Monday, August 29, 2016

என்.ஆர்.ஐ. மம்மி

தலைப்பு சற்று மிஸ்லீடீங்காய் இருக்கிறதே முதலிலேயே மு.கு கொடுக்கவில்லையே என்று ஆதங்கப் படுபவர்களுக்காக சொல்லிவிடுகிறேன். இந்தப் பதிவு நேற்று எழுதிய The man who knew infinity திரைப்பட பதிவின் நீட்சியே.
என்.ஆர்.ஐ. மம்மி இந்தப் பதிவின் ஒரு அங்கமே அன்றி முக்கிய கதாநாயகி அல்ல. அது தவிர திரைப்படத்திலிருக்கும் சில காட்சிகளை இந்தப் பதிவில் விவரித்திருக்கிறேன். படம் பார்க்குமுன் அது பற்றி தெரிய விரும்பாதவர்கள் பதிவைத் தவிர்ப்பது நலம்.
நேற்றைய பதிவில் வந்த பெனத்தாலார் மற்றும் ராம்ஜியின் பின்னூட்டங்களே இந்தப் படம் பற்றிய என்னுடய மேலும் சில கருத்துகள் பதிய ஊக்கப்படுத்தின.(நன்றி அண்ணாச்சிகளா) The Mam who knew infinity-ல் இயக்குனர், வசனங்களோடு விரும்பி செய்த நிறைய subtle nuances கூர்ந்து கவனித்தால் அசத்தும்.

The So called Racism - ரேசிசம் என்பது இன்றைய காலகட்டத்தில் இனவெறுப்பு மட்டுமல்லாது இன. நிற , வகுப்பு, சாதி என்று எல்லாவற்றையும் பொதுவாய் குறிக்கும் ஒரு சொல் மற்றும் உணர்வாகிவிட்டது. ராமானுஜனின் போராட்ட காலம் முதலாம் உலகப் போருக்கு முன்னால் ஆரம்ப கால ஆயிரத்தி தொள்ளாயிர காலம். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்துகொண்டிருந்த ஒரு காலம். இந்தியர்களை பெரும்பாலோர் நடத்தும் விதம் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதைப் பல இடங்களில் இயக்குனர் தைரியமாகக் காண்பித்திருப்பார். ஆனால் அதை விட இந்த மிரட்டல்களை எல்லோரும் எல்லா இடங்களிலும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள் , சில இடங்களில் தள்ளு முள்ளுக்களும் நடக்கும் என்றும் மிக subtleஆக அழகாக காட்டியிருப்பார். மெட்ராஸில் முதன் முதலாக ராமானுஜ்னுக்கு க்ளார்க் வேலை தரும் நாராயணன் அவரை தன் முதலாளி சர் ப்ரான்சிஸிடம் அறிமுகப் படுத்த அழைத்துச் செல்வார். ப்ரான்சிஸ் பார்த்த மாத்திரத்திலேயே ராமானுஜனை துச்சமாக மதித்து இவனையெல்லாம் ஒரு ஆள் என்று கூட்டிவந்துவிட்டீரா என்ற தோரணையில் “நாராயணன் நீங்க என்னிடம் எவ்வளவு காலம் எனக்கு வேலை பார்கிறீர்” என்று கேட்க “ கோதவரி நதியில் அணை கட்ட நான் உங்களுக்கு டிசைன் செய்து கொடுத்த நாள் முதலாய் சார், அதாவது அதிலிருந்து உங்களுக்கு சர் பட்டம் கிடைத்து உங்களை இன்று வரை சர் என்று அழைக்கும் காலத்திலிருந்து” என்று நாராயணன் ஊசி ஏத்துவார் பாருங்கள். வசனம் நச். (on a different note - நம்மூரில் தற்போது ரேசிசம் என்பதில் அது ரேசிசம் என்பதை உணராமலே நாம் எவ்வளவு பங்கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது பெருமூச்சு தான் வருகிறது. நமக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி போன்ற டீட்டெயிலுக்கு தனிப் பதிவே எழுதலாம்)

எல்லா இடங்களிலும் இந்த வெறுப்பு என்பது சாத்தியமான ஒன்று. ஆனால் இப்பேற்பட்ட இடங்களிலும் காலகட்டங்களிலும் அன்பைப் பாராட்டும் நல்லுங்களும் இருப்பார்கள். ப்ரொபசர் ஹார்டி மற்றும் லிட்டில் வுட் இதற்கு அருமையான உதாரணங்கள். மேதாவித்தன போட்டியும் பொறாமையும் நிறைந்து இருக்கும் கேம்பிரிட்ஜில், எங்கேயோ இருக்கும் ஒரு இந்தியனுக்கு வக்காலத்து வாங்கி அவனுடைய மேதமைக்காக மட்டுமே அவனை கொணர்ந்து. ஹார்ட்டி ராமானுஜனுக்காக ஃபெல்லோஷிப் வாங்க படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. படத்தில் சொல்லாத ஒரு நிஜம் ராமானுஜன் இங்கிலாந்து லேசில் வரவில்லை ப்ரொபசர் ஹார்டி ராமானுஜனை இங்கிலாந்து கொண்டு வர மெட்ராசில் ஒன்றம் பின் ஒன்றாக ஆட்களை தூது அனுப்பி ரொம்ப மெனக்கெட வேண்டியிருந்தது. ஹார்டி இல்லாவிட்டால் இன்றைக்கு நமக்கு ராமானுஜன் யார் என்றே தெரிந்திருக்காது. கேம்பிரிட்ஜில் ஹார்டிக்குத் துணையாக லிட்டில்வுடும் இன்னும் சில ப்ரொபசர்களும் பலம் சேர்த்தார்கள். ராமானுஜனைக் கொண்டாடும் நாம் இவர்களுக்கு என்றென்றைக்கும் கடமைப் பட்டுள்ளோம்.
இந்த ரேசிசம் தவிர ஞான செருக்கு பற்றி பல இடஙக்ளில் இயக்குனர்அழகாய் காண்பித்திருப்பார். ராமானுஜன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு அப்பொழுது தான் வந்திறங்கியிருப்பார். மலைப்புடன் பல்கலைக் கழக பிரமாண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ப்ரொபசர் லிட்டில்வுடின் வசனம் கன ஜோராய் இருக்கும். “Yes...the intended effect. ..Don't be intimidated. Great knowledge comes from the humblest of origins" - நிறை குடங்களை அவர்களின் பெருந்தன்மையை அழகாய் வசனத்தில் செதுக்கியிருப்பார் வசனகர்த்தா.

அடுத்தாய் எனக்கு பிடித்த ஒரு உளவியல் ரீதியான அனுகுமுறை ராமானுஜனின் தாய் பற்றியது. பிராமணர்கள் கடல் தாண்டி செல்லக் கூடாது என்ற நம்பிக்கை பலமாய் இருக்கும் குடும்பத்தில் சில பல சில பல சமாதனங்களுக்குப் பிறகு ராமானுஜன் இங்கிலாந்து செல்கிறார். ராமானுஜனின் மனைவி ஜானகியம்மாள் அவரைப் பிரிந்து எப்பொழுது அவருடன் சேருவோம் என்ற மன்நிலையில் இருக்கிறார், அவர் ராமானுஜனுக்கு எழுதும் கடிதங்கள் எதையும் ராமனுஜனின் தாய் கோமளம்மாள் போஸ்ட் செய்யாமல் ஒரு பெட்டியில் ஒளித்து வைத்துவிடுகிறார். அதே போல் ராமானுஜன் அனுப்பும் கடிதங்களையும் மனைவியிடமிருந்து மறைத்து பெட்டியில் வைத்துவிடுகிறார். ராமானுஜனின் மனைவி ஒரு கட்டத்தில் ராமானுஜன் தன்னை மறந்து விட்டார் என்று மனம் வெறுத்து அண்ணன் வீட்டிற்கு கிளம்பிவிடுகிறார். அங்கேயிருக்கும் காலகட்டத்தில் கடைசியாய் ராமானுஜனுக்கு ஒரு கடிதம் எழுதி அதில் அவரின் அம்மாவின் குட்டு வெளிபட்டுவிடுகிறது. வீட்டிற்கு திரும்ப வந்து கடிதங்கள் ஒளித்து வைத்திருக்கப்படும் பெட்டியை கண்டுபிடித்துவிடுகிறார். அப்பொழுது ராமனுஜனின் தாயார் வந்து “நீயும் அங்கே போய்விட்டால் ராமானுஜன் நாட்டிற்கு திரும்ப வரமாட்டான்” என்று கண்ணீர் மல்க சொல்கிறார்.
மற்ற குடும்ப அரசியலை எல்லாம் தவிர்த்துப் பார்த்தால் எனக்கு இது மிக மிக மிக நியாமான கோணமாய் பட்டது. இது கோமளம்மாளுக்கு மட்டுமல்ல எல்லா என்.ஆர்.ஐ மம்மிக்களுக்கும் பொருந்தும். எந்த ஒரு ஆணுக்கும் கல்யாணத்துக்கு முன் அம்மா என்ற இடத்தை கல்யாணமான பின் மனைவியே பூர்த்திசெய்கிறார். இருவரும் ஒரு இடத்தில் இருந்தால் இந்த விஷயமே பொசசிவாய் மாறி சில பல குடும்ப அரசியலுக்கு வித்திடும். ஆனால் ஒரு என்.ஆர்.ஐ. கோணத்தில் ஒரு ஆள் மனைவி கூட இல்லாமல் வெளிநாட்டில் இருப்பது பயங்கர ஹோம் சிக்காவிடும். அதுவும் உடம்பு சரியில்லாமல் போய் தவித்த வாய்க்க்ய் தண்ணீர் தரக் கூட ஆளில்லாமலிருந்தால் “போங்கடா நீஙகளுமாச்சு உங்க டாலருமாச்சு” என்ற முக்தி நிலை வந்துவிடும். நிறைய நண்பர்களிடம் இங்கு பார்த்திருக்கிறேன். ராமானுஜனின் வாழ்க்கையில் அதுவே அவர் பயங்கர ஹோம் சிக் ஆகி நாட்டிற்கு திரும்ப வருகிறார். இதே அவர் மனைவி இங்கிலாந்து சென்றிருந்தால் அவருக்கு கணித்ததின் மீது இருக்கும் காதலால் இங்கிலாந்தில் அவருக்கு வாய்த்த கணித வாய்ப்புகளால் இந்தியா உடனே வந்திருப்பாரா என்பது என்னளவில் மிகப் பெரும் சந்தேகமே. படத்தில் இது பெரிய சீனோ இல்லை வசனமோ அல்ல. ஆனால் இதுவே எனக்கு intended effectஆகப் பட்டது.

Sunday, August 28, 2016

The Man who knew Infinity

சில மனிதர்களைப் பற்றிய படங்கள் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தும். அவ்வகையில் ரொம்ப நாளாகவே நான் எதிர்பார்த்த ஒரு ஆளுமை சீனிவாச ராமானுஜன் - The Mathematical Genius. மேத்ஸ்லாம் எனக்கு ஏதோ சுமாராய் வரும். டாப்பராய் ஒரு போதும் இருந்ததில்லை (ம்ம்க்கும் மேத்ஸ் என்ன எந்த சப்ஜெக்ட்டிலுமே  ). இண்டகரேஷனெல்லாம் சிம்ம சொப்பனாமாய் இருந்திருக்கிறது. ஏ,பி, எக்ஸ், ஒய் இசட் எழுத்துகளை சகட்டு மேனிக்கு மாற்றி மாற்றி மேலும் கீழுமாய் எழுதி அங்கஙகே ப்ராக்கட் போட்டு அமைத்த ஈ.குவேஷனெல்லாம் - வெறும் காத்து தான் வரும். ஆனால் கேம்பிரிட்ஜில் வந்து பாடுபட்டு அதிலிலும் சில வருடங்கள் மட்டுமே இருந்து பெல்லோஷிப் வாங்கி இன்றளவிலும் அவருடை கைப் பிரதி புத்தங்களை காட்சிப் பொருளாய் வைத்து கொண்டாடுமளவிற்கு கோலோய்ச்சிக் கொண்டிருக்கும் ஒரு ஆளுமை. “எஸ் ஐ ஆம் ஆல்சோ ஃபெரம் தி சேம் ப்ளேஸ்” என்று ஒரு முறை ப்ளைட்டில் பக்கத்தில் ஒரு கேம்பிரிட்ஜ் ப்ரொபசரிடம் கூச்சமே இல்லாமல் மார்தட்டியிருக்கிறேன். அவருடைய சரித்திரத்தை அவர் சந்தித்த போராட்டங்களை மேலோட்டமாய் தெரிந்த அளவில் அவர் தொடர்பான புதினங்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தது.
தமிழில் ராமானுஜன் வந்த போது மிக ஆர்வத்துடன் பார்த்தேன். பார்த்த சூழ்நிலையோ அல்லது எனது மனநிலையோ தெரியவில்லை அந்தப் படம் மிக நன்றாக இருந்தாலும் அத்தனை தாக்கத்தை உண்டு செய்யவில்லை.(திரும்பவும் பார்க்கவேண்டும்) சமீபத்தில் The Man who knew Infinity வாய்த்தது. ஒருவரின் வாழ்க்கையை உள்ளதை உள்ளபடி இண்ட்ரஸ்டிங்காய் ஒரு முழு நீள திரைப்படமாய் கொடுப்பது லேசுபட்ட விஷயம் அல்ல. ஆனால் எந்தப் பகுதியை விலாவரிக்கிறோம் எதை சாய்ஸ்சில் விடுகிறோம், எந்தக் கோணத்தை எடுத்துக் கொள்கிறோம் என்பது இயக்குனரின் சாமர்த்தியம். அந்த விஷயத்தில் The Man who knew Infinity இயக்குனர் மேத்யூ ப்ரவுன் மிகத் தெளிவு. படம் அத்தனை சுவாரசியம். ராமனுஜனிற்கு உறுதுணையாய் இருந்து இந்த உலகிற்கு அவரது அதிமேதாவித்தனத்தை அறிமுகம் செய்தது கேம்பிரிட்ஜ் ப்ரொபசர் ஹார்டி. ராமானுஜனுக்கும் ஹார்டிக்குமிடையிலான சம்பவங்களிலேயே படம் பெரும்பாலும் பயணிக்கிறது.
பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களிடம், அதி மேதாவிகளிடம் ஒரு ஞான கர்வம் இருக்கும். ஆரம்ப கால ஆயிர்த்தி தொள்ளாயிர வருடங்களில் உலகைக் கோலோய்சிக் கொண்டிருந்த வெள்ளையர்களிடம் எப்படி இருந்திருக்கும் என்று கேட்கவே தேவையில்லை. அதிலிலும் அங்கே இருக்கும் கேம்பிரட்ஜ் பல்கலைக் கழகம் இன்னும் விஷேசம். இப்பேற்பட்ட ஒரு இடத்தில் எந்த முறையான கல்வித் தகுதியும் இல்லாத ஒரு இந்தியன், தான் கண்டுபிடித்த தியரங்களை கேம்பிர்ட்ஜில் பதிப்பித்து தன்னை நிலைநாட்டிக்கொளவது என்பது எவ்வளவு கடினமாய் இருதிருக்கும் என்பதை மட்டுமே திரைக்கதையில் முன்னிலைப் படுத்தியிருக்கிறார் இயக்குனர். சொல்ல வந்ததை மிக மிக நேர்த்தியாய் சொல்லியிருக்கிறார். படத்தைப் பார்த்து யாரும் கணிதம் கற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதிலிருந்து தேவையில்லாத காட்சிகளில் அதிக நேரம் செலுத்தாமல் சொல்ல வந்த கோணத்திலேயே செல்வது போன்ற நேர்த்திகளால் நம்மை படம் நெடுக கட்டிப்போடுகிறார். படத்தில் ராமானுஜனின் கடைசி காலக் காட்சிகள் ஏதுமில்லை. ஆனால் அதைக் கூட ஹார்டியின் ஆங்கிளில் சொல்லி முடிப்பது மிக அழகு. படம் பார்த்துவிட்டு சே...இவ்வளவு பெரிய ஜீனியஸ் 32 வயதில் இவ்வளவு அல்ப ஆயுசில் விதி முடியவேண்டுமா என்று பெருமூச்சு விட வைக்கிறது.
ஹிஸ்டோரியன்ஸின் பார்வைகளில் சில் நொட்டைகள் தெரியலாம். சில வருடங்கள் to the scale-ல் இல்லாமல் இருக்கலாம். சில விஷயங்கள் chronological orderல் இல்லாமல் இருக்கலாம் பல விஷயங்கள் அவுட் ஆஃப் போகஸில் இருந்திருக்கலாம். ஆனால் அவற்றை காலபரிணாம நேர்த்தியில் நெர்கோட்டில் சொல்ல்வது சுவாரசியமில்லாத ஆவண படமாகி அரசு விழாக்களில் திரையிட மட்டுமே தகுதியாகிவிடும். இது ஆவணப் படமல்ல, ஒரு கணித மேதையை பற்றிய விஷயங்களை மிக மிக சுவாரசியமாக ஜனரஞ்சகமாக தந்திருக்கும் சினிமா. Highly recommended.

பழி

**********
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பதிவு ரொம்ப ரொம்ப இண்டீசண்டான பதிவு. டீசண்ட் பார்டீஸ் நேரா லெஃப்டுல போய் ரைட்டுல திரும்பவும்.
********
உலகின் தலையாய தர்மசங்கடங்களில் ஒன்று கக்கா போகும் போது மொபைலில் கால் வந்து தொலைவது. ஆண்களுக்கு மொபைல் ஃபோனை கால் சாராய் பையில் வைப்பதால் இந்த சங்கடம் அடிக்கடி நிகழும். இந்த சூப்பர் சிங்கரில் பாடுபவர்கள் எல்லாம் பாடும் போது காற்றில் எஸ் ஒன்றை வெட்டி வெட்டி வரைந்து கொண்டே பாடுவார்களே அது மாதிரி நம்மை சைலைண்ட்டாய் எஸ் வரைந்து கொண்டு கடமை ஆற்ற விடமாட்டார்கள். கரெக்ட்டாய் ஃபோன் வந்துவிடும். வரும் கால் ஒருக்கால் முக்கியமான காலாய் இருந்து தொலைத்தால் எடுத்து தொலைய வேண்டியிருக்கும். அப்படி பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் அந்தப் பக்கம் பேசுபவர் பெண்ணாய் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் அதி விசேஷம். ரகசியக் குரலில் “மேடம்....முக்கியமான மீட்டிங்கில் இருக்கேன்...கொஞ்ச நேரத்துல கால் பண்ணட்டுமா” என்றால் நம்ம “காற்றில் எந்தன் கீதம்” அவருக்கு காதில் விழுந்து தொலையாது. “உங்க சைடு சிக்னல் வீக்கா இருக்கு சார், குரல கொஞ்சம் உசத்திப் பேசுங்க சார்..” என்று விடமாட்டார்கள். “ இங்க என்னோட மேனேஜரோட இம்பார்ட்ண்ட் மீட்டிங்க்ல இருக்கேன் மேடம் கொஞ்ச நேரம் கழிச்சுப் பண்றேன்” என்றால் பக்கத்து டாய்லெட் சக பிரயாணி ட்ரிபிள் மீனிங்கில் கெக்கப் பிக்க என்று சிரிப்பார். 

வேறு சில சந்தர்பங்கள் இன்னும் எசகுபிசகாய் இருக்கும் “எங்க சார்..இருக்கீங்க புரியலை...சத்தமா பேசுங்க புரியலை” என்று அந்தப் பக்கம் இம்சையாய் கேட்கும் போது இந்தப் பக்கம் - பக்கத்து டாய்லெட் க்யூபிகலில் ட்ரம்ஸ் சிவமணியை குடித்தனம் வைத்த மாதிரி தடா முடாவென்று டெல்லி பெல்லி தனியாவர்தனம் செய்து கொண்டிருப்பார். “நீங்க ஏதோ கச்சேரில இருக்கீங்கன்னு நினைக்கிறேன் என்ஜாய் பண்ணுங்க நான் வேணா அப்புறமா பண்ணட்டுமா”ன்னு கால் முடியும் போது ஸ்ஸ்ஸ்ப்பான்னு என்று இருக்கும். 

ஆனால் இந்திய வம்சாவளிக்குத் தான் இந்த லஜ்ஜையெல்லாம் போல. ஆனால் இங்கே பல வெள்ளைக்கார்கள் கவலையே பட மாட்டார்கள். சிலபேர் கான்பரன்ஸ் காலையும் “எஸ் ஆல் டன் ஆன் டைம் - ஹை க்வாலிட்டி டெலிவரி” என்று ஸ்டேடஸ் அப்டேட்டோட ஜோலியோடு ஜோலியாய் இங்கேயே முடித்துவிடுவார்கள். நான் சமீபத்தில் கூசிக் குறுகி வாஷ் பேசினில் ஒரு தோழியுடைய கால் அட்டெண்ட் செய்யவேண்டிய கட்டாயம். ரெண்டு நிமிஷத்தில் திரும்பக் கூப்பிடுகிறேன் என்று சொல்லலாம் என்று எடுத்து “மேனேஜரோடு இம்பார்ட்டண்ட் ..” என்று ஆரம்பிக்கும் போதே பக்கத்து பிரயாணி “குயில் பாட்டு .....வந்ததென்ன இளமானே” பாட்டின் குயில் மாதிரி ஏடாகூடமாய் கூவி தோழி ஒரு மாதிரி சூழ்நிலையை புரிந்து அப்புறம் பேசுகிறேன் என்று கட் பண்ணிவிட்டார். கொலைப் பழியைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால்......சை......இன்று வரை என்னால் ஒரு தன்னிலை விளக்கம் கூட கொடுக்க முடியவில்லை.

காதலும் கடந்து போகும்

 ஜனரஞ்சகமான எண்டர்டெய்னர். இரண்டு படங்களூக்கு முன்னால் விஜய் சேதுபதி பற்றி ரொம்பவே கிலேசமாய் இருந்தது. "இ.தா.ஆ.ப.பாலகுமாரா" படம் பிடிக்காத சொற்பத்தி சொச்சத்தில் அடியேனும் உண்டு. அவர் உடம்பு வேறு விஜய் டீ.வி பெண் ஆன்கர்கள் மாதிரி சைட் வாக்கில் போய்க்கொண்டிருந்தது. சர்தான் பிரபுவிற்கு வாரிசாய் கூடிய சீக்கிரம் நாலு பேருக்கு நல்லது பண்ணும் குணசித்திர வில்லனாகிவிடுவார் என்று எண்ணியிருந்த்தேன். நானும் ரவுடி தானில் ஆரம்பித்து சேதுபதி ஐ.பி.எஸ்சிற்காக உடம்பை டிரிம்மாக்கியிருந்தார். காதலும் கடந்து போகுமிலும் நன்றாக இருக்கிறார். தியேட்டரில் மீண்டும் பெண் ரசிகைகள் அவர் வரும் காட்சியில் நாக்கை மடித்துக் கொண்டு உய்ய்ய்ய் என்று கத்துகிறார்கள். படத்தைப் பற்றி - நல்ல படம், கெட்ட படம், பாம்படம், சம்படம் என்று நீட்டி முழக்காமல் சொல்லிவிடுகிறேன் எனக்குப் பிடித்திருந்தது. வசனங்கள் நிறைய இடங்களில் நகைச்சுவையாய் ரசிக்கும் படி வைத்திருக்கிறார்கள். ஆனால் யூ.கேயில் வசனங்கள் ஏதும் சென்சார் செய்யப்படாமல் சில இடங்களில் *தாக்களும் மயிரும் பீப்பில்லாமல் அப்படியே ஸ்பஷ்டமாய் ஒலிக்கின்றன. படத்தில் கதாநாயகி மடோனா செபாஸ்டியன். மலர் டீச்சர் மலர் டீச்சர் என்று சாய் பல்லவியைக் கொண்டாடிய பிரேமம் கூட்டத்திற்கு நடுவில் இங்கேயும் எதற்கும் இருக்கட்டும் என்று செலின் ரசிகர் மன்றத்தில் ஒரு கர்சீப் போட்டிருந்தேன் வீணாய்ப் போகவில்லை. அந்த பிரேமம் செலின் தான் நம்ம மடோனா. காப்பா டிவியில் வேறு பாடுவதைப் பார்த்திருக்கிறேன். படம் நெடுக அம்மணி பளிச் பளிச். Time and time again why I love kerala. ஐ.டியில் வேலை தேடும் ஒரு இளம் பட்டதாரியாய், பக்கத்து வீட்டு பெண்ணாய் கலக்கியிருக்கிறார். மடோனாவிற்கும் கோலிவுட் என்றால் ரொம்ப இஷ்டமாம். பேசாமல் ஒரு லாரி தமிழ் நடிகர்களை கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து பதிலுக்கு ஒரு லாரி கதாநாயகிகளை அங்கேயிருந்து இங்கே இறக்குமதி செய்துவிடலாம். இரண்டு இண்டஸ்டிரியும் சுபீட்சமாய் இருக்கும்.மற்ற படி இந்த படம் தாராளமாய் பார்க்கலாம் - இ.தா.ஆ.ப.பாலகுமாராவைவிட நல்ல எண்டர்டெய்னர்.
படத்தில் எனக்குப் பிடித்த சில காட்சிகள் கீழே

பாஜி ராவ் மஸ்தானி

ஹிஸ்டாரிக்கல் பேண்டசி ரசிகர்களுக்கு சரியான விருந்து. படத்தின் ட்ரையலரில் ஒரு ஷாட் வரும் ரன்வீர் சிங் குதிரையில் ஸ்லொமோஷனில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் தீபிகா மெதுவாய் ஷாட்டில் நுழைந்து ஓவர்டேக் செய்வார். அட்டகாசமான ஷாட். அன்றே படத்திற்கு துண்டைப் போட்டு வைத்துவிட்டேன். சரித்திரத்தை திரைக்கதைக்காக அப்படி இப்படி புரட்டியிருக்கிறோம் கண்டுக்காதீங்க என்று முதல் டிஸ்கிலேயே சொல்லிவிடுகிறார்கள். ரன்வீர் சிங் மொட்டயடித்துக் கொண்டு பேஷ்வாவாக படம் நெடுக மெனக்கெட்டிருக்கிறார். குடுமி வைத்த பேஷ்வா குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாரா என்ற தர்கத்தையெல்லாம் ஓரம் கட்டி பேஷ்வா எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று தண்ணி தெளித்துவிட்டு மஸ்தானிக்கு வருவோம். தீபிகா தீபிகா தீபிகா...என்ன ஒரு ஆளுமை படம் நெடுக. கத்தியை விட கூர்மையாய் பார்க்கிறார், கண்ணால் பேசுகிறார். சமீபத்திய படங்களில் நடிப்பில் பட்டயக் கிளப்புகிறார். Why Deepika is still my darling !!!
என்னை மாதிரி பேஷ்வாவிற்கும் தூத் பேடாவிற்கும் வித்தியாசம் தெரியாமல் ட்ரைலர்-1ஐ மட்டுமே பார்த்துப் படம் பார்க்கப் போனால் படம் சர்ப்ரைஸாக இருக்கும். ஜோதா அக்பர் மாதிரி அல்லாத்தையும் பரிமாறுவார்கள் என்று நினைத்தேன். மஹூம்...இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை. அதிலும் இரண்டாவது பெண்டாட்டியின் காதலைச் சொல்லும் கதை. பேஷ்வாவாகவே இருந்தாலும் குஜால்ஸுக்கு அப்புறம் படும் அல்லலை அழகாய் படம் பிடித்திருக்கிறார்கள். இரண்டாவது மனைவியாய் அதிலும் வேற்று மதத்திலிருந்து வந்து அங்கு சந்திக்கும் அவமானங்களை தீபிகா தீபிகா தீபீகா. தியேட்டரில் என் வரிசையில் இருபுறமும் முஸ்லீம் சகோதர்களும் சகோதரிகளும். படத்தில் இரு மதத்தின் பெயரால் நடக்கும் சில அக்கப்போர் காட்சிகளில் கொஞ்சம் தர்மசங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தேன். ஆனால் சினிமாவை வெறும் சினிமாவாக மட்டுமே பாராட்டிய அவர்களுடைய ரியாக்‌ஷனோடு பார்த்தது மிகச் சுவாரசியம்.
என்னளவில் படத்தின் ஹீரோ ப்ரொடக்‌ஷன் டிசைன் & ஆர்ட் டைரக்டர் தான் - கலக்கியிருக்கிறார்கள். படம் நெடுக வரக்கூடிய மாராத்திய கலாசார விஷயங்கள் ஆகட்டும், மாராட்டிய தர்பார் ஆகட்டும், பேஷ்வாவின் தர்பார் ஆகட்டும் இன்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதிலும் அந்த ஜொலிக்கும் கண்ணாடி மண்டபம் வாய் பிளக்க வைக்கிறது. டிக்கட்டிற்கு கொடுத்த பைசாவிற்கு வஞ்சமே இல்லாமல் பார்த்து வரலாம்.