Thursday, June 16, 2005

என்ன சொல்லப் போகிறாய்...

for picture version of this post click here

என்ன சொல்லப் போகிறேன்...பத்து பதிவுகளுக்கு ஒரு முறை பாடும் அதே பல்லவி தான்....

இன்றோடு வேலை மாறுகிறேன். புது கம்பெனியில் ப்ளாக் செய்வதற்கு சம்பளம் குடுத்து கட்டுப்பிடி ஆகாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் வேலை நேரத்தில் இனி இங்கு அரட்டை அடிக்கமுடியாது. வீட்டிலிருந்து தான் எழுத முடியும். ஆனால் உங்கள் பக்கங்களை எல்லாம் வின்டோவை சின்னதாக வைத்துக் கொண்டு படிக்கும் டகால்ட்டி வேலையெல்லாம் செய்தாவது படிப்பேன் என்று நினைக்கிறேன். புள்ளகுட்டிக்காரன் கொஞ்ச நாளைக்கு கஷ்டப்படுவேன் என்று நினைக்கிறேன். அதனால் தீபாவளி, ஜெயிக்கப் போகிற கிரிக்கெட் மாட்ச் போன்ற நேரங்களில் நிலவும் மந்த நிலை தான் இங்கும் நிலவும் என்று பட்சி சொல்கிறது. என்ன சொல்ல வரேன்னா இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு நான் இங்கே எழுதினாலும் எழுதலாம் எழுதாமலும் போகலாம். உங்களுக்கு கமென்ட்ஸில் மட்டும் அரட்டை அடிக்கலாம் அடிக்காமலும் போகலாம். ஆனால் இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்குத்தான் இருக்கும். அதற்கப்புறம் நான் வருவேன் வருவே வந்துக்கிடேடேடேடே..இருபேன்.

No comments:

Post a Comment

Related Posts