மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்படவேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசம் ஆவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்!
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்!
மண் பயனுற வேண்டும்,
வானகம் இங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும்
ஓம், ஓம், ஓம், ஓம்!
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
தீபாவளி, புதுவருஷம்ன்னு தூர்தர்ஷன் சிறப்பு நிகழ்ச்சி மாதிரி நான் போஸ்ட் போடறது ஆகிடிச்சு, இந்த வருஷமாவது நிறைய போஸ்ட் போட அருள் புரிம்மா மகமாயி !!
தீபாவளி, புதுவருஷம்ன்னு தூர்தர்ஷன் சிறப்பு நிகழ்ச்சி மாதிரி நான் போஸ்ட் போடறது ஆகிடிச்சு, இந்த வருஷமாவது நிறைய போஸ்ட் போட அருள் புரிம்மா மகமாயி !!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்
ReplyDeleteமகமாயி அருள் புரிந்து விட்டாள். ம்ம்ம் தாரைத் தப்பட்டை(!) கிழிந்து தொங்கட்டும்.
ReplyDeleteMagamaayinnu solradhu unga veetu Thangamani Ammavaiya? - Koyindhu Kostin.
ReplyDeleteமதுரைத் தமிழன் - மிக்க நன்றி உங்கள் அருமையான வாழ்த்துக்கு
ReplyDeleteஎல்.கே - மிக்க நன்றி எல்.கே
பொற்கொடி - ஆஹா ஆத்தா மாதிரியே வந்து அருள் வாக்கு சொல்லியிருக்கீங்க:) பார்ப்போம்
அனானி - அண்ணே கோயிந்தண்ணே தங்கமணியோட அம்மா ரொம்ப நல்லவங்கண்ணே :)