for picture version of this post click here
மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. இப்போதெல்லாம் முன்பு மாதிரி நேரம் செலவழிக்க முடியவில்லை. ஏதேதோ...எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்....ஆனா இந்த சோம்பல் தான்...
சமீபத்தில் Indibloggies வழியாக நிறைய பேர் இங்கு வந்திருக்கிறார்கள். என்ன விஷயம் என்று போய்ப் பார்த்தால் அங்கு சிறந்த வலைப்பதிவுகளுக்கான தேர்தல் நடத்துகிறார்கள். தமிழ் வலைப்பதிவுகள் லிஸ்ட்டில் என் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். யார் சிபாரிசு செய்தார்கள் தெரியவில்லை. எனக்கே சிரிப்பாக இருந்தாலும்...என்மேல் நம்பிக்கை வைத்து சிபாரிசு செய்த அந்த புண்யாத்மாக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
டுபுக்கைவிட எத்தனையோ சிறந்த வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. அருண், பாலாஜி போன்றோரின் வலைப்பதிவுகள் இடம் பெறாதது ஆச்சர்யமாக உள்ளது. பத்ரி, காசி, தேசிகன் போன்ற ஜாம்பவான்களுடன் டுபுக்கு போட்டி போடுவது வலைப்பதிவுகளில் காமெடி டைம். சரிப்பா ...இதமாதிரி ஆட்களுக்கும் இருக்கட்டும்பா..திருஷ்டிக்கு...என்று நினைத்திருப்பார்கள் போல.
நிற்க...இவ்வளவு வாயைக் கிழித்தாலும் நான் ஓட்டுப் போட்டதென்ன்வோ..எனக்குத் தான்.
டெப்பாசிட் போயிருக்கும் என்று நமக்கு நாமே திட்டத்தில் ஓட்டுப் போடலாமென்று போய் பார்த்தால்...அட...நமக்கும் ஓட்டு விழுந்திருக்கிறதய்யா. ஓட்டுப் போட்ட...அத்தனை கழக கண்மணிகளும் வாழ்வில் எனது நன்றியோடு எல்லா வளமும் நலமும் பெறுவார்கள்.
போடுங்கம்மா வோட்டு........
Tuesday, January 11, 2005
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment