டும் என்று அவசியமில்லை. நான் மேலே சொன்ன முறையான பயிற்சியும், குறும்படங்களும் கூட நல்ல இயக்குனராவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும். இந்த முறை நான் சென்னை சென்ற போதே பல கல்லூரிகளில் திரைப்படம் குறித்தான பாடங்கள் வந்து விட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பாலுமகேந்திராவில் ஆரம்பித்து ராஜீவ்மேனன் வரை ஒளிப்பதிவு மற்றும் திரைப்படம் குறித்தான கல்லூரிகள் நடத்துகின்றனர், பிரசாத் ஸ்டூடியோ L.V.Prasad Academy என்று ஒன்று நடத்துகிறது - பல அட்டகாசமான மாணவர்களின் அசத்தலான குறும்படங்களை நானும் பார்த்தேன். படிப்பதற்கு வசதியில்லையென்று தோன்றினால், ஒரு இயக்குனரிடத்தில் வேலை செய்து விஷயங்களைக் கற்றுக்கொள்வது நல்ல முயற்சி தான். குறிப்பாக திரைப்படங்களில் இறங்க ஆசைப்படுபவர்கள், கமலின் இந்தப் பேட்டியைப் பார்க்க வேண்டும் - http://www.youtube.com/watch?v=ZjlD7IEQ3cE
பி.கு :- நான் கமலை இதில் உதாரணம் காட்டியிருப்பதற்கு, 'உன்னால் முடியும் தம்பி' கமலின் தம்பி போல தோற்றமளிக்கும் டுபுக்குக்காகத் தான் என்பதை சொல்லாவிட்டால் மண்டை வெடித்து சுக்கு, இஞ்சி நூறாகிவிடுமென்று வேதாளம் பயமுறுத்தியதால் தான் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் அறியக் கடவது. (வேதாளம் a.k.a டுபுக்கு)
(ஹீ ஹீ அருண் ...."உன்னால் முடியும் தம்பி" பட்டம் மக்கள் எனக்கு குடுத்தது....:)))
10. டுபுக்கு அவர்கள் - வேறு ஏதாவது சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் என்று எனக்கு ஒரு 'சாய்ஸ்' கொடுத்திருக்கிறார். நான் சொல்ல நினைக்கும் 'சில' விஷயங்களை சொல்லி விடுகிறேன்.
திரைப்படங்களைத் திருட்டு வீடியோவில் பார்க்காதீர்கள். திரையரங்கத்திற்குள் நுழையும் போது, செல்போனை ஆஃப் செய்து விட்டு உட்காருங்கள். ஒரு இரண்டரை மணி நேரம் உங்களால் போன் இல்லாமல் இருக்க முடியாதென்றால், திரையரங்கத்திற்கு செல்வதைத் தவிருங்கள். 'மச்சான்...கிளைமாக்ஸ் சீன்லே நம்மாளு பின்றான் இல்லே' என்று ரன்னிங் கமெண்டரி கொடுக்கக் கூடிய இடம் திரையரங்கம் கிடையாது என்பது ஒரு கொசுறு செய்தி. நல்ல திரைப்படங்களைத் தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிப்பதன் மூலம், நீங்களும் மாற்றத்தில் பங்குபெறுகிறீர்களென்பதை மகிழ்ச்சியோடு உணருங்கள். கடைசியாக, 'அச்சமுண்டு! அச்சமுண்டு!' படத்தைக் குறித்து நண்பர்களிடத்தில் என் சார்பாக ஒரு 'ஹாய்' சொல்லி நூறு பேருக்காவது இமெயிலின் மூலம் இன்னும் இருபத்தி நான்கு மணிநேரத்துக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்களுக்குத் தலைமுடி அரக்கு நிறத்தில் மாறி, காது சிகப்பு நிறமாகி விடும் அபாயமிருக்கிறது. ஒரு வேளை அனுப்பி விட்டீர்களென்றால், உங்களுக்கு 'நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தை விட்டுச் சென்ற ராஜாவின் மகனிடமிருந்து' ஸ்பாம் மெயில் வருவது நின்று விடும்!
---------
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் கடைசி நேர வேலைகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி என்னையும் ஒரு ஆளா மதித்து பேட்டி கொடுத்தமைக்கு கோடானு கோடி நன்றி அருண். அச்சமுண்டு அச்சமுண்டு படம் மிகப் பெரிய வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.
அச்சமுண்டு அச்சமுண்டு பற்றி அருண். சுடச் சுட..படங்களுடன் தனது ப்ளாகில் அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார் இது போக அவரின் தளத்திலும் இவரின் முந்தைய குறும்படங்களை தரவிறக்கம்( அதான்பா தமிழ்ல சொன்னா டவுண்லோட்) செய்து கொள்ளலாம்.
இது போக அருணிடம் ஸ்னேகா கொஞ்சம் இளைத்த மாதிரி இருக்கே நம்ம வாசகர்களும் அதை சரி பார்க்க....கண்ணுல ஒத்திக்கிற மாதிரி exclusive சினேகா படம் இருந்தா அனுபுங்கன்னு சொன்னேன் அருண் அதைக் கண்டுக்காமல் சாய்ஸில் விட்டதோடு அல்லாமல் டுவாக்கியெல்லாம் இருக்கிற படத்தை காட்டி மிரட்டுகிறார். (Btwn- அந்த படத்தில் ஜானோடு இருப்பது தான் அருண்) . இதுகெல்லாம் அடங்குகிற பார்ட்டியா நாம...அருணிடமிருந்த நன்றி உணர்ச்சியோட நேர போய் சினேகா இருக்கிற மாதிரி ஒரு படத்தை அவரோட வெப்சைட்லேர்ந்து சுட்டு கீழே போட்டுள்ளேன்.. :))) இதுக்கும் ரொம்ப நன்றி அருண். படத்தைப் பார்த்துவிட்டு நீங்களும் போய் ஒரு வார்த்தை பாராட்டுங்கள் நண்பர் சந்தோஷப்படுவார்.

ஏ எல்லாரும் கேட்டுக்கோங்க பார்த்துக்கோங்க நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி...என்னா கேட்டீங்க தமிழ் திரைப்பட உலகிற்கும் எனக்கும் ஏதாவது சமபந்தம் இருக்கான்னா.. யாரப் பார்த்து என்னா கேள்வி கேட்டீங்கோ....இப்போ ப்ரெஷ்ஷா வந்திருக்காரே அச்சமுண்டு அச்சமுண்டு அருண்....அவர டவுசர் போட்டுக்கொண்டு மூக்கு ஒழுகிக்கொண்டிருந்த காலதுலயே எனக்கு தெரியும்ன்னு சொல்ல ரொம்ப ஆசை தான். ஆனா இந்த போஸ்டை அவரும் படிப்பார் அதுனால அப்புறமா அவர் படிக்காத போது சொல்றேன்...:))
அருண் வைத்தியநாதன் - 2004/5 ல் தமிழில் ப்ளாகிக் கொண்டிருந்தவர்களுக்கு பரிச்சயமான பெயர். நம்மள மாதிரி ப்ளாகில் ஜொள்ளுவிட்டதை பற்றி எழுதாமல் நியூயார்க் பிலிம் அக்காடமி, குறும்படம்ன்னு லெவல் காட்டிக்கொண்டிருந்தார். இவரின் குறும்படங்கள் பார்த்து அப்பவே இது படிக்கற புள்ள...இவர் பின்னாளில் பெரிய டைரடக்கராக வருவார் என்று துண்டு போட்ட (நம்பிக்கை வைத்த) தொண்டரடிப் பொடியாழ்வாரில் அடியேனும் ஒருவன் (ஹி...ஹீ நல்ல படியில ஏறாத ரோலா பார்த்து மீட்டருக்கு மேல போட்டுக் குடுங்க அருண் :) ).
ப்ரெண்டு ஒருத்தருக்கு சுகாசினி மணிரத்னம் ரொம்ப தோஸ்த், அதுக்கே நான் "இந்த ஹாசினி இருக்காங்களே நம்பளுக்கு ரொம்ப க்ளோஸ்"ன்னு தான் ப்லிம் காட்டிக்கிட்டு திரியறது. இதுல அருண் வைத்தியநாதனை ஏற்கனவே ஐஸ் பொட்டில பாக்கிங் செஞ்சாச்சு விட்டுருவோமா...பேட்டி பேட்டின்னு கோட்டியா அலைஞ்சு...அவரு நேரம் அவரும் ஒத்துக்கிட்டாரு.

தற்போது அருண் அச்சமுண்டு அச்சமுண்டு தமிழ் திரில்லரை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் ப்ரசன்னா, ஸ்னேகா நடிக்கிறார்கள். ஹாலிவுட் ஜான் ஷியா வில்லனாகவும் படத்தில் இன்னும் நிறைய ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கிறார்கள். "அச்சமுண்டு அச்சமுண்டு" இந்தியாவிலேயே முதன் முறையாக ரெட் கேமிராவினால் ஹை டெபினிஷனில் படமாக்கப்பட்டு போஸ்ட் பொரடக்க்ஷன் ஸ்டேஜில் இருக்கிறது.
இன்னும் வாயில் நுழையாத ஜார்கனெல்லாம் தட்டுப்படவே அருணையே கேள்விகளால் துளைத்தார் சினிமா நண்டு டுபுக்கார்.
1. வணக்கம் அருண். அச்சமுண்டு அச்சமுண்டு பற்றி ரெட் ஒன், ஹாலிவுடின் பிரபல பெயர்கள் என்று என்னவெல்லாமோ பெருமையாக கேள்விப் படுகிறோம். நேரா படம் சம்பந்தப்பட்ட டெக்னிகல் கேள்விகளுக்கு போய் விடுவோம். ஸ்னேகா படத்திற்க்காக அமெரிக்கா வந்திருக்கிறார் என்று படித்தோம். ஸ்னேகாவுக்கு பிடித்த டிபன் என்ன? ஸ்னேகா நம்மூர் இட்லி பூரிக்கிழங்கு சாப்பிட்டாரா இல்லை அந்தவூர் கெல்லாக்ஸ் கார்ன்ப்ளேக்ஸே அட்ஜீஸ் பண்ணிக்கொண்டாரா?
இந்தக் கேள்வியை நான் ஆண்வர்க்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். அது என்ன சினேகா பூரி சாப்பிட்டாரா, இட்லி சாப்பிட்டாரா என்றொரு கேள்வி? பிரசன்னாவையும் இந்தக் கேள்வியில் சும்மானாச்சுக்குமாவது சேர்த்திருக்க வேண்டும். ஊரிலிருந்து கிளம்பும் போது, 'We want only American food' அப்டீன்னு சப்புக்கொட்டிட்டுக் கெளம்புனவங்க...நாலாவது நாள், 'கொஞ்சம் ரவா உப்புமா கெடைக்குமா?' என்ற ரேஞ்சுக்கு இறங்கி, நமது உணவுக் கலாச்சாரத்தைப் பேணிக் காத்தார்கள்.
(நீங்க சொல்வது மிக்க சரி அருண்...பிரசன்னா என்னத்தையோ கொட்டிக்கும் போது சினகா இட்லி சாப்பிட்டாரான்னு கேட்டிருக்கனும்...இனிமே கவனமா கேக்கிறேன் )
2. சாப்ட்வேரிலிருந்து ப்ளாக் அடித்து சமபளம் வாங்கினது போதும் சினிமாவுக்கு போகனும்ன்னு என்று எப்படி தோன்றியது. இல்லை சாப்ட்வேரே நானும் கச்சேரிக்குப் போனேன் கதை தானா?
இது சாப்ட்வேர் காலத்தில் தோன்றியது இல்லை -அண்டர்வேர் அணியும் காலத்திலேயே தோன்றியது. ஆனால், அப்பா அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்பதால், எனது கனவுகளும் 'இனிய பாடல் சண்டைக்காட்சிகளோடு' அவ்வப்போது முடிவடைந்துவிடும். நான் உறுதியாய் இருப்பதைப் பார்த்தவுடன், 'சரி...உனக்குன்னு ஒரு உத்தியோகம் கெடைச்சதுக்கப்புறம், என்ன வேணும்னாலும் பண்ணு!' என்று ஒரு மாதிரி க்ரீன் சிக்னல் கிடைத்தது. சினிமாவுக்குத் தான் தடையேயொழிய, கலை சார்ந்த விஷயங்களுக்கும், சினிமா(க்கள்) பார்ப்பதற்கும் எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை என்பது ஒரு ஆறுதல் பரிசு. மனசு எப்போதும் சாப்ட்வேரில் ஒரு கால், சினிமாவில் ஒரு கால் என்று தான் வேலை பார்க்கும் தருணங்களிலும் இருந்தது. சாப்ட்வேரில் வேலை பார்த்தது, கச்சேரிக்குப் போன கதையென்றே சொன்னாலும்...தேங்காய்மூடிக் கச்சேரி கிடையாது! 9லிருந்து 5மணி வரை செய்யும் வேலையில் எனக்கான சலிப்பை அனுதினம் கேட்டு கேட்டு, எனது தங்கமணி (ஹி..ஹி) 'அப்புறம் எப்போ பட வேலையை ஆரம்பிக்கிறீங்க?' என்று கேட்காத குறைதான்!
3. தாலி, தாய்மாமா, காதல், ஆக்க்ஷன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு முதல் படத்திலேயே தமிழ் கூறும் நல்லுலகம் அதிகம் பார்த்திராத திரில்லர் களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். அதைப் பற்றி சொல்லுங்களேன்.
தாய்மாமா மட்டும் தான் நீங்கள் சொன்னதில் இல்லை. தாலி, காதல், ஆக் ஷன் எல்லாம் இருக்கிறது. தாலி எனது கதாநாயகி மாலினியின் கழுத்தில், காதல் செந்தில்குமார் - மாலினியிடத்தில், ஆக் ஷன் எங்கே எப்படி என்பது சஸ்பென்ஸ்! Genre films தமிழில் வரவேண்டும் என்ற ஆசையினாலும், த்ரில்லர்களுக்கு எப்போதுமே மவுசு என்ன கீபோர்டே உண்டு என்பதாலும்...இது போன்றதொரு முயற்சி. சுவாரஸ்யமாக ஒரு விஷயத்தை சொன்னால், 'அச்சு பிச்சு காமெடி', 'டண்டணக்கா டான்ஸ்' தேவைப்படாது என்ற எனது அபரிதமான நம்பிக்கையின் ஒரு வடிவம் தான் 'அச்சமுண்டு! அச்சமுண்டு!'. குறிப்பாக, இது 'இத்தாலி படத்திலேந்து சுட்டது, ஜெர்மன் படம் 'ப்ரிஞ்சால்'லே இதே சீன் இருக்கு' என்ற அபாயங்களும் இல்லாத படமாக இருக்கும்.
4.படத்தில் லைவ் சவுண்ட் உபயோகப் படுத்தியிருக்கிறீர்கள் என்று வேற நல்ல பேட்டிகளில் சொல்லி இருக்கிறீர்கள். ஹே ராமில் கமல் லைவ் சவுண்ட் உபயோகப்படுத்தி, கூட இருந்தவர் "மாப்ள படம் எப்போ போடுவாங்க"ன்னு கேட்டது தான் நியாபகம் வந்தது. ஏன் லைவ் சவுண்ட்...? த்ரில்லர் களம் என்பதால் ஏதாவது ஸ்பெஷல் காரண்ங்கள் உண்டா...?
பேட்டிகளில் நல்ல பேட்டி, டுபுக்கு பேட்டி என்று உண்டா என்ன? இந்தியத் திரைப்படங்களைத் தவிர, மற்ற முக்கால்வாசி நாடுகளில் 'லைவ் சவுண்ட்' முறையில் தான் படங்கள் எடுக்கப்படுகிறது. பாலிவுட்டில் பல பெரிய படங்கள் 'லைவ் சவுண்டு'க்கு மாறி ரொம்ப நாட்களாகி விட்டன. ஆனாலும், இன்னும் இந்தியாவில் பெரும்பான்மையான படங்கள் டப்பிங் முறையில் தான் எடுக்கப்படுகிறது. நீங்கள் சமையல் கட்டில் உங்கள் மனைவியோடு பேசுகிறீர்கள் என்பது தான் காட்சி என்றால், அங்கு கேஸ் அடுப்பு எரியும் சத்தம் கேட்க வேண்டும், ரசம் கொதிக்கும் சத்தம் கேட்க வேண்டும், வசனங்கள் நிஜ வாழ்வில் பேசுவது போலவே இருக்க வேண்டும் ...இத்தனை 'வேண்டும்'களும் வேண்டும் என்றால், லைவ் சவுண்ட் தான் ஒரே வழி. (பின்னணியில் கேட்கும் சத்தங்களில் சவுண்ட் எடிட்டிங்கிற்கும் பெரிய பங்குண்டு). இந்தப் படத்தில் லைவ் சவுண்ட் செய்த 'டென்னிஸ்', பல படங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அதே போல 'மிக்ஸிங்'கும் 'Grudge','Exorcism of Emily Rose', 'Strangers' போன்ற படங்களை செய்த மார்ட்டி ஹம்ப்ரியோடு ஹாலிவுட்டிலேயே தான் நடக்கிறது. துல்லியமான துள்ளல் ஒலிக்கு நான் கியாரண்டி! (நான் சட்டசபை தேர்தல் கணக்கா வாக்குறுதிகளை அள்ளி வீசறேன்...மவனே அடங்குடா அப்டீன்னு மனசு சொல்ற சவுண்டு சப் வூஃபர்லே கேக்குது!)
5. இந்தப் படத்தில் "அப்பாடா பாதி கிணறு தாண்டிவிட்டோம்" என்று எந்த தருணத்தில் தோன்றியது?
பாதி கிணறு தாண்டிய உடனே.... (ஹி...ஹி)
(நான் சொல்லல...அருண் 2004லயே தமிழ் ப்ளாக் உலகில் பழம் தின்று மொக்கை போட்டவர்ன்னு :)))) )
6. CTRL C & CTRL V தவிர சாப்ட்வேர் உலகில் கற்றுக்கொண்டது ஏதாவது தற்போது தங்களைய டைரடக்கர் ரோலுக்கு உதவுகிறதா?
கணிப்பொறியில் தமிழ் அடிப்பதில் நல்ல பரிச்சயம் இருப்பதால், முழு திரைக்கதையையும் தமிழிலேயே அடிக்க முடிந்தது. அதனால் திருத்தங்களும் சுலபமாக செய்ய முடிந்தது. அதைத் தவிர, டைரடக்கர் ரோலுக்கு தேவை சாப்ட்வேர் அறிவு அல்ல - கதை சொல்லும் அறிவும், திரைப்படத் தொழில் நுட்ப அறிவும் தான்!
7. அமெரிக்காவிலிருந்து பார்க்கும் போது கோடம்பாக்கம் எப்படி தெரிகிறது?
இன்றைக்கு எத்தனையோ ஹாலிவுட் படங்களையும், வெளிநாட்டுப் படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றாலும்...எங்கள் ஊரில் நான் பார்த்த நடிகர் திலகம் படங்களையும், கமல்ஹாசன் படங்களையும் மறக்க முடியுமா? சினிமா மீதான காதல், இன்று கல்யாணத்தில் முடிந்ததற்கு கோடம்பாக்கம் தானே முன்னுரை எழுதியது! என்னைப் பொறுத்தவரை, மொழிகள் கடந்து, காலம் கடந்து நிற்கும் எந்தவொரு படைப்பும் சிறப்பான விஷயம். அப்படிப்பட்ட சினிமாவானது உலகின் மூலை முடுக்களிலிருந்தெல்லாம் வருகிறது - நமது ஊரிலிருந்தும் எப்போதாவது அத்திப் பூத்தால் போல் வருகிறது. இன்னும் புதுப்புது வித்தியாசமான முயற்சிகள் நிறைய வரவேண்டும். மக்களும், படைப்பாளிகளும் ஒரே அலைவரிசையில் மாற்றம் நோக்கி சிந்தித்தால் தான், கோடம்பாக்கம் கோல்டன்பாக்கமாக மாறும்!
8. ஒரு சக ப்ளாகரிலிருந்து டைரடக்கராக மாறியிருக்கிறீர்கள். படத்தில் இங்கே கதை லொட்டு அங்கே நடிப்பு லொசுக்கு, இரண்டாவது ரீலில் நாலாவது சீனை இப்படி எடுத்திருக்கலாம், க்ளைமாக்ஸில் லைட்டிங் நல்லா இருந்திருக்கலாம் என்று என்னை மாதிரி அரைவேக்காடுகள் ப்ளாகில் மூவி சுப்புடுகளாக விமர்சனம் பண்ணும் போது ஒரு டைரடக்கராக என்ன தோன்றும்?
கஷ்டப்பட்டு தங்கமணி சமைச்சுப் போட்டதை, 'இன்னும் கொஞ்சம் உப்பு ரெண்டு சிட்டிகை அதிகமா போட்டிருக்கலாம்!' என்று நீங்கள் சர்வ சாதாரணமாய் சொல்லும் போது 'சமைச்சுப் பார்த்தா தெரியும்!' என்று அங்கிருந்து டாணென்று பதில் வரும். ஆனால், அதே போல ஒரு பதில் சரவணபவனில் சாப்பிடும் போது வந்தால், பிரச்சினை தான்! காசு கொடுத்து பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அவர்களுக்கு அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கும். எல்லாவற்றையும் தாமரை இலை தண்ணீர் போல் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தான். ஆனால் ஒரு விஷயம், சினிமா எடுப்பது என்பது ஒரு பிரசவம், போர், வலி! ஒரு நல்ல விமர்சனம் என்பது 'சாண்ட்விச்' முறையில் இருக்க வேண்டும். படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை முதலில் சொல்லி, மெதுவாக பிடிக்காத விஷயங்களை வரிசைப்படுத்தி, மீண்டும் நல்ல விஷயத்தோடு முடிப்பதென்பது எந்த ஒரு கலைக்கும், கலைஞனுக்கும் இதமாய் இருக்கும்.
9. "நானும் ஒரு நாள் படமெடுத்தே தீருவேன்" என்று என்னை மாதிரி மந்திரித்த கோழிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? எங்கே தொடங்குவது?
முதலில் 'திரைப்படம்' என்பது சுலபமான விஷயமில்லை. இதற்காக நீங்கள் கொடுக்க வேண்டிய விலை, செய்ய வேண்டிய தியாகங்கள் நிறைய. கேம்கார்டரில் நான்கு நண்பர்களை நடிக்க வைத்து, அதை சுமாராக எடிட் செய்து, பின்னணி இசையாக 'ஹௌ டு நேம் இட்'ன் வயலினிசையை ஜம்மென்று போட்டு...'ஆத்தா....நான் படமெடுத்துட்டேன்!' என்று சொல்வதல்ல சினிமா. மேற்கூறியவை ஒரு நல்ல தொடக்கம் என்று வேண்டுமானால் கூறலாம். திரைப்படமெடுக்க ஆசைப்படும் முன் நல்லதாய் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் படிப்பது சாலச்சிறந்தது. திரைக்கதை எழுதுவது சம்பந்தமாக பல புத்தகங்கள் (ஆங்கிலத்தில்) இருக்கின்றன, படமெடுப்பது குறித்தும் பல புத்தகங்கள் கிடைக்கப்பெறும். (தமிழிலும் இது போல புத்தகங்கள் பல வருவது அத்தியாவசியமான ஒன்று - பதிப்பாளர்கள் செய்வார்களென்று நம்புகிறேன்). குறிப்பாக, நண்பர்கள் வட்டத்தையும் தாண்டி, ஒரு புரொஃபஷனல் க்ரூவை வைத்து மூன்று குறும்படங்களாவது செய்ய வேண்டும். அது எத்தகைய வரவேற்பைப் பெறுகிறது என்பதும், எத்தனை திரைப்பட விழாக்களில் கலந்து கொள்கிறதென்பதும் உங்கள் திறமைக்கு அளவுகோலாய் இருக்கும். அசிஸ்டெண்டாக ஒரு ஐந்து ஆண்டுகள் இருந்து விட்டு, சந்து கேப்பில் ஹீரோவிடம் 'கதைப்படி நீங்க பொறுக்கி சார்!' என்று சொல்லி இம்ப்ரெஸ் செய்து தான் 'டைரக்டர்' ஆக வேண்டும் என்று அவசியமில்லை. நான் மேலே சொன்ன முறையான பயிற்சியும், குறும்படங்களும் கூட நல்ல இயக்குனராவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும். இந்த முறை நான் சென்னை சென்ற போதே பல கல்லூரிகளில் திரைப்படம் குறித்தான பாடங்கள் வந்து விட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பாலுமகேந்திராவில் ஆரம்பித்து ராஜீவ்மேனன் வரை ஒளிப்பதிவு மற்றும் திரைப்படம் குறித்தான கல்லூரிகள் நடத்துகின்றனர், பிரசாத் ஸ்டூடியோ L.V.Prasad Academy என்று ஒன்று நடத்துகிறது - பல அட்டகாசமான மாணவர்களின் அசத்தலான குறும்படங்களை நானும் பார்த்தேன். படிப்பதற்கு வசதியில்லையென்று தோன்றினால், ஒரு இயக்குனரிடத்தில் வேலை செய்து விஷயங்களைக் கற்றுக்கொள்வது நல்ல முயற்சி தான். குறிப்பாக திரைப்படங்களில் இறங்க ஆசைப்படுபவர்கள், கமலின் இந்தப் பேட்டியைப் பார்க்க வேண்டும் - http://www.youtube.com/watch?v=ZjlD7IEQ3cE
பி.கு :- நான் கமலை இதில் உதாரணம் காட்டியிருப்பதற்கு, 'உன்னால் முடியும் தம்பி' கமலின் தம்பி போல தோற்றமளிக்கும் டுபுக்குக்காகத் தான் என்பதை சொல்லாவிட்டால் மண்டை வெடித்து சுக்கு, இஞ்சி நூறாகிவிடுமென்று வேதாளம் பயமுறுத்தியதால் தான் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் அறியக் கடவது. (வேதாளம் a.k.a டுபுக்கு)
(ஹீ ஹீ அருண் ...."உன்னால் முடியும் தம்பி" பட்டம் மக்கள் எனக்கு குடுத்தது....:)))
10. டுபுக்கு அவர்கள் - வேறு ஏதாவது சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் என்று எனக்கு ஒரு 'சாய்ஸ்' கொடுத்திருக்கிறார். நான் சொல்ல நினைக்கும் 'சில' விஷயங்களை சொல்லி விடுகிறேன்.
திரைப்படங்களைத் திருட்டு வீடியோவில் பார்க்காதீர்கள். திரையரங்கத்திற்குள் நுழையும் போது, செல்போனை ஆஃப் செய்து விட்டு உட்காருங்கள். ஒரு இரண்டரை மணி நேரம் உங்களால் போன் இல்லாமல் இருக்க முடியாதென்றால், திரையரங்கத்திற்கு செல்வதைத் தவிருங்கள். 'மச்சான்...கிளைமாக்ஸ் சீன்லே நம்மாளு பின்றான் இல்லே' என்று ரன்னிங் கமெண்டரி கொடுக்கக் கூடிய இடம் திரையரங்கம் கிடையாது என்பது ஒரு கொசுறு செய்தி. நல்ல திரைப்படங்களைத் தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிப்பதன் மூலம், நீங்களும் மாற்றத்தில் பங்குபெறுகிறீர்களென்பதை மகிழ்ச்சியோடு உணருங்கள். கடைசியாக, 'அச்சமுண்டு! அச்சமுண்டு!' படத்தைக் குறித்து நண்பர்களிடத்தில் என் சார்பாக ஒரு 'ஹாய்' சொல்லி நூறு பேருக்காவது இமெயிலின் மூலம் இன்னும் இருபத்தி நான்கு மணிநேரத்துக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்களுக்குத் தலைமுடி அரக்கு நிறத்தில் மாறி, காது சிகப்பு நிறமாகி விடும் அபாயமிருக்கிறது. ஒரு வேளை அனுப்பி விட்டீர்களென்றால், உங்களுக்கு 'நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தை விட்டுச் சென்ற ராஜாவின் மகனிடமிருந்து' ஸ்பாம் மெயில் வருவது நின்று விடும்!
---------
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் கடைசி நேர வேலைகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி என்னையும் ஒரு ஆளா மதித்து பேட்டி கொடுத்தமைக்கு கோடானு கோடி நன்றி அருண். அச்சமுண்டு அச்சமுண்டு படம் மிகப் பெரிய வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.
அச்சமுண்டு அச்சமுண்டு பற்றி அருண். சுடச் சுட..படங்களுடன் தனது ப்ளாகில் அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார் இது போக அவரின் தளத்திலும் இவரின் முந்தைய குறும்படங்களை தரவிறக்கம்( அதான்பா தமிழ்ல சொன்னா டவுண்லோட்) செய்து கொள்ளலாம்.
இது போக அருணிடம் ஸ்னேகா கொஞ்சம் இளைத்த மாதிரி இருக்கே நம்ம வாசகர்களும் அதை சரி பார்க்க....கண்ணுல ஒத்திக்கிற மாதிரி exclusive சினேகா படம் இருந்தா அனுபுங்கன்னு சொன்னேன் அருண் அதைக் கண்டுக்காமல் சாய்ஸில் விட்டதோடு அல்லாமல் டுவாக்கியெல்லாம் இருக்கிற படத்தை காட்டி மிரட்டுகிறார். (Btwn- அந்த படத்தில் ஜானோடு இருப்பது தான் அருண்) . இதுகெல்லாம் அடங்குகிற பார்ட்டியா நாம...அருணிடமிருந்த நன்றி உணர்ச்சியோட நேர போய் சினேகா இருக்கிற மாதிரி ஒரு படத்தை அவரோட வெப்சைட்லேர்ந்து சுட்டு கீழே போட்டுள்ளேன்.. :))) இதுக்கும் ரொம்ப நன்றி அருண். படத்தைப் பார்த்துவிட்டு நீங்களும் போய் ஒரு வார்த்தை பாராட்டுங்கள் நண்பர் சந்தோஷப்படுவார்.
![]() | ![]() |
Monday, November 24, 2008
ஜொள்ளித் திரிந்த காலம் - 2.5
முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4
பார்த்தசாரதி ஜெனரலாக பாச்சா என்று ஆகிவிடுவதால் எனக்கு தெரிந்த கிருஷ்ணமூர்த்தி கிச்சாவாகிப் போனான். கோலிவுட் படங்களில் எப்பவோ விளம்பரம் மற்றும் பீ.ஆர்.- க்ளாமர் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரைப் பார்த்ததிலிருந்து இவனும் க்ளாமர் கிச்சாவாகிப் போனான். இவன் உருவத்திற்கும் க்ளாமருக்கும் ஒன்றரை கிலோமீட்டர் தூரம். வேட்டியோ பாண்ட்டோ எதுபோட்டாலும் நெற்றியில் சந்தனத் தீற்றல் இருக்கும். குணத்தில் தங்கம். வள்ளலாரின் வளர்ப்புப் பையன் மாதிரி தான் பேசுவான். எல்லாருக்கும் அந்தப் பக்கம் அசினும் இந்தப் பக்கம் இலியானாவும் காத்துக்கொண்டிருக்கும் போது இவன் அலட்டிக்காமல் "நம்ம பெர்சனாலிட்டிக்கெல்லாம் ஏதாவது தேறுமா...?" என்று மனிதருள் மாணிக்கமாய் இருப்பான். திருவள்ளுவர் "அடக்கம் அமரருள்..." குறளே இவனை பார்த்தபிறகு தான் எழுதியிருப்பாரோன்னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.
அழகான பெண்கள் கடந்து போனால் அமைதியாய் பார்ப்பான். ஆர்ப்பாட்டமே இருக்காது டேய் எப்படிடா இப்படி...ன்னு அடிக்கடி புல்லரிக்கவைப்பான். "டேய் கிச்சா உனக்கு இந்த வயசுக்கேத்த கிளுகிளுப்பே இல்லையேடா"ன்னு கேட்டால் "அதான் பேர்லயே சேர்த்திருக்கீங்களே...க்ளாமரை"ன்னு மாணிக்கும் அருளும். கிச்சாவோட ரொம்ப நேரம் இருந்தால் எனக்கு மட்டும் தான் உடம்பில் ஹார்மோன்கள் அதிகமாய் ஆட்டம் போடுகிறதோ என்று சந்தேகம் வந்துவிடும். இருந்தாலும் கூட இருக்கும் வானரங்கள் சும்மா விடாது. "என்ன கிச்சா..மூனு தலைமுறை..சேலம் டாக்டர் அடுத்த மாசம் சரஸ்வதி லாட்ஜ்ல ரூம் போட்டிருக்காராம்...அப்பாயிமென்ட் போட்டுருவோமா..."ன்னு வம்புகிழுத்தாலும்..அசரமாட்டான்.
"டேய் மனுஷனா இருந்தா ஃபீலிங்க்ஸ வெளில கொட்டனும்...இவன் இப்படி ஊமைக்கொட்டானா இருக்கறதுக்கு...பார்த்துக்கிட்டே இருங்கடா..ஒருநாள் எவளையாவது இழுத்துகிட்டு ஓடப்போறான்...அன்னிக்குத் தெரியும்...க்ளாமர் கிச்சானு கரெக்ட்டா தான் பேரு வைச்சிருக்கோம்ன்னு" - கன்னுக்குட்டி கணேசன் அவன் பாட்டி சொல்லுகிற பழமொழியெல்லாம் மேற்கோள் காட்டி அடிக்கடி சூளுரைப்பான். க்ளாமர் கிச்சா அதற்க்கும் வழக்கமான சிரிப்பை தான் உதிர்ப்பான்.
பக்கத்து ஊரில், எனக்கு நாலு தெருவுக்கு ஒரு தாய்மாமாவை குடிவைக்கிற ரேஞ்ஜுக்கு எங்க தாத்தா லெவல் காட்டியிருந்ததால், அடிக்கடி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அந்த ஊருக்கு போய் வருகிற சந்தர்ப்பம் வரும். இப்படி போய் வரும் போது ஒரு நாள் க்ளாமர் கிச்சா அங்கிருந்த ஆஸ்பத்ரியில் இருந்து வெளியே வந்து பஸ்ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தான். அன்றைக்கு அது பெரிதாகப் படவில்லையாதலாலும், எனக்கு அவசரமாய் அடுத்த தெருவில் வேலையிருந்ததாலும் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் தெரு கிரிக்கெட் முடிந்து ஆல் இந்தியா மீட்டிங்கில் கன்னுக்குட்டி கணேசன் கிளாமர் கிச்சா அடிக்கடி கல்லிடைக்கு போய் வருகிறான் என்று போட்டு உடைத்துவிட்டான். "கிச்சா உண்மையச் சொல்லு வழக்கமா அஜீஸ் ஆஸ்பத்ரிக்கு தானே போவ..இப்ப என்ன ஆஸ்பத்ரிக்கு ஊருவிட்டு ஊரு போற.? எங்களுக்கு தெரியாம ஏதாவது தப்பு காரியம் பண்ணி உனக்கு வயத்துல ஏதாவது உண்டாகிடுத்தாடா"ன்னு பயல்கள் க்ளாமர் கிச்சாவை கலாய்த்ததில் கிச்சா அன்றைக்கு ஏகத்துக்கு அப்செட் ஆகிவிட்டான்.
இரண்டு நாள் கழித்து தெருவில் வயதுப் பெண்கள் நடமாடும் சாயங்கால நேரத்தில் எனக்கு எதாச்சயாக கல்லிடையில் மீண்டும் ஒரு முக்கியமான வேலை இருந்ததது. வேலையை முடித்துக்கொண்டு திரும்புகிற சமயத்தில் மீண்டும் கிச்சாவைப் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். முகம் ஆட்டோகிராப் சேரன் ரேஞ்சுக்கு ஒரே ஃபீலிங்க்ஸாய் இருந்தது.
இங்கிலாந்தில் எப்பவோ ஒரு காலத்தில் ஃபிலிப்ஸ் கம்பெனிகாரன் சைக்கிள் உற்பத்தி செய்ய ஆரம்பித்த போது ஒரு சைக்கிளை எங்க மாமாவிற்கு பெரிய மனசு பண்ணி விற்றிருந்தான். அதை எங்க மாமா "என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்"ன்னு என்னிடம் ஒப்படைத்திருந்தார். பொழைக்கத் தெரியாத இங்கிலாந்து ஃபிலிப்ஸ்காரன், ஊர்ல இருக்கிற இரும்பையெல்லாம் உருக்கி சைக்கிளை கனமாக செய்திருந்தான். உட்கார்ந்து அழுத்துவதற்கு ஒன்பது இட்லி சாப்பிடவேண்டும்...இந்த தொழில் ரகசியத்தை வெளியில் விடாமல் "ஊர்ல எவன்கிட்டயாவது இங்கிலாந்து ஃபிலிப்ஸ் சைக்கிள் இருக்காடா"ன்னு உதார்விட்டுக் கொண்டு ப்ரீமியம் டிக்கட்டுகளை மட்டும் தான் பின் கேரியரில் ஏத்துவேன். "டேய் ஒரு காலத்துல தான் சைக்கிள் மெனுபாக்ச்சர் பண்ணினது ஃபிலிப்ஸ் காரனுக்கே மறந்து போயிருக்கும்...மியூசியத்துல வைக்கவேண்டியதை எல்லாம் ஓட்டிட்டு திரியற...பார்த்துடா ஒரு நாள் உன்னை உள்ள வைச்சிறப் போறாங்க"ன்னு நான் ஏத்தாத ஹெவி வெயிட் பார்ட்டிகள் வயிற்றெரிச்சலைக் கொட்டும்.
அன்றைக்கு சற்று இருட்டிவிட்டத்தாலும் பாலத்தை தாண்டிய ஏற்றத்தில் சைக்கிளை பின்னாடியிலிருந்து தள்ள ஒரு ஆள் தேவைப்பட்டதாலும் சேரன் ஃபீலிங்க்ஸ் க்ளாமர் கிச்சாவை சைக்கிளில் லிப்ட் குடுக்க பெரிய மனது பண்ணினேன். அன்றைக்கு ஏனோ கிச்சா வழக்கமாய் பேசும் வள்ளலார் பற்றி கூட பேசவில்லை. வழி நெடுக அமைதியாக வந்தான். "என்னடா க்ளாமர்... ஏதவது ப்ராபளமா..என்ன ஆஸ்பதிரிக்கு..? யாருக்காவது உடம்பு சரியில்லையா"ன்னு ஊருக்கு வந்ததும் கேட்டேன். கையைப் பிடித்துக் கொண்டு "டேய் சாப்பிட்டுட்டு வாயேன்..கொஞ்சம் காலாற பாலம் வரைக்கும் நடக்கலாம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"ன்னு சொன்ன போது ஏதோ சீரியஸ்ன்னு தெரிந்தது.
அன்றைக்கு வாக்கிங் போன போது "டேய் யாருகிட்டயும் மூச்சு விட்டுறாதடா..."ன்னு நூறு தரம் சத்தியம் வாங்கிக் கொண்டு கிச்சா விஷயத்தை ஆரம்பித்தான். கிச்சா விஷயத்தை சொல்லி முடித்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கன்னுக்குட்டி கணேசன் பாட்டி சொல்லுகிற பழமொழியில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது.
விஷயம் இது தான். க்ளாமர் கிச்சாவை அவன் காலேஜில் ஒரு பெண் லவ் பண்ணிக்கொண்டிருந்திருக்கிறது, கிச்சா வேற பெண்ணை மனதுக்குள் டாவடித்துக் கொண்டிருந்தான். அது தெரிந்து கிச்சாவை டாவடித்த பெண் பூச்சி மருந்தை குடித்துவிட்டதாம். அவளைத் தான் கல்லிடை ஆஸ்பத்ரியில் சேர்த்திருப்பதாகவும், க்ளாமர் கிச்சா டெய்லி போய் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வருவதாகவும், அவர்கள் வீட்டில் இவன் கூடப் படிக்கிற பையன் என்பது மட்டும் தான் தெரியும். இதில் மருந்தைக் குடித்த பெண்ணும் கிச்சாவும் வேற வேற ஜாதி. கிச்சா மனதுக்குள் ரூட்டு விட்டுக்கொண்டிருக்கும் பெண்ணும் கிச்சாவும் ஒரே ஜாதி என்று கிச்சா சொல்லி முடித்தபோது எனக்கு தலையை சுற்றி உட்கார்ந்து விட்டேன். "டேய் அந்த கால பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து ஒரு நாட்டை சொல்லிட்டு ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி ஊருக்குள்ள வளையவர்றியேடா ...எப்படிடா இதெல்லாம்"ன்னு வாயை விட்டே கேட்டுவிட்டென்.
"டேய் அதெல்லாம் விடு இப்ப நான் என்னடா பண்ணட்டும் இத எப்படி சமாளிக்கன்னு தெரியலைடா...நீ தான் ஒரு ஐடியா சொல்லனும்"ன்னு க்ளாமர் கிச்சா ஒரே அழுவாச்சி.
நம்ம தெகிரியமெல்லாம் ஃபிகர் ஏதோ பெரிய மனது பண்ணி நம்ம சேட்டைகளை கண்டுக்காம போகிறவரையில் தான். திரும்பி பார்த்தாலே ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி வயத்தை கலக்கிவிடும். இதுல க்ளாமர் கிச்சா நேஷனல் அவார்ட் படத்துல வர்ற கலவர மேட்டரை வேற சொல்லிவிட்டு ஐடியா கேட்டதும் பேஸ்மென்ட் வீக்காகிவிட்டது. பின்னொரு நாளில் கிச்சாவை சந்திப்பதாக சொல்லிவிட்டு விட்டுக்கு வந்து போர்த்திப் படுக்கும் வரை நடுக்கம் அடங்கவில்லை.
அடுத்த நாள் முழுவதும் கிச்சா சொன்ன அந்த மேட்டரே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "க்ளாமர் கிச்சான்னு கரெக்ட்டா தான் கடவுள் அமைச்சிருக்கான்...நம்மளப் பார்த்து ஒரு பயபுள்ளையும் உருக மாட்டேங்குதே"ன்னு கண்ணாடியைப் பார்க்கும் போதேல்லாம் ஃபீலீங்க்ஸாய் இருக்கும். அப்புறம் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தால் தான் இந்த யோகம் கிட்டும் என்று நெற்றியில் சந்தனத் தீற்றல் வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
அதைப் பார்த்து கன்னுக்குட்டி கணேசனுக்கு சந்தேகம் வந்து நோண்ட, அப்புறம் ஒருத்தரிடமும் சொல்லக்கூடாதென்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு விஷயத்தை சொன்னேன். கன்னுக்குட்டிக்கும் ஜீரணமே ஆகவில்லை. க்ளாமர் கிச்சாவின் பிரச்சனையைவிட அவனுக்காக ஒரு பெண் மருந்து குடித்ததே எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.
"ஆளப் பார்த்து எட போடக்கூடாதுடா...எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவா...சந்தனதுக்கு வசிய சக்தி அதிகம்ன்னு.." கன்னுக்குட்டி இதுக்கும் பாட்டியை கூட்டி வந்து அன்றிலிருந்து அவனும் சந்தனப் பொட்டுவைத்துக் கொள்ளப் போவதாகவும் முடிவு கட்டினான்.
"டேய் போயும் போயும் நம்ம களாமர் கிச்சாவுக்காக மருந்தை குடிச்ச அந்தப் பெண்ணை எப்படியும் நாம பார்த்துரணும்டா " என்று கன்னுக்குட்டி வெறி வந்துவிட்டது. சும்மா ஆஸ்பத்திரிக்குள்ள போய்விடலாம் ஆனா எந்தப் பெண்ன்னு எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கொஞ்சம் சவாலாய் இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. எப்படியும் ஏதாவது அஜால்ஸ் குஜால்ஸ் பண்ணி அந்தப் பெண் முகத்தை பார்த்துவிடுவதென்று நானும் கன்னுக்குட்டியும் தீர்மானம் பண்ணினோம்.
நல்ல பிஸி நேரமாய் போவதென்று அடுத்த நாள் சாயங்கால நேரத்தை தேர்ந்தெடுத்து போனால் நினைத்தது மாதிரியே கூட்டமாய் இருந்தது. ஒரு தரம் வார்ட் முழுவதும் நடந்துபோய் நோட்டம் விட்டுப்பார்த்தும் காலேஜ் பெண்ணின் ரூமை கண்டுபிடிக்கமுடியவில்லை. ரெண்டாம் தரம் பார்க்கலாம் என்று முடிவுகட்டிய போது அங்கிருந்த நர்ஸுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
"என்னப்பா யார பார்க்கனும்"ன்னு தோரணையாக கேட்டவுடன், எனக்கு சைக்கிளைப் பூட்ட மறந்தது நியாபகதுக்கு வந்து கன்னுக்குட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். வெளியில் போய் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது கன்னுக்குட்டி குழப்பமாய் வந்தான். "டேய் ஒரே ஒரு காலேஜ் பொண்ணு தான் இருந்ததாம் அதுவும் நேத்திக்கே டிஸ்சார்ஜ் ஆகியாச்சாம் ஆனா அதுக்கு கால்ல ப்ராக்ச்சராம்" என்று அவன் சொன்ன போது எனக்கும் குழப்பம் அதிகமாகிப் போனது. திரும்ப நினைக்க எத்தனிக்கையில் க்ளாமர் கிச்சா காப்பி தூக்கை தூக்கிக் கொண்டு ஒரு ரூமிலிருந்து வந்துகொண்டிந்தான். எஙகளை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. அவனை கூட்டிக் கொண்டு போய் பக்கத்திலிருந்த மூத்திரசந்தில் விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்ததில் அவன் சித்தப்பாவிற்கு டைபாய்டு என்று சேர்த்திருப்பதாகவும், காப்பி டிபன் வாங்கிக்குடுக்க டெய்லி சாயங்காலம் வருவதாகவும், கிச்சாவை நினைத்து உருகி உருகி மருந்துகுடித்த பெண் இவன் மன அபிலாஷை என்றும் ஆனால் இவன் ஒரு பெண்ணை டாவடிப்பது மட்டும் உண்மை என்றும் ஆனால் அவள் யார் என்பது மட்டும் சொல்லவே மாட்டேன் என்று பொல பொலவென்று கக்கிவிட்டான். எங்களுக்கு வந்த ஆத்திரத்தில் நல்ல திட்டி நொறுக்கிவிட்டு மீதத்தை அடுத்த நாள் ஆல் இந்தியா மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாமென்றும் கிளம்பிவிட்டோம்.
கன்னுக்குட்டி கணேசனை பின்னாடி வைத்துக் கொண்டு அழுத்தமுடியாமல் அழுத்திவரும் போதும் அவனுக்கு தாங்கவில்லை. "ஆமை வீட்டைக் கெடுக்கும் ஊமை ஊரைக் கெடுக்கும்"ன்னு திரும்பவும் பாட்டியை மேற்கோள் காட்டினான்.
அப்புறம் நாங்கள் சநதனப் பொட்டு வைத்துக்கொண்டு, எங்களுக்காக யாராவது உருகி மருந்தைக் குடிப்பதற்க்கு பதிலாக எங்களின் நாமக்குரங்கு அவதாரத்தைப் பார்த்து, கொடுமை தாங்க முடியாமல் யாரவது பூச்சி மருந்தைக் குடித்துவிடுவார்களென்று சந்தனப் பொட்டு ஐடியாவை கேன்சல் செய்துவிட்டோம்.ஆனால் இன்று வரை சந்தனப் பொட்டு இட்டுக்கொண்டு வரும் க்ளாமர் கிச்சாக்களின் பேச்சை மட்டும் லேசில் நம்புவதில்லை.
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4
பார்த்தசாரதி ஜெனரலாக பாச்சா என்று ஆகிவிடுவதால் எனக்கு தெரிந்த கிருஷ்ணமூர்த்தி கிச்சாவாகிப் போனான். கோலிவுட் படங்களில் எப்பவோ விளம்பரம் மற்றும் பீ.ஆர்.- க்ளாமர் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரைப் பார்த்ததிலிருந்து இவனும் க்ளாமர் கிச்சாவாகிப் போனான். இவன் உருவத்திற்கும் க்ளாமருக்கும் ஒன்றரை கிலோமீட்டர் தூரம். வேட்டியோ பாண்ட்டோ எதுபோட்டாலும் நெற்றியில் சந்தனத் தீற்றல் இருக்கும். குணத்தில் தங்கம். வள்ளலாரின் வளர்ப்புப் பையன் மாதிரி தான் பேசுவான். எல்லாருக்கும் அந்தப் பக்கம் அசினும் இந்தப் பக்கம் இலியானாவும் காத்துக்கொண்டிருக்கும் போது இவன் அலட்டிக்காமல் "நம்ம பெர்சனாலிட்டிக்கெல்லாம் ஏதாவது தேறுமா...?" என்று மனிதருள் மாணிக்கமாய் இருப்பான். திருவள்ளுவர் "அடக்கம் அமரருள்..." குறளே இவனை பார்த்தபிறகு தான் எழுதியிருப்பாரோன்னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.
அழகான பெண்கள் கடந்து போனால் அமைதியாய் பார்ப்பான். ஆர்ப்பாட்டமே இருக்காது டேய் எப்படிடா இப்படி...ன்னு அடிக்கடி புல்லரிக்கவைப்பான். "டேய் கிச்சா உனக்கு இந்த வயசுக்கேத்த கிளுகிளுப்பே இல்லையேடா"ன்னு கேட்டால் "அதான் பேர்லயே சேர்த்திருக்கீங்களே...க்ளாமரை"ன்னு மாணிக்கும் அருளும். கிச்சாவோட ரொம்ப நேரம் இருந்தால் எனக்கு மட்டும் தான் உடம்பில் ஹார்மோன்கள் அதிகமாய் ஆட்டம் போடுகிறதோ என்று சந்தேகம் வந்துவிடும். இருந்தாலும் கூட இருக்கும் வானரங்கள் சும்மா விடாது. "என்ன கிச்சா..மூனு தலைமுறை..சேலம் டாக்டர் அடுத்த மாசம் சரஸ்வதி லாட்ஜ்ல ரூம் போட்டிருக்காராம்...அப்பாயிமென்ட் போட்டுருவோமா..."ன்னு வம்புகிழுத்தாலும்..அசரமாட்டான்.
"டேய் மனுஷனா இருந்தா ஃபீலிங்க்ஸ வெளில கொட்டனும்...இவன் இப்படி ஊமைக்கொட்டானா இருக்கறதுக்கு...பார்த்துக்கிட்டே இருங்கடா..ஒருநாள் எவளையாவது இழுத்துகிட்டு ஓடப்போறான்...அன்னிக்குத் தெரியும்...க்ளாமர் கிச்சானு கரெக்ட்டா தான் பேரு வைச்சிருக்கோம்ன்னு" - கன்னுக்குட்டி கணேசன் அவன் பாட்டி சொல்லுகிற பழமொழியெல்லாம் மேற்கோள் காட்டி அடிக்கடி சூளுரைப்பான். க்ளாமர் கிச்சா அதற்க்கும் வழக்கமான சிரிப்பை தான் உதிர்ப்பான்.
பக்கத்து ஊரில், எனக்கு நாலு தெருவுக்கு ஒரு தாய்மாமாவை குடிவைக்கிற ரேஞ்ஜுக்கு எங்க தாத்தா லெவல் காட்டியிருந்ததால், அடிக்கடி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அந்த ஊருக்கு போய் வருகிற சந்தர்ப்பம் வரும். இப்படி போய் வரும் போது ஒரு நாள் க்ளாமர் கிச்சா அங்கிருந்த ஆஸ்பத்ரியில் இருந்து வெளியே வந்து பஸ்ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தான். அன்றைக்கு அது பெரிதாகப் படவில்லையாதலாலும், எனக்கு அவசரமாய் அடுத்த தெருவில் வேலையிருந்ததாலும் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் தெரு கிரிக்கெட் முடிந்து ஆல் இந்தியா மீட்டிங்கில் கன்னுக்குட்டி கணேசன் கிளாமர் கிச்சா அடிக்கடி கல்லிடைக்கு போய் வருகிறான் என்று போட்டு உடைத்துவிட்டான். "கிச்சா உண்மையச் சொல்லு வழக்கமா அஜீஸ் ஆஸ்பத்ரிக்கு தானே போவ..இப்ப என்ன ஆஸ்பத்ரிக்கு ஊருவிட்டு ஊரு போற.? எங்களுக்கு தெரியாம ஏதாவது தப்பு காரியம் பண்ணி உனக்கு வயத்துல ஏதாவது உண்டாகிடுத்தாடா"ன்னு பயல்கள் க்ளாமர் கிச்சாவை கலாய்த்ததில் கிச்சா அன்றைக்கு ஏகத்துக்கு அப்செட் ஆகிவிட்டான்.
இரண்டு நாள் கழித்து தெருவில் வயதுப் பெண்கள் நடமாடும் சாயங்கால நேரத்தில் எனக்கு எதாச்சயாக கல்லிடையில் மீண்டும் ஒரு முக்கியமான வேலை இருந்ததது. வேலையை முடித்துக்கொண்டு திரும்புகிற சமயத்தில் மீண்டும் கிச்சாவைப் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். முகம் ஆட்டோகிராப் சேரன் ரேஞ்சுக்கு ஒரே ஃபீலிங்க்ஸாய் இருந்தது.
இங்கிலாந்தில் எப்பவோ ஒரு காலத்தில் ஃபிலிப்ஸ் கம்பெனிகாரன் சைக்கிள் உற்பத்தி செய்ய ஆரம்பித்த போது ஒரு சைக்கிளை எங்க மாமாவிற்கு பெரிய மனசு பண்ணி விற்றிருந்தான். அதை எங்க மாமா "என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்"ன்னு என்னிடம் ஒப்படைத்திருந்தார். பொழைக்கத் தெரியாத இங்கிலாந்து ஃபிலிப்ஸ்காரன், ஊர்ல இருக்கிற இரும்பையெல்லாம் உருக்கி சைக்கிளை கனமாக செய்திருந்தான். உட்கார்ந்து அழுத்துவதற்கு ஒன்பது இட்லி சாப்பிடவேண்டும்...இந்த தொழில் ரகசியத்தை வெளியில் விடாமல் "ஊர்ல எவன்கிட்டயாவது இங்கிலாந்து ஃபிலிப்ஸ் சைக்கிள் இருக்காடா"ன்னு உதார்விட்டுக் கொண்டு ப்ரீமியம் டிக்கட்டுகளை மட்டும் தான் பின் கேரியரில் ஏத்துவேன். "டேய் ஒரு காலத்துல தான் சைக்கிள் மெனுபாக்ச்சர் பண்ணினது ஃபிலிப்ஸ் காரனுக்கே மறந்து போயிருக்கும்...மியூசியத்துல வைக்கவேண்டியதை எல்லாம் ஓட்டிட்டு திரியற...பார்த்துடா ஒரு நாள் உன்னை உள்ள வைச்சிறப் போறாங்க"ன்னு நான் ஏத்தாத ஹெவி வெயிட் பார்ட்டிகள் வயிற்றெரிச்சலைக் கொட்டும்.
அன்றைக்கு சற்று இருட்டிவிட்டத்தாலும் பாலத்தை தாண்டிய ஏற்றத்தில் சைக்கிளை பின்னாடியிலிருந்து தள்ள ஒரு ஆள் தேவைப்பட்டதாலும் சேரன் ஃபீலிங்க்ஸ் க்ளாமர் கிச்சாவை சைக்கிளில் லிப்ட் குடுக்க பெரிய மனது பண்ணினேன். அன்றைக்கு ஏனோ கிச்சா வழக்கமாய் பேசும் வள்ளலார் பற்றி கூட பேசவில்லை. வழி நெடுக அமைதியாக வந்தான். "என்னடா க்ளாமர்... ஏதவது ப்ராபளமா..என்ன ஆஸ்பதிரிக்கு..? யாருக்காவது உடம்பு சரியில்லையா"ன்னு ஊருக்கு வந்ததும் கேட்டேன். கையைப் பிடித்துக் கொண்டு "டேய் சாப்பிட்டுட்டு வாயேன்..கொஞ்சம் காலாற பாலம் வரைக்கும் நடக்கலாம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"ன்னு சொன்ன போது ஏதோ சீரியஸ்ன்னு தெரிந்தது.
அன்றைக்கு வாக்கிங் போன போது "டேய் யாருகிட்டயும் மூச்சு விட்டுறாதடா..."ன்னு நூறு தரம் சத்தியம் வாங்கிக் கொண்டு கிச்சா விஷயத்தை ஆரம்பித்தான். கிச்சா விஷயத்தை சொல்லி முடித்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கன்னுக்குட்டி கணேசன் பாட்டி சொல்லுகிற பழமொழியில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது.
விஷயம் இது தான். க்ளாமர் கிச்சாவை அவன் காலேஜில் ஒரு பெண் லவ் பண்ணிக்கொண்டிருந்திருக்கிறது, கிச்சா வேற பெண்ணை மனதுக்குள் டாவடித்துக் கொண்டிருந்தான். அது தெரிந்து கிச்சாவை டாவடித்த பெண் பூச்சி மருந்தை குடித்துவிட்டதாம். அவளைத் தான் கல்லிடை ஆஸ்பத்ரியில் சேர்த்திருப்பதாகவும், க்ளாமர் கிச்சா டெய்லி போய் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வருவதாகவும், அவர்கள் வீட்டில் இவன் கூடப் படிக்கிற பையன் என்பது மட்டும் தான் தெரியும். இதில் மருந்தைக் குடித்த பெண்ணும் கிச்சாவும் வேற வேற ஜாதி. கிச்சா மனதுக்குள் ரூட்டு விட்டுக்கொண்டிருக்கும் பெண்ணும் கிச்சாவும் ஒரே ஜாதி என்று கிச்சா சொல்லி முடித்தபோது எனக்கு தலையை சுற்றி உட்கார்ந்து விட்டேன். "டேய் அந்த கால பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து ஒரு நாட்டை சொல்லிட்டு ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி ஊருக்குள்ள வளையவர்றியேடா ...எப்படிடா இதெல்லாம்"ன்னு வாயை விட்டே கேட்டுவிட்டென்.
"டேய் அதெல்லாம் விடு இப்ப நான் என்னடா பண்ணட்டும் இத எப்படி சமாளிக்கன்னு தெரியலைடா...நீ தான் ஒரு ஐடியா சொல்லனும்"ன்னு க்ளாமர் கிச்சா ஒரே அழுவாச்சி.
நம்ம தெகிரியமெல்லாம் ஃபிகர் ஏதோ பெரிய மனது பண்ணி நம்ம சேட்டைகளை கண்டுக்காம போகிறவரையில் தான். திரும்பி பார்த்தாலே ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி வயத்தை கலக்கிவிடும். இதுல க்ளாமர் கிச்சா நேஷனல் அவார்ட் படத்துல வர்ற கலவர மேட்டரை வேற சொல்லிவிட்டு ஐடியா கேட்டதும் பேஸ்மென்ட் வீக்காகிவிட்டது. பின்னொரு நாளில் கிச்சாவை சந்திப்பதாக சொல்லிவிட்டு விட்டுக்கு வந்து போர்த்திப் படுக்கும் வரை நடுக்கம் அடங்கவில்லை.
அடுத்த நாள் முழுவதும் கிச்சா சொன்ன அந்த மேட்டரே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "க்ளாமர் கிச்சான்னு கரெக்ட்டா தான் கடவுள் அமைச்சிருக்கான்...நம்மளப் பார்த்து ஒரு பயபுள்ளையும் உருக மாட்டேங்குதே"ன்னு கண்ணாடியைப் பார்க்கும் போதேல்லாம் ஃபீலீங்க்ஸாய் இருக்கும். அப்புறம் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தால் தான் இந்த யோகம் கிட்டும் என்று நெற்றியில் சந்தனத் தீற்றல் வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
அதைப் பார்த்து கன்னுக்குட்டி கணேசனுக்கு சந்தேகம் வந்து நோண்ட, அப்புறம் ஒருத்தரிடமும் சொல்லக்கூடாதென்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு விஷயத்தை சொன்னேன். கன்னுக்குட்டிக்கும் ஜீரணமே ஆகவில்லை. க்ளாமர் கிச்சாவின் பிரச்சனையைவிட அவனுக்காக ஒரு பெண் மருந்து குடித்ததே எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.
"ஆளப் பார்த்து எட போடக்கூடாதுடா...எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவா...சந்தனதுக்கு வசிய சக்தி அதிகம்ன்னு.." கன்னுக்குட்டி இதுக்கும் பாட்டியை கூட்டி வந்து அன்றிலிருந்து அவனும் சந்தனப் பொட்டுவைத்துக் கொள்ளப் போவதாகவும் முடிவு கட்டினான்.
"டேய் போயும் போயும் நம்ம களாமர் கிச்சாவுக்காக மருந்தை குடிச்ச அந்தப் பெண்ணை எப்படியும் நாம பார்த்துரணும்டா " என்று கன்னுக்குட்டி வெறி வந்துவிட்டது. சும்மா ஆஸ்பத்திரிக்குள்ள போய்விடலாம் ஆனா எந்தப் பெண்ன்னு எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கொஞ்சம் சவாலாய் இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. எப்படியும் ஏதாவது அஜால்ஸ் குஜால்ஸ் பண்ணி அந்தப் பெண் முகத்தை பார்த்துவிடுவதென்று நானும் கன்னுக்குட்டியும் தீர்மானம் பண்ணினோம்.
நல்ல பிஸி நேரமாய் போவதென்று அடுத்த நாள் சாயங்கால நேரத்தை தேர்ந்தெடுத்து போனால் நினைத்தது மாதிரியே கூட்டமாய் இருந்தது. ஒரு தரம் வார்ட் முழுவதும் நடந்துபோய் நோட்டம் விட்டுப்பார்த்தும் காலேஜ் பெண்ணின் ரூமை கண்டுபிடிக்கமுடியவில்லை. ரெண்டாம் தரம் பார்க்கலாம் என்று முடிவுகட்டிய போது அங்கிருந்த நர்ஸுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
"என்னப்பா யார பார்க்கனும்"ன்னு தோரணையாக கேட்டவுடன், எனக்கு சைக்கிளைப் பூட்ட மறந்தது நியாபகதுக்கு வந்து கன்னுக்குட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். வெளியில் போய் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது கன்னுக்குட்டி குழப்பமாய் வந்தான். "டேய் ஒரே ஒரு காலேஜ் பொண்ணு தான் இருந்ததாம் அதுவும் நேத்திக்கே டிஸ்சார்ஜ் ஆகியாச்சாம் ஆனா அதுக்கு கால்ல ப்ராக்ச்சராம்" என்று அவன் சொன்ன போது எனக்கும் குழப்பம் அதிகமாகிப் போனது. திரும்ப நினைக்க எத்தனிக்கையில் க்ளாமர் கிச்சா காப்பி தூக்கை தூக்கிக் கொண்டு ஒரு ரூமிலிருந்து வந்துகொண்டிந்தான். எஙகளை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. அவனை கூட்டிக் கொண்டு போய் பக்கத்திலிருந்த மூத்திரசந்தில் விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்ததில் அவன் சித்தப்பாவிற்கு டைபாய்டு என்று சேர்த்திருப்பதாகவும், காப்பி டிபன் வாங்கிக்குடுக்க டெய்லி சாயங்காலம் வருவதாகவும், கிச்சாவை நினைத்து உருகி உருகி மருந்துகுடித்த பெண் இவன் மன அபிலாஷை என்றும் ஆனால் இவன் ஒரு பெண்ணை டாவடிப்பது மட்டும் உண்மை என்றும் ஆனால் அவள் யார் என்பது மட்டும் சொல்லவே மாட்டேன் என்று பொல பொலவென்று கக்கிவிட்டான். எங்களுக்கு வந்த ஆத்திரத்தில் நல்ல திட்டி நொறுக்கிவிட்டு மீதத்தை அடுத்த நாள் ஆல் இந்தியா மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாமென்றும் கிளம்பிவிட்டோம்.
கன்னுக்குட்டி கணேசனை பின்னாடி வைத்துக் கொண்டு அழுத்தமுடியாமல் அழுத்திவரும் போதும் அவனுக்கு தாங்கவில்லை. "ஆமை வீட்டைக் கெடுக்கும் ஊமை ஊரைக் கெடுக்கும்"ன்னு திரும்பவும் பாட்டியை மேற்கோள் காட்டினான்.
அப்புறம் நாங்கள் சநதனப் பொட்டு வைத்துக்கொண்டு, எங்களுக்காக யாராவது உருகி மருந்தைக் குடிப்பதற்க்கு பதிலாக எங்களின் நாமக்குரங்கு அவதாரத்தைப் பார்த்து, கொடுமை தாங்க முடியாமல் யாரவது பூச்சி மருந்தைக் குடித்துவிடுவார்களென்று சந்தனப் பொட்டு ஐடியாவை கேன்சல் செய்துவிட்டோம்.ஆனால் இன்று வரை சந்தனப் பொட்டு இட்டுக்கொண்டு வரும் க்ளாமர் கிச்சாக்களின் பேச்சை மட்டும் லேசில் நம்புவதில்லை.
Subscribe to:
Posts (Atom)


