For picture version of this post click here
இன்னிக்கு தேர்தல் நிலவரம் எப்பிடி இருக்குன்னு போய் பார்த்தா...மயக்கமே வருது. டுபுக்கு லீடிங்குல இருக்கு. நண்பர்கள் குழாம், கழக கண்மணிகளும் அவர்கள் ப்ளாகிலும் ஆதரவு குடுத்து பட்டைய கிளப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் சத்தியமாக எனக்கு மனது கேட்கமாட்டேன்கிறது. டுபுக்கைவிட காசி,பத்ரி, தேசிகன் போன்றோரின் பணி மகத்தானது. டுபுக்கு ஜெயித்தால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் அது தவறான உதாரணமாகி விடலாம். நல்லதுக்கு காலம் இல்லாமல் போனதுக்கு உதாரணமாகிவிடும். அதனால் அவர்களில் ஒருவர் ஜெயிப்பது தான் முறை.
(ஐய்யைய்யோ இப்படி டாக்டர் மாதிரி அறிக்கையெல்லாம் விட வேண்டியிருக்கிறதே...)
ஒரு வேளை ..."இதெல்லாம் ஒரு ப்ளாக் இவனெல்லாம் வந்துட்டான்னு".. மக்கள் புகழாரம் சூட்டட்டும்ன்னு பக்கத்து நாடு செய்த சதியா இருக்குமோ??
No comments:
Post a Comment