ஜனரஞ்சகமான எண்டர்டெய்னர். இரண்டு படங்களூக்கு முன்னால் விஜய் சேதுபதி பற்றி ரொம்பவே கிலேசமாய் இருந்தது. "இ.தா.ஆ.ப.பாலகுமாரா" படம் பிடிக்காத சொற்பத்தி சொச்சத்தில் அடியேனும் உண்டு. அவர் உடம்பு வேறு விஜய் டீ.வி பெண் ஆன்கர்கள் மாதிரி சைட் வாக்கில் போய்க்கொண்டிருந்தது. சர்தான் பிரபுவிற்கு வாரிசாய் கூடிய சீக்கிரம் நாலு பேருக்கு நல்லது பண்ணும் குணசித்திர வில்லனாகிவிடுவார் என்று எண்ணியிருந்த்தேன். நானும் ரவுடி தானில் ஆரம்பித்து சேதுபதி ஐ.பி.எஸ்சிற்காக உடம்பை டிரிம்மாக்கியிருந்தார். காதலும் கடந்து போகுமிலும் நன்றாக இருக்கிறார். தியேட்டரில் மீண்டும் பெண் ரசிகைகள் அவர் வரும் காட்சியில் நாக்கை மடித்துக் கொண்டு உய்ய்ய்ய் என்று கத்துகிறார்கள். படத்தைப் பற்றி - நல்ல படம், கெட்ட படம், பாம்படம், சம்படம் என்று நீட்டி முழக்காமல் சொல்லிவிடுகிறேன் எனக்குப் பிடித்திருந்தது. வசனங்கள் நிறைய இடங்களில் நகைச்சுவையாய் ரசிக்கும் படி வைத்திருக்கிறார்கள். ஆனால் யூ.கேயில் வசனங்கள் ஏதும் சென்சார் செய்யப்படாமல் சில இடங்களில் *தாக்களும் மயிரும் பீப்பில்லாமல் அப்படியே ஸ்பஷ்டமாய் ஒலிக்கின்றன. படத்தில் கதாநாயகி மடோனா செபாஸ்டியன். மலர் டீச்சர் மலர் டீச்சர் என்று சாய் பல்லவியைக் கொண்டாடிய பிரேமம் கூட்டத்திற்கு நடுவில் இங்கேயும் எதற்கும் இருக்கட்டும் என்று செலின் ரசிகர் மன்றத்தில் ஒரு கர்சீப் போட்டிருந்தேன் வீணாய்ப் போகவில்லை. அந்த பிரேமம் செலின் தான் நம்ம மடோனா. காப்பா டிவியில் வேறு பாடுவதைப் பார்த்திருக்கிறேன். படம் நெடுக அம்மணி பளிச் பளிச். Time and time again why I love kerala. ஐ.டியில் வேலை தேடும் ஒரு இளம் பட்டதாரியாய், பக்கத்து வீட்டு பெண்ணாய் கலக்கியிருக்கிறார். மடோனாவிற்கும் கோலிவுட் என்றால் ரொம்ப இஷ்டமாம். பேசாமல் ஒரு லாரி தமிழ் நடிகர்களை கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து பதிலுக்கு ஒரு லாரி கதாநாயகிகளை அங்கேயிருந்து இங்கே இறக்குமதி செய்துவிடலாம். இரண்டு இண்டஸ்டிரியும் சுபீட்சமாய் இருக்கும்.மற்ற படி இந்த படம் தாராளமாய் பார்க்கலாம் - இ.தா.ஆ.ப.பாலகுமாராவைவிட நல்ல எண்டர்டெய்னர்.


definetely adifferent movie... though one cannot involve with the movie
ReplyDeletesethupathi and the heroine act well along with others...